<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Tuesday, June 06, 2006
  மிளகாய் அரைப்பு

உறைக்கிறது தலை.
யாரோ ஒருவனின் அரைப்புக்கு
அம்மியாயின எங்கள் தலைகள்

உச்சியிலடித்த உறைப்பு
தெரிந்த பின்னும்
சேர்ந்தே அரைப்பர் சிலர்

அறியாமல் அரைபடும் தலைகளுக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்

-உம்மாண்டி-



பட உதவி: மகிழன்
அம்மிக்கும் குழவிக்கும் அவ்விரு கைகளுக்கும் நன்றி.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
என்னடாப்பா, பெடியங்களை முடக்கிட்டாங்கள்/ முடங்கிப்போட்டாங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தால் இப்ப திருப்ப வெளிக்கிட்டிட்டாங்கள் போல :-)
 
அண்ணே டி.சே,
நாங்கள் எழுதாததுக்குப் பத்துக் காரணங்கள் வச்சிருக்கிறன். "டக்"கெண்டு ஒண்டைச் சொல்லும். ஒரு காரணம் சொல்லிறன்.
 
ஒரு காரணமென்ன, ஒரே காரணமே வந்திருக்கும் வசந்தந்தான்
 
அனாமதேயமாக வந்த ஒருவரின் பின்னூட்டம் மட்டுறுத்தலில் நீக்கப்பட்டுள்ளது.

ஐயா, நாட்டு நடப்பு கண்டபடி கிடக்க, நீங்கள் குறுக்கால பூந்து விளையாட்டுக் காட்டாதையுங்கோ. தனியொரு மனிதனுக்கு எம்பதிவுமூலம் நேரடியாகப் பங்கம் விளைவிப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.

குறைந்தபட்சம் எங்களின் நேர்மையைப் புரிந்துகொள்ள வேணும்.
நாங்கள் அமெரிக்கராக இருந்துகொண்டு ஈழத்தவரெண்டு சொல்வதில்லை.
மட்டக்களப்பானாக இருந்துகொண்டு யாழ்ப்பாணத்தான் எண்டு கதை விடுவதில்லை.
டாக்குத்தராக வேலை செய்துகொண்டு சோற்றுக்குச் சிங்கியடிக்கிற கூலிக்காரன் எண்டு வண்டில் விடுவதில்லை.
எங்களுக்குள் நாங்களே பின்னூட்டச் சண்டையிட்டுப் பதிவைத் தூக்கி நிறுத்த நினைப்பதில்லை.
மாறாக இவற்றையெல்லாம் செய்தால்தான் அவர் நேர்மையான, ஜனநாயக, மாற்றுக்கருத்துப் பன்னாடை என்றால் எங்களுக்கு அந்தப்பட்டம் வேண்டாம்.

திரும்பவும் சொல்கிறேன், உங்கள் தளம் வேறு, எங்கள் தளம் வேறு.
காரணங்கள் பற்றித் தனிப்பதிவே போட்டாச்சுத் தம்பி.

(தொடக்கத்தில ஐயாவாக தொடங்கி இறுதியில தம்பியாகி முடிஞ்சிருக்கிறதில விசயம் கிடக்கு. விளங்குதோ?)
 
//நாங்கள் எழுதாததுக்குப் பத்துக் காரணங்கள் வச்சிருக்கிறன். "டக்"கெண்டு ஒண்டைச் சொல்லும். ஒரு காரணம் சொல்லிறன்.//

பெயரிலி இதே மாதிரி சொன்னவரெல்லோ?
 
எழுதிக்கொள்வது: yaro

milakaay araippu URaikkiRathu....

23.4 15.6.2006
 
எழுதிக்கொள்வது: சேதுக்கரசி

நல்லா உறைக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க!

21.12 15.6.2006
 
நல்லா உறைக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க!
 
ஐயா அனாமதேயம்,
முதல் வந்து மட்டுறுத்தப்பட்டவர் தானோ நீங்கள்?
ஓம். பெயரிலி டீ.சேக்கு இதேமாதிரியொரு பதில் சொல்லியிருக்கிறார். நீங்கள் வேற ஒரு அருத்தத்திலயும் சொல்லேலதானே?
 
பெடியன், (கள்)?
 
யாரோ, சேதுக்கரசி, கானாபிரபா,

வருகவருக.
முதல்முதலா வந்திருக்கிறியள்.

பிரபா,
என்ன கேக்கிறியள் எண்டு விளங்கேல. நாங்கள் பன்மையா எண்டு சந்தேகம் எண்டா, முந்தின பதிவுகளைப் படியுங்கோ.

அல்லது ஏதாவது இலக்கணப்பிழை இருந்தா, ஐயா ஆளைவிடுங்கோ சாமி. எங்களுக்கு உது கனதூரம்.
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது