$BlogRSDURL$>
அமைதியை குலைக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கும் பதிவர் குழவிக்கு இது இறுதி எச்சரிக்கை . ஏற்கனவே தனி மடலி்ல் பல தடவை எழுதிய எச்சரிக்கைகளை உதாசீனம் செய்திருந்த நிலையில் இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிடுகிறோம். தங்களது பதிவினை ப்ளாக்கரிலிருந்து (தமிழ்மணத்தில் இருந்து அல்ல ) முழுமையாகத் தூக்கியெறிவதற்கான அனைத்து நுட்பமான வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில் நமது மத்திய குழுவின் தீர்மானத்திற்கு ஏற்க உமக்கான கடைசி எச்சரிக்கையினை பதிவாக வெளியிடுகிறோம். உங்களது பதிவனைக் காப்பாற்ற வேண்டுமெனில்
இணையப் புரட்சியில் ஈடுபட்டிருப்பதனால் விரிவாக எழுத நேரமில்லை. திரட்டியில் இருந்து நீக்கப்பட்ட தமிழச்சியின் பதிவினை உடனடியாக திரட்ட உத்தரவிடுகிறோம். எம்மைப் போலவே இணையத்தில் புரட்சி செய்யும் அவருக்குத் தார்மீக ஆதரவளிக்கும் பொருட்டும் மிகச் சிறந்த பொழுது போக்கும் தளம் ஒன்றினைத் தமிழ் இழந்து விடக் கூடாதென்பதற்காகவும் இந்தக் கட்டளையை இங்கு பிறப்பிக்கின்றோம்.