<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Thursday, March 27, 2008
  குழவியின் பதிவினைத் தூக்குவோம் எச்சரிக்கை

அமைதியை குலைக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கும் பதிவர் குழவிக்கு இது இறுதி எச்சரிக்கை . ஏற்கனவே தனி மடலி்ல் பல தடவை எழுதிய எச்சரிக்கைகளை உதாசீனம் செய்திருந்த நிலையில் இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிடுகிறோம். தங்களது பதிவினை ப்ளாக்கரிலிருந்து (தமிழ்மணத்தில் இருந்து அல்ல ) முழுமையாகத் தூக்கியெறிவதற்கான அனைத்து நுட்பமான வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில் நமது மத்திய குழுவின் தீர்மானத்திற்கு ஏற்க உமக்கான கடைசி எச்சரிக்கையினை பதிவாக வெளியிடுகிறோம். உங்களது பதிவனைக் காப்பாற்ற வேண்டுமெனில்

உடனடியாக அனைத்து கேலிச் சித்திரங்களையும் நீக்கி பதிவினை வெறுமையாக்கவும்

உங்களது பதிவின் மூலம் மனச் சஞ்சலம் அடைந்த பதிவர்களிடம் மன்னிப்பு கேட்கவும்.

இனி எழுதப் போகும் அல்லது வரையும் பதிவுகளுக்கான வெளியிடும் அனுமதியை எமது இலக்கியப் பிரிவு இணையப் பகுதியிடம் காட்டி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் உங்களது அனைத்துப் பதிவகளும் (அவதானிக்கவும். அனைத்து பதிவுகளும்) ப்ளாக்கர் கணக்கிலிருந்து நீக்கப்படும். நிபந்தனைகளை ஏற்று மன்னிப்பு பதிவொன்றினை இடுவதற்கு 24 மணிநேர அவகாசம் தரப்படுகிறது.

அவலை இடித்து கார்ட்டுனின் விளக்கத்தை எமக்கு தனிமடலில் அனுப்பவும்

நாங்கள் குத்தும் போதும் குழவிதான் . கொஞ்சும் போதும் குழவிதான் -
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Tuesday, March 25, 2008
  தமிழச்சியன் பதிவுகளை உடனடியாகத் திரட்டுக

இணையப் புரட்சியில் ஈடுபட்டிருப்பதனால் விரிவாக எழுத நேரமில்லை. திரட்டியில் இருந்து நீக்கப்பட்ட தமிழச்சியின் பதிவினை உடனடியாக திரட்ட உத்தரவிடுகிறோம். எம்மைப் போலவே இணையத்தில் புரட்சி செய்யும் அவருக்குத் தார்மீக ஆதரவளிக்கும் பொருட்டும் மிகச் சிறந்த பொழுது போக்கும் தளம் ஒன்றினைத் தமிழ் இழந்து விடக் கூடாதென்பதற்காகவும் இந்தக் கட்டளையை இங்கு பிறப்பிக்கின்றோம்.

ஏதோ உணர்ச்சிப்பெருக்கில் இட்ட கட்டளைக்காக இந்தப் பதிவினை நீக்கி விட வேண்டாம் என காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவும் நாம் தயங்கப் போவதில்லை.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Monday, May 28, 2007
  பிரபாகரனா? பொட்டம்மானா? யார் துரோகி?

"யாழ்ப்பாணத்தை மீட்க புலிகள் இறுதி யுத்தம்" என்ற தலைப்போடு செய்திகள் வெளிவந்துள்ளன.
அதில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரகசிய கலந்துரையாடலில் கதைக்கப்பட்டவை என்ற அறிமுகத்தோடு சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வெளியிட்டது இலங்கை அரசபடையின் வலைத்தளம்.

இதில், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசியக் கலந்துரையாடலில் பரிமாறப்பட்ட விடயங்கள் வெளிவந்துள்ளன. பிரபாகரனும் பொட்டம்மானும் இரகசியமாகப் பேசுபவற்றை அறிந்துகொள்ளும் அளவுக்கு சிறிலங்கா, இந்தியப் புலனாய்வுத்துறைகள் வளர்ச்சியடைந்துள்ளது பிரமிக்க வைக்கிறது. பாசிசப் புலிகளின் அழிவு தொடங்கிவிட்டதென்பதை இது காட்டுகிறது.

ஆனால் இதுகுறித்து சில கேள்விகள் எழும்புகின்றன.

குறிப்பிட்ட கலந்துரையாடல் தொடர்பான விவரங்களை யார் இலங்கை அரசபடைக்கு வழங்கியது என்பதே அது.
பிரபாகரன், பொட்டம்மான் - இருவரில் ஒருவர்தான் இத்தகவல்களை வழங்கியிருக்க வேண்டும்.
யார் அந்தக் கறுப்பு ஆடு என்பதைப் புலிகள் கண்டுபிடிப்பார்களா?
ஏற்கனவே இந்திய உளவுத்துறைக்கு விலைபோன மாத்தையாவைப் போல் இப்போது பொட்டம்மானோ பிரபாகரனோ விலைபோய்விட்டார்கள். இவர்களில் யார் என்ற ஐயத்துக்கு விடை கிடைக்குமா? இதை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்?

பொட்டம்மான்தான் அந்தத் துரோகியென்றால், பிரபாகரன் அவரை விசாரிக்க வேண்டும்.
பிரபாகரன்தான் துரோகியென்றால் பொட்டம்மான் அவரை விசாரிக்க வேண்டும்.

இருவருக்குள்ளும் யார் அந்தத் துரோகியென்ற குழப்பம் வந்தால், நடுநிலையான மூன்றாவது சக்தியொன்றிடம் விசாரணையை ஒப்படைக்கலாம். சக இயக்கமென்ற வகையிலும், ஏற்கனவே இப்படியான துரோக நடவடிக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்கள் என்ற வகையிலும் எமது இயக்கம் இந்த விசாரணையைப் பொறுப்பெடுக்க ஆயத்தமாக இருக்கிறது. இதுபற்றிப் புலிகளின் எண்ணத்தை அறிய ஆவல்.

அதேநேரம், இவ்வளவு தெரிந்த அரசபடைக்கு புலிகளின் போர்த்தந்திரமும் திட்டமும் முழுமையாகத் தெரிந்திருக்கும். இந்தநிலையில் பழைய திட்டத்தோடு யுத்தம் செய்வது புலிகளுக்கு முழு அழிவையே தரும். எனவே, யார் அந்தத் துரோகியென்று கண்டுபிடித்துக் களையெடுத்த பிறகு, புதிய திட்டங்களோடு புலிகள் களமிறங்க வேண்டும். யாழ்ப்பாணம்தான் இலக்கென்று அரசுக்குத் தெரிந்துவிட்டதால் மணலாறு மீது படையெடுப்பது புலிகளுக்கு நன்மை பயக்கும்.

==============================================
இதென்னடா பெடியங்கள் புலிகளுக்கு ஆதரவாகக் கதைக்கத் தொடங்கீட்டாங்கள் என்று குழம்புகிறீர்களா?
என்னதான் புலிகளை நாங்கள் கொள்கையளவில் எதிர்த்தாலும், அவர்களின் அழிவில்தான் எமக்கு விடிவுபிறக்குமென்று போராடினாலும், சிங்களவனிடம் புலிகள் தோற்பதை நாம் முழுமையாக ஆதரிக்கவில்லை. சிங்களவனிடம் புலிகள் தோற்பதை இப்போதைக்கு நாம் விருப்பவில்லை. வேண்டுமானால் சிங்களவர்களிடம் அவர்கள் சற்றுப் பலவீனப்பட்டுப் போவதை விரும்புகிறோம்.

புலிகளின் தோல்வியென்பது எம்மால்தாம் நிகழ்த்தப்பட வேண்டும். அதை நிகழ்த்த சிங்களவனுக்கோ இந்தியனுக்கோ எந்தவொரு சந்தர்ப்பத்தையும் விட்டுத்தர மாட்டோம். எமது கையால், நாம் நிகழ்த்தப்போகும் "புதிய ஜனநாயகப் புரட்சி"யால்தான் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அது விரைவில் நடந்தே தீரும். எமது கையால் அடிவாங்கி தோற்கும்வரையாவது - குறைந்தபட்சம் நாங்கள் புரட்சி தொடங்கும்வரையாவது புலிகள் அழியாமல் இருக்க வேண்டும். அதற்குத்தான் இதெல்லாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கனகாலமாக எழுதேல. இடையில நிர்வாணமோ என்னவோ ஒரு கோதாரி அமைப்புக்காரர் எங்களோட சேருறம் எண்டு அறிக்கைவிட, நாங்களும் அதைநம்பி இந்தாங்கோ தளத்தை நடத்துங்கோ எண்டு திறப்பையும் குடுத்திட்டு 'புதிய ஜனநாயகப் புரட்சி' தொடங்கிறதுக்கான வேலைகளில மூழ்கிட்டம். ஆனா ஒரு கோதாரியையும் காணேல. என்னடா/என்னடி செய்யிறியள் எண்டு கேப்பம் எண்டா அதுக்கும் ஆக்களைப் பிடிக்க ஏலாமல் கிடக்கு. அதாலதான் கொஞ்சக்காலம் எங்கட புரட்சித்தளம் செயற்படாமல் கிடந்தது. இருக்கிற வேலைகளை விட்டிட்டு நானே இப்ப எழுதத் தொடங்கீட்டன். இனி உம்மாண்டியை அடிக்கடி வலையில சந்திக்கலாம்.



தோழமையுடன்,
-உம்மாண்டி

Labels: ,

 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Sunday, December 24, 2006
  கூகிளில் கைவைத்த புலிகள் சிறிரங்கனிலும்....

ஏற்கனவே கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள் என்ற தலைப்பில் கட்டுரையொன்று எழுதியிருந்தோம். அப்போது அதை நையாண்டி பண்ணினர் தமிழர்கள். அதன்பின்னும் அமெரிக்கத் தேர்தலில் எப்படி பாசிசப் புலிகளின் கை விளையாடியிருந்ததென்றும் எழுதியிருந்தோம். இப்போது அது இன்னும் நிதர்சனமாக வெளிப்பட்டுவிட்டது.

ஆம், புலிகளை தன் எழுத்துத் திறமையால் நையப்புடைத்துக்கொண்டிருக்கும் தோழர் சிறிரங்கனின் வலைப்பதிவைத் தமிழ்மணத் திரட்டியில் தெரியவிடாமல் செய்வதற்காக கூகிள்காரங்கள் சுத்துமாத்துச் செய்திருக்கிறார்கள்.

இதை தோழர் சிறிரங்கன் மிகவும் மனமுடைந்து பதிவாக்கியிருக்கிறார்.
பார்க்க: சதிகாரக் கூகிள் கணக்கு...

தோழர் சிறிரங்கனை பழைய புளொக்கரிலிருந்து கூகிள் கணக்குக்கு மாறவைத்து (ஆசைகாட்டி மோசம் செய்து) விட்டு பின் தமிழ்மணத்திரட்டியில் தெரியவிடாமல் செய்துவிட்டார்கள்.
தோழரின் காத்திரமான, அறிவுபூர்வமான விமர்சனங்களையும் சாட்டையடிகளையும் எதிர்கொள்ள முடியாத புலிகள் முன்பு அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பதை சிறிரங்கன் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் வலைப்பதிவர்களின் ஏகோபித்த ஆதரவாலும் பெடியங்களின் சில இரகசிய நடவடிக்கைகளாலும் அச்சதித்திட்டம் கைகூடாமற் போய்விட்டது.
இந்நிலையில்தான் தோழரின் சனநாயகத்துக்கான குரலை ஒடுக்க கூகிள் நிறுவனத்தைக் கொண்டே சதிசெய்திருக்கிறார்கள்.

இருந்தபோதும் எப்படி இவரின் பதிவு தமிழ்மணத்தில் தெரிகிறது என்று சிந்திக்கத் தெரிந்த யாராவது கேட்கலாம். அதற்கும் கைவசம் பதிலிருக்கிறது. தமிழ்மணத்திரட்டியை நிர்வகிக்கும் புலியெதிர்ப்புத் தோழர்கள் சிலரின் தயவால் சிறிரங்கனது பதிவு இப்போது மக்கள் பார்வைக்கு வந்துள்ளது(என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன). இதன்மூலம் புலிப் பாசிசத்தின் இன்னொரு சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

தோழர் சிறிரங்கன் இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவரல்லர்.
அவர் தொடர்ந்தும் தன் பொன்னான கருத்துக்காளால் புலிப்பாசிசத்தை எதிர்கொள்வார் என்று நம்புகிறோம்.

கூகிள் இனியும் தொடர்ந்து புலிகளுக்கு விலைபோய்க்கொண்டிருக்கக் கூடாது.
கூகிளின் இவ் அடாவடித்தனத்தை எதிர்த்து புதிய சனநாயக மக்கள் புரட்சியைத் தோற்றுவிக்க எமது தலைமையில் அணிதிரளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
______________
இப்பதிவு தமிழ்மணத்திரட்டி மேலான துவேசப் பதிவாக இனங்காணப்படாது என்று நம்புகிறோம். திரட்டிக்குரியோர் தொடர்பு கொள்ளின் பின்னூட்டமாகவே இடவும். வெளிப்படுத்தப்படாது.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Saturday, December 02, 2006
  இயக்கத்துக்கு ஆட்சேர்க்கிறோம்

புதிய உலகொன்றிற்கான மக்கள் ஜனநாயகப் புரட்சியினை வேண்டிநிற்கும் நாம் உங்கள் முன் ஒரு மனித விடுதலைக்கான கோரிக்கையை முன் வைக்கிறோம். இன்றைய நாளில் புலிகளின் பாசிசக் கரங்கள் அமெரிக்கா கூகுள் ஐரோப்பிய நாடுகள் எங்கணும் பரந்து உழைக்கும் மக்களின் குரல் வளையை நெரித்துத் தள்ளுகிறது.

இந்த ஜனநாயக விரோத சக்திகளின் கொடும் முகமூடியைக் கிழித்தெறிய மக்களின் புதிய ஜனநாயகப் புரட்சியை உருவாக்க உழைக்கும் மக்களே எம்மோடு இணைந்து கொள்ளுங்கள். புதிய ஜனநாயகப் புரட்சியொன்றினை அவாவும் நாம் தனித்தனிய தனித்திருப்பதை விட பெடியன்கள் என்ற அமைப்பினூடு செய்றபடுவதே சாலச் சிறந்தது என்றறிந்து தமிழ்மணத்தில் தனது புரட்சிகர எழுத்துக்களால் புலிப்பாசிசத்தின் முகமூடியை கிழித்தெறிந்த புதிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை விரும்பி நிற்கும் ஒருவர் எம்மோடு இணைந்துள்ளமையானது எமக்கு புதிய பலத்தை தருகிறது.

ஆகவே நீங்களும் எம்மோடு இணைந்து கொள்வதன் மூலம் புலிப்பாசிசத்தை வேரொடு தறித்து புதிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த தோள் கொடுங்கள். அதுமட்டுமல்லாது இந்த இணையத்தளத்தை பலருக்கும் அறிமுகப்படுத்துங்கள். அதன் மூலம் சமூக விடுதலைக்கு பங்களியுங்கள்..

நன்றி
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Wednesday, November 29, 2006
  புலி வலையில் சிக்காத இந்தியா

பார்த்தீர்களா இந்தப் புலிகள் செய்த பாசிசத்தை.. தமது அதிகாரத்தின் மூலம் அப்பாவி மக்களை மட்டுமே அடிபணிய வைத்த புலிகள் இப்போ கூகுள் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் என தமது கொடுங்கரங்களை பரப்பி வருகிறார்கள் என புதிய ஜனநாயகப் புரட்சியை விரும்பும் எம்போன்றவர்கள் தலையில் அடிக்காத குறையாக கத்துகிறோம். அதனைச் செவிமடுக்காத சிலர் நாளை தம்மையும் புலிக் கரங்கள் பற்றும் போதே உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.

சுவிற்சர்லாந்து யப்பான் நியுசிலாந்து முதலான நாடுகள் சிறிலங்காவின் மனித உரிமைகளை தொடர்பான விவாதத்தில் சிறிலங்காவை கண்டனம் செய்துள்ளன. உண்மையில் ஜனநாயக விரோத சக்திகளான புலிகள் இந்த நாடுகளை மிரட்டி அடிபணிய வைத்து இவ்வாறான கண்டனத்தை தெரிவிக்க வைத்துள்ளன. புலிகளைப் போலவே முதலாளித்துவ சக்திகளான இந்த அரசுகள் முதுகெலும்பில்லாமல் புலிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து போயுள்ளன. அவ்வாறு பணியாவிடில் தமது நாடுகளிலும் புலிகள் பாசிச நடவடிக்கைகளை தொடங்கி விடுவார்கள் என்ற பயமே இதற்கு காரணம்.

ஏனெனில் சிறிலங்காவில் அரச படைகள் மனித உரிமைகளை மிக கவனமாக பேணுகிற இந்த வேளையில் இவ்வாறான ஒரு பொய்க் குற்றச்சாட்டை இந்த நாடுகள் சொல்வதன் மூலம் இதன் பின்னணியில் புலிகள் இருப்பது புலனாகிறதல்லவா.

உண்மையில் மனித உரிமைகளை மீறுவது யார் தெரியுமா

புலிகள் தான். நாம் மக்களை ஒன்று திரட்டி புதிய ஜனநாயகப் புரட்சியொன்றினை உருவாக்கும் வரை புலிகளின் இந்த பாசிச நடவடிக்கைகள் தொடரத்தான் போகின்றன.

தம்மிடமுள்ள அதி நவீன விமானங்கள் மூலம் மக்களை கொலை செய்து விட்டு பழியினை அரச படைகள் மீது இலகுவாக சுமத்தி விடுகின்றனர் இந்தப் புலிகள். செஞ்சொலையில் சிறுவர்கள் மீது குண்டு வீசித் தாக்கியது புலிகளின் விமானங்கள் தான் என்ற செய்தி இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. இன்னும் இன்னும் இவ்வாறு பல செய்திகள் புலிகள் மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத வரை வெளியே வராமல்ப் போவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளதால்த்தான் நாம் உங்கள் காலைக் கையைப் பிடித்துக் கெஞ்சுகிறோம். உடனடியாகவே புதிய ஜனநாயகப் புரட்சியொன்றினைத் தொடங்குமாறு.

வாகரையில் மக்களைக் கொன்றது யார்..

புலிகள் தங்கள் உறுப்பினர்கள் பலருக்கு சிங்களம் படிப்பித்து அவர்களை இராணுவத்தில் இணைத்திருக்கிறார்கள். அவர்களும் சிறிலங்கா அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்கிறார்கள். அது மட்டுமல்ல அவ்வப்போது உயிரோடு பிடிபடுவதும் இவர்களே.

ஆக புனிதமான ஒரு இராணுவத்தை வேண்டுமென்றே இவர்கள் களங்கம் செய்கிறார்கள்.

இந்தப் புலிகளின் கைகளில் இப்போது சுவிஸ் முதலான நாடுகளும் விழுந்து விட்டமையானது புதிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை நாம் உடனடியாக ஆரம்பிக்காமல் விட்டதே.. இந்த ஜனநாயகப் புரட்சியை நாம் ஆரம்பிக்க தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் புலிகளின் பாசிச வலை உலகை இறுக்கும்.

ஆயினும் நமது அண்டை நாடான இந்தியா புலிகளின் இந்த மிரட்டல்களுக்கு அடியபணியவில்லை என்பது மக்கள் புரட்சியை வேண்டிநிற்கும் எமது மனங்களை மகிழ்வுறச் செய்கிறது.

மனித உரிமைகளை சிறிலங்கா அரசு மீறுகிறது என பொய்யாக புனையப்பட்ட கதைகளை இந்தியா ஒரு போதும் நம்பத் தயாராக இல்லை. இந்தியா உண்மைகளை புரிந்து கொண்டிருக்கிறது எனபதற்கு இதுவே சாட்சி.

உண்மையில் நாம் விரும்பி நிற்கின்ற புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க இந்தியாவே நமது உற்ற தோழன். சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மீறி தமிழரை அடியோடு அழிக்க நினைக்கிறது என்ற புனைக் கதைகளை நம்பாது இந்தியா சிறிலங்காவின் பக்கமிருந்தமையானது இறைமையுள்ள நாடென்ற வகையில் இலங்கைக்கு வர விருந்த மரியாதைக் குறைவை போக்க உதவியிருக்கிறது. அது போல பபுலிகளின் பாசிச வேர்கள் எங்கெனும் பரவி விட முடியாத படி செய்து மக்களைக் கொண்டு ஜனநாயகப் புரட்சியை உண்டாக்குகின்ற நம்பிக்கையைத் தருகிறது.

ஆகவே தோழர்களே.. புதிய ஜனநாயகப் புரட்சிக்கு தலைமை தாங்குகின்ற அனைத்துத் தகமைகளையும் காலம் எமது தலைவன் கருணாவிற்கு வழங்கியிருக்கிறது. இதை இந்தியாவும் உணர்ந்து கருணாவை தத்தெடுத்து வளர்த்து மக்கள் புரட்சி வெற்றியடைய வைக்க வேண்டும்.

இறுதியாக நண்பர் சிறீரங்கன் சொன்னதை இங்கே நினைவு கூருவோம்.

பாசிசம் எந்து ரூபத்தில் வந்தாலும் அதைக் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள்கூட்டத்தில் மிகவும் கேவலமான-இழி நிலையுடைய உலகப் பார்வை நிலவுகிறது.இது தனக்கெதிரான எந்தக் கருத்தையும் சகிக்க முடியாத தளத்தில் தனது அராஜக மேலாண்மையை நிலைநாட்ட முனைகிறது.அரசியல் மேலாண்மை பெறத் துடிக்குமொரு வர்க்கம் தனது படுகேவலமான அரசியல் சூழ்ச்சிகளுக்காக மாற்றுக் கருத்துகளுக்குச் சாவுமணியடிப்பதும்,அதைத்தொடர்ந்து தாம் சொல்லுவது மட்டுமே தமிழ் பேசும் மக்களின் நலன்பால் அக்கறையுடையதாகவும் மக்கள் மத்தியில் கருத்துக்கட்ட முனைகிறது.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Monday, November 13, 2006
  அமெரிக்காவிலும் கைவைத்து விட்டனர் புலிகள்

ஏற்கனவே "கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்" என்று விவரமான கட்டுரையொன்றை எழுதியிருந்தோம்.
பாசிசப்புலிகளின் உலகளாவிய அடாவடிகளை இனங்கண்டு அவற்றை வேரோடு களைய அனைவரையும் அணிதிரளும் வண்ணம் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதற்கப்பால் எம்மை நையாண்டி வேறு செய்தார்கள்.
இப்போது பார்த்தீர்களா புலிகளின் வேலையை?
இப்போதாவது நம்புகிறீர்களா நாம் முன்பு சொன்னதை?

அப்படி என்னதான் செய்தார்கள் புலிகள்?

அமெரிக்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் தமது கைவரிசையைக் காட்டிவிட்டார்கள்.

அங்கு நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் புலிகளின் தீவிர ஆதரவாளர் டேனி டேவிஸ் 87 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

புலிகளின் பணத்தில் வன்னி சென்று அங்கு புலிகளைச் சந்தித்துத் திரும்பி வந்தவர் இவர். இவரின் பயங்கரவாதிகளுடனான தொடர்பு எல்லா ஊடகங்களிலும் பிரச்சினையாக்கப்பட்டது. இந்தத் தேர்தலிலும் இவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா இடத்திலும் இவரின் பயங்கரவாதத் தொடர்பு பற்றி தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. புலிகளுடனான இவரின் தொடர்பைக் கருத்திற்கொண்டே இவருக்கெதிரான தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அவ்வகையில் இவருக்குப் படுதோல்வி ஏற்படுமென்று நினைத்திருந்தவேளை, மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் இந்த புலி ஆதரவாளர்.

இது எப்படிச் சாத்தியம்?
இங்குத்தான் புலிகளின் கைவரிசை காட்டப்பட்டுள்ளது. தேர்தலில் மோசடி செய்து அவரை வெல்ல வைத்துள்ளனர் புலிகள். கொஞ்சநஞ்ச வாக்கு வித்தியாச வெற்றியல்ல, 87 சதவீத வாக்குகளைப்பெற்று மாபெரும் வெற்றி.

தங்களுக்குத் தெரிந்த அனைத்து அடாவடி முறைகளையும் பாவித்து இவரை வெற்றிபெற வைத்த புலிகளின் கைங்கர்யம் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு மட்டுமன்றி உலகத்துக்கே ஆபத்து. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்போது அமெரிக்காவையே கடித்துவிட்டனர் பாசிசப்புலிகள்.

இதை நான் மட்டும் சொல்லவில்லை. 'நெருப்பு" என்கிற சர்வதேசப் புகழ்பெற்ற இணையத்தளமும் சொல்கிறது.
அதைச் சிலர் நக்கலடிக்கிறார்கள். விசயம் தெரியாத சின்னப்பொடியங்கள்.
நாம் கூகிள் விவகாரத்தில் அன்றே சொன்னதை இப்போது வேறும் சிலர் புரியத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் வாசகர்களே,
இப்பயங்கரத்தை நாம் எதிர்கொள்ள வேண்டாமா?
ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியபடி புலிகளின் கை உலகம் முழுவதும் நீள்கிறது. உடனடியாக இதைத் தறிக்க வேண்டும். இதற்கு எமக்குத் தோள்கொடுங்கள். மக்களைத் திரட்டி 'புதிய ஜனநாயகப் புரட்சி'க்கு (இது என்ன சாமான் எண்டு தெரியாத ஆக்கள் குழம்ப வேண்டாம்.) வித்திடுவதன் மூலம் பாசிசப் புலிகளின் ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்.

புலிகளின் இப்படியான தகிடுதத்தங்களை நன்குணர்ந்த ஒருவர் எமக்குப் பக்கத்துணையாகக் கிடைத்திருக்கிறார். புலிகளை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும். தமிழரை மட்டுமன்றி அமெரிக்காவை - ஏன் உலகத்தையே பயங்கரவாதத்தின் பிடியினின்று காப்பாற்ற காலம் எமக்குத் தந்த தலைவன் கருணாவின் துணையோடு எமது இயக்கம் இந்தப் பாசிசப் புலிகளை முறியடிக்கப் புறப்படுகிறது.

"தூரம் அதிகமில்லை -துயரம்
வழியிலில்லை
"
_____________
"வாருங்கள் வீரர்களே -ஒன்றாய்ச்
சேருங்கள் தோழர்களே
"

தோழமை வேண்டி
-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது