<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Thursday, June 15, 2006
  ஏன் எழுதுவதில்லை?

"மிளகாய் அரைப்பு" என்ற தலைப்பில் கடந்த பதிவாக நாமிட்டிருந்த கவிதைக்குப் பின்னூட்டமளித்த டி.சே. தமிழன் அவர்கள்,
"என்னடாப்பா, பெடியங்களை முடக்கிட்டாங்கள்/ முடங்கிப்போட்டாங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தால் இப்ப திருப்ப வெளிக்கிட்டிட்டாங்கள் போல :-) "

என்று கேட்டுப் பின்னூட்டமிட்டிருந்தார். (அவர் மட்டுமே பின்னூட்மிட்டிருப்பதால் மற்றவர்க்குக் கவிதை புரியவில்லையென்று நினைத்துக் கொண்டு, எம் கவிதை உயர்ந்த தளத்தைச் சேர்ந்ததென்று உறுதிப்படுத்திக் கொண்டோம்.)

அவருக்குச் சொல்லக்கூடிய சாத்தியமான சில பதில்கள் எம்மிடமுண்டு.

ஈழத்தில் தமிழர்கள் மீதான படுகொலையை எதிர்த்து நாங்கள் எங்கள் எழுத்தை நிறுத்தினோம் என்று சொல்லலாம். கவனிக்க கடந்த மாவீரர் நாளுக்குக் கருணாவின் உரைக்குப் பின் எந்தப்பதிவும் இடவில்லை. (உண்மையில் எழுத்துரிமைக்கு எழுத்தை நிறுத்தினால் உயிர் போனதுக்கு உயிர்தானே நிறுத்தவேணும் என்ற குரல் வருவது புரிகிறது. என்ன செய்ய? எங்கள் இயக்கத்தில் யாரும் தற்கொலைக்குத் தயாரில்லை. எல்லாம் வாய்ச்சவடால் பேர்வழியாக இருக்கிறார்கள்.)

அதைவிட்டு உண்மையானதும் அதிகம் பொருந்தக்கூடியதுமான ஒரு காரணத்தைச் சொல்கிறேன்.

எங்கள் தரம் வேறு உங்கள் தரம் வேறு. அதனால் உங்கள் தரத்துக்கு இறங்கி எங்களால் வண்டில் விட்டுக்கொண்டிருக்க முடியாது. எங்கள் எழுத்தை வாசிக்க, புரிந்துகொள்ள நீங்கள் எங்கள் தரத்துக்கு வளரவேண்டும். எனவேதான் உங்கள் தரத்துக்குக் கீழிறங்கி எழுதுவதைத் தவிர்த்து வருகிறோம்.
ஆனாலும் என்ன செய்ய?
இதைச் சொல்வதற்கு உங்கள் தரத்துக்கு இறங்கி வந்துதானே சொல்லவேண்டியிருக்கிறது?

எனவே அடிக்கடி பீடத்திலிருந்து இறங்கிவருவோம்.
அண்மையில் வந்ததுகூட பெரியபெரிய தலைகளிற்கூட மிளகாய் அரைபடுவதைப் பார்த்த பரிதாபத்தில் வந்து கவிதை சொல்லவே.

நன்றி.
மீண்டும் சந்திப்போம்.

-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
/அவர் மட்டுமே பின்னூட்மிட்டிருப்பதால் மற்றவர்க்குக் கவிதை புரியவில்லையென்று நினைத்துக் கொண்டு, எம் கவிதை உயர்ந்த தளத்தைச் சேர்ந்ததென்று உறுதிப்படுத்திக் கொண்டோம்/
அப்ப நான் மட்டுந்தான் முட்டாளா :-((((?
...
/எங்கள் தரம் வேறு உங்கள் தரம் வேறு. அதனால் உங்கள் தரத்துக்கு இறங்கி எங்களால் வண்டில் விட்டுக்கொண்டிருக்க முடியாது. எங்கள் எழுத்தை வாசிக்க, புரிந்துகொள்ள நீங்கள் எங்கள் தரத்துக்கு வளரவேண்டும்./
எனக்கு உங்கடை தளத்துக்கு மேலேறி வர விருப்பும். எந்தத் திசையில் எத்தனை படிகள் ஏறவேண்டும் ஒரு hint தரவும்.
 
//அப்ப நான் மட்டுந்தான் முட்டாளா :-((((?//

இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

//எனக்கு உங்கடை தளத்துக்கு மேலேறி வர விருப்பும். எந்தத் திசையில் எத்தனை படிகள் ஏறவேண்டும் ஒரு hint தரவும்.//

முதலில் எமது இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராக வேண்டும். பிறகு கடின பயிற்சி (முக்கியமா படியேறுற பயிற்சி)... அப்பிடியே தொடர்ந்து போகும்.
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது