<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Thursday, June 23, 2005
  ஈழப்பிரச்சினைக்கான தீர்வு -1

வலைப்பதிவாளருக்கு அழைப்பு.

இது மிகவும் சிக்கலான கருதான். ஆனால் நிச்சயம் கலந்துரையாடப்பட வேண்டி கரு. இப்படியே இருப்போமானால் இந்த இனப்பிரச்சனைக்கு எப்படி முடிவு காண்பது?
ஆகவே உடனடியாக நாம் ஏதாவது செய்தே ஆகவேண்டிய தேவையில் இருக்கிறோம். ஆகவே இந்த வலைப்பதிவில் ஈழப்பிரச்சினைக்கான தீர்வைக்காணவும் அது பற்றி ஆலோசித்து ஒரு முடிவை எடுக்கவும் சகல வலைப்பதிவாளரையும் அழைக்கிறேன். முதலில் என் தீர்வைக் கூறுகிறேன்.

இதற்கான தீர்வென்பது மிகச்சுலபமானது. பக்கத்திலேயே தீர்வை வைத்துக்கொண்டு இவ்வளவுகாலம் ‘தேவையற்ற’ போரை நடத்திக்கொண்டுள்ளோம். முதலில் மனத்தில் சாந்தி வரவேண்டும். அமைதி குடிகொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவது கூடாது. உணர்ச்சிவசப்பட்டு எங்கள் உரிமைகள் பறிபோகிறதென்று கூச்சல் போடக்கூடாது. எதையும் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். ஆசைகளை அடக்கப்பழகிக்கொள்ள வேண்டும். குறிப்பாக எங்களுக்கும் மற்றவன்போல் சலுகைகள் (இதை உரிமைகள் என்றும் சிலர் சொல்வர்) வசதிகள் வேண்டும் என்று அடம்பிடிப்பதும் ஆசை கொள்வதும் தவறான மனப்பான்மை.

இவ்வளவு பண்புகளையும் தமிழ் மக்களிடம் கொண்டுவரவேண்டும். அதை ஆன்மீகத்தால் மாத்திரமே செய்ய முடியும். மக்களை ஆன்மீக வழியில் நடத்திச்செல்ல உரிய தலைமை தமிழர்களிடம் இப்போது இல்லை. கம்பன் கழகமூடாகச் செய்யப்பட்ட அத்திருப்பணியும் சில புல்லுருவிகளால் இடைநிறுத்தப்பட்டது. இப்போது அவர்கள் கொழும்பில் செயற்படுவதைக்கூட பொறுக்க முடியாமல் அவர்களுக்குக் கல்லெறிய வேண்டுமென்று கொக்கரிக்கிறார்கள். அவர்கள் திருப்பணி செய்யும் கொழும்பில் ஏதாவது பிரச்சினையுள்ளதா? போராட வேண்டிய தேவையுள்ளதா? மக்கள் துன்பப்படுகிறார்களா?
இல்லையே. எல்லோரும் சுமுகமாகத்தானே வாழ்கிறார்கள். அதுபோல் வடக்குக் கிழக்கிலும் தமிழ் மக்களிடம் ஆன்மீகத்தை விதைக்கக்கூடிய அமைப்புக்கள் தோன்ற வேண்டும். அதற்கான ஏதுநிலைகள் தற்போது தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது மகிழ்ச்சிகரமான செய்தி.

திருகோணமலையிலும் ஓமந்தையிலும் புத்தர் சிலைகள் தோன்றுவது நல்ல அறிகுறி. தமிழர்களை ஆன்மீகம் நோக்கியும், முதற்பந்தியில் நாம் கூறிய குணங்களை அம்மக்களிடத்திற் கொண்டு வருவதற்காகவும் இந்தப் புத்தர் சிலைகள் அரும்பங்காற்றும் என்று நாம் அனுமானிக்கிறோம். உண்மையில் தமிழர்களுக்கு இருக்க வேண்டுமென்று மேலே நாம் கூறிய அனைத்தும் மக்களிடம் போய்ச் சேர சிறந்த ஊடகம் புத்தமதம் என்பது எம் நிலைப்பாடு. புத்தர் தான் ஆசையைத் துறக்கச்சொன்னார். அவரின் வழியில் சென்றால் எந்தப்பிரச்சினையையும் தீர்த்துவிடலாம். இலங்கைப்பிரச்சினைக்கு பௌத்தம் தான் காரணம் என்று பலர் பசப்புகிறார்கள். உண்மையில் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க புத்த மதமே சிறந்தவழியென்பது எம் முடிவு.

பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது? கொஞ்சப்பேர் புத்த மதம் அல்லாதவர்களாக இருப்பதால் தானே? அனைவரும் புத்த மதத்தைத் தழுவிவிட்டால்?..
யோசித்துப்பாருங்கள், ஏதாவது பிரச்சனை இலங்கையில் வருமென்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. அனைவரும் புத்தமதத்தைத் தழுவிவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சினையென்ற கதைக்கே இடமில்லை. அதன்பிறகு உரிமைப்பிரச்சனையெல்லாம் இருக்காது. ஆசைகள் இருக்காது. எல்லோரும் சந்தோசமாக இருக்கலாம். எமக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து நிம்மதியாக இருக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம், இணையம் வழியே அலட்டலாம், எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கும், நல்ல வீதிகள் போடப்படும், எல்லோரும் சினிமா பாக்கலாம். எவ்வளவு அனுபவிக்கலாம். (இதையெல்லாம் ஆசை என்று சொல்ல முடியாது.)

இப்போது திருகோணமலையிலும் ஓமந்தையிலும் தோன்றிய புத்தர் சிலைகள் வடகிழக்கின் ஏனைய பகுதிகளிலும் தோன்ற வேண்டும். (இவை புத்தபெருமானால் தான் நிறுவப்படுகின்றன என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பதால் நான் அதைச் சொல்லவில்லை).
இந்த வழிமுறைமூலம் ஏனையோரையும் புத்த மதத்தைத் தழுவச்செய்வதன் மூலம் பல தசாப்தங்களாக நிலவிவரும் கொடிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், இனப்பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு காணமுடியும்.

எனவே இப்போது நாம் செய்யவேண்டிது, புத்தர்சிலைகள் அமைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதும், அனைவரையும் புத்த மதத்துக்கு மாறச்சொல்லி பரப்புரை செய்வதும் தான். சுனாமிப் பொதுக்கட்டமைப்பைவிட முக்கியமான பணி இவைதான். இவ்வளவுகாலமும் எமது சக்தியையும் நேரத்தையும் வீணடித்தது போதும். இனியும் உறங்க முடியாது. இவ்வளவு சுலபமான வழிமுறையிருக்க, எங்கெல்லாமோ தீர்வு தேடி அலைகிறோம்.

புத்தர்சிலை தோன்றுவதைப்பற்றி நான் சொன்னது பலருக்குப்பிடிக்காமலிருக்கலாம். எமது சகோதர இணையத்தளமான தேனி இது பற்றிக் கட்டுரையொன்று எழுதியுள்ளது. பாசிசப் புலிகளிடமிருந்து தம்மைப்பாதுகாக்கவே திருமலைத் தமிழ் மக்கள் புத்தர் சிலையிடம் சரணடைகிறார்கள் என்றும், புத்தர் சிலைக்கு எதிரான போராட்டமென்பது புலிகளின் பிரச்சாரமேயொழிய எந்தத் தமிழ்மகனுக்கும் புத்தர் சிலையை எதிர்ப்பதில் சற்றும் விருப்பமில்லையென்றும் அதில் ஆணித்தரமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே புத்தர் சிலையமைப்பதை எதிர்ப்பது புலிகள் தாம், மக்களல்ல என்பதைப் புரிந்துகொண்டீர்களென்றால் நான் கூறிய ஆலோசனையிலுள்ள சாத்திப்பாடும் உண்மையும் புரியும்.

இது சம்பந்தான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
சாத்தியப்பாடான மேலுமொரு தீர்வு பற்றி நாளை எழுதுவேன். அது தனியே ஈழப்பிரச்சினைக்கு மட்டுமன்றி உலகம் முழுவதுக்குமான பல சிக்கல்களைக்கும் தீர்வாக அமையுமென்று நம்புகிறேன்.
அதைப்பற்றிப் பிறகு.

பாசமுடன்,
-குட்டான்-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
இணையத் தமிழ் தீவிரவாதிகள் என்றெல்லாம் பயமுறுத்துகின்றீர்கள்.

//அதை ஆன்மீகத்தால் மாத்திரமே செய்ய முடியும்\\

உங்களிடம் நிறைந்து போயுள்ள நகைச்சுவை உணர்வை நான் மதிக்கின்றேன். தொடர்ந்தும் எழுதுங்கள்.

முடிந்தால் பின்னணி வண்ணத்தை மாற்றுங்கள். என் கண்களுக்கு ஒத்துவரவில்லை.
 
எழுதிக்கொள்வது: g.tp.=uq;fd;

இந் நூற்றாண்டின் அதி சிறந்த சமூகவியலாளர் நீரே!உமது பொன்னான மூளைக்கு அடுதாண்டுக்கான -சமாதனத்துக்கான நோபல் பரிசை நான் முன் மொழிகிறேன்.

20.2 23.6.2005
 
இந் நூற்றாண்டின் அதி சிறந்த சமூகவியலாளர் நீரே!உமது பொன்னான மூளைக்கு அடுதாண்டுக்கான -சமாதனத்துக்கான நோபல் பரிசை நான் முன் மொழிகிறேன்.
 
எழுதிக்கொள்வது: yaaro

ஐயா ராசா பறகு தமிழ் பொளத்தன் சிங்கள பௌத்தன் என்று எடுப்பு எடுப்பாங்கள்...பிறகு முதலேஈயிருந்து மீண்டும் ஒருக்கா சண்டை போடவேணும்...இதெல்லாம் தேவையா?

22.15 25.6.2005
 
எழுதிக்கொள்வது: Sankaracchariayar

ஆக இதற்கு எதற்கு புதிய இயக்கம் இதற்குத் தானே இருக்கின்றார்கள் காவிஉடை தரித்த சாமியார்கள். இத்துடன் போதாது என்று நீங்களும் தொடங்கியுள்ளீர்கள். சரி பரவாயில்லை. உங்ள் மதத்தின் பெயர் என்ன? கவனம் ஏற்கனே உள்ள சாமியார்கள் உங்களை சரி செய்து துஆராகி என பிரகடனப்படுத்தி விடுவார்கள் இதனை எதிர் பாருங்கள்
நன்றி
சங்காரச்சாரியார்.

23.4 23.6.2005
 
super nalla yosanaikal..
naan inraike putha mathikku
maridden..

PUTHAM SARANAM KACHAMI..

:)
 
Very thoughtfull solution... I repect buddhism, Hindusim is so violent, has many unnecessary MoodaNambikai... but Buddhist now pray hindu god, (ie: Kathirkaamam) they do pooja in sinhala... so rather than just changing to Buddhism, why don't we all start learning sinhalam too...

Pediyal... start an online tutorial... I will sign up...

maKe amMeee
 
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
சிலர் எங்களைக் கோமாளியாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். குறிப்பாக கிஸோ.
நாங்கள் கூறியவற்றில் என்ன தவறு என்றாவது ஒரு வரி எழுதத் தெரியவில்லை உங்களுக்கு. இதற்குள் நையாண்டி வேறு.

சிறிரங்கன் ஐயா!
விருதுக்கு சிபாரிசு செய்வதாகச் சொன்னதற்கு நன்றி. ஆனால் நாங்கள் விருதுக்காக இப்படியான சிந்தனைகளை உருவாக்குவதில்லை. ஆனால் விருது தந்தால் மறுக்க மாட்டோமென்பதையும் சொல்லிக் கொள்கிறோம். நாம் விரும்பாவிட்டாலும்கூட அதை மறுத்தால் விருது வழங்குபவர்களின் மனம் புண்படுமே என்பதற்காகத்தான். எமக்கு யாரையும் புண்படுத்த மனமில்லை.

தமிழ்ப்புத்தம் சிங்களப்புத்தம் பற்றிய பிரச்சினையைச் சொன்னவருக்கும், கடைசியாகப்பின்னூட்டமிட்ட கோபிக்கும்!
இது பற்றிய சிந்தனையை நாம் அடுத்த பதிவில் வெளியிடுவோம். அதுவரைப் பொறுத்தருள்க. கோபி உங்கள் பாராட்டுக்கு நன்றி.

மிக முக்கியமான ஆய்வுத்தளமான இதைவிட்டுவிட்டு வேறெங்கோ மானிடர் உப்புச்சப்பில்லாத வாதங்களில் தமது நேரத்தைச் செலவழிக்கின்றனர்.
அடுத்த சிந்தனையில் உங்களைச் சந்திக்கும்வரை

பாசமுடன்
-குட்டான்-
 
டோய் டோய்!
காணும் நிறுத்துங்கோடா.
அவன் கொழுவிய நிப்பாட்டி வச்சிட்டு இப்ப நீங்கள் துவங்கீட்டீங்கள்.
 
எழுதிக்கொள்வது: சங்கரராச்சாரியார்

ஆகா நல்லாத்தான் பெருமிதமடைகின்றீர்கள். தங்களின் ஆய்வுகளை இவ்வளவு மலினப்படுத்துகின்றீர்களே. எழுதுவதற்கு சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் சமூக ஆய்வு என்று மக்களை பேசாத ஊமைகளாக வைத்திருப்பதே பாசீசத்தின் தொழிற்பாடாக இருக்கின்றது. இதே போலதான் மதமும் பேசா மடந்தைகளாக வைத்திருப்பதன் மூலம் மக்களை சுரண்டுகின்றனர். அவ்வாறு தொடர்ச்சியாக சுரண்டலை தொடரவா மதத்தை அறிமுகம் செய்கின்றீர்கள். அது என்ன குட்டான். எங்கேயோ கேட்டகுரல் விடியும் வரை காத்தருபோல இருக்கு
சங்கரராச்சாரியார்

14.27 24.6.2005
 
எழுதிக்கொள்வது: Pirabharan Vellupillai

உங்களை கோமாளிகளாக்கத் மற்றவர்கள் தேவையில்லை. ஆனால் உங்களை நீங்களே கோமாளிகளாக்கிக் கொள்கின்றீர்கள். உங்களை நிங்களே கோமாளியாக்கிக் கொள்வதற்கு மற்றவர்கள் மீது ஏன் கோபப்படுகின்றீர்கள்

15.58 24.6.2005
 
எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

'இன்று பாசிசப் புலிகளைக் கொல்லக்கூடாதென்பவர்களும் இலங்கை ஆயுதப் படைகளின் எதிர்ப்புரட்சியின் போது அவர்களைக் கொல்லக் கூடாதென்பவர்களும் இந்த இனவாத புலிப் பாசிச இரட்டை ஆட்சிமுறையை நீடிக்கத் துணை போபவர்களாகும். ரஷ்சியப் புரட்சி முடிந்தவுடன் அந்தப் புரட்சியை ஏற்றுக் கொள்ளாத கவுட்ஸ்கி; போல்சுவிக்குகளைப் பயங்கரவாதிகளென்றான். ஒருவரையும் கொல்லவிரும்பாத புலி தனது ஆயுதங்களைக் கீழே போடுமா? அல்லது அரசாங்கம்தான் கீழே போடுமா? அரசாங்கத்தையும் புலிகளையும் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று சொல்வதற்குத் திராணியில்லாத ஜீவகாருண்ய சீலர்கள் எல்லாம் சிவராம் கொலையை அடுத்து கொலை பற்றியும் ஊடகத்துறையாளர் பற்றியும் பேசுகிறார்கள். இலங்கையின் அத்தனை கொலைகளுக்கும் முதலாவது பொறுப்பு டெய்லிமிரரும் டெய்லிநிய10சும் சுதந்திரனும் தினமினää தவச போன்ற பத்திரிகைகள்தான் முதற் பொறுப்பாகும்." (தேனீ.கொம்)



மக்களை அணுகுவது எவ்வாறு?

வரலாற்றுப் பாத்திரத்தில் எவ்வகையான தந்திரோபாயம் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியும்ää புலியை எதிர்கொள்ள இன்று எவ்வகை தந்திரோபாயம் பயன்படுத்துவது குறித்து கருத்துக் கூற முயற்சிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் இன்றைக்கு இலங்கை மக்களுக்கான எதிரிகள் வெளிப்படையாகவே தெரிகின்றனர். மக்களின் எதிரிகளின் சேவகர்கள் பல்வேறு வடிவத்தில் இருக்கின்றார்கள். ஏனெனில் உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஜனநாயக உரிமையை வழங்கி தேசிய இனங்களை ஒன்றினைத்துச் செல்லவேண்டிய தேவையும்ää ஜனநாயக உரிமை கொடுக்கவிடாது செயற்படும் வர்க்க நலனும்ää அதேபோல ஒரு தேசியத்தின் குரல்வளையை நசித்துக் கொண்டிருக்கும் குறுந்தேசியமும் இருக்கின்றன. இவர்கள் முதலாளித்துவம் என்ற எஜமானர்களின் சேவகர்களாக இருக்கின்றனர். இவைகள் மூலதனத்தின் செறிவில் வித்தியாசம் இருப்பினும்ää மூலதனத்தின் ஆக்கிரமிப்புக் காரணமாக சந்தை தேவைப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு வர்க்கத்தவர்களும் தத்தம் வர்க்கத்தின் (மூலதனச் செறிவிற்கு ஏற்ப) நண்பர்களைத் தெரிந்தெடுத்துள்ளனர். ஆக இருக்கின்ற அனைத்துச் சக்திகளும் மக்களின் எதிரிகளாகவே இருக்கின்றனர். நாம் இன்றைக்கு மக்கள் சார்பான அரசியலை வலியுறுத்த வேண்டிய கடமையாகின்றது.

இதில் நிச்சயம் மாறுபாடாக கருத்து தோன்ற இடம் இருக்கின்றது. தேசியத்தின்ää ஜனநாயகத்தின் பெயரில் கீழ் இருக்கும் வர்க்க நலன் வெளியே தெரியவிடாது. மக்களின் இரத்த்தைக் காட்டியே அரசியல் லாபம் பெறும் வர்க்கங்களை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இவைகளில் தரகுவர்க்கம் மூலதனத்தின் அவசியம் கருதி வெளிப்படையாகவே வெளிமூலதனத்துடன் உறவைப் பேணுகின்றது. தேசியம் தனது சந்தையைப் பாதுகாக்க முனைகின்ற வேளையில் இன்று தேசியத்தினை நிலை என்பது பரிதாபமானதாகவே இருக்கின்றது. இங்கு தரகு வர்க்கம் மறைமுகமாக தேசியத்தின் போர்வையில் இருந்து கொண்டிருக்கின்றது. எனினும் தரகுவர்க்கம் தேசியத்தை முதன்மைப்படுத்துவது குறுகிய நலனுக்காகவே என்பதை ஏகாதிபத்தியம் தெரிந்து வைத்திருக்கின்றது. இன்று ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தேசியத்தின் அடையாளங்களை சிதைத்தே வருகின்றது. ஏகாதிபத்தியங்களின் அழுத்தம் காரணமாக தேசியம் என்பது ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றது. இதனை தடுப்பதற்கு ஒரே ஆயுதம் மக்கள் சக்திதான்.

இதற்கு அடிப்படையானது மக்கள் உங்களை நம்புவதற்கு முதலில் எதிரியுடன் கூட்டுச் சேர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுவே தான் முதல் நிலையாகும்.



ஏகாதிபத்தியங்கள்→

↑↓
சிறிலங்கா அரசுää முதலாளிய கட்சிகள்
உழைப்பாளிகள் ஒடுக்குபவர்களின் பல்வேறு உருவங்களில்

புலிகள்ää த.தே.கூ
பிராந்தியவல்லரசு→


புலியெதிர்ப்பு அணிää சிங்கள சக்திகள்

த.தே.கூ




இவர்கள் தேசியத்தின் தோல் போர்த்திக் கொண்டு தரகு வர்க்கம் ஆழுமையில் இருக்கின்றது. இவர்களின் இருப்பு ஆயுதத்தின் வலிமையில் தான் தங்கியிருக்கின்றது. ஒரு போராட்டத்தின் இலக்கு என்பது அவர்களின் வர்க்கம் தான் தீர்மானிக்கின்றது. இன்றைய மக்களின் பிரச்சனை தேசிய இனப்பிரச்சனை இதற்கு வழி கண்டாக வேண்டும். இதற்கு ஒரு வழி தேசிய இனங்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதாகும்.



மாற்றுவழி காண்பதில் பல்வேறு திசைகள் இருப்பதை அறிய முடிகின்றது அவைதாம் பின்வருமாறு...

இவர்களில் ஒருபகுதி புலிகளை திருத்துவதாக கூறிக் கொண்டிருப்பவர்கள். இந்தப் பகுதினர் இந்தச் சமூகத்தின் உற்பத்தி என்பதால் இவர்கள் உழைக்கும் மக்களிடம் இருந்து பொருளாதார ரீதியாகவும்ää கல்வியிலும் உயர் நிலையில் இருக்கின்றனர். இவர்கள் துரோகப்பட்டத்திற்கு பயந்து செயற்படுபவர்கள் இவர்கள் எப்படியாவது தாம் இந்தச் சமூகத்தில் ஏதாவது வகையில் வாழ வேண்டும் என விரும்புவர்கள். இவர்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளும் நிலமை புலிகளுக்கு முடிகின்றது. இவர்கள் புலிகளின் பாசீசத்தை எதிர்ப்பதாக கூறினாலும் கூட இவர்களால் தனித்துவமாக செயற்பட முடியாது என்பதே இயல்பாகும். இவர்களின் வர்க்கத்தின் தேவை என்பது ஒரு பாசீசக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படுகின்ற போது இவர்கள் அதற்குள்ளேயே ஜோதியுடன் கலந்து விடுவர். இவர்கள் தான் புலிகளை தேசிய சக்தி எனக் வரையறுத்து கொண்டு புலிகளை பலப்படுத்துபவர்கள்.



புலியெதிர்ப்பில் இருக்கின்ற டக்கிளஸ் போன்றவர்களின் அரசியல் என்பது புலிகளுக்கு பலவிதத்தில் உதவியது குறிப்பிடத்தக்கதாகும். டக்கிளஸ் யாழ்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் சென்ற போது அங்கு பல செயற்பாடுகளை செய்தார். இதனை பத்திரிகைகளே ஏற்றுக் கொண்ட விடயம் இதில் எவரும் மாற்றுக் கருத்துக் கூறமாட்டார்கள். இவர்களின் இந்த செயற்பாட்டினால் புலிகளுக்கு இராணுவப் பலத்தை இவர்களின் வளர்ச்சி மூலமாக யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொடுத்தது. இவர்கள் யாழ் சென்ற பின்னர் பல வசதிகள் பெற்ற நிலையில் யாழ்ப்பாணம் வளர்ச்சியடைந்தது. அங்கு மக்கள் குடியேற்றம் மெதுமெதுவே நடைபெற்றது. இந்த வேளையில் புலிகளின் படைப்பிரிவுகளும் மீள் குடியேற்றத்தின் மூலம் யாழில் உட்புகுந்தனர். இதேவேளை தலைமறைவுப் போராளிகளும் யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளிலும் வாழ்ந்து வர மீள் குடியேற்றம் உதவி புரிந்தது. இந்த வேளையில் வன்னியில் பழக்கப்பட்ட போராளிகள் மக்களை அணுகுவதற்கு இலகுவாக இருந்தது. இவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பாதுகாப்புää உணவு கொடுப்பதற்கு உதவி புரிந்தனர். இதனால் அவர்கள் யாழில் மறுபடியும் புலிகளின் கால்பதிவதற்கு உதவினர். அதேவேளை

மாற்றுக் கருத்துக்கு சொந்தக் காரணாக தன்னைக் காட்டிக் கொண்டதினால் புலிகளுக்கு எதிரானவர்களை துரோகியென மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்த இலகுவாக இருந்தது. இவர்களின் செயப்பாடுகள் தன்னெழுச்சியான செயற்பாடுகள்ää மக்கள் இயக்கங்கள் வளர தடையாக இருந்தார்கள். மக்களின் உரிமைப் போராட்டத்தை பதவிää சோறுää சலுகை என்ற கீழான நிலைக்கு டக்கிளஸ் கொண்டு வந்ததை எவரும் மறுக்க முடியாது. இவர்தான் புலிகளின் உண்மைச் சேவகன் ஆனால் அவர்களின் ஏகக் கொள்கையும்ää எதிரி எப்பவும் தேவை என்பதால் டக்கிளஸ் இன்று எதிரியாக இருக்கின்றார்.



இதேபோல நுPசுடுகுஇ வுநுடுழுஇ Pடுழுவுநு போன்றவர்களும்ää அவர்களிடம் இருந்து விலகியவர்களும் இராணுவத்துடன் சேர்ந்து யாரைக் கொண்றார்கள்?

இன்று இவர்களால் எவ்வளவு தூரம் பாசீசத்திற்கு எதிரான ஒரு அணியை உருவாக்க முடிந்தது? இவைகள் நடைபெற்ற பின்னரும் இன்று புலிகள் முற்றுமுழுதாக அழிவதற்கு எவருடனும் சேர்ந்து செயற்பட முடியும் என்ற கொள்கையை வலியுறுத்தும் நிலைதான் இருக்கின்றது. இந்த அணியில் தற்பொழுது நுNனுடுகுஇ கருணாவின் மக்கள் விடுதலைப்புலிகளும் இருக்கின்றனர்.

கொல்லப்படுபவர்கள் எந்தப் சமூகப் பின்னனியில் இருந்து வருகின்றனர். இவர்களினால் புலிகளின் அதிகார வட்டத்தை அசைக்க முடியவில்லை. ஒரு கௌசல்யன் என்பது பொதுமைப்படுத்த முடியாது. இவர் ஒரு வேண்டாத நபர் என்பதாலேயே நிராயுதபாணியாக பயணிக்கப்பட்டார். புலிகளின் அதிகாரம் என்பது பௌதீக ரீதியாகவும்ää உளவியல் ரீதியாகவும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இன்றைய நிலை என்பது சிலர் தமது வர்க்க நலன்கள் பாதிக்கப்படும் போது எதிர்ப்பு முகாமை நோக்கி வருகின்றனர். இவ்வளவு காலமும் அவர்களின் வர்க்க நலன் பாதுகாக்கப்பட்டது. அவர்களிடையே போட்டி என்பது அரிதாக இருந்தது. இங்கு போட்டி போடுபவர்களின் விகிதம் அதிகரிக்கும் போது போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை இருக்கின்றது. (ஜேயதேவன் போன்றவர்கள் பற்றி மிக அருமையாக றறற.வயஅடைஉசைஉடந.நெவ விபரித்திருக்கின்றது) அதேவேளை அமைப்பே ஏகம் என்ற நிலைக்கு இருப்பதால் அவர்களுக்கு முழுவருவாயும் கிடைக்கும் நபர்களே அவர்களுக்கு தேவையானவர்கள். இந்தப் பகுதியை புலியெதிர்ப்பு அணியில் வைத்துக் கொண்டு யார்நலன் பாதுகாக்கப்பட போகின்றது?

கொல்லப்படும் மக்கள் பிரிவில் இருந்து நிரந்தர எதிர்ப்புணர்வே இருந்து கொண்டிருக்கும். குறிப்பான பேரலை பெரும்பகுதி கிழக்கு மக்களை கொண்டு சென்றது. இதன் பின்னர் பல நூற்றுக் கணக்காணவர்கள் கொல்லப்பட்டார்கள்ää கொல்லப்படப் போகின்றார்கள். பாதிக்கப்படுபவர்களின் குரலை கொலைகள் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு அடக்கி வைத்திருக்க முடியும்.



எவ்வாறு மக்களின் மனதை வெல்வது?

மக்களின் மனதை வெல்வது என்பது அவர்களின் வர்க்கத்தினை உணர்த்துவதன் மூலமும் அவர்களின் தேவைகளை முன்னெடுப்பதன் மூலமுமே சாத்தியமாகும். மக்களுக்கு எத்தனையோ பிரச்சனை இருக்கின்றது. அவர்களின் தேவைகளைப் ப10ர்த்தி செய்ய எந்தச் சக்திகளும் இல்லை. ஒன்று தேசியத்தை காட்டி வியாபாரம் செய்யும் ஒரு அமைப்பின் பாதை அல்லது புலிகளே எல்லாவற்றிற்கும் காரணம் எனக் கூறிக் கொண்டு ஒரு உறைந்த நிலையை (இயங்குவதிலே குறைபாடு உடைய நிலை) இந்த அமைப்புக்கள் கொண்டுள்ளது. இங்கு உறைந்த நிலைக்கு சென்றதற்கான காரணத்தைப் அறிவது அவசியமாகின்றது. ஏனெனில் மக்களின் தேவையில் கவனத்தில் கொள்ளாத சக்திகள் இந்த உறைந்த நிலைக்கு காரணமாக இருக்கின்றது. முன்னர் கூறியது போன்று எல்லாவற்றிற்கும் இடைய10றா புலிகள் இருக்கின்றார்கள் என்று செயற்பாடுகளில் தளர்ச்சியும்ää நம்பிக்கையின்மையும் தோன்றிவிடுகின்றது. அதேவேளை தமது உயிரைப் பாதுகாப்பது பற்றிய பிரச்சனை தான் முதன்மையாகவும் அமைந்து விட்டிருக்கின்றது.

மக்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாது புலி எதிர்நிலையில் உள்ளவர்கள் தமது பாதுகாப்பு நிலை என்ற முதல் தேவையை பூர்த்தி செய்யும் நிலையானது மக்களின் தேவைகளை பின்னுக்குத் தள்ளுகின்றது. இதன் மூலம் சலுகைகளுக்காக வாதிடும் அரசியல் வியாபாரிகளின் நிலைக்குதான் கொண்டு வந்து விடுகின்றது.

நல்ல உதாரணம் சந்திவெளியில் 9.5.05 அன்று இராணுவ வீதித் தடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது புலிகள் தமது தேவைக்காக பயன்படுத்திய ஒரு சம்பவம்ää அவர்கள் ஒரு பக்கத்தில் பேரம் பேசிக் கொண்டு மறுபக்கத்தில் கீழ்மட்ட உறுப்பினரிடையே சலனம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும்ää மக்களை இரத்தத்தைக் காட்டியே சிறிலங்கா அரச இயந்திரமே உண்மை எதிரியென மக்களுக்கு உணர்த்துவதற்கும் இது சந்தர்ப்பமாக அமைந்தது. இது புலிகள் திட்டமிட்டுச் செய்தார்களா அல்லது இல்லையா என்பது இங்கு பிரச்சனை இல்லை. மாறாக இதனால் மக்களுக்கு இடைய10று இருந்ததாக இல்லையா என்பது தான் விவாதத்துக்குரியது. பொது மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சு10டு மக்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இங்கு மக்களின் செயலைக் கண்டிக்க வேண்டிய நிலை இல்லை. 'இராணுவத்தினர் தமது பாதுகாப்புக் கருதி நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முதியவரான சிவன் அப்பு கந்தசாமி என்னும் 71 வயதுடையவர் அநியாயமாகப் பலியாகியுள்ளார். மேலும் 5 பாடசாலை மாணவிகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் 16 பொது மக்களும் காயங்களுக்கு உள்ளாகினர்." (நுPனுPநெறள.உழஅ) இதே போலதான் வரதராஜப் பெருமாள் வல்வைப் படுகொலைகளை மூடி மறைக்க முற்பட்டார். இராணுவத்தினர் தமது பாதுகாப்புக் கருதி என செய்திவிடுகின்றனர். இவ்வாறு பார்க்கும் போது மக்கள் பலிக்கடா என்பதற்கு அப்பால் மக்களின் இழப்புää போராட்ட முனைப்பு என்பதை கொச்சைப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இவ்வாறெனில் எவ்வாறு மக்கள் உங்கள் பக்கம் திரும்புவார்கள். இவர்களை தொடர்ச்சியாக புலிகளின் பிடியில் வைத்திருக்கவே துணைபுரியும். மக்களுக்கான தேவை என்பது இன்றைக்கும் இருக்கின்றது. சந்தையை வலுப்படுத்தும் நோக்கோடு தேசியம் தன்னை விலைபேச சம்மதித்துவிட்ட நிலையில் மக்களின் இறைமைää உலகமயமாதலினால் ஏற்படுகின்ற சமூக மாற்றங்கள்ää பொருளாதார ஏற்றத்தாழ்வுää நலிந்தவர்கள் நலிந்தவர்களாகவே இந்தச் சமூகத்தில் இடம் பெறுவர். ஆகவே அவர்களுக்கான பிரச்சனை என்பது இருந்து கொண்டேதான் இருக்கும். இவைகளாவனää

மக்களுக்கு பலபிரச்சனைகள் இருக்கின்றன இவற்றில் சில அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுää வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கின்றது.

தனியார்துறைத் தொழிலாளர்களுக்கு ஊழியச் சம்பளத்தினை அதிகரிக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களின் அலவம் தீர்வதற்கான போராட்டங்கள்ää செயற்திட்டங்களை முன்வைப்பது.

தனியார் மயமாக்கலை எதிர்ப்பது. புதிய பாதுகாப்பு வலயங்கள்ää மீனவர்களுக்கான கெடுபிடிகள் இவைகள் நாளாந்தம் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள்ää அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் தான். இவற்றினை கவனத்தில் கொண்டு அவர்களுக்கான ஒழுங்குகளை செய்வது அவசியமாகின்றது.

இதில் புலிகள் நலன்பெறுவார்கள் ஆனால் இன்று கட்டுபாடற்ற பிரதேசங்களில் இவற்றிற்கான போராட்டங்களை தொடக்குவது அவசியமாகின்றது. இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலமே உழைக்கும் மக்களுக்கான தளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். பாசீசத்தை தற்காப்புக்காக ஆயுதத்தால் எதிர் கொள்வது தவிர்க்க முடியாது. ஆனால் இவர்களை முழுமையாக எதிரியுடன் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தின் மூலம்ää ஆயுதத்தால் மாத்திரம் எதிர்கொள்ளல் என்ற தந்திரோபாயம் பின்னடை வைத்தான் ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்றைய போராளிகளுக்கு செட்டிää மைக்கல்ää குட்டிமணிää தங்கத்துரைää ஜெகன்ää தேவன்ää மனோமாஸ்டர்ää சிறிசபாரத்தினம்ää பத்மநாபாää பொதுவுடமைவாதிகளான மணியண்ணன்ää விசுவானந்ததேவன்ää விஜயானந்தன்ää நெப்போலியன் போன்றோரை யாருக்குத் தெரியும்? தெரியவே தெரியாது. அவர்களுக்கு யாரைத்தெரியும் என்றால் நேற்று யார் தனது தமையனைக் கொண்றதுää யார் துப்பாக்கியால் சுட்டதுää யார் வானத்தில் இருந்து குண்டு போட்டதுää தான் அகதியாகப் போக யார் காரணம் என்பது போன்ற கேள்விகள்தான் அவர்கள் முன்னிலையில் இருக்கும். இன்றைய சிறுவயதுப் போராளிகளுக்கு வரலாற்று ரீதியாக என்ன நடந்தது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. மக்களும் வயதுபோகப் போக எல்லாவற்றிற்கும் பயந்து ஒதுங்கியே செல்கின்றனர். இவை இரண்டு போக்குக்குமிடையே ஒரு போராட்டப் பாதையை அமைத்துக் கொள்வதுதான் விவேகமானது.

நாம் வரலாற்றைக் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் வரலாறு தெரியாத சிறுவர்களை தமது படையணிகளில் சேர்த்து மக்களையும் அமைப்பையே தமது பாசீச வலையை தொடர வைக்கின்றது.



1 பில்லியன் டொலர் தேவையென தேசியத்தின் பாதுகாலவர்கள் கூறுகின்றனர். இவ்வாறெனில் தேசியத்தினை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதனால் தேசிய நலன் என்பது ஆபத்துக்குள்ளாகி இருக்கின்றது. தேசியத்தின் பாதுகாவலர்களாலேயே தேசியத்தின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியிருக்கின்றது. தேசங்களின்ää இனங்களின் இறைமை உலகமயமாதலினால் ஆபத்துக்குள்ளாக்க பட்டிருக்கின்ற வேளையில் ஆளும் வர்க்கச் சக்திகள் தம்மிடையே சமரசத்தையும்ää விட்டுக் கொடுப்புக்களையும் செய்கின்றன. இன்று தேசியம் இருவௌ;வேறு சக்திகளின் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேற்குல நாடுகளின்ää இந்தியாவின் அனுசரணையும் ஆகும். இவர்களிடையே ஒரு பேரம் நடைபெறும் வரை பல்வேறு கட்டமைப்புக்களின் கோசங்களும்ää இழுபறிகளும்ää பேரங்களும் தொடர்ச்சியாக நடைபெறத்தான் போகின்றது. இன்று தேசியத்தின் நிலை இதுதான். ஆனால் இதற்கிடையே இந்த ஆடுகளத்தில் மக்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காக போராடத்தான் போகின்றார்கள். எல்லாம் கட்டமைப்புகள் உருவாகிய ப�
 
எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

'இன்று பாசிசப் புலிகளைக் கொல்லக்கூடாதென்பவர்களும் இலங்கை ஆயுதப் படைகளின் எதிர்ப்புரட்சியின் போது அவர்களைக் கொல்லக் கூடாதென்பவர்களும் இந்த இனவாத புலிப் பாசிச இரட்டை ஆட்சிமுறையை நீடிக்கத் துணை போபவர்களாகும். ரஷ்சியப் புரட்சி முடிந்தவுடன் அந்தப் புரட்சியை ஏற்றுக் கொள்ளாத கவுட்ஸ்கி; போல்சுவிக்குகளைப் பயங்கரவாதிகளென்றான். ஒருவரையும் கொல்லவிரும்பாத புலி தனது ஆயுதங்களைக் கீழே போடுமா? அல்லது அரசாங்கம்தான் கீழே போடுமா? அரசாங்கத்தையும் புலிகளையும் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று சொல்வதற்குத் திராணியில்லாத ஜீவகாருண்ய சீலர்கள் எல்லாம் சிவராம் கொலையை அடுத்து கொலை பற்றியும் ஊடகத்துறையாளர் பற்றியும் பேசுகிறார்கள். இலங்கையின் அத்தனை கொலைகளுக்கும் முதலாவது பொறுப்பு டெய்லிமிரரும் டெய்லிநிய10சும் சுதந்திரனும் தினமினää தவச போன்ற பத்திரிகைகள்தான் முதற் பொறுப்பாகும்." (தேனீ.கொம்)



மக்களை அணுகுவது எவ்வாறு?

வரலாற்றுப் பாத்திரத்தில் எவ்வகையான தந்திரோபாயம் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியும்ää புலியை எதிர்கொள்ள இன்று எவ்வகை தந்திரோபாயம் பயன்படுத்துவது குறித்து கருத்துக் கூற முயற்சிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் இன்றைக்கு இலங்கை மக்களுக்கான எதிரிகள் வெளிப்படையாகவே தெரிகின்றனர். மக்களின் எதிரிகளின் சேவகர்கள் பல்வேறு வடிவத்தில் இருக்கின்றார்கள். ஏனெனில் உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஜனநாயக உரிமையை வழங்கி தேசிய இனங்களை ஒன்றினைத்துச் செல்லவேண்டிய தேவையும்ää ஜனநாயக உரிமை கொடுக்கவிடாது செயற்படும் வர்க்க நலனும்ää அதேபோல ஒரு தேசியத்தின் குரல்வளையை நசித்துக் கொண்டிருக்கும் குறுந்தேசியமும் இருக்கின்றன. இவர்கள் முதலாளித்துவம் என்ற எஜமானர்களின் சேவகர்களாக இருக்கின்றனர். இவைகள் மூலதனத்தின் செறிவில் வித்தியாசம் இருப்பினும்ää மூலதனத்தின் ஆக்கிரமிப்புக் காரணமாக சந்தை தேவைப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு வர்க்கத்தவர்களும் தத்தம் வர்க்கத்தின் (மூலதனச் செறிவிற்கு ஏற்ப) நண்பர்களைத் தெரிந்தெடுத்துள்ளனர். ஆக இருக்கின்ற அனைத்துச் சக்திகளும் மக்களின் எதிரிகளாகவே இருக்கின்றனர். நாம் இன்றைக்கு மக்கள் சார்பான அரசியலை வலியுறுத்த வேண்டிய கடமையாகின்றது.

இதில் நிச்சயம் மாறுபாடாக கருத்து தோன்ற இடம் இருக்கின்றது. தேசியத்தின்ää ஜனநாயகத்தின் பெயரில் கீழ் இருக்கும் வர்க்க நலன் வெளியே தெரியவிடாது. மக்களின் இரத்த்தைக் காட்டியே அரசியல் லாபம் பெறும் வர்க்கங்களை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இவைகளில் தரகுவர்க்கம் மூலதனத்தின் அவசியம் கருதி வெளிப்படையாகவே வெளிமூலதனத்துடன் உறவைப் பேணுகின்றது. தேசியம் தனது சந்தையைப் பாதுகாக்க முனைகின்ற வேளையில் இன்று தேசியத்தினை நிலை என்பது பரிதாபமானதாகவே இருக்கின்றது. இங்கு தரகு வர்க்கம் மறைமுகமாக தேசியத்தின் போர்வையில் இருந்து கொண்டிருக்கின்றது. எனினும் தரகுவர்க்கம் தேசியத்தை முதன்மைப்படுத்துவது குறுகிய நலனுக்காகவே என்பதை ஏகாதிபத்தியம் தெரிந்து வைத்திருக்கின்றது. இன்று ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தேசியத்தின் அடையாளங்களை சிதைத்தே வருகின்றது. ஏகாதிபத்தியங்களின் அழுத்தம் காரணமாக தேசியம் என்பது ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றது. இதனை தடுப்பதற்கு ஒரே ஆயுதம் மக்கள் சக்திதான்.

இதற்கு அடிப்படையானது மக்கள் உங்களை நம்புவதற்கு முதலில் எதிரியுடன் கூட்டுச் சேர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுவே தான் முதல் நிலையாகும்.



ஏகாதிபத்தியங்கள்→

↑↓
சிறிலங்கா அரசுää முதலாளிய கட்சிகள்
உழைப்பாளிகள் ஒடுக்குபவர்களின் பல்வேறு உருவங்களில்

புலிகள்ää த.தே.கூ
பிராந்தியவல்லரசு→


புலியெதிர்ப்பு அணிää சிங்கள சக்திகள்

த.தே.கூ




இவர்கள் தேசியத்தின் தோல் போர்த்திக் கொண்டு தரகு வர்க்கம் ஆழுமையில் இருக்கின்றது. இவர்களின் இருப்பு ஆயுதத்தின் வலிமையில் தான் தங்கியிருக்கின்றது. ஒரு போராட்டத்தின் இலக்கு என்பது அவர்களின் வர்க்கம் தான் தீர்மானிக்கின்றது. இன்றைய மக்களின் பிரச்சனை தேசிய இனப்பிரச்சனை இதற்கு வழி கண்டாக வேண்டும். இதற்கு ஒரு வழி தேசிய இனங்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதாகும்.



மாற்றுவழி காண்பதில் பல்வேறு திசைகள் இருப்பதை அறிய முடிகின்றது அவைதாம் பின்வருமாறு...

இவர்களில் ஒருபகுதி புலிகளை திருத்துவதாக கூறிக் கொண்டிருப்பவர்கள். இந்தப் பகுதினர் இந்தச் சமூகத்தின் உற்பத்தி என்பதால் இவர்கள் உழைக்கும் மக்களிடம் இருந்து பொருளாதார ரீதியாகவும்ää கல்வியிலும் உயர் நிலையில் இருக்கின்றனர். இவர்கள் துரோகப்பட்டத்திற்கு பயந்து செயற்படுபவர்கள் இவர்கள் எப்படியாவது தாம் இந்தச் சமூகத்தில் ஏதாவது வகையில் வாழ வேண்டும் என விரும்புவர்கள். இவர்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளும் நிலமை புலிகளுக்கு முடிகின்றது. இவர்கள் புலிகளின் பாசீசத்தை எதிர்ப்பதாக கூறினாலும் கூட இவர்களால் தனித்துவமாக செயற்பட முடியாது என்பதே இயல்பாகும். இவர்களின் வர்க்கத்தின் தேவை என்பது ஒரு பாசீசக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படுகின்ற போது இவர்கள் அதற்குள்ளேயே ஜோதியுடன் கலந்து விடுவர். இவர்கள் தான் புலிகளை தேசிய சக்தி எனக் வரையறுத்து கொண்டு புலிகளை பலப்படுத்துபவர்கள்.



புலியெதிர்ப்பில் இருக்கின்ற டக்கிளஸ் போன்றவர்களின் அரசியல் என்பது புலிகளுக்கு பலவிதத்தில் உதவியது குறிப்பிடத்தக்கதாகும். டக்கிளஸ் யாழ்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் சென்ற போது அங்கு பல செயற்பாடுகளை செய்தார். இதனை பத்திரிகைகளே ஏற்றுக் கொண்ட விடயம் இதில் எவரும் மாற்றுக் கருத்துக் கூறமாட்டார்கள். இவர்களின் இந்த செயற்பாட்டினால் புலிகளுக்கு இராணுவப் பலத்தை இவர்களின் வளர்ச்சி மூலமாக யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொடுத்தது. இவர்கள் யாழ் சென்ற பின்னர் பல வசதிகள் பெற்ற நிலையில் யாழ்ப்பாணம் வளர்ச்சியடைந்தது. அங்கு மக்கள் குடியேற்றம் மெதுமெதுவே நடைபெற்றது. இந்த வேளையில் புலிகளின் படைப்பிரிவுகளும் மீள் குடியேற்றத்தின் மூலம் யாழில் உட்புகுந்தனர். இதேவேளை தலைமறைவுப் போராளிகளும் யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளிலும் வாழ்ந்து வர மீள் குடியேற்றம் உதவி புரிந்தது. இந்த வேளையில் வன்னியில் பழக்கப்பட்ட போராளிகள் மக்களை அணுகுவதற்கு இலகுவாக இருந்தது. இவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பாதுகாப்புää உணவு கொடுப்பதற்கு உதவி புரிந்தனர். இதனால் அவர்கள் யாழில் மறுபடியும் புலிகளின் கால்பதிவதற்கு உதவினர். அதேவேளை

மாற்றுக் கருத்துக்கு சொந்தக் காரணாக தன்னைக் காட்டிக் கொண்டதினால் புலிகளுக்கு எதிரானவர்களை துரோகியென மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்த இலகுவாக இருந்தது. இவர்களின் செயப்பாடுகள் தன்னெழுச்சியான செயற்பாடுகள்ää மக்கள் இயக்கங்கள் வளர தடையாக இருந்தார்கள். மக்களின் உரிமைப் போராட்டத்தை பதவிää சோறுää சலுகை என்ற கீழான நிலைக்கு டக்கிளஸ் கொண்டு வந்ததை எவரும் மறுக்க முடியாது. இவர்தான் புலிகளின் உண்மைச் சேவகன் ஆனால் அவர்களின் ஏகக் கொள்கையும்ää எதிரி எப்பவும் தேவை என்பதால் டக்கிளஸ் இன்று எதிரியாக இருக்கின்றார்.



இதேபோல நுPசுடுகுஇ வுநுடுழுஇ Pடுழுவுநு போன்றவர்களும்ää அவர்களிடம் இருந்து விலகியவர்களும் இராணுவத்துடன் சேர்ந்து யாரைக் கொண்றார்கள்?

இன்று இவர்களால் எவ்வளவு தூரம் பாசீசத்திற்கு எதிரான ஒரு அணியை உருவாக்க முடிந்தது? இவைகள் நடைபெற்ற பின்னரும் இன்று புலிகள் முற்றுமுழுதாக அழிவதற்கு எவருடனும் சேர்ந்து செயற்பட முடியும் என்ற கொள்கையை வலியுறுத்தும் நிலைதான் இருக்கின்றது. இந்த அணியில் தற்பொழுது நுNனுடுகுஇ கருணாவின் மக்கள் விடுதலைப்புலிகளும் இருக்கின்றனர்.

கொல்லப்படுபவர்கள் எந்தப் சமூகப் பின்னனியில் இருந்து வருகின்றனர். இவர்களினால் புலிகளின் அதிகார வட்டத்தை அசைக்க முடியவில்லை. ஒரு கௌசல்யன் என்பது பொதுமைப்படுத்த முடியாது. இவர் ஒரு வேண்டாத நபர் என்பதாலேயே நிராயுதபாணியாக பயணிக்கப்பட்டார். புலிகளின் அதிகாரம் என்பது பௌதீக ரீதியாகவும்ää உளவியல் ரீதியாகவும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இன்றைய நிலை என்பது சிலர் தமது வர்க்க நலன்கள் பாதிக்கப்படும் போது எதிர்ப்பு முகாமை நோக்கி வருகின்றனர். இவ்வளவு காலமும் அவர்களின் வர்க்க நலன் பாதுகாக்கப்பட்டது. அவர்களிடையே போட்டி என்பது அரிதாக இருந்தது. இங்கு போட்டி போடுபவர்களின் விகிதம் அதிகரிக்கும் போது போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை இருக்கின்றது. (ஜேயதேவன் போன்றவர்கள் பற்றி மிக அருமையாக றறற.வயஅடைஉசைஉடந.
 
எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

எழுதிக்கொள்வது: xxxxxxxxx

'இன்று பாசிசப் புலிகளைக் கொல்லக்கூடாதென்பவர்களும் இலங்கை ஆயுதப் படைகளின் எதிர்ப்புரட்சியின் போது அவர்களைக் கொல்லக் கூடாதென்பவர்களும் இந்த இனவாத புலிப் பாசிச இரட்டை ஆட்சிமுறையை நீடிக்கத் துணை போபவர்களாகும். ரஷ்சியப் புரட்சி முடிந்தவுடன் அந்தப் புரட்சியை ஏற்றுக் கொள்ளாத கவுட்ஸ்கி; போல்சுவிக்குகளைப் பயங்கரவாதிகளென்றான். ஒருவரையும் கொல்லவிரும்பாத புலி தனது ஆயுதங்களைக் கீழே போடுமா? அல்லது அரசாங்கம்தான் கீழே போடுமா? அரசாங்கத்தையும் புலிகளையும் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று சொல்வதற்குத் திராணியில்லாத ஜீவகாருண்ய சீலர்கள் எல்லாம் சிவராம் கொலையை அடுத்து கொலை பற்றியும் ஊடகத்துறையாளர் பற்றியும் பேசுகிறார்கள். இலங்கையின் அத்தனை கொலைகளுக்கும் முதலாவது பொறுப்பு டெய்லிமிரரும் டெய்லிநிய10சும் சுதந்திரனும் தினமினää தவச போன்ற பத்திரிகைகள்தான் முதற் பொறுப்பாகும்." (தேனீ.கொம்)



மக்களை அணுகுவது எவ்வாறு?

வரலாற்றுப் பாத்திரத்தில் எவ்வகையான தந்திரோபாயம் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியும்ää புலியை எதிர்கொள்ள இன்று எவ்வகை தந்திரோபாயம் பயன்படுத்துவது குறித்து கருத்துக் கூற முயற்சிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் இன்றைக்கு இலங்கை மக்களுக்கான எதிரிகள் வெளிப்படையாகவே தெரிகின்றனர். மக்களின் எதிரிகளின் சேவகர்கள் பல்வேறு வடிவத்தில் இருக்கின்றார்கள். ஏனெனில் உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஜனநாயக உரிமையை வழங்கி தேசிய இனங்களை ஒன்றினைத்துச் செல்லவேண்டிய தேவையும்ää ஜனநாயக உரிமை கொடுக்கவிடாது செயற்படும் வர்க்க நலனும்ää அதேபோல ஒரு தேசியத்தின் குரல்வளையை நசித்துக் கொண்டிருக்கும் குறுந்தேசியமும் இருக்கின்றன. இவர்கள் முதலாளித்துவம் என்ற எஜமானர்களின் சேவகர்களாக இருக்கின்றனர். இவைகள் மூலதனத்தின் செறிவில் வித்தியாசம் இருப்பினும்ää மூலதனத்தின் ஆக்கிரமிப்புக் காரணமாக சந்தை தேவைப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு வர்க்கத்தவர்களும் தத்தம் வர்க்கத்தின் (மூலதனச் செறிவிற்கு ஏற்ப) நண்பர்களைத் தெரிந்தெடுத்துள்ளனர். ஆக இருக்கின்ற அனைத்துச் சக்திகளும் மக்களின் எதிரிகளாகவே இருக்கின்றனர். நாம் இன்றைக்கு மக்கள் சார்பான அரசியலை வலியுறுத்த வேண்டிய கடமையாகின்றது.

இதில் நிச்சயம் மாறுபாடாக கருத்து தோன்ற இடம் இருக்கின்றது. தேசியத்தின்ää ஜனநாயகத்தின் பெயரில் கீழ் இருக்கும் வர்க்க நலன் வெளியே தெரியவிடாது. மக்களின் இரத்த்தைக் காட்டியே அரசியல் லாபம் பெறும் வர்க்கங்களை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இவைகளில் தரகுவர்க்கம் மூலதனத்தின் அவசியம் கருதி வெளிப்படையாகவே வெளிமூலதனத்துடன் உறவைப் பேணுகின்றது. தேசியம் தனது சந்தையைப் பாதுகாக்க முனைகின்ற வேளையில் இன்று தேசியத்தினை நிலை என்பது பரிதாபமானதாகவே இருக்கின்றது. இங்கு தரகு வர்க்கம் மறைமுகமாக தேசியத்தின் போர்வையில் இருந்து கொண்டிருக்கின்றது. எனினும் தரகுவர்க்கம் தேசியத்தை முதன்மைப்படுத்துவது குறுகிய நலனுக்காகவே என்பதை ஏகாதிபத்தியம் தெரிந்து வைத்திருக்கின்றது. இன்று ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தேசியத்தின் அடையாளங்களை சிதைத்தே வருகின்றது. ஏகாதிபத்தியங்களின் அழுத்தம் காரணமாக தேசியம் என்பது ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றது. இதனை தடுப்பதற்கு ஒரே ஆயுதம் மக்கள் சக்திதான்.

இதற்கு அடிப்படையானது மக்கள் உங்களை நம்புவதற்கு முதலில் எதிரியுடன் கூட்டுச் சேர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுவே தான் முதல் நிலையாகும்.



ஏகாதிபத்தியங்கள்→

↑↓
சிறிலங்கா அரசுää முதலாளிய கட்சிகள்
உழைப்பாளிகள் ஒடுக்குபவர்களின் பல்வேறு உருவங்களில்

புலிகள்ää த.தே.கூ
பிராந்தியவல்லரசு→


புலியெதிர்ப்பு அணிää சிங்கள சக்திகள்

த.தே.கூ




இவர்கள் தேசியத்தின் தோல் போர்த்திக் கொண்டு தரகு வர்க்கம் ஆழுமையில் இருக்கின்றது. இவர்களின் இருப்பு ஆயுதத்தின் வலிமையில் தான் தங்கியிருக்கின்றது. ஒரு போராட்டத்தின் இலக்கு என்பது அவர்களின் வர்க்கம் தான் தீர்மானிக்கின்றது. இன்றைய மக்களின் பிரச்சனை தேசிய இனப்பிரச்சனை இதற்கு வழி கண்டாக வேண்டும். இதற்கு ஒரு வழி தேசிய இனங்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதாகும்.



மாற்றுவழி காண்பதில் பல்வேறு திசைகள் இருப்பதை அறிய முடிகின்றது அவைதாம் பின்வருமாறு...

இவர்களில் ஒருபகுதி புலிகளை திருத்துவதாக கூறிக் கொண்டிருப்பவர்கள். இந்தப் பகுதினர் இந்தச் சமூகத்தின் உற்பத்தி என்பதால் இவர்கள் உழைக்கும் மக்களிடம் இருந்து பொருளாதார ரீதியாகவும்ää கல்வியிலும் உயர் நிலையில் இருக்கின்றனர். இவர்கள் துரோகப்பட்டத்திற்கு பயந்து செயற்படுபவர்கள் இவர்கள் எப்படியாவது தாம் இந்தச் சமூகத்தில் ஏதாவது வகையில் வாழ வேண்டும் என விரும்புவர்கள். இவர்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளும் நிலமை புலிகளுக்கு முடிகின்றது. இவர்கள் புலிகளின் பாசீசத்தை எதிர்ப்பதாக கூறினாலும் கூட இவர்களால் தனித்துவமாக செயற்பட முடியாது என்பதே இயல்பாகும். இவர்களின் வர்க்கத்தின் தேவை என்பது ஒரு பாசீசக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படுகின்ற போது இவர்கள் அதற்குள்ளேயே ஜோதியுடன் கலந்து விடுவர். இவர்கள் தான் புலிகளை தேசிய சக்தி எனக் வரையறுத்து கொண்டு புலிகளை பலப்படுத்துபவர்கள்.



புலியெதிர்ப்பில் இருக்கின்ற டக்கிளஸ் போன்றவர்களின் அரசியல் என்பது புலிகளுக்கு பலவிதத்தில் உதவியது குறிப்பிடத்தக்கதாகும். டக்கிளஸ் யாழ்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் சென்ற போது அங்கு பல செயற்பாடுகளை செய்தார். இதனை பத்திரிகைகளே ஏற்றுக் கொண்ட விடயம் இதில் எவரும் மாற்றுக் கருத்துக் கூறமாட்டார்கள். இவர்களின் இந்த செயற்பாட்டினால் புலிகளுக்கு இராணுவப் பலத்தை இவர்களின் வளர்ச்சி மூலமாக யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொடுத்தது. இவர்கள் யாழ் சென்ற பின்னர் பல வசதிகள் பெற்ற நிலையில் யாழ்ப்பாணம் வளர்ச்சியடைந்தது. அங்கு மக்கள் குடியேற்றம் மெதுமெதுவே நடைபெற்றது. இந்த வேளையில் புலிகளின் படைப்பிரிவுகளும் மீள் குடியேற்றத்தின் மூலம் யாழில் உட்புகுந்தனர். இதேவேளை தலைமறைவுப் போராளிகளும் யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளிலும் வாழ்ந்து வர மீள் குடியேற்றம் உதவி புரிந்தது. இந்த வேளையில் வன்னியில் பழக்கப்பட்ட போராளிகள் மக்களை அணுகுவதற்கு இலகுவாக இருந்தது. இவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பாதுகாப்புää உணவு கொடுப்பதற்கு உதவி புரிந்தனர். இதனால் அவர்கள் யாழில் மறுபடியும் புலிகளின் கால்பதிவதற்கு உதவினர். அதேவேளை

மாற்றுக் கருத்துக்கு சொந்தக் காரணாக தன்னைக் காட்டிக் கொண்டதினால் புலிகளுக்கு எதிரானவர்களை துரோகியென மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்த இலகுவாக இருந்தது. இவர்களின் செயப்பாடுகள் தன்னெழுச்சியான செயற்பாடுகள்ää மக்கள் இயக்கங்கள் வளர தடையாக இருந்தார்கள். மக்களின் உரிமைப் போராட்டத்தை பதவிää சோறுää சலுகை என்ற கீழான நிலைக்கு டக்கிளஸ் கொண்டு வந்ததை எவரும் மறுக்க முடியாது. இவர்தான் புலிகளின் உண்மைச் சேவகன் ஆனால் அவர்களின் ஏகக் கொள்கையும்ää எதிரி எப்பவும் தேவை என்பதால் டக்கிளஸ் இன்று எதிரியாக இருக்கின்றார்.



இதேபோல நுPசுடுகுஇ வுநுடுழுஇ Pடுழுவுநு போன்றவர்களும்ää அவர்களிடம் இருந்து விலகியவர்களும் இராணுவத்துடன் சேர்ந்து யாரைக் கொண்றார்கள்?

இன்று இவர்களால் எவ்வளவு தூரம் பாசீசத்திற்கு எதிரான ஒரு அணியை உருவாக்க முடிந்தது? இவைகள் நடைபெற்ற பின்னரும் இன்று புலிகள் முற்றுமுழுதாக அழிவதற்கு எவருடனும் சேர்ந்து செயற்பட முடியும் என்ற கொள்கையை வலியுறுத்தும் நிலைதான் இருக்கின்றது. இந்த அணியில் தற்பொழுது நுNனுடுகுஇ கருணாவின் மக்கள் விடுதலைப்புலிகளும் இருக்கின்றனர்.

கொல்லப்படுபவர்கள் எந்தப் சமூகப் பின்னனியில் இருந்து வருகின்றனர். இவர்களினால் புலிகளின் அதிகார வட்டத்தை அசைக்க முடியவில்லை. ஒரு கௌசல்யன் என்பது பொதுமைப்படுத்த முடியாது. இவர் ஒரு வேண்டாத நபர் என்பதாலேயே நிராயுதபாணியாக பயணிக்கப்பட்டார். புலிகளின் அதிகாரம் என்பது பௌதீக ரீதியாகவும்ää உளவியல் ரீதியாகவும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இன்றைய நிலை என்பது சிலர் தமது வர்க்க நலன்கள் பாதிக்கப்படும் போது எதிர்ப்பு முகாமை நோக்கி வருகின்றனர். இவ்வளவு காலமும் அவர்களின் வர்க்க நலன் பாதுகாக்கப்பட்டது. அவர்களிடையே போட்டி என்பது அரிதாக இருந்தது. இங்கு போட்டி போடுபவர்களின் விகிதம் அதிகரிக்கும் போது போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை இருக்கின்றது. (ஜேயதேவன் போன்றவர்கள் பற்றி மிக அருமையாக றறற.வயஅடைஉசைஉடந.நெவ விபரித்திருக்கின்றது) அதேவேளை அமைப்பே ஏகம் என்ற நிலைக்கு இருப்பதால் அவர்களுக்கு முழுவருவாயும் கிடைக்கும் நபர்களே அவர்களுக்கு தேவையானவர்கள். இந்தப் பகுதியை புலியெதிர்ப்பு அணியில் வைத்துக் கொண்டு யார்நலன் பாதுகாக்கப்பட போகின்றது?

கொல்லப்படும் மக்கள் பிரிவில் இருந்து நிரந்தர எதிர்ப்புணர்வே இருந்து கொண்டிருக்கும். குறிப்பான பேரலை பெரும்பகுதி கிழக்கு மக்களை கொண்டு சென்றது. இதன் பின்னர் பல நூற்றுக் கணக்காணவர்கள் கொல்லப்பட்டார்கள்ää கொல்லப்படப் போகின்றார்கள். பாதிக்கப்படுபவர்களின் குரலை கொலைகள் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு அடக்கி வைத்திருக்க முடியும்.



எவ்வாறு மக்களின் மனதை வெல்வது?

மக்களின் மனதை வெல்வது என்பது அவர்களின் வர்க்கத்தினை உணர்த்துவதன் மூலமும் அவர்களின் தேவைகளை முன்னெடுப்பதன் மூலமுமே சாத்தியமாகும். மக்களுக்கு எத்தனையோ பிரச்சனை இருக்கின்றது. அவர்களின் தேவைகளைப் ப10ர்த்தி செய்ய எந்தச் சக்திகளும் இல்லை. ஒன்று தேசியத்தை காட்டி வியாபாரம் செய்யும் ஒரு அமைப்பின் பாதை அல்லது புலிகளே எல்லாவற்றிற்கும் காரணம் எனக் கூறிக் கொண்டு ஒரு உறைந்த நிலையை (இயங்குவதிலே குறைபாடு உடைய நிலை) இந்த அமைப்புக்கள் கொண்டுள்ளது. இங்கு உறைந்த நிலைக்கு சென்றதற்கான காரணத்தைப் அறிவது அவசியமாகின்றது. ஏனெனில் மக்களின் தேவையில் கவனத்தில் கொள்ளாத சக்திகள் இந்த உறைந்த நிலைக்கு காரணமாக இருக்கின்றது. முன்னர் கூறியது போன்று எல்லாவற்றிற்கும் இடைய10றா புலிகள் இருக்கின்றார்கள் என்று செயற்பாடுகளில் தளர்ச்சியும்ää நம்பிக்கையின்மையும் தோன்றிவிடுகின்றது. அதேவேளை தமது உயிரைப் பாதுகாப்பது பற்றிய பிரச்சனை தான் முதன்மையாகவும் அமைந்து விட்டிருக்கின்றது.

மக்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாது புலி எதிர்நிலையில் உள்ளவர்கள் தமது பாதுகாப்பு நிலை என்ற முதல் தேவையை பூர்த்தி செய்யும் நிலையானது மக்களின் தேவைகளை பின்னுக்குத் தள்ளுகின்றது. இதன் மூலம் சலுகைகளுக்காக வாதிடும் அரசியல் வியாபாரிகளின் நிலைக்குதான் கொண்டு வந்து விடுகின்றது.

நல்ல உதாரணம் சந்திவெளியில் 9.5.05 அன்று இராணுவ வீதித் தடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இது புலிகள் தமது தேவைக்காக பயன்படுத்திய ஒரு சம்பவம்ää அவர்கள் ஒரு பக்கத்தில் பேரம் பேசிக் கொண்டு மறுபக்கத்தில் கீழ்மட்ட உறுப்பினரிடையே சலனம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும்ää மக்களை இரத்தத்தைக் காட்டியே சிறிலங்கா அரச இயந்திரமே உண்மை எதிரியென மக்களுக்கு உணர்த்துவதற்கும் இது சந்தர்ப்பமாக அமைந்தது. இது புலிகள் திட்டமிட்டுச் செய்தார்களா அல்லது இல்லையா என்பது இங்கு பிரச்சனை இல்லை. மாறாக இதனால் மக்களுக்கு இடைய10று இருந்ததாக இல்லையா என்பது தான் விவாதத்துக்குரியது. பொது மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சு10டு மக்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இங்கு மக்களின் செயலைக் கண்டிக்க வேண்டிய நிலை இல்லை. 'இராணுவத்தினர் தமது பாதுகாப்புக் கருதி நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முதியவரான சிவன் அப்பு கந்தசாமி என்னும் 71 வயதுடையவர் அநியாயமாகப் பலியாகியுள்ளார். மேலும் 5 பாடசாலை மாணவிகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் 16 பொது மக்களும் காயங்களுக்கு உள்ளாகினர்." (நுPனுPநெறள.உழஅ) இதே போலதான் வரதராஜப் பெருமாள் வல்வைப் படுகொலைகளை மூடி மறைக்க முற்பட்டார். இராணுவத்தினர் தமது பாதுகாப்புக் கருதி என செய்திவிடுகின்றனர். இவ்வாறு பார்க்கும் போது மக்கள் பலிக்கடா என்பதற்கு அப்பால் மக்களின் இழப்புää போராட்ட முனைப்பு என்பதை கொச்சைப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இவ்வாறெனில் எவ்வாறு மக்கள் உங்கள் பக்கம் திரும்புவார்கள். இவர்களை தொடர்ச்சியாக புலிகளின் பிடியில் வைத்திருக்கவே துணைபுரியும். மக்களுக்கான தேவை என்பது இன்றைக்கும் இருக்கின்றது. சந்தையை வலுப்படுத்தும் நோக்கோடு தேசியம் தன்னை விலைபேச சம்மதித்துவிட்ட நிலையில் மக்களின் இறைமைää உலகமயமாதலினால் ஏற்படுகின்ற சமூக மாற்றங்கள்ää பொருளாதார ஏற்றத்தாழ்வுää நலிந்தவர்கள் நலிந்தவர்களாகவே இந்தச் சமூகத்தில் இடம் பெறுவர். ஆகவே அவர்களுக்கான பிரச்சனை என்பது இருந்து கொண்டேதான் இருக்கும். இவைகளாவனää

மக்களுக்கு பலபிரச்சனைகள் இருக்கின்றன இவற்றில் சில அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுää வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கின்றது.

தனியார்துறைத் தொழிலாளர்களுக்கு ஊழியச் சம்பளத்தினை அதிகரிக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களின் அலவம் தீர்வதற்கான போராட்டங்கள்ää செயற்திட்டங்களை முன்வைப்பது.

தனியார் மயமாக்கலை எதிர்ப்பது. புதிய பாதுகாப்பு வலயங்கள்ää மீனவர்களுக்கான கெடுபிடிகள் இவைகள் நாளாந்தம் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள்ää அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் தான். இவற்றினை கவனத்தில் கொண்டு அவர்களுக்கான ஒழுங்குகளை செய்வது அவசியமாகின்றது.

இதில் புலிகள் நலன்பெறுவார்கள் ஆனால் இன்று கட்டுபாடற்ற பிரதேசங்களில் இவற்றிற்கான போராட்டங்களை தொடக்குவது அவசியமாகின்றது. இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலமே உழைக்கும் மக்களுக்கான தளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். பாசீசத்தை தற்காப்புக்காக ஆயுதத்தால் எதிர் கொள்வது தவிர்க்க முடியாது. ஆனால் இவர்களை முழுமையாக எதிரியுடன் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தின் மூலம்ää ஆயுதத்தால் மாத்திரம் எதிர்கொள்ளல் என்ற தந்திரோபாயம் பின்னடை வைத்தான் ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்றைய போராளிகளுக்கு செட்டிää மைக்கல்ää குட்டிமணிää தங்கத்துரைää ஜெகன்ää தேவன்ää மனோமாஸ்டர்ää சிறிசபாரத்தினம்ää பத்மநாபாää பொதுவுடமைவாதிகளான மணியண்ணன்ää விசுவானந்ததேவன்ää விஜயானந்தன்ää நெப்போலியன் போன்றோரை யாருக்குத் தெரியும்? தெரியவே தெரியாது. அவர்களுக்கு யாரைத்தெரியும் என்றால் நேற்று யார் தனது தமையனைக் கொண்றதுää யார் துப்பாக்கியால் சுட்டதுää யார் வானத்தில் இருந்து குண்டு போட்டதுää தான் அகதியாகப் போக யார் காரணம் என்பது போன்ற கேள்விகள்தான் அவர்கள் முன்னிலையில் இருக்கும். இன்றைய சிறுவயதுப் போராளிகளுக்கு வரலாற்று ரீதியாக என்ன நடந்தது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. மக்களும் வயதுபோகப் போக எல்லாவற்றிற்கும் பயந்து ஒதுங்கியே செல்கின்றனர். இவை இரண்டு போக்குக்குமிடையே ஒரு போராட்டப் பாதையை அமைத்துக் கொள்வதுதான் விவேகமானது.

நாம் வரலாற்றைக் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் வரலாறு தெரியாத சிறுவர்களை தமது படையணிகளில் சேர்த்து மக்களையும் அமைப்பையே தமது பாசீச வலையை தொடர வைக்கின்றது.



1 பில்லியன் டொலர் தேவையென தேசியத்தின் பாதுகாலவர்கள் கூறுகின்றனர். இவ்வாறெனில் தேசியத்தினை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதனால் தேசிய நலன் என்பது ஆபத்துக்குள்ளாகி இருக்கின்றது. தேசியத்தின் பாதுகாவலர்களாலேயே தேசியத்தின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியிருக்கின்றது. தேசங்களின்ää இனங்களின் இறைமை உலகமயமாதலினால் ஆபத்துக்குள்ளாக்க பட்டிருக்கின்ற வேளையில் ஆளும் வர்க்கச் சக்திகள் தம்மிடையே சமரசத்தையும்ää விட்டுக் கொடுப்புக்களையும் செய்கின்றன. இன்று தேசியம் இருவௌ;வேறு சக்திகளின் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மேற்குல நாடுகளின்ää இந்தியாவின் அனுசரணையும் ஆகும். இவர்களிடையே ஒரு பேரம் நடைபெறும் வரை பல்வேறு கட்டமைப்புக்களின் கோசங்களும்ää இழுபறிகளும்ää பேரங்களும் தொடர்ச்சியாக நடைபெறத்தான் போகின்றது. இன்று தேசியத்தின் நிலை இதுதான். ஆனால் இதற்கிடையே இந்த ஆடுகளத்தில் மக்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காக போராடத்தான் போகின்றார்கள். எல்லாம் கட்டமைப்புகள் உருவாகிய பின்னர் தான் கிடைக்கும் என்பதற்கு மக்கள் தயாராக இருக்கப் போவில்லை. காரணம் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் இருந்து தமது உறவுகள் இல்லாதவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அன்றாடம் தமது வாழ்வுக்காக நித்தம் போராடிக் கொண்டிருப்பவர்கள். இந்த யுத்த நிறுத்தம் என்பது உழைப்பாளிகளுக்கு ஏற்பட்ட ஒரு நிம்மதிதான். இன்றும் இந்த அமைதியினால் உண்மையில் பயம் கொள்பவர்கள் சந்தையை பாதுகாக்கää உறுதி செய்ய முற்படுபவர்கள்தான். இது வெறும் கொச்சைத்தனமாக தெரியலாம். இதனை தேசியவாதிகள் திட்டலாம்ää ஆனால் இதுதான் உண்மை. இவர்கள் தமது சந்தையை பெரும் மூலதனத்திடம் தான் எதிர்பார்த்து நிற்கின்றனர். இவைகளே உலகப் பயணங்கள் காட்டி நிற்கின்றது. இந்தப் பயணங்கள் அரசுää புலிகள் என இருபகுதியினரும் தத்தம் சக்திகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் பிராந்திய நலன்கருதி செயற்படும் சக்திகள் பகை முரண்பாடு சமூகத்தில் விதைக்கப்பட்ட நிலையில் பிராந்திய நலன் கொண்ட அரசியல் பாதைகள் பலவீனமாகி விடுகின்ற நிலைதான் இருக்கின்றது. வலுவான மேற்குலகு சார்ந்த அரசியல் நலன் பேணப்படுகின்ற வேளையில் அவர்களின் பிரதிநிதிகள் மிக வலுவாகவே தளத்தில் இருக்கின்றனர். இந்த ஆடுகளத்தில் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் சக்திகளின் பலம் என்பது உடனடியாக வலுப்பெற எந்தச் சந்தர்ப்பமும் இல்லை. இலகுவாக துரோகியென சமூகத்தில் இருந்து அன்னியப்படுத்த முடியும். இவைகள் தாண்டி மக்களின் தேசிய நலன்ää அன்றாடப் பிரச்சனைகள்ää பொருளாதாரப் பிச்சனைகள் என்று இருந்து கொண்டேதான் இருக்கின்றது.

ஆளும் வர்க்கச் சக்திகள் தம்மிடையே சமரசத்தையும்ää விட்டுக் கொடுப்புக்களையும் செய்கின்றன வேளையில் மக்களின் இனங்களின் சுயநிர்ணயம் என்பது பற்றி அதிக அக்கறையைக் காட்டப் போவதில்லை. ஆனால் இந்தக் கட்டமைப்புகள் என்பது பெயரில் தான் வித்தியாசம் இருக்கின்றனவேயன்றி எல்லாம் பெரிய எஜமானர்கள் போடும் பிச்சையில் தான் தங்கியிருக்கின்றது. இது நிதியாகவும்ää புதிய முதலீட்டுக்காக சந்தர்ப்பமாகவும்ää சொந்த மக்களை அடக்கியாளவும் செய்வர். பெரும் மூலதனத்தைக் கொண்டு இருப்பவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பே. ஆனால் சாதாரன தமிழ் முதலாளிகளின் விகிதம் என்பது குறைவாகவே இருக்கின்றது. கட்டமைப்புக்களினால் பயன்பெறுவது புலிகளேயாகும். இதனால் தொடர்ச்சியாக ஒரு வெற்றிடம் வரப் போகின்றது. அந்த வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்பதான் சவாலாகும்.

இந்தச் சவால் உழைக்கும் மக்களின் தேவையும்ää தேசத்தின் சிறிய மூலதனச் செறிவைக் கொண்ட முதலாளிகளின் தேவையும் தொடர்ச்சியாக வெற்றிடமாக இருக்கத்தான் போகின்றது. இந்த ஆடுகளத்தில் இருக்கின்ற தளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி புரட்சிகர சக்திகள்ää நேசசக்திகள் தம்மிடையே ஒருமைப்பாட்டிற்கு வரவேண்டும். இங்கு துப்பாக்கி பேசுவதை விட விவேகமான செயற்பாடுகள் தான் அவசியமாகின்றது.

இந்த ஆடுகளம் என்பது தற்பொழுது வெற்றிடமாகவே இருக்கின்றது. புலிகளைச் சாட்டியே தமது செயற்பாடுகளை உறைந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ள நிலை உழைக்கும் மக்கள் நலன் கொண்ட அரசியலால் மாத்திரமே மாற்றத்திற்கு கொண்டு வரமுடியும்.



பழைய அமைப்புக்கள் ஆய்வைத்தேடி

'மேதின அறை கூவல் 2005 ஈ.பி.ஆர்.எல்.எவ்- பத்மநாபா| பீனிக்ஸ்போன்று உயிர்த்தெழ வேண்டிய வரலாற்றுச் சந்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்;" மற்றொரு ஆய்வில்

'வடக்கு கிழக்கின் அரசியல் சமூக அரங்கு தேசியம் சாதி பிராந்தியம் வர்க்கம் சில பிரச்சனைகள்

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலும் சுனாமி மறு நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதிலும்; தனது உள்ளார்ந்த ஆற்றலைக் காட்டவேண்டும். இல்லையேல் தோல்வியைத் தழுவும் நாடு என பெயரெடுக்க வேண்டியேற்படும். கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நிலவும் இன முரண்பாட்டு சிக்கலுக்குத் தீர்வு காண்பதும் வௌ;வேறு இலங்கையில்வாழும் தமிழ் ääசிங்கள முஸ்லிம்ää பறங்கி என அனைத்து இன மக்களும் இன ரீதியான பாரபட்சங்களுக்கு உட்படாத நிலையில் வாழ்வதற்கான அடிப்படை அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு இலங்கையில் நிறுவப்படவேண்டும்"



இவர்கள் வடக்கு கிழக்கின் அரசியல் சமூக அரங்கு தேசியம் சாதி பிராந்தியம் வர்க்கம் சில பிரச்சனைகள் போன்றவற்றைப் பற்றி தற்பொழுது பெருத்த அக்கறை கொண்டு செயற்படுகின்ற வேளையில் இவர்கள் சொந்த மக்களை நம்பிச் செயற்படும் அரசியலை இவர்கள் கைவிட்டனர் என்பதை சுயவிமர்சனம் செய்யப் போவதில்லை. இதனால் இவர்கள் எவ்வளவுதான் ஆய்வைச் செய்தாலும் முன்னேற முடியாது. இன்றைக்கு இருக்கின்ற முரண்பட்ட வர்க்க நலன்களில் (பிராந்திய - ஏகாதிபத்திய) இவற்றில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும் நிலைதான் இருக்கின்றது. இதனை விடுத்து மூன்றாவது நிலை இருக்கின்றது என்பதை இவர்கள் அனுபவத்தினூடாக கற்ரறியவும் இல்லை. இவர்களும் எதற்கு எடுத்தாலும் புலிகள் தான் காரணம் என்கின்றனர். 1986 ஆண்டுக்குப் பின்னரான மற்றைய இயக்கங்களின் தவறான பாதைதான் புலிகளால் இவர்களை மக்கள் மத்தியில் இருந்து துரோகியென முத்திரை குத்த முடிகின்றது.

'இன்று பாசிசப் புலிகளைக் கொல்லக்கூடாதென்பவர்களும் இலங்கை ஆயுதப் படைகளின் எதிர்ப்புரட்சியின் போது அவர்களைக் கொல்லக் கூடாதென்பவர்களும் இந்த இனவாத புலிப் பாசிச இரட்டை ஆட்சிமுறையை நீடிக்கத் துணை போபவர்களாகும். ரஷ்சியப் புரட்சி முடிந்தவுடன் அந்தப் புரட்சியை ஏற்றுக் கொள்ளாத கவுட்ஸ்கி; போல்சுவிக்குகளைப் பயங்கரவாதிகளென்றான். ஒருவரையும் கொல்லவிரும்பாத புலி தனது ஆயுதங்களைக் கீழே போடுமா? அல்லது அரசாங்கம்தான் கீழே போடுமா? அரசாங்கத்தையும் புலிகளையும் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று சொல்வதற்குத் திராணியில்லாத ஜீவகாருண்ய சீலர்கள்....

இங்கு புலிகளை அழிப்பதை முதன்மைவேலைத்திட்டமாக கொண்டு செயற்படும் செயற்பாடுகள் அதனை முன்னெடுப்பவர்களுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். இன்று அவர்களே பிரதான பங்காளிகளாக இருப்பது உண்மையே. இதில் எமது விருப்பு வெறுப்புää அவர்கள் எவ்வாறு அப்பதவிக்கு வந்தனர் என்தெல்லாம் எமது அரசியல் சார்ந்த விடயம். ஆனால் இவர்களின் வலுவான தளம் என்பது இவர்களே தேசியத்தின் பங்காளிகாக இருக்கின்றார்கள். ஆனால் தேசியம் என்பது கூட குறிப்பிட்ட பகுதி சார்ந்தது. இவை மீறி உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் அவர்கள் நலனை கொண்டு செயற்படுவது அவசியமாகின்றது.

ஜே.வி.பி யின் தளம் என்பது வடக்கு கிழக்கு அல்லää அதற்கு தெற்கில் வலுவான தளம் இருக்கின்றது. அது தனது நிலைப்பாட்டை தமிழர்களின் சம்மதம் இல்லாது எடுத்துக் கொள்ள முடிகின்றது. இது இந்திய நிலைப்பாடு பற்றியது கூட பெரிய பிரச்சனை இல்லை. மாறாக தமிழ் அமைப்புக்களைப் பொறுத்தவரை தளம் என்பது வடக்கு கிழக்காகத் தான் இருக்க முடியும். தெற்கில் இருக்கும் தளவசதி என்பது சேமிப்பு நிலைதான் என்றுதான் கொள்ள முடியும். இந்நிலையானது ஏகாதிபத்திய நலன்ää பிராந்திய நலன் என்று பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் ஏகாதிபத்திய நலன் பேணும் நிலைதான் தேசியத்தின் கீழ் செயற்படுகின்றன. இவ்வாறு தளம் இல்லாத நிலையில் இருக்கின்ற பிராந்திய நலன் கொண்டு செயற்படும் அரசியல் என்பது இலகுவாக தேசிய (தரகு) போர்வைக்குள் இருக்கின்ற வர்க்க நலன் என்பது இவர்களை முறியடிக்க இலகுவாக அமைந்து விடுகின்றது.

இன்று இரண்டு முகாமாக பிளவுண்டுள்ள வர்க்க நலன்கள் ஒன்றையொன்று சமரசம் செய்யும் நிலை இருக்கின்றது. இவைகள் பல நிபந்தனைகளுடன் நடைபெறும் இதற்கு மாற்றுத் தலைமை என்பது இன்றைய நிலையில் சாத்தியம் அற்றதாக இருக்கின்றது. ஆனால் இவர்களிடையேயான பேரம் என்பது தமிழ் மக்களின் இறைமையை பலிகொண்டதாகவே இருக்கும். எனவே இறைமையை பாதுகாக்கும் ஒரு வர்க்கத்தின் தேவையாகும். இதற்கு உழைக்கும் மக்களின் தலைமையிலான அரசியலே இன்று ஆடுகளத்தில் வெற்றிடமாக உள்ளது. இதனை விடுத்து நேடி அழிப்பு யுத்தப் பாதை என்பது புலிகளுக்கு சாத்தியமானதொன்றாகவே அமையும்.



இதில் தமிழ் முன்னைய இயக்கங்கள் எவ்வாறு உறைந்த நிலைக்கு சென்றிருக்கின்றதோ அதேபோல இடதுசாரிகளும் புலியெதிர்நிலையை அதிகம் கவனத்தில் கொள்வதால் துரோகியென்ற தமிழ் தேசிய மையவாதக் கருத்துக்கு தப்பிப் பிழைக்கும் நிலைப்பாட்டைத் தான் அவர்கள் எடுத்துள்ளார்கள். இவ்வாறான நிலையை இடதுசாரிக் கட்சிகள் ஏற்படுத்திக் கொள்ளாது தமது அரசியல் பாதையை தெரிவு செய்திருக்கின்ற காரணத்தினால் உழைக்கும் மக்கள் சார்பான பல பிரச்சனைகளை முன்னிறுத்தும் போராட்ட நடவடிக்கைகள் பின்னதள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இதில் பொதுவுடமைவாதிகள் தேசியத்தின் கொலைக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்கு தப்பிவாழும் தந்திரோபாயத்தின் அடிப்படையில் செயற்படுகின்றனர். இது காலத்தின் தேவையா? அல்லது சரணாகதியா என்ற கேள்வி கேட்பதற்கு நிச்சயம் இடம் உண்டு. இவர்கள் தமிழ் மக்களின் நலன் கொண்ட நிலைப்பாட்டை எடுக்கின்றனர். இதில் இவர்களுக்குத் தெரியும் தேசியம் பிற்போக்கு நிலைக்குச் சென்று விட்டது என ஆனால் சிங்கள தேசம் தனது உரிமைய வழங்க வேண்டும். அதேவேளை எமது ஆட்சியாளர்களை அகற்றுவது தமிழர்களாக எமது கடமை. எமது சுயநிர்ணயத்தைப் பாதுகாப்பது தமிழ் பாசீசம் உட்பட அனைத்து சுரண்டும் வர்க்கத்தை முறியடிப்பதிலேயே தங்கியிருக்கின்றது.

பொதுவுடமை வாதிகள் மக்களுடன் எப்பொழுதும் நிற்பதன் மூலமே தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்படாமல் இருக்க முடியும். ஆனால் பொதுவுடமைசார் அமைப்புக்கள் தமிழ் பிரதேசத்தில் முழுமையாக வேர் ஊன்ற விடப்போவதில்லை. இவர்களின் செயற்பாடுகள் வெறும் அறிக்கை விடும் நிலைதான் இருக்கின்றது. இவர்களும் தமது தனித்துவமான நிலை எடுப்பதற்கு தயாராக இல்லை எனத் தான் கூற வேண்டும்.



இங்கு மறுபடியும் கேள்வியெழும்பலாம் மக்களின் மற்றைய பிரச்சனைகளை இனப்பிரச்சனை கூர்மையாக இருக்கின்ற போது தீர்க்க முடியாது என்பதாகும். இவைகள் உண்மையே ஒரு இனத்தின் ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பது அவசியமாகின்றது. இன்றைய அமைதிக் காலம் உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்க்கங்களின் முரண்பாடு இன்று முன்னிறுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இவர்களின் நிலை என்பது அனைத்து மக்களின் சுயநிர்ணயத்திற்கே ஒரு இடையூறாக இருக்கின்றது. இவர்கள் சுயநிர்ணய உரிமையை தமது நலனுக்காக விட்டுக் கொடுக்கும் நிலைதான் இருக்கின்றது. இந்த நிலையில் சுயநிர்ணயத்தை வலியுறுத்தும் அரசியல் சக்திகளின் வெற்றிடம் காலியாக உள்ளது. இந்த நிலையில் இந்தச் சக்திகள் வாழும் மக்களிடத்தில் இருந்துதான் வரவேண்டும். மாறாக வெளியிடத்தில் இருந்து வரமுடியாது.

தெற்கில் (ஜே.வி.பி) இருந்து போராட்டத்தலைமை உருவாகுவதோ அல்லது அவர்களின் தளங்களில் இருந்து போராட்ட தளத்தை விஸ்தரிப்பது என்பதோ சாத்தியமற்றதாகும். இன்று இனவாதம் என்ற பூதம் அனைத்து இனங்களில் பிரிவுகளிடத்தில் விதைக்கப்பட்டிருக்கின்றது. எந்தச் சக்தியும் இனங்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலம் தான் மற்றைய இனங்களின் நம்பிக்கையை பெற முடியும். இதுதவறும் இடத்தில் தேசியத்தின் கடுமையான பிரச்சார வல்லமை மாத்திரம் அல்ல. அனைத்து வர்க்க விரோதிகளும் இவற்றிற்கு எதிராகவே இருப்பார்கள்.



சொந்த மக்களையும்ää சொந்தத் தளத்தையும் கொண்;ட ஒரு போராட்ட வடிவம் என்பது அவசியமாகும். இருக்கின்ற ஆடுகளம் என்பது வெறுமையாக இருக்கின்றது. அங்கே மக்களின் தேசிய நலன்ää அன்றாடப் பிரச்சனைகள்ää பொருளாதாரப் பிச்சனைகள்ää மீள்குடியேற்றம் என பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு இருக்கப் போகின்றது. இவற்றை நிவர்த்தி செய்வதற்கான மீள் பார்வையை நோக்கி பயணிக்கத் தயாராகும் போராட்ட இலக்குத்தான் தொடர்ச்சியானதாகும்.

16.1 24.6.2005

16.1 24.6.2005

16.1 24.6.2005

16.1 24.6.2005

16.1 24.6.2005

16.1 24.6.2005

16.1 24.6.2005
 
சு.ப.ம் said...
நீங்கள் கோமாழிகள் என்று நீங்க்லெ ஒத்துக்கொள்ளலாமோ?

Enna Vizhayaadu?
 
அன்பார்ந்த ஊடக நண்பர்களே

இந்த ஆக்கமானது மக்களின் நலன் கொண்டு எழுதப்பட்டது. எழுதியதின் நோக்கம் கருத்து மக்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே. இந்தக் கருத்துடன் எல்லோரும் உடன்பட வேண்டும் என்பதல்ல. மாறாக உங்களுக்கும் இந்த ஆக்கத்தின் வர்க்க நிலைப்பாட்டிற்கும் உடன்பாடு இருப்பின் இதனை மாற்றம் செய்யாது, உடன்பாடற்றவற்றிற்கு கருத்துக் கூறி இதனை உங்கள் ஊடகங்களில் வெளியிடலாம்.
இன்றைய காலமானது எழுத்தாளனின் பாதுகாப்பு என்பது முக்கியமானதாகும். எழுத்தாளனின் அடையாளம் என்பது இன்றைய காலத்தில் தவிக்கப்பட வேண்டியது என்பது என் கருத்து. எழுதியது யார் என்பதை விட அதில் உள்ள கருத்துக்கள், உள்ளடக்கம் முக்கியம் எனக் கருதுகின்றோம். அதேபோல எழுத்துக்கள், இலக்கியங்கள் மக்கள் நலன் கொண்டதாக இருக்க வேண்டும் என நம்புகின்றோம். இதனால் எழுத்துக்கள் எழுத்தாளனுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கத் தேவையில்லை. மாறாக அவை மக்களின் மேன்மைக்கான பயன்படுவதே மேன்மையான நோக்கமாக கருதுகின்றோம்.
1985களைப் போல் பன்முக அரசியல் இயக்கங்களைக் கொண்ட காலம் அல்ல. மாறாக குழிபறிப்பு, கொலை, மிரட்டல், அவமானப்படுத்தல், அன்னியப்படுத்தல் இடம் பெறும் காலம். இந்த நிலையில் சுதந்திர ஊடகங்களாக செயற்படும் செயல் வீரர்கள் இருக்கின்றனர். இவ்வேளை இந்த ஆக்கம் அவ்வகையான ஊடகங்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கும் படி செய்வீர்களானால் வரலாறு உங்கள் பணியை நினைவில் வைத்துக் கொள்ளும்.
அனைத்து படைப்புக்களும் மக்களுக்கே!


தனித் தேசியம் என்ற ஒரு கோட்பாடு மட்டும் தான் உள்ளதா?




இன்றைய நிலையில் விடுதலைப்புலிகளே ஏக பிரதிநிதிகள் என்றும் அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு தவறுகள் ஒன்றும் செய்யவில்லை என்பதுடன் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களாக சார்பு நிலை கொண்ட ஊடகங்களால் வெளிப்படுத்தப்படுகின்றனர்.

இன்னெரு பகுதியினர் புலிகள் எது செய்தாலும் பிழை என்பது மட்டுமே இவர்களின் வாதம். இத்துடன் இச்சக்திகள் அரசின் அடக்குமுறையை தொடர்வதையும், அவர்கள் செய்யும் சிறு சலுகையையும் தேசிய இனத்தின் மீதுள்ள பற்றினால் செய்பவர்களாக காட்டுகின்றனர். இவர்கள் ஒரு அரசாங்கம் என்ற நிலையில் இருந்து கட்டாயம் செய்ய வேண்டிய நிர்வாகக் கடமைகள் என்று பாராது, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாடு. இவை ஒரு மோசமான நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளை விமர்சிப்பதுடன், அவர்களின் குழுநலன்கள் மக்களின் நலன்களுடன் ஒன்றுபட்டுச் செல்கின்றன. இந்த வேளையில் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். குறிப்பாக இனஅழிவில் இருந்து எம்மையும், விடுதலைப்புலிகளின் தலைமையையும் காப்பாற்றுவது ஏதுமற்ற உழைக்கும் வர்க்கத்தின் புதல்வியர், புதல்வர்களே. ஏழைக் குடும்பங்களில் இருந்து விடுதலைக்காக போராடப்புறப்பட்ட போராளிகளை தலைமையை விமர்சிப்பது போல் அவர்களை விமர்சிக்க முடியாது. விமர்சனம் என்பது தலைமைக்கு எவ்விதத்திலும் அழுத்தத்தைக் கொடுக்கப் போவதில்லை. மாறாக போராளிகளை எவ்வாறு வென்றெடுப்பது என்பதிலே மாற்றுத் தந்திரோபாயம் அடங்கியிருக்கின்றது.
கடந்த காலத்தில் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற கோட்பாட்டில் செயற்பட்ட அமைப்புகள், தனிநபர்கள் என்பன. புலிகளின் தலைவரையோ, அல்லது அதிகார வர்க்கமான இரண்டாம் நிலையில் உள்ளவர்களையோ, அல்லது அவர்களின் அதிகார வட்டத்தையோ அசைக்க மற்றைய இயக்கங்களால் முடிந்ததா என்பதே கேள்வி?

மாறாக படைகளுடன் சேர்ந்து மோகன், ராசிக்குழு போன்றவர்களும், (இவர்கள் இன்று புலியுடன் கூடிக் குலாவுவது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடியது அல்ல. ஏனெனில் மக்கள் சக்தியை மாத்திரம் நம்பி அரசியல் நடத்தாத சக்திகளின் நிலை இதுவே) E.P.R.LF(S), TELO, PLOT, EPDP, E.P.R.LF(V) செயற்பட்டனர். இதனால் அவதிக்குள்ளாகியது தலைமைப்பீடமா? அல்லது சாதாரண மக்களா? அதேவேளை இவர்களின் இந்தச் செயற்பாட்டினால் கீழ்மட்டப் போராளிகளின் நம்பகத்தினை விடுதலைப் புலிகளின் தலைமை பயன்படுத்தினர்.

இதேபோல வர்க்க சக்திகளின் தந்திரோபாயங்களை அவதானத்தில் கொள்ளாது. E.P.R.L.F(S), TELO, PLOT, EPDP, E.P.R.L.F (V or Naba) போன்ற இயக்கங்கள் வெறுமனே புலி எதிர்ப்பு வாதத்தின் சகதிக்குள் சிக்குண்டு போயினர். இத்துடன் இவர்களின் கருத்தை நம்பி வந்த உறுப்பினர்களின் தியாகங்கள், இவர்களின் அரசியல் வறுமையால் கொச்சைப்படுத்தப்பட்டது, தியாகமும், சக்தியும் வீண்விரயமாகியது. இதனால் இவர்கள் தொடர்ந்தும் எதிரிகளுடன் கூடிக் குலாவும் அரசியல் பாதை சரிதான என இவர்களும் தமது பாதையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கை அரசினால் ஏற்படும் நெருக்கடிகளை வெற்றியுடன் கொண்டாடினர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது புலித் தலைமையை விட அடிமட்டப் போராளிகளும், மக்களும் என்பதில் கவனத்தில் கொள்ளாது புலிகளின் இக்கட்டான நிலையை எண்ணி மகிழ்ந்தனர், மகிழ்கின்றனர்.

இன்றைய நிலையில் தமிழ் தேசியக் குரல் ஒன்றுதான் அடிப்படையானது என்பது இன்றைய நிலையாக உள்ளது. இதனைத் தவிர மற்றைய நிலையில் இருந்து கருத்துக் கூறுமிடத்தில் துரோகிகளாக நிர்ணயம் செய்யப்படுகின்றனர்.

இலங்கை மக்களை எடுத்துக் கொண்டால் பல பிரச்சனைகளை அனைத்துச் சமூகத்தவர்களும் எதிர்நோக்கிக் கொள்கின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கான போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தக் கூடிய ஒரு சூழ்நிலை என்பது அனைத்து தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளின் சிந்து விளையாட்டின் மூலம் பின்னடைவிற்கு உள்ளாகியிருக்கின்றது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் இனவாத, பதவியைக் காப்பாற்றும் அரசியலும் அவர்களின் பின்னால் அணிதிரண்டிருக்கும் மக்களும் அரசியல்வாதிகளின் வளமையாக பசப்பு வார்த்தைகளுக்கும், வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து கொண்டிருக்கும் மக்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
இவ்வாறே பதவியில் இருக்கின்ற போது உழைப்பாளிகளின் உரிமையையும், மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் செய்தும் தனியார் மயப்படுத்தலில் வேகத்தை செயற்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியினர் தற்பொழுது மக்களின் உரிமைக்காக போராடுவதாகவும், தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் பேச்சுவார்த்தையை தொடரவேண்டும் என்று கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் ஒன்றையொன்று விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் பொதுவான பிரதிநிதிகளை தமிழ்பேசும் முஸ்லீம்கள் சார்பாக நியாயத்தை முன்வைக்க தவறுவதுடன், தொழிலாளர், கூலிகள், வறுமையில் வாடுவோர் நிலையை கவனத்தில் கொள்ளாது மந்திரி சபையில் இடம்பிடிக்கவும், தமது உற்றார் நலன் மீது கவனம் செலுத்தவும் சக்தியைப் பாவிப்பதாக அவர்களே ஒருவரை ஒருவர் விமர்சிக்கின்றனர். (இந்த நிலை அனைத்து இனத்தின் பிரதிநிதிகளும் இதனைத் தான் செய்கின்றனர்)
குறுந்தேசியவாதம்
இன்று வரைக்கும் தமிழ்ப் பேசும் இஸ்லாமிய மக்களின் சுயநிர்ணயத்தை தமிழ் தேசியம் ஏற்றுக் கொண்டுள்ளதாக எந்தவித உறுதிப்பாடும் ஏகபிரதிநிதிகளிடம் இருந்து வரவில்லை. அதாவது இவர்களின் அரசியல் உரிமைகளுக்கு உத்தரவாதம் வளங்கவில்லை. அதேவேளை வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் பேசும் இஸ்லாமியர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கு எந்தவித ஆக்கபூர்வமான எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஆம் வாருங்கள் வந்து குடியேறுங்கள் என்று வெறும் சம்பிரதாயத்திற்கு கூறுகின்றரேயன்றி மனச்சுத்தியுடன் செயற்படலில்லை. இவைமாத்திரம் அன்றி அவர்களின் நம்பிக்கையை, நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமாக எந்தவித செயற்பாடுகளிலும் இறங்கவில்லை. குறிப்பாக மன்னாரில் ஏற்பட்ட கலகத்தின் பின்னர் சமாதானப் பேச்சுக்கு சென்றிருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கிஸோர் அவர்களின் பேச்சு (வெக்ரோன் செய்தியின் பகுதியில் காட்டப்பட்ட சிறு காட்சியில் உங்கள் பகுதியினர் என விழித்து காட்டிய நிகழ்ச்சி என்பது சமாதான முயற்சிக்கான ஒரு அணுகுமுறை அல்ல. மாறாக ஒரு பக்கம் சார்ந்திருப்பதைக் காட்டியது. இது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இரண்டு பகுதிகள் முன்னைய காலத்தில் சச்சரவுகள் ஏற்பட்ட போது சாதியக் குழுக்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுப் பண்புகளைக் கொண்டிருந்தது. இந்தச் சண்டைகள் வெட்டுக் கொத்து, வஞ்சம் தீர்ப்பது, மறைந்திருந்து தாக்குவது, பிரதேசங்களுக்கு நகரமுடியாத பண்புகளைக் கொண்டிருந்தது. இவைகள் இரத்த உறவுகளை மையமாகக் கொண்ட, சாதிய, குலச்சமுதாய (இனக்குழும) எச்சங்களைக் கொண்ட ஒரு சமூகத்தில் இருப்பது போன்ற பண்பைக் கொண்டிருந்தது. (இது பின்னாளில் ஆயுத இயக்கங்களின் முஸ்லீம்கள் மீதான தாக்குதலின் பின்னர் இதன் பண்பு வடிவம் மாறுபட்டது.) அந்தக் காலத்தில் எவ்வகையான அணுமுறைகளைக் கையாண்டார்கள் என்று தெரியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து கொண்டு ஏகப்பிரதிநிதித்துவத்துக்கும், தமிழ் மக்களுக்கும் குரல் கொடுக்கப்போவதாக இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்ற அவல நிலைக்கு ஏக கோட்பாடுதான் என்ற கருக்கோளே காரணம். இவர்களுக்கு இனங்களுக்கிடையே இருக்கின்ற கசப்புணர்வுகளைப் போக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. மாறாக தமது இனத்தின் ஒரு பகுதியினரின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதாக என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.

தமிழ்ப் பேசும் முஸ்;லிம் மக்களின் இறைமையை, அவர்கள் வாழும் நிலத்தை இன்று வரைக்கும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்ப் பேசும் சிறுபான்மை தேசிய இஸ்லாமிய மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காது, அவர்களை தமிழ் தரப்புக்குள் இருந்துதான் அணுக வேண்டும் என்பதோ, அல்லது தமிழ் தேசியத்திற்கு உட்பட்டுத் தான் இருக்க வேண்டும் என்பது மேலான்மையைத் தான் குறித்து நிற்கின்றது.
பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு மற்றைய பாதிக்கப்பட்ட தரப்புக்களை ஒன்று சேர்த்தே போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மாறாக இவ்வாறான தரப்புக்களை ஒன்றிணைக்காமல் அவர்களை புறம் தள்ளிவிட்டும், மற்றையவர்களின் நலன் தம்மிலும் கீழ் அல்லது மற்றவர்கள் கீழ் இருக்க வேண்டும் என்ற நடைமுறை சொந்த இனத்திற்கு பாதுகாப்பல்ல.
இன்றைக்கு ஏகாதிபத்தியங்களைப் பாருங்கள் நாடுகளை பங்கிடும் போது தனித்துச் செல்வதில்லை. கூட்டாளிகளை கூட்டிக் கொண்டுதான் செல்கின்றனர்.
இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்தை அழிக்க நினைத்தவர்கள், சோவியத் தலைமையை உள்ளடக்கியே இரண்டாம் உலகப்போரை வெற்றி கண்டனர்.
ஏன் இந்திய இராணுவத்துடனான மோதலின் போது இலங்கைப் படைகள் புலிகளுக்கு (பிரேமதாசா) உதவினர். புலிகள் உதவியும் பெற்றனர். இது தவறல்ல, மாறாக ஒடுக்கப்படும் மக்களை இணைத்துக் கொள்வதில் ஒரு விடுதலை அமைப்பு தவறுமானால் அந்த விடுதலை அமைப்பின் கொள்கையில் தான் தவறிருக்கின்றது. இதனை அதன் ஆரவாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதேன். பிரச்சார மேலாதிக்கத்தினால் புலிகள் பிழையாப் பெருமை கொண்டதை தொடர்ந்தும் மக்களிடம் ஊட்டப்பட்டிருப்பதும் காரணம் எனலாம்.
மக்கள் புத்திசாலிகள் அதனால் தான் தேசியத்தை போற்றி நிற்கின்றனர் எனப் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சோவியத் தாக்கும் என்ற மனப்பயத்தை ஊட்டியது. அதே போல இன்று இஸ்லாமியமத 'தேசிய' வாதிகள்' தாக்குவார்கள் என்ற மனப்பயத்தை குறிப்பாக வெள்ளையர் தேசங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி ஏற்படுத்தியுள்ளனர். இதிலிருந்து பெரும் எதிரி இருப்பதாக உழைக்கும் மக்களை திசைதிருப்புவதில் வெற்றி கொண்டது. இன்றைய காலத்தில் ஐரோப்பிய மக்களை பீடித்திருக்கும் மனப்பயம். ஏகாதிபத்தியத்தின் பிரச்சாரத்துடனும், அவர்களுக்கு ஏற்படும் அனுபவமும் ஒன்றித்துப் போகின்றது. ஏனெனில் இஸ்லாமியமத 'தேசிய'வாதிகள்' பொதுமக்கள் மீதுதல்லவா தாக்குதலையும் நடத்துகின்றனர்.
இவ்வாறே எமது மத்தியில் இருந்து புறப்பட்ட இயக்கங்களும் மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதினால் அவர்களாவது போராடுகின்றார்கள் என்ற மனவுணர்வை ஏற்டுத்தியது.

உண்டான மனப்போக்கு
தமிழ் மக்களிடம் உண்டான மனப்போக்கிற்கு வரலாற்றுக் காலங்களைக் கடந்து வந்துள்ளது. இங்கு பணம்படைத்தவர்களின் வர்க்க நலனும், குழுநலனும் சேர்ந்த நிலையில் மக்களிடையே மனப்போக்கு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் போக்கிற்கு ஈழவிடுதலையின் ஆயுதக் கலாச்சாரத்தின் தாக்கம் முக்கிய அம்சமாகும்.

முதலாவது கட்டம்
கண்ணாடி பத்மநாதன், மைக்கல், செட்டி, இடையிடையே சுழிபுரக் கொலை, சுந்தரம், உமா, இறைகுமாரன் போன்றவர்களுடன், ரெலிஜெகன், ரெலாதேவன், மனோ மாஸ்ரர், அமீர், றீகன் (EPRLF) இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டது, சுழிபுரக் கொலைகள், தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் கொலகளைத் தொடர்ந்து, பாசையூர் மக்களின் போராட்டம், விஜிதரன் தொடர்பான போராட்டத்தின் பின்னர் 1986 மார்கழி மாதம் அளவில் அனைத்து (ஈரோஸ் நீங்கலாக) இயக்கங்களும் செயற்பாடு தடைசெய்யப்படுகின்றன.
இந்தக் காலத்தில் விசுவானந்த தேவா (1986- 88) காணாமல் போய்விட்டதாக தேடுகின்றனர்.

இரண்டாம் கட்டம்

இந்தக் காலத்தில் தான் ஈரோஸ், தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையின் ஸ்தாபகர் நெப்போலியனை கொண்றனர்.

இந்தியப் படைகளுடன் கூடி வரதராஜபெருமாள், சுரோஸ் தலைமையில் அமைந்த இ.பி.ஆர்.எல்.எவ், இ.என்.டி. எல்.எவ் மக்களை பழிவாங்கத் தொடங்கியதும், சிறுவர்களை கட்டாயப் படைக்கு ஆட்பிடித்தது. இது முக்கிய வரலாற்றுக் கட்டமாகும்.
இந்தக் காலத்தில் புலிகள் மற்றைய இயக்கத்தினரை கொண்ற வேளையில் பலரை கொண்று விட்டு E.P.R.L.F, E.N.D.L.F மேல் பழிபோட்டனர். மக்களும் உண்மையில் இதனை E.P.R.L.F, E.N.D.L.F தான் செய்திருக்க முடியும் என்று நம்பினர்.
இந்தக் காலத்தில் அனைத்து இயக்கங்களினதும் பண்பு என்பது ஒரே மாதிரியாக இருந்திருக்கின்றன. சமூகத்தில் இருந்த முரண்பாடுகள் இயக்கங்களின் முகமூடி அணிந்த நபர்களினால் செயற்படுத்தப்பட்ட நிலையை ஒரு முழுமையான ஒரு ஆய்வினை நடாத்துகின்ற போது வெளிக் கொண்டுவர முடியும். அதாவது முன்னைய காலத்தில் சச்சரவுகள் ஏற்பட்ட போது சாதியக் குழுக்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுப் பண்புகளைக் கொண்டிருந்தது. இந்தச் சண்டைகள் வெட்டுக் கொத்து, வஞ்சம் தீர்ப்பது, மறைந்திருந்து தாக்குவது என்ற பண்புகளை கொண்டதாகும். இந்தக் காலத்தில் EP பள்ளன், EN நளவன் என்ற சாதி ஆதிக்க நிலை புலிகளால் கூட தடுக்கப்படாமல் சமூக படிமுறையின் இருந்த ஏற்றத் தாழ்வுகளின் மூலமும் அரசியல் தளத்தில் இருந்து மற்றைய இயக்கங்களை அன்னியப்படுத்துவதற்குப் பயன்படுத்தினர். (இயக்க உறுப்பினர்கள் சாதிய அம்சங்களை பயன்படுத்திக் கொண்ட வேளையில், இயக்கமும் சாதிய அம்சங்களை பயன்படுத்திக் கொண்டன) இவற்றில் இருந்து நோக்குகின்ற போது பலவேளைகளில் சமூக முரண்பாடுகள் இயக்கத்தின் போர்வையின் கீழ் பயன்படுத்தப்பட்டது என்பதைத் தான் இவைகள் கடந்த காலத்தில் இருந்து அறிய முடிகின்றது.

அன்னிய சக்திகளுடன் சேர்ந்து மக்களையும் வதைத்ததன் காரணமாக புலிகள் மேல் மக்கள் அனுதாபம் கொள்ளக் காரணமாகியது. முன்னர் சமூக விரோதிகள் என்ற காரணத்தினால் தடைசெய்தோம் என்ற கூற்று மற்றைய இயக்கங்களின் நடவடிக்கையினால் இலகுவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இலகுவாக இருந்தது. மற்றைய இயக்கங்களை மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படக் காரணமாக இருந்தது.

1990 மார்கழிக்குப் பின்னர் விசர்நாய் விரட்டி வர நிற்பதற்கு நான் என்ன விசரனா என்று கூறிவிட்டு, வரதராஜபெருமாள் எத்தனையோ நூற்றுக் கணக்கான தமிழ் தேசிய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர்களை அநாதரவாக விட்டுவிட்டு கப்பல் ஏறிச் சென்றுவிட்டார்.
இந்தக் காலகட்டத்தில் பல தமிழ் தேசிய இராணுவத்தில் (வுNயு) இணைந்த சிறுவர்கள் கிழக்கில் கொல்லப்பட்டனர், அத்துடன் வவுனியாவில் சங்கிலி மட்டக்களப்பில் வாசுதேவா, கண்ணன் போன்றவர்களுடன் நூற்றுக் கணக்காணவர்கள் கொல்லப்படுகின்றனர்.
பத்மநாபா உட்பட (இந்த வேளையில் சுரோஸ், வரதன் ஆகியோர் அந்த இடத்தில் இருக்க வேண்டியவர்கள் அந்த வேளை அவர்கள் மட்டும் அங்கு இருக்காது, கொலைத் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இதன் மர்மம் அவர்களுக்கே வெளிச்சம்)
உமா மகேஸ்வரன் தனது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.

இங்கு மற்றைய இயக்கங்களின் பழியுணர்ச்சி அதிகரிக்கின்றது.

மூன்றாம் கட்டம்
இலங்கை அரசினால் (பிரேமதாசா) மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர், பலகுடிமனைகள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது, தேவாலயங்கள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது, பெரும் பொருளாதாரத்தடை உருவாக்கப்பட்டது, கொழும்பு மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பாஸ்முறை அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் மிகுந்த தொல்லைக்கு உட்பட்ட காலத்தில் தான்
PLOTE Nkhfd;

uhfpf; FO (EPRLF)
TELO
PLOTE
EPRLF
EPDPஆகிய பிரிவினரால் மக்கள் கொல்லப்பட்டும், அரசிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டும், ஆயுதப்படையினருடன் சேர்ந்தும் வேலை செய்தனர். இதன் காரணமாக மக்கள் வெறுக்கத் தொடங்கினர்.
சொந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அன்னியருடன் சேர்ந்து கொலைகளைச் செய்யும் போது சொந்த இனத்திடம், இரத்த உறவிடம் செல்வாக்கு இல்லாமல் போகும். இதை அறியாத தலைமைத்துவங்கள் தான் அனைத்து இயக்கங்களிடமும் இருந்திருக்கின்றன.

இதன் விளைவுகள் தான் முழுத் தமிழ் இனமும் ஏக பிரிநிதித்துவம் என்ற போர்வையில் ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கித் தவிக்கின்றனர்.
இங்கு எல்லோரும் செய்யும் தவறு என்னவெனில் குழு நலன் மற்றையது மக்கள் நலன் அல்லது அழிவு. இந்த நிலையில் மக்களின் நலன் புலிகளின் நலனுடன் ஒன்றித்துப் போகையில் புலிகள் நலன் அடங்கியிருக்கின்றது. ஆனால் மற்றயை இயக்கங்கள் மக்கள் நலனை கவனம் செய்யாது எதிரியுடன் செயற்பட்ட நிலைதான் இன்றைய மோசமான நிலைக்குக் காரணம்.
இந்த நிலையினையிட்டு
TELO, EPRLF (S) (தற்பொழுது புலியுடன் சேர்ந்துள்ளனர் எனவே இவர்களை தவிர்ப்போம்)
PLOT
EPRLF(வரதர்) அணி
EPDP
EROSஇந்தப் பிரிவினர் தம்மை சுயவிமர்சனம் செய்தே ஆக வேண்டும். அத்துடன் இலங்கை அரசுடன் எவ்வித தொடர்பும் அற்ற நிலையில் இருந்து தமது செயற்பாட்டை தொடங்கத் தயாரா?

இந்த மூன்று கட்டத்தை கடந்து வரலாறு மாறியிருக்கின்றன. ஆனால் புலிகளுடன் முரண்படும் சக்திகள் இன்றைக்கு 15 வருட காலத்தில் எதிரியுடன் கூடி செயற்படாத சக்திகள் இன்று இருக்கின்றனவா? இதுவேதான் இன்றைய பிரச்சனை. மக்கள் உங்களை நம்புவதற்கு முதலில் எதிரியுடன் கூட்டுச் சேர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு நடைமுறை ரீதியாக செயற்படுத்தும் போதுதான் மக்கள் உங்கள் பக்கம் சாய்வர்.

இன்றைக்கு உருவாகியுள்ள தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அல்லது தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி ஆகட்டும் சொந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அன்னியருடன் சேர்ந்து கொலைகளைச் செய்யும் போது சொந்த இனத்திடம், இரத்த உறவிடம் செல்வாக்கு இல்லாமல் போகும் என்பதை கவனத்தில் கொள்ளாது அரசியல் நடத்துவார்களாயின் அவர்கள் மக்களிடத்தில் இருந்து அன்னியப்பட்டே போவர்.
இவ்வாறு TELO, PLOT, EPRLF (N) or (V) அணி, EPDP, EROS(சங்கர்ராஜி) சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து புலிகளை அழிப்பதனால் மக்களை தங்கள் பக்கம் வென்று விட்டார்களா? இல்லை. மாறாக துப்பாக்கி கலாச்சாரத்தை தொடவே இச்சக்திகள் தொடர்ந்தும் வழியமைத்துக் கொடுத்துள்ளன. இவர்கள் அன்னியருடன் சேர்ந்து தம்மை வதைக்கின்ற வேளை புலிகளாவது போராடுகின்றார்கள் என்ற எண்ணப்பாடு மக்களிடத்தில் ஆழமாக வேர் ஊன்றியது.
மக்களை எவ்வாறு மாற்று இயக்கங்கள் தம்பக்கம் வென்றெடுக்க முடியும் என்று சிந்திக்காமல் செயற்படாமல் விட்டது யாரிருடைய தவறு?
அவர்கள் போராடுகின்றார்கள் என்ற மனவுணர்வை வெற்றி கொள்ள வேண்டும் என்றால், மக்களுக்கு நம்பிக்கையான செயற்பாட்டின் மூலமாகத் தான் முடியுமேயன்றி புலிகளை வெல்வதில் அது அடங்கி விடவில்லை.
புலிகளை ஆயுதரீதியாக வெற்றி கொள்வது நிலைக்கப் போவதில்லை. மாறாக மக்களை புலிகள் பக்கம் சாரவே செய்யும். இதற்கு புலிக்குப் பின்னால் உள்ள பொருளாதாரத்தின் வலுவுடைய பகுதியினர் அணிவகுத்துள்ளனர். எனவே இந்த நிலையில் மக்களை அணிதிரட்ட வேண்டும். மக்கள் என்றும் போது கூலிவிவசாயிகள், தொழிலாளர்கள், கடல்தொழிலாளர்கள் மற்றும் அனைத்து நேச சக்திகளை அணிதிரட்ட வேண்டும்.
மக்கள் உங்களை நம்புவதற்கு முதலில் எதிரியுடன் கூட்டுச் சேர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த காலத்திEPRLF, ENDLFசெய்த தவறை மீளவும் செய்யக்கூடாது. இதிலிருந்து கருணா அணி பின்வாங்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. அவர்கள் புதிய அமைப்பை உருவாக்கியுள்ள வேளையில் அவர்களிடம் அரசியல் கோட்பாடு, அமைப்பு வடிவம் பற்றிய கோட்பாடு, எதிர்கால செயற்திட்டங்கள் எவையும் வெளியிடப்பட வில்லை. அதேவேளை வன்னித் தலைமையை பழிவாங்கும் நடவடிக்கையில் கொல்லப்படுவது சாதாரண உழைப்பாளிகளின் பிள்ளைகளே என்பதை தெரிந்தும், சாதாரன தர போராளிகள் மீதான தாக்குதல்களினால் வெல்லப் போவது எதுவும் அல்ல.
இங்கு தான் கருணா ஈழவிடுதலைப் போராட்டத்தில் உருவாகிய (1984களில்) 32 இயங்கங்களில் அவரின் அமைப்பும் ஒன்றாம் என்ற நிலைக்கு செல்லாமல் இருப்பது கருணாவின் பொறுப்பு.

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளத்தை தெரிவு செய்து, அமைப்பை உருவாக்கப் பாடுபட்டு கொல்லப்பட்ட மனிதர்களின் அனுபவத்தை நாம் இன்றைய நேரத்தில் நினைவு கூருவது அவசியமாகின்றது. உட்கட்சி ஜனநாயகத்திற்காக அனைத்து இயக்கங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது.
1985களில் நித்தியானந்தன், சின்னராசா, நேசன், ராகவன், நிர்மலா போன்றவர்கள் வெளிநாடு பயணம் செய்தார்கள்.
அதே காலத்தில் பலர் முரண்பட்டு வெளியேறி வந்திருக்கின்றனர். குறிப்பாக அரியாலை அம்மான் என்பவர் சைனைற் வில்லை வலுக்கட்டாயமாக வாய்க்குள் திணிக்கப்பட்டு கிட்டுவால் கொல்லப்பட்ட வேளை பலர் வெளியேறி வந்தனர்.
மட்டக்களப்பில் பிரான்சிஸ், (காக்கா) கடவுள் என்பவர்கள் வெளியேறிதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
இவர்கள் எவரும் மக்களுக்கான அரசியலை வெளியில் வந்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் வெளிநாடு சென்றனர், அத்துடன் இவர்களிடம் மக்களுக்கான அரசியல் என்பது இருக்க வில்லை. காரணம் மக்களுக்கான அரசியல் இருந்திருக்குமேயானால் மக்களுக்கான அரசியலை மேற்கொண்டிப்பர். ஆனால் இன்று சிலர் அவர்களின் தேவையான சமூக அந்தஸ்து, சமூகத்தில் ஒரு இடம் தேவை என்பதினால் (புதுவை இரத்தினதுரை கூறுவது போல்) புலிகளின் இன்று பிரமுகர்களாக வலம் வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை ஏனெனில், அவர்களின் வர்க்க நலன் ஒன்றித்துப் போகையில் எதிர்ப்பு என்பது அவசியம் அவற்றதாகின்றது.

மனோ மாஸ்ரர் ரொலோவில் இருந்து பிரிந்து சென்றார். ரெலோ தாஸ் பொபி (சிறி கொல்லப்பட்ட வேளையில் அவர் அதே முகாமில் இருந்து எவ்வாறு காயம் இல்லாது தப்பிச் சென்றார் என பல முன்னைய போராளிகள் சந்தேகிக்கின்றனர்) என்ற பிரச்சனையில் தாஸ் குழுவினர் சிலர் கொல்லப்பட்டனர்.
மரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

பிளொட் யாழ் நெல்லியடியில் உண்ணாவிதரம் இருந்தனர், தளமாநாடு கூட்டினர், புதியதோர் உலகம் என்ற வரலாற்று பெருமைமிக்க இலக்கியம் வெளிவந்தது.
EPRLF 1985களில் முதல் உடைவு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறியவர்கள் பலர் வெளிநாடு சென்றனர். அடுத்த 1986 உடைவு டக்கிளஸ் வெளியேற்றம், இந்த நேரத்தில் டக்கிளஸ் உடன் சென்றவர்கள் போக மற்றவர்கள் தனியாக சென்று மௌனியானார்கள். தமது கீழ்மட்டத் தோழர்களை நம்பத் தயாராக இருக்க வில்லை. இவர்களில் பெரும் பகுதியினர் வெளிநாடு சென்றார்கள்.
இதில் தான் வரலாற்று பெருமைமிக்க நடவடிக்கை பற்றிக் குறிப்பிடப்பட வேண்டும். அதுதான் தீப்பொறியினர், இவர்களில் கேசவன் என்றவர் தலைமையில் பலர் புதிய நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் இடத்தில் இருந்தே புதிய பாதையை நோக்கிப் போராடினர். அவர்கள் தெரிவு செய்த தளம் காலப் பொருத்தமற்ற நிலை காரணமாக புலிகளால் கொல்லப்பட்டது துரதிஸ்டம்.
நாம் கூற வருவது என்னவெனில் தளம் என்பது முக்கியமானதாகும், அத்துடன் எந்த சக்தியை முதலில் நம்புவது, தப்பியோடுவது முற்போக்கல்ல என்பதை அவர்களின் தியாகத்தில் இருந்து பெறக் கூடிய பெரும் பாடமாகும். அவர்கள் தம்முயிரைக் கொடுத்துதான் எதிர் காலத்திற்கு தமது அனுபவத்தை படிப்பினையாக கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இவர்களின் இந்த உதாரணத்தை எந்த மார்க்சீயம் பேசிய எவரும் நடைமுறையில் செயற்படுத்தவில்லை. இவர்களே சொல்லிலும் செயலிலும் காட்டியவர்கள். மீன் எவ்வாறு தண்ணீரில் கலந்துள்ளதே அதே போலதான் மக்களுடன் போராளிகள் கலந்து இருக்க வேண்டும் என ஒரு போராட்டத்தில் வெற்றி கண்ட தளபதி கூறியதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும்.
போராட்ட ஐக்கியம் என்பது வெறும் வார்த்தையில் அல்ல, தெரிவு செய்யப்படும் போராட்ட வடிவத்திலேயே தங்கியிருக்கின்றது.

பொதுவான பிரச்சினைகள் என்ன?
ஏகம் என்பது ஒரு தேசியம் என்ற மட்டத்தில் மாத்திரம் வரையறுத்துக் கொள்வதில் உண்மை இருக்கின்றதா? ஏனெனில் ஒரு தேசிய இனத்தில் பல வர்க்கக் கூறுகளாக மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான அளவில் பொருளாதார வாழ்வியல் சக்திகளைக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தில் வாங்கும் சக்தியை அதிகம் கொண்டிராதவர்களாகவே இருக்கின்றனர். அதாவது, ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்வோம், அந்தக் கிராமத்தில் எந்தனைபேர் பெரும் பணக்காரராக இருக்கின்றனர். எத்தனை பேர் நிலச்சொந்தக் காரர்களாக இருக்கின்றனர்? எத்தனைபேர் பெரும் கடல் தொழில் படகுகளைக் கொண்டிருக்கின்றனர். (இன்றைய நிலையில் வெளிநாட்டுப் பணத்தின் மூலம் வலுவில் இருப்பவர்களை கவனத்தில் கொள்ள வேண்டாம்).
இதில் அதிமானவர்கள் தினமும் தமது உழைப்பை விற்றே தமது குடும்பங்களை வாழ வைப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களின் நலன் என்பது மற்றையவர்களின் நலனிலும் மாறுபடுகின்றது. இவர்கள் தமது நிச்சயம் அற்ற பொருளாதார நிலையில் எந்தவகையாக வேலையைக் கூட செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர். மாறுபாடா பொருளாதார வளத்தை கொண்டிருக்காவிடின் தமிழ் தேசத்தின் பகுதிகளில் உதவி நிறுவனங்கள் எதற்கு, உதவிப் பணம்தான் எதற்கு?

தமிழ் தேசியக் கோட்பாடு என்பது நாசிசம், இந்துத்துவவாதம், இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், நிறவாதம் ஆகிய போன்று ஒரு கோட்பாடே. இத் தேசியக் கோட்பாடு என்பது தனது கடமைகளை முடித்த பின்னர் இல்லாது போய்விடக் கூடிய ஒன்றே. தேசியம் என்பது எந்தக் காலத்திலும் நிலையான ஒன்றல்ல. மாறாக ஆழுமையில் இருப்பவர்களின் நிலைமாற்றங் கொண்ட பின்னர் தேசியம் என்ற நிலை மாறிவிடுகின்றது.
ஆனால் எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிற, இனம் என்றாலும் இவர்களிடையே இருக்கின்ற பொதுவான பிரச்சனைகளை இனம் கண்டு அவர்களின் பிரச்சனைகளையும், அவர்களிடத்தில் ஒற்றுமையை பேனக் கூடிய அணுகுமுறைகளையும் கொண்ட ஒரு சிந்தனை அவசியமாகின்றது. அதாவது சில சம்பவங்களை இங்கு கூறிய பின்னர் விடயத்தை மீளவும் தொடுகின்றேன்.
'வவுனியாவில் இருந்து சில மணிதூரத்தில் ரொட்டி போடுகின்ற ஒரு 50 மதிக்கத்தக்வர் மகன் போன்ற ஒருவரின் அதிகார பேச்சுக் பயப்பிடும் காட்சி, இவர் ஏன் இவ்வாறு சுயமரியாதை இழந்து வேலை செய்ய வேண்டும்? இவர் யாழில் இருந்து துரத்தப்பட்ட காரணம் ஒன்றே போதுமா? பாடசாலைக்கு செல்ல வேண்டிய வயதில் செல்லாது இடையில் விட்டுவிட்டு மடுயாத்திரைக்கு வருபவர்களிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டதற்கு அச்சிறுவனின் நிலைக்கு இனப்பிரச்சனை ஒன்றே காரணம் ஆகுமா? இளம் வயது பெண்மணி தனது பிள்ளைகளுடன் யாழ் போக்குவரத்து நிலையத்தின் பகுதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு என்ன காரணம்? மன்னாரில் வசிக்கும் 13 வயதுடைய் சிறுமி அவரது வீட்டில் கழுத்தில் தூக்கு மாட்டியவாறு கொலையுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது இதற்கு என்ன காரணம்?
சிறு தோணியை வைத்தே கடல்தொழில் செய்யும் அந்தோனியும், சிவனடியானும், தெற்கே பெர்னாண்டோவும், பெரேராவும், இரவில் கடலில் சுழியோடும் (புத்தளத்தில் இருந்து மன்னார் சென்று தொழில் செய்கின்றனர்) றகீமும் பருவகாலத்தை நம்பியே தமது வாழ்க்கைக்கான பிழைப்பை நடத்துகின்றனர்.
விவசாய நிலத்தில் கூலிக்காக வேலை செய்யும் பொண்ணையாவும், சிவக்கொழுந்தும் அதேபோல தெற்கில் பண்டாரியும், மகிந்தவும் தினக் கூலியாகவே வேலை செய்கின்றனர். அப்துல்லாவும் பருவ மழை பொய்த்துப் போய் என்ன செய்வது எனத் தெரியாது திண்டாடுகின்றான். இவர்கள் எல்லாம் பருவத்தை நம்பியே பிழைப்பு நடத்தும் கூட்டமாக இருக்கின்றது.
மலையகத் தோட்டத்திலே சிறு குடிசையில் வாழும் மலையக தொழிலாளியான முனியம்மாளும், பெரியசாமியும், காதரும் பெறும் சிறு கூலியை வைத்தே அடிப்படை வசதிகளை போக்கிக் கொள்கின்றனர்.'
இவர்களிடையே இருக்கின்ற பொதுவான பிரச்சனை என்ன? இவற்றிற்கான தீர்வு என்ன?
இவர்களின் அடிப்படை உரிமையை வெற்றி கொள்ள வேண்டியதே இவர்களுக்குள்ள பிரச்சனையாகும்.
இன்று பிரச்சனைகளை பொத்தாம் பொதுவாக அடக்கிக் கொள்கின்ற நிலை உள்ளது. இது இனவாத அரசும் சரி, ஏகாபதிபத்தியங்களும் சரி இனப்பிரச்சினைகளை திசைதிருப்புவது, அல்லது இனமுரண்பாட்டை அதிகப்படுத்துவது, அல்லது பயங்கரவாதம் என்ற போர்வையில் போராட்டத்தை திசைதிருப்புவது, நசுக்குவது என்ற நிலையில் செயப்படும் நிலைக்கு ஒத்ததாகும்.
ஆனால் இனத்துவ மோதல் என்பது இனங்களுக்கிடையில் பகை ஊட்டப்பட்டுள்ளது. இரத்தம் சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால் உணர்ச்சி அதிகம் கொண்டதாகவும் இருக்கின்றது. இதற்கு தூபமிட்ட வர்க்கச் சக்திகள் பகையை தணிக்க எந்த முயற்சியும் எடுக்காது. அரசியல் சதிராட்டம் தொடர்வதால் பொதுவான பிரச்சனை பின்தள்ளப்பட்டுக் கொண்டு போகின்றது. இதனால் தான் இனங்களின் தேசிய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு இலங்கைக் கான புதிய ஜனநாயகப் போராட்டம் என்பது கட்டியெழுப்பப் படவேண்டும்.

மற்றவர்கள் உரிமையை அங்கீகரிப்பது
'தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.'
இங்கு சண் சிங்களத் தேசியத்திடம் தமிழ் தேசியத்தைப் பற்றி முன்வைக்கின்ற கருத்து தமிழ் தேசியத்திற்கும் பொருத்தமானதாகும். 'தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள், தனிநாட்டை அமைப்பதற்கான அச்சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள முடியும் ' என்று கோரிக்கை விடுகின்றார்.
அப்படியாயின் தமிழ் தேசியத் தலைமைகள் தமிழ்ப் பேசும் இஸ்லாமிய மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காத நிலையை என்னவென்பது. ஆனால் நாம் சிங்களவரிடம் எமது உரிமையை அங்கீகரித்து விட்டீர்களா என கேள்வியும் கேட்கின்றோம்.

தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை என்ற கூற்று எவ்வளவு உண்மை என்பதை நேர்மையாக வரலாற்றை ஆய்வு செய்தால் இதன் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு விடுதலை அமைப்பு தமிழ் மக்களின் நியாயத்தை தெளிவு படுத்த என்ன செயற்திட்டத்தை முன்வைத்துள்ளது.
சிங்கள மக்களை தமிழர் பக்கம் திருப்புவதற்கு செய்த நடவடிக்கைகள் என்ன?
நாம் சிங்கள மக்களை எப்பொழுதாவது நட்பு சக்தி என எண்ணிப் பார்த்ததுண்டா?
மாறாக கென்பார்ம், டொலர்பார்ம், அநுராதபுர படுகொலை, திருகோணமலை கொழும்பு வீதியில் படுகொலை எல்லைக்கிராமங்கள் மீதான தாக்குதல், யாழ்பாணத்தில் இருந்து சிங்களவர்களை வெளியேற்ற மௌனத்துடன் இருந்தது.
ஆனால் வரலாற்றைப் பார்ப்போமானால் 1977, 1983 பெரும் கலவரங்களில் சிங்கள சகோதரர்களின் உதவியுடனே தான் எத்தனையே தமிழ் மக்கள் தமது உயிரைக் காப்பாற்றி வந்திருக்கின்றனர். ('நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை') மாறாக விடுதலைப்புலிகள் நம்பிக்கை கொள்ளும் ரணில் போன்றவர்களால் அல்ல.
சிங்களத் தேசியத்தின் முற்போக்குப் பிரிவினர் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரித்துத் தான் இருக்கின்றனர். குறிப்பாக காலம் சென்ற சரத் முத்தேகட்டுக்கம, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் இனம், மொழிகடந்து 1983களில் இருந்து குரல் கொடுத்து வந்திருக்கின்றனர்.
இந்த வேளையில் இச்சிங்கள முற்போக்குச் சக்திகளின் சரியான இடது பிரிவுகளை பலப்படுத்த வேண்டியது போராடும் அமைப்பிற்குரிய கடமையல்லவா? இதனை தமிழ் தேசியம் செய்ததா?
கடந்த பத்தாண்டு கால தேர்தல் வரலாற்றில் தமிழ் தேசியத்தின் தலைமை முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளையே தேர்தல் காலத்தில் மறைமுகமாக ஆதரித்து வந்துள்ளது. இவை கூட குறிகிய கால நலன்கொண்ட நடவடிக்கைகளே. ஆனால் நீண்ட காலச் செயற்பாட்டில் அமைந்து கொண்ட சிந்தனையல்ல.
கடந்த தேர்தலில் கூட அனைத்து தேசிய இனத்தின் ஐக்கியத்தை நோக்கிய ரீதியில் தமிழ் தேசியத் தலைமை நடந்து கொண்டதா?
குறிப்பாக மலைய மக்கள், மேல்மாகாண மக்களை ஒன்றிணைந்த தேர்தல் கூட்டணி பற்றி தமிழ் தேசியக் கூட்டமைபில் உள்ளவர்களிடமும், சந்திரசேகரன் போன்றவர்களிடமும் கருத்து இருந்தது. இதனை உடைத்தது யார்?
வரலாற்றில் அரசியல் நகர்வுகளை ஒட்டி நட்புசக்திகள் பற்றிய கூட்டுப்பற்றி உரைக்கின்ற போது அவை வெறும் சந்தர்ப்பவாத அரசியலே. ஆனால் மக்களிடையேயான உண்மையான கூட்டு என்பது வர்க்க நலன் சார்ந்தாக இருக்க வேண்டும். இவைகள் எப்பொழுதும் மாற்றம் ஏற்படுவதில்லை. இந்த நிலை சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தின், இனத்தின் தலைமையில் இருந்து மாற்றம் பெறுகின்றது. சிங்கள் இயக்கங்கள் என்கின்ற போது அவை எண்ணிக்கை வலுவைக் கொண்டு தீர்மானிப்பதில்லை. மாறாக அவர்கள் கொள்ளும் கருத்தைக் கொண்டே முக்கியத்துவம் பெறுகின்றது.
தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரித்த சக்திகள் இருக்கின்ற வேளையில் தமிழ்தேசியவாதிகள் மற்றைய மக்களின் பிரச்சனைகளை இட்டு எவ்வித கரிசனையும் காட்டியதாக இன்றுவரைக்கும் இல்லை எனலாம். பேச்சுவார்த்தை நிகழ்ச்சியில் மலையக மக்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் பிரச்சனை மாத்திரம் அல்ல. வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள சிங்கள மக்களின் பிரச்சனை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமிழ் தேசத்தின் ஏகபிரதிநிதிகள் என்போர்கள் இவற்றை செய்வதற்கு தயாராக இல்லை. இவ்வாறாயின் மக்களிடத்தில் தோன்றியுள்ள பகைமுரண்பாட்டை எவ்வாறு போக்க முடியும்?

ஜே.வி. பியினர்
இலங்கையில் சிங்களச் சக்திகள் மட்டும் தான் தேசியவாதம் உசுப்பி விடப்பட்டுள்ளதா? தமிழ் தேசியம் தன்னிடத்தில் இருந்து பெருந்தேசியவாதக் கண்ணோட்டத்தை விட்டுவிட்டுள்ளதா? அதேபோல தனித் தேசியத்தை தவிர வேறு கோட்பாடுகள் இருக்கின்றனது என தமிழ் தேசியத் தலைமை ஏற்றுக் கொள்கின்றதா?
இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது பிரேமதாசாவின் உதவி பெறப்பட்டது. இன்று இயக்கங்கள் உறவு வைத்திருந்ததை ஒப்பிட முடியாது. ஏனெனில் எதிரியின் நிலையில் மாற்றம் உருவாகியிருந்தது. இவை கூட தப்பிக் கொள்ளும் தந்திரோபாயம் என்பதில் தவறில்லை. ஆனால் அதே வேளை சிங்கள மக்களுடனான உறவை மேலும் பலப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னர்JVP இனர் இந்தியாவை எதிர்த்தனர். ஆனால் இன்று நேரடியான (இராணுவ பிரசன்னம்) ஆக்கிரமிப்பு இல்லாத காரணத்தினால் இரண்டாம் நிலைக்கு சென்று விட்டனர். இன்று அந்த இடத்தை மேற்கு தேசங்கள் பெற்றுள்ளது. இந்த நிலையில் முதல் நிலை எதிரியாக வரையறுக்கப்பட்ட மேற்கு தேசங்களை எதிர்ப்பதற்கு இந்தியாவை நாடுகின்றது.
ஜே.வி.பியினர் மலையக, இஸ்லாமிய மக்களின், தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு, இவர்களை இணைத்துக் கொண்ட (புதிய ஜனநாயக புரட்சிக்கான) ஒரு ஏகாதிபத்திய போராட்டத்தை முன்னெடுக்காது தவறு விடுகின்றனர். இங்கு அவர்களின் மார்க்சீயம் பற்றிய புரிதலில் உள்ள குறைபாடே காரணமாகும். இதனால் மார்க்சீயர்கள் என்ற நிலையில் இருந்து ஏற்கனவே தவறியதை மீண்டும் நிரூபிக்கின்றனர். ஆனால் இன்றும் தொடர்ந்து தமிழ் தேசியத் தலைமை இவர்களை மார்க்சீயர்கள் என்றே அழைக்கின்றனர். இவை அவர்கள் சார்ந்த வர்க்கத்தின் வெளிப்பாடாகி விடுகின்றன. ஏனெனில் மார்க்சீயம் மீதான தமது வெறுப்பைக் காட்ட ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவை கூட மற்றைய இயக்கங்கள் சொந்த இனத்தின் மக்கள் துன்பம்படும் போதும், அரசுடன் கூடி நின்றன வேளை இவர்களை மக்களின் பக்கம் திருப்ப வில்லை. மாறாக துஏPயின் அணுகுமுறையானது தமிழ் மக்களை அவர்களிடம் இருந்து அன்னியப்பட முக்கிய காரணமாகின்றது. இதனை அவதானத்தில் கொள்ளாத ஒரு அமைப்பு மார்க்சீய அமைப்பு அல்ல என்பதை நிரூபிக்கின்றது.
JVPயானது இராணுவ பிரசன்னம் இல்லாத நிலை காரணமாக இன்று இந்திய எதிர்ப்பு நிலையை விட்டுள்ளனர் என்றே கொள்ள வேண்டும். ஆனால் இன்று மேற்கு எதிர்ப்பு நிலையை கவனத்தில் கொள்ளாது, விடுதலைப்புலிகளின் தலைவர் 'மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது.' என தாம் உங்களை வரவேற்கின்றோம், நிதிமூலதனத்தை எதிர்க்கவில்லை என உரைக்கின்ற நிலையில் இந்த மேற்கு விசுவாசத்தை எதிர்க்கும் எவரும் துரோகிகள் என்பது எந்த வகையில் அரசியல் நியாயம் பெறுகின்றது. இதனை தான் பொது மக்கள் விழிப்புணர்வு கொண்டு கேட்கவேண்டும்.
தற்பொழுது தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்படுகின்றது மாத்திரம் அல்ல. அவர்களை அழிப்பதற்காக கண்காணிப்புக் குழுவினர் பார்த்தும் பாராமல் இருந்தனர்.
இந்நிலையை நோக்குகின்ற போது சிங்கள இனவாதிகளுடன் கூட்டுச் சேர்வது என்ற நிலைகெட்ட அரசியல் தொடர்கின்றதை நாம் பார்க்கக் கூடியதாகவுள்ளது.
தற்பொழுது சிறிலங்கா அரசின் வாகனங்களில் பயணம்; செய்வது, முரண்பாடில்லையா? வன்னியில் இருந்து நேரிடையாக பேச்சுவார்த்தைக்கு கலந்து கொள்ள வசதி செய்துதரும்படி கோரியிருந்தனர். கலந்து கொள்வதில் சிக்கல் இருக்கும், வசதி செய்து தராவிடின் பேச்சுவார்த்தையே நடைபெறாது என்று முன்னர் ஆரூடம் கூறியவர்கள்; பின்னர் அவர்களின் கடவுச் சீட்டுக்கள் பெற்றே வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். "According to the Air Force estimate, it cost Rs. 115,000 per hour to keep the helicopter airborne. Since February 2002 over Rs. 150 million has been spent for ferrying the LTTErs and their special visitors and sponsors, according to a source.
It is learnt that according to instruction by the previous United Front Government, this expenses has been entered by the Air Force as “Flying Training Cost.”
It is said that even after Chandrika Bandaranaiake Kumaratuna taking over the Defence portfolio after 03 November 2003, Air Force helicopters are continuously ferrying the Tamil militants on the request channelled through the Sri Lanka Government’s Peace Secretariat and the flying expenses are continued to be entered as “Flying Training Cost.”(Colombo, 20 October, [Asiantribune.com]:)

இவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் பொதுமக்களின் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய பணம் அல்லவா? இவை கூட அரசாங்கத்தால் பாதுகாப்புக் கென ஒதுக்கப்படும் நிதியில் இருந்து தானே இவர்களின் பயணச் செலவும் உள்ளடக்கப்படுகின்றது.
ஆனால் 17. மாசி 1994 அன்று பாலசிங்கம் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியைப் பார்த்தீர்களானால் இவர்கள் எவ்வகையாக தேசியத்தை விட்டுக் கொடுக்க வந்திருப்பதை வரலாற்று ரீதியாக அறிந்து கொள்ள முடியும். 1994 களில் பல கிறிஸ்தவ சபையினர் சமாதானம் வேண்டி வடக்கிற்கு சென்று வந்தனர். அவர்களைச் சந்தித்தது தொடர்பாக கொடுத்த பேட்டியில்
'ஆனால் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை எதுவும் விதிக்க வில்லை. நாம் கேட்பவை இரண்டு கோரிக்கையாகும். எங்களது இக்கோரிக்கைகளை சிங்கள அரசாங்கம் முன் நிபந்தனையாகக் கொள்ளக் கூடாது. இந்த விடயங்களைத் தான் நாம் கிறிஸ்தவ சமாதானக் குழுக்களிடம் வலியுறுத்திக் கூறினோம்.
அடுத்து முக்கிய விடயமென்னவென்றால்-
போர்நடந்து கொண்டிருக்கும் போது, மக்கள் சாவையும், அழிவையும் சதா சந்தித்துக் கொண்டிருக்கும் போது, பேச்சுக்கள் நடத்துவது நடைமுறைச் சாத்தியமல்ல. ஆகவே, அரசாங்கம் முதல்படியாக போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்துக்கு தயார்.
அடுத்த கட்டமாக மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் பொருளாதார தடையை நீக்கி சகஜநிலையை தோற்றுவிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நாம் விடுவிப்பது ஏனென்றல் இராணுவ, பொருளாதார அழுத்தங்களின் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது.
இராணுவ பொருளாதார அழுத்தங்களின் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது என்பது மட்டுமன்றி அது சுதந்திரமாகவும் இருக்காது.
ஆகவே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இப்படியான நல்லெண்ணத்தை முதற்படியாகச் செய்து காட்ட வேண்டும். நல்ல சமிக்கையை காட்ட வேண்டும். தமிழ் மக்களுக்கு நம்பிக்யை ஏற்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் பேசலாம்
அப்படியான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் - சமாதானச் சூழ்நிலை உருவானால் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார்.
ஆரம்ப பேச்சுக்களை யாழ்ப்பாணத்தில் நடத்தலாம் என்று நாம் சொல்கின்றோம். இந்த சூழ்நிலை ஏற்பட்டால் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம்'... .. . (வீரகேசரி 20.2.1994) முன்னர் ஆரூடம் கூறியவர்கள் வரலாற்றின் பக்கங்களை பார்க்கத் தவறிவிடுகின்றனர். வரலாற்றில் நிகழ்வுகள் எப்பொழுதும் மக்கள் மத்தியில் இருப்பதில்லை. மாறாக கொடிய நிகழ்வுகளின் கோப்புகள் நிகழ்காலத்தை நோக்கிய தேவையை சிந்திக்க வைக்கின்றது. இதனால் இனமுதன்மை அரசியல் பயணங்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கின்றது.
இன்று தேசிய எல்லையை விட்டு வெளிப்பயணங்கள் செய்வதிலும், அவர்களின் ஆசியுடன் முதலாளித்துவ நாடுகளில் இருக்கின்ற அரசமைப்பு முறைகள் பற்றியும் ஆராய்வதாக மக்களின் பணத்தில் பணம் செய்கின்றனர். ஆனால் உண்மையான நிலையை கருணா வெளிப்படுத்தியிருக்கின்றார். அதுவேதான் உண்மையாகும். 'கடந்த இரண்டரையாண்டுகளாக நான் நோர்வே குழுவினருடன் பழகியதிலிருந்து இவர்களை உண்மையான விடுதலைப்போராளிகள் என்று அவர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. பயங்கரவாதிகளுடன் எப்படிப் பழகுவார்களோ அப்படித்தான் பழகி வருகின்றனர்.' இன்று மென்மையான முறையில் தம் வசம் கொள்வதே நோர்வேயின் அணுகுமுறையாகும்.
ஆனால் தமிழ் தலைமைகள் சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாடுகள் ஒத்துக் கொண்ட உதவித் தொகையை பெற்றுக் கொள்ளும் பொருட்டே காய்நகர்த்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதாக விமர்சிக்கின்றன. இவைகள் உண்மையே என்ற போதிலும் சுயஉற்பத்தி, சுயமூலதனத்தைப் பெருக்குவது என்பதை விட்டு யப்பானிடம் புனரமைப்புச் செய்வதற்கு தற்பொழுது கோரிக்கை விட்டிருக்கின்றனர். இவர்கள் வழங்கும் உதவிகளை கொண்டு எமது தேசத்தை புனர்நிர்மானம் செய்கின்றோம் என வைத்துக் கொண்டால் இவர்கள் எந்தவொரு பலாபலனும் இல்லாமல் கடனைக் கொடுக்கின்றார்களா என்பதை நாம்;; அலசியாராய வேண்டும். எந்த பணக்காரனும் எவ்வித பிரதிஉபகாரம் இல்லாது உதவி செய்வதில்லை என்பது தெரிந்த விடயம். இது சிறிய அலகில் நடைபெறுகின்ற போது சர்வதேச அரசியல் உலகில் இவ்வாறு உதவி செய்வது எந்த நோக்கம் என கேள்வி கேட்டக் கூடாவா ஒரு விடுதலை இயக்கத்திற்கோ அல்லது, அதன் விசுவாசிகளுக்கு தோன்றவில்லை. வெறும் பிரச்சார யுக்திகள் என்பது ஒரு புறமிருக்க உதவி என்பது தமிழர்களாக இருந்தால் என்ன, சிங்களவர்கள் ஆக இருந்தால் என்ன இரண்டும் தத்தம் இறைமையை இழக்கும் நிலைக்குத் தான் கொண்டு செல்லும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழர் பக்கத்தை எடுத்துக் கொண்டால் இந்தியாவை ஜே.வி. பியினர் நாடுவதை இட்டு அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இங்கு தமிழ் தேசிய இந்திய எதிர்ப்புவாதம் என்பதற்கு அப்பால், மேற்குதேசத்தின் தேவையை முன்வைத்து இந்திய எதிர்பிரச்சாரத்தை உருவாக்குகின்றனர். இவை ஒரு திட்டமிட்ட ஒரு அரசியல் பாதை என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. இந்திய நலன் எமது மக்களின் நலனைப் பாதிக்கும் என்பது உண்மை, அதேவேளை இந்தியாவை பாதிக்கும் நலன் எம்மையும் பாதிக்கும். ஆனால் மேற்கு தேசங்களின் நலன் இந்திய நலனுக்கு மாத்திரம் தான் பாதிக்கும் என்றும், தமிழ் மக்களின் நலன் பாதிக்கப்படாது என்றும் மாயை உருவாக்கப்படுகின்றது.
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தேசியவாதத்தை உசுப்பி உள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இனவாதம், தேசியவாதம் எந்த எல்லையைத் தாண்ட முடியுமோ. அவ்வளவுக் அவ்வளவு கேடுகெட்ட நிலையில் இலங்கையில் இனவாதம் 1977 இருந்து 2004 காலப்பகுதியில் வெளியே காணப்பட்டது. இவை ஒன்றும் தேர்தலில் காலத்தில் தான் வந்ததாக கூற முடியாது. ஏனெனில் துஏPஇ ஹெலஉறுமய வற்றின் எழுச்சி என்பது வெறுமனே இனவாத்தின் தோற்றம் எனக் கொள்ள முடியாது. இரண்டு வகைப் போக்கை காணலாம்.
இன்றைக்கு உலகமயமாதலினால் ஏற்படுகின்ற சமூக கட்டுமான மாற்றம். இவற்றின் மூலம் கலாச்சார சிதைவு, பொருளாதார சிதைவு என்பவற்றில் இருந்து முன்னைய சக்திகளை நம்பிக் கொள்ளாது புதிய சக்திகள் மீது தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
பொருளாதார காரணங்களுக்காக ஜெ.வி.பியையும், கலாச்சார சீரழிவிற்கான மாற்றீடாக ஹெல உறுமயவும் பிரிதிநிதித்துவப்படுத்தப் பட்டிருக்கின்றனர் எனக் கொள்ள முடிகின்றது.
ஏனெனில் மதவாத சக்தியான ஹெலஉறுமயவின் எழுச்சிக்குப் பின்னால் ஜாதிக கெலமுன இருந்தால் கூட இவர்களின் இந்தச் எழுச்சிக்குப் பின்னால் மதவாதம் என்பது பின்னால் இருந்திருக்கின்றது கொள்ளமுடிகின்றது. மக்களிடம் இருக்கின்ற பழமை பற்றிய கருத்து, மதத்தின் மேல் கொண்ட நம்பிக்கையில் பெரும் மாற்றம் எற்படவில்லை. இன்றையக் காலத்தில் மதக்குழுக்களின் ஆதிக்கம் அனைத்துப் பிரிவினரிடமும் இருக்கின்றன.
கடந்த காலத்தில் மகேஸ்வரன் (இந்தக் காலத்தில் மகேஸ்வரனின் மதநடவடிக்கை குறித்து விடுதலைப் புலிகள் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை) அமைச்சராக இருந்த போது இந்து மாநாடு நடத்தியிருந்தார். அந்த மாநாட்டு வேளையில் நந்தி கொடி அலுவலகங்களில் படக்கவிடவேண்டும் என தீர்மானமும் கொண்டு வந்து செயற்பட்டனர். இங்கு இந்துத்துவத்திற்கும் சைவர்களின் வழிபாட்டு தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது சுயமுரண்பாடு கொண்ட நிலையிலும் இலங்கையைப் பொறுத்த வரை இதனை முன்னிறுத்தியிருந்தனர். இவ்வாறே மாதம் தோறும் காஞ்சி சென்று மத தலைவர் ஜெயேந்திரரை சந்தித்தார். இவரின் ஆலோசனையின் பெயரில் மதமாற்றுச் சட்டம் கூட கொண்டு வர முன்னின்றார். இந்த வேளையில் தமிழ் பகுதியில் சில இடங்களில் மாட்டிறைச்சிக் கடை வைத்திருக்கக் கூடாது என்ற நிலைப்பாடுகளினால் மற்றைய மக்களிடையே கசப்புணர்வும் ஏற்பட்டது. மகேஸ்வரன் மூலமாக இந்துத்துவம் விதைக்கப்பட்டது.
கிறிஸ்தவ மதப்பிரிவுகள் மும்முரமாக மதமாற்றும் செயற்பாட்டில் தீவிரம் காட்டினர். குறிப்பாக கத்தோலிக்க மதப்பிரிவை விட மற்றைய மதக்குழுக்கள் மதவாதத்தை விதைத்துக் கொண்டு தான் வருகின்றனர்.
ஆக பொதுவாக இலங்கை முழுவதுமான சமூகப் போக்கில் ஒரு ஒற்றுமையைக் காணமுடியும். அதாவது இரண்டு பகுதியிலும் மதவாதம் முன்னரிலும் வேகமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையை புலம்பெயர் நாடுகளிலும் இன்றும் அதிமாக காணமுடிகின்றது.
இதேவேளை பௌத்த மதகுருமார் இந்திய சினிமாத்துறையினரின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதை அவதானித்தில் கொள்தல் அவசியமாகின்றது.
ஆக தமிழ் தேசியமையவாத நிலையில் இருந்து தேர்தலில் முடிவைப் பார்க்கின்ற போது தமிழ் எதிர்ப்புவாதம் என்று கூறுகின்றனர். ஆனால் தனியே தமிழ் எதிர்ப்புணர்வு என்று மாத்திரம் கொள்வது சமூக இயக்க நிலையை அறியும் போக்காக கருதமுடியாது.
இங்குதான் தமிழ் தரப்புக்கும் சிங்கள தரப்பிற்கும் இடையே வித்தியாசம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தமிழ் தரப்பை; பொறுத்தவரை சிங்கள இனவாதம் ஆனால் மேற்குலக ஆதிக்கம் பற்றியோ உலகமயமாதல் பற்றிய பிரச்சனை பற்றி பெரிதும் அக்கறையின்மையை காணமுடிகின்றது.
சிங்கள தரப்பை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் தமது ஒரே தாயகத்தை பிரிக்கப்பார்க்கின்றனர் என்பதுடன், தமது கலாச்சாரம் பண்பாடு என்பதை சிதைந்து போவதை இட்டு சிந்திக்கின்றார்.
இவர்களின் சிந்திக்கும் சிந்தனை சரியாக இருப்பினும் அவர்கள் தெரிவு செய்யும் பாதை என்பது தவறானதாகும். இதனால் அவர்கள் சிந்தனை கூட இனவாதம் என்ற சகதிக்குள் உள்ளடங்கப்பட்டுப் போகின்றது.
சிங்கள சக்திகளிடம் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தமிழ் மக்களின் முற்போக்குப் பிரிவினர் தவறாது ஆதரிக்க வேண்டும். அத்துடன் அவர்களை சரியான பாதையில் வழி செல்ல எம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும். இதுவேதான் மனித இனத்தின் முற்போக்கான பாத்திரமும்; அடங்கியிருக்கின்றன.

எமக்குத் தேவையான மேற்கத்தை, இந்திய ஆதிக்கத்தை தகர்ப்பதற்கான பாதையே. ஆனால் எதிரிக்கு எதிரி நண்பர் என்றோ, நிதிமூலதனத்திற்கு பாய்விரிக்கும் அரசியல் பாதையல்ல.
இத்துடன் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளை வென்றெடுக்கும் அரசியலை ஒரு பொறுப்புள்ள விடுதலை இயக்கம் செய்;;;யும், அத்துடன் நட்;பு ரீதியாக அணுகி அவர்களின் தவறான அரசியலை திருத்தி ஒன்றிணைத்துச் செல்லும். ஆனால் இங்கு நடப்பதே இனமையவாதமும், நாம் (மேற்;;;கு) உங்களை எதிர்க்க வில்லை. அவர்கள் தான் எதிர்க்கின்றனர் என காட்டிக் கொடுப்பும் செய்யப்படுகின்றது.


அடிப்படை உரிமைகள்
மக்களுக்கான அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க வேண்டியது முக்கியமானதாகும். மனித உரிமை மீறல்களின் ஆரம்பகாலத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவனால் முன்வைக்கப்பட்ட கருத்தைப் பார்ப்போம். 'ஒருவனை கைது செய்தால், ஸ்ரீலங்கா அரசாங்கத்திலேயே உடனடியாக இராணுவமோ பொலிஸ்சோ இருபத்தி நாலு மணித்தியாலத்தில் அறிவிக்க வேண்டுமென்று சட்டம் இருக்கின்றது. அது எவ்வளவுக்கு நடைமுறைப் படுத்தினார்கள் என்பது வேறு. ஆனால் கைது செய்தால் அது தெரியக் கூடியதாக இருந்தது. ஆனால் என்னுடைய பிரச்சனை வெளியே தெரிய முடியாத அளவுக்கு எண்பது நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். என்னை கைது செய்திருந்தால் அல்லது கடத்தியிருந்தால் தாம் உயிரோடு விடுவதாக சொல்லியிருந்தால், இந்த 80 நாட்களிற்குள்ளும் ஏன் விடாமல் விட்டார்கள் என்பது முதலாவது கேள்வி.' (ஆதாரம் www.tamilcircle.com)
இவ்வாறான ஆட்கடத்தல் என்பது 1986களில் ஏற்பட்டது. இவைகள் மக்களின் எழுச்சியால் பல போராட்டங்கள் பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் உண்டு. ஆனால் இந்த நிலை ஓர் இயக்கம் என்ற நிலைக்கு வந்தபின்னர். இன்னும் மோசமாக மக்கள் உரிமை பாதிக்கப்பட்டது. இன்றைய சமூகம் பயத்தால் ஒடுங்கியுள்ள நிலையில் காணாமல் போவது, வெள்ளை வாகனத்தில் கடத்தப்படுவது இரண்டு இனத்தின் பிரிவுகளாலும் நடத்தப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக ஆட்கள் கைது செய்யப்படுவது, விசாரணை இன்றி சிறையில் வாடுவது, கொல்லப்படுவது தொடர்வதினால் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பது முக்கியமான அம்சமாகும். இன்று வரைக்கும் கைது செய்யப்பட்டவர்களின் நிலைபற்றி அறிந்து கொள்வதற்கு, ஏன் தமது குற்றத்தை நிரூபிப்பதற்கு, அல்லது தமது நியாயத்தை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்பதைத் தான் இன்றுவரை காணமுடிகின்றது.
மக்களுக்கான அரசியல் உரிமை என்பதை எவ்வாறு வகுத்துக் கொண்டார்கள் என்பது முக்கியமானதாகும். காரணம் அரசியல் உரிமைகள் போராடும் காலத்தில் வழக்கப்பட முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. போராடும் காலத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதாக கொல்லப்படுகின்ற போது அங்கு வெளிப்படையாக செயற்படுத்த முடியும் தானே. வெளிப்படையாக சிவில் நிர்வாக செயற்பாட்டை கொண்டு நடத்த முடியாத நிலையில், எவ்வாறு சிவில் நிர்வாகம் சிறப்பாக இயங்குகின்றது, என்பதை வெளியுலகிற்கு எடுத்துக் கூற முடிகின்றது. இதனை வெளியுலத்தார் தம்மை கண்ணை மூடிக் கொண்டு நம்புவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டாமையை வெளிப்படுத்துகின்றது.
போராட்டம் நடைபெறும் காலத்தில் ஜனநாயகத்தின் படிநடக்க முடியாது என்று கூறப்படுகின்றது. ஆனால் முடிந்த வரை எவ்வளவுக் எவ்வளவு ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியுமே பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு இயக்கத்தின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை செய்யாமைக்கு போராட்டத்தை மாத்திரம் சாட்டாக வைத்துக் கொண்டு உரிமைகளை அங்கீகரிக்காமை ஒரு பொறுப்புள்ள இயக்கமாக கருதமுடியாது. முன்னர் கூறிய படி சிவில் நிர்வாகம், தனி அரசாங்கம் நடத்துவதாக கூறப்படுகின்ற வேளை தமிழர் பகுதியில் இருந்து ஆட்கள் காணாமல் போவது, கொல்லப்படல் என்பது அடிமைத்தனமான வாழ்க்கையை மக்கள் மீது திணிக்கப்படுவதே இங்கு நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
இவ்வாறாக கொல்லப்படுதல் மூலம் ஒரு சமூகத்தின் இருப்பை அச்சத்துக்குள்ளாக்கியது. இன்பம், செல்வம் போன்றவர்களை கொண்றதினால் விட்டு இலங்கை அரசாங்கம் எந்த நோக்கத்தை அடைந்தது என்பது நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். தனிநபர்களை கைது செய்து, கடத்துவது, கொல்வது, பெண்களை மானபங்கப்படுத்துவது, சொத்துக்களை அழிப்பது, திடீர் சோதனை நடத்துவது போன்றவை என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தினர். இவைகள் மூலம் ஒரு சமூகத்தை பயம் கொள்ள வைப்பது. இதன் மூலம் தனது ஆட்சியை மேற் கொள்வதேயாகும். இவ்வாறு பயத்தின் மூலமாக மக்களை அடக்கிவிட நினைத்த ஆட்சியாளர்களுக்கும், இனத்தின் உரிமையை கொடுக்க மறுத்த ஆட்சியாளர்களுக்கும் இன்றைய இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது.
எனவே ஒரு இயக்கம் மக்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். மக்களிடத்தில் பயத்தை உண்டு பண்ணுவதன் மூலம் அவர்களை தமதுசித்தத்தின் படி நடக்கக் கோருவது மக்களுக்கான அரசியலாக அமையாது. மாறாக அடக்குமுறையைக் கைக்கொண்டே ஆட்சி செய்யும் நிலைக்கு கொண்டு செல்வதைத் தான் படுகொலைகள் கொண்டுவந்து விடுகின்றன.

மாற்றுக் கருத்து
மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொள்ளாது, எதிரியின் பலத்தை நம்பியே அரசியல் மேற்கொள்ளும் எந்தச் சக்தியும் மக்கள் முன்னிலையில் இருந்து அகற்றப்படவேண்டியவே. ஆனால் இதில் கூட மாற்றுக் கருத்து இருக்கின்றது. மக்கள் முன்னிலையில் இருந்து அகற்றுவது என்பது மக்கள் சக்தியினால் அகற்றப்பட வேண்டியதேயன்றி ஆயுதங்களினால் அல்ல.
மாற்றுக் கருத்துக்கள் என்கின்ற போது டக்கிளஸ் போன்றோரது கருத்துக்களை இங்கு கூறவில்லை. இவர்கள் தேசியத்தின் கருத்தை மாத்திரம் அல்ல, உழைக்கும் மக்களுக்கான அரசியல் அவர்களிடத்தில் இல்லை. அவ்வாறு உழைக்கும் மக்களைப் பற்றி அவர்கள் கருத்துக் கூறுவார்களாயின் அவர்களின் அரசியல் பாரம்பரியமாக பணம் படைத்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் உழைக்கும் மக்கள் பற்றி அனுதாபம் கொள்ளும் வெற்று வேற்றுத் தனத்திற்கு ஒப்பானதே. எனவே மாற்றுக் கருத்துக்கள் என்னும் பொழுது அவர்கள் கருத்துப் பற்றி இங்கு அறவே கருதவில்லை.
13.11.2004 சனி
புலி எதிர்ப்பில் முதன்மையானவர் யார் என்ற போட்டியில்! சக தமிழ் கட்சிகள்!
14.11.2004 ஞாயிறு
புலிகளிற்கு எதிரான சக்திகளை தனது தலைமைத்துவத்தின் கீழ் இணையுமாறு டக்ளஸ் அறைகூவல்!
குறிப்பாக டக்ளஸ் போன்றவர்கள் மாற்றுக் கருத்துக்களை புலிகளிடம் இருந்து வித்தியாசப்படுவது என்பதில் இருந்து மாற்றுக் கருத்துக்கு சொந்தக் காரணமாக மாறிவிடுகின்றார். இதனால் மாற்றுக் கருத்து என்கின்ற போது இதன் சொந்தக் காரர் டக்கிளஸ் பிரிவினர் என்பது போல புலிகள் இலகுவாக பிரச்சாரம் செய்து, இலகுவாக மக்களிடம் தமது பிரச்சார மேலான்மையின் மூலம் வெற்றி கொள்கின்றனர்.
இந்த நேரத்தில் டக்கிளஸ் தாமே மாற்றுத் தலைமை என பறைசாற்றுவதில் உண்மையான மக்கள் விடுதலைக்கு மாத்திரம் அல்ல, புலிகளின் அரசியலுக்கு மென்மேலும் வலுச் சேர்ப்பவர்களாகவே எதிரிகளுடன் துணைபோகின்ற தந்திரோபாயம் அவர்களும் தமது பங்கிற்கு புலிகளுக்கு உதவிக் கொண்டு இருக்கின்றனர்.
கருணா இன்றைக்கு நிலை மாறியுள்ளார், ஆனால் இவர் கூட தற்பொழுது இந்திய ஆதரவு நிலைப்பாடு தென்படுகின்றது. கருணாவை ஆதரிப்பவர்கள் மார்க்சீயவாதிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். 'இவ் இணையத்தளமானது ஊடக தர்மம், பாசிச நடவடிக்கைகளின் எதிர்ப்புக் குரலாக 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி ஒலிக்கத் தொடங்கியது. மாக்ஸ்;சிசம், ஜனநாயகம் பேசியவர்கள் எல்லாம் புலிகளின் அடி வருடிகளாக மாறியுள்ள நிலையில் தான் இவ் இணையத்தளம் உதித்தது.' (www.neruppu.com) இந்தக் குற்றச்சாட்டு எவ்வகையிலும் உண்மையில்லை. உழைக்கும் வர்க்கத்தின் அரசியலை மறுப்பவர்கள், இனவாதம் அரசியலை ஆதரிப்பவர்கள் எவ்வாறு மார்க்சீயர்களாக அழைக்க முடியும்? முதலில் கொல்லப்பட்டவர்களே மார்க்சீயர்கள் தான் என்பதை வரலாறு அறியும். அவர்களே மக்களிடையே தளம் கொண்டு செயற்பட்டவர்கள். ஏன் இதே கருணாவின் தலைமையில் இவர்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்படவில்லையா? அவை வரலாறு என்றாலும் இவற்றை தெரிந்து வைப்பது முக்கியமானதாகும்.
சில விடயங்களை அவதானிக்க வேண்டும். அதாவது இன்று பிரமுகர்களாக வலம் வருகின்ற நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் வர்க்க நலன் ஒன்றித்துப் போகையில் எதிர்ப்பு என்பது அவசியம் அவற்றதாகின்றது. இது ஒன்றும் ஆச்சரியமில்லை எனினும் புதிய அணுகுமுறையை விடுதலைப்புலிகள் கடைப்பிடிக்கின்றனர். எனக் கருதிக் கொண்டும், அவர்களின் புதிய தந்திரோபாயத்திற்கு பலியாகும் அறிவுஜீவுகள் இந்தச் சமூகத்தில் அந்தஸ்தை அடையும் நோக்கத்திலோ அல்லது இவர்களாவது போராடுகின்றார்கள் என்ற கருத்துக்குள் இருந்து செயற்படுவர்களும் உண்டு. இவர்கள் மேற் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பார்கள் எனத் தெரியவில்லை. இந்தப் பகுதியினரை பாலகுமார் தம்முள் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இவர்களுக்கும் புலிகளுக்கெதிராக அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அரசுடன் சேர்ந்து வேலை செய்வது இனத்திற்கு எதிரானதும், முழு உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகும்.
அதேபோல புலிகளுடன் சேர்ந்து வேலை செய்வதும் முதலாளித்துவ தேசியத்திற்குத் தான் பலமேயன்றி உழைக்கும் மக்களுக்கல்ல. இது உழைக்கும் மக்களுக்கு எதிரானது மாத்திரம் அல்ல. புதிய சந்ததியினரின் ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு கொடுக்கும் சாவுமணியுமாகும். ஏனெனில் முதலாளித்துவத்தின் தலைமையில் கீழ் உழைப்பாளிகள் செல்ல முடியாது. மாறாக உழைப்பாளிகளின் தலைமையிலேயே முதலாளிகள் இருக்க முடியும். இந்த நிலை தமிழ் தேசத்தில் முதலாளிகளே தலைமையில் இருக்கின்றனர்.
மாற்றும் கருத்து என்கின்ற போது உள்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும். சிங்கள மக்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதன் பொருள் சிறிலங்கா அரசாங்கப்படையுடன் சேர்ந்து மக்களை அடக்குதவதற்கல்ல. சிங்கள மக்களிடம் தோழமையை வளர்க்கக் கூடிய அரசியல் இருக்க வேண்டும். தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களிடத்தில் பிராந்திய, சாதி, மத, மொழியின் மூலம் பிரித்து வைத்து ஆளநினைக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக கறாரான நடவடிக்கைகளை துணிந்து எடுக்க வேண்டும். எதிரிகளை அழிப்பது என்ற போர்வையில் மக்களை பயப்பீதியில் வாழ்வதற்கு எப்பவும் இடம் கொடுக்கக் கூடாது. அவர்களிடம் தண்ணீரில் மீன் எவ்வாறு ஒன்றித்திருக்கின்றதோ அவ்வாறே ஒரு அமைப்பு இருந்து கொள்ள வேண்டும்.
இலங்கை முழுவதும் ஏகாதிபத்தியத்தினதும், இந்திய பிராந்திய வல்லரசின் நெருக்குதலுக்கும் உள்ளாகியிருக்கின்ற வேளையில் அவற்றின் பிடியில் இருந்து முழுத்தேசத்தின் விடுதலையை கவனத்தில் கொண்டு செல்லும் அரசியல் இருக்க வேண்டும். இதன் மூலமே மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
இன்றைய நிலையில் தனியே தேசியம் என்ற இனவாத அரசியலில் முத்துக் குழித்துக் கொண்டிருக்கும் நிலையில் பரந்து பட்ட மக்களை நோக்கிய செயற்பாடுகளும், எழுத்துக்களும் என்றில்லாதவாறு அவசியமாகின்றது. ஏனெனில் இன்று தேசியத்தை முன்வைத்து செயற்படும் நிலையில் அதற்கு மாற்றீடான அரசியல் வழிமுறைகளை செயற்படுத்த வேண்டியிருக்கின்றது.
தமிழ் தேசியம் ஒன்றே ஒரு கோட்பாடு எனக் கூறிக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இறந்த போராளிகளின் சவக்குழிகளின் மேல் அரசியல் செய்யும் கல்விமான்கள், உயர் உத்தியோகம் செய்பவர்கள், வியாபாரிகள், செல்வம் சேர்த்தவர்கள் என ஈழத்து நாட்டின் அரசியலை பாதுகாக்கும் உறவுப்பாலமாக செயற்படுகின்றனர். இவர்கள் தம் உயிரை விட தயாராக இல்லாத (உரிமை மீறி வெளியேறிவர்கள் போக) நிலையிலேயே வெளிநாடு வந்தனர். அதே வேளை இவர்களின் சொத்துக்கள் நலனின் இருந்தே ஈழத்தின் அரசியல் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இந்தப் பகுதியினர் ஜனநாயக மாற்றங்களை வரவிடாது தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கின்றனர்.
எங்கள் பலத்தில், எங்கள் நிலத்தில், தங்கியிருப்போம் நாங்கள்




மாற்றம் வரவேண்டியது எங்கிருந்து?
இந்தச் சமூக அமைப்பு எவ்வாறு அமையப்பெற்றிருக்கின்றது. இந்தச் சமூதாய அமைப்பில எவ்வாறு மனிதர்கள் இயங்குகின்றனர். பற்றி பெரும் அறிஞர் கூறுகின்றார் 'மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டமான உறவுகளில் தவிர்க்கமுடியாத வகையில் ஈடுபடுகின்றார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும் அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாதார சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.
பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாதார உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு- அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு- இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவே அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கின்ற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகின்ற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், கலைத்துறை அல்லது தத்துவஞானத் துறைகளில்- சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத்துறைகளில்- இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
ஓரு தனிநபர் தன்னைப் என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாகவே விளக்க முடியும்.
எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.
வரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால, நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறைதான் உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம்- முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல, தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே, ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாதார நிலைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்த சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.'


புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரை ஒன்றும் அகநானுறும் இல்லை தொல்காப்பியமும் இல்லை, திருக்குறளும் இல்லை. வரலாற்று தெளிவு, பொருள், அகழ்வாய்வு என்று மற்றும் இலக்கிய அறிவு கொண்டு ஆராய்வதற்கு. இது இன்றைய காலத்தின் பொருளாதார சிந்தனை ஓட்டத்துடன் ஒன்றித்துப் போகின்றவை. இன்றைய காலத்தில் இருக்கின்ற பொருளாதார சிந்தனைக் கேற்ப ஒவ்வொரு மனிதர்களும் செயற்படுகின்றனர். இவ்வாறே இந்த உரையை தெளிவு படுத்திக் கொள்ள முடியும்.
நாம் ஒவ்வொருவரும் வௌ;வேறு வகையாகக் சிந்திக்கின்றோம். சிந்தனைகளை செயற்படுத்த முயற்சிக்கின்றோம். அந்த முயற்சிகள் எவையும் எமது சித்தத்தின் பால் நடைபெறுவதில்லை. மாறாக பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.
உலகம் மாறவில்லை மாறாக உலகை பிரிப்பதில் உள்ள கூட்டாளிகள், போட்டியாளர்கள் மாறியிருக்கின்றனர். இன்றைய உலகில் உலகில் ஓரேயொரு பொலீஸாக அமெரிக்காவே இருக்கின்றது. ஆனால் வௌ;வேறு பிராந்தியங்கள் என பிரிந்துள்ள நிலையில் ஏகாதிபத்திய யப்பான், நோர்வே, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என உலகை பங்கு போட்டுக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இன்றிருக்கும் அதிமுக்கிய பிரச்சனை என்னவெனில் ஒரு நாடு அல்லது அங்கு வாழ்கின்ற மக்கள் தமது இறைமையை எவ்வாறு பாதுகாப்பது என்பதாகும்.
ஒரு நாடு அல்லது மக்கள் சுயநிர்ணய உரிமை உரியவர்கள் அதே வேளை அவர்களின் சுயநிர்ணயம உரிமை என்பது தனது நாட்டின் எல்லைக்குரியதல்ல. மாறாக சர்வதேச அளவிலும் பாதுகாக்க முடிகின்றதா என்பதிலும் அடங்கியிருக்கின்றது. அவ்வாறாயின் விடுதலை வேண்டிநிற்கும் தேசத்து மக்கள் போராடும் தேசம் எவ்வகையான தன்னிறைவுப் பொருளாதாரம், அரசியல் போக்கு, மக்களின் அரசியல் உரிமைகள் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.
'தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு, ஒர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்புநிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப்பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம்.' (மாவீரர் உரையில்)
'ஆனால் தென்னிலங்கையில் சிங்களவர் சந்தோசமாக வாழுகிறார்கள். தமிழர்களோ அவதிப்பட்டிருகிறார்கள். இப்படியான சூழலில் இந்த நிலை எப்படித் தொடர முடியும் என்று போராளிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.' (பாலா உரை)
இந்தக் கேள்வி கூட நியாயமாகத் தான் இருக்கின்றது. ஏனெனில் இடைக்காலத்தில் கூட இவ்வாறான பிரச்சனை அரசு பக்கமும் இருக்கின்றது. இந்த நிலையை கவனத்தில் கொண்டே இயக்கத்திற்கும், அரசிற்கும் பெரிய தேசங்கள் நிதியைக் கொடுக்கின்றன. பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றால் இருபக்கமும் படைகள் குறைக்கப்படுவது, ஆயுதம் களைவது போன்றவை நடைபெறுவதலால் வேலையில்லாமை ஏற்படுகின்றது. இந்தக் காலத்தில் ஆயுதத்துடன் பழகியவர்கள் சீரான வாழ்க்கைக்கு வருவது சிரமாக இருக்கும். உலக நாடுகளின் அனுபவத்தை எடுத்துக் கொண்டால் அமைதி ஏற்பட்ட பின்னர் இவ்வாறான பிரச்சனைகள் தோன்றித் தான் இருக்கின்றது.
லத்தீன் அமெரிக்க நாடுகள் இதற்கு சிறந்த உதாரணம். அங்கு பல நாடுகளில் போராட்டம் சிதைக்கப்பட்ட நிலையில் 'ஜனநாயக நீரோட்டம்' என்று கூறிக் கொண்ட சித்தாந்தத்தில் சிதைந்த அமைப்புக்களில் இருந்தவர்கள் சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். சிலர் தமது உரிமைக்கான தொடர்ச்சியாக போராடியிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய காலத்தில் சிறிலங்காப் படைத்தரப்பில் இருந்துபல சமூக விரோதிகள் உருவாகிவிட்டிருக்கின்றனர்.
ஒரு போராட்ட காலத்தில் அமைதிக் காலம் என்பது போராடும் சக்தி தன்னை மீளவும் வலுவுள்ளதாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் இங்கு ஆயுதமயம் படுத்தல் என்பதற்கு அப்பால் மக்களை போராட்டத்திற் அணிதிரட்டுவது என்பது முக்கிய செயற்பாடாகும். இது சொந்த இனத்தை மாத்திரம் அல்ல. இந்தக் காலத்தில் எதிரியின் பக்கம் இருக்கும் மக்களை நோக்கிய அணிதிரட்டல் என்பது முக்கியமாகும். அந்த இனத்தின் மக்களின் நம்பிக்கையீனம், அச்சம் இவைகளை போக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். இவையூடாகவே தேக்க நிலையை தவிர்க்க முடியும். அதேவேளை மக்கள் தம்பக்கம் நிற்பதாக கூறுகின்றனர். அதேவேளை இன்றைய அமைதிநிலை தொடர்ந்தால் போராட்டத்திற்கு பெரும் இழப்பாகும் என கருதுகின்றனர். இங்குதான் மக்கள் அவர்களுடன் நிற்கின்றனரா? மக்கள் பின்னால் நிற்பதற்கும், அமைதி போராட்டத்தை சிதைக்கும் என்பதற்கும் இடையே உள்ள அளவு கோல் முக்கியமானதாகும்.
மக்கள் தம்பின்னால் நிற்கின்றனர் எனில், வர்க்க முரண்பாடுகள் அற்ற நிலையில், சமூக ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் இருக்கவேண்டும். தனியே தேசியம் என்ற கருதுகோள் அடிப்படையில் மக்கள் தம்முடன் ஒன்றித்திருக்கின்றனர் எனக்கூறுவது போராட்டத்தின் திசையில் மாற்றம் இருப்பததையே காட்டுகின்றது. ஏனெனில் போராட்டத்திற்கு போனதற்குக் காரணம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சிப் போக்கேயாகும். முதலாளிய பொருளாதாரத்தின் தோற்றத்தினால் மக்களின் ஒருபிரிவினர் சலுகைகளை அனுபவிக்க மற்றைய பிரிவினரைக் காட்டி உண்மை நிலையை திசைதிருப்பியதால் இனங்களுக்கிடையே கசப்புணர்வு வளர்ந்தது, முதலாளித்துவப் பொருளாதாரத்;தினால் மக்களின் சுயசார்புப் பொருளாதாரம் உடைந்து மக்கள் தமது பொருளாதார நடவடிக்கையில் இருந்து மாற்றம் பெற்று வருகின்றதினால் உழைப்பை விற்று பிழைக்கும் நிலைக்கு வந்தனர். ஆனால் தேசிய நிலைப்பாடு என்பதை கீழே பார்ப்போம்.
ஷஷசந்தைப்பிரச்சினை என்பது புதிதாகத் தோன்றிய முதலாளிகளுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது. அவர்களுக்கு தங்கள் பொருள்கள் விற்கவேண்டும் என்பதும், மற்ற தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுடன் நடக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதும், நோக்கமாயிருந்தது. எனவே அவர்கள் தங்களுக்கென்று ஒரு சொந்த உள்நாட்டு சந்தை வைத்துக் கொள்ள விரும்பினர். சந்தை என்கின்ற இந்த ஆரம்பப் பள்ளியில் தான் முதன் முதலில் முதலாளிகள் தேசிய வாதத்தைக் கற்றறிந்தனர்.
ஆனால் பிரச்சினை என்பது பொதுவாக சந்தையோடு மட்டும் நிற்கவில்லை. ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனங்களைச் சொந்த அரைநிலப்பிரபுத்துவ மற்றம் அரை முதலாளித்துவ அதிகார வர்க்கத்தினர் இதைத் தடுத்து நிறுத்த தம் சொந்த முறைகளைக் கையாண்டு போராட்டத்தில் தலையிட்டனர். ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தைச் செர்ந்த முதலாளிகள் மிக அதிகமானவர்கள் ஆயினும், குறைவானவர்கள் ஆயினும், மிகவும் வேகமாகவும் தீர்க்கமாகவும் தங்களின் போட்டியாளர்களை எதிர்த்து செயல்பட்டனர். அன்னிய முதலாளிகளுக்கு எதிராக சக்திகள் ஒன்று திரட்டப்பட்டு தொடர்ச்சியான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை ஒடுக்குமுறை நடவடிக்கைகளாகவே உருமாறின. இவ்வாறு நடந்த போராட்டம் பொருளாதாரத் தளத்தில் இருந்து அரசியல் தளத்திற்கு பரவியது. அதாவது இடம் விட்டு இடம் பெயரும் உரிமை கட்டுப்பாடு, மொழி ஒடுக்குமுறை வாக்குரிமைக் கட்டுப்பாடு, பள்ளிகள் மூடப்படுதல், மதஉணர்வு மீது கட்டுப்பாடு போன்ற இன்னும் பல நடவடிக்கைகள் போட்டியாளரின் தலைக்கு மேலே குவிந்து கொண்டே போயிற்று. இதுபோன்ற நடைவடிக்கைகள், ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளிகளின் நலனுக்கு மட்டும் நடத்தப்படவில்லை. இன்னும் செல்லப்போனால் குறிப்பாக ஆளும் அதிகார வர்க்கத்தின் சாதியக் குறிக்கோளை விரிவுபடுத்துப்பட வேண்டும் என்பதற்காகவும் நடத்தப்பட்டன.
ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளிகள் ஒவ்வொரு முறையும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதன் காரணமாக இயற்கையாகவே அவர்கள் ஒரு இயக்கமாகக் கிளர்ந்தனர். அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தனர். தங்கள் தாய் நாட்டின் நலனுக்கு கூப்பாடு போட்டனர். தம் நலனே தேசத்தின் மொத்த நலன் என்றும் உரிமை கொண்டாடினர். தங்கள் தாய்நாட்டின் நலனுக்காக கிராமப்புற மக்களிடம் இருந்து ஒரு படையைத் திரட்டினர் மக்களும் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்காமல் இல்லை இவர்களின் பதாகையின் கீழ் அணிதிரண்டனர். அதுவரை அனுபவித்து வந்த அடக்குமுறை காரணமாக மக்கள் தங்களுடைய மனக் குமுறலை வெளிப்படுத்தினர். இவ்வாறாக தேசிய இயக்கம் துவங்கியது. எந்த அளவிற்கு பாட்டாளிகளும் விவசாயிகளும் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே தேசிய இயக்கத்தின் வலிமை தீர்மானமாகியது.'
தேசியத்தின் நிலைப்பாட்டில் உழைப்பாளிகள் ஒன்றிணைக்காவிடின் தேசியம் வலுவிழக்கும் என்பதைத் தான் தலைவரின் உரை காட்டி நிற்கின்றது. கடந்த காலத்தில் உழைப்பாளர்களின் நலனைப் பேணும் இயக்கங்கள் தமிழர் பிரதேசத்தில் இல்லை. தாமே முழுமக்களின் நலனைப் பேணுபவர்கள் என்று கூறினர். ஆனால் இந்த நிலை யதார்த்தத்திற்கு புறப்பானது என்பதைத் தான் தலைவர் பிரபா உரையில் கூறுகின்றது.
அத்துடன் சொந்த மக்களின் ஜனநாயக உரிமையை அங்கரிப்பது முக்கியமானதாகும். இங்கு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம் என்கின்ற போது மக்கள் தமக்கான அரசியல் இலக்கை கொண்டவர்களாக இல்லை என்பதே பொருள்படுகின்றது. ஒரு மக்கள் கூட்டம் தனது வர்க்க தேவையை சரியாக உணர்ந்து அணிதிரளப்பட்டிருக்கின்ற வேளை இவ்வாறான அச்சத்திற்கு உள்ளாகத் தேவையில்லை. இதில் குறிப்பாக வெளிநாட்டில் வாழும் மக்கள் தமது தலைவர் சொன்னது சரியென விளக்கம் கொடுக்கின்றனர். இவைகூட உண்மையே, அதாவது அன்றாடம் கஸ்டத்திற்கும் துன்பத்திற்கும் மத்தியில் வாழ்பவர்களிடம் இருந்து தான் விரக்தியுள்ள இளைஞர்களை திரட்ட முடியும். சமாதான காலத்தில் அவர்கள் வர்க்க நிலையை உணர்வார்களாயின் மேட்டுக்குடிகளின் வர்க்கத்திற்காக, அவர்களின் முதலீடுகளை தமது பிரதேசத்தில் முதலிடுவதற்கு ஒரு தளம் இல்லாது போகும் என்ற காரணத்தினால் அச்சம் கொள்கின்றனர்.
மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுதல் என்கின்ற போது மக்களுக்கான ஜனநாயக உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும், அவர்கள் முடிவெடுக்கும் உரிமையை அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும், அவர்களின் பொருளாதார வாழ்வியலுக்கு ஏற்ற மாற்று நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக செயற்படுத்த வேண்டும். இவைகள் இடம்பெறுகின்றனவா? மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்குவதன் மூலமே துரோகத்தனத்தை இல்லாதொழிக்க முடியும். எழுச்சி இல்லையாயின் அவற்றை இல்லாதொழிக்க முடியாது. துரோகத்தின் செயற்பாடு ஒரு அடக்கு முறையின் வெளிப்பாடாகவே தோற்றம் பெறுகின்றது. இவைகளை மாற்ற ஒரு தேசிய இயக்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் இயக்கம் நடைபெறுமாயின் யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் 100 மேற்பட்டோர் கொலை செய்யப்பட தேவையில்லை அல்லா? இது எதனை நிரூபிக்கின்றது?
விடுதலை வேண்டி நிற்கும் தேசத்து மக்கள் போராடும் தேசம் எவ்வகையான தன்னிறைவுப் பொருளாதாரம், அரசியல் போக்கு, மக்களின் அரசியல் உரிமைகள் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். அறிந்திருப்பது என்பது மட்டுமல்ல, அவை சம்பந்தமாக முழு அறிவு பெற்றிருக்க வேண்டும். தற்காலத்தில் மேற்கு நாடுகளை எடுத்துக் கொண்டால் அவர்களின் பொருளாதார நலனுக்கு ஏற்ப மக்களை கல்வியறிவு ஊட்டுகின்றனர், நிறுவனமயப்படுத்துவதற்கு ஏற்ப மக்களையும் மறுவுற்பத்தி செய்கின்றனர். அவ்வாறாயின் தமிழ் மக்களுக்கான அரசியல் பங்குதான் என்ன? அரசியல் மயப்படுத்தலில் பாட்டாளிகளும் விவசாயிகளும் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே தேசிய இயக்கத்தின் வலிமை தீர்மானமாகியது எனின் இதற்கான வெளிப்படையான திட்டம் தான் என்ன? திட்டங்களை வெளியில் வைப்பது எப்பவும் இரகசியமாக இருப்பதில்லை. மாறாக செயப்பாட்டிற்கான செயல் தந்திரங்கள் இரகசியமாக இருப்பது வேறு விடயம். ஆனால் மக்களிடத்தில் முன்வைத்து செயற்பட வில்லை. மாறாக தமது பிழையாப் பெருமையை வலியுறுத்தும் வகையான செயற்பாடுகளையும், எல்லாம் தலைவர் செய்வார் என்ற குருட்டு வழிப்போக்கையுமே தொடர்கின்றனர்.
'நோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று, அந் நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது. ஆறு மாதங்கள்வரை நீடித்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயனற்றுப் போயின.'
ஓரு தேசிய இனத்தின் மைந்தர்கள் தேசத் துரோகி என்று கொலை செய்யப்படுகின்றனர். கண்ணாடி பத்மநாதன், பற்றிக் எனும் பற்குணம், குலசேகரன் (கழுகுப்படை 1978) மட்டுநகர் மைக்கேல் தொடங்கி பின்னர் செட்டி, சுந்தரம், தேவன், ஜெகன், மனோமாஸ்ரர், றீகன், அமீர் (நுPசுடுகு) ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், போன்றவர்கள் பின்னர் இயக்கங்கள் தடை செய்யப்படுகின்றது. பின்னர் இயக்கத் தலைவர்கள் கொல்லப்படுகின்றனர், அமீர், யோகேஸ்வரன் போன்றோர் கொல்லப்படுகின்றனர்.
இவ்வாறெல்லாம் கொல்லப்படுகின்ற வேளையில் ஒரு மனிதன் மாத்திரம் பிழையாப் பெருமை கொண்டுள்ளார் என்றால் அவை எவ்வகையில் யதார்த்தத்திற்கு பொருத்தமாக இருக்கின்றது. எல்லாம் செய்வதும் சரி, கூறுபவை புனிதமானது, சத்தியமானது, உண்மையானது எனின் அவன் அதிதீவிர புத்திசாலி இல்லையா? இவ்வாறாயின் ஏன் முன்றாம் நபர் தேவை?
இதற்கும் பின்னால் ஒரு வர்க்கம் இருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றது. வர்க்கத்தின் தேவையின் அடிப்படையில் இயங்குகின்றனர் என்பதை அறியாமல் வைத்திருப்பதற்கு காரணம் என்ன? ஈழநாட்டில் வாழுகின்ற மக்களின் தேவைகளுக்கும் விடுதலைப்புலிகளின் தேவைக்கும் இடையே நிச்சயம் முரண்பாடுகள் கொண்டுதான் இருக்கின்றது.
இது நிச்சயம் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் மக்களின் நலத்துடன் ஒன்றுபட்டிருந்தாலும், இலங்கையில் வாழ்ந்து வருகின்ற மக்களின் தேவைகளுக்கும், அபிலாசைகளுக்கும் நேரே வித்தியாசம் கொண்டதாகத் தான் இருக்கும்.
இன்று மத்தியத்துவம் செய்துவரும் நாடு ஒரு ஆபீரிக்கக் கண்டத்தில் வறிய நாடுஅல்ல, ஆசியக் கண்டத்தில் உள்ள வறியநாடு அல்ல, லத்தீன் அமெரிக்காவில் இருக்கும் வறிய நாடுமல்ல. நோர்வே என்பது ஒரு ஏகாதிபத்தியம், பெரும்நிதி மூலதனத்தைக் கொண்ட ஒரு நாடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து தனித்தே இயங்கும் ஒரு நாடு, அமெரி;க்காவின் அரசியல் நலனை பாதுகாக்கும் நாடு. இவை பனிப்போர் நடைபெற்ற காலத்திலும் சரி, அல்லது தற்காலத்திலும் சரி அமெரிக்க நலனை பாதுகாக்கும் நாடு. 1990 முதல் ஈராக் யுத்தத்திலும் சரி, யூக்கோ மீதான யுத்தத்திலும் (சூழ்கெயும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் அவர் சார்ந்த கட்சி இந்த யுத்தத்தை எதிர்த்தது) ஆப்கான், 2003ல் ஈராக் மீதான யுத்தத்திலும் சரி ஆதரவை வழங்கிவரும் நாடு.
இவ்வாறிருக்கையில் அவர்களை முழுமையான ஒரு நட்புசக்தியாக அவர்களை எவ்வாறு உழைக்கும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு என்ன உரிமை இருக்கின்றது.
ஏகாதிபத்தியம் இவ்வாறு தூய்மையானது என எந்த ஒடுக்கப்படும் வர்க்கத்தை சேர்ந்த எவரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள், அதற்கு சான்றிதழ் கொடுக்கவும் மாட்டார்கள். அப்படியாயின் முழுமையாக ஏகாதிபத்தியவாதிகளை நம்பிச் செயற்படும் இவர்களை எவ்வாறு அழைத்துக் கொள்வது?
பிழையாப் பெருமையை பின்வருமாறு செயற்படுத்துகின்றனர்
தலைவர் பாதையில் செல்வோம்,
தலைவருக்கு விசுவாசமாக இருப்போம்,
தலைவரின் கரத்தைப் பலப்படுத்துவோம்,
தலைவர் தான் எல்லாவற்றையும் முன்னின்று நடத்துவார் (உதாரணமா எல்லாத் தாக்குதல்களும் அவர் வழிகாட்டலின் கீழ் நடைபெறுகின்றது.
தலைவர் எப்பவும் சரியாக இருப்பார் (அப்படியாயின் ஆலோசகர்கள் எதற்கு, அதற்கான பொறுப்பாளர்கள் தான் எதற்கு?)
தற்பொழுது மேதகு என்ற சொல்லாட்சியை எவ்வகையில் புகுத்த வேண்டுமோ அந்தந்த இடத்தில் ஊரோடு ஒத்துப்போ என்ற சித்தத்திற்கு ஏற்ப அனைத்து ஊடகங்களும் இதனையே தொடர்கின்றன.
இதேவேளை நடுநிலையாளராக இந்தியா வரும் என்றால் விடுதலைப்புலிகளின் நிலை என்னவாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. புலிகளின் இந்தியா மீதான நிலைப்பாடு சரியானதே. ஆனால் அதேவேளை புவியியல் ரீதியாக வேறு கண்டத்தில் இருந்து மூன்றாம் நபர் உள்நுழைவதால் அந்தச் சக்தி தூய்மையானதாக மாறிவிடுகின்றது என்பதை விடுதலைப்புலிகளே தெரிவிக்க வேண்டும்.
'இவை ஒருபுறமிருக்க, சிறீலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வாஷிங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால், சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம்.'
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சமபங்காளி என்பது என்ன விடயத்தில் என்பது முக்கியமான விடயமாகும். அமெரிக்க தேசம் என்பது எமது மக்களின் உரிமையை அங்கீகரிக்கும் அரசியலை கொண்டிருக்கின்றதா? அல்லது தனது வல்லாதிக்க அரசியலை முதன்மையாகக் கொண்டிருக்கின்றதா? இங்கு அமெரிக்காவில் நடைபெற இருந்த பேச்சுக்கு தாம் பங்குபற்றாமையை எண்ணிக் கவலை கொள்வது என்பது உலக மக்களின் உரிமைய நசுக்கும் ஒருவரின் தயவை பெற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதைத் தான் ஆதங்கத்துடன் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு நிதிமூலதனத்தின் செல்வாக்கைக் கொண்ட பிரித்தானிய ஒற்றையாட்சியின் கீழ் தாம் இருந்து கொள்ளாமல் ஐரோப்பிய சமபங்காளிகளில் ஒருவராக தம்மை இணைத்துக் கொள்ள தனிநாடு கோரும் ஸ்கொட்லாந்து (Scotland)> வட இத்தாலி ((Liga Nord) இனர் தனியாக பிரிந்து செல்வ முற்படுகின்றனர். இவ்வாறே இலங்கையில் இனத்துடன் ஒன்றித்து வாழ முடியாது. ஆனால் உள்ளக சுயநிர்ணயம் என்ற நிலையில் தனது சந்தையை தானே தீர்மானித்துக் கொள்வது, ஆனால் இறைமையை மேற்கத்தைய சந்தைக்கு இழப்பது என்ற நிலைக்கு விடுதலைப் புலிகள் வந்திருக்கின்றனர். இங்கு இறைமையை இழப்பதற்கு தயாராக இருக்கின்றனர். ஆக இவர்கள் சுயநிர்ணயத்திற்காக போராடுகின்றார்கள் என கூறுவதில் உண்மையான தர்க்க நியாயம் இல்லை. மாறாக இந்தப் பொருளாதார அமைப்பில் சரணடைவதையே இவர்களின் அரசியல் இலக்காக கொண்டுள்ளது.
தமிழ் மக்களின் போராட்டம் என்பது உண்மையில் சொந்த அடக்குமுறைக்கும், ஏகாதிபத்தியத்தின் சந்தைக்கான போட்டிக்கு சாவுமணி அடிப்பதைக் இலக்காக கொண்டதாக அமைய வேண்டும். ஆனால் இங்கே தலைவர் தமது சமஅந்தஸ்து என சுட்டி நிற்பது நாட்டை விற்பதற்கு தயாராக இருப்பதையே.
'சர்வதேச நாடுகள் பல, எமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வரவேற்கத் தவறவில்லை'
இதனை எந்தனை நாடுகள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டது என்பது பற்றி புலிகளின் உள் இரகசியம் வெளியில் வருவதற்கு வசதியில்லை. இவை ஒரு புறமிருக்க இடைக்கால நிர்வாகம் என்ற கருத்தின் பிறப்பிடம் எவை என்பதை அலசிப்பார்ப்பது அவசியமாகும். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின உட்கட்டுமானம் (; (infrastructure) என்பது முக்கியமானதாகும். அரச திணைக்களங்கள் (சீரான ( Institution) நிறுவன அமைப்பு) ஒழுங்காக இயங்க வேண்டும், கிராமங்களுக்கும் நகரத்துக்குமான போக்குவரத்து தடையின்றி இருக்க வேண்டும், நிறுவன மயப்பட்ட சட்டதிட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். முதலாளித்துவத்துக்கு அவசியமானதாகும்.
யூக்கோஸ்லாவியாவின், ஈராக், ஆப்கான் போன்ற நாடுகள் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்ட போது தாக்குதல் தொடங்கப்பட்ட உட்கட்டுமானத்தை தகர்ப்பேயாகும். உட்கட்டுமானத்தை (infrastructure) தகர்த்துக் கொள்வதனால் ஏற்படும், பொருளாதார வளர்ச்சியில் தடங்கள் ஏற்படும் என்பதை அறிந்து வைத்துள்ள ஏகாதிபத்தியங்கள் சிறப்பாகவே செயற்படுகின்றன. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டுமானம் எவ்வளவு அவசியம் என்ன என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
உள்கட்டுமான ( infrastructure)வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை உருவாக்குவதும் முதலாளித்துவத்திற்கு முக்கியமானதாகும்.
இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக நாடுகள் தவிர்க்கின்றன. இவை ஒப்பிட்ட ரீதியில் சீனாவை விட சந்தை பாதுகாப்பு இல்லை என்று கருதுகின்றனர். குறிப்பாக லஞ்ச, ஊழல் பெரும் பிரச்சனையாக இருப்பதையும் பெரு நிறுவனங்கள் கவனத்தின் கொண்டதும் ஒரு காரணமாகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் முதலீடு செய்வதில் அதிக ஊக்கம் கொடுக்க வில்லை. இதனால் பா.ஜ.க அரசு தீவிரமாக உட்கட்டுமானத்தை சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்தியது இதுவே காரணமாகும்.
கடந்த காலத்தில் பலஸ்தீனத்தில் சர்வதேச சமூகம் எனப்படுகின்றன மேற்கு தேசங்கள் ஊழல் அற்ற நிர்வாகம் இருக்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் நிதி ஒழுங்காக பயன்படுத்தப்பட வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர். இதன் மூலம் உட்கட்டுமானத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதால் ஆகும். அப்போதுதான் நிதி நிறுவனங்கள் அப்பிரதேசத்தின் தமது மூலதனத்தை முதலீடு செய்ய முடியும்.
'பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களை தோற்றுவிக்கும் படியான உயர்ந்த கட்டத்திற்கு உற்பத்தியின் மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்து விடுதல்.
வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ஷநிதி மூலதனத்தின்' அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாதலும்.
பண்ட ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தபட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல்.
சர்வதேச ஏகபோக முதலாளித்துவ கூட்டுக்கள் உருவாகி, உலகையே இவைகள் தமக்கிடையே பங்கு போட்டுக் கொள்ளுதல்
மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவு பெறுகிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள் நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியதத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுக்களிடையே உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்று விட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்.'
இன்றைய காலத்தில் நிர்வாக கட்டமைப்பை யார் முன்னிறுத்துவார்கள் என்பதை பொது மக்களாகிய நீங்களே மேற்கூறிய தரவுகளில் இருந்து ஒரு முடிவிற்கு வர முடியும். அதாவது ஒரு அனுபவப்பாடத்தில் இருந்து மற்றயவை எவ்வாறு அமைந்து கொள்ள வேண்டும் என்பதில் மூன்றாம் நபராக செயற்படுபவர்கள் வெகு அவதானமாகச் செயற்படுத்துகின்றனர். ஆனால் நிபந்தனைகள் அற்ற விதத்தில் மூலதனம் வந்து குவியும் என்று எதிர்பார்ப்பது புலிகளின் அரசியல் வறுமையைத் தான் காட்டி நிற்கின்றது.
ஆகவே இடைக்கால தன்னாட்சி என்பது பெரும் தேசங்களின் கட்டட்ட மூலதனத்தின் முதலீடுகளை வரவேற்றுக் கொள்ளவேயாகும். இதனால் தாம் உங்கள் மூலதனம் உள்வருவதற்கு உறுதியான கட்டமைப்பு இருக்கின்றது என்பதை விளப்பரம் செய்துள்ளனர். இதுதான் புலிகள் தமக்குத் தானே போட்டுக் கொண்ட சாவுமணி. அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் தனிமனிதர்களை சுதந்திர அடிமைகளாகக் கோருகின்றது. இதற்கு சம்மதித்தேயாக வேண்டும்.
யுத்த நிறுத்த மீறல்களை கண்டும் காணாது இருக்கின்றனர்.
நிறுவன வடிவம் எவ்வாறு இயக்குகின்றது என கற்பித்தல் (இராணுவ முகாமிற்கு புலிகள் விஜயம் செய்தனர்)
தொலைத் தொடர்பு சாதனம் கிடைக்கப்பெற்றமை
கருணா மீதான தாக்குதலுக்கு பச்சைக் கொடி காட்டியமை
'என்ன பாலா அண்ணை? உப குழுக்கள், பேச்;சுகள் என்று உருப்படியான செயல்பாடு இல்லை என்றார். தொடர்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள். நிதி உதவி எதுவும் இல்லை என்றார். மேலும் பில்லியன் டாலர் உதவி என்றெல்லாம் சொல்கிறார்கள். 10 ரூபாய் கூட இல்லையே என்ன விளையாட்டு இது என்றார்.'
இவைகள் எல்லாம் ஆடும் மாட்டை ஆடிக் கறப்பது என்ற அணுகுமுறையைக் நோர்வே கடைப்பிடிக்கின்றது. அமெரிக்காவின் நேரடி இராணுவவாத நடவடிக்கை போன்ற ஆக்கிரமிப்பு (அவசர நோக்கும் கொண்டது வேறு விடயம்) நடவடிக்கை போன்று இல்லாமல் மெதுவாக ஆழுமையைச் செலுத்தும் தந்திரத்தை செயற்படுத்துகின்றனர்.
1993களில் கிட்டு ஒரு தீர்வுப் பொதியுடன் சென்றார். அன்றைய வேளையில் கிட்டு தற்கொலை செய்யத் தூண்டப்பட்டார். (குறிப்பாக தற்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ள புலிகள் தமிழ் நாட்டில் கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பொழுதிலும் சரி, வி.பு தலைவர் ராஜீவினால் கட்டாயமாக டில்லிக்கு அழைத்துத் செல்லப்பட்ட வேளையிலும் தற்கொலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.) அப்பொழுது கிட்டு லண்டனில் வாழ்ததினால் மேற்கு தேசங்களின் அழுத்தத்திற்கு உள்ளாகினார். ஆனால் அவர் இறந்த பின்னால் அழுத்தம் தரக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய கிட்டு இல்லாமையினால் மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கவில்லை. அதேவேளை வெளித் தொடர்பில் இருந்து மூடிய நிலையில் இருந்த நிலை காரணமாக வெளித்தொடர்புகள் நேரடியாக இருக்கவில்லை.
இன்றையக் காலத்தில் பல வெளிப்பயணங்கள், தேவையான சலுகைகளை நேரடியாகவே பெறும் நிலையில் இருக்கின்றனர். இதன் காரணமாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர்.

'நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை'
ரணில் மீதான நம்பிக்கை என்பது அரசியல் சார்ந்தது. இவை இனத்துவத்திற்கு அப்பால் உள்ள வர்க்க உறவாகும். புலிகள் 2000 ஆண்டு தேர்தலின் போது ரணிலை மறைமுகமாக ஆதரித்தனர். அவர் வந்தால் புலிகளின் போர்நிலையை சமநிலைப்படுத்தும் நோக்கில் அவர்கள் எண்ணிச் செயற்பட்டனர். ஆட்சி மாற்றத்திற்கான காலத்தில் தம்மை பலப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தினர்.
இன்று மற்றைய பகுதி முதலாளித்துவம் சமத்துவமாக தத்தம் மக்களின் சந்தையை பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு உடன்பாடு இவர்களிடையே தோன்றியத் காரணத்தினால் இவர்களுக்கான புரிந்துணர்வு என்பது சந்தர்ப்பவாத 'தேசிய'த்தை முன்வைக்கும் JVPயினருடன் ஒத்துழைத்துக் கொள்வதிலும் பார்க்க சந்தையை பகிர்ந்து கொள்ள சம்மதம் செய்யும் நிலையில் உள்ள வர்க்கத்தின் தேவை என்பது பிரதானமானதாகும். ஆனால் உள்ள பிரச்சனை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் செய்ய எல்லாப்பகுதியினரும், குழப்பல்வாத அரசியலைக் கைக்கொள்வதால் மக்களிடத்தில் ஒரு முழுமையான ஆதரவை பெற முடியாதுள்ளது.
தேசியம் எப்பொழும் முதலாளித்துவ வர்க்கக் கோரிக்கை என்பதை இவர்களின் செயற்பாட்டின் மூலமே அறிய முடிகின்றது. மார்க்சீய வாதிகள் அவ்வாறு கூறுகின்ற போது தமிழ் மக்களின் விரோதிகளாக சித்தரிக்கின்றனர். முதலாளித்துவ வர்க்கத்தின் நிலை என்பது எப்பொழுதும் ஒரே பகைமையானதாக இருப்பதில்லை. மாறாக அவை காலத்துக் காலம் சந்தையின் பொருட்டு ஏற்படுகின்ற சில மோதல்கள் அடங்கி விடும். பின்னர் கூட்டுத் தொடரும் புதிய எஜமானர்களுக்காக நாம் மீண்டும் செத்து மடியவேண்டியது தான். தேசியவாதிகளின் இலட்சியம் அரைவழியில் நின்றுவிடுவதினால் போராட்டம் தொடராது.
ரணில் அரசாங்கம் இடைக்கால தீர்வு பற்றி அவர்களுக்கு ஒரு பார்வை ஆறு சுற்று நடைபெற்ற வேளை உருவாகியிருக்கும். ஏனெனில் இவர்களும் ஏகாதிபத்தியத்தின் நலன் காக்கும் சக்திகள் என்பதினால் ஆகும். தெரிந்திருந்த வேளையில் வர்க்க சமரசம் கொண்ட காரணத்தினால் சாதகமான நிலையில் அவர்கள் இருந்தனர். ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினர் என்றே சொல்ல வேண்டும். இதற்கு இனவாதம் என்றதற்கு அப்பால் சிவில் நிர்வாக முறையில் மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையே இருந்து வருகின்ற ஏற்றத்தாழ்வான அரசியல் முதிர்ச்சியே காரணமாகும்.
இனவாதம்
இனவாதம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாது போக்க வேண்டும். சிங்கள பெருந்தேசியவாதத்திற்கு எதிராக தமிழ் தேசியம் உருவெடுத்துள்ளது. இவர்களும் இனவெறி கொண்டு தான் இருக்கின்றனர். இனவெறிப்பேச்சுக்களை முன்னர் கூட்டணியினரிடம் இருந்தும் அவர்கள் வழிவந்த இன்றைய இயக்கங்கள் வரை தொடர்ச்சியாக வளர்த்து வந்துள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள் அரசியல்வாதிகளை வெறு இனத்துவேசம் கொண்டுதான் விமர்சிக்கின்றனர். நாம் இனவாதிகள் என்ற காரணத்தினால் தான் அப்பாவிகளை எம்மால் கொல்ல முடிந்தது.
தமிழ் தேசியம் சிறுபான்மை இனதேசியமாகிய முஸ்லீம் மக்கள் மீது கொடுத்த தாக்குதல்கள் தொடுத்தனர். நாம் இவர்கள் மீது தொடுத்த தாக்குதலை என்னவென்று அழைப்பது. கிழக்கில் வௌ;வேறு இடங்களில் அவர்களை கொலை செய்தோம், யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களை வெளியேற்றினோம். இதன் பொருள் தேசியமா? இல்லை, இதுவும் இனவாதமே!
1986களில் முஸ்லீம் பிரதிநிதிகள் செய்து கொண்ட ஒப்பந்தம் என்வாகியது?
ஹக்கீம் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்னவாகியது?
1985 சித்திரை 10 அன்று செய்து கொண்ட (ENLF) கூட்டு ஒப்பந்தம் என்னவாகியது?
ஒப்பந்தங்கள் எவையும் வர்க்கங்களின் சக்திகள் பரஸ்பரம் சமாதானமாக சந்தையை பிரிந்துக் கொள்ளும் வரை அவைகள் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொண்டேதான் இருப்பர்.
இதில் புதிய கண்டுபிடிப்பு என்னவெனில் ஐ.தே.க எப்போ இனவாத பாவங்களைப் போக்கி புனிதராக மாற்றப்பெற்றது என்பதுதான். இவர்களும் இனவாத அரசியல் இருந்து குளிர் காய்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
தமிழர்கள், சிங்களவர், முஸ்லீம்களாக இருந்தால் என்ன இனவாத அரசியிலில் தான் பயணம் செய்கின்றனர். இவற்றில் இருந்து மனித விழுமியங்களை மதித்து, இனத்துவ ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் சக்திகள் தான் மற்றைய எதிர்நிலைச் சக்திகள் மீது விமர்சிப்பதற்கு முழு உரிமையும் கொண்டிருக்கின்றனர். மாறான ஒரு அணி இன்னொரு அணியை இனவாதிகள் என கூறுவதற்கு எந்தவொரு தகுதியும் இல்லை.
இன்று மனித நேயத்தை விரும்புபவர்களின் தலையான பணி இனங்களுக்கிடையேயான காழ்புணர்வை, நம்பிக்கையீனத்தை, பகையுணர்வை தீர்ப்பதேயாகும்.
'சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகா அரசின் உண்மையான முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம் கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.'
மாவீரர் தினத்திற்கு முன்னர் '(21.11.2004) அமெரிக்காவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் ர்pச்சர்ட் ஆர்மிடேஜ் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுடனும் எதிர்கட்சி தலைவருடனும் தொலை பேசியில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக பேசியதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் துணைப் பேச்சாளர் அடம் ஹெலி தெரிவித்துள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துக்களை வரவேற்ற ரிச்சர்ட் ஆர்மிடேஜ் ஜனாதிபதி சமாதானம் தொடபாக உறுதியுடனும், தெளிவுடனும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்கால புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் சமாதான முயற்சிகளை குழப்புகின்றன. புலிகள் வார்த்தையளவில் பயங்கரவாதத்தை கைவிட்டுள்ளதாக சொல்லாமல் உண்மையாகவே பயங்கரவாதத்தை கைவிட்டு புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.' இவைகூட வி.பு தலைவரின் பேச்சில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இவர் பேச்சில் பெரும் அழுத்தமிருப்பதாக தெரியவில்லை. 'போராடுவோம்' என்பது மீண்டும் தொடக்கமாக கூறுவது கூட மக்களை திசைதிருப்பும் ஒரு யுக்தி என்பதே உண்மை. இவர்களால் இன்று பேச்சுவார்த்தையைக் குழப்பக் கூடிய நிலையில் இவர்கள் புறஉலகத்துடன் தொடர் இல்லாமல் இருக்கவில்லை. மாறான 11 புரட்டாசிக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதலால் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் ஐரோப்பாவில் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் முகவர்கள் (ஏதுமற்ற தொழிலாளர்களைத் தவிர) தொடர்ந்து புலிகளுக்காக செயற்பட துணிவார்களா என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. மார்கழி மாதம் கனடாவில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் பற்றிய மாநாட்டில் சிலர் கலந்து கொண்டு குழப்பம் விழைவித்தனர். இந்தக் கூட்டத்தில் புலிகள் சார்பாக பங்கு கொண்டவர்கள் சாதாரண தரத்தில் உள்ள கீழ்மட்ட ஆதரவாளர்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாநாடு முக்கியம் அற்றதாக இருந்தாலும், அங்கு சென்று மாற்றுக் கருத்து வைக்கக்கூடிய நபர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.
இங்குள்ள தமிழர்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், கெடுபிடிகளுக்கு ஈடுகொடுப்பார்களா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் பொருளாதார பலத்தில் இல்லாதவர்கள் புலிகளின் கடும் உழைப்பாளர்களாகவும், பொருளாதார, கல்வி, அந்தஸ்து பலத்தை உடையவர்களே புலிகளின் பொறுப்புக்களில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச சமூகம் என்பது விடுதலைப் போராட்டத்தை எவ்வகையாக கணிப்பிடுகின்றது என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். மேற்கு நாடுகள் தத்தம் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வர் என்பது தெரிந்ததே. சர்வதேச சமூகம் என்பது நிதிநிறுவனங்களின் நலன்பால் கொண்டது என்பது சாதாரண மக்களுக்கு மறைக்கப்பட்டு வருவது மிகுந்த ஆபத்தைக் கொடுக்கக்கூடியது. இதில் விடுதலை இயக்கம் கவனம் எடுப்பதில்லை என்பதும் ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல.
ஐ.நா சாசன விதி என்பதும் கூட ஒரு வர்க்க நிலை சார்ந்தான் இருக்கின்றது. இன்று உலகமயமாதலை விரைவு படுத்துவதே நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம் என்பது, அதேவேளை முதலாளித்துவ அரசாங்கங்கள் என்ற நிலைக்கு வருகின்ற போது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை சட்டரீதியாக கோருவதே இவர்களின் ஆகக்கூடிய ஒரு கடமையாக இருக்க முடியும். இதனை விடுத்து மேற்கு தேசங்களின், குறிப்பாக அமெரிக்காவினை மீறி எதுவும் செய்து விடவும் முடியாது. ஆக ஐ.நா என்ற நிறுவனம் மீதான ஒரு மயக்க நிலையையும் மக்கள் மத்தியில் கூட்டுகின்றனர்.
ஆக சர்வதேசம் ஜனதிபதி சந்திரிக்காவின் முகமூடியை தெரிந்து கொள்ளும் என்பது வெறும் மொழியில் சொல்லாட்சியை தவிர வேறொன்றில்லை. அதேவேளை சர்தேச சமூகம் என்பது தனிமனித படுகொலைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. குறிப்பாக ஒரு இடைத்தரகர்களுக்கு தமது உழைப்புச் சக்தி அடிமைப்பட்டு இருப்பதை அங்கீகரிக்கப் போவதில்லை. இதற்காக நிறுவனங்களை வைத்து குரல் எழுப்பாமல் விடப் போவதும் இல்லை. ஆக இன்று புலிகளுக்கு உள்ள முக்கிய பிரச்சனையே எதிரிகளை மென்மேலும் உருவாக்காமல் தடுப்பதாகும்.
ஏனெனில் துரோகிகளை அன்று தொடக்கம் இன்றுவரை உருவாக்கி வருவது விடுதலைப்புலிகளின் அரசியலே. முதலில் இந்தியாவின் பின்னால் நின்று பின்னர் சக்தியை பெருக்கிக் கொண்டு மற்றவர்களை இந்தியக் கைககூலிகள் என்று அவர்களை இல்லாது ஒழித்தனர். பின்னர் தமது உறுப்பினர்களையே கொண்று குவித்தனர். இன்று ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் தமது விசுவாசிகளை பாதுகாக்க துரோகியென கருணா வெளியேற்றப்பட்டது வரை விடுதலைப்புலிகளின் தனிமனித சுதந்திரம், தனியமைப்பாக இயங்கும் சுதந்திரம், அரசியல் பன்முகத்தன்மையின்மை போன்ற மக்கள் விரோத கொள்கைகளே காரணம்.
மக்களிடத்தில் முதலில் துரோகிகள் தானே கொல்லப்படுகின்றனர் என்ற கருத்து பரப்பப்பட்டிருக்கின்றது. மக்களும் இன்று பெரும் எதிர்ப்புக்களை தெரிவிக்காமல் விட்டு விடுகின்றனர். ஆனால் அவர்களின் வர்க்கத் தேவை என்கின்ற போது நிச்சயம் தெருவிற்கு வருவார்கள் என்பதைத் தான் குருநகர் கடல்தொழிலாளர், வடக்கு போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் என்பது காட்டி நிற்கின்றது.
ஆக சர்வதேச சமூகத்தின் மீதான நம்பிக்கை என்பது நிச்சயம் பொருளாதார நலன் சார்ந்தது. ஆனால் சர்வதேசத்திலும் வாழும் மக்களிடத்தில் ஆதரவு கேட்டும் அரசியல் நடத்தவில்லை. அந்த மக்களிடத்தில் போகக் கூடிய அரசியல் என்பது இல்லாமை முக்கிய பற்றாக்குறையாகும். இன்று மற்றைய போராட்டங்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவினை தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வளர்த்தெடுக்காமை புலிகளின் அரசியல் வறுமையே காரணம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

'நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.'
நிபந்தனை விதிக்கக் கூடாது என்று விடுதலைப்புலிகள் கடந்த காலத்தில் கூறினர். இதனை தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என விரும்பியவர்கள் எல்லோரும் ஏற்றும் கொண்டனர். அன்று அரசு ஆயுதத்தை போடும் படி கோரியது. இதனை விடுதலைப் புலிகள் உட்பட எல்லோரும் எதிர்த்தனர். ஆனால் இன்று விடுதலைப் புலிகள் நிபந்தனை போடுவது பிரச்சனைக்;கு தீPர்வு காணும் அணுகுமுறையல்ல. மாறாக குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நிலைதான் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாகும். எப்பவும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து பொதுவான முடிவிற்கு வருவது இலகுவானதல்ல. மாறாக ஒரு பொது முடிவில் இருந்து குறிப்பிட்ட நிலைக்கு வருவது நடைமுறைச் சாத்தியமான ஒரு அம்சமாகும்.
இதன் பொருள் ஓரு தீர்வுடன் அமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளக் கூடாது என்பதல்ல. அவைகள் பேச்சுவார்த்தை மேசையில் வெளிப்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் புலிகள் தமது அதிகார வரம்பை மீளவும் கட்டிக்காக்கக் கூடிய வகையில் செயற்படுகின்றனர். இதற்கு ஏகம் என்ற நிலைப்பாடும் காரணமாகின்றது.

'எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை இப்புனிதநாளில்..'
'எங்கள் தேசத்திற்காக
இறந்தவர்கெல்லாம்
விளம்பரம் கொடுத்தாயிற்று
ஏனெனில்
நடைமுறைப் பிரச்சனை
கூர்மையடையும் கால்
தியாகியைக் காட்டியே
திசை திருப்பும் - இந்த
வர்க்கத்திற்குத் தேவை
தியாகிகள் ... .. '
'அந்த விடியலுக்கு' (1986) இளங்கோவின் கவிதைகளின் சமர்பணத்தில் இருந்து சில வரிகள்)
புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை என்பதே யதார்த்தம். ஆனால் எமது சமுதாயத்தில் எந்த நிறுவனங்களும் (சாதி, ஆணாதிக்க குடும்ப உறவு, மத, சம்பிரதாயங்கள்) சிதைந்து விடவில்லை. மாறாக அனைத்து பிற்போக்கு மூலத்தில் இருந்து பிறந்தது தான் எமது இயக்கங்கள் அனைத்தும் ஆகும். ஆனால் இவைகள் தமது பாதையில் தவறு விடுவதற்கு அதன் இந்தச் சமூகத்தின் மேற்தளத்தின் மேல் கட்டப்பட்ட இயக்கங்கள் அவை பிற்போக்கானவையாகவே இருக்கின்றது. புதிய சிந்தனை, செயற்பாடுகள் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் பழைய உற்பத்திக்கு அத்திவாரமாக இருக்கும் அனைத்தும் இல்லாதது ஒழிக்கப்பட வேண்டும்.
குலச்சமுதாயத்தின் எச்சமும் அதன் மீது தமது வர்க்க நலனைப் பாதுகாக்கும் நிலையில் தான் மாவீரர் விழா நடைபெறுகின்றது. இது பிரபாகரன் பிறந்தநாள் விழா என்பது ஒரு புறமிருக்க, இறந்த தியாகிகளின் பெயரில் மக்களின் மூடப்பழக்கத்தை தொடர்ச்சியாக விதைப்பதைத் தான் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.
இறந்தவர்களை நினைவு கொள்வது என்பது வேறு, ஆனால் புனித நாள் என்பதிலும் முன்னோர் தெய்வ வழிபாட்டையும் புதுப்பிக்கும் நிலை என்பதும் வேறானது. மக்கள் மதங்கள் கூறுகின்ற மூடப்பழக்க வழக்கத்திலும், வர்ணாசிரமக் கோட்பாட்டிற்குள்ளும் தொடர்ச்சியாக ஆட்பட்டுக் கொண்டு வருகின்றனர். இதற்காக விடுதலை அமைப்பு என்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியான செயற்பாடுகளை மேற்கொள்ள வில்லை. மாறாக தொடர்ந்தும் அவ்வாறான கருத்தியலுக்கு அழைத்துச் செல்வது ஆரோக்கியமான நிலையல்ல.
இறந்தவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மறப்பது என்பது மனித வாழ்க்கையில் இயல்பானது. இறந்தவர்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருப்பது மனிதனின் உளவியலில் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியதாகும். வருடாவருடம் கவலையை மீளப்படுத்துவது வெறுக் வக்கிரத்தைக் காட்டுவதாகவே அமைந்து விடுகின்றது. இதில் குறிப்பாக தொலைக்காட்சி என்பது இன்னும் அதிகமாக மக்களை தாக்கும் ஒன்றாக இருக்கின்றது. இதன் காட்சியமைப்பு (visual effect)என்பது இரங்கி அழுவதைப் பார்த்து எந்தச் கல்நெஞ்சும் கரையும். ஆனால் இந்த இரக்க உணர்வு என்ன தேவைக்கு பயன்படுத்தப் படுகின்றது. போராளின் இலட்சிய உணர்வினை விதைப்பது இவ்வாறல்ல. மாறாக ஒரு சரியான அரசியல் பாதையும், தெளிந்த பாதை கொண்ட அரசியல் தலைமைத்துவத்தின் மூலமேயாகும்.
போராளிகளின் மீதான பாகுபாடு நிச்சயம் நிறைவே இந்த நாளில் ஊடகங்களின் மூலம் காணமுடிகின்றது. 2001 நினைவு தினத்தில் ஒரு தாயினை ( TTN)பேட்டி கண்டார்கள். அப்போ அந்தத்தாய் தன்நிலையைக் கூறி அழுதார். அந்தத்தாய் 5 பிள்ளைகளை விடுதலைக்காக உருவாக்கிய வீரத்தாய்தான். இருவர் தொடர்ந்தும் அமைப்பில் இருக்கின்றனர், மூன்று பிள்ளைகள் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதில் ஒருவர் மாத்திரம் தனது பதவியிறக்கம் செய்த காரணத்தினால் தற்கொலை செய்யப்பட்டார். இவ்வாறு கூறிய பின்னர் 5 போராளிகள் என்ற கணக்கு பின்னர் 4 போராளிகளாக மாறியது. அந்தத் தாயிடம் அவர்களின் வீரம் பற்றிக் கேட்ட போது அந்தத்தாயோ தன்னுடைய வாழ்க்கையின் சோகத்தைத் தான் கூறினார். இதனால் பேட்டி கண்டவர் வேறு தாயிடம் பேட்டியைத் தொடர்ந்தனர்.
ஏன் இவ்வாறு போராளிகளின் தியாகத்தில் கூட தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டுகின்றனர். இவை பற்றி பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அதேவேளை பொதுவான நினைவு நாள் தேவை என்ற கருத்து இன்றைக்கு சாத்தியப்படாவிட்டாலும் வரலாற்றில் ஒரு நாள் உருவாகாமல் போகாது.
புதிய சிந்தனை கொண்ட ஒரு சமூகத்தைப் படைப்பதே ஒரு சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் அமைப்பிற்கான கடமையாகும். ஆனால் மாவீரர் நாள் மூலமாக பழைய சமுதாய விழுமங்களை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலமாக பழைய வகை சமூக பொருளாதார அமைப்பை பேணுவதே குறிக்கோளாக சுருக்கப்பட்டுவிட்டதை தான் இவற்றில் இருந்து வெளிப்படுத்தப்படுகின்றது.

'இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது.'

மக்களுக்கு தேவையானது உண்மையான விடுதலை. விடுதலை என்பது சொந்த தேசத்தின் சுரண்டிக் கொழுக்கும் ஒரு வர்க்கத்தை இல்லாது ஒழிக்க வேண்டும். நாம் போராடத் தொடங்கியது சுரண்டல் இல்லாத சமுதாயத்தைப் படைப்பதற்கே. ஆனால் இந்த இலச்சியக் கனவுகள் வளர்ச்சியடையாதவாறு எதிர்ச் சிந்தனை மூலமும், ஆயுதக் கவர்ச்சி மூலமும் சிதைக்கப்பட்டது. இந்தச் சிதைவை மீள்சீரமைக்கும் தேவை இன்று உள்ளது. அவ்வாறான தேவையே இன்றுள்ளது.
1985 களில்
'மரணத்தைக் கண்டு
நாம் அஞ்சவில்லை
ஒரு அனாதைப் பிணமாய்
ஒரு அடிமையாய்
புதிய எஜமானர்களுக்காக
தெருக்களில் மரணிப்பதை
நாம் வெறுக்கின்றோம். ' (செழியன் 'மரணத்துள் வாழ்வோம'; கவிதைத் தொகுதியில் இருந்து)
இவ்வகையான எழுச்சிகள், கவிதைகள், சித்தாந்தப் போராட்டங்கள் நிறைந்த காலத்தை தாண்டி இன்று நீங்கள் எல்லோரும் தமிழ் எஜமானர்களுக்காக சாகுங்கள் என்ற நிலைக்கு எம் சமூகம் வந்துள்ளது. அரசியல் பன்புமுகத்தன்மை 1983களில் அன்று இருந்து மக்களிடையே அரசியல் அறிவு பெற்ற பகுதியினர் 1966 களில் ஏற்பட்ட அரசியல் இயக்கத்தின் பின்னரான காலத்தில் ஏற்பட்டது.

இந்த எதிரிகள் தமிழ் மக்களிடம் இருந்து அல்லது கூட்டாட்சி வரும் பட்சத்தில் சிங்கள, தமிழ் என பணம்படைத்தவர்களின் அல்லது மக்களின் இயலாமையை பயன்படுத்தி அவர்களின் மேல் சவாரி செய்யும் கூட்டத்தவர்களாவர். அவர்களின் நலனைப் பாதுகாக்க வெளி நாடுகளில் இருந்து உள்நாட்டு அரசியலை, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாக சர்வதேச நாணய (IMF) நிதியம், உலக ( WB) வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வர்த்தக ஒப்பந்தக் (WTO) கூட்டு என பெரும் சர்வதேச நிறுவனங்களோயாகும்.
இந்த நிறுவனங்களின் ஆதிக்கவலையில் உலகை கொண்டு வருவதும் இவர்களின் மூலதனத்தை முதலிடவும், இதன் மக்களின் உழைப்பை, நாட்டின் கனிப்பொருட்களை மலிந்த விலையில் சுரண்டவும், கடன் கொடுத்து வட்டியைப் பெற்றுக் கொள்ளவும் வசதியான பொருளாதார பாதுகாப்புச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிலைவேற்றி பெரும் நிதிநிறுவனங்களின் தரகர்களாக வேலை செய்பவர்களே இன்றைய நாடாளுமன்ற அரசியல்வாதிகள்.
இதில் ஒரு அங்கமாகவே இன்றைய நிலையில் எமது விடுதலை இயக்கமும், மக்களின் விடுதலை என்ற போர்வையில் உள்ளக சுயநிர்ணயம் என்ற போர்வையில் ஈழத்து மக்களை சுரண்ட உரிமை கேட்கின்றது. உள்ளக சுயநிர்ணம் என்பதில் மாத்திரம் கவனம் கொள்வதன் மூலம் அன்னிய நிதிகளை பாதுகாக்கும் திட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஒரு அத்தாட்சி உரையே வி.பு தலைவரின் பொதுவுடமை மீதான வெறுப்பு உரை. மேற்கு தேசத்தின் தரகு வர்க்கமாக தம்மை அடையாளம் காட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் மேற்கு தேசங்கள் போடும் சட்டதிட்டங்களை எமது மக்கள் மத்தில் அழுல்படுத்துவதும், அவர்களுக்கு தேவையான மலிந்த உழைப்பாளிகளை உருவாக்குவதே தற்பொழுதைய அரசியல் பாதை சென்று கொண்டிருக்கின்றது. அத்துடன் இந்த உரையுடன் புலிகளின் தாகம் சோசலிச தமிழீழம் என்ற இலக்கை உத்தியோகபூர்வமாக கைவிட்டதை அறிவித்துள்ளார்.
இங்கு பிரபாகரனுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏன்னென்றால், அடல் பாலசிங்கம் தாம் இடதுசாரி வாய்வீச்சாளர்களின் அவல நிலையைப் போக்காட்ட அவதரித்த வீரப்புதல்வர்கள் என தமது புத்தகத்தில் எழுதுகின்றனர். இதனை தலைவதே பொய் என தெரிவித்தமைக்கு. அத்துடன் தாம் சோசலிச பாதையை தொடரவில்லை, தாம் அவ்வாறான கொள்கையை கொண்டவர்கள் இல்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு அறிவித்திருக்கின்றார்.

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் வைத்தான் வெள்ளரிக்காய்
காசுக்கு இரண்டு விற்கச் சொல்லி
காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்.

வெள்ளைக்காரன் பணம்
சின்னப்பணம்
வேடிக்கை காட்டுது வெள்ளப்பணம்
வெள்ளிப்பணத்திற்கு ஆசைப்பட்டு
வேசம் களைச்சாளாம் வீராயி.
என தமிழ் நாட்டுப் போராளிகள் பாடுகின்றனர்.
 
//உரிமைகள் பறிபோகிறதென்று கூச்சல் போடக்கூடாது\\
இதனை என்னவென்று சொல்ல? போட்ட எலும்புத்துண்டை நக்கிக் கொண்டிருக்க நாங்கள் என்ன நாய்களின் வம்சமா?

//ஆன்மீகத்தால் மாத்திரமே செய்ய முடியும்//
ஏற்கனவே ஆன்மீகம் என்ற பெயரில் ஆசாமிகள் சாமிகளாகிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மதங்களினால்தான் மூட நம்பிக்கை எங்களை மூடியுள்ளது. காலம் இப்படியிருக்க ஆன்மீகத்தால் மட்டுமே தீர்வென்று நீர் சொல்வதனை எப்படி ஏற்றுக் கொள்வது குட்டான்?

கோயிஞ்சாமி,
//பிரச்னைகளை நன்கு திறம்பட ஆராய்ந்து அதற்குரிய தீர்வையும் சொல்லும் உங்கள் செயல் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது... புயலெனப் புறப்படுவோம் ஓரணியாக. உங்களுக்கு தோள் கொடுக்க நானும் உங்களின் ஒருவனாக நிச்சயம் வருவேன்.//
என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறீங்கள். அது உங்கடை உரிமை. ஆனா எனது வலைப்பதிவை முடக்கிப் போட உங்களுக்கு யார் சுதந்திரம் தந்தது? நாகரீகம் இல்லாத லூசுகள்.
 
தேசவிடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலைமை மீண்டும் மீண்டும் எம்மை சிந்திக்கத்தூண்டுகிறது. அதன் தொடர்ச்சியாக 3வது பாதை ஒன்றை அமைக்கும் தேவை எம்மெல்லோர் முன்னுள்ளது. இதன் தேவையுடன் எழுந்ததே தேசியசக்திகள் பற்றிய விவாதமும், இவ்விவாதத்தின் ஆரம்பத்தில் புலிகளின் வர்க்க மதிபீட்டை ஆராய முற்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாக இவ்விதாம் 3வது பாதைக்கு அpடித்தளம் அமைக்கும் வகையில் பல விடயங்களை தொட்டு நிற்கிறது. இவ்விவாதத்தின் தொடர்ச்சியாலும். ஆரோக்கியமான போக்;கும் ஒரு போராட்டத்தின் முன் நிபந்தனையாகவுள்ளது.
தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தில் மனிதம்,துர்ண்டில்,உயிர்ப்பு,சமர் என்பன தங்கள் கருத்துக்களை கூறமுனைந்துள்ளனர். இக் கருத்து விவாதங்கள் இருவகையாக பிரிக்கலாம்.
(1)சமர்,தூண்டில்,உயிர்ப்பு விவாதங்கள் ஆரோக்கியமான வகையில் இணைக்கப்போக்கை நோக்கிய வகையில் அமைந்துள்ளது.
(2)மனிதம் சஞ்சிகையில் விவாதம் இதற்;கு எதிர்மறையாக அடிப்படையையே திரிபு வாதத்துக்குள் இட்டுசெல்லும் வகையில் தம்விவாதத்தை முன்னேடுத்தனர்.
நாம் இச்சஞ்சிகைகளில் வெளிவந்த விவாதத்தின் தொடர்ச்சியாக விவாதிக்க முற்படுகிறோம். அவ்வகையில் மனிதம் இதழ்15இல் வெளிவந்த புலிகள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகளுமல்ல என்ற கட்டுரையையும்,மனிதம் இதழ்16இல் உயிர்ப்பு இதழ் பற்றிய விமர்சனத்தை முதலிலும்,அதன் பின்தூண்டில் இதழ்கள் 41-48-49இல் வெளிவந்த புலிகள் தேசிய சக்திகள் என்ற கட்டுரையை அடுத்தததகவும்,உயிர்ப்பு சஞ்சிகையில் தேசியசக்திகள் பற்றி சில பிரச்சனைகள் என்ற கட்டுரையை இறுதியாகவும் விமர்சனத்திற்குள்ளாகின்றோம் .
மனிதம் 15இல் தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தின் மீது விமர்சனம்
மனிதம் இதழ் 15இல் விடுதலைப்புலிகள் தேசியசக்திகளா?இல்லையா? என்பது பற்றி இப்போது புரட்சிகரமான சக்திகள் மத்தியில்ஒரு காரசாரமான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது? இந்த விவாதத்தின் மூலம் நாம் ;அடையப்போகும் பயன் என்ன? என்று விளங்கவில்லை. எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மைகளை கடினமாக சொற்பதங்களை பாவிப்பதன் மூலம் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்குவராமல் தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெறுகின்றன இப்படியாக மனிதம் சஞ்சிகை தனது கட்டுரையை தொடங்கின்றது. இத் தொடக்கத்தில் புரட்சிகரமான சக்திகள் மத்தியில் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? ஒன்று இவர்கள் புரட்சிகரமானவர்கள் என்று ஏற்றுக்கொள்கிறார்களா? அப்படியாயின் பிந்திய மனிதத்தின் விவாதம் எதற்க்காக? அதாவது ஏன் இந்த விவாதம் நடைபெறுகிறது? என்ற கேள்வியிலிருந்து இவர்கள் புரட்சிகரமான சக்திகள் என்னும் பதத்தை வெறும் கேலியாக பயன்படுத்தியுள்ளதை பார்க்க முடியும். ஏன் இந்த விவாதம் நடைபெறுகிறது என்று மனிதத்தின் கேள்வியிலிந்து விவாதத்தின் தேவையை புரிந்து கொள்ளாமை புலனாகிறது. அப்படி புரிந்து கொள்ளாமை; மீண்டும் தங்கள் கருத்தை சொல்ல நினைப்பது விவாதத்ற்க்கு தாயார் இல்லை இல்லாமையே,தாங்கள் நினைப்பதை திணிப்பதற்காகவே. இதை உறுதி செய்யும் வகையில், இவ்விவாதத்தின் மூலம நாம் அடைய இருக்கும் பயன் என்னவென்று விளங்கவில்லை எனச்சொல்லி தங்கள் மேதவிலாசத்தை காட்டி கொள்ள விரும்புகிறார்கள். தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய உண்மைகளை கடினமான சொற்பதங்களை பாவிப்பதன் மூலம் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் தொடர்ச்சியாக விவாதிக்க.... என்று குறிபிடும் கரிகாலன், இதழ்16இல் உயிர்ப்பு. மீதான விமர்சனத்தில் கடினமான சொற்பதங்களை பாவித்துள்ளார். அதை எளிமையாக சொல்ல முடியாமல் போய் விட்ட அவர்,இதழ்15-இல் கடுமை, இலகு பற்றி வாதிட முற்பட்டதேன்? கடுமையான சொற்பதங்களை பாவிப்பதன் மூலம் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் கடினமான சொற்பதம் என்பது, ஒரு கட்டுரையுடன் தேவையோடு அமைந்ததே. கிராமப்புரத்தில் மக்களுடனும், நகர்ப்புறத்தில் மக்களுடனும் வேலை செய்யும் போது,எப்படி ஒருகட்சிக்குள் விவாதிக்கும் தன்மையில் கருத்தை வைக்காமல் எளிமைப்படுத்தி, நகர்ப்புறத்துக்கும்,கிராமபுறத்துக்கும் வேறுபடுத்தி வைப்பது போன்றே கட்டுரைகளும். இன்று குறித்த இவ்விவதாம் 3-வது அமைப்பை உருவாக்கும் வகையில்,வளர்ந்த சிந்திக்கிறவர்கள் கூடுதலாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்ததே. இதற்க்ப்பால் எல்லாதரப்பட்ட மக்களின் வாசிப்புதிறனுக்கு அமைய ஒருகட்டுரையை வரையமுடியுமா? என்பது சந்தேகமே. ஓரு கட்டுரையை விரும்பின் இலகுவாக பலதரப்பட்ட மக்களுக்கு, பகுதிபகுதியாக விரிவுபடுத்த முடியும். தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் என்ற மனிதம் சொல்வதால் சஞ்சிகை வெளியிட்டவர்களையும்,கட்டுரையாளர்களையும் குழப்பியுள்ளனர், என்று தாங்கள் சொல்ல வருவது புத்திஜீவித்தனத்தின் வெளிப்பாடே. அவர்கள் சொல்ல வருவதுனுடாக தங்களை மேதாவிகளாகவும், இக்கருத்தை சொல்லவந்தவர்கள், சமூகவியக்கத்தில் சாராத கற்பனைவாதிகளாக பார்க்கிறார்கள்.ஒரு கருத்தை சொல்ல முனைந்தவர்கள்,குழம்பிப்போயுளார்கள் என சொல்ல எவ் ஆதாரத்தை முன் வைக்கிறார்கள்.அவர்கள் நினைத்ததை எழுதுவதெனின் அதற்கு ஆதாரம் மிக அவசியம். அதுவும் சமூகவிஞ்ஞானத்துடன் பொருந்துவதாக இருக்க வேண்டும். மற்றவர்களையும் குழப்பி என்று சொல்வதனூடாக தாங்கள் குழம்பியுள்ளீர்களா? என சிந்திக்க தூண்டுகிறது. எந்த முடிவுக்கும் வராமல் என தாங்கள் கூறுயதனுடாக, தங்களினால் திணிக்கப்பட்ட கருத்து, தாமும் குழம்பியவர்ளால் வெளியிட்ட கருத்து, மற்றவர்களை குழப்பியதனுடாக திணிக்கப்பட்ட கருத்து (தங்களது) கேள்விக்குள்ளாகிறது. இதை உங்கள் ஆரம்ப விவாதமே சுட்டி காட்டி நிற்கிறது.
குறிப்பிட்ட பிரச்சனையை இயங்கியல் அடிப்படையில் ஆராய வேண்டும். மாறாக ஏற்கவே இருக்கும் முடிவுக்கு அல்லது வழிக்கு பொருந்தி வருவதாக குறிபிட்டு காட்ட முனையக்கூடாது. என்ற தங்கள் கருத்தில் ஏற்கனவே இருக்கும் முடிவு அல்லது விதிக்கு பொருந்துவதாக இயங்கியல் அடிப்படைக்கு மாறுபட்டதாக சஞ்சிகைகள் ஆராய்ந்ததாக தாங்கள் சொல்வதை இயங்கியலுடன் தாங்கள் எங்கே இக் கட்டுரையில் ஆராய்ந்துள்ளீர்கள்? வர்க்கத்தன்மை யற்ற புலிகள் குழு என்ற கருத்தை இயங்கியலுடன் எங்கே ஆராய்துள்ளீர்கள். முடிவு விதிகள் என தாங்கள் கூறுவது, அடிப்படை மார்சியத்தை பிழையென தங்களால் காட்ட முடியவில்லை. தங்கள் விவாதம் தான் இயங்கியலுக்கு மாறாக ஒற்றை வரிகளில் எந்த ஆய்வு முறையையும்,ஆதாரங்களையும் சொல்லாமல் வைத்துள்ளீர்கள்.
மார்க்ஸ் தொடக்கம் மாவோ வரையிலான மார்க்சிய அறிஞர்கள் சொன்ன கருத்து அல்லது முடிவை வைத்தே இப்பிரச்சனைக்கு முடிவை வைத்தே இப்பிரச்சனைக்கு முடிவு காண முற்பட்டதாக தாங்களே சொல்லி அவர்களது; கருத்தை நிராகரித்துள்ளீர்கள். நாம் திட்டவட்மாக சொல்கிறோம் மார்க்சிய அறிஞர்கள் வைத்த அடிப்படை மார்க்சியத்தில் இருந்தே நாம் சமூகத்தை ஆராய்கிறோம்.அது ஒன்றே சமூகத்தை சமூக விஞ்ஞானமாக ஆராய்ந்துள்ளது. அதிலிருந்து மார்க்சிற்கு பின்னைய லெலின் (70ஆண்டுகளின் பின்) மார்க்சிய அடிப்படை வைத்தே, மார்க்சியத்தை, புரட்சியை ரஷ்சியாக்கு ஏற்ற வகையிலும்,100 வருடங்களின் பின் சீனாவில் மாவோவும் மார்க்சிய அடிப்படையிலிருந்தே, மார்க்சியத்தை வளர்த்ததோடு புரட்சியையும் நடாத்தினர். இன்று140 வருடங்களின் பின் கூட பல நாடுகளில் பல புரட்சி ளூஸ்தாபனங்கள் பல தளப்பிரதேசங்களை அமைத்து, மார்க்சிச அடிப்படையில் முன்னேறுகிறார்கள். இதற்கு மாறாக மனிதம் மார்க்சியத்தின் அடிப்படையை கேளிவிக்குள்ளாக்கியப்படியே,இயங்கியலை மார்க்ஸ் முதல் மாவோ வரை தவறாக கையாண்டனர் என, இயங்கியலை மாறுபட்ட முறையில் விவாதிக்கின்றனர். தமது கருத்துக்ள்Nளுயே முரன்பாடுகின்றனர். மார்க்சியத்தின் அடிப்படைகள் தவறு எனின் எங்கே? மனிதம் அவைகளை எல்லாம் விமர்சித்து உலகுக்கு வழிகாட்டும் புதிய தத்துவத்தை எடுத்துதியம்ப வேண்டும். இப்படி செய்யாமல் சும்மா கூறுவது மார்க்சியத்தை திரித்து புரட்டுவது தான்.
தேசியசக்திகள் ஜக்கிய முன்னணித்தந்திரம் பற்றி மாவோவின் கருத்துக்களை மனத்தில் வைத்துகொண்டு, அவை பற்றி ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு, புலிகளைப்பற்றி யாராவது மதிப்பிட முனைந்தால் அது தவறு.அது சலிப்பூட்டும் விவாதங்களை மட்டுமே உருவாக்கும். என மீண்டும் விவாதத்தின் மீது சலிப்பூட்வதாக கூறி புலிகள் வர்க்கமற்றவர்கள் என்பதை ஆராய்வுககும், விவாதத்துக்கும் அப்பால் திணிப்பை நிகழ்த்த முயற்சிக்கிறார்கள். விவாதிப்பதற்கு தங்கள் கருத்தின் பலம் இன்மையும் விவாதிக்கத்தயார் இன்மையும்,எதற்காக விவாதிக்கின்றார்கள் என்ற கேள்வி எழுவதுடன், தங்களால் திணிக்கப்பட்ட கருத்துக்கள் விவாதத்துக்கு முன் வருவதால், தங்கள் சக்திகளை கட்டிக்காக்க முடியாமல் போயுள்ள தன்மையையுமே காட்டுகிறது. தூண்டிலுக்கு பதிலளிக்க தேசிய சக்தி,ஜக்கிய முன்னணி பற்றி சொல்லும் மனிதம் கற்பனாவாதத்திற்குள் உட்படுகிறார்கள். புலிகள் பற்றிய மதிப்பீடு ஜக்கிய முன்னணியை மனதில் வைத்துத்தான் தூண்டில் செயற்படுகிறது என சொல்லும் மனிதம் எந்த இயங்கியல் ஆய்வுமுறையை வைத்து முடிவுக்கு வந்தீர்கள். தொடர்ச்சியாக தூண்டில் வெளியிட்ட கருத்துக்கள் ஜக்கிய முன்னணியை வைத்துதான் வெளியிடுன்றார்களா? மாவோ கருத்துக்களை உடனடியாக ஒரு வசத்திற்கு பொருந்துவது தாங்கள் சொல்லுவது போல் இருக்கும் முடிவுக்கு அல்லது விதிக்கு பொருந்தி வருவதாக அமைத்து தூண்டிலுக்கு பொருத்த முனைவதன் நோக்கம் தான் என்ன? யார் விதி அல்லது முடிவுகளை அப்படியே பயன்படுத்துகிறார்கள் என்பதை தாங்களே திரும்பிபார்ப்பது நன்று.
நாம் புலிகளைப்பற்றி மதிப்பிட வேண்டியது அவசியமானதே என்ற தங்கள் கருத்து விடுதப்புலிகள் தேசிய சக்திகளா? இல்லையை? என்பது பற்றி இப்போது புரட்சிகரமான சக்திகள் மத்தியில் ஒரு காரசாரமான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கு விவாதத்தின் மூலம் நாம் அடையவிருக்கும் பயன் என்ன? என்பது விளங்கவில்லை என்று தங்கள் கருத்துக்கு முற்றாக மாறுபட்டுள்ளது. குழப்பம் உங்களுடையதே ஒழிய எங்களுடையதல்ல என்பதை தாங்கள் தங்களுடைய கட்டுரையூடாக சொல்ல வருகிறீர்களா? கடந்த கால, நிகழ்கால நடவடிகையிலிந்து ஆராய்ந்து சரியான ஒரு முடிவை நாம் முன்வைக்க வேண்டும். அடையப்பெறும் முடிவானது மார்க்சிய மூலவர்கள் கூறுய முடிவுகளுடன் அல்லது கருத்துகுக்ளுடன் பொருந்தி வருகிறதா?இல்லையை? என்பது பிரச்சனை அல்லபிரச்சனை என்ற கருத்தில் தாங்கள் குழம்பியூள்ளீர்கள். மூலவர்களின் முடிவை வைத்தே கருத்தை சொல்வதாக சொல்லி முன்பு நிராகரிக்க முற்படுகிறீர்கள். தொடர்சிசியாக எழுதும் போது மூலவர்கள் சொன்னது பொருந்திவருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்,தாங்கள் முதலில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் மாக்சியம் சரியா?பிழையா? என்பதை. பிழை எனின் என்பதை கூற வேண்டும். அதை விடுத்து இரண்டையும் குழப்பமுயல்வது ஏன்?
புலிகள் தரகு முதலாளித்துவ சக்திகளின் நலன்களுக்காக போராடுவதால் அவர்கள் தேசிய சக்திகள் இல்லை என்பது சமர் பத்திரிகைனதும், ஒரு சாராரினதும் வாதமாகும். இப்பிரச்சனைகள் சகலவற்றையும் வர்க்க கட்டமைப்பு வர்க்க பார்வை என்று கூறப்படுவதற்குள் உள்ளடக்கி விட்டால்.... என்ற தங்கள் கருத்தில் திரிபு வாதத்தில் மிகத்தெளிவான பக்கங்னள், உலகில் உருவாகும்அனைத்து பிரச்சனைகளும், கருத்துக்களும் வர்க்கத்தன்மைக்கு உட்பட்டதே. இது அடிப்படை மார்க்சிய விதியாகும். இவ்வடிப்படை மார்சியம் பிழையெனின் மார்க்ஸ்,எங்கல்ஸ்,லெனின்,ஸ்டாலின்,மாவோ மற்றும் மார்க்சிசத்தின் அறிஞர்கள் வெளியிட்ட கருத்துக்களை மனிதம் எடுத்து விமர்சிப்பது தான். ஒரு விமர்சனத்தின் ஆரோக்கியமான அணுகுமுறையாகும். மனித்தின் கருத்துக்கு எதிராக பல வெளியீடுகள் உள்ளது. 2-ம் அகிலத்திற்க்கும், லெனினுக்கும் இடையில் இது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது. இதைப்பற்றி ஒரு விமர்சனத்தை முன்வைக்காமல், வர்க்கத்தன்மையில்லை என ஒற்றை வரியில் சொல்வதென்பது, தமது கருத்துக்கே கருத்துப்பலம் இல்லாது மட்டுமின்றி இது கடைந்தெடுத்த அடிப்படை திரிபு
வாதமாகும்.
தெளிவாகவும் உறுதியாகவும் கூறமுடியும் புலிகள் எந்த மக்கள் பிரிவினதும் பிரதிநிதிகளல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுமிடததில் குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயகமாவது இருக்க வேண்டும். தங்கள் வாதத்தில் எந்த பிரிவினதும் பிரதிநிதிகளல்ல என்ற விடயத்தை உறுதிசெய்ய முதலாளித்துவ ஜனநாயகமின்மை ஆதாரத்திற்கு முன்னெடுத்து ஒன்றையொன்று குழப்பியுள்ளீர்கள். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முதலாளித்துவ சக்திகளுக்கு மட்டுமானதே. அங்கே பாட்டாளிகளுக்கோ, முதலாளித்துவ சக்திகளுக்குட்பட்ட மற்ற வர்க்க சக்திகளுக்கு எந்த ஜனநாயகமும் கிடையாது. இதே முதலாளித்துவம் சில வேளை தனது சக்திக்கே ஜனநாயகத்தை வழங்காது பாசிசததை கட்டவிழ்துவிடும். குறிப்பாக 3-ம் உலக நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகம் தோன்றவோ ஆட்சிக்கு வரவோ ஏகாதிபத்தியம் அனுமதிக்காது. இங்கு முதலாளித்துவ சக்திகள் ஏகாதிபத்தியத்துடன் சமரசத்திற்கு செல்வதற்கூடாக, தரகு முதலாளிகளாக மாற்றப்பட்டு மக்களை ஒடுக்குபவர்கள்,மற்றோரு பிரிவு பாட்டாளி வர்க்க போராட்ட எழுர்சியின் போது ஆதரிப்பார்கள். புலிகள் முதலாளித்துவ ஜனநாயகத்தை கொடுக்காததால் வர்க்கமில்லை.எந்த மக்களின் பிரதிநிதிகளில்லை என்ற வாதத்தினுடாக முதலாளித்துவ ஜனநாயகத்தை கொடுத்தால் மட்டுமே வர்க்கமுண்டு என்று கூறுகிறீர்கள்.அப்படியாயின் முதலாளித்துவ ஜனநாயகத்தை கொடுக்காத ஸ்ரீலங்கா அரசு, இந்தி அரசு... போன்ற 3-ம் உலக நாடுகளின் எல்லாவல்லரசுக்களும் வர்க்கதன்மையற்றவையா? அப்படிதான் தங்கள் கருத்து எனின் அப்பட்டமான திரிபு தான். அந்த நாட்டு அரசுக்களின் வர்க்கத்தன்மை தொடர்பான விடயம் பிரிதோர் விவாதத்தை நோக்கியது.
அனைத்து வர்கங்களினதும் சில புலிகளின் நலன்களை அடையும் வழிகளுடன் பிணைந்துள்ளது என்ற தங்கள் கருத்தில் புலிகளின் நலங்கள் என எதை குறிக்கின்றீர்கள். தங்கள் கட்டுரையில் எதிலும் புலிகளின் நலன்கள் எதையும் என எதையும் சுட்டிக்காட்டவில்லை.ஏன்? குறித்த புலிகளின் நலன்கள் என அமையப்போகும் விடயங்கள் அனைத்தும் ஒரு குழுவை மையமாக வைத்தே. அக்குழு யர்ர்.?; இங்கு அக்குழு என்பது மொத்த சனத்தொகையில் மிக குறைந்தோரால் பிரதிநிதித்துவம் செய்வதே. அவர்களின் நோக்கு சொத்துக்களை சேர்ப்பது, தமது வாழ்வை பாதுகாப்பதுமே. இவர்கள் அதற்க்காக மற்றவர்களை அடக்கி ஒடுக்கி,சுரண்டி வாழ்வார்கள். இதனால் எழும் போராட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள ஆயுதங்களுக்காகவும், நிதி தேவைக்காகவும் ஏகாதிபத்தியத்தை சார்ந்திருப்பார்கள். தமது வாழ்வை மையப்படுத்தி ஏகாதிபத்தியத்திற்கு சந்தையை ஏற்படுத்தவும் பக்கத்தில் உள்ள நாடுகளை தமது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க ஏகாதிபத்தியத்துடன் சாதகமாக செயற்படவும், இன்னெரு ஏகாதிபத்தியத்தை தனக்கு சாதகமான ஏகாதிபத்தியம் ஒடுக்க பயன்படும்வகையில், ஒரு புரட்சிகர சக்தி வளர்ந்து விடாமல் இருக்கவும் எப்போழுதும் இக்குழு செயற்படும். இத்தன்மையை இக்கட்டுரையின் பிரிதோரிடத்தில் ஆராய முற்படுகிறோம். புலிகளின் நலன்கள் இதுவே . இத்தன்மை தரகு முதாலிளித்துவத்தின் மிகச்சிறந்த குணம்சமாகும். இந்த வகையில் ஸ்ரீலங்கா அரசை(பிரோமாதாசவை) சுற்றியும் ஒரு குழுவே இன்று(புலிகள் போல்) செயற்படுகிறது.
புலிகள் தமது தனித்துவத்தை அங்கீரிக்கச்சொல்வது 3-ம் உலக நாட்டின் முதலாளித்துவத்தின் போர்குணம் அல்ல. அது புலிகள் என்ற அமைப்பின் போர்க்குணத்தையும் ஒரு தேசியத்தின் போர்குணத்தையும் போட்டுக்குழப்பிக்கொள்கின்றார்கள் என எழுதும் மனிதம் குழப்பிக்கொள்கின்றார்கள் என்ற வாதத்தின் ஒரு தேசியத்தின் போhக்;குணம் என்பது சமரத்தை நாடாது என வாதடுகின்றார்கள். அதிலிருந்து கொண்டு புலிகள் சமரசத்தை (தங்களை அங்கீகரிப்பதனுடாகவே)நாடுவதால்,புலிகள் போர்குணம்(வர்க்கமற்ற புலிகளை) என குறிப்பிடுகின்றனர். ஒரு தேசியத்தின் போர்குணம்சம்கூட சமரசத்தை நாடும், இதில் யார் தலைமை தாங்குகின்றார்கள் என்பதை பொறுத்தே தங்கியுள்ளது. மனிதம் சஞ்சிகையின் வர்க்கமற்ற உலகு பற்றிய கனவுகளில் இருந்து முடிவுக்கு வருகிறார்கள். முதாலாளித்துவ தேசியத்தின் போர்க்குணம் அல்ல சமரசத்தை நாடுவது என சொல்ல வருவது முதாலாளித்துவ வர்க்க ஊசலற்ற ஒருபோர்க்குணமான பிரிவு எனச்சொல்லுவதாகும், தாங்கள்(முதலாளிததுவ சக்திகள்) ஒரு புரட்சியை சமரசமின்றி கொண்டு செல்ல முடியும் என வாதாடுவதற்கே, இவ்விவாதத்தில்,தூண்டில் முதலாளித்துவத்தின் சமரசத்தில் பக்கத்தில் புலிகளின் கோரிக்கை அமைவாக இருந்ததாக வாதாட முற்படுவதில் நாம் முரன்படுகிறோம்.
இது தொடர்பாக விவாதத்தை தேசிய சக்தி பற்றி தூண்டில் மீதான விமர்சனத்துடன் விவாதிக்கிறோம். தொடர்ச்சியாக மனிதம் சஞ்சிகை விவாதிப்பதை பார்ப்போம். புலிகள் தமது எந்த இலக்குகளையும் அடையாது என்றும் இராணுவமுறையையே நம்பியிருக்கும் ஒரு அமைப்பாகும் இக்கருத்து உண்மைக்கு மாறானது. புலகள் இராணுவ முறையை கையாளுகின்றனர்.அதேநேரம் அரசியல் ரீதியில் அதை அடைய முயல்கின்றனர். இது தொடர்பாக பல உதாரணங்களைப் பார்க்க முடியும். இந்தியா,இலங்கை அரசுக்களுடன் யான பேச்சுவாத்தை, தனிநபர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை, பத்திரிகைகளில் விடும் அறிக்கைகள்,வெளிநாட்டில் செய்யும் பிரச்சாரம்.... இப்படிபல, இவை அனைத்தும் இராணுவமுறைக்கு அப்பால் அரசியல் ரீதியில் அணுகப்பட்டவை. இன்னுமொரு பக்கத்தில் இராணுவ வன்முறையை கையாளும். அதாவது அரசியலற்ற குழுக்கள் என மனிதம் கூறுவது போல் பார்ப்போமாயின்: இலங்கை இந்திய அரசுகளும் அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவ ரீதியில் கையாளுகின்றனர். இங்கு தேர்தல் வெறும் மோசடியே. இராணுவ ஆட்சி நடக்கும் 3-ம் உலக நாடுகளின் அரசுகளும் அப்படியே. அப்படியாயின் இவ்வரசுகளுக்கு அரசியல் இல்லையா? மனிதத்தின் இயங்கியல் போக்கற்ற ஆய்வின் வெளிப்பாடாக எழும், இவ்விவாதம் தாம் நினைப்பதை திணிப்பதற்க்காக கையாளப்படுகின்றது.
அப்படியாயின் இவர்களின் அரசியல் இலக்கு என்ன? என்ற மனிதத்தின் கேள்விக்கு அவர் பின் எழுதியுள்ளதை பதிலாக வைக்கிறோம். ஒரு குறிப்பிட்டது நலன்களை அடையும் திசையில் நகர்வதை காணமுடியும். அவர்களது சிறந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் அந்த இலக்கு யாதெனில் அந்த அமைப்பின் சொந்த நலன்களை அடையும் இலக்கேயாகும். அவர்களது நடவடிக்கையிலுருந்து இரு விடயங்கள் திட்டவட்டமாகத் தெரிகின்றன. தமிழ் மக்களை அடக்கியாளும் உருமையை அவர்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்ளது இராணுவக்கட்டமைப்பு தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். பிறிதோரிடத்தில் புலிகள் எந்த ஏகாதிபத்தியத்தினதோ அன்றி தரகு முதலாளிகளினதோ பிரதிநிதிகள் அல்ல. இதன் அர்த்தம் ஏகாதிபத்திய, முதலாளித்துவ எதிர்ப்பு போராளிகள் புலிகள் என்பதல்ல. புலிகள் ஏகாதிபத்தியத்திடமிருந்து உதவிகளை பெறுவார்கள். அவர்களின் ; நலன்களுக்கு எதிராகப்போகாமல் கண்டும் காணாதிருப்பார்கள். அவர்களது போராட்டத்தின் இறுதி விளைவு ஏகாதிபத்தியதிடம் நாட்டை அடகு வைப்பதாக கூட இருக்க முடியும். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளல்ல என்ற விவாதம் மனிதம் தமது கருத்துக்கு முரணாகவே வாதாடுகிறார்கள். இவ்விவாதத்தில் எங்கேயாவது இயங்கியலுடன் அணுகியுள்ளனர்களா எனின் இல்லையென்றே அடித்துக் கூறமுடியும். குறிப்பிட்ட திசைநோக்கி என்பது ஒரு அரசியல், அதற்கேன ஒருஇலக்குள்ளது. அதை பின் சுட்டிக்காட்டும் போது அவர்களின் சொந்த நலன்களை அடையவே. செந்த நலன்கள் என்பது எவை? புலிகள் தம்மை சுற்றியுள்ளவர்களின் சொத்துக்களையும், வசதியான வாழ்க்கையையும்..... காப்பாற்றவே போராடுவதாக இவர்கள் சொல்கிறனர். நாம் இக் கருத்துடன் உடன்படுகின்றோம். அதே நேரம் இவ்வுடன்பாட்டில் சுட்டிக்காட்ட விரும்புவது, இவ்வகையான தன்மை அடிப்படையில் சுரண்டவே. இத்தன்மை ஒரு குறித்த வர்கத்துக்குரிய சிறப்பம்சமாகும். ஒரு முதலாளியை பார்ப்போமாயின்(நிலப்பிரபு தரகு முதலாளி)தொழிளார்களை அடக்கியெடுக்கி தேவையெற்படின் கொன்றுதானும் தமக்கு சார்ந்தோர்காக திட்டமிட் ஒழுங்கமைப்பில் (இராணுவரீதியில்) செயற்படும் பண்பை, புலிகளுடன் ஒப்பிட்டு பார்போமாயின் புலிகளுக்கு அரசியல உண்டு எனப் பார்க்க்லாம். மனிதம் கூறுகிறார்கள்: தமிழ்மக்களை அடக்கியாளும் உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இராணுகட்டமைப்பை தொடர்ச்சியாக போணுவார்கள் என்ற வாதத்தில் இரு விடயமாக இதை பிரித்து பார்க்க முடியாது. அடக்கியாளுதெனில் இராணுமின்;றி சாத்தியமில்லை. இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றானது. தமிழ்மக்களை அடக்கியாளும் உரிமை என்ற விவாதத்தில் ஏன் தமிழ்மக்களை அடக்கியாள வேண்டும்? புலிகளுக்கு என்ன லாபம்? புலிகள் தாமும் தாம்சார்ந்தோரின் வாழ்வை பாதுகாக்கவே மக்களை அடக்கியாளுகின்றனர். தாமும் தாம் சாந்தோரின் வாழ்வு என்பது பொருளாதாரத்தை வசதியான வாழ்கையை..... இது சுரண்டலை நடத்தும் எல்லாப் பிரிவினருக்கும் பொதுவானது. இது புலிகள் என்ற அமைப்பை பிரதிநிதிபடுத்தும், தரகு முதலாளித்துவத்தின் செயற்பாட்டால் ஏற்பட்ட விழைவே. புலிகளின் சிறந்த இராணுவ நடவடிக்கை எனப் பாராட்டகொடுக்கும் மனிதம் இராணுவம் தொடர்பாக யங்கியலுடன் ஆராய்ந்து அந்தப் பாராட்டைக் கொடுக்கவில்லை. புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் எம் தேசவிடுதலைப் போரட்டத்தில் எப்போதும் சிறப்பாக இருந்ததில்லை. எதிர்பாராத நேரத்திலும்;. எதிர்பாராத வகையிலும் திட்டமிடாத வகையிலும், குட்டிபூர்சுவா இயக்கமாக ஆரம்பத்திலிருந்தபோது செய்த நடவடிக்கைளாலும் அதில் ஏர்பட்ட அனுபவரீதியான யுத்தத்தை விரிவாக்கி இன்று ஒரு ஏகாதிபத்திய வழிகாட்டலில், ஏகாதிபத்தியத்தின் நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில் யுத்தம் விரிவடைந்துள்ளது. இவர்களின் படுமோசமான யுத்தத் தோல்விகளை ஒரு சில நடவடிக்கைகளை கொண்டே பார்க்கலாம். யானையிறவு தாக்குதல்,யாழ்கோட்டை தாக்குதல் முல்லைதீவு தாக்குதல் .....இப்படி பல.
புலிகள் எந்த ஏகாதிபத்தியத்தினதோ அன்றி,தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளோ அல்ல. அன்றி எனச்சொல்ல வருவதன் ஊடாக ஒருவேறுபாடான விடயமாகப் பார்கின்றனர். இக் கருத்தை முதலில் வரையறுதது மாவோ. இவர்களின் எங்கே மாவோவின் இக்கருத்தை விமர்சித்து இருவேறுபாடானது எனக்காட்டியுள்னர். ஏகாதிபத்தியத்தை சார்ந்தோர் தரகு முதலாளிகளே. மேற்க்குறிபிட்ட மனிதத்தின் வாதத்தின் தொடர்ச்சியாக இதன் அர்த்தம் ஏகாதிபத்திய தரகுமுதலாளித்துவ எதர்ப்பு போராளிகள் புலிகள் யென்றுயல்ல. எவ்வளவு முட்டாள்தனமாக மனிதம் விவாதிக்க முற்படுகின்றனர். இவர்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் அல்ல. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட மாட்டார்கள். இலங்கையில் ஏகாதிபத்தியம் தலையிடவில்லையா? தனது சுரண்டலை நடத்தவில்லையா? அப்படிதான் மனிதம் சொல்வார்களானால் அது பிரிதொரு விவாதம்.
புலிகள் சுரண்டலை (மனிதம் கூறும்போது தனது குழு நலன் சார்ந்து என்று சொல்லுகிறார்கள்) நடத்துகிளது. புலிகளும், ஏகாதிபத்தியமும் சுரண்டலை நடத்தும்போது இருவருக்குமிடையில் சுரண்டல் தொடர்பாக எழும் முரண்பாட்டை இருவிதமாக மட்டுமே தீர்க்கமுடியும்.
(1)ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து இணைந்து சுரண்டலை நடத்துவது. (இன்று இந்தியா, இலங்கை..... போன்ற மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் செய்வது போல்) ;
(2)அப்படி சுரண்டலில் எழும் போட்டி மோதலாக (மனிதம் குறிப்பிடுவதுபோல் புலிகளின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டால்) வெடிக்கும். இதிலிருந்து இந்தியா இலங்கையுடன் புலிகள் மோதலைப்பார்க்கலாம்.
ஏகாதிபத்தியத்துடன் மோதல் ஏற்படாமல் இருக்கும் வரை அங்கு ஏகாதிபத்திய சுரண்டலை அனுமதிப்பது என்பது புலிகள் தரகு முதலாளித்துவ (ஏகாதிபத்திய கைக்கூலிகள்) பிரதிநிதிகளாகப் பார்க்கலாம். மோதல் ஏற்பட்டால் பிரிதொரு ஏகாதிபத்தியம் சார்ந்து நிற்க்கவும் அல்லது மீண்டும் ஏகாதிபத்தியத்துடன் ஜக்கியப்டவும் முடியும்.
மனிதம் ஏகாதிபத்தியம் பற்றிய கற்பனாவாதப் பார்வையைப் பார்ப்போம். புலிகள் ஏகாதிபத்தியத்திடம் இருந்து உதவியை பெறுவார்கள். அவர்கள் நலன்களுக்கு எதிராக போகாமல் கண்டும் காணாமல் இருப்பார்கள். அவர்களது போராட்டத்தின் இறுதி விளைவு ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடைவு வைப்பதாககூட இருக்க முடியும். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் அல்ல. ஒன்றுக்கு பின் ஒன்றாக கருத்துக்களை உழறிக்கொட்டப்பட்டுள்ளது.
ஏகாதிபத்தியத்திடமிருந்து உதவியைப்பெறுவார்கள். அவர்களின் நலன்களுக்கு எதிராகப்போகாமல் கண்டும் காணாமல் இருப்பார்கள். போராட்டத்தின் இறுதில் ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடகுவைப்பார்களெனின் இவர்கள் யார்? ஏகாதிபத்தியத்திடம் உன்ன உறவு என்ன? ஏகாதிபத்தியம் உதவி கொடுக்க என்ன காரனம்? ஏன் நாட்டை புலிகள் ஏகாதிபத்தியத்திடம் அடகு வைக்கிறார்கள்? மேலுள்ள காரணத்தால் இருந்தே மனிதம் ஒத்துக்கொள்கிறார்கள் தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பானபிரதிநிதியாக புலிகள் இன்று உள்ளதாக பின் ஆனால் போட்டு எழுதுகின்றனர். ஏகாதிபத்தியத்தின்; பிரதிநிதிகள் அல்ல மனிதம் முன் சொன்னதையே மறுக்கின்றனர். மனிதம் முன் சொன்னது போல்(மற்றவர்களையும் குழப்பி)என்பது மனிதத்தையே குழப்பி, அவர்களாகவே உளறததொடங்கியதை பார்க்க முடிகிறது.(தாமும்குழம்பி)சமர்-தூண்டில் உங்களை குழப்பி உளற வைத்ததற்க்கு, மனிதத்தின் தெளிவான முகத்தை அம்பலப்பட வைத்ததற்க்கும் மனிதம் வாசகர்கள் நன்றி கூற வேண்டும். குறிப்பிட்ட நலன்களை அடையும் திசையில் நகர்வை காணமுடியும் என வாதிடும் மனிதம் பிரிதொரிடத்தில் முன்னுக்கு பின் முரணாக தான் கூறியவற்றிற்கு முரணான நடவடிக்கையில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது.; இது மத்தியதர வர்க்கத்தின் அல்லது முதலாளித்துவ வர்கத்தின் ஊசலாட்டப் பகுதி எனக்கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட நலன்களை அடையும் எனக்குறிபிட்டு, முன்னுக்குபின் முரணானது எனசொல்வதில், புலிகளின் வர்க்க மதிபீடுபற்றி மனிதத்தின் பார்வைக்குறைபாடுதான் இதை சொல்லவைத்துள்ளது. முன்னுக்குப்பின் முரணாக கருத்து வைப்பது சுரண்டலை நடத்தும் அனைத்துபிரிவினருக்கும் உள்ள சிறப்பான அம்சமாகும்.
ஒருபலம் வாய்ந்த இராணுவம் புலிகளிடம் உள்ளமையால் இந்தியா,இலங்கை இராணுவங்கள் தோற்கடிக்க முடிவில்லை என்ற வாதம் இராணுவம் என்பது நிதந்திரமாகவும் அழிவுகள் இன்றி இருப்பதாவும், இயங்கியலுக்கு முரணாக மனிதம் விவாதிக்கின்றனர். இராணுவத்தின் இருப்பு எப்பொழுது மக்களின் ஆதரவுடன் மட்டுமே சாத்தியமாகும். ஒரு யுத்தத்தை நடத்தும் குறிப்பான இன்றைய நிலையில், இது மக்களின் நலனுடன் கூடுதலாக இனைக்கப்படுகிறது. இன்று தமிழ்மக்களின் கோரிக்கைகளை புலிகள் தம் முன்வைத்திருப்பதே, புலிகள் தொடர்ந்து நிலைத்திருக்க முடிகின்றது. குறித்த இப்போராட்த்தை புலிகள் ஏகாதிபத்தியம் சார்பாக (மனிதம் முன் சொன்ன அடிப்படையில்) நின்று மக்கள் மீது வன்முறையை பாவித்தபடி போராடுகின்றனர்.
எந்த ஏகாதிபத்தியமும் புலிகளுடன் முரண்பட்டால் அதாவது புலிகளின் நலன்களுக்கு எதிராக செயல்ப்பட்டால், எந்த ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராகவும் இராணுவ நடவடிக்கையில் இறங்க புலிகள் தயங்க மாட்டார்கள். இதை புரிந்துகொள்வதற்க்கு சதாம், நோரிக்கோ போன்றோர்கள் அமெரிக்காவின் அடிவருடிகளாக இருந்த பொழுது தமது சொந்த நலன்களுடன் அமெரிக்கா முரண்பட்டபொழுது யுத்தம் புரிய தயாரானதை கவனத்தில் எடுக்க வேண்டும் என்றவாதத்தில் மனிதம் சிறப்பாக திரிப்பை முன்வைக்கின்றனர். புலிகளுடன் சாதாம், நோரிக்கோ... போன்றோரை ஒப்புட்டு யுத்தம் புரிய தயாரனதாக கூறும் இவர்கள், சொந்த நலன்க்களுக்காக போராடமுற்பட்டதாக கூறுவதன் ஊடாக, சொந்த நலன்கள் (என்பது மனிதத்தின் பார்வையில் வர்க்கமற்றதன்மை) என முண்டும் வாதாடுகிறனர். அப்படியாயின் மூன்றாம் உலக அரசுக்கள் எல்லாம் சதாம்,நோரிக்கோ...போன்றவையே. அப்படியாயின் அவ் அரசுகளுக்கு வர்க்க அடிப்படையற்ற குழுக்களே. இது மனிதத்தின் கருத்து.இக்கருத்து மனிதத்தின் திரிபை அம்பலபடுத்தவருகிறது. மனிதம் உளரிகொட்டியதில் வெளிபட்டுவிட்ட இவ்விடயம், மனிதம் இதுதொடர்பாக என்ன கருத்தை கூறுகிறார்கள் எனபார்த்தே, மூன்றாம் உலக அரசுகளுக்கு வர்க்கம் உண்டு என வாதிக்கலாம்.
சதாம்,நோரிக்கோ..... போன்றார் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறப்பான பிரதிநிதிகளாக அவ்வவ் நாடுகளில் செயல்பட்டனர். இவர்களின் வர்க்கப் பாத்திரம் தரகுமுதலாளித்துவமே. இவர்களுக்கும் அமெரிக்காகும் இடையில் உள்ள மோதல் யென்பது சுரண்டல் தொடர்பாக எழுந்தவைதான். அமெரிக்காவுக்கு சென்று கொண்டு இருந்த சுரண்டலை கண்டு,ஆத்திரமுற்ற இவர்கள் சுரண்டலை முழுமையாக பெற மக்களிடமிருந்து அமெரிக்க எதிர்புணர்வை பயன்படுத்த முயன்றனர். இவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் இவர்கள் சுரண்டலை நடத்தியதும், மேலும் சுரண்டலை தான் முழுமையாக பெறும் வகையில் யுத்தத்தை அதற்கிசைவாக நடத்தியதும், ஏகாதிபத்தியம் பற்றிய ஊசலாட்டமுமே. இதுவே இவர்களின் எழுச்சியும் தோல்வியுமாகும். இது போன்றே புலிகளும் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்ததும், இந்தியாவும் அது சார்ந்த ஏகாதிபத்தியங்கள் புலிகளை அழிக்க முற்பட்டதும், மேற்கத்தைய தரகாக இருந்த புலிகளின் ஊசலாட்டப்போக்கும், இந்தியாவுடன் சமரசத்தை நாட முற்பட்டதும்: இந்தியா புலிகள் தமன்குள் கொண்டிருந்த நம்பிக்கையீனமும் ஒன்றையென்று மோதும் வகையில் நகர்த்துவதில் மேற்கத்தைய ஏகாதிபத்தியங்கள் வெற்றி பெற்றது. இதன் வெளிப்பாடாகவே இலங்கை, புலிகள் இடையேயான பேச்சுவார்த்தையும், இரண்டும் ஒன்றாக இணைந்து இந்தியாவை வெளியேற்ற முயன்றது.
சதாம், நோரிக்கோ.... ஆகீயோருக்கு இருந்த வாய்புக்களை விட புலிகளுக்கு நீண்டகால யுத்தத்துக்கு சாதகமான அம்சங்கள் அதிகமாகவே உள்ளது. அவர்கள் நகர்புற கெரில்லா வடிவத்தில் பல படிப்பினைகளைப்பெற்ற, சயனைற்றை கழுத்தில் கட்டிய ஊழியர்கள் இங்கு நகர்ப்புற கெரில்லாவாக இருந்தால் மட்டும் ஒரு யுத்தத்தை நடத்தி விடமுடியாது. நகர்புற கெரில்லா தொடர்ந்து இருக்க ஆதரவான மக்கள் சக்தி தேவை. அல்லது குழுநலன் சார்ந்தோரின் குறிப்பான ஆதரவு தேவை. குறிப்பான ஆதரவு என்பது: ஏகாதிபத்தியம் சார்ந்த தரகு முதலாளித்துவத்தின் ஆதரவே.இவையில்லாத எந்த சக்தியும் ஒரு அரசியல் சக்தியாhகவோ அது சார்ந்த இராணுவமாகவோ இயங்க முடியாது அழிந்து போகும்.
இவ்வெளிப்படையான தெளிவாகத்தெரியும் உண்மைகள் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதில் புலிகளைப்புரிந்து கொள்வதற்க்கு போதுமானவையே. என்ற மனிதத்தின் இறுதி பந்தி மேலுள்ள விவாதத்தில் ஒன்றுக்குப்பின் ஒன்றாக விவாதித்துள்ளதன் மூலம், புலிகள் பற்றி எந்த இலகுவான வந்தடையும் பார்வையை காட்டுகிறது. சமர் தூண்டில் ஆதாரமாக பல விடயங்களை வைத்து விவாதித்தன. அவைகளை ஒவ்வொன்றாக விமர்சனம் செய்யாது, தமது கருத்துக்கும் ஆதாரங்களை முன்வைக்காமல் சொன்னதுடன் மார்க்சியத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்கி,அது பற்றி விமர்சன ரீதியாக எதுவும் முன்வைக்காமல் மார்க்சியம் பிழை எனக்கூறியும் உள்ளனர். ஒருவிமர்சகர் தமது கருத்தை முன்வைக்கும் பொழுது தொடர்ச்சியாக விவாதிப்பதற்க்கு தயாராக இருக்கவேண்டும். விவாதத்தை நடத்த தயார்யின்மையை இருசந்தர்ப்பத்தில் சொல்லி,தமது கருத்தை திணித்துவிட முயலும் மனிதத்தின் போக்கு போராட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அடிப்படை திரிபை பரப்பிவரும் மனிதம் மற்றைய சஞ்சிகளை (தாமும் குழம்பி) குழப்பக்காரர்கள் எனச்சொல்லி தமது மேதாவித்தனத்துடன் திரிபுகளைத்திணிக்க முயல்வது மிக மோசமான நடவடிக்கையாகும். இது புலிகள் எப்படி மாற்றுக்கருத்தை கொண்டிருப்பவர்களை கொன்று போராட்டத்தில் தடையாகவிருக்கிறார்களோ அதே போன்று மாற்று சஞ்சிகைகளின் கருத்துக்களை விமர்சனத்திற்க்கு தயார்யின்றி ஒற்றைவரியில் பதிலளித்து திரிபை புகுத்த முயல்வது போராட்டத்திற்க்கு இன்னுமொரு தடையாகும். மனிதம் மார்க்சிய மூலவர்களின் கோட்பாடுகளில் பிழையிருக்கிறது என்ற வாதம்,மிகச்சிறப்பாக சீன கம்யுனிஸ்ட் கட்சி(டெங் கும்பல்) 1984-இல் கூறியதற்கு ஒத்ததே. மார்க்சின் சில கருத்துக்கள் இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவையல்ல. இப்போதைய நவினகாலத்தின் நிலைமைகள் பற்றி மார்க்சுக்கோ அல்லது ஏங்கல்ஸ்சுக்கோ அல்லது லெனினுக்கோ தெரியாது.(நன்றி இரசிய கரடியின் உண்மை முகம்)இக்கருத்தை சொல்லியே சீன கம்யுனிஸ்ட் கட்சி முதலாளித்துவத்தை மீட்டார்கள் அதே கருத்தை மனிதம் சொல்வதிலிருந்து, மனிதம் எதை செய்ய முயலுகின்றார்கள் என்பதை மனிதம் வாசகர்களே சிறப்பாக புரிந்து கொள்வார்கள்.
உயிர்ப்பு1..பற்றிய மனிதத்தின் விமர்சனம் தொடர்பான எமது விமர்சனம்
இயற்கையும் சமூகமும் தனிபட்ட மனிதமனத்திற்க்கு வெளியே இருந்து அவனது விருப்பு வெறுப்பை சாராது இயங்கிக்கொண்டிருப்பதாகும் என்ற கருத்து கட்டுரையில் கூறப்படுகிறது. ஆனால் அதன் பின் இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் நாம் தனிபட்ட நபர்களுக்கு அவர்களுக்கும் அவர்களது குணநலன்களுக்கும் வரலாற்றில் எந்தப்பாத்திரமும் கிடையாது என கூறவில்லை என்று உயிர்ப்பில் கூறப்படுகின்றது. இயற்கையுடனும் சமூகத்துடனும் மனிதன் கொண்டுள்ள அவனது விருப்பு வெறுப்புக்களை கொண்டுள்ள இயங்கியலை முதல் கருத்து நிராகரிக்க அவனது வரலாற்றுப் பாத்திரத்தை இரண்டாவது கருத்து அங்கிகரிக்க குழப்பமே மீதியாகின்றது . ஒரு ஓட்டமான வாசிப்பில் இரண்டாவது கருத்து அடிபட்டு போகின்றது. கட்டுரையில் இயற்கைக்கும் ;சமூகத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு என்பது விளங்கபடவில்லை என்று மனிதம் உயிற்ப்பு கூறியதை முன்னெடுத்து விமர்சிக்க முற்ப்பட்டனர். . இருந்தும் மனிதம் கூட குறிப்பிட்ட விளக்;கம் தரவில்லை என்ற விடயத்தை விளங்கப்படுத்தவில்லை. இது ஓருபுறமிருக்க உயிர்பின் கருத்து தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதை பார்க்க முடிகின்றது. மனிதம் சஞ்சிகை சமூகப்போக்கு தனிமனிதன் விரும்பியபடி இயங்குவதாக கூற முயலுகின்றனர். அது தான் ஓட்டமான வாசிப்பில் இரண்டாவது கருத்து அடிபட்டு போகின்றது என்ற வாதம் (இது எப்படி என புரியவில்லை?). சமூகத்துக்கும் மனிதர்க்கும் இடையிலான உறவில் தனிமனிதன் அல்லது குணநலன்கள் சமூகத்தின் மீது ஆற்றும்பங்கு, இவற்றிக்கிடையிலான உறவு பற்றியும் கூறவருகின்றன. இதைஉயிர்ப்பு சஞ்சிகை விரிவாகவும் ஆழமாகவும் பதில்ளித்துத்ள்ளனர். நாம் இதைமேலும் விளக்குகைகயில் ஒரு தனிமனிதன் விரும்பும் அனைத்தையும் சமூகம் செயற்படுத்தாது. ஒருவன்விரும்பலாம் கம்யுனிஸ் சமூகத்தை ஆனால் சமூகம் அதை ஏற்க்கவேண்டுமென்றோ சமூகம் அதைஇயக்கி கொண்டுயிருப்பதாகவோ ;அர்தமல்ல. சமூகம் அதை விரும்பின் மாத்திரமே சாத்தியம். புலிகளில் இணையும் ஒருவன் கொலைசெய்யவென இணைவதில்லை. அவன் விரும்புவது தேசவிடுதலை போராட்டத்தைதான். அவன் விரும்புவதற்க்கு மாறாக கொலைசெய்கிறான் எனின்: புலிகளின் அரசியல் போக்குக்கு மாற்றப்படுகிறான். யார் எதிர்கின்றானோ அவன் தனிமனிதனாக வெளியேற அல்லது கொல்லபடுகின்றான். இங்கு தான் தனிமனிதப்பாத்திரம் வெளிப்படுகின்றது. இது புலிகளின் போக்கையொற்றி இசைவாக நடப்பதில்லை. அதே போல் இக்கொலையை முன்னின்று நடத்துவதற்க்கூடாக தனிமனிதப்பாத்திரம் புலிகளின் போக்குடன் நிகழ்தப்படுகின்றது. இதற்க்கு சிறந்த உதாரணமாக பிரபாகரனைப்பாக்கலாம். எனவே சமூகக்போக்கு என்பது தனிமனித விருப்பு வெறுப்புக்கு அப்பால் பட்டது. ஒரு மனிதன் விரும்பும் பட்சத்தில் எல்லாம் மாறிவிடாது.
முன்னணிப்பாத்திரம் வகிக்கும் நபர்களுக்கூடாகவன்றி அவர்கள் எந்த சமூக சக்திகளை வர்க்கப்பிரதிநிதித்துவ படுத்துகின்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்| என குறிப்பிடப்படுகின்றது. இது மார்சியத்தின் சமூதாய ஆய்வுமுறையை மிகவும் எளிமையாக புரிந்து கொண்டதன் வெளிப்பாடே ஒரு சமூகசக்தியோ அன்றி வர்க்கங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தாமல் தமது குழுநலனை மையமாக வைத்து சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை தாமே கையிலெடுத்து அத்துடன் கவர்ச்சிவாதத்தையும் சேர்த்து பலகுழுக்கள் கும்பல்கள் மக்களை அடக்கியாள்கிறது. என்ற மனிதத்தின் வாதத்தில் உயிர்ப்பு குறிபிட்டு கூறிய சமூக சக்திகளை வர்க்கங்கள் பிரதிநிதித்துவபடுத்துவதாக சொன்னதை மனிதம் நிராகரிக்காமலேயே இதை இலகுபடுத்திய மார்க்சியம் எனச்சொல்லி, தமக்கு சாதகமாக எடுக்க முயன்ற மனிதம்,அதற்கு குழம்பி, சமூகசக்திகளையோ அன்றி வர்க்கங்களையோவோ பிரதிநிதிபடுத்தாத குழுக்களைப்பற்றி கூறியுள்னர். இது நான்குவரிக்கு முன்னர் கூறியதை திரித்துப்பிரட்ட முயல்வதை பார்க்க முடிகிறது. குழுவை மையமாகவைத்து கவர்ச்சியைக் காட்டி எனச்சொல்லும் இக்கருத்து தொடர்பாக முன்பே விமர்சித்துள்ளோம். மனிதத்தை கேட்கவிரும்புகிறோம், இன்று உலகில் குழுநலனுக்கு அப்பால் கவர்ச்சி காட்டாத அரசு ஒன்றைக்காட்ட முடியுமா? இதில் இன்று புரட்சிகர அமைப்பை விடுத்தே கூறுகிறோம். எல்லாம் ஒரு குறித்த வட்டத்துக்குள் செயல்படும் அரசுக்களே.
புலிகளை தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஊசலாட்டம் காட்டுபவர்களாக காட்டமுனைவது தவறு. என்று மனிதம் உயிர்ப்பு சஞ்சிகையை விமர்சிக்கின்றனர். அதேநேரம் இக்கருத்தை விரிவான ஆய்வில்லாமல் எடுத்ததாக சொல்லவரும் மனிதம் தன் விரிவான ஆய்வில் புலிகளை தேசவிடுதலைப் போராட்டத்தில் ஊசலாட்டம் அற்றவர்கள் எனச்சொல்லுகின்றனர்.புலிகளின் ஊசலாட்டம் தொடர்பாக சமர் தூண்டில்,உயிர்ப்பில் பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் ஊசலாட்டம் தொடர்பாக மனிதம் வாசகர் அனுபவத்திலும், சம்பவங்கனூடாக அறிவார்கள்.
பொருளாதார நிலைக்குப்பொருத்தமான சமூக உணர்வாக தேசிய இனங்கள் ஒன்று கலப்பது என்னும் நிகழ்வு தோன்றுகின்றது என்ற உயிர்ப்பின் கருத்தையொட்டி மனிதம் தேசிய இனங்கள் ஒன்றுகலக்கும் நிகழ்வு என்ற பிரச்சனையில் பொருளாதாரநிலையின் பங்கு என்ன? என்பது பற்றி மேற்படி கருத்து ஏற்றுக்கொள்ளகூடியதில்லை. ஏனெனில் இது பொருளாதர நிலைக்கு மிகவும் கூடியயழுத்தம் கொடுக்கிறது. தேசிய இனங்கள் ஒன்று கலப்பது என்பது, அதற்க்கு தேவையான அடிப்படையான பொருளாதார நிலையை கோரும்மென்பது புரிந்து கொள்ளக்கூடியதே. மாறாக தேசிய இனம் ஒன்று கலப்பது என்பது ஒரு கலாசாரப்புரட்சி சம்பந்தபட்ட பிரச்சனை என்ற மனிதத்தின் வாதத்தில் ஒரு பக்கம் மட்டுமே உண்மை. ஒரு கலாச்சாரப்புரட்சி சோசலிச சமூதாயத்தில் மட்டுமே சாத்தியமானது அல்ல. முதலாளித்துவ கலாச்சாரப்புரட்சியும் நிகழுகின்றன. உயிர்ப்பின் விவாதம் முதலாளித்துவ தோற்றத்தில், முதலாளித்துவ முதிர்சசியில் தேசிய இனம் ஒன்றுகலப்பது பற்றியே. முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து ஒருகலாச்சாரபுரட்சி நிலப்பிரபுத்துவத்திற்க்கு எதிராக முதலாளித்துவ நாடுகளில் நடத்தபட்டது. இது தேசிய இனங்களை ஒன்றிணைக்கும்; வகையில் தவிர்க்கமுடியாது மையப்படுத்தபட்;;;;டது. இது தொடர்பாக சமர்-4 இல் பிரான்சில் இருந்த பல தேசிய இனம் இன்று இல்லாமல் போய்,ஒரு மொழி ஆதிக்கத்துக்கு வந்தது தொடர்பான ஒரு கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளது. இங்கு அம்மொழிகள் அழிய அடக்கு முறை மற்றும் பல வழிகளுக்கூடாக இது நடத்தப்படுகிறது. ஆனால்இங்கு பெரிய எதிர்ப்பு ஏற்படாமலிருக்க முக்கிய காரணமாயிருந்தது பொருளாதர நிலையே. இந்நிலை மூன்றாம் உலக நாடுகளில் தோன்றாமைக்கு முக்கிய காரணம் அங்கு ஒரு முதலாளித்துவ அரசு இன்மையும், பொருளாதரநிலையின் பலமின்மையே. தேசிய இனங்கள் ஒன்றுகலப்பது பொருளாதாரவாதத்தின் அடிப்படையிலேயே. இதற்க்கு மாறாக பொருளாதார இருப்பு இல்லாமல், ஒருபோதும் ஒரு கலாச்சாரப்புரட்சியில் மட்டும் தேசிய இனம் ஒன்று கலக்காது. கலாச்சாரப்புரட்சி பொருளாதார வாழ்வுள்ள இடத்தில் ஒரு ஊக்குவிக்கும் பண்பையும் மாற்றத்தையுமே செய்கிறது.
முதாளித்துவத்தின் ஆரம்பகட்டத்தில் தேசிய இனங்கள் விழிப்பு அடைந்ததாகவும், முதலாளித்துவத்தின் முதிர்ந்தநிலையில் தேசிய இனங்கள் ஒன்றுகலப்பது பற்றியும் என்று உயிர்ப்பு கூறிய கருத்தை மனிதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல முதலாளித்துவத்தின் ஆரம்பகட்டத்தில் இல்லாத தேசிய இனங்கள் இன்றைய உலகில் விழிப்படைவதையும், முதலாளித்துவ முதிர்ச்சி, வளர்ச்சியடைந்த நிலையிருக்கும் நாடுகளில் தேசியயினங்கள் ஒன்றுகலக்க தயாராகயில்லாததையும் மேற்படிகருத்தானது விளக்கமாட்டாது என்ற மனிதத்தின் கருத்தில் முதலாளித்துவ நாடுகளையும், மூன்றாம் உலகநாடுகளையும் ஒன்றாக குழப்பி தேசிய இனப்பிரச்சனையை ஆராயமுற்படுகின்றனர். முதலாளித்துவத்தின் ஆரம்பகட்டத்தில் இல்லாத தேசிய இனங்கள் இன்றையவுலகில் விழிப்படைவதையும் என்ற வாதத்தில் ஒரு முதலாளித்துவ நாட்டில் புதிதாக ஒரு தேசிய இனம் உருவாகிறது. எந்த நாட்டில் நடந்தது? அடக்கப்பட்ட தேசிய இனங்கள் மூன்றாம் உலகநாடுகளில் ஆரம்பம் முதலே இருந்து வந்த தேசிய இனங்கள் இன்று போராடமுற்படுகின்றனர். இது மூன்றாம் உலநாடுகளுக்கு மிகப்பொருத்தமானது. ஏகாதிபத்தியத்தாலோ,முதலாளித்துவநாட்டிலோ போராட்டமாக தேசிய இனப்போராட்டம் முன்வர வேண்டுமாயின்,அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட வேண்டும். அத்துடன் அங்கு சரியான புரட்சிகர சக்தி இல்லாமல் இருக்க வேண்டும். மற்றும் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்திருக்கும் நாடுகளில் தேசிய இனங்கள் ஒன்றுகலக்காததை சுட்டிகாட்டும் மனிதம், நாடுகளின் அரசு பற்றிய மதிப்பீட்டை இழக்கின்றனர். இந்நாடுகள் தனிதனியான அரசுகளாகவிருப்பதையும் இவை ஒன்றான நாட்டுக்குள் இல்லாமலிருப்பதையும் பார்க்கதவறி, கலப்பு பற்றி கூறி, தீர்பபை புகுத்திவிட சம்பந்தமில்லாவிடத்தில் பொருத்தமுயலும் இப்போக்கு இயங்கியலுக்கு மாறானது.
பலமான முதலாளித்துவ வளர்ச்சி முற்போக்கான தேசியத்தையே தோற்றுவிக்கின்றது. பலவீனமான முதலாளித்துவ வளர்ச்சி பிற்போக்கான தேசியத்தை தோற்விக்கின்றது. என்ற உயிர்ப்பின் கருத்தை மறுக்கும் மனிதம் இது தவறான கருத்தாகும். முதலாளித்துவம் இல்லாத போது புரட்சியாளார்களால் சரியான முற்போக்கான தேசியத்தை உருவாக்க முடியும் என்ற இவ்விவாதம் உயிர்பின் முன்னைய கருத்தை மறுப்பது என்பது அடிப்படையில் என்னத்தை கூறுகின்றார்கள் எனப்புரியவில்லை? பலமான முதலாளித்துவ சக்திகள் இருப்பின், தனது நலனுக்காக தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவத்திக்கு எதிராக போராடமுற்படுவதனால் முற்போக்கு தன்மையையே பிரதிபலிப்பார்கள்.
பலவீனமாதாகவிருக்கும் போது சமரசத்தை தரகுமுதலாளிகளுடன் செய்துகொள்வது அல்லது பாட்டாளிவர்க்கத்துடன் இணைந்துகொள்வது நிகழும். மனிதம் கூறிய புரட்சியாளர்கள் சரியான முற்போக்குத்தேசியத்தை உருவாக்க முடியும் என்பதை உயிர்ப்பு சஞ்சிகையும் சுட்டிகாட்டியுள்ளது. அதை மனிதம் சஞ்சிகையின் பார்வைக்கு முன்வைக்கிறோம். தேசியமென்பதில் அந்த சமூகத்தில் பல்வேறு வர்க்கங்களின் நலன்களும் பிரதிபலிக்கச்செய்கின்றன. தேசியயெழுச்சியில் இணைந்து கொள்ளும் ஒவ்வொரு வர்க்கங்களும்; தத்தமது நலங்களை மனதில் கொண்டே செயற்படுகின்றன. எந்த வர்க்கம்(மனிதத்தின் பார்வையில் புரட்சியாளர்கள்) தேசிய இயக்கத்தில் தலைமை தாங்குகின்றது என்பதை பொறுத்து தேசிய இயக்கத்தில் முற்போக்குத்தன்மை அமைகிறது. இக்கருத்து மனிதம் கூறிய 22-ம் பக்கத்தில் அடுத்தபந்தியிலிருந்தது. இது மனிதத்துககு புரியாத கடுமையான மார்க்ஸியமாகவிருந்ததோ என சந்தேகமாகவுள்ளது.
உயிர்ப்பு தரகு முதலாளித்துவத்தின் தொழிற்படும் முறைபற்றி கூறப்பட்டதை மனிதம் சஞ்சிகை கூறுகின்றார்கள. கோட்பாட்டளவில் பார்த்தால் தரகு முதலாளிவர்க்கம் இப்படியே தொழில்படும். ஆனால் இலங்கையில் தரகுமுதலாளிவர்க்கம் ஒரு இயங்குசக்தியென்று நாம் பார்க்க முடியுமா? தான் திட்டமிட்டு ஏனையவற்றை முன்னெடுக்கும் ஒரு சக்தியாக இலங்கையில் தரகு முதலாளித்துவ வர்க்கம் பார்க்க முடியுமா? குறிப்பாக தமிழ் தரகு முதலாளித்துவ வர்க்கம் இதைவிட மோசமான நிலையிலேயேயுள்ளது. என்ற மனிதத்தின் விவாதம் முன்னைய விவாதத்தில் பதிலளிக்கப்பட்டாலும் மீண்டும் பாhப்போமாயின்: இலங்கையில் தரகு முதலாளித்துவ வர்க்கத்தையும் ஒரு இயங்குசக்தியாக பார்க்கமுடியுமா? என்ற கேள்வியிருந்து இலங்கையரசு உட்பட அனைத்தும் வர்க்கமற்ற தன்மையென கூறும் மனிதம் தனது திரிபை அப்பட்டமாக தோலுரித்து காட்டுகின்றனர். திட்டமிட்டு இலங்கையரசு (தரகு முதலாளிவர்க்கம்) செயற்படமுடிகின்றதா? இலங்கையில் ஆளும்வர்க்கம் தரகு முதலாளிகள் என்றுயிலலாமல் வெறும் குழுவாகவா செயற்படுகிறது? இக் குழு இலங்கையின் பொருளாதார அடிப்படையை முழுக்கமுழுக்க ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக மாற்றி அன்டிபிழைக்கின்றனர். இவர்கள் இயங்கு சக்தியாகவே இருக்கின்றனர். இவர்கள் இன்று பெரும் தோட்டங்களை கைமாற்றுவதும், அடிப்படைவிவசாய உற்பத்திகளை ஏகாதிபத்தியம் சார்ந்த பொருதாரத்தை நோக்கி மாற்றுவதும், சுதந்திரவர்த்தக வலயத்தை உருவாக்குவதும் இப்படிபல. இக் குழுவின் தன்மை தான் தரகு முதலாளித்துவம். இத்தன்மை தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான அம்சமும்கூட. கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளும் மனிதம் தரகுமுதலாளித்துவத்தின் செயற்பாட்டை நடைமுறையில் ஏற்க்கவில்லையென கூறவருகின்றனர். சொந்த நாட்டை விற்கும் இவ்வரசுக்கள் தரகு முதலாளிகள் அல்லவென வாதிடுவதுஏன்? இது இவர்களுக்கே வெளிச்சம். தமிழ் தரகுமுதலாளிவர்க்கம் இதைவிட மோசமான நிலையில் உள்ளது. இது உண்மைதான். சிங்கள தரகுமுதலாளிவர்க்கத்திற்கும் தமிழ்தரகு முதலாளிவர்ககத்துக்கும், இடையில் சுரண்டல் தொடாபான முரண்பாடே இன்று தேசியஇனப் போராட்த்தை,தமிழ்தரகு முதலாளிவர்க்கம் தனது கையில் எடுத்து தலைமை தாங்கிபோராடுகின்றது. ;
; ;
பணம்படைத்த வர்க்கங்களான முதலாளி, தரகுமுதலாளி போன்ற வர்க்கங்களுக்கு இன்று ஆயுதம் தாங்கிய மக்களை அடக்கியாளும் பாசிச குழுக்களுக்கிடையே உள்ள உறவு என்ன? என்பதே அக்கேள்வியாகும். இலங்கை போன்றவொரு நாட்டில் பாசிசக்குழுக்கள் மக்களை அடக்கியாள அதிகாரத்திற்கு போட்டிபோடுகின்றன. பழைய மரபுத்தனமான வர்க்கப்பார்வை எனக்கூறப்படுவதில் விடைகாணமுடியாது. அல்லது இது போன்ற குழுக்களில் வெறும் வர்க்கக்கருவியாக பார்க்கமுயல்வதுதவறு. மனிதத்தின் இவ்விவாதத்தில் பணம்படைத்த வர்க்கத்திற்கும், பாசிசகுழுக்களுக்கும் இடையே என்ன உறவு? இது பற்றி மௌனமாக கேள்வி கேட்பதில் விட்டுவிடுகிறார்கள். தரகுமுதலாளிவர்க்கத்திற்கும் இக்;குழுக்களுடையேயுள்ள இவ்வுறவு என்பதை தரகுமுதலாளித்துவத்தை பாதுகாப்பதே என நாம் கூறியதை மரபு தனமான வர்க்கப்பார்வையேன ஒற்றைவரிகளில் பதிலளிப்பதிலிருந்து எதையும் சொல்லாமல் விவாதிக்க கருத்தின்றி தனது திரிபுகளை திணிக்கமுயல்கின்றனர். மீண்டும் கூறு,கின்றோம்: இக்குழுக்கள், தரகுமுதலாளிகள் வேறுயென்பதில்ல. மனிதம் முடிந்தால் இயங்கியல் ஆய்வுகளுடன் மரபு வழியான வர்க்கப்பார்வையை நிராகரிக்கட்டும். அதேபோல் மரபுத்தனமான மார்க்சியத்தையும் நிராகரிக்ட்டும். பணம் படைத்தவர்களுக்கும் மனிதம் குறிப்பிடும் குழுவுக்கும் இடையேயான உறவைக் கூறட்டும். இவை மனிதம் சஞ்சிகைக்கு முடியாது. ஏனெனில் திரிபுகள் எப்பொழுதும் வெற்றிபெறமுடியாதவை.
எமது மக்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்தற்க்குரிய சரியான ஸ்தாபனவடிவமாக பாட்டாளி வர்க்க கட்சியென்ற ஸ்தாபனவடிவம்தான் சரியானதா? இக் கருத்து மனிதம் தன்னை இனம்காட்டுவதிலிருந்து மனிதத்தின் அரசியல் போக்கு முதலாளித்துவ போக்கே. பாட்டாளிகள் அல்லாத ஒரு பிரிஐ முற்போக்கான போராட்டத்தில் இறுதிவரை தலைமை தாங்கமுடியுமாயின் யார்? முதலாளிகளா? குட்டிபூர்சுவா வர்க்கமா? அல்லது யார்? இதேநேரம் பின் குறிப்பிடுகிறார்கள். தற்போது மூன்றம் உலகநாட்டுப்போராட்டங்கள் பல பாட்டாளிகள் என்போர் இல்லாமலேயே முற்போக்காக முன்னெடுப்பதை அவதானிக்கலாம். அப்படியாயின் எந்த நாட்டில்? தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். அவர்களின் தத்துவம் என்ன?முற்போக்ககா (இறுதிவரை) முன்னெடுக்கப்படுகிறது என வாய்கூசாமல் பச்சை பொய்கூறும் மனிதம்,எதையோ திணித்துவிடும் போக்கே தொடர்ந்து காணப்படுகிறது. மூன்றாம் உலகபோராட்டங்கள் பல பிற்போக்கான அனுபவங்கள் இருந்போதும் அதற்க்கான காரணம் பாட்டாளிகள் தலைமைதாங்கவில்லை என்பதல்ல. அப்படியாயின் எந்த வர்க்கம் தலைமை தாங்கியிருக்க வேண்டும். தொடர்ந்து கூறும் மனிதம் நடைமுறையில் அந்தபழைய தத்துவங்கள் இன்றைக்கு எந்த மூன்றாம் உலகநாட்டுக்கும் தீர்வல்ல என்பது எம்முன்ள்ள கேள்வி. பழையதத்துவம் இன்றையகாலத்திற்கு தவறானது எனின். எங்கே இயங்கியலுடன் விமர்சித்துள்ளீர்கள். சும்மா கிடைத்த சங்கு என்பதற்க்காக ஊதுவது ஏன? பிற்போக்கானவகையில் போராட்டம் சென்ற நிலையில் அங்கு பாட்டாளித்தலைமை இருக்காததை ஒப்புக்கொள்ளும் மனிதம், அது தீர்க்காது என வாதிடுவது எந்த ஆதாரத்தை வைத்து. இன்று மரபுத்தனமான வர்க்கப்பார்வை கைக்கொள்ளும் பிலிப்பபைள்ஸ், பெரு , எல்சல்வடோர், பர்மா,மலேசியா..... கம்யுனிஸ்ட் கட்சிகள் தேசவிடுதலைப் போராட்டத்தை பிற்போக்கான முன்னெடுக்கிறார்கள். பாட்டாளி வர்க்கம் தலைமைதாங்கின் இப்போராட்டம் பிற்போக்காகவா இருக்கும்?
மார்க்சியத்தின் தோற்றம் பற்றி உயிப்பின் கருத்தில் நாம் முரண்படுகிறோம். தூண்டின் கருத்துடன் உடன்படுகின்றோம். இது தொடர்புக உயிர்பின் விவாதத்தில் விவாதிக்க முற்படுகிறோம். பாட்டாளிவர்க்க சித்தாந்தம் என்ற ஒன்றை மட்டுமே மார்க்சியமாக குறுக்க முனைந்துள்ளதோ என்று என்னத்தோன்றுகின்றது. இக்கருத்தில் மார்க்சியம் என்பது உலகை பொருள்முதல்வாத நோக்கில் ஆய்வுக்பு உட்படுத்தியதே. அதை ஏற்றுக்கொள்ளும் சக்தியாக பாட்டாளி வர்க்கம் இருப்பதால் அதை முளுமையாக நடைமுறைககு இட்டுச்செல்லும் ஒரு சக்தியாக இருக்கிறது. இதற்க்கு அப்பால் கருத்து முதலவாத நோக்கில் உலகை ஆய்வு செய்யும் யாரும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்வதில்லை. மார்க்சியம் என்பது உலகை உள்ளபடி ஆய்வுககு உள்ளாக்கிறது. இதை நடைமுறையில் செய்வது பாட்டாளிவர்ககம் மட்டுமே. மனிதம் இந்த மார்க்சியத்தையே பழையவர்க்கபார்வைஎன கூறி நிராகரிக்கின்றனர். தேவையானதையும், தமக்கு சாதகமானதையும் எடுத்துகோள்ளும் மனிதம் நிரகரிப்பை விமர்சிக்க கருத்துபலமின்றி திணிக்கமுயல்கின்றனர்.
மார்க்சியமென்பது கிழக்கு ஜரோப்பாவின் வீழ்ச்சியின் பின்பு அதக் வாழ்வை கொண்டிருக்கிறது என்பதால் மனிதத்தின் விவாதம் முன்னையய கருத்துடன் ஒன்றுக்கொன்று முரண்படும் வகையில் திரித்துபுரட்டியுள்ளனர். மார்க்சிய வீழ்ச்சியை கூறியவர்கள் பின் வாழ்வைபற்றி கூறுகின்றனர். கிழக்கு |ஜரோப்பாவின் வீழ்ச்சியென்பது மார்கசியத்தின் அடிப்படையிலிந்து விலகிச்சென்றமையால் தான். கிழக்கு ஜரோப்பாவில் வாழுகின்றது எனின்: இன்று அது உண்மையானதாகவும்,சரியாகதாகவும்(மனிதம் கூறுவது போல்பழையமரபுத்தனமான மார்க்கியமாகவல்ல) இருப்பதால் தான் மனிதம் சொல்லுவது போல்: அதன் இயங்கியல் அணுகுமுறையே ஏனெனில் மார்க்சியத்தின் விஞ்ஞான பூர்வ அணுகுமுறையே இயங்கியல் இனம்காட்டுகின்றது. இதை கூறும் மனிதம் இதை மார்க்சியத்தின் மரபுதனமானது எனசொல்லி நிராகரிக்கின்றனர்.பாட்டாளிவர்க்க சித்தாந்தம் மட்டும் மார்க்சியம் எனகுறுக்க முனைந்தது எனச்சொல்லும் மனிதம், இன்று ஜரோப்பாவில் மார்க்சியம் உயிர்வாழ்வதை இனம் காட்டுவது பாட்டாளிவர்க்க கட்சிமட்டுமே. மனிதம் எதைசொல்லுகின்றார்கள் என்பதே மனிததிற்கு புரியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அதை கீழ் உறுதி செய்கிறார்கள் மார்க்;சினால்; கூறப்பட்ட பாட்டாளிவர்க்க சித்தாந்தம் என்பது இன்று கேள்விக்குள்ளாக்கபடுகின்றது எனின் ஜரோப்பாவில் உயிர்வாழும் மார்க்சியம்(இவை மார்க்சினால் உருவாக்கபபட்டது) தவறானதா? இவையெல்லாம் மனிதத்தின் திரிபுகளும் புரட்டல்களுமே.
இதே கட்டுரையில் 35-ம் பக்கத்தில் எந்தவெரு வர்க்கத்தின் நலனும் மறைந்திராமல் ஒருகுழுவின் நலன்களே மறைந்திருக்க முடியும். பாரிய மூலதனம் கொண்ட குழு தனது நலன்களையோ அரசியல் அரசியல் கோரிக்கைகளையோ முன்வைக்க முடியும். கடந்தகால நடைமுறையிருந்து புலிகள் எந்தவெரு வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவபடுத்த தயாராகவில்லை. தமது குழு நலன்களை வைத்தே அவர்கள் செயற்கிறார்கள் என்றவாதத்துக்கு முன்பே பலதடவை பதிலளித்துளளோம். தனது குழுநலன்கள் என்பது எதை? பாரிய மூலதனத்தை கொண்டகுழு தனது நலன் என்பது எதை? இங்கு சுரண்டல் நடத்தப்படவிலையா? சுரண்டும் தன்மை வர்க்கபார்வையில்லையா? எந்தவர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்க புலிகள் தயராகவில்லை என யார் கூறியது? என்ன ஆதாரம்? குழுநலன் என்பது என்ன? இவர்களுககும் தரகு முதலாளிகளுக்கும் என்ன உறவு. இதை மனிதத்திடம் கோருவதுடன் மனிதம் வாசகர்களுக்கு இதை விவாதிப்பதற்கு முன்வைக்கிறோம். அந்த சமூதாயத்தில் நிலவும் அமைப்புக்கள் எந்தவமைப்புக்களை குறிப்பிடுகின்றீர்கள்? அதன் தத்துவம் என்ன? அரசியல் இலக்கு என்ன?
மேலும் பலர் ஒரு பிரச்சனையில் நேரெதிராக இருமுரண்பாடுகளே இருக்கமுடியும் என கருதுகின்றார்கள் அது தவறு மாறாக ஒரு பிரச்சனையில் பலதரப்பட்ட முரண்பாடுகள் நிலவமுடியும் என்ற மனிதத்தின் இவ்விவாதம் அடிப்படையில் தவறானது. ஒரு பிரச்சனையில் எப்பொதும் எதிரும்புதிருமான இருகூறுகள் இருக்கின்றது. இதை மாவோ முரண்பாடுகள் பறறி... என்ற நூலில் தெறிவாக கூறுகின்றார். மாவோ கூறுகின்றார் இயக்கப்போக்கில் உள்ள முரண்பாடுகள் ஒவ்வொன்றிலும் எதிரும்புதிருமான இரு கூறுகள் உள்ளன. இவற்றை குறிப்பான இயல்பை வெளிப்படுத்தும் போக்கில் உட்சாரத்தை கண்டறிவது இயலவேயியலாது. நமது ஆய்வில் மிகக்கூடுதலான கவனம் இதில் செலுத்த வேண்டும். பெரும் நிகழ்ச்சிப்போக்குக்கள் எதை எடுத்துக்கொண்டாலும் அதன் வளர்ச்சிப்பாதையில் பலமுரண்பாடுகள் இருப்பதை காணலாம் இது தொடர்பாக லெனின் இயங்கியல் பிரச்சனை பற்றி என்ற கட்டுரையில் கணிதத்;திலும்:-கூட்டுதல்,கழித்தல்: நுண்ணென்னும்,முழுவெண்ணும் எந்திரவியலில்: வினையும், எதிர்வினையும்: இயற்பியலில் நேர்மின்னாற்றலும், எதிர் மின்னாற்றலும்: வேதியலில்: கருக்கலின் செயற்கையுமு.,பிரிவும் சமூகவிஞ்ஞானத்தில்:-வர்க்கப்போராட்டமும் ஆகும் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிகழ்ச்சிகள். ஒன்றின்றி மற்றது இருக்கமுடியாது. எனவே ஒரு பொருளில் எப்பொழுதும் எதிரும்புதிரும்மான முரண்பாடுகளின் தன்மையிருக்கும். ஒருபிரச்சனையில் பலதரப்பட்ட முரண்பாடுகள் மட்டும் இருக்கமுடியும் என்பது ஒவ்வொருவர்க்கதிற்க்னும் இடையேயான முரண்பாட்டை மனிதம் சுட்டிகாட்டினர். இதுவும் சரியானது. இவை ஒவ்வொரு வர்க்கத்துக்கிடையிலான முரண்பாடுகள் ஆகும் இவை நேர்ரெதிரான தன்மையில் செயற்படமுடியும். இதை ;மாவோ,லெனின் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்
மனிதம் நிராகரிப்பது ஒவ்வொரு பிரிவுக்குமிடையில் எழும் குறித்த முரண்பாடுகளின் நேரெதிர் தன்மையே. தொடர்ந்தும் உயிர்ப்பு கூறுவதை மனிதம் மக்களைப் பொறுத்தவரையில் சிங்களப்பேரினவாதத்துகும்,தேசியத்திக்டையிலான முரண்பாடு பிரதான வடிவம் பெறுவதனால்... என்று கட்டுரையில் குறிபபிடபடுகிறது. முரண்பாடுகள் பற்றி இவ்அணுகுமுறை தவறானது. சமுதாயத்தில் நிலவும் முரண்பாடுகள் ஒன்று பிரதான இடம் வகிக்கின்றது என்ற கருத்தானது ஏனைய முரண்பாடுகள் சமூதாய வளர்சசியில் செலுத்தும் பங்கை மறைமுகமாக மறுப்பதுடன், ஏனைய முரண்பாடுகள் பிரதான முரண்பாட்டின் அடிப்படையிலேயே நிலவுகின்றன என்ற கருத்து உருவாக்கபடுகின்றது என்ற மனித்தின் கருத்தில், உயிப்பு மிகத்தெளிவாக கூறுகின்றது. சிங்களப்பேரினவாதத்துக்கும், தமிழ் தேசியத்துக்மிடையிலான முரண்பாடு பிரதான வடிவம்பெறுவதனால்... என்று கூறுவதிலுள்ள பிரதானவடிவம் என்பதற்க்கூடாக அவர்கள் சமுதாயத்தில் பலமுண்பாடுகள் நிலவுவதை அங்கிகரித்துள்ளனர். ஆனால் நீங்களோ அப்படி உயிர்ப்பு கூறவில்லையென பின்வருமாறு கூறுகின்றீர்கள். எனைய முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சிக்கு செலுத்தும் பங்கை மறைமுகமாக மறுப்பதுடன் கட்டுரையை புரியாதவகையில் உயிர்ப்பு எழுதியதாகபடவில்லை. மிகத் தெளிவாக ஒரு முரண்பாட்டின் பிரதான அம்சத்தை சுட்டிகாட்டியுள்ளனர். அத்துடன் பலமுரண்பாடுகள் பிரதான முரண்பாடுடன் செயல்படும் என்பதை ஏற்றுள்ளனர். மனிதம் முரண்பாடுகள் பற்றிய இந்த அணுகுமுறை தவறானது என்று உயிர்பின் கருத்தை மறுத்து தொடங்கும் பொழுது அதில் இன்னுமொரு விடமும் தொங்கி நிற்கின்றது. அதாவது பிரதான முரண்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் நிலவமுடியம் என்பதே அத்துடன் ஏனைய முரண்பாடுகள் பிரதான முரண்பாடடின் அடிப்படையியே நிலவுகின்றன என்ற கருத்து உருவாக்கப்படுகின்றது. இவையிரண்டும் அடிப்டையில் தவறானது. இதை மாவோ சிக்கலான வள்ர்ச்சி போக்கில் பலமுரண்பாடுகளை காணலாம். இவற்றில் ஒன்று கட்டாயம் முதன்மை முரண்பாடாக காணலாம். இதன் வாழ்வும் வளர்ச்சியும் இருதரமுரண்பாடுகளின் வாழ்வையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றது. அல்லது அவைகளின் மீது செல்வாக்கு செலுத்துகின்ற முதன்மை முரண்பாடாகவேயுள்ளது. இதை மாவோ முரண்பாடுகள் என்ற நூலில் உதாரணத்தின் ஊடாக முதலாளிய சமுதாயத்தின் முரண்பாட்டில் உள்ள இருசக்திகள் பாட்டாளிவர்க்கமும் முதலாளிவர்க்கமும் ஆகும். இவை இங்கு முதன்மை முரண்பாட்டை உருவாக்கின்றன. இந்தமுதன்மை முரண்பாட்டால் நிர்ணியிக்கப்படுகின்றது அல்லது இதன் செல்வாக்குக்கு உட்படுகின்ற இதரமுரண்பாடுகள் எஞ்சியுள்ள நிலவுடமைவர்க்கத்திற்கும், முதலாளிவர்க்கத்துககும் இடையேயுள்ள முரண்பாடு பாடட்டாளிவர்க்கத்துக்கும், விவசாய சிறுமுதலாளிவர்க்கத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடு.... என மாவோ தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். மனிதம் இவையெல்லாம் தவறுயெனின்,முதலில் மாவோவின் முரண்பாட்டை விமர்சித்து புதிய தத்துவத்தை முன்வைக்க வேண்டும். இதற்க்கு அப்பால் இடையில் ஒரு வரிகளுக்கூடாக சொல்லுவது அவர்களின் கருத்துக்களுக்கே கருத்துப்பலம் இன்மையை காட்டுகின்றது.
மீண்டும் மனிதம் கூறுகிறது மேலநிமேல் லையில் இருக்கும் முரண்பாடானது ஏனைய மேலாதிக்கத்துக்காக போட்டி போடும் முரண்பாடுகளின் மேல் காத்திரமான பங்காற்ற முடியர்து. மனிதம் மேலும் தமிழ்மக்கள் மத்தியில் சிங்களபேரினவாதத்திற்கும், தமிழ்தேசியத்துக்கும் இடையிலான முரண்பாட்டை பிரதானமான முரண்பாடக காட்டமுனைவது தவறு என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இப்படி சுட்டிகாட்டியுள்ளனர். இதில் இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான ஜக்கியத்திற்கும் ஜக்கியமிpன்மைக்கும் இடையிலான முரண்பாடு எனக்குறிபிட்டதற்கு மாறாக மேற்கூறியது அமைந்ததுள்ளது. இந்த விவாதத்தை ஏன் முன்வைக்கிறார்கள் எனின் ஜக்கிய இலங்கை போராட்டமே இன்று எமது இலக்கு என வாதிடவே. ஜக்கிய இலங்கை எனின் மனிதம் வைத்த கருத்துக்கு தூண்டில் அளித்த பதிலுக்கு இன்றுவரை கருத்தியல் ரீதியில் விமர்சனத்தை முன்வைக்காமால் இன்று மீண்டும் மறைமுகமாக தமது கருத்தை திணிக்கமுயல்வது ஏன்? இது இயங்கியலுடனான விமர்சனமுறையல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
இனி மனிதம் கூறியமுதன்மை முரண்பாடாக போட்டியிடும் மூன்று முரண்பாடுகளையும் ஆராய்வோம்.
(1)இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான ஜக்கியத்துக்கும் ஜக்கியமின்மைக்கும் இடையிலான முரண்பாடு.
(2)இலங்கையில் நிலவும் பாசிசத்துக்கும் ஜனநாயகத்துக்குமிடையிலான முரண்பாடு.
(3)இலங்கை மக்கள் மேல் ஆதிக்கத்தை நிறுவமுனையும்,நிறுவியிருக்கும் ஏகாதிபத்தியத்துக்கிடையிலான முரண்பாடு.
இதில் மூன்றாம் முரண்பாடு முன்னைய மனிதத்தின் விவாதமான இலங்கையில் தரகுமுதலாளிவர்க்கம் ஒரு இயங்கு சக்தியென்று நாம் பார்க்கமுடியுமா? தான் திட்டமிட்டு ஏனையவற்றை முன்னெடுக்கும் ஒரு சக்தியாக இலங்கையில் தரகுமுதலாளித்துவத்தை பார்க்கமுடியுமா? என்ற கருத்துக்கும் முற்றிலும் மாறுபட்டது.ஏன் மனிதத்திற்கு இந்தகுழப்பம்? முன்சொன்னதற்கு மாறாக சிலஉண்மைகளை மீண்டும் சொல்லிவிடுகின்றார்கள். இனி மூன்று முரண்பாட்டையும் பார்போமாயின்: முதலாவதாக மனிதம் குறித்த முரண்பாடு இன்று பிராதான முண்பாடாக போராடுகின்றதா? நிச்சயமாகவில்லை. இனமுரண்பாடு தீவிரமடைய முன் ஜக்கியத்திற்கும், ஜக்கியமின்மைக்கும் இடையிலான முரண்பாடு தமிழ்மக்களுக்கும், சிங்கள போரினவாதத்திற்க்கு இருந்த முரண்பாடுகள் ஒன்றையொன்று மிஞ்சி மேல் நிலையை அடைய போட்டியிட்டது. ஆரம்பத்தில் ஜக்கியம் ஜக்கியமின்மைக்கிடையிலான இடையிலாலான பிந்திய காலத்தில் தமிழ்மக்களுக்கும் சிங்கள பேரினவாதத்திற்குமிடையிலான இனமுரண்பாடு மேல் நிலைக்கு வந்ததை தொடர்ந்து, இம்முரண்பாடே பிரதான முரண்பாடாக மாறியுள்ளது. இக்கட்ரையில் அடுத்த பந்தியில் ஜக்கியம், ஜக்கியமின்மையின் பகுதி முரண்பாடாக இனமுரண்பாட்டை வரையறுக்க முயல்வதுஇன்றைய நிலையை, இயங்கியலுடன் ஆராயாது தமது முடிவுகளுடன் பொறுத்த முனைவதாகும். நாம் தொடர்ந்து மனிதத்தில் கூறிய மூன்று பிரதான முரண்பாட்டில் முன்னணியில் உள்ளது என குறிப்பிட்டதில் நாம் முதலாம் முரண்பாட்டை தமிழ மக்களுக்கும் சிங்கள பேரினவாதத்திற்க்குமானதென வரையறுத்துக் கொண்டே ஆராய்கின்றோம்.
இம் மூன்று முரன்பாடுகளும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவையே. பிரதான முரண்பாடு இல்லாதபோது மற்றவை இருக்க முடியாது. இவற்றின் உருவாக்கம் எப்போதும் ஒன்றை மையமான வைத்தே உருவானது. இலங்கையில் மக்களுக்கு தரகு முதலாளித்துவத்துக்கும் (ஏகாதிபத்தியத்துக்கும் ) நிலபிரபத்துவத்துதற்கும் இடையில் முரண்பாடாக இருந்த போதும் நீங்கள் குறிப்பிட்டவற்றில் இரு முரண்பாடுகள் அதற்குட்பட்டவையாக, பிரதான முரண்பாட்டுடன் வாழ்வையும், வளர்சியையும் கொண்டிருக்கின்றது. இப் பிரதான முரண்பாடு இன்று நீங்கள் குறிப்பிட்ட முதலாம் இரண்டாம் முரண்பாடாகவே உள்ளது. இம்முரண்பாடே சிங்களப்பேரினவாதத்திற்கும் தமிழ் இனத்துக்குமிவடயிலான தேசியப் போராட்டமாக வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சியில் இன்று பாசிசம் இல்லாமலோ, ஏகாதிபத்திய ஆதிக்கம் இல்லாமலோ இம்முரண்பாடு உயிர்வாழ முடியாது. இதில் தேசிய பிரதான முரண்பாடாக இன முரண்பாடு மாறிய பின் மற்றைய இரு முரண்பாடுகளும் வளர்ந்து மிக இறுக்கமாக இம்முரண்பாட்டுடன் இணைந்துள்ளது. இன முரண்பாட்டை வெற்றி கொள்வதனூடாக மற்றைய இரண்டும் வெற்றி கொள்ளப்பட முடியும்.
இதைத்தொடாந்து மனிதம் இன முரண்பாட்டை பகுதி முரண்பாடாக ஜக்கியம், |ஜக்கியமின்மையில் உள்ளதெனச்சொல்லிய பின் சிங்களப்பேரினவாத்துக்கும் தமிழ்மக்களுக்கும் இடையேயான முரண்பாடு பிரதான முரண்பாடாகவிருந்தால், தமிழ்மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்டையிலான முரண்பாட்டை எப்படி விளக்குவது எனக்கேட்டுள்ளனர். இதில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான முரண்பாடு வளர்ந்து வருகின்றது. இதன் வளர்ச்சியின் போக்கில் தமிழ் இனவாதிகளுக்கும் முஸ்லீம் மக்களுக்குமிடையிலான முரண்பாடு முன்னிலைக்கு போட்டி போடமுடியும். இது சிலவேளை சிங்கள முஸ்லீம் மக்கள் இணைந்து தமிழ்மக்களுடன் ஒரு பிரதான முரண்பாடக மாறலாம். இது முரண்பாடுகளைக் கையாலுவதிலுள்ள தன்மையைப்பொறுத்தது.
தொடர்ந்தும் மனிதம் அளவில் பெரிதாக தெளிவாகத்தெரிவதாக இருக்கும் இந்த முரண்பாட்டையே பிரதான முரண்பாடாக கருதுவது பிரச்சனையை தீர்க்க உதவாது என்ற வாதம் மேற்குறிப்பிட்ட மாவோ,லெனின் விவாதத்திற்கு மாறுபட்ட கருத்தாகும். இக்கருத்து அடிப்படைத்திதிரிபு ஆகும். திரிபுகளுக்கு மாறுபட்ட கருத்தாகும். இக்கருத்து அடிப்படைத்திரிபு ஆகும். திரிபுகளுக்கு மீண்டும் சுட்டிகாட்ட விரும்புவதுமுதலில் மார்க்சிய நூல்களை வரிக்கு வரியாக விமர்சியங்கள். அதனுடாக புதிய தத்துவத்தை முழுமையாக வையுங்கள். இதற்க்கு மாறாக இயங்கியலை நிராகரித்து, ஒற்றைவரிகளில் வாசகர்களை திசைதிருப்புவதும், கருத்துக்களை திணிக்க முயல்வதும் விமர்சனம் ஆகாது. அத்துடன் ஒற்றவரிகளில் வைப்பதை(மார்க்சியத்தை தான் விமர்சிக்காவிட்டாலும் பறவாயில்லை) ஆதாரத்துடன் இயங்கியலுடன் முன்வையுங்கள்.
உயிர்ப்பு குறிபிட்ட பாசிசம் என்பது குறிப்பான பிரச்சனையாகவும் தமிழ்மக்களின் தேசவிடுதலையென்பது பொதுவான பிரச்சனையாக கூறப்பட்டதை மனிதம் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறும் இக்கருத்தானது, பாசிசத்தை மட்டும் ஒழித்தால்:தேசிய இனப்பிச்சளையை தீர்த்துவிடமுடியுமென வாதாடுகிறார்கள். பாசிசம் என்பது வேறு ஒரு பிரதான முரண்பாட்டின் இருப்புடன் ஒன்றானது. இது தேசிய இனமுரண்பாட்டின் வளர்ச்சியில் தன்னகத்தே பாசிசத்தையும் கொண்டிருக்கும். இலங்கையில் தீவிரமடைந்த தேசிய இனப்பிரச்சனையுடன் பாசிசம் வளர்ந்து ஒன்றுகலக்கின்றது. மக்கள் தேசிய இன முரண்பாடடுக்கு எதிராக போராடும் பொழுது பாசிசம் மக்கள் மீதுகட்டவிழ்து விடப்படுகின்றது. இம்முரண்பாட்டில் எழும் கோரிக்கை இல்லாத போது பாசிசம் இல்லாமல் போய்விடும்.
உயிர்ப்பு மேலும் சொன்ன புலிகள் பாசிசம் பற்றிய விமர்சனங்கள் எதுவும் தமழ் தேசத்துக்குள் தோன்றியுளள்ள உள்முரண்பாடு என்ற எல்லைக்குள்ளாகவே முன்னேடுக்கப்பட வேண்டும் இதை மனிதம் ஒரு சமுதாயத்தில் நிலவும் உள்முரண்பாடு வெளிமுரண்பாடு என்று பார்க்கலாமா? இல்லை என்ற இக்கருத்து அடிப்படை மார்க்சியத்துக்கு விரோதமானது. இதை மாவோ முரண்பாடு பற்றி என்ற நூலில்பொருட்களின் வளர்ச்சியென்பதே அப்பொருட்களின்; உள்ளியக்கம் அவற்றின் இன்றியமையா தன்னியக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் ஒவ்வெரு பொருளின் வளர்ச்சிக்கான அடிப்படைக்கு காரணம் பொருளுக்கு வெளியே இருப்பதன்று அதற்குள்ளேயே இருப்பதாகும். இது அதற்குள் நிலவும் முரண்பாட்டில் பொறுத்துள்ளது. ஒவ்வொரு பொருளிலும் இந்த உள்முரன்பாடு(அகமுரண்பாடு)இயல்புள்ளது. இக்கருத்து உள்முரண்பாடு வெளிமுரண்பாடு எனஒரு சமுதாயத்தில் ஒரு போராட்டத்தில்... என அனைத்திலும் இருக்கும். எனவே மனிதம் ஏதோவொன்றை நிறுவும் போக்கில் இயங்கியலுக்கு மாறாக,அடிப்படை மார்க்சியத்தை திரித்தும், மறுத்தும் திணிக்கவே முயல்கின்றனர். இம்முறை மார்க்சிய அடிப்படை(மார்க்சிய அடிப்படைதவறு என கூறுகின்றனர்)விவாத முறைக்கே மாறுபட்டதாகும். இருந்தும்,மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புவது உங்கள் கருத்துக்களை ஆதாரத்துடன் முன்வையுங்கள். அத்துடன் விவாதத்தை தொடர்ந்து நடத்தும் அணுகுமுறையை கைக்கொள்ளும்படியும் கோருகின்றோம்.
தேசிய சக்திகள் பற்றிய தூண்டில் மீதான விமர்சனம்
தூண்டில்41-இல் சமர் கூறுவது போல் புலிகள் தரகுமுதலாளித்துவ போக்குள்ளவைதானா என்பது ஆய்வுக்குரியது. ஏன் என்றால் அப்படியடித்து கூறயிருக்கும் காரணங்களைப்போலவே இன்னும் சரியாக கூறுவதானால் அப்படியில்லையென அடித்து கூறவும் காரணங்கள் இருக்கின்றன. புலிகள் தமிழ் தரகுமுதலாளித்துவத்தின் போக்கை காட்டுபவர்கள் என்றால் ஏன் அவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணி போல இன்றுவிட்டுக்கொடுத்து சரணடையவலை;லை? அவர்களுக்கு ஒரு தேசியவாதம்; இருக்கிறது இதன்பின் புலிகளிடம் இருக்கும் சிந்தனை முதலாளித்துவ தேசியவாதத்தில் எவ்வகைப்பட்டது என்று ஆராய்வது அது தரகுமுதலாளித்துவ வகைப்பட்டதா, தேசியமுதலாளித்துவ வகைப்பட்டதா என்பது தீர்க்கபட வேண்டிய பிரச்சனை. நாம் இந்த இடத்தில் அவசரப்பட்டு தீர்வு சொல்லவிரும்பவில்லை|| பின்னால் தொடர்ச்சியாக புலிகளையும் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஒப்பிட்டு மதிப்பிடும் போது அரசியல் நீரோட்டத்தையிட்டு அவநம்பிக்கையுடன் அணுகவைக்கிறது. ஆயினும் இது அதுவாக முடியாது மாறமாட்டாது என அடித்து கூறமுடியாது|| தொடர்ந்தும் உந்த அபிப்பிராயத்திலே புலிகள் தரகுமுதலாளித்துவவாதிகள் அல்ல என்பது தெளிவுதானே? இன்னும்மில்லை அதாவது இன்றுவறை அவர்கள் அந்தபிடிக்குப்போகவில்லை. நாளை போககூடும்|| என்ற தூண்டில்ன் கருத்துக்களை பார்ப்போமாயின் புலிகள் தரகுமுதலாளிகள் தானா என்பது ஆய்வுக்குரியது. புலிகள் முதலாளித்துவ தேசியத்தின் எந்தவகையென ஆராய்வது தமிழ் தரகுமுதலாளித்துவமா? தேசியமுதலாளித்துவமா? இது தொடர்பாக அவசரமாக தீர்வு சொல்லவிரும்பவில்லை. மாறமாட்டாது என அடித்துச்சொல்ல முடியாது. இன்னும் இல்லையென்ற சொற்களுக்கூடாக தூண்டில் தரகு முதலாளிகள் என்பது ஆய்வுக்குட்பட்டதாகவும் இன்னும் நிராகரிக்காத தன்மையுடன் ஆய்வுடன் நிற்கின்றார்கள். மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தில் எந்த வகையென ஆராய்வதும், அது தரகுமுதலாளித்துவ வகைப்பட்டதா? தேசிய முதலாளித்துவபட்டதா? என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இக்கட்டுரையில் தூண்டில் புலிகள் முதலாளித்துவ தேசியவாதத்திற்க்கு உட்பட்ட ஒரு பிரிவுயென மட்டும் எனகூறி அவர்கள் தேசியமுதலாளித்துவ பிரதிநிதிகளா? அல்லது தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகளா? என்பதைவிவாதத்துக்கு விட்டுவிடுகின்றனர்.
தூண்டில் 48-இல் முதலாளித்துவ தேசியவாதம் போன்ற பதங்களை புலிகள் குறித்து பாவிக்கின்றபோது அவர்கள்( சமர்) மறுத்துரைக்கின்ற வேகத்தைப்பார்த்தால் தேசியவாதம் தொடர்பாக அவர்களுக்கும் ஒரு வித தூய்மைவாத அபிப்பிராயம் இருப்பதாக படுகின்றது. இதுதொடர்பாக சமருக்கு தூய்மைவாதம் கிடையாது. முதலாளித்துவ தேசியவாதத்தில் தனக்கே உரிய சுரண்டும் இயல்பை சமர் மறுத்துவிடவில்லை. முதலாளித்துவ தேசியவாதத்தில் நீங்கள் குறிப்பிட்ட இருபிரிவுகளும் ஒன்றாக ஒருபிரச்சனையை கையாளமுடியாது. இதில் தனித்தனியாக ஒவ்வொன்றும் தேசியப்போராட்டத்தை தனதுநோக்குநிலையில் நின்று போராடமுற்படும் இரண்டும் தேசிய விடுதலைப்போராட்டத்தை தனக்கு சாதகமான பயன்படுத்த முனையும். அதிலிருந்து மக்கள் மீதான ஒடுக்குமுறையும் மாறுபடும் தன்மையிருக்கும்;. இதில் புலிகள் எந்தபிரிவு என்பதிலிருந்தே எமது விவாதம். அன்று பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் புரட்சிசெய்த போது அதிலிருந்த முற்போக்கு அம்சங்கள் பின் அவசியமற்றனவாகிவிட்டன. என்ற கருத்து சரியானது. இதைமூன்றாம் உலகநாடுகளிற்க்கும் நிலபிரத்துவத்தை ஒழிக்காமல் இருக்கும் நாடுகளுடன் பொருத்துவது சரியானதா? இங்கு நிலபிரபுத்துவத்துக்கு எதிரான சக்திகள் முற்போக்கை ஏன் பிரதிபலிக்க முடியாது. இப்படி உருவாகும் தேசிய முதலாளித்துவ வாதிகள் ஒரு பாட்டாளிவர்க்கம் போராட்டத்தில் முற்போக்காக இருந்தாலன்றி இன்றைய நிலையிpல் சாத்தியமா? இதுதொர்டபாக கீழே ஆராய்வோம.;
பிறவர்க்கங்களின் ஜனநாயக கோரிக்கைகள், பாட்டாளி வர்க்கப்புரட்சி என்பவைபற்றிய அச்சம்|| இவைகூட முன்னையது போல் முதலாளித்துவ தேசிய சக்திகள் முற்போக்காக இருக்க முடியாது எனக்காட்ட முன்னேடுக்கப்பட்ட விவாதமே. இக்கருத்து சோவியத்தின் சோசலிச புரட்சிக்குப்பின் பல நாடுகளில் இருந்தும் முதலாளித்துவ சக்திகள் இணைந்து போராடியுள்னர். உதாரணம் சீனா,நிக்கரக்குவா,கம்பூச்சியா,பிலிப்பையின்ஸ்,வியட்நாம்.... இப்படி பல நாடுகளை காணலாம். தூண்டிலின் விவாதம் முற்போக்கைப்பற்றி தீர்மானிக்க ஒரு பாரணமாக முழுமையாகப்பார்க்க முடியாது. அன்றைய தேசியத்வாதத்தலைவர் சன்யாட் சென்னை முதலாளித்துவ தேசியவாதத்தின் பிரதிநிதியாக கருதுகின்றது. சன்யாடசென் இன்று இருந்தால் கூட அன்று இருந்தது போல் இருந்திருக்க முடியாது||. இதை நாம் ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்ளுகிறோம். அதாவது ஒரு பாட்டாளிவர்க்கம் பலமான நிலையில்,ஜக்கிய முன்னணிக்குள்ளோ, வேறு அமைப்பாகவோ சன்சாட்சென் போல ஒருவர் இருக்கமுடியும். சன்சாட்சென் இருந்த காலம் நிதிமூலதனத்தின் ஆதிக்கம் பெரிதாக ஏற்படாத, தரகுமுதலாளித்துவம் என்ற சக்தி ஆதிக்கம் பெரிதாக பெறாத பாலம்.இக்காலத்தில் முதலாளித்துவ தேசியவாதம் காலனியாதிக்கத்தையும் நிலப்பிரபுத்துத்தையும் எதிர்பதாகவிருந்தது. இன்று தரகுமுதலாளித்துவ ஆதிக்கத்துக்குள் முழுமையாக உட்பட்ட நிலையில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் ஆதிக்கத்தை நிகழ்த்தும் அளவிற்கு பலம் பெற்றுள்ளது. தரகுமுதலாளித்துவக்கு எதிராக உறுதியாக கருத்தை வைத்து உருவாகாத எந்த சக்தியும் தரகுமுதலாளித்துவத்தின் நேரடி, மறைமுக ஆதிக்கத்துக்குள் செல்வார்கள். இந்நாடுகளில் தேசியமுதலாளித்துவ பிரிவு எப்போதும் உறுதியாக இருப்பதாயின், பாட்டாளிவர்க்கம் பலமான நிலையில் ஒரு ஸ்தாபனமாக மட்டும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். பாட்டாளிவர்க்ககட்சி பலமாகவில்லாத நிலையில் அங்க தேசிய முதலாளித்துவம், தரகுமுதலாளித்துக்கு எதிராக குரல் கொடுக்கமுடியாதவகையில் தரகுமுதலாளித்துவத்குள் உள் வாங்கப்பட்டு விடுவார்கள். இது எம்மண்ணில் உருவான அனைத்து இயக்கங்களையும் வைத்தே புரிந்து கொள்ள முடியும். தரகுமுதலாளித்துக்குள் உள் வாங்கப்பட்டு விடுவார்கள். இது எம்மண்ணில் உருவான அனைத்து இயக்கங்களையும் வைத்தே புரிந்து கொள்ள முடியும். தரகுமுதலாளித்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்த சிறு இயக்கங்களான என்-எல்-எவ்-டி- பி-எல்-எவ்-டி-தீப்பொறி சோரம் போகாமல் இருந்ததும், சில இயக்கங்கள்இந்திய சார்பாகவும் (சோவியத்சார்பாகவும்) மாறியதுடன் புலிகள் மேற்கத்தைய சார்பாகவும் செயற்பட்டு வருவதை பார்க்கமுடியும். ஒரு சுதந்திரமான தேசிய சக்தியென ஒன்றுமே எம்மண்ணில் இல்லை. ஆகத்தனிநபர்களாக மட்டுமே உள்ளனர். புலிகள் இன்று போராடும் தன்மையை ஏகாதிபத்தியம் தனது நலன் நோக்கி கையாளுவதே இலங்கையிலுள்ள தேசிய இனமுரண்பாட்டில் எழும் போராட்டம் முற்போக்காக நகர்வை தடுக்கவும், ஒருவர்க்கப்போராட்டம் உருவாகமல் தடுக்கவும், இந்தியாவின் அதிக்கத்தை தடுக்கவும், தென்னாசியாவின் உறுதிதன்மைமமமயை தடுக்கவும்... மேற்கத்தைய ஏகாதிபத்தியம் முயலுகின்றது. இதில் இன்று பயன் படும் சக்திகளில் புலிகளும் ஒன்று. இந்த நோக்கில் பயன்படுத்தப்படும் போது தமிழ் மக்களின் கோரிக்கையை கையில் எடுப்பது தவிர்க்க முடியாது. தமிழர் விடுதலைக்கூட்டணியினர் 1950முதல் ஒரு மத்திய தரஇயக்கமாக வளர்ந்து அதன் வளர்ச்சியில் ஏகாதிபத்தியம் சார்ந்து சென்றதையும் இன்று நாம் பார்க்கிறோம். இவர்களை அம்பலப்படுத்த 30வருடங்கள் சென்றன. இவர்கள் தமிழ் மக்களின் முழுக்கோரிக்கைகளையும்(ஏகாதிபத்தியத்தின் தரகுவாக இருந்து கொண்டே) வைத்து போராடுவது போல் செயற்பட்டனர். இதைப்போல் இன்று புலிகளின் செயற்பாடுகள் தேசியத்தின் மீது செயற்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளைகளாகவும் உள்ளனர். இதை அவர்களின் பல நடவடிக்கைகள் எமக்கு எடுத்துக்காட்;;;டியதை முன்பு சுட்டிக்காட்டினோம்.
தூண்டில தொடர்ந்து சமர் சொந்த நலன் குழுநலன் என்ற பதங்களைப்பாவிக்கின்றதொழிய தரகுமுதலாளிய வர்க்கநலன்எவை? அதன் அரசியல் கோசங்கள் எவை? அவை எப்படி புலிகளுடன் கோசங்களைப்பொறுத்துகின்றன எனச்சுட்டிகாட்டவில்லை|| என்ற கருத்து தொடர்பாக முன்பு ஒரளவுக்கு சொல்லியுள்ளோம். இக்கருத்தையோட்டி மீண்டும் ஆராய்வோமாயின் சொந்த நலன், குழுநலன் என சொல்வது குறித்தவொரு பகுதி மட்டும் தங்;களை மையப்படுத்தி செயற்படும் தன்மையைத்தான் இத்தன்மை தரகு முதலாளித்துவப் பிரிவுக்கு ஒரு சிறப்பான அம்சம் கூட. இக்குழுநலன் தரகாக இருக்கும் குறித்த பிரிவினரை சிறப்பாக சுட்டிகாட்ட பயன்படுத்தியதே. இச்சக்திகளின் நலன்கள் ஒரு நாட்டை முழுமையாக ஏகாதிபத்தியத்துக்கு சேவைசெய்யும் வகையில் கையாள்வதே. தேசியப்போராட்டம் தீவிரமடையும் முன்பே,இலங்கை தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தும்,தேசியவிடுதலைப்போராட்டம் தீவிரமடைந்த பின் எந்த மாற்றமும் தரகு முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் மீது நிகழவில்லை. தொடர்ந்தும் பேணப்படுவதுடன் மேலும் நாட்டை அடகுவைக்கவும் முயலுகின்றனர். தேசியவிடுதலைப்போராட்டம் தொடங்கி பின், இருந்த சில தேசிய முதலாளத்துவ சொத்துக்கள், செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்பட்டது. தேசியவிடுதலைப்போராட்டத்தின் பின் அறிமுகம் செய்த சில உள்நாடடு உற்பத்திகள் கூட இன்று அழிக்கப்பட்டு விட்டது. புலிகள் போராடப்பயன்படுத்தும் ஆயுதங்கள் முழுமையாக ஏகாதிபத்தியத்திடமிருந்தே பெறுகின்றனர். உள்ளுரில் சில வகையான ஆயுதங்களை தற்போது செய்த போதும் (அவை பெருமளவில் வெளியிருந்து கொண்டுவரும் நெருக்கடியீனால் தான்) சில அடிப்படை ஆயுதங்களை சுயமாக செய்யமுனைந்தவர்களை(உள்ளுக்குள்)கொன்றுள்ளனர். ஏனெனில் சுய ஆயுதவுற்பத்தி சுயமான விடுதலைக்கு வித்திடும் என்பதாலேயே. புலிகள் பயிற்சி எடுத்த இடங்கள்,இன்று சர்வதேச போதைவஸ்துக்களுடன் உள்ள தொடர்பு,மற்றும் யாழ்கடத்தல்காரர்களின் (அன்னியப்பொருட்களை சிங்கள தரகுமுதலாளித்துவத்துக்கு எதிராக கடத்தும் தமிழ் தரகுமுதலாளித்துவம்) ஆதிக்கம் புலிகள் எதைசார்ந்துள்ளனர் என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.
இன்று சுயவுற்பத்தி கேள்வி தாள்களில் சுயவுற்பத்தியுடன் அமைந்த கேள்விகள், இவைகளை வைத்துக்கொண்டு தேசியத்தின் பற்றினால் தான் வருகிறது எனச்சொன்னால் தமிழர்விடுதலைக் கூட்டணி இப்படி எத்தனையை கூறினார்கள். குறிப்பான இச்செயற்பாடுகள் இன்று யாழ்பாணத்திலுள்ள பொருளாதார நெருக்கடியும் மக்கள் மீதான புலிகளின் பாசிச நடவடிக்கை ஏற்படுத்தும் எதிர்ப்பு உணர்வு, தங்கள் மீது பாயும் என்ற ஒரு அம்சம் காரணமாகவே சுயபொருளாதாரம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் (சிறைகள், நீதிமன்றங்கள், பொலீஸ்சேவை உருவாக்கி ஒரு சிலவற்றை (அரசியல்கைதிகள அல்ல) விசாரித்து நாடகமாட முற்படுகின்றனர். இவைகளிருந்து தேசியம் பற்றி மதிப்பிடமுடியாது. புலிகளின் கோசங்கள் அன்று தமிழ்ர்விடுதலைக் கூட்டணி1980க்கு முன் நடத்தியது போலவே உள்ளது. வெளியில் வைக்கும் கோசத்தையை மட்டும் வைத்து(அமெரிக்க ஜனாதிபதியின் ஜனநாயகக் கோரிக்கைகள்,சீரழிந்த கம்யுனிஸ்ட் கட்சியின் கோசங்கள் போன்று) நாம் தரகா தேசியமாவென மதிப்பிட முடியாது. அவர்களின் நடவடிக்கைதான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. அந்தவகையில் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் தேசியத்தின் பெயரால் ஏகாதிபத்தியத்திற்க்கு சிறப்பாக சேவைசெய்கின்றது.
எமது சொந்த மக்கள் உயிர்வாழ பனம்பழத்தை சூப்பும்பொழுது, புலிகள் கொக்ககோலாவும் சீஸ.; இன்றி வாழமுடியாது உள்ளனர். சொந்த நாட்டின் உற்பத்தியில் தம்மைகாத்துக்கொள்ள முடியாதவர்கள்: சொந்த உற்பத்தி பற்றி அக்கரை காட்டுவார்கள் என எதிர்பார்க்கமுடியாது. தேசிய முதலாளித்துவம் எனின் தேசியத்தன்மை தெளிவானதாகயிருக்க வேணடும். சொந்ததேசத்தில் தேசியம் கட்டியெழுப்பப்பட வேண்டும். தேசியம் கட்டியெழுப்ப ஒரு போராட்டத்தில் மிக சாதகமான(புலிகள் இன்று தளப்பிரதேசத்தை) தன்மையை கொண்டுள்ளனர். இன்று அன்னிய சக்திகளின் தயவில் சொந்த உற்பத்தியை தடுக்கும் வகையில் முழுமையாக செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் இன்றைய போராட்டம் தேசிய விடுதலைப்போராட்டம்|| இதில் சமருக்கு எந்த கருத்து முரண்பாடும் கிடையாது. இப்போராட்டத்தை ஒவ்வொரு சக்தியும் தனது நோக்கில் கையாளும்: இதில் புலிகள் தனது நோக்கில் கையாளுகின்றது. புலிகள் என்னும் போது இவ்வியக்கம் ஆராம்பத்தில் குட்டிபூர்சுவா இயக்கமாக இருந்தது தனது இருப்பையொட்டி தொடர்ந்து ஏகாதிபத்தியத்துடன் சரணடைந்தது இவ்வியக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் மிகத்தெளிவாக இன்று வெளிவருகின்றது. அவர்கள் எந்தபின் தளத்தில் நிற்கிறார்கள் எங்கிருந்து உதவியைப்பெறுகின்றார்கள் இவைகள் தொடர்பாக முன்பு நாம் சுட்டிகாட்டியுள்ளோம்.
நிலவுகின்ற அரசியல் காலகட்டம் இதை எடுப்பின் இலங்கையில் இனமுரன்பாடு பிரதானமுரண்பாடாக உள்ளநிலையில், தமிழ் தரகு முதலாளிவர்க்கம் சிங்கள தரகுமுதலாளித்துவத்தின் பாதிப்பால் இவ்இன முரண்பாட்டை சாதகமாபயன்படுத்துவதில் முனைந்துள்ளது. இதற்கு இசைவாக சர்வதேச நிலைமையுள்ளது. ஏகாதிபத்தியத்தின் நிதிமூலதனத்தின் ஊடாக மூன்றாம் உலக நாடுகளை கட்டுப்படுத்துகின்றனர். இன்று ஏகாதிபத்தியம் அனைத்துதுறைகளிலும் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வகையில் தேசிய விடுதலைப்போராட்டத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளது. இதை பல உதாரணங்கள் மூலம் பார்க்லாம். பங்களாதேஷ்,சூடான்,எதிரித்தியா,குர்தீஸ்,ஆப்கானிஸ்தான்.... இப்படி எல்லாப்போராட்டத்தையும் முழுமையாக ஏகாதிபத்தியம் பயன்படும் வகையில் உள்ளுர் தரகுமுதலாளித்துவம் பயன்படுத்தப்படுகின்றது.
தேசியமுதலாளித்துவசக்திகள் இருக்க முடியாது என்ற எடுகோளில் இருந்து கட்டியெழுப்ப முடியும் இந்த தர்க்கம் சமரை அறிpயாமலேயே நடக்கின்ற போராட்டம் தேசிய போராட்டம் என அங்கரிப்பதில் சமரை கொண்டுபோய்விட்டு விடுகிறது என்ற தூண்டிலின் வாதத்தில் தேசிய முதலாளித்துவம் இருக்கமுடியாது என்ற வாதம் எப்படி நடக்கும் போராட்டத்தை தேசிய விடுதலைப்போராட்டத்தை அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கின்றது? ஒரு வர்க்கம் இருக்கின்றதா, இல்லையா என்பதில் இருந்து போராட்டத்தை தேசிய போராட்டமாக வரையறுக்க முடியாது. சமர்இன்று தமிழ் மக்கள் முன்னுள்ள போராட்டத்தை தேசிய விடுதலைப்போராட்டமாக அங்கீகரிக்கின்றது. அதிலிருந்தே நாம் விவாதத்தை நடத்துகிறோம். இப்போராட்டத்தை புலிகள் தம் நலன்களுக்கு பயன்படுத்திகின்றனர். இதே போல் எல்லா வர்க்கங்களும் தமது நோக்கில் பயன்படுத்த முயலும். மற்றும் தேசியமுதலாளித்துவ சக்திகள் இருக்கமுடியாது என்ற எமது வாதம்,மூன்றாம் உலக நாடுகளில் இன்று ஏகாதிபத்தியத்தின் பிடிஇறுகிவரும் இன்றைய நிலையில் ஒரு சுதந்திர முதலாளி உருவாகமுடியாது. அவர்கள் தரகுமுதலாளியாகவே அன்றி மத்தியதர நிலைக்கு மாற்றப்பட்டுவருகின்றனர். மத்தியதரத்துக்கு மாறும் இவர்கள்கூடபோராட்டத்தில் உள்ள வெற்றியில் நம்பிகையிழந்து தரகு முதலாளித்துவத்துடன் இணைந்துகொள்கின்றார்கள். இதை எம் நாட்டில் உருவான இயக்கங்களைக்கொண்டே பார்க்க முடியும். இக்கருத்தையெட்டி மேலும் தூண்டில் தரகுமுதலாளிவர்க்கத்தின அரசியல் கோரிக்கைகள் எப்படி அமையும் என்று அது குறித்து காட்டவில்லை|| இது தொடர்பாக நாம் விளக்கியுள்ளோம். தரகுமுதலாளித்துவம் அப்பட்டமாக தாம் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் என சொல்வதில்லை. அதே போல் அரசியல் கோரிக்கைகளை நேரடியாக வைப்பதில்லை.அதுவும் ஒரு விடுதலை அமைப்பு மேலும் இதை இரகசியமாக கையாண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும். எப்போதும் அரசியல் கோசங்களில் இருந்து ஓரு அமைப்பு பற்றிய முடிவுக்கு வருவதாயின், சரியான கட்சிஒரு உண்மையான சோசலிச அரசில் மட்டுமே சாத்தியம். இதற்க்கு மாறாக சுரண்டல் அமைப்புக்களை சரியாக இனம்கான அவர்களின் நடவடிக்கைகள் யாரைசார்ந்துள்ளார்கள் என்பதைக் கொண்டே அறிய முடியும்.இதில் புலிகள் அரசுக்கு எதிரான செயற்பாட்டை நீங்கள் குறித்து காட்ட விரும்பலாம். இச்செயற்பாட்டை முன்பு விளக்கியிருதாலும் மீண்டும் ஆராய்வோமாயின் தேசியத்தை சொல்லும் அனைவரும் தேசிய வாதியாக இருப்பதில்லை. இதற்க்கு சிறந்த உதாரணமாக ஹிட்லர்,சதாம்உசையின்,பிரோமதாசா........ இப்படிப்பார்கலாம். மக்களின் தேசிய உணர்வை சிறப்பாக பயன்படுத்தும் இவர்கள் தரகுமுதலாளிகளே. இவர்கள் யாருடனும் சிறப்பான உறவை கொண்டிருக்கிறார்கள் எனபார்ப்பின் அவர்களின் வர்க்க மூலத்தை பார்க்கலாம். இதை லெனின் ஒரு மனிதனை அவனது நண்பர்களை கொண்டு மதிப்பிடலாம். அவனது அரசியல் கூட்டாளிகள் அவனுக்காக வாக்களிப்பவர்கள் ஆகியோரைகொண்டு ஒரு மனிதனது அரசியல் வண்ணம் இன்னதென கூறிவிடலாம்(லெனின் தேர்வு நூல் தொகுதி-2பக்கம்-240) இதிலிருந்து புலிகளின் நண்பர்கள் தேசியவிடுதலைப்போராட்டத்தை நேசிக்கும் மக்களல்ல ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளுமே.
தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்றவொர் வரையறை, யாருடைய பிரதிநிதியென சொல்ல முடியாது என்பதை தூண்டில் ஒத்துக்கொள்கிறது. புலிகளின் நண்பர்கள் இன்று தெளிவானது. யாருடைய பிரதிநிதியென சொல்ல முடியாது என்பதில் தூண்டில் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்ற சொல்லவில்லை என்கிறார்களே. இது சிக்கலான கேள்விதான். சிக்கலுக்கான காரணம் தேசிய விடுதலைப்போராட்ட காலகட்டத்தில்; இது இருப்பதே. உதாரணமாக ஜப்பானிய எதிர்ப்பு போராட்டமாக சீன கம்யுனிஸ்ட் கட்சி நடத்திய போது கட்சி யாருடைய பிரதிநிதியாக செயற்பட்டது என்று சொல்லலாமா? இல்லை,அது முழுமக்களினதும் அனைத்து தேசியவர்கத்தினதும் நலங்களை கருத்தில் கொண்டது||. எனவே புலிகள் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடுவதை மட்டும் கொண்டு அதை மதிப்பிட முடியாது. யாரின் கூட்டாளியாக செயற்படுகிறது என்பதிலிருந்தே புலிகளைப்பார்க்க வேண்டும்.
அவர்களது போக்கு முதலாளித்துவ தேசியவாதம் என நாம் கூறுகின்றோம். அவர்களின் பின்னால் உள்ள சக்திகள்யார் என்றால் இந்தக்கோரிக்கைகளின் தேசியத்தன்மையின் காரணமாக முழுத்தேசிய வர்க்கங்களுமே நிற்கின்றனவென கூறவேண்டும் என்ற இவ்விவாதம் தொடர்பாக முதலாளித்துவ தேசியவாதம் தொடர்பாக தூண்டிலின் பார்வையில், தரகுமுதலாளித்துவத்தையா அல்லது தேசிய முதலாளித்துவத்தையா பிரதி செய்கிறது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இவர்கள் பின் எல்லாவர்க்கமும் உள்ளது என அவர்களின் அரசியல் கோரிக்கைகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். அவரிகளின் அரசியல் கோரிக்கைகளில் இருந்து அது அல்லது இது என சொல்லமுடியாது என்பதை முன்பே தூண்டில் ஒத்துகொள்ளுகிறது. எல்லாவர்க்கமும் அவர்களின் பின்னுள்ளது என்பது எவ்வளவுக்கு சரியானது என்ற கேள்விக்கப்பால் சீன கம்யுனிஸ்ட் கட்சி ஜப்பானுக்கு எதிராக போராடிய போது, எல்லாவர்க்கத்தையும் பிரதி செய்ததாக கூறிய தூண்டில், புலிகள் எல்லாவர்க்கத்தினதும் தேசிய கோரிக்கையின் பின் அணிதிரட்டியுள்ளதாக கூறி அதை முதலாளித்துவ தேசியவாதம் என எதை அடிப்படையாக வந்து கூறுகின்றார்கள். முதலாளித்துவ தேசியவாதம் என அடித்து சொல்ல தூண்டில் என்ன அடிப்படையை முன்னெடுத்ததோ, அதே போன்று புலிகள் முதலாளித்துவ தேசியவாதத்தில் தரகுமுதலாளித்துவத்தை பிரதி செய்வதாக அடித்துச் சொல்ல அவர்கள் நண்பர்களில் இருந்தே முடிவுக்கு வரமுடியும்.
புலிகள் சொந்த நலன் குழுநலன் என்பவற்றிற்குபின்னால் உள்ள கோரிக்கைகள் தமிழ் மக்களின் தேசிய நலங்களுடன் இணைந்த கோரிக்கைகளாக உள்ளன. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் புலிகள் ஊசலாடுகின்றனர் என்பது மட்டுமே ஒருவர் இவற்றிலிருந்து வரக்கூடிய முடிவுகள் ஆகும்|| என்ற வாதத்தில் சொந்த நலன் குழுநலன் என்பது ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் தரகுமுதலாளித்துவத்தின் நலங்களே. புலிகள் தமிழ் மக்களின் தேசிய நலனுடன் இணைந்த கோரிக்கைகளுடன் போராடுவதை தூண்டில் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.புலிகள் போன்ற சக்திகளை தூண்டில் கூறுவது போல் குறிப்பிட்ட கட்சி எந்த வர்க்கத்தின் பிரதிநிதி என்பது பற்றிய கேள்விக்கு இது அல்லது அது என திட்டவட்டமாக அதுவும் இதுபோன்ற ஒரு போராட்ட சூழலில் அறுதியிட்டு சொல்வது சாத்தியமில்லை. ஆனால் தூண்டில் முதலாளித்துவ தேசியவாதத்தை பிரதி செய்கிறார்கள் என அறுதியிட்டு சொல்லுகின்றார்கள். இதை எப்படி இதை எப்படி சொல்லமுடிகின்றதோ அதேபோல் தரகுமுதலாளித்துவத்தை பிரதி செய்கின்றார் என்பதை அவர்களின் நலன்களை பிரதிசெய்யும் குழுநலன்,சொந்தநலன் மற்றும் அவர்களின் கூட்டாளிகளும் உறுதி செய்கின்றனர்.
சமரின் கூற்றுபடி புலிகள் தமது நலன்களுக்காகவே தமிழ்மக்களின் நலனை விற்க்க துணிந்தார்கள். இதுமுதலாளித்துவ தேசியவாதத்தின் தன்மை அன்றி வேறுயொன்றும் இல்லை. இவ்விவாதத்தில் தமிழ் மக்களின் நலன்களை விற்க்க துணிந்தவர்கள் தேசிய முதலாளித்துவம் அல்ல. இதன் தன்மை தரகுமுதலாளித்துவத்தின் குணாம்சமே. நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு விற்கமுனைவது என்பது தேசிய முதலாளிகள் செய்வதல்ல. இதுதரகுமுதலாளிகளின் செயற்பாடாகும். ஏகாதிபத்தியம், இந்தியா, இலங்கையரசுடன் புலிகளின் உறவு தனித்துவத்தை அங்கீகரிக்கவே|| என்ற தூண்டில் வாதத்தில் தனித்துவம் என்ற உறவு என்ன? அங்கீகரிக்க முயலும் இச்சக்திகள், புலிகள் தரகாக மாறும் பட்சத்தில் மட்டுமே அங்கீகரிக்க முயலும் இச்சக்திகள், புலிகள் தரகாக மாறும் பட்சத்தில் மட்டுமே அங்கீhப்பு சாத்தியமாகும். தனித்துவத்தை அங்கீகரிப்பது என்ற கோரிக்கை தனித்துவமான தரகு தொடர்பான அடிப்படையை கொண்டதே. இஸ்ரேல் பயிற்சி கொடுக்கவும், மேற்கு நாடுகள் ஆயுதம் கொடுக்கவும் தரகு முதலாளிகளாக அங்கரித்ததன் பின்பேயொழிய தேசியமுதலாளிகள் என்ற அடிப்படையில் அல்ல புலிகள் அரசியல் கோரிக்கைகள் தமிழர் விடுதலை கூட்டணி உடையதைவிட முன்னெறியவை. தமிழிழத்தை பெற இந்தியாவை தலையிடுமாறு தமிழர் விடுதலைக்கூட்டணி கேட்டது. புலிகள் இந்தியதலையீடு தமது தனித்துவத்தை அங்கீரிக்காகதே|| என்ற தூண்டிலின இவ்விவாதம்; அரசியல் கோரிக்கைகளில் இருந்து முடிவுக்கு வரமுடியாது. அவர்களின் நடைமுறை செயற்பாட்டைக்கொண்டே முடிவிக்கு வரவேண்டும். இது தொடர்பாக மேல் விவாதித்துளோம். தமிழர்விடுலைக்கூட்டணியின் தரகுத்தன்மையை அங்கீகரிக்கவே இந்தியாவைக்கோரியது.இதில் தமிழர்விடுலைக்கூட்டணி,மற்றவர்களுக்கும் பங்கு கொடுப்பதை புலிகள் எதிர்த்தனர் இதில் தனித்துவத்தை என்ற பதத்தை வர்க்கமற்ற தன்மை என்ற கோட்பாட்டுக்குள் (மனிதம் கூறுவதுபோல்) பார்க்கவில்லையென எடுக்கிறோம்.இதுபோலவே குழுநலன், சொந்தநலன்,தனித்துவம்....என்ற பதத்துக்கும் வாக்கமூலம் உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். புலிகளின் தனித்துவ கோரிக்கை தரகுமுதலாளித்துவத்தின் நலங்களில் இருந்து எழுந்ததே.
தமிழர் விடுதலைக் கூட்டணியிடமிருந்த தரகுமுதலாளித்துவ சிந்தனை சிந்தனை மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் புலிகளின் முதலாளித்துவ தேசியவாதக்கருத்து மக்களை சென்றடையவில்லை|| என்ற தூண்டில் வாதம்,தூண்டில் முதலாளித்துவ தேசியவாதத்துக்குக்ள் தேசிய முதலாளித்துவத்தையே சுட்டிக்காட்டுவதாகவுள்ளது. இன்னும் இதுஅல்லது அது என முடிவு எடுக்கவில்லைவென இதழ்-41-48-இல் சொல்லும் தூண்டில்,தங்களை அறியாமலேயே புலிகள் தேசிய முதலாளிகளே என்பதை கட்டுரை முழுக்க வாதிடுகினறனர். இதுமேற்குறிப்பிட்ட வாதத்தில் தெளிவாக வெளிந்துள்ளளது. மக்களிடம் தரகுமுதலாளித்துவ சிந்தனையுள்ளது எனின், தமிழ் மக்களின் தேசியவிடுதலைப்போராட்டம் தரகுமுதலாளித்துவ போராட்டமாகவா உள்ளது? அப்படியெனின் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப்போராட்டம் தேசியவிடுதலைப்போராட்டமே இல்லையா? புலிகள் முதலாளித்துவ தேசவிடுதலையை (தேசியமுதலாளித்துவ விடுதலையை) முன்னெடுக்கின்றார்கள் எனின்,மக்களே எதிராகவுள்ளனர். மக்கள் ஏகாதிபத்தியதை சார்ந்தும் புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு ஏதிராகவும் உள்ளனர். தூண்டிலின் ஆய்வு முறையிலுள்ள தவறு, முன்கூட்டியே ஒரு முடிவும் இவ்விவாதத்தை நடத்தக்காரணமாக உள்ளது.
இராஜதந்திரம் எனக்கூறி பலதடவை படுகுழியில் விழுந்தபோதும், தமிழ்பகுதியின் அதிகாரத்தை பிறர்கையில் கொடுத்துவிட தயாராகவிருக்கவில்லை|| என்ற தூண்டிலின் விவாதத்தில் அதிகாரம் என்பது சுரண்டலை நடத்துவதே இச்சுரண்டலின் பங்கு தொடர்பாக இராஜதந்திரம் (இது மக்களை ஏமாற்ற பயன்படுத்தும் ஒருசெயற்பாடு) என்று நடத்திய பேரங்கள்: தோல்வியையும், படுகுழியில் விழுந்ததாகவும் பார்க்க வேண்டும். இதை விடுத்து அவர்களின் அரசியலுக்கு முடியாதுள்ளது|| என்பது அடிப்படையில் தவறானது. சுரண்டலின் பங்கு தொடர்பாக எழுகின்ற பேரங்களில் தோல்வியே ஒழிய தேசியமுதலாளித்துவம் தொடர்பான அரசில் அல்ல. தேசிய முதலாளித்துவம் எப்பொதும் ஏகாதிபத்தியத்துடன் உடன்பட்டு தீர்வு பெறமுடியாது. இந்தியாவிடம் மாதம் 50கோடி பெறவும்,இஸ்ரேலிடம் பெற்ற பயிற்சி என்பன மிகச்சிறப்பாக, அவர்களின் பேரங்களை தெளிவாகவும், ஏகாதிபத்தியத்துக்கு துணைபோவதையும் காட்டுகிறது.
புலிகளின் பின்னால் உள்ள சக்திகள் உற்பத்தி முறைகாரணமாக தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினர் என குறிப்பிடா விட்டாலும், உள்ளும் வெளியும் உள்ள அதன் திரண்ட ஆதரவு சக்திகளிடம் இருப்பது ஒரு வகைப்பண்டைய பிரபுத்துவ சாயல் கலந்த முதலாளித்துவ தேசியவாதமே. இனவெறியுடன் கலந்து இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமிருந்தும் புலிகளுக்கு வேண்டிய ஆதரவு செலுத்துகின்றது. இவ்விடயத்தில். புலிகளின் பின்னால் உள்ள உற்பத்தி முறை தேசியமுதலாளி வர்க்கம் இல்லையென ஏற்றுக்கொள்ளுகிறது. அப்படியாயின் முதலாளித்துவ தேசியவாதத்தில் புலிகளின் பின்னால் உள்ளது. தேசிய முதலாளித்துவம் இல்லையெனில் தரகுமுதலாளித்துவமே. இதை தூண்டில் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். உள்ளும் வெளியும் திரண்டசக்திகள்|| எப்பொழுதும் உற்பத்திமுறையை மீறி தம்போக்கில் எதையும் செய்யமுடியாது. உதாரணமாக நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ புரட்சிநடைபெற்ற நாடுகளில், புரட்சியை முன்னெடுத்தோர் முதலாளித்துவ உற்பத்திமுறையை கொண்டிருந்த போதும் அதற்க்கும் உள்ளும் புறமும் பாட்டாளிவர்க்கம் செயலாற்றியது. இதிலிருந்து எது உற்பத்தி முறையை தலைமை தாங்கின்றதோ அதுவே அதன் இலக்காகும். பண்டைய பிரபுத்துவ சாயம் கலந்த முதலாளித்துவ தேசியவாதமே|| இதில் பிரபுத்துவம் என்பது ஒரு தேசவிடுதலைப் போராட்டத்தின் எதிரியே. அதனுடன் கூட்டுச்சேந்திருக்கக்கூடிய ஒரேவர்க்கம் தரகுமுதலாளித்துவமே. அதாவது இதுமூன்றாம் உலக நாடுகளில் எல்லாவரசுகளிலும் காணப்படும் இயல்பே.
இந்திராவைக்கொன்ற சீக்கியரை மதவெறிப்படுகொலையாளர் எனவர்ணித்த புலிகள் தான் ராஜீவவையும் கொன்றார்கள் இது புலிகளின அரசியலுக்கும், அதன் நலன்களுக்கும் உகந்தவிதத்தில் என்றவிவாதத்தில் புலிகள் இந்தியாயை பயன்படுத்தும் நோக்கில் 1984
வெளியிட்ட கருத்தே. அதாவது புலிகள் ஏகாதிபத்திடம் முழுமையாக சரணடையாத நிலையில்,இந்தியாவின் கால்களில் விழும் நிலையிலருந்த காலகட்டத்தில் நடந்தவை. இராஜிவ்வின் கொலை என்பது வெறும் புலியின் பழிவாங்கல் என்ற நிலைக்கப்பால், மேற்க்கத்தைய ஏகாதிபத்தியத்தின் தேவையைப்பூர்த்தி செய்யும் வகையிலும் நிகழு;த்தப்பட்டது மார்க்சின் மேற்க்கோளை முன்வைய்த்து அதன் அடிப்படையில் தனது அரசியல் கோரிக்கையை முன்வைப்பார் என்ற இவ்விவாதம் தொடர்பாக முன்பு விவாதித்துள்ளோம் .இங்கு மார்க்;;சின் கருத்து முதலாளித்துவ நாட்டில் உள்ள குட்டிபூர்சுவா வர்கமும் , அதன் நிலையையெட்டி வைக்கப்பட்டதே. அங்கு குட்டிபூர்சுவா வர்கம் தனது அரசில் கோரிக்கைகளை (அன்று அக் கோரிக்கைகள் முற்போக்காக இருந்தது) நேரடியாக முன்வைத்தனர். மூன்றாம் உலக நாடுகளில் அதுவும் எமது போராட்டம் போன்ற தேசியவிடுதலைப்போராட்டத்தில் துர்ண்டில் கூறியது போல் அது அல்லது இதுவென திட்டவட்டமாக கூறமுடியாத ஒரு நிலையில், அரசியல் ;;கோரிக்கைகளை ;கொண்டு அதன் வர்க்க மூலத்தை இனம் காண முடியாது. அரசில் கோரிக்கைகளுக்கப்பால் அவர்களின் செயற்பாடுகளையும் நண்பர்களையும், உற்ப்பத்தியுறவுகுளுடன் உள்ள தொடர்புகளையும் கொண்டே அவர்களின் வர்க மூலத்தை ஆராய வேண்டும். இன்று கம்யூனிஸ்ட:டுக்கள் என சொல்லும் முதலாளித்துவவாதிகளின் அரசில் கோரிக்கைகள், அமெரிக்க ஜனாதிபதியின் ஜனநாயக கோரிக்கைகள், இவைகளையெல்லாம் அரசியல் கோரிக்கைகளாக கொண்டு வர்க்க மூலத்தை ஐ ஆராய்ந்தால் அவர்கள ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கு மாறுபட்டவகயில் அடங்குவர் . எனவே அரசில் கோரிக்கைகளை ஆய்வுக்கு எடுப்பின், குறித்த சக்தி குறித்த போராடத்தில் முற்போக்கான நிலையில் இருந்தால் மட்டுமே அரசியல் கோரிக்கைகளிருந்து முடிவுக்கு வந்தடைய முடியும்.
புலிகள் தரகுமுதலாளித்துவத்தை பிரநிதித்துவபப்டுத்துவது என்றால் எடுக்கப்பட்ட தேசம் ஒன்றின் தரகுமுதலாளித்துவம் போகக்கூடிய உச்சவெல்லைக்கு அது போய்யிருக்க வேண்டும். இந்தியரசை முற்றாக நம்பி ஆயுதங்களை ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது இலங்கையரசின் ஒற்றையாட்சி அதிகாராத்துக்கு உட்பட்ருக்கவேண்டும்|| தூண்டிலின் இவ்விவாதத்தையொ எடுப்பின் புலிகள் சமரசத்துக்கு போகமாட்டார்கள் என்பதை (எதிர்காலத்தில்) தூண்டில் மறுக்கமாட்டார்கள். அப்படி போனவுடன் அவர்களை தரகுமுதலாளிகள் வரையறுக்க தூண்டில் உடன்படுகிறது. இப்பிரச்சனையலை; இப்ப புலிகள் என்னவென்பதே நாளை போவார்கள் எனின்,இன்று அவர்கள் தரகுமுதலாளிகளே. இந்திய விடுதலைப்போராட்டத்தில் காந்தியின் செயற்பாடு தேசிய முதலாளித்துவமா? தரகுமுதலாளித்துவமா? காந்தி தரகுமுதலாளியாகவே செற்பட்டவர். இதை காந்தி எழுதிய பலகடிதத்தில் ஒன்றை முன் வைக்கின்றோம். 1930-இல் வைசிஸ்ராஜ்வுக்கு எழுதி கடிதத்தில் தமது இயக்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து துவங்கப்பட்டதில்லை என்றும், இந்தியப் புரட்சி இயக்கத்தை எதிர்த்தே என துவங்கப்கட்டது என எழுதியுள்ளார். இன்னுமொருஇடத்தில் காந்தி வர்க்கயுத்தத்தை தடுப்பதற்க்கு எனது செல்வாகின் முழுப்பலத்தையும் பயன்டுத்துவேன் என்பதை பற்றி நீங்கள் உறுதியாகயிருக்கலாம். உங்களிடமிருந்து(நிலப்பிரபுகள்,தரகுமுதலாளிகள்) சொத்துக்களை பறிக்க அநீதியாக ஒரு முயற்ச்சி நடந்தால் அப்போது உங்கள் பக்கம் சேர்ந்து கொண்டு இந்த காந்தி போராட்டம் நடத்துவதை நீங்கள் காணாலாம் என காந்தி எழுதியுள்ளார். காந்தியின் போராட்டத்துக்கும் புலிகளின் போராட்டத்துக்கும் என்ன வேறுபாடு? ஆக அகிம்சை, ஆயுதப்போராட்டம் மட்டுமே. இதற்கப்பால் ஏகாதிபத்தியத்தின் சிறந்த பிரதிநிதிகளாக இருவரும் இருந்தனர். மேற்குறிப்பிட்ட காந்தி தொடர்பான விடயம் புதியஜனநாயக வெளியீடான காந்தி காங்கிரஸ் துரோக வரலாறு என்னும் புத்தகத்தில் தொகுக்கப்பட்டது. ஏகாதிபத்தியதை சார்ந்து எப்படி ஒருவிடுதலை அமைப்பு செயற்படுமென்பதற்க்கு பல விடயங்களை இப் புத்தகத்தில் பாக்கலாம். இதுஒருபுறம் இருக்க இந்தியாவிடம் முற்றாக அடிபணிய மறுத்ததற்க்கும், புலிகள் மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்ததும் இந்தியாவிடம் முற்றாகா சரணடைய முடியாததற்க்கு முக்கிய காரணமாகும். தரகை மாற்றுவது தொடர்பாக இந்தியா தொடர்பாகயிருந்த அச்சம் கூட புலிகள் ஊசலாடியது. இலங்கை அரசுடன் ஆன உறவென்பது. மேற்கத்தைய நாடுகளின் தேவையொடு அமைவதே இன்று எழுந்துவரும் தேசிய விடுதலைப்போராட்டத்தை பயன்படுத்தி, தென்னாசியாவின் சமநிலையை உடைக்கவும், மேற்கத்தைய ஏகாதிபத்தியத்துகு மோதலை நடத்துவது மோதலை நடத்துவது தேவையாகவுள்ளது. ஒரு ஏகாதிபத்தியம் தனது தேவையுடன் முரண்பட்ட சக்திகளைப்பயன்படுத்தும். இதை தூண்டில் மறுக்காது என நினைக்கிறோம். அந்த வகையில் இன்று புலிகளின் மோதலைப்பார்க்க வேண்டும். ஆனால் நாளை தென்னாசியாவின் பலம் பலவீனத்துடன் சமரசம் ஏற்படும். மற்றும் புலிகள் சார்ந்த தமிழ்தரகுமுதலாளிக்கும் சுரண்டலில் பங்கு தொடர்பாக இந்தியா சார்ந்த தமிழ்தரகுமுதலாளிகளும் ஏற்பபட்ட முரண்பாடு சமரசம் அடையமுடியவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி(தமிழ் தரகுமுதலாளித்துவ வேறு ஏகாதிபத்திய பிரதிநிதிகள்) சிங்கள தரகுமுதலாளித்துவத்துடன் நீண்டகாலமாக மேதியதும் இதக் தொடர்ச்சியாக இனப்போராட்டத்தை நோக்கி விரிவுபட்டு இன்று இனமுரண்பாடாக மாறுபட்டுவிட்டது.
இந்தியப்படையை எதிர்பது என்பது தரகுமுதலாளித்துவத்தின் எல்லை எல்லை மீறிய அரசியல் நடவடிக்கைகள் அப்படியெனின்|| சதாம் உசையின், கடாபி,பனாமா அதிபர்.... இவர்கள் தேசிய முதலாளிகளா இங்கு ஒரு ஏகாதிபத்தியம் தனது தேவைக்காக புலிகள் போன்ற சக்திகளை பயன்படுத்தும். அந்த வகையில் இந்தியா என்ற பிராந்திய ஏகாதிபத்தியத்துக்கு ஏதிராக ஏகாதிபத்தியம் பய்படுத்தியது. இதே போல் பிரேமதாசாவையும் பயன்படுத்தியது. பிரேமதாசா இந்தியப் படையே வெளியேறு என்ற கோசம், தேசியமுதலாளித்துவத்தின் கோசமல்ல. இது தரகுமுதலாளித்துவத்தின் கோசமே. எனவே தரகுமுதலாளிகளுடையே மோதல்கள் நிகழும். இதைகாண தூண்டில் தவறிவிடுகிறது. இறுதி முடிவில் தூண்டில் முதலாளித்துவ தேசிய வாதம் என்பதை அது அல்லது இது, அதாவது தரகு முதலாளித்துவமா? தேசிய முதலாளித்துவமா? எனவரையறுக்காமால் விட்டுவிடுகின்றனர். இடைக்இடை தரகுமுதலாளித்துவம் இல்லையென அடித்து வாதிட முற்படுகின்றனர். தூண்டில் இவ்விவாதம் புலிகளின் போக்கை தரகுமுதலாளித்துவம் என ஒருபக்கத்தில் ஏற்க்கத்தான் செய்கின்றனர். ஆனால் அதை மறுத்துவிடவும் செயகின்றனர். ஆனால் மொத்தத்தில் கட்டுரை முழுமையாக தரகுமுதலாளித்துவத்தின் பக்கத்தை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.
உயிர்ப்பில் வெளிவந்த தேசிய சக்திகள் பற்றிய என்ற கட்டுரை மீதான எமது விவாதம்.
இக் கட்டுரை தேசியமுதலாளித்துவத்தை பிரதிபலிக்கவில்லை யென்பதை சொல்லி விடுவதால் அது பற்றிவிவாதிக்க முற்படவில்லை. இங்கு தமிழ் தரகுமுதலாளித்துவம். உதிரி முதலாளித்துவம் என்ற கருத்து தொடர்பாகவே இவ்விமர்சனம் அமைகின்றது.
பக்கம் 22-இல் தமிழ் தேசியமானது சிங்களப்பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்திலேயே உண்மையில் தேற்றம் பெற்றது. சுதந்திரத்துக்குப்பின் அதிகாரத்துக்கு வந்த சிங்கள தரகுமுதலாளித்துவ இனவாதக்காண்ணொட்டத்தில் முன்னெடுத்த இனவொடுக்ககுமுறை இக்கருத்து சரியானதே. ஆனால் தரகுமுதலாளித்துவ வர்க்கம் ; சுதந்திரத்துக்குப்பின் திடீரென தோன்றவில்லை. காலனிவாதிகளுன் பேரளவில்(சிலவேளை) எதிர்ப்பை தெரிவித்ததாலும் அவர்களுடன் இணைந்தே சுரண்டியவர்கள் காலனியாதிக்கம் இருந்தகாலத்தில் முதலாளித்துவ சக்திகள் மட்டும் இருந்ததாக மட்டும் சுட்டிக்காட்டும் உயிர்ப்பு: பக்கம்-21-இல் காலனிநாடுகளில் பொருளாதாரத்தை தனது நாட்டின் முதலாளித்துவ உற்பத்திமுறையுடன் பலவந்தமாக பிணைத்துவிடுகின்றனர்.இப்படியாக ஆதிக்க நாடுகளின் நலங்களுக்கு கீழ்ப்பட்ட விதத்திலேயே உள்ளுர் முதலாளித்துவம் தோன்றவும் வளரவும், ஆதிக்க நாடுகள் அனுமதியளிக்கின்றன என்ற வாதம் முன்பு குறிப்பிட்ட சுதந்திரத்தின்பின் தரகுமுதலாளிகள் இருந்தது என்ற கருத்துகnகு முரணாகாது. வளரவும் தோன்றவும் முதலாளித்துவத்தையல்ல தரகுமுதலாளித்துவத்தைதான் அனுமதித்தது. பக்கம்-21-இல் மீண்டும் சாராயகுத்தகைகளிலும், காரீயசுரங்கங்களிலும் மூலதனமிட்டவர்கள் பிரித்தானியருடன் மோதவில்லை. மாறாக தமிழ்,முஸ்லீம் வர்த்தகருடனேயே மோதினார்கள்||| என்ற வாதத்தில் குறிப்பிட்ட முதலிட்டாளர்கள் தேசியமுதலாளிகள் என்பதைவிட பிரித்தானியா ஆட்சியாளர்களின் கையாட்களாகவே(தரகுமுதலாளிகள்)செயற்பட்டவர்கள்; இதன் தொடர்ச்சியாகவே நீங்கள் கூறுவது போல் சுதந்திரம் பெற்றபின் ஆட்சிக்குவந்த தரகுமுதலாளிகள் இனவாதத்தை தொடர்ந்து பேணமுடிந்தது.
பக்கம் 24-இல் எந்தவொரு தேசிய இனப்பிரச்சனைக்கும் முதலாளித்துவத்தினுள் முரணற்ற ஜனநாயகத்தின் மூலம் தீர்வுகாணலாம் என்ற விவாதம் முதலாளித்துவத்தினுள் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் எனசொல்லப்படுகின்றது. இங்கு பிரச்சளையாகவுளளெது முரணான ஜனநாயகமும், முரணற்ற ஜனநாயகமுமே என உயிர்ப்பு சுட்டிக்காட்டுகின்றனர். முதலாளித்துவத்தில் ஜனநாயகம் எல்லாவர்க்கத்துக்குமானதல்ல, அது முதலாளிகளுக்கு மட்டுமே உரித்தான ஜனநாயகம். முதலாளித்துவதக்கு மட்டுமே உரித்தான ஜனநாயகம் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒருக்காலும் தீர்வுக்கு இட்டுச்செல்லாதது மட்டுமின்றி சுரண்டலை இனப்பிரச்சனையுடன் இனைத்தே மேலும் கூடுதலாக சுரண்டும்.
பக்கம் 24-இல் ஏகாதிபத்தியத்தின் நலங்களுடனும் இந்தியமேலாதிக்க நலங்களுடனும் இது ஏற்கனவே முரண்பட்டுள்ளமை இதன் முற்போக்குபாத்திரத்தின் வெளிப்பாடாகும்|-| இவ்விவாதத்தில் புலிகள் பாத்திரத்தை இப்படி சொல்லுகிறார்கள். இது சரியானது அல்ல. மோதல்கள் இரண்டுவிதமாக இருக்கமுடியும். உயிர்ப்பு குறிப்பிட்டது போல் நிகழும் அல்லது ஒரு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இன்னும் ஏகாதிபத்தியத்தியத்தின் வழிகாட்டலுடன் மோதல் நிகழும். இதில் புலிகளின் பாத்திரம் எந்தவகையானது எனின்: ஏகாதிபத்தியத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலானது.
பக்கம் 25-இல்ஷஷகுறிப்பிட்ட வரலாற்று சக்தியின் உருவாக்கத்தின் பின்பே குறிப்பிட்ட கருத்துக்களும், தத்துங்களும் உருவாகின்றன. மாக்ஸியம் என்பது பாட்டாளி வர்க்கதின் தோற்றத்திற்கு முன்பே தோன்றியதல்ல என்பதுதானே. இக்கருத்தில் தூண்டிலின் கருத்து சரியானதென நாம் பார்க்கிறோம். குறித்த சக்தி யதார்த்தில் இருக்காமையிலேயே கருத்து இருக்கமுடியம். உதாரணமாக கம்யுனிசம் உருவாகாமலேயே கம்யுனிஸ்ட் தொடர்பான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. பாட்டாளிவர்க்ககட்சி இல்லாமைலேயே ஒரு நாட்டில் கட்சி குறித்து கருத்திருக்க முடியும். முதலாளித்தும் தோன்ற முன்பே( நிலப்பிரபுத்துவக்காலத்தில்) முதலாளித்துவக் கருத்துக்கள் இருந்தன. ஒருவன் முதலாளியாக இல்லாமலேயே அவன் முதலாளித்துவ சிந்தனையை கொண்டிருக்க முடியும். பாட்டாளியாக இல்லாமலேயே பாட்டாளி வர்க்க சிந்தனையிருக்கமுடியும். குறித்த சக்திஇல்லாமேயே கருத்து உருவாகமுடியும்.
பக்கம்-28-இல்ஷஷஜனநாயகம் இல்லாததால் தரகுமுதலாளித்துவத்தை பிரதிநிதித்துவபடுத்துவதாக கூறுவதோ|| பக்கம்-29-இல்ஷஷ சமர் நாட்டில் தேசிய முதலாளிகள் இல்லாமல் இருப்பதும், புலிகள் முதலாளித்துவ சித்தாந்தை கொண்டிருப்பதால் அவர்கள் தரகுமுதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாலும்,புலிகளின் பாசிமானது இதன் குறிபபான குணம்குறி|| என உயிர்ப்பு குறிப்பிடுவது தலைகீழான அகநிலைக் கண்ணோட்டமே. ஏனெனில் சமர் புலிகள் மீதான ஆய்வின் மீது பல ஆதாரங்களை நீங்கள் குறிப்பிட்ட விடயத்துக்கு அப்பால் முன்வைத்துள்ளது. புலிகளின் இன்றைய சர்வதேச உறவுகள், ஏகாதிபத்தியத்திடம் பயிற்சிகள் பெற்றதும், முதலாளித்துவத்துக்குட்பட்ட அனைத்து பிரிவு மக்கள்மீதும் நடத்தும் சுரண்டல் இலங்கை இந்தியா அரசுக்களுடன் நடத்திய பேரங்கள்(இவை தமிழ் மக்களின் பிரச்சனைகள் மீதல்ல........) இப்படி பல.
பக்கம்-31-இல் ஷஷஎமது போராட்டத்தில் தோன்றிய பல்வேறு அரசியல் போக்குகளையும் இப்போது இனம்காணமுயல்வோம். தமிழ்தேசத்தில்; ஆரம்பமான பூர்சுவாஜனநாயகப் போராட்டவடிவங்களாக இருந்தன. பாராளமன்றவாதம், அகிம்சை போராட்டங்கள், பேரம்பேசுதல்,பேச்சுவார்தைகள், அரசுடன் இணக்கங்காணுதல்,அரசு உறுதிமொழிகளை கைவிடுதல்|| என்ற இவ்விவாதத்தில் போராட்டவடிவங்கள் என குறிப்பிட்ட சம்பவங்கள் பூர்சுவாவுக்கு மட்டுமானதில்லை. இதிலிருந்து தவறான முடிவிற்க்கு வந்தடைகின்றனர். குறித்த போராட்டவடிவங்களை தரகு முதலாளிகள்,நிலப்பிரபுகள் கூட முன்னெடுக்கமுடியும். ஆரம்ப போராட்டங்கள் தரகுமுதலாளித்துவ கோரிக்கையாகவேயிருந்தது. மேற்குறிப்பிட்ட போராட்டவடிவங்களை தமிழ்தரகுமுதலாளித்துவ வாக்கம்,சிங்கள தரகுமுதலாளித்துவ வர்க்கத்துடன் மேற்கூறிய வழிகளில் போராடினார்கள். இதை நீங்கள் பக்கம்-32-இல் ஏற்றுக்கொள்ளுகின்றீர்கள். ஆரம்ப காலதேசியமானது தமிழ்தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கிறது எனலாம். அரசுடன் சமரசம் செய்தல்,சலுகைபெறுதல் போன்றவை ஏகாதிபத்திய சார்புநிலைகலே|| பக்கம்-33 இல்ஷஷ தமிழ் சமூகத்தில் பலம் பெற்று நிற்க்கும் வர்க்கங்கள் இவர்களை தனது சித்தாந்த செல்வாற்க்குள் கொண்டுவருவது கஸ்டமானதல்ல. தனித்துவமான சித்தாந்தம் என்றவொன்று புலிகளிடம் இல்லாத போது இது சிரமமானதில்லை|| இக்கருத்து புலிகளின் வர்க்க அடிப்படையை நிராகரிப்பதாகும். பின்பு பக்கம்-34-இல் புலிகளின் சித்தாந்தம் தொடர்பாக இவர்களின் வர்க்க மூலங்களின் ஒன்றான உதிரி முதலாளித்துவத்தின் தன்மைகயென்று இன்னுமொரு விளக்கமாகும். புலிகளுக்கு ஏதோவொருசித்தாந்தம் இருக்கின்றது. அதுஇல்லையென வாதிட முற்படுபவர்கள் மார்க்ஸிச அடிப்படையே நிராகரிப்பதற்க்கு இட்டுசெல்வார்கள்.
பக்கம் 29-இல் சில அமைப்புக்கள் வல்வெட்டித்துறையுடன் கொண்டுள்ள உறவுகளையும் கருத்தில் கொண்டால் கள்ளகடத்தலில் ஈடுபடும் உதிரிமுதலாளிகளின் பிரிவு ஒன்று சில அமப்புக்களுடன் கொண்டுள்ள தொடர்பு. பக்கம்-31-இல் தமிழ்பிரதேசத்தில் குறிப்பாக யாழ்பாணத்தில் கள்ளகடத்தல் குறிபபிட்ட தொழிலாகவே நடைபெற்று வந்தது. கடந்த காலத்தில் தழிழ் பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கையிருந்து இதக் பங்கு என்ன? இந்த உதிரிமுதலாளிகள் சமூகத்தில் வகிக்கும் இடமென்ன? பக்கம்-34-இல் சமூநலன்களின் அக்கரையின்மை தரகுமுதலாளிகளுடன் கூடஇணக்கம் காணமுடியாத தன்மை, போதைபொருட்கள் மற்றும் பலவிதமான சமூகவிரோத நடவடிக்கைகளுடனான தொடர்பு போன்ற அம்சங்கள் இவர்களது வர்க்கமூலங்களின் ஒன்றான, உதிரி முதலாளித்துவ வாக்கத்தின் தன்மைக்கு இன்னும்மொரு விளக்கமாகும். மேற்குறிப்பிட்ட பிரதிநிதிகள் புலிகள்யென கூறமுயல்கின்றனர். தரகுமுதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் இல்லையென சொல்லி முன்வைக்கும் இக்கருத்க்கு மாறாகவே பலதடவை புலிகள் தரகுமுதலாளிகள் எனசொல்லியும் விடுகிறார்கள் . பக்கம்-34-இல் குட்டிமுதலாளித்துவ அமைப்பாக தோன்றிய புலிகள் வளர்ந்துவிட்ட தமது சமூகஅந்தஸ்த்து, அதிகாரம் காரணமாக பொருமளவு மூலதனத்தை திரட்டிக்கொண்டு தரகுமுதலாளிவர்க்கமாக வளர்ந்து வரும் ஒரு வளர்சிசி கட்டத்திலிருக்கின்றார்கள். பக்கம்-32-இல் தமிழ்சமூகத்தில் பலம்பெற்று நிற்கும் வர்கங்கள் இவர்களை(புலிகளை) தமது சித்தாந்த செல்வாக்கிற்குள் கொண்டு வருவது கஸ்டமானதல்ல. பக்கம்-33-இல் புலிகள் ஏனைய அம்சங்கள் சுயசார்பு பொருளாதாரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூர்சுவா ஜனநாயகம் போன்றவற்றில் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் பண்புகளுக்கும் எதிராகவேயுள்ளார்கள்.பக்கம்-33-இல் புலிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் செயற்படும் சில சக்திகள் திட்டவட்டமாக அமெரிக்க ஏகாதிபத்திய சார்புடையவர்கள் என்பது கவனிக்கதக்கது. புலிகள் பலவிதத்திலும் முன்னெடுக்கும் தமது அரசியல் மூலம் வெளிபடுத்தும் அந்த வர்க்கத்தின் உடையவை. பக்கம்-33-இல் திட்டவட்டமான, உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு கிடையாது.(இதில் நாம் உறுதியான ஏகாதிபத்திய சார்புஉண்டு எனகருதுகின்றோம். இதில் ஏகாதிபத்தியத்தியத்திற்கு இடையிலான முரண்பாடுகளையும்,அதன் முகவர்களையும் ஒன்றாக இருக்கமுடியாததையும் உயிர்ப்பு பார்க்க தவறுகின்றது.)
தமது குழுநலங்களுக்கு ஏற்ப இந்திய அரசையோ,இலங்கையரசையே இஸ்ரேல் போன்ற ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளையே காலத்துக்கு காலம் சார்ந்து நின்று பக்கம் 32-இல் சுயவுற்பத்தி போன்றவற்றில் எந்த அக்கறையும் காட்டாத இவர்கள் இறக்குமதியாகும் அல்லது தென்னிலங்கையிலிருநு.து கொண்டுவரும் பொருட்களுக்கு வரிவிதிப்பதையே பக்கம்31இல் தமக்கேன (வறியவிவசாயிகள்,வறிய மீனவர்கள்) ஒருவர்க்க ஸ்தாபனத்தையோ தனியான அரசியல் கோரிக்கையோ முன்னெடுக்காது தரகுமுதலாளித்துவ சக்திகளையே பலப்படுத்தி வருகின்றனர்.பக்கம்-30-இல் பணக்கார விவசாயிகள் கணக்கார மீனவர்கள்(மீனவமுதலாளிகள் சம்மாட்டிகள்)போன்றோர்களும் நவின உற்கத்தி முறைகள் காரணமாக ஏகாதிபத்திய பொருளாதர வலைப்பின்னலுடன் நெருக்கமாக பிணைந்துள்ளார்கள். இவர்கள் தரகுமுதலாளிவர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்|-. பக்கம்-30இல் சந்தையில் தமக்குரிய பங்கை சிங்கள முதலாளித்துவ வர்க்கமானது கொடுக்க மறுத்தனர். தமிழ்தரகுமுதலாளிவர்க்கமானது தேசியத்தை முனெடுக்க நேர்ந்ததுள்ளது.||. பக்கம்-30 இல்; இன்னும் கூட தனது பிழைப்புக்காக (தரகுமுதலாளிகள்) பலதொடர்புகளை அரசுடன் கொண்டுள்ளது. அரசுடன் சமரசம் செய்து வைக்க முயலும் தொடாபாளராக செயற்படும் கொழும்பிலுள்ள பிரமுகர்கள் குறிப்பாக இந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள். சிங்கள அரசை இவர்கள் எதிர்த்தாலும்,ஏகாதிபத்தியத்தையே,அதன் சுரண்டல்களையே எதாக்கமாட்டார்கள். பக்கம்-28-இல் தரகுமுதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்திய(புலிகளை ஏகாதிபத்திய சார்பாளர்கள் என உயிர்ப்பு ஏற்றுகொள்கிறது.)சார்பாகவே முன்னெடுக்கின்றது||. பக்கம்-28-இல் பல்வேறு ஏகாதிபத்தியங்கள் முட்டிமோதிக்கொள்ளும் நிலையில் காலனி நாட்டிலுள்ள ஒரு ஏகாதிபத்தியங்களை சார்ந்த: (இது காலனிஇல்லாத இலங்கை போன்ற நாடுகளுக்கும்)தரகுமுதலாளித்துவ வர்க்கமானது: இன்னொரு ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தேசியத்தை சார்ந்து நிற்கவோ அல்லது சிலவேளைகளில் தேசிய இயக்கத்துக்கு தலைமைதாங்கவே செய்யலாம்.
மேற்குறிபிட்டவாதங்கள் உயிர்ப்பு இக்குறியீட்டில் உள்ளவை நாம் உபயோகித்தலை, உதிரிமுதலாளிகள் என்ற கருத்துக்கு எதிரான தரகுமுதலாளித்துவமே என உயிர்ப்பு எழுதிய இக்கருத்துக்களையே,நாம் இனி தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகள் என உயிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் முன்வைக்கிறோம். இருந்தும் தொடந்து விவாதிக்க விரும்புகிறோம்.
உதிரிமுதலாளித்துவம் என்ற இப்பதம் சரியானதா? உதிரிப் பாட்டாளிகள் என்பது ஒரு நிறுவனமாகாத வகையில் உதிரியாக ஆங்காங்கே சிதறியருப்போரை குறிப்பதாகும். இவர்கள் லும்பன் வாழ்வைக்கொண்டிருப்பார்கள். போராட்டத்தில் பாட்டாளிகளுக்கு சார்பாகவும் எதிர்ப்புரட்சிக்காலத்தில் எதிர்ப்புரட்சியாளர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் உதிரிமுதலாளிகள் ஒரு வர்க்கமாக இருக்க முடியாது. தொழில் ரீதியாக பல்வேறு உற்பத்திகளைக்கொண்டமுதலாளிகள் எப்பொழுதும் உதிரியாக இருக்கும் இவர்கள் எப்பொழுதும் மையப்பட்ட அரசை சார்ந்திருக்கும் இவர்கள் முதலாளிகளே. இதில் உதிரிமுதலாளித்துவம், முதலாளித்துவத்துத்துக்கு இடையில் இவ்வேறுபாடும் கிடையாது.
இனி நீங்கள் குறிப்பிடுவது போல் உதிரிமுதலாளினள் என எடுப்போமாயின், கடத்தல் கார்களை குறித்தவர்க்கத்தின் பிரதிநிதியாக காட்டமுற்பட்டுள்ளீர்கள். இக் கடத்தல்கார்கள் எப்பொழுதும் ஏகாதிபத்தியத்தின் பொருட்களையே கடத்தியவர்கள். இவர்கள் சட்டபூர்வமாக சிங்கள தரகுமுதலாளித்துவத்துடன் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாமையினால் அதை சட்டவிரோதமாகவே கடத்திவருகின்றனர். அந்நியப்பொருட்களின் சந்தையை உருவாக்கவும் ,ஊக்குவிக்கும் தன்மை தரகுமுதலாளித்துவத்தின் செயற்பாடே. இன்னெருபக்கத்தில் உதிரிமுதலாளிகள் வர்க்கபிரதிநிதிகள் புலிகளெனின்,உதிரிமுதலாளிகளின்(முதலாளிகள்)வளர்ச்சிக்கு புலிகள் தடைவிதிக்கின்றனர்.. கடத்தல் பொருட்களில் வரும் லாபத்தில் அரைவாசியைக் கோருகிறனர். எனவே புலிகள் உதிரிமுதலாளித்துவத்துக்கு எதிரானவர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல் பணக்கார விவசாயிகள்,பணககார மீனவர்கள்போன்றோரும் நவீன உற்பத்திமுறைகள் காரணமாக ஏகாதிபத்திய பொருளாதார வலைப்பின்னலுடன் நெருக்கமாக பிணைந்துள்ளனர். எனவே புலிகள் தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான பிரதிநிதியாக உள்ளனர்.
நாம் இவ்விவாதத்தில் தொடர்ச்சியாக புலிகள் வர்க்கமூலத்தை மேல்வைத்த தொகுப்புக்களில் இருந்து தரகுமுதலாளித்துவத்தை சார்ந்தே என்பதை தெளிவுபடுத்துகின்றது. புலிகளின் கோரிக்கைகளை பார்ப்பதைவிட அக்கோரிக்கைகளின் பின மறைந்திருக்கும் வர்க்கநலன் என்ன என்பதை ஆராயவேண்டும். தமிழ் தரகுமுதலாளித்துவம்,சிங்கள தரகுமுதலாளித்துவ சக்திகளிடமிருந்து சந்தைக்காக போட்டிபோட்டு இன்று தேசவிடுதலைப்போராட்டத்தை (எல்லாவர்க்கங்ளும் போராடுவதுபோல) தனது தலைமையில்முன்னெடுத்துள்ளது. மற்றும் ஏகாதிபத்தியத்துக்கிடையிலான முரண்பாடுகள் ஒரு நாட்டில் இருக்ககூடிய தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகள்,போராட்டத்தை தலைமைதாங்குவதுடன் முரண்பட்ட ஏகாதிபத்தியத்துடன் மோதவும் முடியும். புலிகள் இன்று வறிய கூலி விவசாயிகள் முதல்,கடத்தல்கார பெரும் முதலாளிகள் வரை சுரண்டலை நடத்துவதால், போராட்டத்துக்கு ஆதரவான சக்திகளை விட போராட்டத்திற்க்கு எதிரான சக்திகளை சார்ந்தே போராடமுற்பட்டுள்ளனர். புலிகளுக்கு ஏகாதிபத்திய எதிர்ப் கிடையாது என்பதை தூண்டில்,உயிர்ப்பு ஏற்றுகொள்ளுவதால் புலிகள் ஏகாதிபத்திய சார்பாளர்களாகவே உள்ளனர். இவர்கள் ஏகாதிபத்தியத்திடம் பெற்ற உதவி(ஏகாதிபத்தியங்கள் முட்டாள்கள் அல்ல)இவர்கள் ஏகாதிபத்தியம் சார்ந்தே உள்ளதை தெளிவாக்குகின்றது. இவர்கள் பகிரங்க அரசியல்கோரிக்கைகள் எப்பொதும் இவர்களையே பாதித்தது கிடையாது . இவர்களின் இரகசிய அரசியல் கோரிக்கைகளை(தரகு சார்ந்த நலங்களை) இரகசியமாக பெற்றுக்கொள்ளமுனைந்ததை கொண்டு இவர்களின் வர்க்கநலன் தரகுமுதலாளித்துவம் சார்ந்ததை,புலிகள் அடிக்கடி நடத்தும் பேரங்கள், அதில் ஏற்படும் தேல்வியும் இன்று இருக்கும் அரசு அமைப்புக்குள் (தரகுமுதலாளித்துவம்,நிலப்பிரபுத்துவ அரசுக்குள்) சுரண்டல் தொடர்பான பங்குகளுக்காகவே. இது தரகுமுதலாளித்துவத்தின் வெளிப்பாடே. புலிகளின் வெளிநாட்டுத் தொடபாளர்கள் நேரடியாக ஏகாதிபத்தியதை சாந்தவர்களே. இதுவும் தரகுமுதலாளித்துவத்தை பிரதிபலிக்கிறது. இஸ்ரேல் இந்தியா.. பெற்ற பயிற்சிகள் ஏகாதிபத்தியங்களிடம் பெற்ற இராணுவ உதவிகள் தரகுமுதலாளித்துவத்தின் பிரதிநிதிகளுக்கானது. சர்வதேச போதைவஸ்து தொடர்பு(உதிரிமுதலாளித்துவத்தை வளர்ப்பதல்ல) இது தரகுமுதலாளித்துவமே.(இதை சில மூன்றாம் உலகநாடுகளின் அரசுக்களே செய்கின்றன அல்லது மறைமுகமாக அங்கீகரிககின்றனர்)தேசிய விடுதலையை முன்னெடுக்கின்ற முதலாளிகள் (உதிரிமுதலாளிகள்) கூட ஒரளவு ஜனநாயகத்தையும் மற்றைய சிறுதேசிய இனத்துடன் இணக்கப்போக்கை கைக்கொள்ளும். ஆனால் புலிகள் முஸ்லீம் தேசிய இனத்தை ஒழிக்க முற்பட்டுள்ளனர். சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் பாசிசம் தரகுமுதலாளித்துவத்தின் செயற்பாடே தமிழ் ஈழத்தில்; தளப்பிரதேசத்தை கொண்டிருக்கும் புலிகள் தேசிய பொருளாதாரததின் மீது அக்கறையோ, தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கவின்றி அந்நியப் பொருட்களைச்சாந்து செயற்படும் இப்பொக்கு தரகுமுதலாளித்துவ செயற்பாடே;. புலிகள் போராட்டத்துக்கு பாவிக்கும் ஆயுதங்களில் உற்பத்திசெய்யக்கூடிய பகுதிகளைக் கூட சொந்தத்தில் செய்யாமல் வெளிநாடுகளில் இருந்து (இன்று ஏற்பட்ட நெருக்கடியினால் சிலவற்றை செய்கின்றனர்) பெற்றுக்கொள்ளும் இப்போக்கு ; தரகுமுதலாளித்துவ செயற்பாடே. இவைகள் புலிகள் தரகுமுதலாளித்துவத்தின்;;;; சிறப்பான பிரதிநிதிகளாக செயற்படுவதைக்காட்டுகிறது. இவ்விமர்சனம் தொடர்பாக வாசகர்களிடமிருந்து விமர்சனங்களை கோருகின்றோம்.;


சமர்,தூண்டில்,உயிர்ப்பு, மனிதம் இதழ்களில் நடைபெற்றுக ;கொண்டிருக்கும் தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து வெளிவரும் தேடல் இதழில் தேசிய சக்திகள் தொடர்பாக கட்டுரை வெளிவந்துள்ளது. தேடல் இதழ் 10இல் சி.சிவசேகரம் எழுதிய கட்டுரையை நாம் விமர்சனத்துக்கு முன்னெடுக்கும் அதேநேரம் தேடல் இதழ் 10 க்கு முந்திய இதழ்கள் எமக்கு கிடையாமல். அதில் இது தொடர்பான விவாதம் நடந்ததாவென தெரியாமல் உள்ளது.

1970 களிலும் 1980களிலும் உலகநிலைமைகள் இளைஞர் மத்தியில் மார்க்சிச, சோசலிச சிந்தனைகள் பற்றிய அக்கறைய ஓரளவு தூண்டின. பழைய அரசியல் தலைமைகள் வெற்றிகரமாத் தமிழரின் பாராளுமன்ற அரசியலிருந்து ஒதுங்கிய இடதுசாரி சிந்தனைகள் 1970களுக்குப் பின் இனைஞர்களைக் கவர்ந்த காரணங்கள் நாட்டின் உள்ளேயும் இருந்தன. தமிழ் தேசிய வாதத் தலைமையின் வலதுசாரி அரசியலின் இயலாமையும் 1971 சித்திரை கிளர்ச்சியும் 1970களுக்கூடாக படிப்படியாக விரிவடைந்து 1977க்குப் பின் உக்கிரமடைந்த அரசு ஒடுக்குமுறையும் வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் தமிழர் முன்னெப்போதும் கண்டிராத இனவாத வன்முறைக்கு முகம் கொடுக்க நேர்ந்தமையும் இடதுசாரி முனைப்புக்கட்கு ஆதாரமாக இருந்தன.என்ற வாதத்தில் 1970களில் வளர்ச்சியடைந்த ஜே-வி-பி மார்க்சியத்தை சொல்லிக்கொண்டாலும், ;அவர்கள் ஏப்போதும் அஎப்படையில் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியும், 1970ளில் எழுந்த உலகப் பொருளாதார நெருக்கடியும், இளைஞர்களை புரட்சியின் பக்கத்திற்கு தள்ளியது. புரட்சியை விரும்பிய இளைஞர்களை ஜே-வி-பி-யும்,அதே நேரம் சிறிமாவோ தலைமையிலிருந்த இடதுசாரிக் கருத்துக்களை உச்சரித்தபடி சுரண்டும் வர்க்கங்களைப் பாதுகாக்க முயன்றனர். மற்றும் பழைய அரசியலிருந்து ஒதுங்கிய இடதுசாரிச் சிந்தனைகள் என்ற வாதம் அடிப்படையில் தவறானது. 1970க்கு பின் தமிழ்த் தலைமைகள் தீவிரமாக முன்பைவிட ஒன்றினைந்து பலம் பெற்றனர். 1977களில் தேர்தல் வெற்றி இதை தீர்மானகரமாக பறைசாற்றுகிறது.1980 ளில் பாராளுமன்ற அரசியல் தலைமையை இடதுசாரிகள் ஒதுக்கவில்லை, மாறாக 1977 தேர்தலில் எந்த கோசத்தை முன் வைத்து வென்றார்களோ அதே கோசத்தை(வலதுசாரிகள்) முன்னெடுத்த ஆயுதம் ஏந்தியோரே அவர்களை ஒதுக்கினர். 1977ளின் பின் தீவிரமடைந்த வன்முறைக்கு மூலகாரணமாக (சுரண்டல் பேர்வழிகள்)1970ளில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோவுடன் இருந்த இடதுசாரிகளே பிரதானமாகவும் இருந்தனர். இடதுசாரிகள் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தலை அமுலுக்கொண்டு வந்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சனையை இனவாத வன்முறைக்கூடாக அடக்கினர்.

1970னளில் வலதுசாரிகளின் இயலாமையெனக் குறிப்பிடும் கடடுரையாளர் 1970இன் பின் வந்த இடதுசாரிகள் மக்களின் பிரச்சனையைத் தீர்த்ததாகப் பறை சாற்றுகின்றார். இடதுகள் கூட இயலாமையால் தான் தேசியப் பிரச்சனையை முன் தள்ளி தமது இயலாமையை வெளிக்காட்டினர். அத்துடன் 1977இல் இடதுசாரிகளின் இயலாமை மீண்டும் வலதுசாரிகளை ஆட்சியில் ஏற்றினார். எனவே கட்டுரையாளர் 1970க்கும் 1977க்குமிடையிலான அரசை(சுரண்டும் வர்க்கத்தை) நியாயப்படுத்துகின்றார்கள்.

இன்று புலிகள் அரசாங்ககத்தின் இன ஒடுக்கல் யுத்ததிற்கு முகம்கொடுக்கும் போராட்ட சக்கியாக உள்ளனர். ஆயினும் நிலைமை மாறக்கூடியது. என்ற வாதத்திலோ, தொடர்ச்சியான விவாதத்திலோ முக்கியமான ஒன்றைப்பற்றி ஆராயத் தவறியுள்ளார். வர்க்க நோக்குப் பற்றி சொல்லும் கட்டுரையாளர் தேசியத்தையும், பாசிசத்தையும், வர்க்கத்துடன் ஒப்பிடத்தவறுவது ஏன்?. வர்க்கத் தன்மையுடன் ஒடுக்குமுறை மாறுபாட்டு தன்மையை..... பார்க்காமல்; விடுவதன் ஊடாக இக்கட்டுரை தவறானதாகவுள்ளது. இது வர்க்கத்தன்மையுடன் சம்மந்தப்பட்டது. அதைக் கட்டுரையாளர் சொல்லத் தவறி, தனது அரசியல் பார்வை தெளிவாக வாசகர்களுக்கு இனம் காட்ட தவறுகின்றார்.

இவ்வாறான பிறழிவுகள் ஒரு விடுதலை இயக்கத்தின் முற்போக்கான தன்மையின் மறுதலிப்பாகும். இவற்றினூடு அந்த இயக்கத்தின் போராட்டம் தடம் புரளலாம். ஆயினும் இவை ஒரு இயக்கத்தின் தேசிய தன்மையை மாற்றிவிடுவதில்லை. தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று எவ்வாறு மாறுபடும் தேசிய, சர்வதேசிய நிலவரங்கட்கேற்ப ஏகாதிபத்தியத்துடன் தனது நாட்டின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் தனது உறவை மாற்றிக் கொள்ளுகிறதோ அவ்வாறே பாட்டாளி வர்க்கத் தலைமையற்ற ஒவ்வொரு தேசிய விடுதலை இயக்கமும் ஊசலாட்டத்துக்குள்ளாகின்றது. இதில் தேசிய முதலாளிவர்க்கம் ஒன்று எனச் சொல்லி அதைப் பொதுப்படையாக அரசு, மற்றும் விடுதலை இயக்கங்களுக்கு பொதுவாகப் பொருத்த முயன்றுள்ளனர். இவ்விவாதம் புலிகளை தேசிய முதலாளிகள் எனச் சொன்னதாகவும் வாதிடலாம். சொல்லவில்லை எனவும் எனவும் வாதிடலாம். அது அல்லது இது எனக் தேவைக்கு வசதியாக வாதிடும் வகையில் அமைந்ததே. ஏகாதிபத்தியத்தின் உறவுடன் எப்போது அரசோ,விடுதலை இயக்கங்களோ,ஊசலாட்டத்திற்கும், ஒடுக்கும் வர்க்கத்துடன் உறவை மாற்றுகின்றதோ அன்றே குறித்த சக்தி தேசிய முதலாளித்துவம் என்ற நிலையிலிருந்து தரகு முதலாளிகளாக மாறிவிடுகின்றனர். இச்செயற்பாடு பற்றி ஒரு புரட்சியில் எதிரிபற்றிய விடயத்தை தெளிவாக சுட்டிக்காட்டப்படாவிடின் பாரிய தவறு இழைக்கப்படும். குறித்த இச்சக்திகள் போராட்டத்தில் எதிரி நிலைக்கு மாறிவிடுகின்றனர். இவர்கள் கூட தேசியத்தை முன்னேடுக்கமுடியும். கிடலர்,காந்தி,அமிர்தலிங்கம்...... என நீண்ட வரலாற்றில் அனைவரும் தேசியத்தை உயர்த்திப்பிடித்தனர். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றச் சேவை செய்யமுயன்றனர். இவர்கள் எப்போதும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கு எதிரியே. தேசியத்தை முன்னேடுக்கின்றார்கள் என்ற ஒரு வரையறையை மடடும் கொண்டு இவர்களைத் தேசிய சக்தியாகப் பார்க்கக்கூடாது. இவர்களின் வர்க்கமூலம் அதிலிருந்து அவர்களின் நோக்குகளை ஆராய்வதின் மூலம், ஆரம்பம் முதலே அம்பலப்படுத்தியழிக்க வேண்டும்.



திராவிடப் பிரிவினை தமிழ் நாட்டின் சுயட்சி போன்ற கொள்கைகளைக் கைவிட்டதால் தி-மு-க போன்ற சக்திகள் தேசிய சக்திகளாக இல்லாமல் போய்விடவில்லை. என்ற விவாதத்தில் மேற்குறிப்பிட்து போல் சுயாட்சி கோரினார் என்ற காரணம் தேசிய சக்தியாக பார்க்க போதுமானதில்லை. அக்கட்சியின் வர்க்க மூலததிலிருந்தே தேசிய சக்தியா என ஆராயமுடியும். சுயாட.சியைக் கை விட்ட பின்பும் தி-மு-க இன்று தேசிய சக்தியாகக் காட்ட முனையும் சிவசேகரம் வர்க்க அடிப்படையிலிருந்து விலகிய நிலையில் வெளிவந்த கருத்துக்களே. தி-மு-க- ஆட்சி ஏறிய காலத்தில் கூட அவர்கள் தேசிய நோக்கில் சமுதாயத்தை மாற்றவில்லை. இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில் ஆட்சி ஆட்சியதிபாரத்திலுள்ள வர்க்கமான தரகு முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவத்திற்குச் சேவை செய்வதில் சிறந்த பிரதிநிதிகளாகவே இருந்தகர். அவர்கள் கூட பெரும் நிலப்பிரபுகளாகவும், துருகு முதலாளிகளாகவுமே உள்ளனர். அவர்களைத் தேசிய வாதிகள் எனச் சொல்ல வரும் சிவசேகரம் எதையோ நியாயப்படுத்த முயல்கின்றார்.

இன்று விடுதலைப் புலிகளின் வர்க்கச் சார்பு பற்றிய கேள்வியே நமக்கு முக்கியமானது. அவர்களது நேச சக்தியார் எதிரிகள் யார் என்பதை வர்க்க நலன்களே தீர்மானிப்பன. புலிகளின் வர்க்கத்தைப் பற்றி குறிப்பிட்டு கேள்வி கேட்டதுடன் விட்டுவிடுவதால் தேசியமுதலாளித்துவ வர்க்கம் ஒன்று என்ற சிவசேகரம் சொன்ன வரையறை புலிக்குப் பொருந்தாது எனக் கொள்ளளாம். புலிகளின் வர்க்கத்தைச் சுட்டிகாட்டாமல் புலிகளின் தேசிய தன்மை தொடர்பாக, தேசிய சக்திகளாக இனம் காணப் புறப்பட்ட சிவசேகரம் வர்க்க நோக்கிலிருந்து தேசிய சக்தியெனச் சொல்லாமை புலப்படுகின்றது.இதன் பின் அவர்களின் நேசசக்திகள் எதிரிகள் பற்றி கதைக்க முற்படும் சிவசேகரம் புலிகளின் தத்துவவாதியாக நின்று ஆராய முற்படுகின்றார்.



அவர்களை(புலிகளை) ஆதரிப்பதற்கோ,எதிர்ப்பதற்க்கோ அவர்கள் தேசிய சக்தியா, இல்லையா என்ற கேள்வியை மட்டும் நாம் பயன்படுத்த முடியாது. இதில் முடியாதெனின் எதை வைத்துத் தீர்மானிப்பது. இதை சொல்லாமல் நழுவி விடும் சிவசேகரம் முடியாது எனச் சொல்லும் முறை விமர்சகர்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோரிய பணியல்ல. புலிகளின் வர்க்கத்தில் இருந்தே தேசிய சக்தியா என முடிவுக்கு வரவேண்டும். இராணுவத்திற்க்கு எதிராகப் போராடுகின்றார்கள் என்ற ஒரு எடுகோளிருந்து முடிவுக்கு வரமுடியாது. ஆனால் வர்க்க மூலத்திலிருந்து ஒரு சக்தியை தேசிய சக்தி யென அறிந்து கொண்டால் அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கவேண்டும்.



விடுதலைப்புலிகள் தேசிய சக்திகளல்ல என்போர் அவர்களைப் பாசிச சக்திகள் என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறோம். பாசிசம் என்பது தேசிய வாதத்தின் மிகவும் கொடூருமான வடிவமாக இருக்கையில் தேசிய சக்திகள் இல்லாதொரு இயக்கம் பாசிச சக்தியாக எவ்வாறு விருத்தியடைய முடியும்? இவ்விவாதம் தேசிய சக்திகளை நிறுவும் நோக்கில் பாசிசம் தேசிய சக்திகளுக்கு மட்டும் உரிய பண்பென வாதிட முயல்கின்றனர். பாசிசம் என்பது தேசியத்தை முன்னேடுப்பவர்களும்,தேசியத்தை முன்னெடுக்காதவர்களும் கூட பயன் படுத்தமுடியும். தேசியத்தை முன்னெடுக்கும் சக்திகளுக்கெதிராக செயற்படும் அரசுகளும் பாசிசத்தையே பயன் படுத்துவதைப் பார்க்க முடிகுPறுது. இதை வியட்நாம்,இலங்கை, சீனா.... என்று அனைத்து அரசுகளும் நாட்டில் எழும் தேசிய எழுச்சியைப் பாசிசத்தைக் கொண்டு அடக்கின்றது. எனவே தேசியத்தின் குணம் குறி பாசிசமல்ல. பாசிசத்தை எந்தசக்தியும் கையாளும் எனவே பாசிசம் என்ற சொல்லை சிவசேகரமே ஆழமான அறிவில் நின்று சொன்னதாக தெரியவில்லை. தேச விடுதலைப் போராட்டம் தீவிரமடையும் நாடுகளில் அவ்வரசுக்கள் பாசிச அடக்குமுறையை மக்கள் மீது ஏவுகின்றனர்.



பாசிவாதி என்பது வகைச் சொல்லாக பயன்படுத்துவதாகச் சொல்லும் சிவசேகரம் அடாவடித்தனமும், எதேச்சையதிகாரமும் மட்டுமே பாசிசத்தின் அடையாளங்களாயின் என்று கேட்பதனூடாக இதற்க்கப்பால் பாசிசத்தை இனஙகாண என்ன வரையறையை முன்வைக்க முனைகின்றார். அது பற்றி விட்டுவிடும் சிவசேகரம் தம்முன்னுள்ள சக இயக்கங்களின் மோதலை காட்ட முயல்கின்றார். இயக்கங்களுக்கிடையிலான மோதல் என்பது ஒருவர்க்க நலன் சார்ந்ததே. பாசிசம் தொடர்பானதல்ல. பாசிசம் என்பது ஒரு இயக்கத்தின்,அரசின் பண்பாகவே இருக்கும். பாசிசவாதி என்பதுவகைச் சொல்லல்ல. அதுவொரு சக்தியிள் செயற்பாட்டை வகைப்படுத்தும் வகையில் அமைந்ததே.



ஸ்டாலின் வாதி, ரொஸ்க்கியவாதி,குட்டிபூர்சவா போன்ற பதங்கள் எவ்வாறு எதிரிகளை மட்டும் தட்டும் நோக்குடன் மடடுமே பயன்படுகின்றனவோ என்ற வாதத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது எனின் சரியாகப் பயன்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றார். அப்படியிருக்க பொதுப்படையாக எதியை மட்டம் தட்டப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லி குட்டிப்பூர்சுவா கருத்துக்களை வெளியிடுபவர்களை பாதுகாக்க முனைகின்றார். ஸ்டாலினியவாதி என்ற கருத்துக்கள் எடுப்பின் அவர்கள் ஒவ்வொருவரும் தனியான தத்துவத்தை கொண்டிருந்தவரென அழைக்கப்படலாம். ஸ்டாலின் அப்படித் தனியான தத்துவத்தை மார்க்சிசத்திலிருந்து வேறுபட்டுக்கொண்டிருக்கவில்லை என நாம் கருதுகின்றோம். அந்தவகையில் ஸ்டாலின் வாதி என்ற பதம் அர்த்தமற்றது.



பாசிசத்தின் பிராதான தன்மை வலதுசாரி, தேசியவாத சர்வதிகார அரசியலாகும். பாசிச நடைமுறையில் சில கொடும் செயல்களை சில விடுதலை இயக்கங்களி வரித்துக் கொண்டுள்ளன. அத்தகைய பாசிசப் பண்புகளையும் இப்படியான பணபுகளைக் கொண்டுள்ள இயக்கங்களும் பாசிச வாதிகளே. இவர்களை பாசிசவாதிகளெனச் சொல்ல முடியாதெனச் சொல்லி பாசிசவாதி என்ற சொல் வெறும் வகையகப் பயன்படுகின்றது என்பது கற்பனையானது. பாசிசப் பண்பை ஏற்றுக்கொள்ளும் சிவசேகரம் அதைப் பாசிசமில்லை எனச் சொல்லி வகைச் சொல்லாக சொல்லுவது தவறானது. பாசிசப் பண்பு தேசியவாதம் இல்லாத பிரிவுகளிடத்தில் ஏற்படினும் அவைகளை பாசிச சக்திகளாக இனம் காணமுடியும்.



சமர் தூண்டில் உயிர்ப்பு, மனிதம் மற்றும் தனிநபர்களின் கடந்தகால விவாதங்களில் புலிகள் தமிழ் மக்களின் தேசவிடுதலைப்போராட்டத்தை தமது நோக்கில் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இவர்கள் புலிகளைப பாசிச சக்தியெனக் கூறுகின்றனர். ஆனால் சிவசேகரத்தின் விவாதம் தேசியசக்தியெனச் சொல்லாதவவர்கள் (தேசியத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்) பாசிசம் எனச் சொல்வதாக சொல்கிறார். அப்படியான கருத்துக்களை யார் முன்வைத்தார்கனெத் தெரியாமல் உள்ளது. பழைய தேடல் இதழ் அல்லது இது தொடர்பான கருத்துக்கள் கிடைப்பின் இவ் விதாம் சிறப்பாக அமையும். அப்படி வெளிவந்த கருத்துக்கள் எதில் வந்ததென அறியத்தரின் விவாதத்தை தொடரமுடியும்.
 
அதிகரித்துவரும் தனித் தேசியவாதம்
சமூகமாற்றப் பாதையில் கவியும் இருள்...
இலங்கைத் தீவின் இன்றைய பிரதான பிரச்சனையான தமிழ் தேசிய இனப் பிரச்சனை நிலவுகின்றது. இனப் பிரச்சனைகள் தன்னெழுச்சியாக, இயல்பாக உருவெடுப்பதில்லை. தமது நலனுகளுக்காக பிற்போக்கான அரசியல் சக்திகள் இன முரண்பாடுகளை உருவாக்கி வளர்த்துச் செல்கின்றன. எளிதாக மக்களை ஈர்க்கக்கூடிய தேசியவெறி, மதவெறி களைத் தூண்டிவிடுவதன் மூலம் தமது வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்கும் மக்கள் தமது துயரங்கள், சுரண்டல் ஒடுக்குமுறைகளின் உண்மைக்காரணங்களைக் கண்டறிவதிலிருந்து அவர்களைத் திசைதிருப்பி தமது இருப்பைத் தக்கவைக்கவும் தேசியவெறி, மதவெறியை சுரண்டும் வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் தலைமைகள் வளர்க்கின்றன. இயல்பாக விரோதமற்று ஐக்கியமாக வாழும் சமூகத்தில் முரண்பாடுகளுக்கான தீப்பொறி பிற்போக்கான அரசியல் பிரிவுகளால் இடப்படுவதை தேசிய முரண்பாடு மதமுரண்பாடு கூர்மை பெற்றிருக்கும் அனைத்துக் களங்களிலும் வெளிப்படையாகவே அவதானிக்கவியலும்.
இலங்கைத் தீவிலும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக் கெதிரான நடவடிக்கைகளும், இனப் பாரபட்ச நடவடிக்கைகளும் தேசியம் என்கின்ற தளத்தின் அளவுக்குள்ளேயே உருவெடுத்த தொன்றல்ல. இலங்கைத் தீவில் தேசிய இனப்பிரச்சனைகள், இன அடிப்படையிலமைந்த பாரபட்சங்கள் உருவெடுத்த காலகட்டத்தில் செயலாற்றிய அரசியல் தலைமைகள் தத்தமது தேசிய இன நலன்களுக்காகவே அந்நடவடிக் கைகளை ஆற்றியிருந்தன என்று யாரும் வாதிப்பார்களெனின்: அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
பிரித்தானியரிடமிருந்து மேல்தட்டு வர்க்க பிரதிநிதிகளிடம் கைமாறியதைத் தொடர்ந்து விரைவில் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களுக் கெதிராக கொண்டு வரப்பட்ட அநீதியான சட்டங்கள் இனரீதியான அம்சத்தைவிட பெருமளவு பொருளாதார, வர்க்க அடிப்படையிலமைந்த காரணங்களையே கொண்டிருந்தன. அக்காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் இடதுசாரிக் கட்சிகளின் பலம் உயர் வர்க்கத்தினரின் அரசியல் தலைமையை அச்சுறுத்தும் அளவிற்கு இருந்தது. அரசியல் தலைமை தமது வர்க்க மேலான்மையை நிலை நிறுத்து வதற்காகவே இடதுசாரிக் கட்சிகளது முக்கிய ஓட்டுவங்கியாக இருந்தவர்களும், பல தொகுதிகளில் அன்றைய ஆளும் வர்க்க பிரதிநிதியான ஐக்கிய. தேசிய. கட்சிக்கு பாதகமான விளைவைக் கொடுக்கும் வாக்குக்களைக் கொண்டி ருந்தவர்களுமான மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர் ஆக்குவதற்கும் அவர்களது வாக்குரிமையை பறித்து விடுவதற்குமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறான இனரீதியான மேலாடையைக் கொண்ட இனப் பாரபட்ச நடவடிக்கைகளின் பின்னால் சுரண்டும் மேல்தட்டு வர்க்கத்தவர்களது நலன்களுக்கான, பொருளாதாரக் காரணங்களே உள்ளுடலாக இருந்தன.
மேல்தட்டு வர்க்கத்தவர்களின் அரசியல் தலைமைகள் மக்களிடையே இயல்பாகவுள்ள தேசிய பெருமிதம், மதரீதியான உணர்வுகள், நம்பிக்கைகளை தமது நலன்களைத் தக்கவைக்கும் திசையில் கேடாகப் பயன்படுத்தி இன முரண்பாடுகளை வளர்த்தெடுத்தபோது இலங்கையின் பரந்துபட்ட மக்களை இத் தீமையான கருத்தாக்கங்களிலிருந்து மீடெடுத்து சமூக விடுதலைக்கான போராட்டப் பாதையில் இட்டுச் செல்லக்கூடிய புரட்சிகர தன்மை கொண்ட தலைமை எதுவும் உழைக்கும் வர்க்கங்களை அன்றைய காலகட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கவில்லை. பாராளுமன்ற எல்லைக்குள் போலி எதிர்ப்பைக் காட்டிவிட்டு உயர் வர்க்கத்தவர்களுடன் சமரசமாகி பாராளுமன்றக் கதிரைகளைப் பங்குபோட்ட போலிக் கம்யூனிஸ்டுக்களும், லண்டன் சர்வகலாசாலை யில் உருவான கம்யூனிசப் பிரமுகர்களும் மக்களை அணிதிரட்டிச் செல்லும் புரட்சிகரப் போராட்ட திசைவழிக்கு துரோகம் இழைத்த வர்களாகவிருந்து உழைக்கும் வர்க்க பிரிவினரை அநாதரவான நிலைக்கு உள்ளாக்கினர். இதன்மூலம் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் கருத்தாக்கங்களஅன்றைய நாட்டின் நிலைமைகள் இடதுசாரிக் கட்சிகள் எதிர்காலத்தில் அரசாங்கம் அமைக்கக்கூடிய சாத்தியக் கூறுகளைக் கொண்டிருந்தபோது, மேல் தட்டு வர்க்கத்தவர்களது மக்கள்மீது ஆளுமை செலுத்துவதற்கு வழிசமைத்துக் கொடுத்தனர்.
இன அடிப்படையிலான அரசியல் முன்னிலை பெற்று அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் சுலபமான வழியாக சுரண்டும் வர்க்க அரசியற் பிரிவுகள் இம் முரண்பாட்டை கைக்கொள்ளத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாகவே தமிழ்த் தேசியத்தின் மீதான பாரபட்ச, இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உச்ச நிலையைப் பெற்றன. பொருளாதார நலன்களின் தொப்புள் கொடியிலிருந்து உருவான தேசிய இன முரண்பாடுகள் பெரும்பான்மைத் தேசிய இன வெறியாகளின் கூட்டுடன் வளர்த்துச் செல்லப்பட்டது. இன முரண்பாடு சிறுபான்மை தமிழ்த் தேசியத்தின் அனைத்து மக்களையும் நேரடியாகப் பாதிக்கின்ற கட்டத்தை வந்தடைந்தபின், கணிசமான கால கட்டத்திற்கு இனப்பாகுபாடும், இன ஒடுக்கு முறையும் நீடித்தபோது இவற்றின் தோற்றுவாய்க்கான காரணங்கள் பின்தள்ளப்பட்டு நடை முறையில் தேசியரீதியிலான பூசல் அரங்கின் முன்னணிக்கு வந்தது.
சுரண்டும் வர்க்கத்தினர் தமது நலன்களுக்காக, தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள தோற்றுவித்து வளர்த்துவிட்ட இனமுரண்பாடு வட-கிழ தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறியதன் பின்னர் தமிழ்த் தேசியத்தின் அனைத்து வர்க்கப் பிரிவுகளும் தேசிய விடுதலைப் போரில் குதித்தன. இன முரண்பாடு உருவாகி வளர்ந்து வந்த காலகட்டத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் புரட்சிகர பிரிவினர் இன ஒடுக்கு முறைக் கெதிரான புரட்சிகரப் போரை தமது கரங்களி லெடுத்து அதற்காதரவாக சிங்களப் புரட்சிகர பிரிவை இணைத்துக் கொள்வதன் மூலம் இன ஐக்கியத்தைச் சாதிக்கின்ற திசையில் செயாற்றாது ஸ்தல நிலைமைகளுக்குப் பொருந்தாத சூத்திரங்களுடன் கட்டுண்டு, தமிழ்த் தேசிய இன ஒடுக்க்களுக்கெதிரான போரை தமிழ்த் தேசியத்தின் மேல்தட்டுவர்க்கத்தினர் தமது வர்க்க நலன்களுக்குகந்த வகையில் கையாளுதற்கும், தேசிய விடுதலைப்போரில் தமது ஆதிக்கத்தை யேற்படுத்தவும் வழியேற்படுத்தினர்.
தமிழ்த் தேசியத்தின் புரட்சிகரப் பிரிவினர் இன ஒடுக்கலுக் கெதிராக காத்திரமான பாத்திரமாற்றி நிலை மைகளைத் தமக்கு சாதகமாக்குவதில் தவறிழைத்தமையால் பெரும்பான்மை இனமும், மற்றைய சிறுபான்மை இனங்களும் தமது தேசிய இனங்களின் மேல்தட்டு வர்க்கத்தவரின் கருத் தாக்கங்களின் கீழ், அதன் ஆளுமையின் கீழ் வழிநடாத்தப்பட்டன.
சிங்களப் பேரினவாதத்திற் கெதிராக முற்போக்கான தமிழ்த் தேசியம் உருவெடுப்பதற்குப் பதிலாக பிற்போக்கான தமிழ்த் தேசியவாதம் வளர்க்கப்பட்டன. தமிழரசுக் கட்சியும், தொடர்ந்து கூட் டணியும் தமது அரசியல் நலன்களுக்கும், வாக்குக்களைப் பெறுவதற்கும் தேசிய வெறியை முன்தள்ளின. ஆண்டபரம்பரைக் கருத்துகளும், சிங்கள மக்களின் தோலில் செருப்புத்தைக்கும் உரைகளும், சிங்கள மக்களை இழிவுபடுத்தும் கருத்தாக்கங் களும் இவற்றின் வெளிப்பாடுகளே. தமிழீழப் போராட்டம் உக்கிரமடைந்தபின், சிங்கள அப்பாவி மக்கள் மீதான அநுராதபுரப் படுகொலை, மற்றும் பல படுகொலைகள், முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகள் தமிழ்ப் போராளிக் குழுக்களால் நிகழ்த்தப்படும் போது தமிழ்மக்களில் பொரும்பான்மையோர் அவற்றை அங்கீகரித்துக் கொள்வதற்கு முன்பு வளர்க்கப்பட்ட இக்கருத்துக்களின் ஆதிக்கமே காரணமாகவுள்ளது.
இனப்பாகுபாடு, ஒடக்குமுறை நடவடிக்கைகள் உச்ச நிலையடைந்து இனப்படு கொலைகளாக மாறியபோது அக்கட்டத்தின் தமிழ்த் தேசியத்தின் தேவையான தேசிய விடுதலைப்போர் பல தளங்களில் எழுந்தது. நீண்டகாலம் தமிழ்த் தேசியத்தின் மேல்த்தட்டு வர்க்கத்தினரால் வளர்க்கப்பட்டிருந்த பிற்போக்குத் தேசியவாத கருத்துகளையும் பெரு மளவுக்கு உள்வாங்கியதாக அவ் விளைநிலத்திலிருந்தே தேசிய விடுதலைப் போராட்டம், பிரிவினைப் போராட்டமாக உருவெடுத்தது. தமிழ்த்தேசிய விடுத லைப்போரை முற்போக்கான தேசிய விடுதலைப் போராட்டமாகவும், சமூக மாற்றத்திற்கான புரட்சிப்பாதையிலும் இட்டுச்செல்வதற்கும் 80 களின் ஆரம்பத்தில் சில புரட்சிகரசக்திகள் முயன்றபோதும் அகநிலையான கார ணங்களும், பெருமளவிற்கப் புறநிலைக் காரணிகளும் தமிழ்த் தேசியவிடுதலைப் போரில் பிற்போக்கான சக்திகளது தலைமையை உறுதிப்படுத்தின. தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் மிக விரைவிலேயே தமிழ்த்தேசிய இனமக்களது விடுதலைக்கு எதிரான திசையில் சென்றடைந்தது.
ஒரு தேசியவிடுதலைப் போராட்டத்தின் முற்போக்கான அம்சங்கள் சகலதையும் ஊறுபடுத்திவிட்டு தமிழ்த்தேசியத்தினது நலனுக்கு எதிரானதாக மட்டுமல்லாது இலங்கைத்தீவில் நடைபெறக்கூடிய சமூக மாற்றத்திற்கான போராட்டப் பாதைகளுக்கு எதிரான மையமாக உருப்பெறக்கூடிய வகையில் பிற்போக்கான அம்சங்களால் வழிநடத்தப்படும் தலைமை யின் ஏக ஆதிக்கம் பெற்றதாக தமிழ்த் தேசிய விடுதலைப்போர் உரு வெடுத்துள்ளது. தமிழ்த்தேசியத்தின் பிரதான முரண்பாடாக இனமுரண்பாடும், இன்றைய இன்றியமையாத தேவையாக தேசியவிடுதலைப் போரும் உள்ளபோதே இன்று நடைமுறையிலுள்ள தேசிய விடுதலைப்போர் அதன் தலைமையின் பிற்போக்கான பாத்திரத்தின் காரணத் தினால் மக்களது விடுதலையை உத்தரவாதப் படுத்தாததாகவும், பிற சிறுபான்மை இனங்களை ஒடுக்குகின்ற படுபிற்போக்கான நிலையை எடுத் துள்ளதையும் கண்கூடாகக் காணவியலும்..
இன்றைய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கின்ற இராணுவ சர்வாதிகார தலைமையால் முன்னெடுக்கப்படுவதாலும், அவர்களது மக்கள் விரோத நலனைக் கொண்டதுமான அரசியல் பின்னணியானது தமிழ்த்தேசிய இன மக்களது சுகந்திரமான, சுபீட்சமான வாழ்வை உத்தரவாதப்படுத்தப் போவதில்லை என்கின்ற வகையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மாற்று புரட்சிகரத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியத்தின் முற்போக்கான பிரிவினர் தம் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இம் முற்போக்குப் பிரிவினரிடையே தமிழ்த்; தேசிய விடுதலைப்போரை தமிழ்ச்சமூகத்தின் அடிப்படைச் சமூக மாற்றத்திற்கான திசைவழியே எடுத்துச் செல்ல வேண்டு மென்கின்ற புரட்சிகர பொது நோக்கு எல்லாத் தரப்புக்களிலிருந்தும் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்ற போதும் இப்பிரிவினர் வெளிப்படுத்துகின்ற, பிரதிநிதித்துவப் படுத்துகின்ற சித்தாந்தக் கோட்பாடுகள், சமூக மாற்றத்தை நிகழ்துகின்ற திசைவழிப்பட்டதா? அல்லது சமூகமாற்றத் திசையின் நலன்களுக்கு எதிரானதாக புரட்சிகர உழைக்கும் வாக்கத்தினரின் போராட்ட ஆற்றலை தமது வாக்கப்பிரிவின் நலன்களுக்கு பயன்படுத்து கின்ற உள்ளடக்கம் கொண்டதா? என்பதை உழைக்கும் வர்க்கப்பிரிவினர் தெளிவாக அடையாளம் காணவேண்டியவர்களாக உள்ளனர்.
புரட்சிகர அரசியல் மாற்று என்கின்ற மாற்று அரசியல் முகாமிலிருந்து வருகின்ற பலதரப்பட்ட சித்தாந்த கோட்பாடுகளில் எது சமூக அடுக்குகளில் கீழ்மட்டங் களிலும், பெரும்பான்மை மக்கள் திரளின் ஆதரவுமுள்ள உழைக்கும் மக்கட்பிரி வினரை உத்தரவாதப் படுத்துவது எத்தத்துவம்? தமிழ்த் தேசியத்தின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலன்களை நிறைவேற்றுவதுடன் அப்பிராந்தியத்திலுள்ள மக்களின், மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டத் திசைவழியுடன் தனது தேசிய விடுதலைப் போராட்டத்தை இணைத்துவிடும் திசை யைக் கொண்டுள்ளது என்பதை இன்றைய சுரண்டல் பொருளாதார அமைப்பை தகர்த்து புதிய சமூக அமைப்பைப் படைப்பதன் மூலம் மட்டுமே தமது நலன்களை வென்றெடுக்கக் கூடியவர்க ளாகவுள்ள புரட்சிகர வர்க்கத்தினர், புரட்சிகர சிந்தனையாளர்கள் தெளிவாக அடையாளம் காண்பதற்கு கவனம் குவிக்கவேண்டியது இன்றைய அவசியமான தேவையாகவுள்ளது. முற்போக்கான அரசியற் பிரிவினரிடையே மனம் திறந்த விவாதம் மூலமாக பொதுக்கருத்தை எட்டுதல், பொதுவான சித்தாந்தக் கோட்பாட்டில் ஐக்கியப்படுதல், போன்று அண்மைக்காலமாக பலத்து ஒலித்த குரல்கள் மறைந்துபோய் வௌ;வேறு பிரிவினர் தமது தரப்புக் கோட்பாடுகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்கவியலும். ஐக்கியப்பட்டு பொதுக்கருத்தை எட்டுதல் என்பது நல்லநோக்காக இருந்தபோதும் அடிப்படையான உண்மையுடன் முரண்பட்டதாக அவ் நோக்க மிருந்தமையால் அவ்வணுகு முறை அரங்கிலிருந்து அகன்றுவிட்டதைக் காணலாம். இன்று யதார்த்த நிலையின் உண்மை வெளிப்பாடாக, தமிழ் முற்போக்கு அரசியல் சக்திகளுக்கிடையே தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க் கப்பிரிவின் நலன் சார்ந்து கோட்பாட் டுருவாக்கம் நிகழ்த்துவதும் அவ்வடிப் படையில் அணிசேர்வதும் நிகழ்வுப் போக்காக உள்ளது.
இன்று உலகுதழுவிய அளவிலான பொருளாதார வலைப்பின்னல் நடவடிக் கைகள், வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம் போன்ற காரணிகளால் உலகின் தேசங்கள், சமூகங்கள் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டு வருவது அதிகரிக்கும் நிகழ்வுப்போக்காக உள்ளது. தேசங்களோ, தேசிய இனங்களது இயக்கப்பாட்டு நடவடிக்கைகளோ அவ் எல்லைகளு டனேயே சுருங்கி விடுபவையாக இல்லை. அவை இன்றய சர்வதேச நிலவரங்களுடன் பரஸ்பரம் தமக்கேயுரிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. ஏகாதிபத்திய பொருளாதார வலைபின்னல் நடவடிக்கைகளும், புதிய உலக ஒழுங்கமைப்பு என்ற பெயரில் பின்தங்கிய ஏழைநாடுகள் மீது அதிகரித்து வருகின்ற மறுகாலனியாக்கல் நடவடிக் கைகளும் அத்தேசங்களின் சுயாதி பத்தியத்தை கேலிக்குரியதாகவும் கேள்விக் குரியதாகவுமாக்கி வருகின்றன. எமது தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட் டமும், அதன் வெற்றியும் பிராந்திய சர்வதேச அரசியல், பொருளாதார நிலைமைகளுடன் தொடர்புறாது தனியே தேசிய சுயாதீனத் தளத்தில் மட்டும் நடைபெறப் போவதில்லை.
இன்று மேல்நிலை வல்லரசுகள், ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார நலன்களுக்காக வறிய மூன்றாம் உலக நாடுகளை தமது வேட்டைக் காடாக்கி வருகின்றன. அந்நாடுகளின் மீது ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பான பொருளாதார, கலாச்சார ஒப்பந்தங்களைத் திணித்து அந்நாடுகளின் அரசியல், பொருளாதார, கலாச்சார சுயத்தைச் சிதைத்து வருகின்றார்கள். அந்நாடுகளின் தரகுமுதலாளிய ஆளும் கும்பல்கள் இத் துரோகங்களக்குத் துணைபோகின்றனர். இந்நாடுகளின் 'பட்ஜெட்'கள் கூட ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளாக செயற்படும் உலகவங்கி ஐ.ஆ.கு போன்றவற்றின் மேற்பார்வையில் தயாரிக்கப்படுகின்றன. சோவியத் ஒன்றியத்தின் சிதைவின் பின் பேரம் Nசுதற்குக் கூட ஒருதரப்பும் அற்ற நிலைமையில் மூன்றாம் உலக நாடுகள் புதிய உலக ஒழுங்மமைப்பு என்கின்ற பெயரில் ஏகாதிபத்திய நலன் சார்ந்த நடவடிக்கைகளால் தமது தேச நலன்களை இழந்து வருகின்றார்கள். தமது ஆதிக்கப் போக்குக்கு எதிராக உலகின் எம்மூலை யில் சிறு எதிர்ப்புக்குரல் கிளம்பினும் வெறியுடன் பாய்ந்து அதை அழித்துவிடும் மூர்க்கத்துடன் அமெரிக்கா தலைமை யிலான ஏகாதிபத்தியங்கள் இன்று செயற்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையை தனது கைப்பொம்மை அமைப் பாக்கி பொருளாதாரத் தடை, இராணுவ தலையீடு போன்ற அனைத்து வழிகளிலும் ஏகாதிபத்தியங்கள் இதைச் சாதித்து வருகின்றன. ஏகாதிபத்திய பொருளாதார நலன்களக்கு எதிராக உருவெடுக்கும் எப்போராட்டப் போக்குகளும் இச்சர்வதேச நிலைமைகளை எதிர்கொண்டே தன்னை நிலைநிறுத்தவியலும்.
இன்று தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கும், விடுதலைக்குமான போராட்டமாக தேசிய விடுதலைப் போராட்டம் உள்ளது. தமிழ்த் தேசியத்தின் பிரதான முரண்பாடாக இனமுரண்பாடு நிலவும்வரை தேசிய இனப்போராட்டத்தை புரட்சிகர சக்திகள் கையிலெடுக்கவேண்டும். புரட்சிகர சக்திகள் தேசிய இனப்போரை கையகப்படுத்தி தேசிய விடுதலையை எவ்வகைகளினூடாக சமூகமாற்றப் பாதையில், உழைப்பாளி வர்க்கத்தவரது நலன்களது திசைவழியே நகர்த்திச்செல்ல இயலு மென்பதற்கான அடிப்படைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்வதன் மூலமே அவர்கள் புரட்சிகர வர்க்கங்களின் அரசியற் பிரதிநிதிகளாக செயற்படுவர். உழைக்கும் வர்க்கத்தவர் களுக்கும், சமூகமாற்றப் போராட்டத் திசைவழிக்கும் பாதகமான, கேடு விளைவிக்கும் கோட்பாடுகளை உருவாக்கி அவற்றை புரட்சிகர வர்க்கத்தவர்களது கோட்பாடு எனத் திரித்துக்காட்டும் அரசியல் சக்திகள் எப்பிரிவின் நலன்களுக்காக பெரும்பான்மையான உழைக்கும் வர்க்க மக்களின் தியாகத்தையும், போராட்ட ஆற்றலையும் பயன்படுத்த முனைகின் றார்கள் என்பதை சரியாக அடையாளம் கண்டு அவர்களது கோட்பாடுகளின் சாரத்தை அம்பலப்படுத்த வேண்டியதும் புரட்சிகரவர்க்கப் பிரதிநிதிகளின் அவசிய மான பணியாகும்.
இன்று தமிழ்த் தேசிய விடுதலைப் போரிற்கு மாற்றுதலைமை அளிக்க வேண்டுமெனக் கோருகின்ற முற்போக்கு அரசியல் முகாமினுள் வௌ;வேறு கோட்பாடுகளின் உருவாக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பிரிவினரும் தமதுகோட்பாடுகளே சமுதாய வளர்ச்சியை உத்தரவாதப்படுத் துகின்ற இயங்கியல் அடிப்படையிலானது, ஸ்தல யதார்த்த நிலைமைகளக்கு பொருத் தமானதென விளக்கி வருகின்றனர். இவ்வகையில் முன்வைக்கப்படும் கோட் பாடுகளில் ஒரு பிரிவினரால் தனித் தேசிய வாத அணுகுமுறை கோட்பாடாக முன் வைக்கப்பட்டு வருகின்றது.
இன்று இலங்கைத்தீவில் நிகழ்ச்சிப்போக்கில் இருதேசங்கள் நிலவி வருவதாகவும் சிங்களதேசம், தமிழ்த் தேசத்தை ஒடுக்குவதாகவும் இவர்கள் அடிப்படையில் வரையறுக்கின்றார்கள். தமிழ்த் தேசிய இனம் தனியரசொன்றை ஸ்தாபிப்பதன் மூலமே தனது அபிலா சைகளையும் வளர்ச்சிக்கான தனது அவாவையும் பூர்த்திசெய்துகொள்ளவியலும் என முன்வைக்கின்றார்கள்.
நீண்ட காலமாக தமிழ்தேசிய இனம் சிங்கள ஆளும் வர்க்கத்தால் கொரூரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தி ருப்பதால், இன்று ஒடுக்குமுறையின் உச்ச வடிவங்களை எதிர்கொண்ட நிலையில் தமிழ்த் தேசிய இனம் இருப்பதால் தேசிய விடுதலை இன்றைய உடனடித்தேவையாக இருக்கின்ற நிலைமைகளின் கீழ் இத்த கைய தேசியத்தில் தளம் கொண்டுள்ள கோட்பாடுகள் வேர்விடுவதற்குள்ள புற நிலைமைகள் நீடிக்கின்றன. இக் கோட்பாடுகளே புரட்சிகர சமூகமாற்றத்தை நோக்கிய திசையிலான தெனவும், தேசிய இனங்களின் உழைக்கும் வர்க்கத்த வரிடையே ஐக்கியத்தை நோக்கி செயற்படும் வர்க்க சிந்தனையாளர்கள் யதார்த்த நிலைமைக்கு பொருந்தாத கோட்பாடுகளை கொண்டிருப்பதாக முன் வைக்கும் தனித்தேசியவாதப் பிரிவினரின் அடிப்படை வரையறைகளின் மூலத்தை நோக்குவோமெனில்:
சிங்களத்தேசம், தமிழ்த்தேசத்தைஒடுக்குகின்றது என்று வரையறுப்பதன் மூலம், சிங்கள பெரும்பான்மை இனத் தின் ஆளும் வர்க்கப்பிரிவு களையும் இனவெறி சக்தி களையும் ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்க சிங்கள மக்களிடையே இருந்து பிரித்து அடையாளப்படுத்தாது சிங்கள தேசிய இனம் முழு வதுமே தமிழ்த் தேசிய இனத் தினது எதிரியாக அடையாளப் படுத்துவதன் மூலம் இரு இனங்களிலுமுள்ள உழைக் கும் மக்களின் பொது நலன்க ளையும், பொது எதிரியையும் அடையாளம் காணமறுத்து உழைக்கும் மக்களின் ஐக்கி யத்திற்கு பெரும் கேடு விளை விக்கின்றார்கள்.
சிங்களப் பெரும்பான்மை இனமக்களும் சரி, தமிழ்ச் சிறுபான்மை இனமக்களும் சரி நீண்டகாலமாக பிற்போக்கான அரசியல் சக்திகள், ஆளும்வர்க்கங்களின் கருத்தாக் கங்களின் ஆதிக்கத்தின் கீழ் வழிநடாத்தப்பட்டு வந்துள்ளபோதிலும் முழுமக்களையும் இனவெறியர்களாக சித்தரிப்பது அப்பட்டமான பொய் என்பதை அண்மைய நிகழ்வுகளே எடுத்துக்காட் டுகின்றன. சிங்கள மக்கள் முற்போக்கான அரசியல் தலைமையால் வழிநடாத்தப் படாமலுள்ளபோதே சமாதானத்திற்கான தமது விருப்பை வெளிப்படுத்துவதைக் காணவியலும். தமிழ்த் தேசியத்தின் சுயநிர் ணய உரிமையை அங்கீகரிக்கும் பக்கு வத்தை ஒரு புரட்சிகரத் தலைமை அம் மக்களை அணிதிரட்டும்போதே எதிர்பார்க்க வியலும். புலிகளைத் தமிழ்மக்கள் ஆதரிப்பதால் முஸ்லீம் சிறுபான்மை இனத்தை தமிழ்த் தேசிய இனம் ஒடுக்கு கின்றது என்றுதான் அர்த்தமா?
பிற்போக்கு ஆளும்வர்க்கங்களால் காலம் காலமாக மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்த இனவாதக்கருத்துக்கள், பொய்யானபீதிகள் இவற்றிலிருந்து மக்கனை மீட்டெடுக்கின்ற வாய்ப்புக்களை தேடுவதற்குப் பதிலாக மக்கனை இன அடிப்படையில் கூறுபோடும் அடிப்படைகளை பிற்போக்குசக்திகளது நல னுக்கிசைவான கண்னோட்டத்தில் வரை யறுப்பது தமது கோட்பாடுகளை நிறுவிக்; கொள்வதற்கே. சிங்கள உழைக்கும் வர்க்கத்தினரையும், சிங்கள தரகுமுதலாளிய ஆளும் வர்க்கத்தையும் தமிழ்த்தேசிய இனத்திற்கெதிரானதாக ஒன்றாக அடையா ளம் காட்டுவதன்மூலம் தமிழ்த் தேசிய இன உழைக்கும் வர்க்க எதிர்கால நலனுக்கு கேடுவிளைவிக்கும் இத் தனித்தேசியவாதிக ளது கோட்பாடு எவ்வாக்கத்தினருடையது?
எவ்வர்க்கத்தின் நலன்கள் இக்கோட்பாடு களின் பின்னணியாகவுள்ளது என்பதை இவர்களது இலக்குகளை பகுத்துப் பார்க் கும்போது நாம் காணலாம்.
தனித் தேசியவாதத்தை முன்தள்ளி வருகின்ற இத்தரப்பினர் தேசிய எல்லை களைக் கடந்து இன்றைய உடனடி அபாயமாக மூன்றாம் உலகநாடுகளை அச் சுறுத்துகின்ற ஏகாதிபத்தியங்களின் அதி கரித்த தலையீடு, காலனியாக்கல் நடவடிக் கைகள், தேசிய விடுதலையானது இன் றைய புதிய உலக ஒழுங்கமைப்பு என் கின்ற நேரடி ஆக்கிரமிப்புத் தன்மைவாய்ந்த ஏகாதிபத்தியங்களது அணுகுமுறை நில வரங்களக்குள் தன்னை நிலைநிறுத்தக் கூடிய சாதகங்கள் பற்றி ஒன்றுமே கூறாது விட்டிருப்பினும், நாம் ஸ்தல உண்மை நிலவரங்களை ஆழ்ந்து பரிசீலிப்பின் இத் தேசியவாத கோட்பாட்டின் மையசக்தி களாக இருக்கும் வர்க்கப்பிரிவை காணவிய லும்.
இன்றைய சர்வதேசிய நிலைமைகளின் கீழ், புதிய பாதகமான ஒப்பந்தங்கள் மூலம் ஏகாதிபத்தியங்களிடையே மூன்றாம் உலக நாடுகள் பங்கிடப்பட்டுக் கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் ஏகாதிபத்திய நலன்களுக்கு நேரெதிரான நலன்களைக் கொண்ட தேசிய த னி ய ர சொ ன் று உருவாக்கம் பெற்றுத் தொடர்ந்து நிலை பெறுவது எவ்வடிப்படைகளின் கீழ் சாத்தியமாகக்கூடும் என்பதைக் கவணத் தில் கொள்வோமெனின்: ஏகாதிபத் தியங்களின் அரசியல், பொருளாதார, கலாச்சார, இராணுவரீதியிலான அனைத்துத் தாக்குதல்களையும் எதிர்கொண்டு தன்னி றைவான சுயபொருளாதாரத்தை கட்டி யமைத்து நீண்டகாலம் தற்காப்பு நிலையில் நீடிக்கக்கூடிய வளங்களையும், ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஊன்றி நிற்கின்ற அரசியல், சித்தாந்த, நடைமுறைகள் கொண்ட ஒழுங்கமைப்பு ஒன்றாலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பை தொடர்ந்து முன்னெடுத்து சமூகமாற்றத்தை சாதிக்கவியலும். தனித்தேசியவாதப் பிரிவி னரால் முன்வைக்கப்படுகின்ற தமிழீழத் தனியரசு இன்றைய சாவதேச நிலவ ரங்களை, ஏகாதிபத்திய நெருக்குதல்களை எதிர் கொண்டு தனது தேசிய நல்களையும் சமூகமாற்றத்திற்கான போராட்டத் திசை வழியையும் காப்பாற்றிக் கொள்வதற்கான அடிப்படைகளை பூர்த்திசெய்யும் வலுக் கொண்டதாக இல்லையென்பது வெளிப் படையான, நிதர்சனமான உண்மையாக வுள்ளது.
சிறியதொரு நிலப்பரப்பும், தன்னிறைவான பொருளாதாரத்தை, தொழித்துறைகளை கட்டி வளர்கக்கூடிய இயற்கைவளங்களை தன்னகத்தே கொண்டிராத ஈழப்பிரதேசம் ஏகாதிபத்தியங்களது நெருக்குதல்கள், தடைகள், இந்திய பிராந்திய வல்லரசின் ஆக்கிரமிப்பு மனோபாவம் அனைத்தையும் எதிர்கொண்டு புரட்சிகர அரசியலின் வழியே தனது தேசியதனியரசை இட்டுச் செல்லுமென்பது எங்ஙனம் நடைமுறை யதார்த்தத்துடன் இணைந்த உண்மையாக இருக்கமுடியும்?
இன்றைய சர்வதேச நிலைமைகளில் ஏகாதிபத்திய நலன்களக்கு சேவகம் புரிகின்ற தனியரசுகளே உருவாகி தம்மை நிலைநிறுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனியரசொன்றை நிறுவுதல் சாத்தியப்பாட்டக்குரியதொன்று - ஏகாதிபத் தியங்களுக்கு, இன்றைய சுரண்டல் பொருளாதார அமைப்பிற்கு நேரெதிரான நலன்களைக்கொண்ட புரட்சிகர அரசி யலைப் பற்றிநின்று தமிழ்த் தேசிய விடுதலைக்கு தனியரசொன்றை அமைத்து அப்போராட்டத்தை சமூகமாற்றத் திசையில் இட்டுச்செல்லவியலும் - எனக் கோட்பாட் டுருவாக்கம் செய்வது சுத்தமான ஏமாற்றே யொழிய நடைமுறைகளுடன் இணைந்த உண்மையல்ல. இக்கோட்பாட்டுருவாக்கத் தின் பிரதிநிதிகள் இன்றைய சர்வதேச நிலவரங்களை, ஏகாதிபத்தியங்களது காலனியாக்கல் நடவடிக்கைகளை கிரகித் துக் கொள்ளாதவர்களல்ல. மிகமுக்கியமா உண்மை எதுவெனின்;:
இத் தனித்தேசியவாதிகளது அரசியல் நோக்கம் உழைக் கும் வர்க்கத்தவர்களின் நலன் களை வென்றெடுக்கின்ற சமூ கமாற்றத்தைச் சாதிக்கின்ற புரட்சியல்ல. அவாகளது அரசி யற்; குறிக்கோள் தமிழ்த் தேசியத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியே - இன்றைய ஈழத் தின் மந்தநிலை முதலா ளித்தவ வளர்ச்சிக் கட்டத்தை தேசிய முதலாளித்துவப்புரட் சியாக பூர்த்திசெய்வதே. தமிழீழத் தனியரசு உருவாகு வது தமது ஆற்றல்களைக் கட்டவிழ்த்து விடத் துடிக்கும் இத்தேசிய முதலாளித்துவப் பிரிவின் நலன்களைப் பூர்த்தி செய்யும். - தேசியஇனங்களின் உழைக்கும் வர்க்கங்களை எதிரிகளாகப் பிரித்துவிடும் இவர்களது கோட்பாட்டுரு வாக்கம், இவர்களது எதிர் கால நலன்களை தொடர்ந்து உத்தரவாதப் படுத்தும் கோட பாடுகளே.
தேசியம் தன்னளவில் குறித்தளவு சுயாதீனமான இயக்கப்பாட்டைக் கொண்டி ருக்கின்றபோதிலும் அதன் உருவாக்கத் துடன், அதன் தொடர்ச்சியுடன் பொருளாதாய நலன்கள், வர்க்கங்கள் பின்னணியில் செயற்படுவதை நிராகரித்து, பொருளாதாரக் காரணிகளுக்கும் தேசியம், மதம் போன்றவை உயிர்ப்பிக்கப் படுதலுக்குமிடையேயான தொடர்பை மிக மலிலனப்படுத்தி அவற்றின் சுயாதீன இயக்கப்பாட்டை முழுமையானதாகக் காட்டி பொருளாதாரக் காரணங்களிலிருந்து தேசியத்தின் இயக்கப்பாட்டைப் பிரித்து விடும் கோட்பாடுகளை இத் தனித்தேசிய வாதிகள் நிறுவிவருவது புரட்சிகர உழைக்கும் வர்க்கப்பிரிவுகளை தனித் தேசியவாதத்துள் அமிழ்த்துவிடவே இத் தனித்தேசிய வாதப்பிரிவினர் சமூமாற்றப் போராட்டத்தை கட்டியமைப்பதற்கு இன்றி யமையாததாகவிருக்கும். தேசிய இனங் களின் புரட்சிகர உழைக்கும் வர்க்கங்களி டையேயான ஐக்கியம், இணைவு போன்றவற்றில் சிறிதும் பார்வையைக் கொண்டிராது ஷதடாலடியாக தனியரசு ஒன்றே தமிழ்க் கம்யூனிஸ்டுக்களின் புரட்சிப்பாதையென்று சாதித்துவருவதன் நோக்கத்தை நாம் சீர்தூக்கி நோக்கினால், இவர்களது நோக்கம் தமிழ்த் தேசியத்தின் தேசிய முதலாளித்துவ நலன்களை, அபிலாசைகளை வென்றெடுக்கின்ற போராட் டத்தை முன்னெடுப்பதேயன்றி சமூகமாற் றத்திற்கான போராட்டமோ அதற்கு இன்றியமையாத முன்நிபந்தனையாகவுள்ள தேசிய இனங்களிலுள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் ஐக்கியத்தைச் சாதிப்பதோ அல்ல என்பதை அவர்களது கோட்பாடுகள், கருத்து வெளிப்பாடுகளிலிருந்து ஐயமின்றிக் காணமுடியும்.
தமிழ்த் தேசிய இனம் எதிர்நோக்குகின்ற அடுத்தகட்ட சமூகவளர்ச்சியான முதலா ளித்துவ ஐனநாயகப் புரட்சியை முன்னெடுக்க விளைகின்ற இத்தரப்பினர் அதைச் சமூகமாற்றப் பாதையாகவும் தமிழ் கம்யூனிஸ்டுக்களின் இன்றைய போராட்ட வடிவம் இதுதான் எனவும் சாதிக்கின்றனர். இவ்வாறு சாதிப்பதற்கான நோக்கங்கள் மிக வெளிப்படையானவை. தேசியமுதலா ளித்துவ நலன்களுக்கான போரிற்கு புரட்சிகர வாக்கப் பிரிவுகளின் உழைப் பையும், தியாகத்தையும்;, போரிடும் ஆற்ற லையும் பயன்படுத்தி அவ்வர்க்கங்களது போராட்டங்களின் அறுவடையை தமது வர்க்கநலன்களின் கீழ் தக்கவைத்துக் கொள்வதேயன்றி வேறில்லை. தமிழ்த் தேசியத்திலுள்ள புரட்சிகரவர்க்கப்பிரிவினர், புரட்சிகர சிந்தனையாளர்கள், சமூகமாறுத லுக்கான புரட்சிப்பாதையை வெறுமனே உச்சரித்துக்கொண்டு ஆத்மார்த்தமாக புரட்சிகர வர்க்கங்களின் நலன களுக்கெதிரான தேசிய முதலாளித்துவ நலன்களைக்கொண்ட கோட்பாடுகளை அனைத்து மட்டங்களிலும் உருவாக்கிவரும் இத் தனித்தேசியவாதிகளது வர்க்க அடிப்படையை அடையாளம் காண்பதில் தவறிழைக்கக்கூடாது.
இலங்கைத்தீவின் தேசிய இனங்களிலுள்ள பரட்சிகர வர்க்கங்களின் ஐக்கியத்திற்கும், சமூகமாறுதலுக்கான போராட்டப் பாதைக ளுக்கும் இவர்களது கோட்பாடுகள் ஊறுவி ளைவிப்பதை புரட்சிகர சக்திகள் தெளிவாக அடையாளம் காணவேண்டும்.
இத் தனித்தேசியவாதப் பிரிவினர் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய முதலா ளித்துவப் புரட்சி முற்போக்கான சமூக வளர்ச்சி நிலையைக் கொண்டதாகையால் இவர்கள் வரலாற்றில் முற்போக்கான பாத்திரத்தையே வகிக்கின்றனர். அவர்கள் தமிழ்த் தேசியத்தின் சமூகவளர்ச்சியை முன் நகர்த்திச் செல்கின்றவர்களாக இருக்கின்றார்கள் என்பது உண்மையே எனினும் அவர்களது நோக்கமான தேசிய தனியரசு நிறுவுவதும், இன்றைய ஈழத்தின் குறைவிருத்தி முதலாளித்துவ உற்பத் திக்கட்ட உற்பத்தி உறவுகளக்கெதிரான போராட்டமும், தேசிய முதலாளித்துவ புரட்சியை பூர்த்தியாக்கும் அவர்களது முற்போக்குப் பாத்திரமும் இன்றைய சர்வதேச நிலமைகளின் கீழ் ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டமைப்பின் எல்லை கடந்த அதீத ஆக்கிரமிப்பு நடவடிக் கைகளின் ஆதிக்கத்தின் கீழ் நிலைபெற முடியாத சாதகத்தையே கொண்டுள்ளது. எளிமையாகக் கூறினால் இன்றைய சர்வ தேச நிலைமைகளின் கீழ் ஈழம்போன்ற சிறியதான, பாரியவளங்களைக் கொண் டிராத தேசத்தில் தேசிய முதலாளித்துவம் தேசியநலன்களை வென்றெடுக்கின்ற போராட்டத்திற்குத் தலைமையளித்து வெற் றியைப் பெறமாட்டாது. இன்றைய புதிய நிலைமைகளில் ஏகாதிபத்திய நலன்க ளுக்குக் கீழ்ப்படிந்து சமரசப்பட்டுப் போய்விடுகின்ற உள்ளார்ந்த ஆற்றல் களையே தேசிய முதலாளித்துவம் கொண் டுள்ளது.
இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்பு என்கின்ற, ஏகாதிபத்தியத்தின் ஆதிகரித்த ஆதிக்கக் கட்டத்தில் ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டமைப்பின் அரசியல், பொருளாதார, கலாச்சார ஆக்கிரமிப்பு களிலிந்து தேசியநலன்களையும், ஏகாதிபத்திய பொருளாதார அமைப்புக் கெதிரான சமூகமாற்றப் புரட்சிப் போராட் டங்களையும் முன்னெடுத்துச் செல்லும் வலிமையும், வரலாற்றுப் பாத்திரமும் கொண்டதாக புரட்சிகர உழைக்கும் வாக்கங்களும், அவற்றின் புரட்சிகர சித்தாந்தங்களுமே திகழ்கின்றன. புரட்சிகர உழைக்கும் வர்க்கங்களை கூறுபோடும் தேசியம், மதம்போன்ற வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு சர்வதேசிய நோக்கம் கொண்டதான சமூக மாறுதலுக்கான புரட்சியைக் கட்டமைக்க புரட்சிகர வர்க்கங்களாலேயே இயலும். தனித்தேசிய வாதத்துடன் திருப்தியுறும் தேசிய முதலாளித்துவ சக்திகளால் இன்றைய சர்வதேச யதார்த்த நிலைமைகளை எதிர்கொள்ளும் போ ர ணி யை ஒருபோதும் உருவாக்கிடவியலாது.
இன்றைய கட்டத்தில் ஈழத் தேசிய இனத்தின் அனைத்து வர்க்கங்களினதும் பிரதான முரண்பாடாக இன முரண்பாடே நிலவுகின்றது. இம்முரண்பாட்டைத் தீர்க் கின்ற தேசிய விடுதலைப்போரை முன்னெடுக்க வேண்டியதும் அப்போரை சமூக மாற்றப் பாதையின் திசையில் நகர்த்திச் செல்வதற்கும் தேசிய விடுதலைப் போரிற்கு புரட்சிகர வாக்கங்களினது தலைமையை அளிப்பதும் அவசியமானது. தேசிய விடுதலைப்போர் புரட்சிகர வர்க்கங்களினது நலன்களை உத்தரவாதப்படுத்துவதாயும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஊன்றிநிர்க்கவும் வேண்டுமெனின், ஏகாதிபத்திய நலன்களுக் கெதிராக தொடர்ந்து தன்னை நிலை நிறுத்த வேண்டுமெனின் மற்றைய இனங்களின் உழைக்கும் வர்க்கத்தினருடன் ஐக்கியத்தைச் சாதிப்பது அவசியமானது. மற்றைய இனங்களின் புரட்சிகர சக்திக ளுடன் ஒன்றுபடுவதன் மூலமும், எமது பிராந்தியத்திலுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சிகர சக்திகளுடன் ஐக்கியப்படுவதன் மூலமே நீண்ட, நெடிய, கடினமானதான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் நாம் உறுதியுடன் தர்க்காத்து நிற்க இயலும்.
சமூக மாற்றத்திற்கான புரட்சிப்பாதையை நாம் முன்னெடுத்தச் செல்லவேண்டுமெனின் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக ஊன்றிநிற்பது அவசியமாகிறது. ஏகாதிபத் திய எதிர்ப்புப்போரே புரட்சிகர வர்க்கப் பிரிவுகளின் நலன்களை உத்தரவாதம் செய்யவல்லது. உழைக்கும் வர்க்கங்க ளிடையே ஐக்கியத்தையும், இந்தியா போன்ற எமது பிராந்தியத்தின் அயல்நாடுகளின் புரட்சியாளர்களுடன் ஐக்கியத்தையும் சாதிக்கும் திசையில் செயற்படும் சக்திகளே ஏகாதிபத்திய எதிர்ப்புப்போரிற்கு அவசியமான உள் ளார்ந்த சக்திகளை, அடிப்படைகளைப் பூர்த்திசெய்யும் வல்லமை கொண்டவர்கள். தனித் தேசியவாதக் கண்ணேட்டத்துக்குள் மூழ்கி மற்றைய தேசிய இனங்களை எதிரிகளாக வரையறுத்து, தேசிய இனங்க ளுக்கிடையே ஐக்கியத்திற்கான வாய்ப்புக் களை மறுத்துவிட்டு தனியரசு கோருவது உழைக்கும் வர்க்கப் பிரிவுகளுக்குப் பாதகத்தையே ஏற்படுத்தும். இன்றைய நிலைமைகளில் ஈழம் ஒரு தனியரசாக மாறவியலுமெனின் அது இஸ்ரவேல் போல அமைய முடியுமேயொழிய சுயாதிபத் தியமான தேசிய அரசாக ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொண்டதாக நீடிக்கின்ற நிலைமை இல்லையென்பது வெளிப்படை யானது.
ஆகவே தமிழ்த் தேசிய விடுதலைப் போரை சமூகமாற்றப் பாதையில், மனிதகுலத்தின் நலன்களுக்கான திசையில் முன்னெடுக்க விரும்புகின்ற புரட்சிகர சக்திகள் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை கையிலெடுத்துப் போராடும் போதே அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக தமிழ்த் தேசிய இன மக்களை அணிதிரட்டி களத்தில் நிற்கின்றபோதே பொரும்பான்மை இன சிங்கள மக்களினது ஆளும் வர்க்கங்களையும், புரட்சிகர உழைக்கும் வர்க்கத்தையும் வேறுபடுத்தி இனம்கண்டு புரட்சிகர வர்க்கங்களடன் ஐக்கியத்திற்காக பாடுபட வேண்டும். தமது தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய எரிமையை வென்றெடுத்தப் போராடும் போதே ஏகாதி பத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் மற்றைய இன புரட்சிப்பிரிவினருடன் இணைந்து போராடவேண்டியதும், அவர்களுடன் ஐக்கி யப்படுவதில் கவணம் குவிக்கவேண்டியதும் அவசியமாதாகும். தேசியப் போராட்டக் களத்தில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் போராடும் போதே இலங்கைத் தீவில் சமூகமாற்றத்திற்கான போரில் அம் மற்றைய இன புரட்சிகர சக்திகளுடன் எம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போதைய தமிழ்த் தேசிய இன உழைக்கும் வர்க்கத்தவர்களின் நலன் களையும், தமிழ்த் தேசியத்தின் நலன் களையும் பூர்த்திசெய்யவல்லது. தமிழ்த் தேசிய உழைக்கும் வர்க்கத்தவர்களின் நலன்களுக்காக சமூகமாற்றப் புரட்சிப் பாதையில் முற்போக்கு முகாமிலிருந்து தனித்தேசியவாத இருள் படர்ந்து வருகின்றது.
இலங்கைத்தீவின் இனங்களின் புரட்சிகர சக்திகளிடையே, புரட்சிகர வர்க்கங்க ளிடையே ஐக்கியத்தை நோக்கிச் செயற்படுகின்ற தமழ்ப் புரட்சிகர சக்திகளது பிரகாசமான சர்வதேசியநோக்கு தனித்தேசியவாத இருளிலிருந்து தமிழ் புரட்சிகர வர்க்கங்களை மீட்டு புரட்சிப் பாதையில் அணிதிரட்டிச் செல்லுமென்பதில் ஐயமில்லை.
ஆதவன்
கனடா
 
எழுதிக்கொள்வது: zz

சுனாமி நிவாரண கட்டமைப்பும் முஸ்லீம்களும்....

இலங்கையில் சுனாமி நிவாரண விநியோகத்துக்காக அமைக்கப்படவுள்ள பொதுக்கட்டமைப்பில் முஸ்லிம்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள முடியாது என்று நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்கிசன் கூறியிருப்பது முஸ்லிம்களை அவமதிக்கும் ஒரு செயல் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

பேச்சுகளின் போது 'சுனாமி பொதுக்கட்டமைப்பில் முஸ்லிம்களையும் ஒரு தரப்பாகச் சேர்த்து அதில் கையெழுத்திட அனுமதிக்க முடியாத சு10ழ்நிலையில் தாம் இருப்பதாக"வும் ஹெல்கிசன் கூறியதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதேசமயம் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தில் முஸ்லிம்கள் தனித் தரப்பாக கையொப்பமிட வேண்டும் என்பதே எமது கோரிக்கை எனவும் இந்த நியாயமான கோரிக்கையை ஜனாதிபதி ஏற்று கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளும் ஏற்றுக் கொள்வார்கள் எனவும் எதிர் பார்க்கின்றோம் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முஸ்லீம் தரப்பு தமது ஆதங்கங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்ற போதுää இந்த ஒப்பந்தத்தினை ஆதரித்து கருத்து தெரிவித்த ஜோசப் பரராசசிங்கம் இத்திட்டமானது எவரும் தனித்து முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும்ää வீற்ரோ (எநவழ) முறை அங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இத்துடன் இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் கையெழுத்து இடவேண்டும் என்றும்ää இதற்கு நிறைவேற்று அதிகாரம் இருக்கின்ற காரணத்தினால் இதனை நாடாளுமன்றத்தில் கையெழுத்து இட்ட பின்னர் ஒப்படைத்தால் போதும் என்று என வெக்ரோன் தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்.

இங்கு ஒரு சட்டம்ää திட்டம் நிறைவேற்றப் படவேண்டுமென்றால் அதனை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பொதுவமைப்பில் ஒப்புதல் எடுப்பது என்பது ஜனநாயகப் பண்பாடாகும். இந்தப் பண்பாடென்பது குறுகிய நலனுக்காக மீற வேண்டும் எனக் கூறுவது எவ்விதத்தில் இவர்கள் ஜனநாயகத்தை விரும்புபவர்கள் என்பதைக் காட்டி நிற்கின்றனர். அதேநேரத்தில் நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி அமைப்பு முறைக்கு எதிர்ப்பும் தெரித்துக் கொள்ளும் ஒரு கட்சியானது தனது தேவையை ப10ர்த்தி செய்வதற்கு மாத்திரம் அந்த அதிகாரத்தைப் பாவிக்கும்படி கோருவது வெறும் சந்தர்ப்பவாத அரசியல் சார்ந்ததாகும்.

அதே வேளை முஸ்லீம் மக்களின் நியாயமான கோரிக்கையை தட்டிக்கழிப்பதற்கு உருவாக்கப்படும் திட்டத்தில் உள்ள சாதகமான நிலையைக் காட்டுகின்றார். அதேவேளை உருவாக்கப்படும் நிர்வாக அமைப்பு முறையில் உள்ள விடயம் என்பது முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்பது என்ன உத்தரவாதம் இருக்கின்றது? அதேவேளை தமிழ்பெரும்பான்மை எவ்வாறு சிறுபான்மைத் தேசிய இனமாகிய முஸ்லீம்கள் சார்பாக கையொப்பம் இடமுடியும்? முஸ்லீம்களுக்காகää அவர்களின் உரிமைக்காக கையெழுத்து இடுவதற்கு என்ன அதிகாரம் இருக்கின்றது.

1987இல் ஜே.ஆருடன் ராஜீவ் தமிழர்கள் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை புலிகள் எதிர்த்தார்கள்ää இது ஒரு சரியான நிலைப்பாடு. ஆனால் அன்றைய காலத்தில் இரண்டு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் என்பது ஒரு பாதுகாப்பு உள்ளதாக இருந்தது. அன்றைய உலக ஒழுங்கில் பலமுகாம்கள் இருந்தன. இந்த முகாம்களின் பிளவினால் வௌ;வேறு பகுதியினருக்கிடையில் ஏற்படும் ஒப்பந்தங்கள் என்பது சர்வதேச பாதுகாப்பு என்பது எழுதாத நியதியாக இருந்தது. ஆனால் இன்று புலிகள்ää அரசு கையெழுத்திடும் ஒப்பந்தத்தினால் முஸ்லீம்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அதேவேளை முஸ்லீம் சிறுபான்மை தேசிய இனங்களின் நம்பிக்கையை பெற வேண்டுமென்றால் தமிழ் தேசிய தானே அவர்களை இதில் உள்ளடக்கம் செய்வதற்கு முன்னின்று உழைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் தேசியம் சிறுபான்மை தேசியத்திற்கு நம்பிக்கை தரும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை.

தற்பொழுது கௌரவமான சுதந்திரமான வாழ்க்கையை உறுதிப் படுத்துவதே புலிகளின் முக்கிய கடமை என யாழ் அரசியல் பொறுப்பாளர் ஆஞ்சநேயர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் முஸ்லீம்களின் உரிமையை அங்கீகரிப்பதாகவும் ஆங்காங்கே முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து உறுதிமொழி கூறும் புலிகள் செயலில் இதுவரை எதுவும் செய்யவில்லை. மாறாக இந்த கட்டமைப்பில் அவர்களுக்கான சமத்துவமான உரிமையை ஏற்றுக் கொண்டிருப்பார்களாயின் அதுவே உண்மையான நல்லெண்ண நடவடிக்கையாக அமைந்திருக்க முடியும். ஏனெனில் சுனாமியினால் 51 வீதம் பாதிக்கப்பட்டது முஸ்லீம் சிறுபான்மைத் தேசியஇனமே.

இந்த நேரத்தில் பெரும்பான்மையான பாதிக்கப்பட்;ட இனத்திற்கு சரியான அங்கீகாரம்ää அவர்களின் உரிமையை அங்கீகாரத்தையும் வழங்க முடியாது தமிழ் குறுந்தேசிய மையவாதம் இடம் கொடுக்காது தனது ஏக உரிமை மீது பறைசாற்றுகின்றது.

இவற்றை மூடி மறைக்கவே அரசியல் பொறுப்பாளர் பின்வருமாறு தெரிவித்துக் கொள்கின்றார். 'ஆனால் சிறிலங்கா அரசு பொதுக்கட்டமைப்பு விடயத்துக்கு அரசியல் சாயம் ப10சவோ அல்லது அதனை அரசியல்மயமாக்கவோ முனைந்தால் அது குழப்பப்பட்டு விடுமோ என்பது குறித்து நாம் கவலையடைகின்றோம்." என தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்கட்டமைப்பு விடயத்தில் முஸ்லிம் மக்களுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படமாட்டாது. முஸ்லிம் மக்களுக்கு இவ்விடயத்தில் பாதகம் ஏற்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும்ää எம்.பியுமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொதுக் கட்டமைப்பு விடயத்தில் முஸ்லிம்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமே இல்லை எனவும்ää முஸ்லிம் மக்களுக்காக குரல்கொடுக்க நாம் என்றுமே தயாராகவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணத்துக்கான சிறிய விசயத்திலேயே முஸ்லிம்களுக்கு இடம் தர முடியாத நிலையில் சமாதான பேச்சுக்களில் முஸ்லிம்களுக்கு அந்த அந்தஸ்து கிடைக்கும் என்பதில் தாங்கள் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் முஸ்லீம் தரப்புக் கூறுகின்றார்கள். இந்த முடிவுக்கு எதிராக முஸ்லிம் மக்களின் எதிர்ப்பலைகள் மிகவும் மோசமாக வெடிக்கும் அன்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஹக்கீம் எச்சரித்தார்.

இது தமிழ் தேசியத்திற்கும் முஸ்லீம் சிறுபான்மை தேசிய இனத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கை அல்ல. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்க முதலாளி வர்க்கத்தை பாதுகாப்பதற்காக பொன். இராமநாதன் லண்டன் சென்று வழக்காடி வெற்றி கொண்டு முஸ்லீம் மக்களுக்கு துரோகம் செய்தாரோ. அதேபோலதான் இன்றும் வெள்ளை எஜமானர்கள்ää சிங்கள முதலாளிகள்ää தமிழ்முதலாளி வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து முஸ்லீம்களுக்கு துரோகம் செய்கின்றனர்.

முஸ்லீம் சிறுபான்மைத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் கடமை தமிழ் மக்களுக்கு உண்டு. அவர்களின் உரிமையைää இருப்பை உறுதிசெய்யும் கடமை தமிழ் மக்களுக்கு உண்டு. நாம் அவர்களுக்கு செய்த வரலாற்றுத் தவறுகளை திருத்தி ஒற்றுமையை நோக்கமாக கொண்டு செயற்படுவதுதே தமிழ் மக்களின் இலக்காக இருக்க முடியும். அதனை விடுத்து கிடைப்பதை சுருட்டிக் கொள்ளும் நோக்கத்தில் அமைந்த அரசியல் செயற்பாடுகள் என்பது இனங்களின் ஒற்றுமையை உருவாக்கப் போவதில்லை.

யாழ் பல்கலைக் கழகத்தில் எங்கள் நிலத்தில் எங்கள் பலத்தில் தங்கியிருப்போம் என பிரகடனப்படுத்தி விட்டு வெளிநாடுகள் கொடுக்கும் பிச்சைக்காக நிர்வாக அமைப்பை கேட்டு நிற்கின்றனர். இங்கு தேசியத்தின் வரையறையைக் கூட தமது தேவைக்காக மாற்றிக் கொள்கின்றனர். எங்கள் நிலத்தில் எங்கள் பலத்தில் தங்கியிருப்போம் எனக் கூறுகின்ற போது இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி சுயபொருளாதாரத்தை கட்டமைக்கும் நோக்கத்தில் அவர்களின் கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பேரலையின் பின்னர் தமிழ் மக்களிடம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டே பலமுன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைப் பயன்படுத்தாது வெளிநாடுகளில் பிச்சைப் பாத்திரனை பொதுக்கட்டமைப்பின் பேரில் ஏந்துகின்றனர்.

இதனை விட சொந்த இனத்தின் வளத்தை பாதுகாப்பதற்குப் பதில் நித்தம் கொலைகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் நிர்வாகக் கட்டமைப்பில் இருக்கின்ற முஸ்லீம் உறுப்பினர்களும் சுதந்திரமாக செயற்பட முடியும் என்பது கேள்விக்குறியே. இவர்கள் அரசியல் மட்டத்தில் அதன் பிரதிநிதிகளை அணுகாமல் உள்ளூர் பிரமுகர்களை கூட்டி அவர்களின் ஒப்புதலைää அறிக்கையை விடும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவர்களின் இந்த பிரித்தாளும் நடவடிக்கை என்பது ஒரு இனத்தின் சுயாதிபத்தியத்தை அங்கீகரிக்கும் நோக்கம் இவர்களிடம் இல்லை என்பதைத் தான் காட்டி நிற்கின்றனர். அதேவேளை முஸ்லீம்களிடம் ஒன்றுபட்ட தலைமை இல்லாது இருக்கும் நிலையால் தான் அரசும் புலிகளும் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக சரியாகவே புலிகளின் ஆதரவு இணையதளம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இருக்கையில் அவர்களுக்கென ஒற்றுமையான அமைப்பு இல்லை என்பதற்காக அவர்களுக்கான உரிமையை புலிகள் உத்தியோகப10ர்வமாக அங்கீகரிக்காமல் விடுவது ஒற்றுமைக்காக முன்னோடியான செயற்பாடாக அமையாது.

~~நாம் விரும்புவது உண்மையான நிரந்தரமான ஒருமைப்பாட்டையேää இந்த ஒற்றுமையானது புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத் தலைமையை கட்டி எழுப்பும் இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்||. சமர் கருதுவது போல இவ்வாறு கருதுபவர்கள் எல்லாம் இன்று துரோகிகள் தான். இதுதான் இன்று இனத்துவ மேன்மைக்கு அப்பால் உள்ள கடமையாகும். இனத்துவத்தின் மூலம் தேசியத்தை காப்பாற்றப் போவதாக கூறுகின்றனர். தேசியம் என்பNது இன்று கேள்விக் குறியாக இருக்கின்றது. இன்று தேசியம் என்பது அன்னிய மூலதனத்திற்கு விற்று தம்மை பாதுகாக்கும் நிலைக்குத் தான் இன்று நிலையானது உருவாகியிருக்கின்றது. இவர்கள் 11.ளுநி பின்னர் நிலைமாறியதாகவும் அதற்கு இசைவாக நடப்பதாக கூறினர். ஆனால் இவர்கள் இந்த நிலையைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நலன் சார்ந்தே எல்லாம் நடைபெறுகின்றது என்பதை இவர்கள் வெளிப்படையாக கதைப்பதற்கு தயாரில்லை. காரணம் நேரிடையாக இதனை கூறுவதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பகையாளிகளாக இருக்க விரும்பமின்மையான சந்தர்ப்பவாதமேயாகும்.

இவ்வாறான நிலையை யாழ் நூலத்தில் ஒரு பகுதியை தகவல் பிரிவிற்கு பயன்படுத்தப் போவதாக வந்த செய்தியை பிரசுரித்த நுPனுP செய்தித் தளம் பின்னர் அவ்வாறு பிரசுரித்ததையும்ää மன்னிப்புக் கோரி செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இவைகள் அரசியல் மட்டத்தில் அதேவேளை ஊடகத்துறையினர் ஏகாதிபத்திய பொருளாதார உறவு பற்றிய உறவை மக்கள் மத்தியில் கூறுவதில்லை.

















உலக ஏகாதிபத்திய வட்டத்தில் மற்றைவை எல்லாம் வெறும் பூச்சியம் தான். இன்றைய காலத்தில் இலங்கை இனப்பிரச்சனையில் உலகப் பொருளாதார அமைப்பின் தேவைகளின் அடிப்படையில் அமைந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இடம் பெறுகின்றது. இவ்வாறான வேளையில் இலங்கையின் மக்கள் அனைவரும் உலக ஏகாதிபத்தியங்களின் திறந்த வெளிச் சிறையில் வாழும் கைதிகளே. ஏதோ நாகரீகமாக ஜனநாயக நாட்டில் அமைப்பில் வாழ்வதாக கூறிக் கொள்கின்ற போதும் சில உலக ஏகாதிபத்தியங்களின் தேவைக்காக உழைத்துச் தேய்ந்து போகும் தேசங்களாகவும்ää மக்களாகவும் இருக்கின்றனர். அவர்களிடம் பெற்ற கடனுக்காகவே நாட்டின் செல்வத்தை தாரவாத்துக் கொடுக்க வேண்டிய நிலையில் தான் வறிய தேசங்கள் இருக்கின்றன. இதில் உள்ள இன்னெருவிடயம் என்பது உள்நாட்டு அரசியல் நிலவரத்தில் எவ்வாறு தான்தோன்றித் தனமாக நடக்க முடியும் என்பதற்கு நோர்வே பிரதி வெளிநாட்டு செயலாரின் முஸ்லீம் மக்கள் பற்றிய பார்வை முக்கியமானதாக அமைகின்றது. அதாவது 'தனித்தரப்பாக கையொப்பமிடும் வாய்ப்பளிக்கப்பட்டால் அந்த கையொப்பத்தை முஸ்லீம்கள் தரப்பில் யார் கைச்சாத்திடுவது என்று விதார் ஹெல்கிசன் வினா எழுப்பினார்". இது அப்பட்டமான தலையீடு இல்லையா? முஸ்லீம்களின் தனித்துவத்தின் மீது கைவைக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. யார் கையெழுத்திடுவது என்பது வேறு விடயம். அதனை தீர்மானிப்பது மக்கள்ää அதற்காக உரிமையை அங்கீகரிக்க மறுப்பது எவ்வகையில் முஸ்லீம்களின் இறைமையைää இருப்பைää சுயநிர்ணயத்தை மறுதலிக்க முடியும்? இந்த அவல நிலைக்குத் துணைபோவதாகவே சிங்கள பேரினவாதமும்ää தமிழ் குறுந் தேசியவாதமும் செயற்படுகின்றன. இவர்கள் தமக்கிடையே சந்தையை பங்கிடுவதில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முனைகின்றனர். அதேவேளை முஸ்லீம் முதலாளித்துவ வர்க்கத்தின் சந்தையை இவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இதனைத் தான் இவர்களின் போக்கு காட்டி நிற்கின்றது. இது ஒன்றும் புதிய உல ஒழுங்கில் ஆச்சரியமான விடயம் அல்ல. அவர்கள் தேவையானபோது உரிமைகளை ஆதரிப்பதுää தேவையில்லாத போது உரிமைகளை நசுக்குவது. இவைகளின் விழைவுகள் இலங்கையில் காண முடிகின்றது. இவர்களும் சில உறுதிமொழிகளை மக்களிடம் (அம்பாறை விஜயத்தின் போது) கூறி அவர்களின் உரிமையை அங்கீகரிப்பதை விட்டு வெறும் உதவி சலுகையை செய்வதாக காட்டி அந்த மக்களின் ஒரு பகுதியை விலைக்கு வாங்குவதையும் இவரின் உறுதிமொழியில் இருந்து அறிய முடிகின்றது.

பேச்சுவாத்தையில் அணுசரனையாளர்களாக இருப்பவர்களுக்கு தனிப்பட்ட சாதனை விடயமாக இந்த விடயம் ஆகி விட்டதோ எனவும் இங்கு பார்க்க வேண்டியிருக்கின்றது. இவர்கள் இதில் மூன்றாவது சக்தி பற்றி விவாதித்து காலத்தை வீணடிக்காமல் புலிää அரசு ஆகியவற்றிற்கு இடையிலாவது ஒரு இணக்கப்பாட்டை உருவாக்கி விடுவோம் என்ற குறுகிய தனிநபர் சாதனை விருப்பும் இதில் அடங்கிவிடாமல் இல்லை. தாம் ஆட்சியில் இருக்கையில் இந்த சாதனையை ஏற்படுத்தி முடித்து விட்டோம் என தேர்தலில் பறைசாற்றவும்ää தனிநபராக திருப்தி கொள்ளவும்ää தனிநபர் பதவி உயர்வு நோக்கில் கூட அரசியல் விடயங்கள் நடைபெறுவதும் எந்தக் காலத்திலும் புதிதல்ல.

இன்றையக் காலத்தில் உலகபொருளாதார மைய நிலையைää அதன் தேவையைää அதன் அரசியல்ää பொருளாதாரää இராணுவ நலன் கொண்ட செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதை தற்காலத்து ஆய்வாளர்களின் அணுகுமுறையில் பற்றாக்குறை இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவர்களின் பார்வையில் இருக்கும் பற்றாக்குறை என்பது நிச்சயம் அறிவியல் சார்ந்த நிலையல்ல. ஆனால் இவைகள் ஒரு தேவையின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது. இதனால் ஒருவரின் அறிவு சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல.

இன்றைய இலங்கையில் உள்ள தலைமைச் சக்திகள் பற்பல வர்க்க புலன்களை பின்புலமாக கொண்டு இயங்குகின்றன. இந்தச் சக்திகள் தமது வர்க்க தேவையில் அடிப்படையில் இருந்து செயற்படுகின்றனர். இவர்கள் புலிகளை எதிர்க்கும் போது அவர்களுக்கு எதிரான யார் எந்த சக்திகள் என்பது பற்றி விமர்சனம் எதுவும் இன்றி ஆதரிப்பதையும்ää அதேபோல இனவாத அரசை எதிர்க்கின்ற நிலையில் சர்வதேச சக்திகள் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதை ஆதரித்தும் புலிகள் எழுதுவதையும் பார்க்க முடியும்.

இவர்கள் ஒரு பொருளாதார நலன்சார்ந்த நிலையில் இன்றையச் உலகமயமாதல் என்ற பொருளாதார நலன்களுக்கு இசைவாக நடந்து கொண்டு பிழைத்துப் போகும் தந்திரோபாயத்தைக் கொண்டே செயற்படுகின்றனர். இவர்கள் இப்பொருளாதார மாற்றத்தினால் ஏற்படும் நிலையில் தமக்காக இடத்தை அடைவதை நோக்கமாக கொண்டே செயற்படுகின்றனர். இந்தச் சக்திகளே சிறிலங்கா அரசிற்கு கொடுக்கும் அழுத்தத்தைப் பற்றி கூறுகின்றனர்.

இன்று உருவாக்கப்படவிருக்கும் பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திடுவதற்கு புலிகள்ää அரசு ஆகிய இருதரப்பும் சர்வதேச அழுத்தம் காரணமாகவே இதில் கையெழுத்திடுகின்றனர். இவ்வாறு இருக்கையில் இறைமையை இவர்களால் பாதுகாக்க முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இனத்துவ பிரிவினைகளை நிலைநிற்க வைக்கும் நிலைக்கு எதிராக தமிழ் மக்கள் விழிப்புக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது தனியே புலிகளுக்கான பிரச்சனையல்ல. மாறாக நாம் இனங்களுக்கிடையே ஒற்றுமையை வேண்டும் நிலையை வலியுறுத்துபவர்கள் என்ற வகையில் தமிழ் மக்களாகிய நாம் அவர்களின் உரிமையை அங்கீரிக்க தெருவிற்கு வருவோம். தமிழ் மக்களாகிய நாம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பேணி அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதே எமது இலக்காக இருக்க முடியும். இந்த இலக்கைத் தவிர்த்து இனமுரண்பாட்டை தொடர்ந்து வைத்துக் கொண்டு இனத்துவ அரசியல் நடத்தும் குறுந்தேசியவாத நிலையை உடைத்தெறிய வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இனங்களுக்கிடையே ஒற்றுமையைப் பேணுவதன் மூலமே உலகாதிபத்தியங்களின் சதிவலையில் இருந்து வெற்றி பெறும் போராட்டத்திற்கு துணையாக அமைய முடியும். தனி இனத்துவ அரசியல் வட்டம் என்பது தனியே ஒரு வர்க்கத்தின் தேவையை மாத்திரம் ப10ர்த்தி செய்வதாகவே அமையும். ஆனால் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்தின் தேவை என்பது முதலாளி வர்க்கத்தின் தேவையை விட பெரியதாகும். இது பெரும்பான்மை மக்களுக்கான விடுதலை சார்ந்ததாகும்.

இத்துடன் நாடாளுமன்றச் சகதியில் புரண்டு கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கக் கனவான்களின் உண்மை நிலை என்பது வெறும் சகட்டு மேனிக்கு அறிக்கை விடுவதும்ää செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடுவதும்ää அடிதடியில் இறங்குவதும்ää ஒருவருக்கொருவர் வீரவசனங்களைப் பேசுவம்ää சட்டங்களை நிறைவேற்றுவதாக பிதட்டுவதும்ää மாற்றங்களை உண்டாக்கியதாக பிதட்டுவது போன்றவையே நித்தமும் நடைபெறும் காட்சியாகும். இவர்கள் நாடாளுமன்றத்தில் கிடைக்கும் சுவையான உணவில் திருப்தி கொள்ளவும்ää அவர்களுக்கு கிடைக்கும் ஊதியப் பணத்திலும் அவர்கள் வாழ்க்கையை கழிக்க முடிகின்றது. இவர்களிடமிருந்தும்ää இனத்துவ அமைப்புக்களின் இனவாத அரசியலில் இருந்து புதியவற்றை தேடுவதை தவிர்த்து புதிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஒற்றுமையானது புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத் தலைமையை கட்டி எழுப்பும் இலக்கைக் கொண்டதாக அமைவதன் மூலமே சாத்தியமானதாகும். இதற்கு நாம் அனைத்து மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாக ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதே முதற்கட்டமான செயற்பாடாகும்.
hவவி:ஃஃறறற.யவாசையனல.உழஅஃமுயவவரசயமையடஃமுயவவரசயமையடமூ2012.hவஅ

20.50 24.6.2005
 
சுனாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவுகளையே மிஞ்சும் வகையில், இடைத் தரகர்களின் வக்கிரம் அந்த மக்களின் வாழ்வியல் உரிமையையே இல்லாதாக்கின்றது. ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்கள், மறுபுறம் பாதிக்கப்படாத மக்கள் என்று இருதளத்திலும் இந்த சமூக அவலம் அக்கம் பக்கமாகவே நிகழ்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களும், பாதிக்கப்படாத மக்களும் கூடிவாழும் வாழ்வியல் உரிமையையே இடைத்தரகர்கள் தமது அதிகாரங்கள் மூலம் மறுக்கின்றனர். மக்களுக்கு இடையில் இந்த இடைத் தரகர்கள் பெருமெடுப்பில் பெருகியுள்ளதுடன், ஒரு ஒட்டுண்ணியாகி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்படாத மக்கள் கொடுத்த உதவிகளின் பெரும்பகுதியை, இந்த இடைதரகர்கள் சூறையாடிக் கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்ற நிவாரணங்களை விட, இடைத்தரகர்களின் வீடுகளுக்கு சென்ற தொகை தான் அதிகம்;. இது தொடருகின்றது. அதேநேரம் பெரும் அளவிலான மக்களின் உதவிக்கு என்ன நடந்தது என்பதை யாரும் அறிய முடியாத சூனியமாகவே உள்ளது. இதுவும் கூட மக்களின் தலைவிதியாகியுள்ளது.
இதைவிட சமூக ரீதியான நெருக்கடிகள் மேலும் வக்கிரமடைகின்றது. சமூக ரீதியான இணைந்து செயற்படும் செயல் தளம் இன்மையால் சமூகங்கள் சிதைந்து போகின்றன. சமூக ரீதியான உளவியல் நெருக்கடிகள் பெருக்கெடுக்கின்றன. எங்கும் ஒரு மக்கள் விரோதப் போக்கு, பெருக்கெடுக்கின்றது. முட்டை இன்றி அடைகாத்த கோழி போல, வேகம் கொண்ட இடைதரகர்கள் மக்களை கொத்தி கிளறுகின்றனர். இந்த சமூக விரோத வக்கிரங்களை குறிப்பான தலையங்கங்களில் விரிவாக பார்ப்போம்.
உளவியல் நெருக்கடியும் வக்கிர பிழைப்புகளும்
பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் நெருக்கடி பற்றி பற்பல இடங்களில் பலரும் புலம்ப முடிகின்றதே ஒழிய, ஒரு சமூக மாற்றை முன்வைக்க முடியவில்லை. இந்த புலம்பல் பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில் பணத்தை திரட்டுவதுடன் நிறுத்திக் கொள்கின்றது. சற்று அகலக் காலை வைப்போர் மருத்துவ உதவிகளை செய்வதன் மூலம் மட்டும், இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகளை முன்வைக்கின்றனர். களத்தில் செயல்படும் சிலர், எங்கேயோ ஒரு நெருக்கடி உண்டு என்பதை அனுபவ ரீதியாகவே உணருகின்றனர். ஆனால் அது என்ன என்பதை கண்டறிந்து தீர்க்க முடியவில்லை. பெருமளவில் அதை மருத்துவ ரீதியான ஒன்றாகவே காட்ட முனைகின்றனர்.
உண்மை இதற்கு வெளியில் வக்கிரப்பட்டே காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் நெருக்கடி என்பது சமூகம் சார்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மனிதன் தனது உற்றார் உறவினர்கள் நண்பர்களை இழந்து, சுற்றுச் சூழலை இழந்து காணப்படுகின்றான். அதாவது சமூகத்திலும் இயற்கையிலும் இருந்து வேரறுக்கப்பட்ட ஒரு மனநிலையில் வாழ்கின்றான்;. குறிப்பாக சமூக உணர்வு சார்ந்த பகிர்வு வாழ்வை இழந்து, தனிமனித சிறைக்குள் சிக்கிவிடுகின்றான். இந்த சமூகப் பிரச்சனைக்கான சமூகத் தீர்வை இயந்திர தன்மையில் தீர்க்கமுடியாது. நவீன அறிவியல் தொழில்நுட்பம் கொண்டும் தீர்க்க முடியாது. வெறும் உளவியல் மருத்துவத்தினாலும் தீர்க்க முடியாது. ஆனால் இப்படித் தான் தீர்க்க முனைகின்றனர்.
உண்மையில் சமூகம் தான் இந்த நெருக்கடியை தீர்க்கமுடியும். ஆனால் இதற்கான சூழல் எமது மண்ணில் கிடையாது. புலிகள் பணத்தைத் தம்மிடம் தந்தால் போதும் என்ற அடிப்படையில், சமூக உணர்வுகளையே மலடாக்கினர். மக்களின் உழைப்பை உறிஞ்ச மட்டுமே புலிகள் விரும்புகின்றனர். இதன் மூலம் புலிகள் பணத்தை தாம் எடுத்துக் கொண்டு, அந்த மக்கள் பற்றி பெயரளவில் புலம்புகின்றனர். இது படிப்படியாக அரசுக்கு எதிரானதாக மாற்றி விடையத்தை திசை திருப்புகின்றனர். அரசு உதவி கிடைக்கவில்லை என்ற கூக்குரல் (பாட்டின்) ஊடாக, மக்கள் அவர்களிடம் ஒப்படைத்த உதவிகளையே கண்ணுக்கு புலப்படாத ஒன்றாக்குகின்றனர். அரசு தமிழ் மக்களுக்கு நிவாரணம் தரவில்லை என்று சொல்லி, அதில் ஒரு பகுதியை திருடிக் கொள்ளும் எல்லைக்கு அப்பால் புலிகளின் தசைகள் ஆடவில்லை. இந்தத் திருட்டு பற்றி தகவல் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசு இனவாதம் சார்ந்த புறக்கணிப்புடன் ஒதுக்கிய நிதியின் பெரும்பகுதி இடைத்தரகர்களாக செயல்படும் புலிகள் அபகரிப்பது அன்றாட நிகழ்வாகியுள்ளது. மக்களின் வாழ்வியலுடன் எந்தவிதமான சமூக பொருளாதார உறவையும் கொண்டிராத புலிகள், இப்படித்தான் அந்த மக்களின் வாழ்வுக்கு எதிராக வில்லன்களாகவே செயலாற்றுகின்றனர். ஏற்பட்ட சமூக நெருக்கடிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மீள, பாதிக்கப்படாத மக்கள் நேரடியாகவே செயல்பட புலிகளே தடையாக உள்ளனர்.
அரசோ அன்னிய உதவி, அன்னிய கடன் என்ற பெயரில் இலங்கையின் ஒட்டு மொத்த மக்களையே அடகு வைக்கின்றனர். மக்களை அன்னியரின் அடிமையாக மாற்றும் பாதையில், மக்களின் வாழ்வியல் போக்குக்கு எதிராகவே திட்டவட்டமாக செயல்படுகின்றனர். அரசு சாராத நிறுவனமான தன்னார்வ ஊழியர்கள் சமூக பற்று அற்றவர்கள். அன்னியரின் அரசியல் பொருளாதார நலன்களுக்கு சேவை செய்பவர்கள். அதாவது கூலிக்கு கையேந்தி பிழைக்கும் உறுப்பினர்களாலானது இந்த குழுக்கள். இவர்கள் தத்தம் சம்பளபட்டியலுக்கு இசைவாக இந்தப் பிரச்சனையை வெறுமனே பயன்படுத்தும கூலி கும்பல்லாகவே உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனை இதற்கு வெளியில் உள்ளது. உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் சிக்கல்கள் எதில் இருந்து தொடங்குகின்றது எனப் பார்ப்போம்.
சமூகம் என்ற எல்லைக்குள் சொந்த சமூகத்துடன் ஒன்றுபட்டு வாழ்ந்த மனிதன், வாழ்நாள் பூராவும் அதை இழந்து விடுகின்றான். அவனிடம் எஞ்சியிருப்பது தனிமை என்ற வெறுமை தான். சமூகக் கூட்டு என்ற அடிப்படையான உணர்வு சிதைந்து, தனிமையில் தனிமைப்படுத்தப் படுகின்றான்;
பாதிக்கப்பட்ட மனிதன் தனது நெருங்கிய குடும்பத்தையும், உற்றார் உறவினரையும், நண்பர்களையும் கூட இழந்து விடுகின்றான். எங்கும் ஒரு வெறுமை அச்சுறுத்துவதாக மாறிவிடுகின்றது.
.தனது சொந்த சுற்றுச் சூழலை இழந்து வெறுமையான இயற்கை மீது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றான்;. இதில் 100 மீற்றர், 300 மீற்றருக்கும் வாழும் உரிமையை பறிப்பது மேலும் அவர்களின் தனிமை வாழ்வையும், விரக்தியையும் அதிகரிக்க வைப்பதாகவே அமைகின்றது.
.தொடர்ந்து உயிர்வாழ தனது வாழ்வுக்கான ஆதாரமாக திகழ்ந்த உற்பத்தி மற்றும் உழைப்புக்கான அடிப்படை ஆற்றல்களையே அவன் இழந்து நிற்கின்றான்.
தனது சொந்த அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், கையேந்தி நிற்கும் நிலை தொடர்ச்சியாக தக்க வைக்கப்படுகின்றது. சமூகம் எந்த தீர்வையும் வழங்க முடியாத தனிமைப்படுத்தலில் சிக்க வைக்கப்படுகின்றது.
.தனது அடிப்படைத் தேவைகளையே சமூகத்திடம் கேட்டுப் பெற முடியாத அல்லது உரிமையுடன் பெற முடியாத பல இடைத் தரகர்களின் வக்கிரத்தை எதிர் கொள்கின்றான்;.
கணவனை இழந்த பெண்ணுக்கு விதவை பட்டத்தை, சமூகம் வாழ்நாள் பூராவும் கொடுத்துவிடுகின்றது. அவளின் ஒழுக்கம் மீதான கண்காணிப்புடன் சந்தேகத்துடன் அணுகும் போக்கு தொடங்கிவிட்டது. அத்துடன் பலம் பொருந்திய ஆணாதிக்க வெறியர்களின், அத்துமீறல்களை அன்றாடம் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட வேண்டி பல துயரங்களை பெண் சந்திக்க தொடங்கியுள்ளாள்;.
மனைவியை இழந்த கணவன், குழந்தையை இழந்த தாய், என்ற இழப்புகளின் பின்னே உள்ள பொதுவான சமூக வக்கிரம், எஞ்சிய இந்த வாழ்வில் வக்கிரமாக காலம் பூராவும் பின் தொடர தொடங்கியுள்ளது.
மற்றவர்களின் அனுதாபத்தை சார்ந்து வாழ நிர்ப்பந்திக்கும் ஒரு வக்கிரம் திணிக்கப்படுகின்றது.
.உதவி, அனுதாபம் (இதில் தனிமனிதர் விதிவிலக்கு) என்ற பின்னணியில், ஒரு விளம்பர உள்ளடக்கம் முதன்மை பெற்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் இதற்கு இசைவாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஒரு விதத்தில் இந்த விளம்பர உதவி பின்னால், எதிர்பார்ப்புடன் கூடிய ஒரு வக்கிரமமாக கொப்பளிக்கின்றது.
மிக வறிய ஏழை மக்களான பாதிக்கப்பட்ட மக்கள், பொதுவான சமூகப் புறக்கணிப்புக்குள் தீவிரமாகவே ஒடுக்கப்படும் அவலம் தொடங்கியுள்ளது.
.சாதிரீதியாக மிகவும் அடிநிலைச் சாதி என்ற அடிப்படையில் ஏற்படும் சமூகப் புறக்கணிப்பு, இந்த மக்களின் வாழ்வியல் அவலமாகின்றது.
.கிடைக்கும் நிவாரணங்கள் இடைத்தரகர்களின் சூறையாடுலுக்கு உள்ளாகும் போதும், இந்த மக்கள் அதை தட்டிக் கேட்க முடியாத வகையில், போராடும் உணர்வை ஒடுக்கும் பாசிச கட்டமைப்புகள் கூட இந்த மக்களின் உளவியல் சிக்கலை அதிகரிக்க வைக்கின்றது. இதே போன்று நிவாரணம் வழங்க மறுக்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து சுயமாக போராட முடியாத வகையில் நடத்தும் சதிராட்டங்கள் கூட இதே விளைவையே ஏற்படுத்துகின்றது.
இப்படி பரந்த தளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மேல் ஒரு அரசியல் பிழைப்பு, சூறையாடல், மதப்பிரச்சாரம், சிலரின் தனிப்பட்ட வாழ்வின் மேன்மை, அன்னிய ஆக்கிரமிப்பு என்று நீண்ட ஒரு வக்கிரமே அரங்கேறுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த சமூக உதவிகளும் நேரடியாக சமூகம் வழங்குவதை தடுப்பதுதான், உளவியலின் மிக பெரிய ஒரு சமூக நெருக்கடியை உருவாகின்றது. பரந்துபட்ட மக்களின் செயலின்மையை உருவாக்கும் போக்கு, உளவியல் பிரச்சனைக்கு தீர்வை வழங்க மறுக்கின்றது. சமூக உளவியல் பிரச்சனைக்கு சமூகம் தான் தீர்வு வழங்க முடியுமே ஒழிய, சமூகத்துக்கு வெளியில் இயங்கும் அதிகார மையங்களோ, தொழில்முறை சார்ந்த கட்டமைப்புகளோ முடியாது.
மனிதன் போராடி வாழ்பவன். இது இயற்கையானது. வாழ்விற்கான போராட்டம் இயற்கையால் ஏற்பட்டாலும், செயற்கையால் ஏற்பட்டாலும் ஒன்றுதான். ஆனால் அவன் போராடி வாழ முடியாத வகையில், இடைத்தரகர்கள் தமது அதிகார பாசிச கட்டமைப்புகளால் தடுத்து நிறுத்துகின்றனர். வாழ்வுக்கான போராட்டம் சமூகத்துடன் ஒன்றிணைவை அடிப்படையாக கொண்டது. ஆனால் இதற்கு இடையில் அதிகாரம் கொண்ட இடைத்தரகர்கள் புகுந்து போராடி வாழ்வதையே தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் மக்களின் உளவியல் சிக்கல்கள் என்றுமில்லாத உச்சத்துக்கு இட்டுச் செல்லுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் உளவியல் ரீதியாக இரண்டு பிரதான போக்கின் ஊடாகவே உளவியல் நெருக்கடியை சந்திக்கின்றனர்.
1.சமூக ரீதியான மரபு, பண்பாட்டு மற்றும் கலாச்சார நெருக்கடிகள்
2.இடைத்தரகளாக உள்ள அதிகார வர்க்கங்களால் எற்படும் சமூக நெருக்கடிகள்
முதலாவதாக சமூக ரீதியான பொது நெருக்கடி மரபு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற வடிவங்களினால் எற்படுகின்றது. இது சாதியம், ஆணாதிக்கம், வர்க்கம், இனம் என்ற எல்லைக்குள்ளாக நிகழ்கின்றது. பொதுவாக ஏழை மக்கள் மேலான பொதுவான ஒடுக்குமுறைகள், சாதி ரீதியான பொது ஒடுக்குமுறை, ஆணாதிக்க பொது ஒடுக்குமுறை மற்றும் பண்பாட்டு ரீதியாக உள்ள சடங்குகள், மரபு ரீதியான சமூக வடிவங்கள் போன்று பல்துறைகளில் பாதிக்கப்பட்;ட மக்கள் நெருக்கடியை சந்திக்கின்றனர். சமூகத்தில் காணப்படும் ஜனநாயக விரோதப் போக்கில் இருந்து இது உருவாகின்றது. இதுவே உளவியல் நெருக்கடியாகின்றது.
பாரம்பரியமாகவே பாதிக்கப்பட்;ட மக்கள் சாதி ரீதியாக அடிநிலைச் சாதியை சேர்ந்தவராக பெரும்பான்மை மக்கள் இருப்பதால், இந்த அனர்த்தம் அவர் மேலான புதிய ஒடுக்கு முறையாக மாறுகின்றது. உயர்சாதிய நிலையில் நின்றுதான், சமூகமும் இடைத் தரகர்களும் இந்த மக்களை அணுக முற்படுகின்றனர். இந்த மக்கள,;; நிலவும் சமூகத்தில் மிகவும் அடிநிலையில் வாழ்ந்த எழைகள். இதனால் பொதுவாகவே உயர்வர்க்கங்களின் பொது ஒடுக்கு முறையைக் கடந்து நிற்கமுடியாது. இந்த இயற்கை அனர்த்தம், மேலும் கடுமையான வர்க்க ஒடுக்குமுறைக்குள்ளானதாகவே மாறிவிடுகின்றது. இதைவிட பண்பாடு மரபு சார்ந்த குடும்ப ஒழுங்குகள் சார்ந்த சமூக நெருக்கடிகள் உருவாகின்றது. குறிப்பாக கணவனை இழந்த பெண்ணை எப்படித் தான் சமூகம் பார்க்கும்;. தாய் தந்தையை இழந்த குழந்தையை சமூகம் எப்படி பார்க்கும்;. இதை சமூகப் போக்கில் என்ன நடக்கும் என்பதை நன்கு தெரிந்தவாகள் தான் நாம். கணவனை இழந்த பெண்களை விபச்சார எல்லைக்குள் கற்பழிக்கவும், விபச்சாரியாக்கவும் விரும்பும் ஆணாதிக்க சமூகப் போக்கு அன்றாட நிகழ்வாக பாதிப்பட்ட பெண் எதிர்கொள்ள தொடங்கிவிட்டாள். தனிமைப்பட்டு வாழவழியற்ற இந்த மக்களின் உழைப்பையும், உடலையும் மிக மோசமாக சுரண்ட, சுரண்டும் வர்க்கம் தொடங்கிவிட்டது. இப்படியான பொது சமூகத்தில் காணப்படும் ஜனநாயக விரோதப் போக்கு, பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் நெருக்கடியை தொடர்ச்சியாகவே மோசமாக தக்க வைக்கின்றது. இதை யாரும் இந்த சமூக அமைப்புக்குள் தீர்க்கமுடியாது.
இரண்டாவதாக பொதுவாக அதிகார வாக்கங்களால் ஏற்படும் வக்கிரமான சமூக நெருக்கடி ஒன்று தொடர்ச்சியாகவே ஏற்படுகின்றது. இதில் இடைதரகரர்களாக உட்புகும் அதிகார வர்க்கங்களும், தன்னார்வக் குழுக்களும், அன்னிய படைகளும் என்ற விரிந்த தளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய உளவியல் சிக்கலை உருவாக்கின்றது. குறைந்தபட்ச நிவாரணத்தை கூட பெற முடியாத வகையில், நிவாரணத்தின் ஒரு பெரும் பகுதியை இடைத்தரகர்களே சுருட்டிக் கொள்கின்றனர். அன்றாடம்; கிடைக்கும் ஒரு கிலோ அரிசியில் கூட, ஒரு பகுதி சுருட்டப்பட்ட பின்பே கிடைக்கும் அவலம் உருவாகின்றது. பரந்துபட்ட மக்களின் உணர்வுபூர்வமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதில் உள்ள தடைகள், அந்த மக்களின் உளவியல் சிக்கலை அகலமாககு;கின்றது. பாதிக்கப்பட்;ட மக்கள் மேலான புதிய அதிகார வர்க்க கட்டளைகள் உருவாக்கப்படுகின்றது. இது என்றுமில்லாத அடிமைத்தனத்துக்குள் மக்களின் கழுத்தைப் பிடித்தே தள்ளிச் செல்லுகின்றது. இந்த மக்கள் நவீன அடிமைகளாக, நவீன கூலிகளாக மாற்றப்படுகின்றனர். சுதந்திரமாக உழைத்து வாழ்ந்த வாழ்வியல் சிதைக்கப்பட்டதால், புதிய நெருக்கடிகள் உருவாக்கும் உளவியல் சிக்கல்கள், கறைபடிந்த ஒன்றாகவே மாறிவிடுகின்றது.
தனித்துவமிக்க சுதந்திரமான வாழ்வை வாழும் அவர்களின் வாழ்வியல் உரிமையை இந்த இடைத்தட்டு பிரிவுகள் தடுக்கின்றன. அவர்களின் கடல் உரிமை, தொழில் உரிமை முதல் கடலைப் பயன்படுத்தும் சுதந்திரம் என எல்லாம் இடைத்தட்டு அதிகார வர்க்களினால் தடுக்கப்படுகின்றது. மற்றும் இவை சார்ந்த வாழ்வியல் உரிமைகளையே தடுக்கும் முயற்சி உளவியல் நெருக்கடியை உருவாக்கின்றது. இந்த மக்களின் வாழ்வை கடல் கொண்டு போனது ஒருபுறம் இருக்க, புதிய சூறவாளியாக இடைத்தட்டு அதிகார வர்க்கங்கள் வாழ்வதற்கான உரிமையை சூறையாடுகின்றன. பாதிக்கப்பட்;ட மக்களிடம் கடல் விட்டு சென்ற அதாவது வாழ்வில் எஞ்சியதைக் கூட அந்த மக்கள் இழக்கும் நிலையை அதிகார வாக்கங்கள் உருவாக்கி அதைக் கைப்பற்றுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திர உணர்வுக்கு உட்பட்டு இயங்க முடியாத எல்லையில் தான் புனர்வாழ்வு, புனர் நிர்மாணம் கட்டமைக்கப்படுகின்றது. உண்மையில் அந்த மக்களின் உரிமை மற்றும் எஞ்சியதையும் சூறையாடும் சூறாவளியே புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்ற பெயரில் வீசிக் கொண்டிருக்கின்றது.
இந்த உளவியல் மற்றும் சமூக நெருக்கடிகளில் இருந்து மக்கள் மீள முடியாத வகையில் கடுமையான நிர்பந்தமே உருவாக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுடன் பாதிக்கப்படாத மக்கள் கலந்து வாழும் உரிமையை திட்டவட்டமாக புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் தடைசெய்கின்றது. பாதிப்படையாத மக்களின் உதவிகள் இடைத் தரகர்களில் கைகளில் குவிந்து கிடக்கின்றது. அதில் ஒரு பகுதி தன்னும் அந்த மக்களிடம் சென்றடைதல் என்பது நிபந்தனைக்குள்ளாகின்றது. பாதிக்கப்பட்;ட மக்கள் தமது சொந்த அடிமைத்தனத்துக்கான சாசனத்தில் கையெழுத்திடுவதன் ஊடாகவே சாத்தியமானதாக உள்ளதை எதார்த்தம் நிறுவிவருகின்றது. தொடர்ச்சியான உளவியல் சிக்கல்கள் அந்த மக்களின் தலைவிதியாகி உள்ளது. பொதுவாக உளவியல் பற்றி பேசுபவர்கள், கடல் அள்ளிச் சென்ற எல்லைக்குள்ளான மருத்துவ ரீதியான செயலைப்பற்றி மட்டும் பேசுகின்றனர். இந்த உளவியல் சிக்கல் என்பது சமூகம் சார்ந்த ஒன்றாகவே உள்ளது. ஆனால் இதற்கு வெளியில் உளவியல் நெருக்கடிகள் பெருகிச் செல்லும் சமூகப் போக்கின் வக்கிரங்களை இனம் கண்டு அதனூடாக அணுகுவது என்பது, எமது சமூகத்தில் அருகிப் போய்விட்டது. அதிகார வர்க்கங்கள் மற்றும் இடைத்தரகர்கள் முகம் சுளிக்காத வண்ணம் பாதிக்கப்பட்;ட மக்களைப் பற்றி பேசுவது நாகரிகமாகிவிட்டது. பொதுவான அணுகுமுறைக்கு பதில் சந்தர்ப்பவாத அணுகுமுறை மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்துவதே ஜனநாயக உரிமையாகிவிட்டது. பாதிக்கப்பட்;ட மக்களுக்கு இறுதியாக கிடைப்பதோ, இவர்கள் வீசியெறியும் எச்சில் எலும்புகள்தான்.
100 மீற்றர், 300 மீற்றர் பாதுகாப்பு பிரதேசம் என்று ஊளையிடுபவர்களின் பின்னணி நோக்கம் என்ன?
மக்கள் மீது திடீர் கரிசனை ஏற்பட்டுள்ளதாக காட்டிக் கொண்டு, அரசும் புலிகளும் போட்டி போட்டுக் கொண்டே 100 மீற்றர், 300 மீற்றா பாதுகாப்பு பிரதேசம் பற்றி ஊளையிடுகின்றனர். அரசும் சரி, புலிகளும் சரி இதில் மட்டும் முரண்படவில்லை. அரசு 100 மீற்றரை பேச, புலிகள் 300 மீற்றராக அறிவித்துள்ளனர். புலிகள் தமது பாசிச சர்வாதிகார கட்டமைப்புடன் மக்களின் மூச்ச பேச்சற்ற அடக்குமுறைக்குள் குடியெழுப்புகின்றனர். இதற்காக குறுந்தேசியப் புலிகள் ஆலாய் பறக்கின்றனர். மக்கள் உயிர் பற்றி என்ன அக்கறை, திடீரென புலிக்கும் அரசுக்கும் பொத்துக்கொண்டு வருகின்றது. மக்களின் உயிர்கள் மீதும், அவர்களின் வாழ்வாதாரங்களின் மீதும் திடீர் கரிசனை. அந்த மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கே வழியின்றி வாழ்ந்த போது, இவர்கள் எங்கே தான் வாழ்ந்தார்கள். மக்கள் கடற்கரைகளில் மிக நெருக்கமாக சந்துபொந்துகளில் வாழவேண்டும் என்று அடம் பிடித்தவர்களல்ல.
மாறாக ஒரு நேரக் கஞ்சிக்கும், தங்கிவாழ ஒரு குடிசையைப் போட்டுக் கொண்டு கடற் கரைகளில் நெருக்கமாக வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் தான் இந்த மக்கள். சீரற்ற லும்பன் உழைப்பில் காலம் தள்ளி வாழ்வது, அவர்களின் வாழ்வியல் தலைவிதியாக இருந்தது. சொந்த நாட்டு மக்கள் இப்படி பரதேசிகளாக கண்ணீரே வாழ்வாக கொண்டு பரிதாபகரமாக வாழ்ந்த போது, இவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த அரசும் சரி, புலிகளும் சரி எந்தவிதமான சமூக அக்கறையையும் ஒருநாளும் கொண்டது கிடையாது.
சுனாமியை தொடர்ந்து எழுந்த கடல் இந்த மக்களை கூட்டமாகவே அள்ளிச் சென்ற போது, இவர்களை மீட்பதற்கு என்று எந்த முயற்சியும் இவர்கள் எடுக்கவில்லை. இதை கடல் எழுந்து வருவதை முன்கூட்டியே தெரிந்து அதை அறிவிக்காத மனிதவிரோதத்தை இட்டு, இவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒரு கண்டனத்தைக் கூட முன்வைக்கவில்லை. ஆனால் மக்கள் பற்றிய திடீர் கரிசனை மட்டும் உருவாகின்றது. மக்களை கடல் இழுத்துச் சென்ற பின், கடலில் பலர் உயிருக்காக போராடிய அந்த மக்களின் உயிரை இட்டு இவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு வீர வரலாறும் படைக்கப்படவில்லை. மக்களை மீட்க கடலில் இறங்கி போராடியிருந்தால் அல்லவா வீரவரலாறுகள் உருவாகும். மிகப் பெரிய கடற்படை கொண்டுள்ள புலிகள் சரி, அரசு சரி கடலில் இறங்கி மீட்பில் ஈடுபடவில்லை. இதனால் பல ஆயிரம் உயிர்கள் கடலில் ஒரு துரும்மை பற்றிக் கொண்டாவது உயிர் வாழ்வதற்காக போராடி மடிந்தனர். மக்களின் மீட்பாளர்கள் என்ற கூறிக் கொள்வர்கள் கடலில் இறங்கிவிடவில்லை. அலைகளின் ஊடாக எந்த விஷ்ணுவும் வந்து அவர்களை மீட்கவில்லை. எந்த சாமியும் கடவுளும் கூட கடலில் மீட்புக்காக இறங்கத் துணியவில்லை. ஆனால் இறந்த பிரேதத்தைக் காட்டி சாமியாடுவதிலும், கொள்ளையடிப்பதிலும் மட்டும், மீட்பாளர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டனர்.
இதற்கு வெளியில் மக்கள் கூட்டம் தான் தன்னிச்சையாக மீட்பில் ஈடுபட்டது. புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்ற அடிப்படை விடயத்தில் திடீரென்று அரசும் புலிகளும் ஆக்ரோசமாக மோதியபடி களமிறங்கின. நிதியுடன் தொடர்புடைய விடையமாக இருப்பதால், தாம் மட்டும் அதை செய்யும் உரிமையை முதன்மைப்படுத்தியே கூத்தாடத் தொடங்கினர். மறுபக்கத்தில் மக்கள் வாரி வழங்கிய ஆரம்ப நிவாரணங்களையே யார் செய்வது என்ற முரண்பாடும் தொடங்கியது. மக்கள் வழங்கிய ஆரம்ப நிவாரணங்களை பறித்தெடுத்து விநியோகம் செய்யத் தொடங்கினர். உண்மையில் இந்த மக்களையிட்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் துளியளவு கூட அக்கறை கொள்ளவில்லை. மக்கள் தான் அக்கறை கொண்டனர். மக்கள் தான் தமது உழைப்பின் ஒரு பகுதியை அவர்களின் மறு வாழ்வுக்காக கொடுத்தனர். ஆனால் அவற்றில் பெரும் பகுதி அந்த மக்களுக்கு உண்மையில் சென்று அடையவில்லை.
இந்த நிலையில் 100 மீற்றர் முதல் 300 மீற்றர் பாதுகாப்பு வலையம் என்று கூறி அரசு புலிகளும் மக்களை அங்கிருந்து அகற்றுவதில் விடாப்பிடியாக செயல்படுகின்றனர். சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பார்கள்;. கடல்கரை அண்டிய பிரதேசம் பாதுகாப்பு வலையம் என்ற அடிப்படையான விடயத்தின் பின், உலகமயமாதல் என்ற வர்த்தக நோக்கம் தான் இதன் உள்ளடக்கமாகும். சுனாமி உருவாக்கிய கடல் கொந்தளிப்பு போன்ற ஒன்றை முன்பே காணாத ஒரு மக்கள் கூட்டம், அடுத்த சுனாமியை மீள காண்பது என்பது பொதுவில் சாத்தியமற்றது. அடுத்த சுனாமி 100 வருடங்கள் பின் உருவாகலாம் அல்லது உருவாகாமல் விடலாம்;. காலம் செல்ல மக்கள் இவற்றை மறுந்துவிடுவர் என்பதும் உண்மை. ஆனால் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த மண், அவர்களின் உழைப்பை கண்ட மண்ணை விட்டு அவர்களை அகற்றுவதில் ஏன் இந்தளவுக்கு முனைப்பு காட்டுகின்றனர். பாதிக்கப்படாத பிரதேசத்தில் இருந்தும் 100 மீற்றருக்கு மக்களை அகற்றுவீர்களா? இந்த 100 மீற்றர் நடைமுறையை உலக முழுக்க முன்வைத்து அமுல் செய்ய முடியுமா? ஏன் இந்த சதிராட்ட நாடகம் நடக்கின்றது. சுனாமி அலைகள் தொடர்ச்சியாக ஏற்படும் அமெரிக்கா, யப்பான் பிரதேசங்களில் கூட இந்த நடைமுறை கிடையாது. இந்த நிலையில் புலிகளும் அரசும் சேர்ந்து, மக்களின் உயிரின் மேல் கரிசனை உள்ளதாக காட்டி நடத்தும் போலி நாடகங்கள் பின்னால் ஒரு உள்நோக்கம் உண்டு.
வெப்பமண்டல நாடுகளின் கடற்கரைகள் உலகமயமாதலில் டாலர்களையே உற்பத்தி செய்கின்றது. இது சொந்த நாட்டில் மட்டுமின்றி, மேற்கு நாட்டிலும் கூட டொலரை உற்பத்தி செய்கின்றது. இதன் பின்னால் சர்வதேச சுற்றுலாத்துறையே வாயைப்பிளந்து நிற்கின்றது. மக்களின் சொத்ததாக இருந்த கடற்கரைகளை ஏமாற்றி அபகரிப்பதன் மூலம், விலைமதிப்பற்ற நிலத்தை அன்னியருக்கு தரைவார்க்கும் உள்நோக்கமே இதன் பின்னனியில் உண்டு. மக்களை எல்லாம் அந்த மண்ணில் இருந்து துரத்திய பின்பு, சில வருடங்கள் சென்ற பின்பு, இந்த கரையோரங்கள் மேற்கத்தைய வெள்ளையர்களின் காமக்களியாட்ட பொழுதுபோக்கு பிரதேசங்களாக மாற்றப்படவே உள்ளது என்பதே உண்மை. 100 மீற்றர் கடற்கரையில் மக்கள் வாழக் கூடாது என்று பசப்பும் இவர்கள், கடற்கரைகளில் உல்லாசமாக இருப்பதை தடை செய்யவில்லை, தடைசெய்யப் போவதுமில்லை. இந்த சுனாமி கடற்கரைகளில் உல்லாசமாக இருந்தவர்களைக் கூட ஆயிரக்கணக்கில் பலி கொண்டுள்ளது. இப்படி உல்லாசமாக இருப்பவர்களின் உயிரை இந்த 100 மீற்றர் எப்படி பாதுகாக்கும். இதைப்பற்றி மட்டும் இவர்கள் மூச்சு விடவில்லை. மக்கள் வாழ்வுக்காவும், தொழிலுக்காவும் வாழ்வதற்கு மட்டும் தடை விதிக்கின்றனர் என்றால் என்ன ஒரு அக்கிரமம். கடற்கரைகள் சுனாமிக்கு முன்பாகவே தனியார் மயமாகிக் கொண்டிருந்தது. அன்னிய நிறுவனங்கள் இதை வாங்கிக் கொண்டிருந்தன. இந்த சுனாமிக்கு முன்பாகவே புலிகள் கூட, பல கடற்கரைப் பிரதேசங்களை பினாமிப் பெயரில் அபகரிக்கத் தொடங்கியிருந்தனர்.
கடற்கரையில் இருந்து மக்களை துரத்துவதன் மூலம், அவர்களின் வாழ்வை வழங்கிய சிறியளவிலான மீன்பிடியை இல்லாது ஒழிக்கமுடியும்;. மேற்கு பன்நாட்டு மீன்பிடி நிறுவனங்கள் கடலை ஆக்கிரமித்து வரும் நிலையில், சிறு மீன் பிடியாளர்களை கடலில் இருந்து அகற்றுவது உலகமயமாதலில் ஒரு அடிப்படை நிபந்தனை. சுனாமியின் பெயரில் இதை பூர்த்தி செய்வதன் மூலம், மீன் பிடித்து வாழ்ந்த மக்களின் வாழ்வியல் உரிமையை இல்லாது ஒழிக்க முடியும். மறுபக்கம் கடற்கரையை சுற்றுலா மையங்களாக மாற்றுவதன் மூலம், மக்களின் வாழ்வியல் உரிமையை பறிக்கும் வக்கிரம் நடக்கின்றது. இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் தமது மனைவியையும், குழந்தைகளையும் கடற்கரையில் பொழுது போக்கும் வெள்ளைப் பன்றிகளின் பாலியல் தேவையை பூர்த்தி செய்து பொறுக்கி வாழவே, ஏகாதிபத்திய வளர்ப்பு நாய்களாக உள்ள தேசியவாதிகள் வழிகாட்டுகின்றனர். இதுவே அரசினதும் புலியினதும் விருப்பமான விளையாட்டாக உள்ளது. அன்னியச் செலாவணி என்ற பெயரில், டொலர் நோட்டுகள் கிடைத்தால் நல்லது என்பது தேசிய சிந்தனையாக உள்ளது.
சில்லறை மீன்கள் கிடைப்பதை விடவும் டொலர் நோட்டுகள் பெறுமதியானவை என்பது எல்லா மக்கள் விரோதிகளினதும் அடிப்படைக் கொள்கையாகும். இது நாட்டை முன்னேற்ற உதவும் என்பார்கள்;. ஆனால் எந்த நாட்டை முன்னேற்ற போகிறீர்கள் என்றால், மூச்சுப் பேச்சையே காணக்கிடையாது. பிடிக்கும் மீன்கள் மூலம் மக்களுக்கு கிடைத்து வந்த கொஞ்ச புரதச்சத்தையும் தேசியம் பேசும் புலிகளும் அரசும் பறித்துவிடவே முனைகின்றனர். புரதத்ததுக்கு பதில் மேற்கத்தைய ஆணாதிக்க ஆண்கள் வெளியேற்றும் விந்துகளையே உள்ளவாங்க கோரும் பாதையில் தான், கடற்கரை பாதுகாப்பு விவகாரம் மண்டிக் கிடக்கின்றது.
ஒரு நேரக் கஞ்சிக்காக வாழ்வா சாவா என்ற வாழ்வியல் போராட்டத்தை நடத்தும் மனிதன், குறைந்தபட்சம் உழைப்பை பயன்படுத்தக் கூடிய வசதியான இடத்தில் வாழ்வதே சிறப்பானது. இங்கு இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வது என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இயற்கை அப்படித்தான் உள்ளது. 100 மீற்றருக்கு வெளியில் மற்றொரு இயற்கை அழிவு ஏன் வரமுடியாது. இயற்கையை எதிர்கொள்ள, இயற்கைக்கு இசைவான வகையில் நவீன அறிவியலை பயன்படுத்தமுடியும்;. கடற்கோள் மட்டும் இயற்கை அழிவாக இயற்கை உருவாக்குவதில்லை. இலங்கையில் இயற்கை அழிவு வரக் கூடிய எத்தனையோ விடயங்கள் உண்டு. அதைப் பற்றி யாரும் மக்கள் நலன் சார்ந்து பேசமுடியுமா?. ஏன் பாதிக்கப்படாத பிரதேசத்தில் 100 மீற்றருக்கு என்ன நடக்கும். உதாரணமாக கொழும்பில் கரையோரத்தை குடியெழுப்பத்தான் முடியுமா!
ஏன் இந்த இயற்கை அழிவை விட, கடந்தகால யுத்த அழிவு மிகப் பிரமாண்டமானது. அதை நிவர்த்தி செய்ய உங்களால் முடிகிறதா? மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய உங்களால் முடிகிறதா? மக்களை மந்தை அடிமைகளாக, உங்கள் சொந்த தேவைக்காக அன்றாடம் மிதிக்கும் நீங்கள் தான், 100 மீற்றருக்கு அப்பால் குடியேற்றி மக்களை பாதுகாக்கப் போவதாக பீற்றுவது, உள்நோக்கம் கொண்ட மக்கள் விரோதச் சதியை அடிப்படையாக கொண்டது. இதைக்கண்டு கொள்ள சுய சிந்தனை உள்ள எந்த மனிதனுக்கும் பூதக்கண்ணாடி அவசியமற்றது.
சுனாமி குறித்து ஏகாதிபத்திய சதிகள்
உலகெங்கும் வாழும் மக்களுக்கு எதிரான சதிகளையும், நாடுகளுக்கு எதிரான திட்டங்களையும் தீட்டியபடிதான், ஏகாதிபத்தியங்கள் அன்றாடம் வக்கரிக்கின்றது. ஏகாதிபத்தியம் என்பது மக்கள் நலன் சாhந்து எதையும் மக்களுக்காக செய்ய நினைப்பதில்லை. மக்களின் உழைப்பை கொள்ளையடிப்பது, மக்களின் சொத்தை அபகரிப்பது, நாடுகளை சூறையாடுவது என்ற திசையில் தன்னை ஒழுங்கமைத்து வருவது தான் ஏகாதிபத்தியம். மூலதனத்தின் குவிப்பு தான் ஏகாதிபத்தியத்தின் உயர்ந்தபட்ச லட்சியம்.
இந்த அடிப்படையில் செயல்படும் ஏகாதிபத்தியங்கள், சுனாமி நிகழ்வதை முன் கூட்டியே தாம் பதிவு செய்தாக அறிவித்துள்ளன. சொந்த நாட்டு கடல் போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கடற்படைக்கு தகவல்கள் பரிமாறியதையும் கூட ஒத்துக் கொண்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இதை தாம் அறிவிக்கவில்லை என்பதையும் கூட எற்றுக் கொண்டுள்ளன.
ஹாவாய் தீவில் உள்ள ஆராய்ச்சி மையம் மூலம் டீயகோகிராசியஸ் இராணுவதளம் செய்தியைப் பெற்றுக் கொண்டது. அமெரிக்க நட்பு நாடுகளும் செய்தியை பெற்றுக் கொண்டனர். ஜெனிவாவில் உள்ள அணுவாயுத பரிசோதனை கண்;காணிப்பு மையம் நிகழ்வை பதிவு செய்துள்ளது. ஏன் இவற்றை மக்களுக்கு அறிவிக்கவில்லை என்று கேட்டால் கையைப்பிசைகின்றனர். தர்க்கமற்ற காரணங்களை கூறிக் கொள்கின்றனர். குறிப்பாக தமக்கு யாருக்கு அறிவிப்பது என்று தெரியாதாம். மனித இனத்தை மந்தைக் கூட்டமாக வைத்திருக்கும் வரை, இப்படி பதிலளித்து விட்டு ஒரு சர்வதேச குற்றத்தில் இருந்து தப்பித்து விடுகின்றனர். கேள்வி கேட்;பவன் இதற்கு வெளியில் கேள்வி கேட்பதையே தவிர்த்துக் கொள்வது, இந்த நாகரிக அமைப்பின் மலட்டுத்தனத்தை பாதுகாக்க உதவுகின்றது.
ஒரு இயற்கை அனர்த்தம் நடக்க உள்ளதை முன்கூட்டியோ அல்லது நடந்தவுடன் அதை மக்களுக்கு தெரியப்படுத்த மறுப்பது ஒரு சர்வதேச சமூகவிரோதக் குற்றமாகும்;. இது மனித இனத்துக்கு எதிரான ஒரு குற்றமாகும்;. உலக அதிகாரங்களையும், உலக அறிவையும் கைப்பற்றி கட்டுப்படுத்தி வைத்துள்ள ஒரு அதிகார வர்க்கங்களும், அரசியல் மையங்களும், இதை மக்களுக்கு அறிவித்து முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கத்தவறிய நிகழ்வை ஒரு வரலாற்றுக் குற்றமாகவே பாட்டாளிவர்க்கம் பிரகடனம் செய்கின்றது. காலகாலமாக இப்படி குற்றங்களை செய்து மக்களை பலியிடுவது, ஆளும் வர்க்கத்தின் வக்கிரமாகவே உள்ளது.
மக்களை பற்றி சிறிதும் அக்கறையற்ற அதிகார வர்க்கங்களின் தெரிவுகள் அனைத்தும், பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தே காணப்படுகின்றது. மக்களை இழிவாகவும், கேவலமாகவும் நடத்தும் உலக அதிகார மையங்கள், சுனாமியை முன் கூட்டியே தெரிந்தும் அறிவிக்கவில்லை. அவர்கள் கூறும் காரணங்கள் அனைத்தும் நொண்டிச்சாட்டானவை. முதலில் உலகம் முழுக்க தமது அதிகாரத்தை நிறுவவும், மக்களின் அறிவை மலடாக்கவும், உலகத்தை பொய்களில் புதைக்கவும் இவர்கள் உலகெங்கும் நடத்தும் உலகளாவிய செய்தி அமைப்புக்களில் கூட, இந்த இயற்கை அனர்த்தத்தைப் பற்றிய செய்தியை முன்கூட்டி அறிவிக்கவில்லை. இன்று ஏகாதிபத்தியத்தின் ஒரு சில செய்தியமைப்பைச் சார்ந்து தான், உலகின் 99 சதவீதமான செய்திகள் உற்பத்தி செய்கின்றனர். இப்படி உருவாகும் செய்திகள், மக்களுக்கு பொய்யும் புரட்டுடனும் தான் சென்று அடைகின்றது. சுனாமி நடந்ததைப் பற்றி அறியாத நிலையில், அன்றைய நாள் உலகில் உள்ள மக்கள் செய்திகளை கேட்டபடிதான் தமது சொந்த மரணத்தையே வரவழைத்துக் கொண்டிருந்தனர். இயற்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி செய்திகளை, சர்வதேச செய்தி அமைப்புகளுக்கு ஒரு இராணுவ இரகசியம் போல் திட்டமிட்டே ஏகாதிபத்தியங்கள் வழங்க மறுத்து இருந்தன. தமது சொந்த இராணுவக் கட்டமைப்பு, மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்துக்கு மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்ட கயவர்களால் தான் இந்த உலகம் ஆளப்படுகின்றனர். இவர்களின் இந்த ஒழுக்கமே உலகச் சட்டமாக உள்ளது. மக்களுக்கு எதிரான இவர்களின் அன்றாட நடைமுறைகளை பாதுகாப்பது தான் இன்றைய ஜனநாயகம் மற்றும் சுதந்திரமாக உள்ளது.
சுனாமி இயற்கையாக உருவானதா? சேர்க்கையாக உருவாக்கப்பட்டதா?
இது தொடர்பான சந்தேகம் பலதரப்பில் எழுப்பப்பட்டிருந்தது. மக்கள் கூட இப்படி ஒன்று ஏன் நிகழ்ந்திருக்க கூடாது என்ற சந்தேகத்தைக் கொண்டிருந்தனர். அதே நேரம் இந்த சுனாமியை அமெரிக்கா ஏகாதிபத்தியம் நடத்தியதாக ஒரு அபிப்பிராயம் வெளிப்பட்டது. இந்த ஊகங்கள், சந்தேகங்கள் பற்றி, நாம் என்ன நினைக்கின்றோம் என்பதில் கூட அடிப்படையான அறிவியல் பிரச்சனையை எழுப்பிவிடுகின்றது.
இன்று சேர்க்கையாக திட்மிட்டு நடத்தும் இயற்கை போன்ற அழிவுகளை, மக்களுக்காக போராடுபவர்கள் கண்டறியும் பலம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் பொதுவாக கிடையாது. இதனால் இது தான் நடந்தது என்று உறுதியாக சொல்ல முடியாது போகின்றது. பொதுவாக மக்கள் நலனை முன்னிறுத்தாத சுயநலப் போக்கு உலகப் போக்காக இருப்பதால், உண்மையை கண்டறிவது மேலும் மிக கடினமாகிவிடுகின்றது. உலகில் சேர்க்கையாக இயற்கை போன்ற பல திட்டமிட்ட தாக்குதல்கiளை அன்றாடம் ஏகாதிபத்தியம் பரிசோதிக்கின்றது. இந்த வகையில் நுண்ணுயிர் பரிசோதனைகள் மிக முக்கியமானது. இந்த மனித விரோத ஆயுதத்தை ஏகாதிபத்திங்கள் தொடர்ச்சியாக அன்றாடம் பரிசோதிக்கின்றது. இதன் விளைவை அறிய திட்டமிட்டே சேர்க்கை நோய்களை உருவாக்கி, அதை இயற்கையாக பரப்புகின்றனர். இதைப் போன்று விவசாய உற்பத்திகளை கட்டுப்படுத்த விவசாயத்தை அழிக்கும் நவீன நுண்ணுயிர்களை செயற்;கையாக உற்பத்தி செய்து இயற்கை அழிவை ஏற்படுத்துகின்றனர். இப்படியான பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இப்படி நடக்கும் மனிதவிரோதக் குற்றங்கள் காலத்தாலும், மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தை கைப்பற்றும் போதே அம்பலமாகின்றன. இவை ஒன்றும் கற்பனையானவையல்ல.
இந்த நிலையில் சுனாமி இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்ற கேள்வியும் மனித இனத்தின் முன் எழுந்துள்ளது. இதுபற்றிய தெளிவான தீர்ப்பை காலத்துக்கும், அறிவுக்கும் விட்டுவிடுவோம்;. ஆனால் நாம் இதில் உள்ள மற்றொரு உண்மையை ஆராய வேண்டியுள்ளது. பொதுவாகவே இந்த தாக்குதலை அமெரிக்காவே செய்திருக்கும் என்ற அடிப்படையான கருதுகோளின் பின்னுள்ள ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டியவராக உள்ளோம்;. அமெரிக்கா முதல் உலகில் உள்ள அனைத்து ஏகாதிபத்தியங்களும், உலகளவில் இப்படி ஒரு மனிதவிரோத தாக்குதலுக்கான தயாரிப்பு வேலையை செய்து வருகின்றன என்ற பரந்துபட்ட மக்களின் அனுபவத்தை, நாம் மீள பகிர்ந்து கொள்வது அவசியமானது. இதில் உள்ள பொது உண்மையை அறிவியல்துறை திட்டமிட்டே மறைக்கின்றது. ஏகாதிபத்தியங்கள் என்பதே மக்களுக்கு எதிராக செய்லபடுபவை தான். இதில் யாருக்கும் சந்தேகம் அவசியமற்றது. மக்களின் வாழ்வை சூறையாடவும், நாடுகளை ஆக்கிரமிக்கவும், தேசங்களை திவாலடையச் செய்யவும், தன்னாலான அளவுக்கு சமூக விரோத அடிப்படைகளுடன் களத்தில் செயல்படுகின்றனர்.
இதனடிப்படையில் சுனாமி போன்ற ஒரு செயற்கையான இயற்;கை தாக்குதலை நடத்த என்றும் ஏகாதிபத்தியங்கள் பின்நிற்பதில்லை. குறிப்பாக பரிசோதனைக்காகவும், இயற்கை தாக்குதல் போன்ற ஒரு தாக்குதலை நடத்த எப்போதுமே தயாராக இருந்தனர் அல்லது தாக்குதலை நடத்துகின்றனர். இந்த உண்மையை தான், இந்த சுனாமிக்கு வெளியில் மனித இனம் புரிந்து கொண்டேயாக வேண்டியுள்ளது. நடந்த சுனாமி இயற்கையானதா? அல்லது திட்டமிட்ட வகையில் செயற்கையானதா? என்பதைக் கடந்து, செயற்;கையாகவே ஏகாதிபத்தியம் இது போன்ற ஒன்றை நடத்தும் என்ற உண்மையை நாம் நிராகிரித்துவிட முடியாது. பரந்துபட்ட மக்களின் சந்தேகம் நியாயமானது. இது ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு வரலாற்று அனுபவும் கூட.
உண்மையில் செயற்கை அலைகளைக் கொண்டு நாடுகளைத் தாக்கும் திட்டம் ஏகாதிபத்திய இராணுவ பரிசோதனைகளில் இருந்தவையா என்றால், ஆம் இருந்தது. சுனாமி போன்ற ஒரு இயற்கை தாக்குதலை நடத்த, ஏகாதிபத்தியங்கள் பல பரிசோதனைகளை கடந்த காலத்தில் நடத்தியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் போதே இதற்கான முதல் முயற்சி தொடங்கப்பட்டது. பகிரங்கப்படுத்தப்பட்ட நியூசீலாந்து ஆவணம் ஒன்றே இதை உறுதி செய்கின்றது. முதலில் நியூசீலாந்து கடற்பிரதேசத்தில் அணுக்குண்டின் அளவு பலம் கொண்ட ஒரு தாக்குதல் மூலம், கடல் பேரலைகளை உருவாக்கி அழிக்கும் ஒரு திட்டம் மிகவும் இரகசியமாக ஆராய்சி செய்யப்பட்டது. நியூசிலாந்து ஓக்லான்ட் பல்கலைக்கழக பேராசிரியர் தோமாஸ் லீச் என்பவர் 1944, 1945 இல் தொடரான குண்டு வெடிப்புகளை கடலின் ஆழத்தில் ஏற்படுத்தி பேரலைகளை கடலுக்குள் செயற்கை முறையில் உருவாக்கினார். இந்த மட்டுப்படுத்தப்பட்ட சிறிய பரிமாணமுடைய இவ்வலைகள் ஓக்லான்ட் வாங்கப்பரோஆ எனுமிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த பரிசோதனையின் இராணுவ முக்கியத்துவம் அமெரிக்காவைக் வெகுவாக கவர்ந்தது. இவ்வாராய்சி இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக பூர்த்தி செய்யப்பாடமையால் தான், இது இரண்டாம் உலகயுத்தத்தில் போது பயன்பாட்டுக்கு வரவில்லை. இது அன்று பயன்பாட்டுக்கு வந்திருப்பின,; அணுக்குண்டுகளுக்கு ஒத்த ஒரு ஆயுதமாக இரண்டாம் உலகப்போரில் இடம் பெற்றிருக்கும் என்று அமெரிக்க இராணுவ அதிகாரிகளே ஒத்துக் கொண்டிருந்தனர். Pசழதநஉவ ளுநயட எனப் பெயரிடப்பட்ட சுனாமி பேரலைகள் பற்றிய ஆராய்ச்சி விபரங்கள் அடங்கிய 53 வருட இரகசிய ஆவணம் 6 வருடங்களுக்கு முன்பே நியூசீலாந்தின் வெளிநாட்டு மற்றும் வர்த்தகத்தொடர்பு அமைச்சு முதலில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டது.
இராண்டாம் உலக யுத்தத்தின் போது இரகசிய ஆவணங்கள் என இலச்சினையிடப்பட்ட இந்த ஆவணங்கள் மேல் அமெரிக்க மற்றும் பிரிட்தானிய இராணுவ அதிகாரிகள் குறிப்பான கவனத்தை செலுத்தினர். அமெரிக்கா இவ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட லீச் எனும் இப்பேராசிரியரை அமெரிக்காவின் டீமைini யுவழடட அணுப்பரிசோதனைத் தளத்துக்கு வருவித்து, அணுச்சக்தி வழிமுறைகள் ஏதாவது லீச்சின் ஆராய்வுக்கு பயன்பட வாய்ப்;பிருக்குமா எனவும் அறிவதற்காக விரும்பியது. ஆனால் பேராசிரியர் லீக்கின் அமெரிக்க விஜயம் நடைபெறவில்லை. ஆனால் அமெரிக்க அணுவாயுதப் பரிசோதனை மையக்குழுவின் அதிகாரியான னுச. கார்ல் கொம்ரன் என்பவர் நீயூசீலாந்துக்கு சென்று இதைப்பற்றி ஆராய்ந்தார்.
னுச. கார்ல கொம்ரன் இந்த லீச்சின் ஆராய்ச்சியின் முடிவுகள் பற்றி மிகுந்த வியப்புத் தெரிவித்ததுடன், இவ்வாராய்சிக்கு தகுந்த தொழில் நுட்ப தகவல்கள் வழங்கப்படவேண்டும் எனவும் அமெரிக்க இராணுவ இணை நிர்வாகக் குழுவுக்கு, 1946 ம் ஆண்டு வோசிங்டனிலிருந்து வெலிங்ரனுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த பரிசோதனையில் ஈடுபட்ட லீச் 1973 இல் அவுஸ்திரேலியாவில் இறந்தார். 1940 இலிருந்து 1950 ம் ஆண்டு வரை, இவர் பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதியாக இருந்தவர். மனித விரோத அழிவு யுத்தத்துக்கு ஏற்ற ஒரு ஏகாதிபத்திய ஆயுதத்தை கண்டு பிடித்தற்காக, 1947 இல் லீச்சுக்கு வழங்கப்பட்ட விருது (ஊடீநு - ஊழஅpயnழைn ழக வாந ழுசனநச ழக வாந டீசவைiளா நுஅpசைந) தான், இவரின் நாசகார திட்டம் பற்றிய ஊகங்கள் உலகில் கசிய காரணமாக இருந்தது.
நியூசீலாந்து மற்றும் அமெரிக்க அதியுயர் அதிகாரிகளின் மட்டங்களில் மட்டும் இவ் அழிவாயுத ஆராய்ச்சி குறித்து ஆதரவாக வெகுவாகப் பேசப்பட்ட போதும், ஆராய்ச்சி நடைபெற்ற காலப்பகுதியில் இதுபற்றிய விபரங்கள் யாவும் இரகசியப்படுத்தப்பட்டிருந்தது. லீச்சிக்கு உத்தியோக ரீதியில் பரீட்சயமான நீல் கீற்ரோன் என்பவர், நியூசீலாந்து பத்திரிகை ஹெரால்ட்டுக்கு தகவல் தருகையில் இந்த பேரலைகளை உருவாக்க கடலின் அடியில் வெடிபொருட்களின் அடுக்குகள் உருவாக்கப்பட்டன என்றார். பசுபிக் சமுத்திரக் கடற்பரப்பிலும் நியூசீலாந்தின் றூயபெயியசயழய கடற்பரப்பிலும் சுனாமி அலைகள் பரிமாணத்தில் சிறிதாக உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இப்பிரதேசங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன. ளுநயட என குறியிட்டழைக்கப்பட்ட இந்த பரிசோதனைத் திட்டத்தின் இறுதிக் குறிப்பு ஆவணங்கள் யாவும் வெலிங்ரன் பாதுகாப்புத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இதன் தொடர்ச்சி பற்றி தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இந்த சுனாமியை உருவாக்கும் குண்டு அதன் முழுப்பரிமாணத்தில் ஒரு போதும் பரிசோதிக்கப்படவில்லை. இப்பரிசோதனைகள் தொடர்பாய் சாதாரண மக்கள் யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மீளவும் இப்பரிசோதனைக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டதா எனவும் கேள்வியெழுப்புகின்றார் கீற்ரோன் எனப்படும் லீச்சின் முன்னைநாள் தொழிற் சகா. சுனாமி கடல் அலைகளை செயற்கையில் உருவாக்கி, மனித அழிவை உருவாக்கும் திட்டம் எதார்த்தமானதாகவும் ஏகாதிபத்திய ஆயுதங்களாகவும் இருந்தன, இருக்கின்றன. மக்களுக்கு எதிராக இயங்கும் ஏகாதிபத்திய கட்டமைப்பு ஒன்றும் புனிதமானவையல்ல.
இதை விரிவாக புரிந்துகொள்ள விரும்புவோர் கீழ் உள்ள இணையதளத்துக்கு செல்லவும். றறற.pசளைழnpடயநெவ.உழஅ இல் றறற.pசளைழnpடயநெவ.வஎஃளரடிளஉசiடிந.hவஅட
இந்த இடத்தில் அமெரிக்கா செய்மதிகள் சுனாமி தாக்குதலுக்கு முன்பாகவே இலங்கை, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய கரையோரங்களை விசேடமாக படம் பிடித்துள்ளது. தாக்குதல் நடந்த போதும், நடந்த பின்பும் கூட செய்மதிப் படங்களை எடுத்துள்ளனர். இந்த தாக்குதலின் விளைவை முன்கூட்டியே கண்காணிக்கும் அளவுக்கு அமெரிக்கா செயல்பட்டது ஏன்? இதன் அடிப்படையான உண்மை என்ன? என்ற பல கேள்விகளுக்கு காலமும், மனித இனமும் தான் பதிலளிக்க வேண்டியுள்ளது.
இங்கு மற்றொரு உண்மை வெளிவந்துள்ளது. சுனாமி செய்திகள் முன் கூட்டியே சில மட்டத்தில் பரிமாறப்பட்டுள்ளது. அமெரிக்கா கடற்படைக்கு செய்திகள் வழங்கப்பட்டள்ளது. இதுபோல் இலங்கை கடற்படைக்கும் செய்திகள் கிடைத்தன் மூலம், கப்பல்கள் பாதுகாக்கப்பட்டது. இது பரந்த தளத்தில் நடைபெற்றுள்ளது. சுனாமி தாக்க முன்பே இது பற்றிய தகவல்கள் இராணுவ பொருளாதார இலக்குகளில் பரிமாறப்பட்ட போது, பரந்துபட்ட மக்களுக்கு மட்டும் தி;ட்டமிட்டு இது அறிவிக்கப்படவில்லை. இதன் உள்நோக்கம் அடிப்படையிலேயே மக்கள் விரோதத் தன்மை கொண்டவையாக இருந்துள்ளது.
ஏகாதிபத்திய தலையீடுகளும் அதன் விளைவுகளும்
சுனாமியைத் தொடர்ந்து ஏகாதிபத்திய தலையீடுகள் பல மட்டத்தில் அரங்கேறியுள்ளது. இராணுவ வடிவங்கள் முதல் ஏகாதிபத்திய நிதியாதாரத்தில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் வரை களத்தில் செயல்படுகின்றன. இதன் மூலம் சுனாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவைவிட, சுனாமி பெயரில் நடக்கும் நிவாரணம் அதிக சமூகச் சிதைவை உருவாக்கி வருகின்றது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது அடிப்படையான சமூக வாழ்வியல் கட்டுமானத்தை இழந்;துள்ள நிலையில், அவர்களின் புனர்வாழ்வு என்பது பல சிக்கல் நிறைந்த சர்வதேச சதிவலைகளுக்கு ஊடாகவே பயணிக்கின்றது. அன்னிய தலையீடுகள் நாட்டில் என்றமில்லாத ஒரு வேகத்தில் நடக்கின்றது. பாதிக்கப்பட்ட நாடுகளின் கடன்தொகை அதிகரிக்க வைக்கும் அடிப்படையில், திட்டங்கள் மிக நுட்பமாகவே தீட்டப்படுகின்றன. இதனடிப்படையில் உதவிகள் என்ற பெயரில் சில்லறைகள் வீசியெறியப்படுகின்றன. மறுபக்கத்தில் நாட்டின் மேல் கடன்கள் திணிக்கப்படுகின்றன. இங்கு உதவிகள் என்பது, கடனை அதிகரிக்கவும், வட்டி ஒழுங்காக கிடைப்பதையும் அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகின்றது.
இதனடிப்படையில் சில சில்லறைகளை உதவியாக கொடுக்கின்றனர். இந்த உதவி கூட ஏகாதிபத்தியங்களில் கழிவுகளின் இருந்து கொண்டு வரப்படுகின்றது. உதாரணமாக ஐரோப்பாவில் பழைய உடுப்புகள் ஒவ்வொரு வீடாக சேகரிக்கப்பட்டுள்ளது. கடைகளில் விற்பனையாகாது தேங்கிய உடுப்புகள், மற்றும் தவறான வகையில் உருவான உடுப்புகள் மற்றும் இதுபோன்ற கழிவுகளின் சேகரிப்பு பிரமாண்டமான அளவில் நடைபெற்றுள்ளது. இவை தான் உதவி என்ற பெயரில் கொண்டு வரப்படுகின்றது. எதிர்காலத்தில் இயற்கை மற்றும் செயற்;கை அழிவுகள் நிச்சயமாக அவசியமானதாகி விட்டது. இதன் மூலம் உதவி என்ற பெயரில், மேற்கத்தைய கழிவுகளை அகற்றுவதற்கான புதிய வழியாகிவிட்டது.
மறுபுறத்தில் இந்த உதவி என்பது ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் அரசுசாராத நிறுவனங்களின் ஆதிக்கத்தை உருவாக்கியுள்ளது. சொந்தநாட்டு மக்களை வேடிக்கை பார்க்க வைக்கின்றது. அவர்களை கையாலாகாத்தனமற்ற மந்தைகளாக மாற்றுகின்றது. சமூகப் பங்களிப்பு என்பது, சமூகத்துக்கு கிடையாது என்பதை சொல்லிவிடுகின்றனர். இதன் மூலம் அரசுசாராத நிறுவனங்கள் அதிகாரமுள்ள உறுப்புகளாக மாறிவருகின்றது. அரசியல் பொருளாதார துறைகளில் மிகவும் திட்டமிட்டே தலையீட்டை நடத்துவதுடன், உற்பத்தி மற்றும் தேசிய பண்பாடுகளையே மாற்றியமைக்கின்றனர். இது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு இசைவாக மிகக் கவனத்துடன் திட்டமிட்டு புகுத்தப்படுகின்றது.
சிங்கள இனவாத அரசியலும் சுனாமியும்
ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு தலைகீழாக நின்றே சேவை செய்து வந்த சிங்கள இனவாதம், உள்நாட்டு நெருக்கடிகளால் திவாலாகிக் கிடக்கின்றது. உள்நாட்டு யுத்தம் முதல் சொந்த அரசைக் கூட உறுதியாக வைத்திருக்க முடியாத நிலையில் சிக்கி சிதிலமைகின்றது. அரசு சமாதானம் என்ற அடிப்படை கோசத்திகன் கீழ் தன்னைதானே பூச்சுட்டிக் கொண்டு, அதற்கு எதிராகவே திட்மிட்டு செயல்படுகின்றது. இன்றைய அரசும் சரி, எந்த சிங்கள இனவாத அரசு ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழ் மக்களின் பிரச்சனைக்குரிய தீர்வாக எதையும் முன்வைக்க முடியாது வக்கற்று கிடக்கின்றனர். குறிப்பாக தமிழ் மக்களின் நியாயமான (இங்கு புலிகளின் சொந்தக் கோரிக்கைகளை அல்ல) அரசியல் பொருளாதாரக் கோரிக்கைக்கு, எந்தவிதமான ஒரு தீர்வையும் முன்வைத்து மக்களை அணிதிரட்டுவது என்ற ஒரு நேர்மையான அரசியல் போக்கே கிடையாது.
தன்னிச்சை நிலைமைக்கு ஏற்ற, அரசியலை முன்வைக்கும் பராம்பரியமே இனவாத அரசியலாக மண்டிக்கிடக்கின்றது. பலம், பலவீனத்தைப் பொறுத்து, நிலைமைக்கு ஏற்ற அரசியல் செய்வது வழக்கமான ஒரு அரசியல் வழியாகிவிட்டது. இந்த நேரம் சுனாமி ஏற்படுத்திய அழிவு, சிங்கள இனவாதத்தின் மற்றொரு வக்கிரத்தை பூர்த்தி செய்யும் பூமாலையாகியது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனையை திசை திருப்பவும், அரசியல் ரீதியாக மக்களை ஏமாற்றவும் இது வழி கோலியுள்ளது. சுனாமி நிவாரணம் பற்றிய வாதப்பிரதி வாதங்கள் ஊடாக, காலத்தையும் நேரத்தையும் இழுத்தடித்து தமிழ் மக்களின் நியாயமான அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளை நீர்ந்து போகச்செய்கின்றனர்.
சர்வதேச தலையீட்டை வீம்புக்கு ஊக்குவித்து, அன்னிய தலையீட்டை நாட்டில் திட்டமிட்டே உருவாக்கியுள்ளனர். ஒருபுறம் புலிகளை மறைமுகமாக மிரட்டுவதன் மூலம், தமிழ் மக்களின் கோரிக்கைகளை கண்டுகாணாமல் போகச் செய்யும் வழிமுறைகளில் நிலைமையை மாற்றுகின்றனர். வெறும் புனர்வாழ்வு என்ற எல்லைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனை சீரழிந்து வருகின்றது. சுனாமி மற்றும் யுத்த புனர்நிர்மாணம் என்ற எல்லைக்குள், பணத்தை சூறையாடும் ஒரு வரையறைக்குள், தமிழ் மக்களின் பிரச்சனையை மாற்றுவதில் அரசும் புலிகளும் கூட்டாக செயல்படுகின்றனர். நாட்டின் தேசிய கூறுகள் அன்றாடம் ஏலம் விடப்படுகின்றது. அன்னிய உதவி, கடன் என்ற எல்லைக்குள் நாட்டை நிர்மாணம் செய்தல் என்பதில், தமிழ் சிங்கள கட்சி பேதம் இன்றி ஆதரித்து நிற்கின்றனர். அன்னியர் தேசத்தின் அடிப்படையான சுயநிர்ணயத்தையே இல்லாதாக்கும் அன்றாட முயற்சிக்கு, இவர்கள் வீம்பாகவே பச்சைக் கொடி காட்டுகின்றனர்.
மறுபுறம் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்பதை எடுப்பின் இனவாத அடிப்படையில் முதன்மை இடத்தை சிங்கள மக்களுக்கு திட்டமிட்டே வழங்குகின்றனர். சிங்கள இனவாதிகள் தமது சொந்த அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு, சிங்கள மக்களின் புனர்வாழ்வுக்கே முதன்மையான பங்கை வழங்குகின்றனர். இதற்கு அடுத்த நிலையில் தமிழரையும், அதன் பின்பாகவே முஸ்லீம் மக்களையும் படிநிலையில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர். புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சமச்சீராகவே கையாள வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆனால் அரசு அப்படிச் செய்யவில்லை. அரசு இனவாத அரசாக இருப்பதால், இனப்பிளவில் குளிர்காய்கின்றது.
குறுந்தேசிய புலிகளும் சுனாமியும்
சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாது என்ற அடிப்படையில், மேற்கில் செய்யும் பிரச்சாரங்கள் மூலம், தமிழ் மக்களுக்கு உதவ என்று பல கோடி ரூபா பெறுமதியான பணத்தைத் திரட்டிக் கொண்டனர். இந்த பணத் திரட்டலின் போது, தமிழ் குறுந்தேசிய இனவாதம் உச்சத்தை எட்டியது. எங்கும் சிங்கள மக்கள் தூற்றப்பட்டனர். தமிழ் மக்களின் புனர்வாழ்வை, தமிழ் மக்களே செய்யவேண்டிய நிலையில் இருப்பதாக பறை சாற்றப்பட்டது. அப்படி கோடி கோடியாக திரட்டிய பணம், தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு பயன்படுத்தப்படவில்லை. சிங்கள அரசு மட்டுமல்ல, புலிகளும் கூடத்தான் தமிழ் மக்களின் புனர்வாழ்வு நிதியை மோசடி செய்துள்ளன.
இப்படி தமிழ் மக்களை மோசடி செய்து திரட்டிய பணத்துக்கு என்ன நடந்தது என்பதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சிங்கள இனவாத அரசு போலவே தமிழ் மக்களுக்கு குறுந்;தேசியவாத புலிகள் சேர்த்த பணத்தை புனர்வாழ்வுக்கு பயன்படுத்தவில்லை. ஆனால் இனவாத சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு உதவ மாட்டாது என்று சொல்லி, பணத்தை கோடிக்கணக்கில் திரட்டினார்கள். இதை புனர்வாழ்வுக்கு பயன்படுத்துவதை திட்டமிட்டே மோசடி செய்ததன் மூலம், சிங்கள அரசை விட மிக மோசமாகவே தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வை புலிகள் நிராகரித்துள்ளனர். புலிகளிடம் திரண்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக சென்றால், உள்நோக்கம் கொண்ட அன்னிய புனர்வாழ்வு எதுவுமே அவசியமற்றது.
புலிகள் தமிழ்மக்களை மோசடி செய்து எமாற்றி திரட்டிய பணத்தை, பக்காத் திருடன் போல் ஒளித்து வைத்த படிதான் புனர்வாழ்வை அரசு செய்யவில்லை என்று எதிர்மறையில் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ் மக்களுக்கு முடிவாக அரசு புனர்வாழ்வும், அன்னிய புனர்வாழ்வும் என்ற நிலைக்கு சரிந்துவிட்டது. இந்த நிலையில் புலிகள் அரசுடன் மூட்டி மோதி நடத்தும் இழுபறியான பேரங்கள், உண்மையில் அதில் ஒரு பகுதியை புலிகள் சுருட்டிக் கொள்ளத்தான் நடக்கின்றது. இந்த பேரங்கள் தமிழ் மக்களின் நலன்களில் இருந்து அல்ல. புலிகள் நலன் சார்ந்த இந்த பேரங்கள், தமிழ் மக்களின் நிவாரணத்தை காலதாமதமாக்கி இல்லாதாக்கின்றது. உண்மையில் இந்த இழுபறியான பேரங்கள், தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கல்ல. மாறாக தமிழ் மக்களை ஏமாற்றிய திரட்டிய நிதி போல், அரசு நிவாரணத்திலும் ஒரு பகுதியை சுருட்டிக் கொள்ளவே பேரங்களை நடத்துகின்றனர்.
தமிழ்மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களில் எந்த விதமான சமூக பொறுப்புணர்வுமற்ற, சொந்த சுயநலத்தையே அடிப்படையாக கொண்ட குறுந்தேசிய பேரங்களே நடக்கின்றன. இந்த இடத்தில் பிரிட்டனில் இயங்கும் வெண்புறா இயக்க இயக்குனர் வழங்கிய பேட்டியொன்றில், நிதி வழங்குங்குங்கள் சிங்கப்பூராகவே மாற்றிக் காட்டுகின்றோம் என்கின்றார். அடுத்த நேரக் கஞ்சிக்கே வழியற்ற மக்கள் கூட்டத்தை அன்றாடம் உற்பத்தி செய்யும் புலிகள், சிங்கப்பூர் சொர்க்கத்தைப் பற்றி கதையளக்கின்றனர். அதாவது மதங்கள் வாழ்கின்ற உலகில் சொர்க்கத்தைக் காட்டமுடியாத போது, மரணத்தின் பின்பான சொர்க்கத்தை காட்டுகின்றனர். இதையே தமிழ் சினிமா கற்பனையில் சொர்க்கத்தை விதைக்கின்றது. இதேபோல் தான் புலியும், புலிப்பினாமிய அமைப்புகளும் நிதி திரட்டும் போது கற்பனை நம்பிக்கைகளை ஊட்டுகின்றனர். உலகமயமாதல் வெம்பி வீங்கிய போது உருவான சிங்கப்பூர் பற்றியும், அரபு மக்களை அடக்கியொடுக்க மேற்கின் அடியாளாக செயல்படும் இஸ்ரேலிய பாசிஸ்டுகளின் வக்கிரங்களே தமது கனவு என்று பிரமிப்பூட்டுகின்றனர். இதன் மூலம் முட்டாள் தமிழனின் கற்பனையை நம்பிக்கையாக மாற்றி, பணத்தை கறக்கின்றனர். ஆனால் மண்ணில் மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கே வழியற்று, பரதேசிகளாகவே மாறுவதையே, புலிக் குறுந்தேசியம் கட்டமைக்கின்றது.
தமிழ் மக்களின் நிதியை திரட்டும் போது பீற்றும் இவர்கள், மறுபக்கத்தில் அரசிடமும் அன்னிய ஏகாதிபத்தியத்திடமும் கையேந்தி நிற்கின்றனர். அரசு தம்மை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி பேரம் நடத்துகின்றனர். இங்கே திரட்டியது எங்கே என்பது கேட்கக் கூடாத, துரோகத்தக்குரிய, மரணதண்டனைக்குரிய ஒரு இராணுவ இரகசியமாகி விடுகின்றது அல்லவா. இதன் மீது தான் சிங்கப்பூரும், இஸ்ரேலிய கனவுகளும் சினிமாவாகி, கற்பனை ஒவியமாகின்றது.
முடிவாக
ஒட்டு மொத்தமாக மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் தலைவிதி, கேடுகெட்ட சமூக விரோதிகளின் வக்கிரத்துக்குள் புதைந்து போகின்றது.
இராயாகரன்
 
ஒரு தேசமே அழுகின்றது ஆனால் அதிகார வர்க்கங்களுக்கு அதுவே பொன் முட்டையாகிவிடுகின்றது







அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பாளனின் நோக்கங்களை புரிந்து கொள்வதும் மட்டுமின்றி,

அவனை எப்படி எதிர்கொள்வது என்பதும் கூட ஒரு வராலாற்றுக் கடமை



எமது தமிழ் சமூகத்தில் அமெரிக்கா எகாதிபத்தியத்தின் தலைமையிலான ஆக்கிரமிப்பைக் கூட கொச்சசைத்தனமாகவே புரிந்துகொள்வது நிகழ்கின்றது. தமது குறுகிய அரசியல் நலன்களுக்குள் இதை பகுத்தாய்வதும், விளக்குவதும் நிகழ்கின்றது. வரைமுறையற்ற பாசிச வன்முறையில் மலடாகிப் போன எமது சமூக அறிவியல், எதிரியைக் கூட சொந்த விருப்பு வெறுப்புக்கு எற்ப கொச்சைத்தனமாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது.



ஒரு ஆக்கிரமிப்பாளனின் நோக்கம், அவனின் அரசியல் பொருளாதார இலக்குகள் பற்றி தெளிந்த ஒரு அறிவு இன்றி, நாம் அவனை ஒரு நாளுமே எதிர்கொள்ளமுடியாது. அதேபோல் எமது நோக்கம், எமது அரசியல் பொருளாதார நலன்களும் ஆக்கிரமிப்பாளனுடன் எப்படி முரண்பாடுகின்றது என்ற தெளிவின்றி, ஆக்கிரமிப்பளனை வென்றுவிட முடியாது. அதாவது இலங்கையில் உழைத்து வாமும் ஒவ்வொரு மக்களினதும் பொருளாதார நலன்கள், அவர்களின் வாழ்வியல் நோக்கில் எப்படி ஆக்கிரமிப்பாளனின் நோக்கம் முரண்படுகின்றன என்ற தெளிவுடனான போராட்டம் தான், எதிரியை வெல்லவதற்கான அடைப்படையாகும்;.



இலங்கையில் எகாதிபத்தியங்கள் முதல் பலநாடுகள் தமது இராணுவங்களை குவித்து வருகின்றது. இந்தளவுக்கு கடும் யுத்த பிரதேசமாக உள்ள ஈராக்கில் கூட நடக்கவில்லை. மீட்பு, மனிதபிமான உதவி, மீள்நிர்மாணம் என்ற கோசங்களின் கீழ் நடக்கும் அன்னிய ஆக்கிரமிப்புகள், இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய ஒரு அன்னிய தலையீடாகும். முரண்பட்ட எகாதிபத்தியங்கள் முதல், பிரந்திய நலனுக்காக ஏகாதிபத்தியத்துடன் முரண்படுகளை கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரை இலங்கையில் கால் பதித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் கடுமையாக முரண்பட்டு மோதும் முன்று தேசிய இனங்களின் பெரும்பான்மையானோர், இவர்கள் பற்றி வௌ;வேறுவிதமான நிலைபாட்டை எடுக்கின்றனர். ஆக்கிரமிப்பாளனை எதிர்கொண்டு போராட ஒன்றுபட்ட ஒருமித்த நிலைப்பட்டை கொள்கை அளவில் கூட எடுக்காமையே, எகாதிபத்திய தலையீட்டின் மிகப் பிரதானமான மைய அச்சாக உள்ளது. இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருந்த வரை எந்த அரசியல் கட்சியும், இயக்கங்களும் இந்த தலையீட்டையிட்டு வாய்திறக்கவில்லை. வாயை உண்பதற்;கு மட்டும் தான், திறந்து மூடிக் கொண்டிருந்தனர். அரசியல் வாதிகளும், இயக்கங்களும் இந்த ஆக்கிரமிப்பில் தமது பங்குக்கு எதாவது லாபம் உண்டா என்ற நப்பாசையில் அங்கமிங்கும் வாலாட்டிக் கொண்டிருக்கின்றனர். லாபங்கள் கிடைக்காது என்று திட்டவட்டமாக தெரிந்த பின்பே, இதை எதிர்த்துக் குலைப்பர். இந்த நிலையில் தான் புலிகளின் தலைமையும் காத்துக் கிடக்கின்றது. சுனாமி அனர்தத்தைப் பயன்படுத்தி காசு பண்ணிப் பிழைக்கும் நரித்தனத்தை அம்பலம் செய்த எனது கட்டுரைதான், முதன் முதலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை நேரடியாக அம்பலம் செய்துள்ளது. மற்றம்படி பத்திரிகைகள் முதல் அரசியல் பேசும் கட்சிகள் மற்றும் ஆயுதம் எந்திய புலி இயக்கம் வரை ஒரு நீண்ட பேச்சுமூச்சற்ற தீடிர் மௌனவிரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.



சுனாமி அழிவைத் தொடர்ந்து எற்பட்ட சர்வதேச தலையீட்டின் பின்பாக, இன்று தீடிர்நிகழ்சிகள் அன்றாட செய்தியாகவும், அதீர்ச்சியூட்டுவனவாகவும் மாறிவருகின்றது. அன்னியப் படைகளின் வரவையிட்டு, எல்லா இனமக்களிடையேயும் பாரிய பிளவுகள் உருவாகி வருகின்றது. புதிய முரண்பாடுகள், ஐக்கியங்கள் உருவாகின்றன. மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு தமிழ்ப் பிரிவுகளிடையே ஒரு மகிழ்ச்சி தண்டவமாடுகின்றது. இதில் புலிகளுடன் இணங்கிப்போக முடியாத பொதுமக்களிடம் கூட, ஒரு விதமான நக்கலை அடிப்படையாக கொண்ட நமட்டுச் சிரிப்பு ஊடாகவே தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். புலிகள் மத்தியில் ஒரு சரணடைவுப் போக்கு, தயக்கத்துடனான அங்கலாய்ப்பு, விரக்தியுடன் கூடிய காழ்ப்பு, கண்முடித்தனமாக கோபம்; போன்ற பலவிதமான போக்குகள் வெளிப்படுகின்றனர். சரணடைவு முதல் கண்முடித்தனமான தனிநபர் பயங்கரவாத செயல்வரை கையாளும் ஒரு அதிர்வு எற்பட்டுள்ளது. Nஐ.வி.பி வாய்திறவாத மௌனத்தின் மூலம், பராளுமன்றத்தில் அமெரிக்கா தலைமையில் சிங்கள இனவாதப் புரட்சி நடத்துவது பற்றி கற்பனையில் புளுங்காயிதம் அடைகின்றனர். இக்கட்டுரை எழுதிமுடித்த நிலையில் Nஐ.வி.பி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அன்னியதலையிட்டை மனிதபிமான உதவியாக பராட்டியுள்ளனர். அதேநேரம் அவ்வறிக்கை ஆக்கிரமிப்பளானின் முன் புலிகளை தனிமைப்படுத்துவதாக கூறிக்கொண்டு, தமிழ்மக்கள் மீதான காழ்ப்பை வக்கிரமாக கொப்பளித்துள்ளனர். இலங்கையில் அதிதீவிரமான சிங்களப் பேரினவாதிகளாக தம்மை இனம்காட்டி வருகின்றனர். இவர்கள் அரசில் வீற்று இருக்கும் போதுதான், அமெரிக்கா ஆக்கிரமிப்பு வெத்திலைபாக்கு வைத்து வரவேற்கப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்கட்சியில் இருந்திருந்தால் என்ன அரசியல் செய்திருப்பார்கள் என்பதும், தீவிர அமெரிக்கா எதிர்ப்பு கோசத்துடன் மக்களையே ஏமாற்றியிருப்பர். இந்தவகையில் சிங்கள புரட்சிகரப் பிரிவுகளுக்கு, ஒரு ஆரோக்கியமான அரசியல் பாடத்தை, Nஐ.வி;.பியின் கைவருடித்தனமே சுயேற்சையாக கற்றுக் கொடுத்துள்ளது.



ஏகாதிபத்திய தலையீட்டை கூர்மையாகவே உள்ளிழுக்கும் நிவராணம்



இந்நிலையில் சர்வதேசரீதியான தலையீடுகள் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில், நிவரணப் பொருட்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக புலிகள் ஒருதலைப்பட்டசமாக அரசின் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபடி உள்ளனர். நிவாரணம் பற்றி புலிகளின் குற்றச்சாட்டும், இதற்கு பதிலளிக்க முன்வைக்கும் அரசின் உதவி பற்றிய அறிக்கையும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள சரிவால் சரிந்து கிடக்கின்றது. உண்மை நிலையை சுயமாக கண்டறிய முடியாத அளவுக்கு, செய்தித்துறைகள் முதுகெழும்பற்ற கைக்கூலிகளாகவும் எடுபிடிகளாகவும் சிரழிந்துவிட்டது. புலிகள் அரசின் மீதான தொடர் குற்றச்சாட்டும், அரசின் பதில்களும், நிலைமை ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக மாற்றிவருகின்றது. இந்த நிவாரணம், மீட்பு, மற்றும் புனர்நிர்மாணத்தில் மூன்றாம் தரப்புகளின் நேரடித் தலையீடுகள் அன்றாடம் அதிகரிக்க இவை உதவுகின்றது. ஒரு நாட்டில் உள்ள இனங்களுக்கு இடையிலான மோதல், மூன்றாம் தரப்புக்கு லாபங்களை பெற்றுக் கொடுக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு இடையிலான (பிரபா- கருணா) மோதலில், யார் அதிகம் லாபம் அடைந்தனர் என்பதையும், அடையயுள்ளனர் என்பதையும் சுயமாக சிந்திக்கும் ஒரு சராசரி மனிதன் இலகுவாக கண்டு கொள்ளமுடியும். இதுவே சுனாமி புனர்நிர்மானம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நிகழும். நிலைமை வேகமாகவும் மோசமாகவும் மாறிவருகின்றது. புலிகள் மற்றும் அரசுகளின் கையில் இருந்து நிலைமை படிப்படியாக மூன்றாம் தரப்பிடம் மாறிச் செல்வதை துரிதமாக்கின்றது.



புலிகளின் குற்றச்சாட்டுகள் அவர்களில் தனிப்பட்ட நலன்கள் சார்ந்து ஒரு தலைப்பட்சமானதாகவே உள்ளது. சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களுக்கு நிவாரணமாக என்ன தந்ததுள்ளது என்பதை தமிழ் மக்களுக்கும் உலகுக்கும் சொல்வதை மூடிமறைத்து, சிங்கள அரசு சிங்கள மக்களுக்கு என்ன கொடுத்துள்ளது என்ற எந்த அடிப்படையான தரவுகளுமின்றியே எழுந்தமானமான குற்றம்சாட்டுகின்றனர். இங்கு தமிழ் சிங்கள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடையில் திட்டமிட்டு இனவாத அடிப்படையில் பேதம் பாராட்டி நிவாரணத்தை வழங்கியிருப்பின், அதை ஆதாரமாக வைத்த குற்றம்சாட்டவேண்டும். வெளிப்படையான உண்மைகளை அடிப்படையாக கொண்டு, இதைக் கையாளவேண்டும.; உண்மையில் சிங்கள அரசு, எதையும் தமிழ் மக்களுக்கு தரவில்லை என்று கூறுவதன் மூலம், எதைத்தான் சாதிக்க புலிகள் விரும்புகின்றனர். தமிழ்மக்களை எமாற்றி, அவர்களிடம் கறக்கக் கூடியதை கறக்கும் தந்திரத்தையே, புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்கின்றனர். கன்றைக் காட்டி பசுவிடம் பால் கறக்கும் வக்கிர உத்தியையே, புலிகள் தமிழ் மக்களிடம் செய்கின்றனர். மறுபக்கத்தில் புலிகள் சர்வதேச சமூகத்திடம் இப்படிக் கூறுவதன் மூலம், சர்வதேச நிவாரணங்களை நேரடியாக தம்மிடம் தரக்கோருவதன் மூலம், அதில் தமது தனிப்பட்ட லாபங்களை அடையவிரும்புகின்றனர். இதன் மூலம் பதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நிவாரணத்தில் பெரும் பகுதியை சூறையாடவே விரும்புகின்றனர். உண்மையில் சர்வதேச நிவாரணங்கள் எப்போதும் அவர்கள் நேரடியான கண்கணிப்பில் செய்யப்படுவைதான். இது உலகமயமாதலின் அடிப்படைக் கொள்கையும் கூட. எகாதிபத்தியங்களுக்கு மக்களையிட்டு உண்மையில் எந்தக் கருசனையும் இருப்பதில்லை. மாறாக நீண்டகால அரசியல் பொருளாதார நோக்கில் புனர்நிர்மாணத்தில், அதுவும் சொந்த மக்களை ஏமாற்றி திரட்டிய நிதியின மூலம் இதில் ஈடுபட நிர்ப்பந்திக்கின்றது. இது எகாதிபத்திய நலன்கள் உள்ளடக்கியவை. கட்டுமானப்பணியில் இடைதரகராக புலிகள் அல்லது அரசு செயல்பட்டு ஏகாதிபத்தியத்திடம் நக்கமுடியும்; அவ்வளவே.



பதிக்கப்பட்ட மக்களின் பெயரில் திரட்டப்பட்ட நிதி, எப்படி என்ன நோக்கில் கையாளப்படுகின்றது என்று பார்த்தல், அவை மக்களுக்கு எதிராகவே வினைத்திறனாற்றுகின்றது. இந்த வகையில் புலிகளும் சரி, எகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்களும் சரி, அரசியல் பொருளாதார நோக்கில் மக்களுக்கு எதிராகவே தமது மொத்த செயல்பட்டை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றனர். நிதியை உழைக்கும் பொதுமக்களிடம் இருந்து, மக்களின் அவலத்தைக் காட்டித் திரட்டுகின்றனர். இதன் மூலம் தம்மைத்தாம் மனித மீட்சிக்கு பாடுபடுவதாக காட்டிக்கொண்டு, மக்களை மேலும் ஆழமான அடிமைத்தனத்துக்கு இட்டுச் செல்லுகின்றனர். நிதியை மக்களிடம் எடுத்துச் செல்வதில் எகாதிபத்திய தன்னார்வ நிறுவனத்துக்கும், புலிகளுக்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. புலிகள் தாம் திரட்டிய நிதியில் பெரும் பகுதியை மக்களுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள் தாம் திரட்டிய நிதியின் பெரும் பகுதியை பாதிக்கப்பட்ட மக்களிடம் எடுத்துச் செல்லுகின்றனர். ஆனால் அரசியல் பொரளாதார ரீதியாக இரண்டு வடிவங்களும் மக்களின் வாழ்வே மேலும் ஆழமாக சிதைக்கும் அரசியல் பொரளாதார உத்தியின் அடிப்படையிலேயே நிவாரணத்தை பயன்படுத்துகின்றனர்.



ஏகாதிபத்திய தன்னார்வ நிதிகள், நாட்டின் ஏற்றத் தாழ்வை எப்போதும்; அகலப்படுத்துகின்றது. ஏகாதிபத்திய நிதியில் மூலம் பாதிகப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க பொருட்களை கொள்வனவு செய்யும் போது, சிறு வர்த்தக சந்தையில் கொள்வனவுகளைச் செய்வதில்லை. மாறாக பெரும் வர்த்தகரிடம் பல கோடி பெறுமதியான பொருட்களை வங்குகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் லாபம் ஒரு குவியலாக தனிப்பட்ட ஒரு சிலருக்கே செல்லுகின்றது. நிவாரண நிதியின் கணிசமான பெரும்பகுதி சந்தையில் லாபமாக செல்லும் போது, இவை வர்த்தக மற்றும் உற்பத்தி சமூகத்திடம் பகிரப்படுவதில்லை. தனிப்பட்ட சில நபர்களிடமே குவிகின்றது. இதன் மூலம் தன்னார்வ எகாதிபத்திய நிறுவனங்கள் பெரிய பணக்கார கும்பலையே உருவாக்கின்றது. இதன் மூலம் பரந்த எழைகளின் அடித்தளத்தையும் கூட உருவாக்கின்றது. சிறு வர்த்தக மற்றும் உற்பத்தி அமைப்பையே தகர்த்து அழிக்கின்றது. இதைவிட இந்த உதவி, மொத்த அரசியல் அமைப்பையும், சமூக கூறுகளையும் கைகட்டி சேவகம் செய்யும் கூலிப்பட்டளமாக்கின்றது. (இது ஒரு விரிவான ஆழமான விளைவுகளை உள்ளடக்கிய பகுதி. இதை தனிய வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம.;)



அன்னிய ஆக்கிரப்பைக் கூட முடிமறைக்கும் எமது சமூக வக்கிரம்



இந்த நிலையில் உண்மையில் இலங்கையில் ஒரு ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ளது என்பதைக் கூட சொல்ல முடியாத நிலையில், ஆக்கிரமிப்பாளன் இலங்கையின் அனைத்து தரப்பின் மீதும் அரசியல் பொரளாதார அதிகாரத்தைப் படிப்படியாக நிறுவிவருகின்றான். அமெரிக்கா பிரிட்டிஸ் படைகள் முதல் இந்தியா பாகிஸ்தான் படைகள் வரை இலங்கையில் தரையிறங்கியுள்ளது. மனித அழிவுகளையும், மனிதத் துயரங்களையும் பயன்படுத்திக் கொண்டு, ஒரு ஆக்கிரமிப்பை நடத்தியுள்ளனர். உண்மையில் இயற்கை அனர்த்தின் வடுகளை அகற்ற, அன்னிய படைகள் இலங்கை வரவில்லை. இதேபோல் உதவிகளும். ஆயுதம் ஏந்திய இராணுவமும்;, உதவிப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கைகோத்து களத்தில் செயல்படுகின்றன. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டு முழுமையாக தமது நலனுக்கு சாதகமாக மாற்றவும், ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான உலகை பங்கிடும் ஒரு அம்சமாகவே இந்தப் படையிறக்கம் நடைபெற்றுள்ளது. அதேநேரம் தென்னாசிய பிரந்தியம் மீதான அரசியல் பொருளாதார ஆதிக்கத்தை எற்படுத்தும், ஏகாதிபத்திய அதிகார வெறியும் உள்ளடங்கியது.



உலகளவில் பிரதானமாக பொருளாதார ரீதியாக ஆதிக்கம் பெற்ற ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் யப்பானுக்கு இடையில் நடைபெறும், இழுபறியான ஒரு பொருளாதார யுத்தத்தில், இலங்கையைப் பங்கிடுவது நேரடியான ஆக்கிரமிப்பூடாக தொடங்கிவிட்டது. இதற்கு இயற்கை அனர்த்தத்தை திட்டமிட்டே பயன்படுத்திக் கொண்ட போதும், புலிகள் பற்றிய எகாதிபத்திய பொது நிலைப்பாட்டையும் இது பயன்படுத்திக் கொண்டது. புலிகளை பயங்கரவாத இயக்கமாக அனைத்து எகாதிபத்தியங்களும் கொள்கை அளவில் வரையறுத்து பிரச்சாரம் செய்வதுடன், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தமது சொந்த நாட்டில் தடைசெய்தது, சர்வதேச பயங்காரவாத பட்டியலிலும் இணைத்துள்ளது. இதனடிப்படையில் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாகவே கட்டமைத்து வந்தது, வருகின்றது. மற்றைய ஏகாதிபத்தியங்களிலும் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், புலிகள் என்ற பெயர் பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. ஆனால் புலிகளை ஒரு பயங்காரவாத இயக்கமாக கருதும் அதேநேரம், ஒரு மிதவாதப் போக்கையே அணுகுமுறையில் கையாளுகின்றது. இவை எல்லாம் ஏகாதிபத்திய முரண்பாட்டுக்கு உட்பட்டது. உலகளவில் இவ் ஏகாதிபத்தியங்கள் கையாளும் பொதுவான அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றது.



இந்த உள்ளடகத்தை சார்ந்தே இலங்கையில் படையிறக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த படை இறக்கம் என்பது, பொதுவாக கூறும் அடிப்படையான மனிதபிமானமான செயல்பாட்டுக்கு என்ற பொதுக் காரணத்தை விடவும், குறிப்பாக புலிகளுக்கு எதிரானதாகவே நிகழ்ந்துள்ளது. மிகவிரைவில் புலிகள் பாணியில், ஏகாதிபத்தியங்கள் புலிகளை குற்றம்சாட்டி ஒடுக்கும் சர்வதேச பிரச்சாரமாக மாறும் நிலைமை தோன்றும் அபாயம் காணப்படுகின்றது. புலிகளை தனிமைப்படுத்தும் அமெரிக்க உத்தி, தவிர்க்க முடியாது ஐரோப்பிய உள்ளிட்ட எகாதிபத்தியம் எங்கும் ஒரேவிதமாக மாறும் நிலைமை விரைவில் ஏற்படும் அபாயம் பொதுவாக காணப்படுகின்றது.



இந்தவகையில் புலிகளுக்கு எதிராக, ஒரு சர்வதேச ரீதியாக புலிகளை தனிமைப்படுத்தும் தீவிர முயற்சிகள் குறிப்பாக பின்வரும் விடையங்களுடாகவே அமையும் வாய்புகள் அதிகமாக காணப்படுகின்றது.



1.இயற்கை அனர்த்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச உதவிகள் நேரடியாக செல்வதை புலிகள் தடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். அவர்கள் அவற்றைக் கைப்பற்றி மக்களுக்கு செல்வதைத் தடுத்து, தமக்காக கொள்ளையடிப்பதாக காட்டமுனைவர்;.



2.பாதிகப்பட்ட மக்களுக்கு உதவும் அனைத்து வழிகளும் சுதந்திரமற்றதாகவும், ஜனநாயக பூர்வமாற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டுவர். இதற்கு புலிகள் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டிப் பிச்சாரம் செய்வர். இலங்கையில் எங்கேயும் சென்று உதவ தடைகள் இல்லாத இருக்கும் போது, புலிகள் பகுதி அதற்கு தடையாக இருப்பதாக கூறுவர். தமத பொதுவான மனிதபிமான அனுகுமுறையை சுட்டிக்காட்டி தம்மை நடுநிலையளராகவே உலகக்கு எடுத்துக் காட்டுவார்கள். இப்படி புலிகளின் அறிக்கைகள் கூறுவதையே, அவர்களுக்கு எதிரான பிரச்சாராத்துக்கே பயன்படுத்தவர்.



3.மக்களுக்கான சர்வதேச நிவாரணங்களை புலிகள் கைப்பற்றி தமது தனிப்பட்ட தேவைக்கு எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்துகின்றனர் என்று குற்றம் சாட்டுவார்கள்.



4.பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு தடையாக புலிகள் இருப்பதாகவும், அவர்களின் துயாரத்தை அதிகரிக்க வைப்பதாக குற்றம் சாட்டுவார்கள். சர்வதேச நிவரணங்கள் அந்த மக்களுக்கு கிடைப்பதை புலிகள் தாமதமடைய செய்வதாக குற்றம் சாட்டுவார்கள்.



5.புலிகள் சர்வதேச ரீதியாக திரட்டிய பெரும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பர். இதனடிப்படையில் சர்வதேச ரீதியாக சில நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் எற்படலாம். இதனடிப்படையில் இலங்கையிலும் தமது இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தம் அடிப்படைகளை உருவாக்குவார்கள்.



6.பதிக்கப்பட்ட மக்களின் பெயரில் மேற்கில் தமிழரைக் கடந்தும் சேகரித்த நிதியைக் கொண்டு, ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு எதிர்நடவடிக்கை தொடங்கப்படலாம். இதுபோல் இராணுவ நோக்கில் நிவராணப் பொருட்களை அபகரித்து பதுக்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம்.



7.இயற்கையால் மனித இனமே சிதைந்துள்ள நிலையில், புலிகள் யுத்த தயாரிப்பில் ஈடுபவதாக கூறி, சமதானத்துக்கு எதிராக இருப்தாக கூறி ஒரு எதிர்நடவடிக்கை தொடங்கப்படலாம். இந்த யுத்தம் பாதிக்கப்பட்ட மக்களில் வாழ்வை மேலும் ஆழமாக சீராழிக்கும் என்ற கூறி, யுத்தத்தைத் தடுக்க என்று கூறி எதிர்நடவடிக்கையில் ஈடுபடலாம்.



8.சுனாமியல் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும், அனாதைக் குழந்தைகளையும் கடத்திச் செல்வதாக குற்றம்சாட்டி ஏகாதிபத்திய தலையீடுகள் அதிகரிக்கும்.



9.நிவாரணம் என்ற பெயரில் அதற்குள் ஆயுதங்களை கடத்திச் செல்வதாக குற்றம் சாட்டவார்கள். இதன் மூலம் தலையீட்டை குறிப்பாக்குவார்கள்.



இவைகளையும், இதனடிப்படையில் உள்ளடங்க கூடிய ஒரு பிரச்சாரத்தை புலிகளுக்கு எதிராக கட்டமைத்து, எதிர்நடவடிக்கை மூலம் புலிகளை தனிமைப்படுத்தி அழிக்க அமெரிக்கா தலைமையிலான எகாதிபத்தியம் விரைவில் முயலலாம்;. இவை அனைத்தும் மக்களின் நலன்களில் இருந்து, எகாதிபத்தியம் ஒரு நாளும் முன்வைக்கப் போவதில்லை. மாறாக அவர்களின் சொந்த ஏகாதிபத்திய நலன்களில் இருந்தே, இவற்றைச் செய்யும்;. இந்த உள்ளடகத்தில் ஏகாதிபத்தியங்கள் பற்பல காரணங்களைக் கூறி புலிகளை ஒடுக்கி அழிப்பதை, நாம் என்றும் எதிர்ப்போம். ஏனெனின் இவை அனைத்தும் மக்களின் நலனுக்கு எதிராகவே கட்டமைக்கப்படும். புலிகள் பற்றிய பிரச்சனை இங்கு முதன்மையானவையல்ல. புலிகளைப் பயன்படுத்தி மக்கள் மேல் புதிய அடிமை விலங்குகளையே, தமது பாசிசப் பொம்மைகளைக் கொண்ட ஏகாதிபத்தியம் உருவாக்கும். இதை நாம் என்றும் அனுமதிக்க முடியாது.



மறுபக்கத்தில் அமெரிக்கா பாணிப் பிரச்சாரத்தில், புலிகள் எம்மை துரோகிகளாகவே சித்தரிக்கின்றனர். ஆனால் ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடுவதில், உலகளவில் மக்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்தான உறுதியானவர்கள் என்ற வரலாற்றுப் பாடத்தை மீண்டும் சுட்டிக் காட்டுவது அவசியமாகின்றது. இங்கு உலகளவிய பாராளுமன்ற போலிக் கம்யூனிச கட்சிகளின், வக்கற்ற முதலாளித்துவ செயல்களை கொண்டுள்ளோரை குறித்து கூறவில்லை. புலிகள் மக்களின் நலன்களில் இருந்து விலகியபடி மக்களை ஒடுக்கும் அமெரிக்கா பாணி யூத அரசியலை கைவிட்டு, மக்களுக்காக அவர்களின் வாழ்வுடன் பொருந்தி நிற்காத வரை, மேல் சொன்ன குற்றச்சாட்டுகள் ஏகாதிபத்திய ஒழுக்குமுறையையும் தாண்டி உண்மையாக்கிவிடும்.



புலிகள் மக்களின் பெயரால் செய்வன அனைத்தும், தனிப்பட்ட பிரபாகரனின் நலன்கள் சார்ந்தும் அவரைச் சுற்றியுள்ள குழுநலன் சார்ந்ததே. சொந்த மக்களுக்கு எதிராக சதிகளையும் பொய்களையும் வக்கிரப்படுத்திவிடும் புலிகள், உண்மைகளை குழிதோண்டி புதைத்துவிடுகின்றனர். மனிதப்பிணங்கள் மேல் தான், தமது சிம்மசானத்தை நிறுவியுள்ளனர். ஒரு அச்ச உணர்வை அடிப்படையாக கொண்ட, ஒரு மிரட்டல் அரசியலை ஆணையில் வைத்து தமது அரசியல் அதிகாரத்தை தேசியத்தின் பெயரில் தக்கவைக்கின்றனர். புலிகளைப் பயன்படுத்தி பொறுக்கித் தின்னும் கும்பல் ஒன்றால் சூழப்பட்ட நிலையில், அவர்களின் துதிபாடலுக்கு ஏற்ப அவற்றையே தமது மகுடமாகவே சூட்டிக் கொண்டுள்ளனர். இவற்றை எல்லாம் ஏகாதிபத்தியம் பயன்படுத்தி புலிகளை ஒழுக்கும் போது, புலிகளுக்காக குரல் கொடுக்க சொந்த மக்களே தயாராக இருக்கமட்டார்கள். உலகமக்கள் கூட உதவ முன்வரமாட்டார்கள்;.



ஏகாதிபத்திய தலையீட்டினை எதிர்கொள்ள முடியாத பிதற்றல்கள்



உள்ளடகத்தில் புலிகள் மக்களின் நலன்களுடன் விலகியே இருக்கின்றனர். இவற்றையே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை புலிகளே வழங்கிவிடுவர். இந்த நிலையில் 03.01.2005 வெக்ரோன் தொலைக்காட்சி ஷஅமெரிக்கா தலையீடு உள்நோக்கம் கொண்டதா| என்ற தலைப்பில் கருத்துக்களை கேட்கும் வாசகர் நிகழ்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு செக்கனுக்கும், இதில் கலந்து கொள்ள காத்திருக்கும் ஒவ்வொரு செக்கனுக்கும் தமிழ் மக்களிடமிருந்து பணம் அறவிடப்பட்டது. சுனாமி அனர்த்த துயாரத்தை பயன்படுத்தி, பல லட்சம் பணத்தை தமிழ் மக்களிடம் இருந்து தொலைக்காட்சிகள் பலவழிகளில் இப்படிப் பணமாக்கிக் கொண்டிருந்தன. கருத்து கேட்கும் நிகழ்ச்சியை நடத்திய செல்வமயூரன் அரசியல் ரீதியில் பகுத்தறிவையே மறுக்கும் ஒரு ரப்பர் பினாமி. இவரின் வக்கிரம், இந்தக் கருத்துக்களத்தை ஒருதலைப்பட்சமானதாக மாற்று வக்கிரம் முனைப்பாக செயலாற்றிக் கொண்டிருந்தது. அதேநேரம் அமெரிக்கா பற்றிய புலிசார்ப்பு கருத்துகள் வெளிவந்தன. இந்த நிகழ்ச்சி 04.01.2005 தொடரும் என்று அறிவித்த போதும் நடக்கவில்லை. அமெரிக்கா நலன்களுடன் இணங்கி; சரணடைந்துவிடும் துடுப்புச்சீட்டை கையில் வைத்திலுள்ளவர்கள் தான், இந்த கருத்து கேட்கும் நிகழ்சியை தடுத்துவிட்டனர் என்பதையே ஊகிக்கமுடிகின்றது. இந்தக் கருத்துக்களம் பலதளத்தில், பலவிதமான அபிராயங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. பலரும் இதுபற்றி சிலாகித்து கதைப்பதை காணமுடிந்தது.



இந்த கருத்துக்களத்தில் புலி விசுவாசம் உள்ளவர்களின் குரல்கள் பல பதிவாகின. அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவோம் என்று கூறும் கருத்துகளில் வெளிப்படுவது, அரசியலற்ற வெற்றுத்தனத்தையும், உணர்ச்சிவசப்பட்ட கண்மூடித்தனமான தனிமனித வன்முறை வெறித்தனமுமே. இவற்றை நாம் விமர்சிக்க வேண்டியவராக உள்ளோம். என்னெனின் பானையில் சோறாவதற்கு இவைர்களிடம் அரிசிகள் அல்ல. வெறும் கற்களைக் கொண்டே சோறாக்க நினைக்கின்றனர்;. இவற்றை விரிவாகப் பார்ப்போம்.



1.அமெரிக்காவை எதிர்த்து தலைவர் பிரபாகரனின் வழிகாட்டலில் நாம் போராடுவோம். இதில் எங்களுக்கு எந்தவிதமான அச்சமுமில்லை என்று கூறினர். இக் கூற்றை நாம் புலம்பெயர்ந்த நாட்டில், புலிகளுடன் இணையாது தப்பிவந்தவர்கள் ஊடாகவே கேட்கின்றோம். இங்கு தனிமனித தலைமை வழிபாட்டு உள்ளடகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படையற்ற விசுவாசமே எஞ்சிக் கிடக்கின்றது. தனிமனித விசுவாசம், தலைமை வழிபாடு மட்டும் அமெரிக்காவை எதிர்த்துப் போராட போதுமானதா? இவை இரண்டு இருந்தால் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் தோற்றுவிடுமா? பிரபாகரன் என்ன சக்தி வாய்ந்த கடவுளா?



உண்மையில் இந்த நம்பிக்கைகள், விசுவாசங்கள் கண்மூடித்தனமானவை. அமெரிக்காவை எதிர்த்துப் போராடடுவது என்பது, மக்களின் அடிப்படையான பொருளாதார அரசியல் நலன்களுடன் பின்னிப்பினைந்ததாக இருக்கவேண்டும். இதைவிடுத்து தலைவரின் பெயரால் கருத்துரைத்து செயல்படுபவர்கள், தலைவர் துரோகம் இழைத்தால் இவர்களும் அந்த துரோகத்துக்கு விசுவசமாகவே வக்களத்து வழங்குவார்கள். தலைவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது விபத்தில் இறந்தாலோ அல்லது தலைவரை உள் இயக்க அதிகார மோதலில் கைது செய்யப்பட்டலோ அல்லது படுகொலை செய்யப்பட்டலோ என்ன நடக்கும்? தலைவரின் பெயரால் அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவதாக கூறும் இவர்களின் நிலை தான் என்ன? எல்லாவிதமான நம்பிக்கையினத்தையும், கையேலாத்தனத்தை முதலில் இவர்கள்தான் வெளியிடுவார்கள். துரோகத்தை இவர்கள்தான் முந்தியடித்துக் கொண்டு வரவேற்பார்கள்;



2.தலைவருக்கு எல்லாம் தெரியும். சகலதும் அறிவார். அவர் சொல்வதின் படி நாம் நடப்போம். இந்தக் கூற்றுகள் மேல் கூறியது போன்று அரசியலற்ற ஒன்றாகவும், எதற்கு சோரம் போகும் எல்லைவரை இது விரிந்து காணப்படுகின்றது. தலைவர் துரோகம் இழைத்தால் தாமும் அந்த வழிக்கு விசுவசமாக இருப்பேன் என்ற அடிமைக் கோட்பாடு காணப்படுகின்றது. அரசியல் சார்ந்து தலைவரை பின்பற்றும் போக்கு முற்றாகவே மறுக்கப்படுகின்றது. தங்களைத் தாங்களே வெறும் மந்தைகள் என்கின்றனர். மக்களிடம் இருந்து அன்னியமாகி, போராட்டத்தைப் பயன்படுத்தி நக்கிபிழைக்கும் கும்பல்களின் வாலட்டும் குலைப்புத்தான் இவை.



சுனாமி நிகழ்ந்த பின்பு பிணங்களை காட்டி, ஐயோ மக்களிள் அதிலும் தமிழன் என்ற புலம்பி நிதி சேகரித்தனர். இதில் ஈடுபட்ட பலர் புலம்பெயர் நாடுகளில் சாதிபார்த்து சமூகங்களையே சுரண்டுபவர்களும், வட்டிக்கு பணம் கொடுத்து சுரண்டுபவர்களும்; என பலவிதமான சமூகவிரோதிகள் தான், நிதிசேகரிப்பின் மைய அச்சாக செயல்பட்டனர். சொந்த மகனுக்கே வட்டிக் பணம் கொடுப்பவர்களும், பக்கத்து வீட்டவனின் சாதி என்ன என்று தோண்டி அவர்களை இழிவுபடுத்துபவர்களும் தான், ஐயோ மக்கள் என்ற கூறி பணம் சேர்த்தனர். பணம் சேர்க்கும் மட்டும்தான் மனித பிணங்களை (இங்கு மனித துயரங்களை அல்ல) காட்சிப் படுத்தியவர்கள், சேர்த்த பணம் அந்த மக்களுக்கு எப்படி சென்றது என்ற காட்சி மட்டும் எந்த தொலைக் காட்சியும் காட்டவில்லை. பி.பி.சி தமிழ் சேவையில் வெளிவந்த உண்மையான சில மனித உணர்வுகள், உண்மையில் அங்கே என்ன நடக்கின்றது என்பதை அப்பட்டமாகவே புட்டுவைக்கின்றது.



3.இந்தியா என்ற பிராந்திய விஸ்தரிப்புவாத வல்லரசை நாம் தோற்கடித்தோம். அதாவது உலகிலேயே நான்காவது பெரிய இராணுவத்தை தோற்கடித்தோம். அதேபோல் அமெரிக்காவையும் தோற்கடிப்போம். இந்தக் கூற்றில் ஒரு மிகை நம்பிக்கை வெளிப்படுகின்றது. உண்மையில் இந்தியா ஆக்கிரமிப்பு இராணுவம், இலங்கையை விட்டு வெளியேறியதைப் புரிந்து கொள்ளவில்லை. இங்கும் புனைவு கற்பனை திறனுக்கு எற்ற விளக்களே, தமிழ் தேசியமாக காட்டப்பட்டது. வெறுமன புலிகளின் இராணுவ தாக்குதல்களால் தான், இந்தியா இராணுவம் தப்பியோடியதாக ஒற்றைப் பரிணாமத்தில் புரிந்து கொண்டே விசுவசமாக கருத்துரைக்கின்றனர். உண்மையில் புலிகளின் இராணுவ தாக்குதலை எதிர்கொள்ள முடியாத அச்சத்தில், இந்தியா வெளியேறவில்லை. மாறாக பல காரணங்கள் இதற்கு வெளியில் இருந்தன. புலிகளை ஒழித்துக்கட்டும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கையின் போது, புலிகளின் தலைமையின் பெரும்பகுதி, இந்தியாவின் சில குளறுபடிகளால் தான் தப்பிப்பிழைத்து. இதில் பிரபாகரன் முதல் இன்றைய தலைவர்களான பொட்டாமான், சூசை, .... எனப் பலரும் அடங்குவர். இவற்றை புலிகளின் நூலான சுதந்திரப்பறைவைகள் மற்றும் முறிந்தபனை என்ற நூல் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. தென் இலங்கையில் Nஐ.வி;.பி யால் எற்பட்ட கிளர்ச்சி, பிரேமதாசாவின் இந்தியாவை வெளியேற்ற விரும்பிய நிலைப்பாடு முதல் இந்தியாவில் உள்நாட்டு நிலைமைகள் தான் இந்தியா வெளியேற முக்கிய காரணம். மற்றும் இந்தியா இலங்கையில் நீண்டகாலமாக தங்கிநிற்க விரும்பின. இதனால் புலிகளின் தலைமை முற்றாக அழிப்பதை தவிர்த்து, யுத்தத்தை நீடித்து வைத்திருக்க விரும்பி புலிகளின் தலைமை தப்பிக்க வைக்கும் முயற்சியில் றோ ஈடுபட்டது. குறிப்பாக இந்தியா இராணுவம் மற்றும் உளவு அமைப்பான றோவுக்கு இடையில் முரண்பாடுகள் பலதரம் வெளிப்பட்டன. சில இடங்களின் றோவின் உத்தரவுக்கு எற்ப, சுற்றிவளைப்புகள் நிறுத்தப்பட்டு பின்வாங்கப்பட்ட நிகழ்வுகளும் அம்பலமாகியுள்ளது. புலிகள் மேலான அழித்தொழிப்பை மட்டுப்படுத்தியிருந்த இடைவெளியில் தான், இன்றைய புலித் தலைமை தப்பிப்பிழைத்தது. இதைவிடுத்து இந்தியா என்ற பிராந்திய ஆக்கிரமிப்பாளன், புலிகளின் சுத்த இராணுவ நடவடிக்கையால் தோற்று ஒடியாதாக கூறுவதும், அதே பாணியில் அமெரிக்காவை தோற்கடிப்போம் என்பதும் ஒரு கற்பனை சார்ந்த தனிமனித வெளிப்பாடுகளே.



இந்த நிலையில் ஐரோப்பாவில் இயங்கும், புலிகளின் நேரடிப் பினாமி வானொளியான ஐ.பி.சியில் சிவாராம் என்ற தராக்கி ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். இவரை புலிகளும், புலிப்பினாமிகளும் ஷஆய்வாளர்| என்ற கௌவுரப்பட்டத்தின் உடாகவே வளைத்துப் பிடித்தவர்கள்; இவருடன் சேர்ந்து ஒன்றாகவே சோரம் போன யெயபாலன் என்ற கவிஞரை புலிகள், விஸ்கி போத்தலை உடைத்து கொடுத்தே தமது பினாமியாக்கியவர்கள். இந்த பினாமியக் கலையைச் செய்தவர், புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஜெயபாலன் போல் சிவராமை ஷஆய்வாளர்| என்ற கூறி, உள்ளம் குளிரவைத்து புலிகளுக்காக எழுதவைத்துள்ளர். இவர் புலி ஆய்வுப் பேட்டியில், இந்தியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் என்றார். அமெரிக்காவுடனான முரண்பாட்டில், புலிகளை இந்தியா பலப்படுத்தும் என்றார். மற்றொரு ஆய்வில் ஈராக்கில் ஒரு வருடத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கா இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை, புலிகள் ஒரே மாதத்தில் கொல்லுவார்கள் என்றார். இப்படி பலவற்றை ஆய்வாக புலம்பினார்.



புல்லரிக்க புலம்பெயர் பினாமிகள் ஆகயாக யுகப்புரட்சி என்று கொக்கரித்தனர். தமிழ் மக்களின் அரசியல் வங்குரோத்தை, சிவாரம் கச்சிதமாக பிடித்துக் கொண்டு தன்னை தானே ஆய்வளராக காட்டிக் கொண்டார். எதார்த்தத்தை மறுத்து வக்கிரமாக புனைந்து காட்டும் சிவாரம் என்ற தராக்கி, முன்னாள் புளாட்டின் முக்கிய உறுப்பினர். புளாட் இயக்கும் 500 க்கு மேற்பட்ட உட்படுகொலைகளை செய்தபோது, அதற்கு அரசியல் முலாம் பூசி கோட்பாடுகளை வகுத்தளித்தவர் தான் இந்த சிவராம். பல உட் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டவர். இதை மூடிமறைக்கும் பாசிச அரசியலையே தனது ஆய்வாக அரசியலாகவும் அன்று செய்தவர். இன்றும் செய்கின்றார். இவரின் நேரடியான படுகொலைச் சம்பவம் ஒன்றை, சமரில் முன்பே எழுதியிருந்தேன்;. இதன் பின்னபாக பாரிசில் நடந்த இலக்கியச் சந்திப்பில் ஒன்றில், இவரும் இவரின் மற்றொரு நன்பருமான ரி.;பி.சி ராம்ராஜ்சையும் ஒன்றாக சந்திக்க வேண்டியநிலை எற்பட்டது. ரி;.பி.சி ராம்ராஜ் இந்தியக் கைக்கூலியாக இருந்ததை நான் கூறிய போது, நான் யார் என்பதை யாரிடமோ கேட்டுத்தெரிந்து கொண்டனர். இதன் போது இருவரும் என்னுடன் கதைக்க விரும்பி, அந்த மண்டபத்தின் முன்பாக என்னுடன் கதைத்தனர். அதன் போது சிவராம் குறித்த கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். இப்படி இருவரும் சேர்ந்து கதைத்துக் கொண்ட போது, அவர்கள் என்னுடன் நிற்கும் காட்சியை படமும் எடுத்துக் கொண்டனர். இந்த படத்தை அவர்கள் எடுத்தபோது, அதற்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. எப்போதும் சிவராம் அரசியல் உள்நோக்கம் கொண்டே செயல்பட்டவன், செயல் படுபடுபவன். புளாட்டில் இதே சிவாரம் மார்க்சிய கல்வி என்ற பெயரில் ஆண்கள் மற்றும் பெண்களை ஒன்றாகி பாசறை என்ற பெயரில் நடத்தியவன். இதன் போது ஆண் பெண் உறவில் எந்தக் கட்டுப்பாட்டையும் கம்யூனிச சமூகம் விதிக்காது என்று கூறி, இன்றே கம்யூனிச வாழ்க்கை நீங்கள் தொடங்க முடியும் என்று கூறி தனது காமக்களியாட்டத்தைத் தொடங்கி வைத்தவன். ஆண்களின் ஆணாதிக்க பாலியல் தேவைக்கு எற்ப, பெண்களை பயன்படுத்திக் கொண்டவர்களின் கும்பலுடன் இறுதிவரை கைகொத்து இருந்தவன்;. இது போன்ற மனித விரோத சுயநலப் போக்குகளை இயக்கத்தின் அரசியல் நடைமுறையாக்கிய போது, இதை எதிர்த்துத் போராடியவர்களை கொலை செய்யவும், துற்றவும் எப்போதும் உமாமகேஸ்வரன் கும்பலுக்கு துணைநின்றவன்தான் இவன்.



என்னிடம் தனக்கு குறித்த கொலைக்கும் எந்த தொடர்புமில்லை என்று மறுத்த சிவராம், இன்று புலிப்பினாமியாக நக்கித் திரிகின்றான். புலிகளின் மனித விரோத நடவடிக்கை உட்பட, மனிதப் படுகொலைகளை முடிமறைத்தே அரசியல் பிழைப்பு நடத்தகின்றான். இதைத்தான் அப்போது புளாட் இயக்கத்திலும் நடந்தியவன். நேரடி மறைமுக படுகொலைகளில் இவன் ஈடுபட்டவன் தான். குறிப்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றின் படி, ஆய்வு என்ற பொயரில் சிவத்தம்பியும், சிவராமும் அமெரிக்காவின் சம்பளப்பட்டியலில்; சிறிது காலம் இருந்தாக தகவல் ஒன்று உண்டு. இந்த இடத்தில் சிவாராமுக்கு எதிர்மறையில் புலிஎதிர்ப்பு அரசியலில் ஈடுபடும் ராம்ராஜ் தனது ரி.பி.சியில், பரந்தன் ராஐன் இந்தியா கைக் கூலியாக செயல்பட்டதையும், இன்று செயல்படுவதையும் சொல்வதில்லை. இதில் தனது முந்திய பிந்திய வரலாற்றைச் சொல்வதில்லை, சுயவிமர்சனம் செய்வதில்லை. புலிகளின் மனித விரோதத்தை மட்டும் சொல்லி அரசியல் செய்கின்றனர்.



இனி சிவராம் வனொளியில் சொன்ன விடையத்துக்கு வருவோம்;. ஈராக் யுத்தத்தில் ஒரு வருடத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கா இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை, புலிகள் ஒரே மாதத்தில் கொல்வர்ர்கள் என்றார். அமெரிக்காவை எதிர்த்து போராட உள்ளவர்கள் இவர்கள் அல்ல. அந்த இயக்கத்தில் இனைந்து போராடாத இவன், இயக்கத்தைப் பயன்படுத்தி நக்கிப்பிழைக்கும் புல்லரிக்கும வக்கிரத்தையே வெளியிடுகின்றனர். எதார்த்தம் தான் என்ன. ஈராக்கில் பிரபாகரன் என்ற ஒற்றைச் சர்வாதிகாரி கிடையாது. அமெரிக்காவை எதிர்த்து சில பத்து குழுக்கள் போராடுகின்றன. இந்தப் போராட்டத்தில் வயது வேறுபாடுகள் இன்றி மக்கள் போராடுகின்றனர். ஈராக் மக்களே ஒட்டு மொத்தமாக அமெரிக்காவை எதிர்க்கின்றனர். இந்த நிலைமை புலிகளுக்கு கிடையாது. வடக்குகிழக்கில் இருந்து தமிழ்மக்கள் தப்பி ஒடுகின்றனர். புலிகளின் கெடுபிடியான பாஸ்போட் முறைமைகள் மட்டும்தான், தமிழ் பகுதியில் தமிழ்மக்களின் வெளியேற்றத்தை தடுக்கின்றது. தேசப்பற்று, மண்ணில் மக்களை வாழ வைக்கவில்லை. மறுபக்கத்தில் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்பில் புகுவதை தடுக்கும் சிங்கள அரசின் பாஸ் வழங்களும், தமிழ் மக்களின் வெளியேற்றத்தைத் தடுக்கின்றது. அத்துடன் ஐரோப்பிய நகரத்துக்கு நிகரான வாழ்க்கை செலவுகளை கொண்ட கொமும்பில் வாழமுடியாத வாழ்க்கை நிலைமை கூட, வடக்குகிழக்கில் இருந்து தமிழ் மக்களின் புலப்பெயர்வை தடுத்து நிறுத்துகின்றது.



புலிகளின் போராட்டம் என்பது மக்களின் பொருளாதார வாழ்வியல் போக்குடன் அன்னியப்பட்டது. இந்த நிலையில் புலிகள் தமது சொந்த நலன்களை அடையும் போக்கில்;, மக்களை வெறும் மந்தைகளாகவும் அடிமைகளாக நடத்தும் புலிகளின் சர்வாதிகார அமைப்பில், அமெரிக்காவை எதிர்த்துப் போராட எதுவும் மக்களுக்கு கிடையாது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு எப்படி செலய்பட்டதோ, அப்படித் தான் புலிகள் உள்ளனர். இங்கு தாலிபனுக்கு மத அடிப்படைவாத பொதுக் கோட்பாடு அவாகளின் சொந்த நடைமுறை சார்ந்து இருந்தது. ஆனால் புலிகளுக்கு தமிழ் தேசியம் சாதுந்து கௌவ்விக் கொள்ள நடைமுறை சார்ந்த எதுவும் இருப்பதில்லை. ஈராக்கில் குறைந்த பட்சம் சதாம்குசைன் காலகட்டத்தில் அரசுக்கும் மக்களுக்கு இடையில் இருந்த உறவு கூட, புலிகள் மக்களுக்கு இடையில் இல்லை. தலிபான் எப்படி செயல்பட்டதோ, அதேபோல் புலிகள் உள்ளனர். மக்களுடன் ஜனநாயக பூர்வமான உறவை கொண்டிராத ஒரு நிலையிலும், அமெரிக்கா இவற்றை பயன்படுத்தி புலிகளை ஒடுக்கிவிடுவர். மக்கள்தான் வரலாற்றினை தீர்மானிக்கின்றரே ஒழிய, புலிகள் போன்ற குழுக்கள் அல்ல. இந்த நிலையில் புலிகளை அமெரிக்கா ஒழித்துக் கட்டும் பட்சத்தில், ஆங்காககே சிறு தாக்குதல்கள் நடந்தலே அது ஆச்சரியமானதே. வெறும் தலைமை வழிபாட்டில் மட்டும் கட்டப்பட்ட இயக்கத்துக்கு, இலட்சிய தாகம் என எதையும் அரசியல் பொரளாதார இலக்கில் காட்டமுடியாது. தலைவரை குறிவைத்து கொல்வதில் அமெரிக்கா தாக்குதல் வடிவங்கள் குறிப்பாக மாறும்;. இதில் தப்பிப்பிழைத்தாலும், அதியுயர் தலைமறைவு வாழ்க்கை முறைக்கு செல்வது தவிர்க்க முடியாது. இதனால் தலைமைக் கட்டுப்பாட்டை படிப்படியாக பிரபாகரன் இழக்கும் வாய்ப்பு உருவாகிவிடும்;. முரண்பட்ட குழுக்களின் பண்பு அதிகரித்து, பிளவுகள் ஆழமாகும். மக்களிடமிருந்து அன்னியமான இயக்கம், தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வியல் நலனுடன் தொடர்பற்ற அரசியல், தவிர்க்க முடியாது தோல்வி பெறுவதை துரிதமாக்கிவிடும். இது அழிவின் விழிம்புக்கு அழைத்துச் செல்வதுடன், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட அடையாளம் காணமுடியாது சிதைக்கப்பட்டுவிடும்;. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை என்பது, புலிகளின் தலைமையிலான ஆட்சியாக காட்டப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் தமது நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை பூதக்கண்ணடி கொண்டுதான் தேடிப்; பார்க்க வேண்டும். பிறகு எப்படித் தான் தமிழ்மக்கள் போராடுவது. (தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கைகள் என்ன என்பதை, ஷஷஇலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்|| என்ற நூலிலும், தற்போது வெளிவந்துள்ள இலங்கையில் உலகமயமாக்கல் என்ற சமாதான நாடகம் பற்றிய நூலிலும் விவதிக்கப்பட்டுள்ளது. பார்க்கவும்;)



சிவராமின் நவீன புலி ஆய்வு, இந்தியா அமெரிக்கா முரண்பாட்டினால், இந்தியா புலிக்கு ஆயுதம் வழங்கும் என்கின்றார். நம்புங்கள் இது உலக அதிசயமான ஆய்வாகிவிடும்;. அமெரிக்காவின் காலடியில் சுருண்டுபடுத்த குலைப்பதை மட்டும் தான் இந்தியா செய்ய முடியும். இதை அமெரிக்கா இந்தியா முரண்பாடாக பூதக்கண்ணாடி கொண்டு தேடுகின்றனர். உலகமயமாதலின் அரிச்சுவடியே தெரியாத தமிழ் மந்தைகளுக்கு, சிவராமின் உப்புச்சப்பற்ற கண்டுபிடிப்பு கிளுகிளுப்பை ஊட்டலாம். சிவாரமின் ஆய்வு உருவாக்கிய பொன்மொழிகள், பல்கலைகழக பட்டப்படிப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாகி நகைச்சுவைக்குரிய ஒன்றாகலாம். உப்புச்சப்பற்ற எடுபிடிகளாகி, வன்முறை வக்கிரத்தை மட்டும் கொண்டு தமிழ் மக்களை அடக்கியாளும் பிரிவுகளுக்கு, தமது இயலாமை மீதான நம்பிக்கையினத்தை மூடிமறைக்கும் நப்பசையையே சிவராம் மூகிழ்ந்துவிட்ட சென்றுள்ளான். இப்படி பல.



4.இதே போல் இந்தியாவுக்கு அமெரிக்காவுக்கு உள்ள பிராந்திய முரண்பாட்டை சார்ந்து நின்றும் கருத்துகளை முன்வைத்தனர். இங்கு சொந்த அரசியல் வங்குரோத்ததை மூடிமறைக்க, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு இடையில் உள்ள முரண்பாட்டின் ஊடாக அமெரிக்காவை எதிர்க்கும் போக்குவெளிப்ட்டது. இதனடிப்படையில் செய்திகள், கருத்துகள் இதனடிப்படையில் புனையப்படுகின்றது. அமெரிக்காவின் தலையீடு இந்தியாவுக்கு பாதகமானதாகவும், இந்தியாவின் ராஜதந்திரத்தின் விளைவே இந்தநிலை என்ற கண்டுபிடிப்புகள் முன்வைக்கப்பட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் மோதும் நிலை உருவாகும் என்ற கற்பனை, இது ஏகாதிபத்திய மோதலாகி உலகயுத்தமாக மாறும் என்ற விரும்பம் சார்ந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டது. பல பத்திரிகைகள், இணையங்கள் மற்றும் பினாமி ஆய்வாளர்கள் இதை முன்னிலைப்படுத்தி கருத்துக் கூறிவருகின்றனர். முரண்பாடுகளின் உள்ளடக்கத்தின் வளர்ச்சிவிதியை மிகவும் கொச்சைத்தனமாக புரிந்து கொண்டு அதை விளக்கிவிடுகின்றனர். உலகமயமாதலில் என்ன நடக்கின்றது என்ற அடிப்படை அறிவின்மையின் விளைவு இது. அமெரிக்கா உலகில் முன்னணி ஏகாதிபத்தியம். பொருளாதாரம், இராணுவம் என அனைத்திலும் பலம் கொண்ட நாடு. உலகில் பல நூறு இடங்களில் இராணுவத்தளங்களை அமைத்துள்ளது. ரூசியாவின் எல்லைகளிலேயே ரூசியாவின் கடுமையான எதிர்ப்புகைளை மீறி, முன்னாள் சோவியத் பிரதேங்களிலும் தொடர்ச்சியாகவே இராணுவத்தை நிலைநிறுத்தி வருகின்றது. இதுபோல் தான் சீனா எல்லைகளைச் சுற்றி புதிய இராணுவ முகங்களை அமைத்து வருகின்றன. ஏன் யப்பான், nஐர்மனி எங்கும் அமெரிக்கப் படைகள் தமது இராணுவ தளங்களை வைத்துள்ளதுடன், அவற்றை அகற்ற மறுக்கின்றது. மிகப் பெரிய ஏகாதிபத்தியங்களே தமது எல்லைகளில் அமெரிக்கவை எதிர் கொண்டு, என்ன செய்வது எனத் தெரியாது திணறுகின்றன.



இந்தியா போன்ற உலகிலேயே மிகப் பெரிய கடனாளி நாட்டுக்கு என எந்த சுயமும் கிடையாது. கடன் கொடுத்தவன் எதை சொல்லுகின்றனோ, அதை விசுவசமாக தலைகீழாக நின்று, ஜனநாயகக் கடமையாக எற்று செய்பவர்கள் தான்; இந்திய தலைவர்கள். இன்றைய நிலைமைக்கு அடிப்படையாக உள்ள உலகமயமாதலுக்கான காட் ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று தெரியாது, அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியம் சொன்ன இடங்களில் எல்லாம் விசுவசமாக வாலாட்டியே கையெழுத்திட்டவர்களே. இந்தியா தலைவர்கள் கட்சி அரசியல் பேதமின்றி, அமெரிக்கத் தலைவர்களின் சப்பாத்துகளை விசுவசமாக துடைத்துவிட அலைபவர்கள் தான்;. ஏன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகபூர்வமாக அமெரிக்கா சென்ற போது, அவரையே விமான நிலையத்தில் நிர்வாணமாக்கிய போது, இந்தியா மக்களுக்கு அதை மூடிமறைத்தே வாலாட்டியவர்கள தான்;.



இந்தியாவில் பராளுமன்றத்தில் புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகள், Nஐ.வி.பி போல் அமெரிக்கா பற்றி புலம்ப முடியும் அவ்வளவே. உண்மையில் இந்திய மக்கள் தான், அமெரிக்கா எதிர்ப்பை பிரதிபலிக்கின்றனர். இதற்கு வெளியில் அமெரிக்கா, இந்தியா முரண்பாடுகள் வரையறுக்கப்பட்டவை தான்;. இது இந்தியா மூலதனத்துகும், அமெரிக்கா மூலதனத்துக்கும் இடையில் எந்தளவுக்கு முரண்பாடுகள் உள்ளதோ, அதற்கு உட்பட்டுதான் இந்த முரண்பாடு பிரதிபலிக்கும். இந்தியா மூலதனம் அமெரிக்கா மூலதனத்துடன் இணங்கிப் போகும் கொள்கையை அடிப்படையாக கொண்டது. இந்த நிலையில் இலங்கையில் எற்பட்ட அமெரிக்கா தலையீடு பகைமுரண்பாடாக வளர்ச்சியுறாது. மாறாக அமெரிக்கா படையுடன் கூட்டாக இயங்கவும், புலிகளை ஒடுக்கவுமே துணைபுரியும். அதாவது அமெரிக்கா தலைமையிலான படையில் சண்டையிட்டு மடியும் கூலிப்படையாக, இந்தியா படைகள் மாறும்;. இதற்கு வெளியில் அல்ல.



5. அமெரிக்காவை எதிர்த்துப் போராட சிங்களமக்களை பிரபாகரனின் தலைமையில் அணிதிரள வேண்டும் என்றனர். தமிழ் சிங்கள ஐக்கியம் என்பது, பிரபாகரனின் தலைமையில் அமைய வேண்டும் என்றனர். அதேபோல் சிங்களவர்கள் பிரபாகரன் தலைமையில் அணிதிரளுவார்கள் என்றனர். மிகவும் வேடிக்கையான கருத்துகள் தான். புலிகளின் ஒரு பகுதியினர் இப்படிக் கூறுவது, அரசியல் ரீதியாக வக்கற்றத் தன்மையைக் காட்டுகின்றது. தமிழ் மக்களையே தனது தலைமையில் அணிதிரட்ட வக்கற்றப்போன ஒரு பாசிசக் கட்டமைப்பை வைத்துக் கொண்டு, எப்படித்தான் சிங்கள மக்களை அணிதிரட்டமுடியும். குறைந்தபட்சம் அன்னியரை எதிர்க்க கூடி அனைவரையும் அணிதிரட்டக் கூடிய ஜனநாயகத்தை வழங்க மறுக்கும் போது, எப்படித்தான் போராடமுடியும். இன்று சொந்த இனமான தமிழ் மக்களுக்குள்ளேயே, அதிக எதிரிகளை கொண்டு ஒரேயொரு இயக்கம் உலகில் புலிகள் மட்டும்தான். எதிரியை தனது இயக்கத்துக்கு வெளியில் மட்டுமல்ல, சொந்த இயக்கத்தின் உள் கூட கொண்டுள்ளனர். துரோகி என்ற பெயரில் உலகில் அதிகமானவர்களை கொன்ற இயக்கமும் புலிகள்தான்;. இது புதிதாக அதிக எதிரிகளை தமிழ் மக்களுக்குள் அன்றாடம் உருவாக்கின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை எற்கவும் அதற்காக போராடவும் முன்வராத புலிகள், எப்படித்தான் உலக எதிரிகளை எதிர்த்துப் போராடமுடியும். ஐக்கியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத நிலையில், எதிரிக்கு எதிராக அனைத்து சக்திகளையும் அணிதிரட்ட வக்கற்றவர்களாகவே புலிகள் உள்ளனர். புலிகள் தமக்காக மட்டும் போராடுவதாலும், மக்களை இதற்கு ஏற்ற மந்தைகளாக வைத்திருக்கும் வரை, எதிரிகளின் நயவஞ்சகமான குரூரமான தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைக்கமுடியாது. சொந்த தமிழ் மக்களையே ஜனநாயகபூர்வமாக அணிதிரட்ட முடியாது வக்கற்று இருக்கும் நிலையில், சிங்கள மக்களை அணிதிரட்டுவதாக கற்பனை பண்ணுவது என்பது தனிப்பட்ட கற்பனைத் திறன் கொண்ட சுகனுபவதான்.



அமெரிக்காவையும், மற்றயை ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் சில அடிப்படைகள் தெளிவாக முன்வைக்கப்பட்ட வேண்டும்.



அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி தமிழீழத்தை அமைத்தால், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்துக்கு மற்றாக என்ன பொருளாதாரத்தை புலிகள் கொண்டிருப்பர். உலகமாயமதல் என்ற உலகளவிய பொருளாதாரத்தை மறுத்து, மாற்றாக என்ன பொருளாதாரத்தை புலிகள் கொண்டிருப்பார். இந்தப் பொருளாதாரத்தை எப்படி, எந்த வழிகளில் தக்கவைப்பர். அமெரிக்காவை பகைத்து உலகில் எப்படி தனித் தமழீழம் செயற்படும்;. எப்படி? என்ன? பொருளாதாரக் கொள்கையுடன் என்ற கேள்விக்கு பதில் தெரியாதா யாரும் அமெரிக்காவை எதிர்த்து வெல்லமுடியாது.



அமெரிக்கா பாணி பொருளாதாரத்தையும், அமெரிக்கா பாணி பாசித்தையுமே தமது அரசியலாக கொண்டே புலிகள் தம்மை கட்டமைத்துள்ளனர். புலிகளின் கட்டமைப்பு தனித்துவமிக்கவையல்ல. மாறாக அமெரிக்கா மாதிரியே. அமெரிக்காவின் பொய்கள், மற்றும் புரட்டுகளின் மாதிரி வடிவம் தான், புலிகளின் கட்டமைப்பு. உலக மனித இனத்தையே மந்தைகளாக அமெரிக்கா கருதுகின்றது என்றால், புலிகள் தமிழ் மக்களை அப்படிக் கருதுகின்றனர். உலகின் செல்வம் அனைத்தையும் அமெரிக்கா தனதாக்க முனைகின்றது என்றால், புலிகள் தமிழ் மக்களின் செல்வம் அனைத்தையும் தனதாக்க முனைகின்றது. இந்த செல்வங்களைக் கூட அமெரிக்காவில் உள்ள ஒரு சிலர் சொத்தாக்கவே அமெரிக்கா முனைகின்றது என்றால், புலிகள் தமிழ் மக்களின் செல்வங்களை அனைத்தையும் புலிகளில் உள்ள ஒரு சிலர் சொத்தாக்கவே முனைகின்றனர்.



உண்மையில் அமெரிக்காவுக்கும், புலிகளுக்கும் அரசியல் பொருளாதார ரீதியாக கொள்கை அளவில் முரண்பாடுகள் இருப்பதில்லை. புலிகளின் தரகு பொருளாதாரம் வழிகாட்டும் நுகர்வு, அமெரிக்கப் பொருளாதாரத்தையே தமிழ் தேசிய பொருளாதாரமாக்கியுள்ளனர். உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஏகாதிபத்தியத்தின் ஒரு கைத்தொலைபேசி நிறுவனம் மட்டும் 1.5 லட்சம் கைதொலைபேசி சந்தாக்களை கொண்டுள்ளது. (நிச்சயமாக வரியை இவர்கள் புலிக்கு செலுத்தியிருப்பர்.) இந்த நுகர்வுப்பண்பாடு தமிழ் தேசிய நுகர்வாக இருக்க முடியுமா அல்லது அமெரிக்கா பண்பாட்டு நுகர்வு வடிவமாக இருக்குமா? மறுபக்கத்தில் யாழ்க்குடாவில் அண்ணளவாக 1.4 லட்சம் குடுமபங்கள்; உள்ள அதேநேரம், 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இங்கு தான் இந்த தொலை பேசி நுகர்வு வெறியும் காணப்படுகின்றது. இது அனைத்து விதமான ஆடம்பரமான வெளிநாட்டு பொருள்களுக்கும் பொருந்தும். யாழ் மேட்டுக் குடியின் வாழ்கை முறமை, ஐரோப்பிய தமிழனின் வாழ்க்கை முறமையை விட நுகாவில் உயர்வனதாக காணப்படுகின்றது.



இந்த நிலையில் உலகம் முழுக்க அமெரிக்கா எதைச் செய்ய விரும்புகின்றதோ, அதைப் புலிகள் வாலாட்டி செய்கின்றனர். மறுபக்கத்தில் அமெரிக்கா எதை உலக மக்களுக்கு செய்ய விரும்புகின்றதோ, அதை தமிழ் மக்களுக்கு செய்ய புலிகள் விரும்புகின்றனர். ஜோஜ்;புஷ்; அமெரிக்கா ஐனதிபதியாக இருந்தாலும் சரி, அந்த இடத்தில் பிரபாகரன் இருந்தாலும் உலகளவிய விளைவுகள் ஒன்றே. பிரபாகரன் இடத்தில் ஜோச்புஸ் இருந்தாலும், புலிகள் இயக்கம் இப்படித்தான் இருக்கும். புலிகள் இயக்கமும், அமெரிக்கா அரசாங்கமும் அடக்கியாளக் கூடிய மக்கள் கூட்டங்களின் மேல் ஒரேவிதமான பாசிசக் கட்டமைப்பையே கொண்டு அடக்கியாளுகின்றனர்.



இந்த நிலையில் புலிகள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான முரண்பாடு தான் என்ன? அரசியல் பொருளாதார நோக்கில் முரண்பாடுகள் அற்ற நிலையில், என்னதான் இவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் உண்டு. புலிகள் உலகமயமாதலுக்கு உட்பட்ட, அமெரிக்காவின் பொரளாதார கைக்கூலிகளாக இருக்க விரும்பும், வழிகளில் தான் முரண்பாட்டைக் காண்கின்றது. அமெரிக்கா ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பில் இருந்து பொருளாதார அடிமையாக சேவை செய்யக் கோருகின்றனர். இதை தேர்தல் முறை ஊடாக சிங்களவருடன் போட்டியிட்டு அடையக் கோருகின்றனர். ஆயுதம் முலம் உலகமயமாதல் பொருளாதார அமைப்பில் புலிகள் பங்குகோருவதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. புலிகள் தேர்தல் வழிகளில் தமிழ் மக்களை முழுமையாக மொட்டையாடித்து சூறையாட முடியாது பலவீனம், அமெரிக்காவுடான ஒரு முரண்பாடக மாறிவிடுகின்றது. புலிப் பினாமிகள் வெளியிடும் புலிப்பிரச்சாரச் செய்திகளில், அமெரிக்கா அதிகாரவர்க்கத்தின் உறுப்புகள் புலிகள் பற்றி புலிகளுக்கு சார்பாக கூறிவிட்டால், அதை தலைப்புச் செய்தியாக்கி குதுகளிப்பதை சுனாமி பின் அடிக்கடி காணமுடிகின்றது. மறுதலையில் புலிக்கு எதிராக அமெரிக்கா எதாவது சொன்னால், புலிஎதிர்ப்பு செய்திகள் குதுகலத்துடன் தலைப்புச் செய்தியாக்கின்றன. அமெரிக்காவிடம் நக்கித் தின்ன புலிகளும், புலி எதிர்ப்பு பிரிவினரும் போட்டிபோடுவதுடன், அதற்கு விசுவசமாக இருப்பதையே இது பிரதிபலிக்கின்றது. அமெரிக்காவின் கண் அசைவுக்கு உட்பட்ட ஒரு உடன்பாடு மட்டும் தான், இங்கு இவர்களுக்கு தேவைப்படுகின்றது.



உண்மையில் அமெரிக்காவுக்கும் புலிகளுக்கு இடையில் உள்ள அரசியல் பொருளாதார ஒற்றுமை, புலிகளை ஒரு சரணடைவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் சாத்தியப்பாடுகள் தெளிவாக காணப்படுகின்றது. இலங்கை அரசும், புலிகளும் அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுக கண்காணிப்பின் கீழ் ஒரு ஒப்பந்தத்தையே வந்தடைவார்கள். புலிகளின் துரோகம் மேல்பூச்சுகள் மூலம் மறைக்கபட்டு அரங்கேறும் நிலைமையே, இலங்கை அரசியல் நிலைமை எதார்த்தமாக காணப்படுகின்றது. என்றுமில்லாத ஒரு வரலாற்று துரோகம் அரங்கேறும். புலிகளில் சிலர் தமிழ் மக்களிடம் வசூலித்த மிகப் பெரிய நிதியாதரங்களுடன், பெரும் தொழிலதிபர்களாகவும் எகாதிபத்திய தரகராகளாக வெளிவரும் காலம் விரைவில் அரங்கேறும்;. இதையே தேசியத்தின் வெற்றி என்ற பீற்றும், தமி;ழ் தேசிய அரசியல் அரங்கேறும்.



இதையும் மீறி யுத்தத்துக்குள் நாடு செல்லுமென்றால் என்ன நடக்கும். புலிகள் என்றுமில்லாத தனிமைப்படுத்தலுக்கு உள்ளவார்கள். புலிகளின் உள்ளேயே அமெரிக்கா சார்பு நிலைப்பாட்டுடன் நிச்சயமாக ஒரு அணிபிளவுறும். புலிகளின் அரசியல் பொருளாதார போக்கே, புலிகளின் பிளவுக்கு அத்திவாரமாக இருக்கும். புலிகளுக்கு எதிரான அணி புலிகளுக்கு வெளியிலும் பலமானதாகவே இருக்கும். அமெரிக்கா அருவருடிகளாக புலிகளுக்கு எதிராக உள்ள அணியா அல்லது புலியில் இருந்து உருவாகும் புதிய அணியா அமெரிக்காவின் விசவசமான கைக்கூலியாக இருப்பது என்ற ஒரு அதிகார மோதல் நிகழும். இது புலிகள் இயக்கம் ஒட்டுமொத்தமாக சரணடையும் போதும் மேலும் கடுமையாகவே நிகழும்.



அன்னிய ஆக்கிரமிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் இலங்கை அரசியல் மௌனவிரத்தால் தம்மை போர்த்திக் கொள்கின்றனர். இந்தநிலையில் புதிய ஜனநாயக் கட்சியின் சோந்த தம்பையா வெக்ரோன்; தொலைக்காட்சியில் அமொரிக்கா எதிர்ப்பு கோசத்துடன் முன்நிறுத்தப்பட்டார். நிலைமைக்கு எற்ற ஆட்களை தேடிப்பிடிப்பதில், வெக்ரோன் சாதனையாளாகள் தான். இலங்கையில் அமெரிக்க எதிர்ப்பை யாரும் முன்வைக்காத நிலையில், தம்பையாவை தமிழ்மக்களுக்கு அறிமுகம் செய்தனர். இலங்கை அரசியலில் பொம்மையாக செயல்படும் புதிய ஜனநாயகக் கட்சி, தமது சொந்தக் கருத்துகளையே முன்வைக்க முடியாதவர்கள் இவர்கள். மாறாக புலிகளின் தளத்துக்கு எற்ப கருத்துச் சொல்பவர்கள்தான். ஆனால் அதற்கு சிவப்புசாயம் பூசிக் கொள்பவர்கள் தான் இவர்கள.



தனது பேட்டியில் போது, சுனாமி பேரழிவில் இருந்து மீள புனர்நிர்மாணத்துக்கு அன்னிய உதவி அவசியம் கருத்துரைக்கின்றார். ஆனால் அமெரிக்கா இராணுவம் தேவையில்லை என்கின்றார். இவரின் சிவப்பு மார்க்சியம் அன்னிய நாடுகளின் உதவி இன்றி மீள் கட்டமைப்பை செய்ய முடியாது என்கின்றது. இவர்கள் புரட்சியை எப்படித்தான் செய்வார்கள். அன்னிய உதவி தொடர்பாக ஜே.வி.பிக்கும் இவர்களுக்கும் என்னதான் வேறுபாடு உண்டு. இதைத்தான் புலிகளும் அரசும் கூட கூறுகின்றது. இது அனைத்து தரப்பினதும்; ஒப்பபரியாகும். கம்யூனிச புரட்சி பற்றி மற்றவர்களின் தளத்துக்கு எற்ப சொந்த முகமிழந்து பிரச்சாரம் செய்பவர்கள், இப்படி கூறுவது ஆச்சரியமானது அல்ல. திட்மிட்டு அன்னியரை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பிரச்சாரங்களையே இது கொண்டுள்ளது.



சுனாமி எற்படுத்திய அனர்த்தத்தில் உண்மைநிலை என்ன. சுனாமி அனர்த்தம் இலங்கை மக்கள் தொகையில் ஒரு சதவீகிதத்தையே கடுமையாக பாதித்துள்ள நிலையில், இதன் பதிப்பு அதிகம் போனால் இரண்டு சதவீகிதத்தைக் கொண்டது. 99 சதவீதமான மக்கள் இந்த ஒரு சதவீதமான மக்களுக்கு உதவும் உயர்ந்த ஒரு உணர்வுடன் செயல்பட்ட நிலையில், அதை மறுத்து அன்னிய உதவி வரவேற்கப்பட்டது. இதன் மூலம் தேசமும் தேசியமும் விற்கப்பட்டது. இதைவிட பாதிகப்பட்ட மக்கள் விட நான்கு மடங்கு அதிகமானவர்கள், இலங்கை பிரஜாவுரிமையை இழந்து மேற்கு நாட்டுகளில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவாகள் மிகப் பெரிய உதவியை செய்தார்கள், செய்யத் தயாரக இருந்தார்கள். ஆனால் அன்னிய உதவி என்ற போர்வையில் நாட்டை அரசும் புலிகளும் ஏலம்விட்டனர். இதைவிடவும் 8 மடங்கு மக்கள் தொழில் காரணமாக அரபு நாடுகளில் வாழ்பவர்கள், உதவத் தயாராக இருந்தார்கள். ஆனால் நாடு அன்னியரிடம் விற்கப்பட்டது.



நடைபெற்ற அனாத்ததில் மீள, மீள் கட்டமானத்துக்கு 1.3 பில்லியன முதல் 1.5 பில்லியன் டொலர் தேவை என அரசு அறிவிக்கின்றது. அதாவது 13000 கோடி முதல் 15000 கோடி ரூபா தேவை என்று அறிவித்துள்ளது. இந்த மீள்கட்டமைப்பு அடுத்து பத்து வருடத்தில் பூhத்தி செய்யப்படும் என்ற கூறுகின்றனர். அதாவது வருடம் 1300 கோடி ரூபா தேவைப்படுகின்றது. இதை இலங்கை தனித்துவமாக சொந்த காலில் நின்றே பூர்த்தி செய்யக் கூடியதே. இதற்கு பல வழிகள் உண்டு. இலங்கை ஒவ்வொரு ஆண்டும் கடனுக்காக எகாதிபத்தியத்துக்கு வட்டியாகவும் மீள் கொடுப்பனவாகவும் கொடுக்கும் தொகை, வருடாந்தம் அண்ணளவாக 6400 கோடி ரூபாவாகும். இரண்டு வருடம் மக்களை சுரண்டிக் கொடுக்கும் வட்டித் தொகையைக் கொண்டு மீள் கட்டமைப்பை, அன்னியரின்றி செய்யமுடியும். இதைத் தான் மக்கள் நலத் தேசிய அரசுகள் செய்திருக்கவேண்டும். ஆனால் வட்டி கட்டுவதை நிறுத்தாத மீள் கட்டமைப்பை ஏகாதிபத்தியம் செய்யக் கோருகின்றது. இதற்கு தேசத்தை விற்கின்றனர். இலங்கையின் மொத்த கடன் அண்ணளவாக 120000 கோடி ரூபா. (இந்த கடனைத்தான், கடந்தகாலத்தில் ஊடாகவியலார்கள், மக்களுக்கு உண்மை தெரியாத வகையில் கடனை உதவி என்று திரித்து எழுதியவர்கள்) இந்தக் கடனில் பத்து சதவீகிதத்ததை, இந்த அரசியல் அமைப்பை எற்றுக் கொள்வர்கள் விலக்க கோரியிருக்கலாம். இதன் மூலம் நிவாரணத்தைக் கோரியிருக்கலாம். மற்றொரு வழியாக இலங்கை அரசின் யுத்த செலவாக உள்ள தொகையை, இரண்டு ஆண்டுகள் நிறுத்தின் அதுவே போதுமானது. அன்னிய ஆக்கிரமிப்பாளனின் கால்களை நக்குவதைவிட, இலங்கை அரசும் புலிகளும் கூட்டாக புனர் நிர்மாணத்தை செய்தால், இவர்களின் இராணுவ உத்திகான ஒரு வருடச் செலவே போதுமானது. உண்மையில் 13000 கோடி என்பது இடைதரகர்களின் சூறையாடல் முதல் இதில் லாபங்களை சம்பாதிக்கும் மனிதவிரோதிகள் 50 சதவீகிதத்துக்கு மேலாக உறுஞ்;சிவிடுவார்கள்.



இந்த மனித அவலத்தை சொந்த மக்களே ஈடுசெய்ய கூடிய பலத்தையும், உழைப்பையும் பல வழிகளில் கொண்டே இருந்தனர். இந்த அனர்த்தின் ஆரம்பபணிகள் அனைத்தையும் சொந்த மக்கள்தான் செய்தனர். இங்கு ஒழுங்குபடுத்தபடாத வகையில் செயல்பட்ட செயல்கள் தான், மக்களின் துயாரத்துக்கு கைகொடுத்தது. ஒழுங்குபடுத்தப்பட்ட இருந்த புலிகளின் கடற்படை கூட, நீரில் மிதந்த மனித உயிர்களை காப்பாற்ற கடலில் இறங்கவில்லை. மக்களை பாதுகாக்கும் ஒரு மக்கள் படையாக இல்லாத வரை, மக்களின் உயிரை ஏன்தான் காப்பற்ற வேண்டும். ஆனால் மக்கள் பாதிகப்பட்ட பிரதேசங்களில் சிறு துடுப்புகளுடன் கடலில் இறங்கி, பல உயிர்களை ஆங்காங்கே காப்பற்றினர். ஒழுங்கபடுத்தப்படாத மக்களை ஒழுங்குபடுத்திய வடிவில் இயக்கி, மக்களின் உழைப்பை செம்மைப் படுத்தியிருந்தால் மிகக்குறுகிய காலத்தில் மிகப் பெரிய ஒரு மீட்பையும், புனர்வாழ்வையும் வழங்கியிருக்க முடியும்;. எந்த உளவியல் மருத்துவத்தையும் விட மக்களின் ஒருங்கினைந்த ஒன்றினைந்த பங்களிப்பு மட்டும் தான், மீட்புகான ஒரேயொரு மாற்றுவழி. இதைவிடுத்து டொலர் நோட்டுகள் அல்ல. ஆனால் இவற்றை எல்லாம் நிராகரித்து கையேந்தி நிற்கும் பிச்சைக்காரா நாடக மாற்றுவது, அரசியல் வாதிகளுக்கும், நக்கிபிழைக்கும் அறிவுத் துறைக்கும் அதிக லாபங்கள் உண்டு. மக்களின் பிணங்களும், மனித அவலமும் கூட லாபத்தை மீட்டு தரும் வியாபரமாகிவிட்டது. உலகமயமாதல் கட்டமைப்புக்கு நெம்பு கோலாகிவிடுகின்றது. டொலர் புதிய ஆக்கிரமிப்பினால் சர்வதேச சந்தையில் மதிப்பு உயர்வை அடைந்து, பல ஆயிரம் கோடி டொலரை சம்பதித்தது. இலங்கை பணம் ஆக்கிரமிப்பால் ஸ்திரத்தன்மை அடைந்து, பணப் பெறுமதி அதிகரித்துள்ளது. அன்னியரின் வருகை இதன் மூலம் தெளிவாக உறுதி செய்யப்படுகின்றது.



மறுபக்கத்தில் அன்னிய நாடுகளில் இருந்து கிடைத்த உதவிகளை சொந்த மக்களே கண்கணிக்கவும், செலவு செய்யவும்; முடியாது. அன்னிய நிதியை நிபந்தனை இன்றி வழங்கவில்லை. நிபந்தனையின் அடிப்படையில் தான், அன்னியன் நாட்டில் புகுந்துள்ளான். இது இராணுவ சிவில் நிர்வாகம் என அனைத்து அன்னியருக்கும் விதிவிலக்கின்றி பொருந்தும்;. இதைச் சொல்லி ஏகாதிபத்திய நாடுகளில் திரட்டப்பட்ட நிதி, பல ஆயிரம் கோடி டொராகும். இந்த நிதி புனர்நிர்மாணம் என்பதும், அதைக் கொண்டு தாமே உதவுவாதாக கூறி இராணுவங்களை நகர்த்தி செல்வதும் இந்த நிதிகள் பயன்படுகின்றன. கோபியண்ணவின் விமானச் செலவு முதல், அமெரிக்கா இராணுவவீரன் இலங்கை கடற்கரையில் எம் பெண்களை நுகர உள்ள செலவு வரை இந்த நிதியில் இருந்ததான் செலவு செய்யப்படும்.



உண்மையில் எகாதிபத்திய நாடுகளில் மக்கள் தமது உழைப்பில் இருந்தே இந்தப் பணத்தை வாரிவழங்கினர். இந்த சுனாமி என்பது ஏகாதிபத்தியத்துக்கு கிடைத்த அதிஸ்ட லாபச் சீட்டுதான். இது பொருளாதார, இராணுவ இலக்குகளை மட்டுமின்றி, சொந்த நாட்டில் அரசியல் இலக்கினையும் பெற்றுக் கொண்டது. மக்கள் வழங்கிய நிதியில் சொந்த இராணுவச் செலவின் ஒரு பகுதியை பூர்த்தி செய்து கொண்டனர். அதேநேரம் புதிய ஆக்கிரமிப்பை மீட்புகளின் பெயரில் அரங்கேற்றினர். பல நாடுகளின் ஆக்கிரமிப்பு, புதிய பொருளாதார நலன்களை அடைய உதவியுள்ளது. சொந்த நாடுகளின் மக்களின் உழைப்பின் ஒரு பகுதியை திருடிக் கொண்ட ஏகாதிபத்தியங்கள், தம்மை உலகில் ஜனநாயகத்தினதும், மனிதபிமானத்திதும் அடையளமாக காட்டிக் கொண்டனர். சொந்த மக்களை எமாற்ற முடிந்துள்ளதுடன், மக்களின் உதவிகளைக் கொண்டு உலகமீதான அதிகாரத்தை ஆழமாக நிறுவ முடிந்துள்ளது. ஏகாதிபத்திய கொள்கைகளை வழிநடத்தும் தன்னார்வக் குழுக்கள் மேலான நம்பிக்கைகளை எற்படுத்திக் கொடுத்துள்ளது. தன்னார்வக் குழுக்கள் மூன்றாம் உலக நாடுகளை ஏகாதிபத்தியம் கொள்ளையடிக்க உதவும் ஒரு மனிதபிமான கட்டமைப்பே. ஆனால் இதை மூடிமறைத்த தோற்றத்தை மேற்கில் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட நாடுகளிலும் எற்படுத்திவிட்டனர். மக்களை வேடிக்கை பார்க்கும் உயிருள்ள பிண்டமாக மாற்றிவிட்டனர். எல்லாம் டொலருக்குள்ளான ஒன்றாகவும், மனித உணர்வுகள், செயலாற்றல்களும் முற்றாக நலனடிக்கப்பட்டது. தன்னெழுச்சியாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் திரண்டு செயலாற்றி அந்தக்கணம், கனவுபோல் மாறிவிடுவதையே உலகமயமாக்கின்றனர். எதோ எகாதிபத்திய இராணுவங்களும், ஏகாதிபத்திய நிதியாதரங்களில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுமே மனிதபிமான பணியில் ஈடுபடுவதாக உலகுக்கு காட்டுகின்றனர். அதாவது இந்த சுனாமி புதிதாக ஒருங்கினைக்கப்பட்ட தன்னார்வ செயல்பாட்டை உலகமயமாக்கியுள்ளது. உலகில் எற்படும் எந்த இயற்கை அனர்த்தத்துக்கும், அத்துமீறிய தன்னார்வக் குழுக்களின் தலையீடு உலகமயமாதலில் புதிய கொள்கையாக மாறிவிட்டது. அதாவது அன்னிய இராணுவத்தைப் போல், ஒருங்கினைந்த ஏகாதிபத்திய ஆதாரவுடன் இயங்கும் தன்னார்வக் குழுக்கள் அதிகாரம் பெற்றுவிட்டன. இதனால் தான் ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் போட்டிபோட்டுக் கொண்டு திட்டமிட்டே பல தன்னார்வக் குழுக்களை உருவாக்கி வருகின்றன. இவை தமது சொந்த ஆக்கிரமிப்பு வேடத்தை வெளித்தெரியாத வகையில், மனிதபிமான உதவி என்ற புதிய ஆயுதத்துடன் பெரும் திதியாதரங்களுடன் களத்தில் ஏகாதிபத்தியத்தால் இறங்கிவிடப்படுகின்றன. ஏகாதிபத்திய நலன்களுக்கு வெளியில் இவர்களுக்கு என்று எந்த சுயமும் கிடையாது. (இதை சற்று விரிவாக பார்க்க விரும்புவோர் றுறுறு.வுயுஆஐடுஊஐசுஊடுநு.Nநுவு என்ற இணையத்தில் கட்டுரைப்பகுதியில், ஷமுகமூடி அணிந்த எதிரிகளை இனம் காண்போம்| என்ற எனது கட்டுரையின் தமிழ் மற்றும் ஆங்கில வடிவத்தைப் பார்க்க முடியும்;. எதிர்காலத்தில் விரிவாக இதை மேலும் பார்க்க பார்க்கவுள்ளேன்.)



அன்னிய இராணவமும், அன்னிய தன்னார்வ அரசுசாரா ஏகாதிபத்திய கைக் கூலிகளும் பாதிகப்பட்ட நாடுகளுக்கு சென்ற போது, அங்கு மீட்பதற்கு என எதுவும் இருக்கவில்லை. இவர்கள் மக்கள் வாரிவழங்கிய உதவித் தொகையில் உல்லசமாக போய் இறங்கியவர்கள். மீட்பதற்கு என எதுமற்ற நிலையில், ஆங்காங்கே சில நடவடிக்கையில் ஈடுபட்டுகின்றனர். பல பிரதேசங்களில் உள்ளுர் மக்களே, அடிப்படை நிவாரணத்தை குவித்துவிட்டனர். மிதமிஞ்சிய உணவு, உடை சில பிரதேசங்களில் அளவுக்கு அதிகமாக குவிந்து காணப்படுகின்றது. வெளியில் இருந்து சென்றவர்கள் எதிர்கால நிர்மாணம் என்ற பெயரில், உள்நாட்டு பொருளாதாரத்திலும், உள்நாட்டு அரசியலிலும் தலையிடுகின்றனர். உளவு பார்க்கவும் தொடங்கிவிட்டனர். தமது சொந்த நாட்டுக் கழிவுகளை, எங்கே எப்படி உதவியாக கொட்டுவது என்ற ஆய்வில் ஈடுபடுகின்றனர். மேற்கின் நுகர்வு வெளித்தள்ளும் அளவுக்கு அதிகமாக மீள பயன்படுத்தக் கூடிய கழிவுகளை, பதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் புதிய உலகம் தழுவிய நடைமுறை கோட்பாடுகள் அறிவித்துறையினரால் செம்மை செய்யபட்டு வரையப்படுகின்றது. எதிர்காலத்தில் மேற்கத்தைவர்கள் பயன்படுத்திய பொருட்களை, மீளப் பயன்படுத்தும் வழிமுறைகள் உலகமயமாக்கலின் புதிய நடைமுறையாகியுள்ளது. இவற்றுக்கு பெறுமதி மதிப்பிடப்பட்டு டொலரின் பெயரால் பணப் பெறுமதியிடப்படுகின்றது. மேற்கத்தைய மக்களின் கழிவுகளும் தீடிரேன பணப்பெறுமதி பெற்றுவிடுகின்றது. உதவி எப்போதும் பொருட்களாக இருப்பதால், கழிவுகளை அகற்ற முடிகின்றது. மறுபக்கத்தில் இதற்கு பணப் பெறுமதி இட்டு உதவியை டொலரில் அறிவிக்க முடிகின்றது. குறிப்பாக ஐரோப்பிய பாரளுமன்றம், தமது கழிவு மீன்பிடி வள்ளங்களையே மீள் புனரமைத்து, அதை உதவியாக இடமாற்றும் ஒரு விவாதத்தையும் நடத்தியுள்ளது. இப்படி தம்மை மீட்பளராக காட்டி, டொலர் நோட்டுகளைக் காட்டி தேசத்தையே விபச்சாரம் செய்ய விடும்படி, ஒவ்வொரு மனிதனையும் சொந்தப் படுக்கைக்கு அழைக்கின்றனர். அன்னிய உதவியின்றி எதையும் சாதிக்க முடியாத என்ற கூறும் தேசியவாதிகளும், அரசியல் கட்சிகளும் விபச்சார தரகராக செயல்பட அலாய்பறக்கின்றனர். அற்ப எழும்புத் துண்டுக்காக, வாலையாட்டி நாட்டையே விற்றுக் கொண்டிருக்கின்றனர். மனித துயரங்கள் புதிய ஆக்கிரமிப்பில் அதிகரிக்குமே ஒழிய, ஒரு நாளும் குறைந்தாக உலக வரலாற்றில் எந்த சரித்திரமும் கிடையாது. மக்களின் உழைப்பைச் சுரண்டும் உலகமயமாக்கல் அமைப்பில், அன்னிய தலையீடுகள் இதற்கு வெளியில் எதையும் செய்வதில்லை.



பி.இரயாகரன்

www.tamilcircle.net
 
what the f**k is going on here? people can you post in small articles, its getting very annoying.

don't just go on and on, just get to your point, no more blabbing... its because of ppl like you who just talk and talk, we are at this stage, we need some action... you chicken shits, get to our face, and show you can do some ass kicking!
 
எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க இராணுவ வாத அரசியலைக் கைவிடவேண்டும்!
நீண்ட நெடிய பல துயரம் நிறைந்த எமது தேசிய விடுதலைப் போராட்டம் முன்னேப்போதையையும் விட ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆயிரம், ஆயிரம் மக்களும், இளைஞர்களும் விடுதலைக்காக தம்மை தியாகம் செய்ய, அதேவிடுதலையின் பேயரால் ஆயிரம், ஆயிரம் மாற்றுக் கருத்துள்ள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளின் ஊடாகவே நாம் எம் மண்ணையும், எம் சுதந்திரத்தையும் பறி கொடுத்துள்ளோம். ஆம் எம் தெசிய விடுதலைப் போராட்டம் அதன் வீச்சும் சொந்த சகதிக்குள் சிக்கி அழிந்து சிதைந்து போவது என்பது எம் மக்களின் சொந்த தியாகங்களையே அர்த்தமில்லாதாக்கி விடும்.
இந்த நிலையில் நாம் எமது கடந்த காலம் மீதான சீரிய விமர்சனத்தை முன்வைக்க வேண்டும். இன்று எம் மண்ணை இழந்தது புலிகளின் அரசியல் கோளாறுகள் மட்டும் இன்றி அவர்களே இந்நிலைக்கு முழமையான காரணமுமாகும்.
எம் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரொக்கிய மான வழியல் மக்களை அணி சேர்த்து சென்று விடவில்லை. மக்களின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களின் ஜனநாயக கோரிக்கைகளை முன்னேடுத்து சென்று விடவில்லை. மாறாக மக்களை மந்தைகளாக்கி, அவர்களின் அறியாமை மீது சவாரிவிட்டு, அவர்களையே அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவக் குழுவாக புலிகள் சீரழிந்து சென்ற நிலையில் தான் இத்தோல்வி வந்தடைந்தது.
எம் மண்ணில் தேசிய விடுதலையின் பால் போராட முற்பட்ட அனைத்து சக்கிகளையும் அழித்து ஒழிக்கப்பட்ட நிலை என்பது தேசிய விடுதலைப் போராட்டத்தை படு பாதாளத்துpற்குள் தள்ளிச் சென்றதேயாகும். இந்நிலை என்பது தேசிய விடுதலைப் பொராட்டம் தொடர்பான எந்த ஆரொக்கிய மான விமர்சனத்தையோ மாற்றுக் கருத்தையோ முன்வைக்க முடியாத ஒரு சூனிய நிலைக்குள் இட்டுச் சென்றது. இது புலிகளின் ஒற்றைப் பரிமான சித்தாந்தத்தை மட்டும் சிந்திக்கவும் தமது தவறுகளையும் இனங்காணவும் முடியாத ஒரு வறட்டுத் தணத்துக்குள் இட்டுச் சென்றது. தேசிய விடுதலைப் போராட்டம் வழைவு, சுழிவுகளைக் கடந்து செல்லும் ஒரு அரசியலை பரந்து பட்ட தலைமையைப் பெற முடியாது போனது என்பது எம்மக்களின் இன்றைய துயரத்துக்குக் காரணமாகும்.
பேரினவாத சந்திரிக்கா முன்னணி அரசு, கடந்த இனவாத அலரசுகளை விட மிக மோசமான ஒரு பாசிச அரசாகும். புலிகள் வழைமைபோல் இனம் காண மறுத்து ஆரம்பம் முதலே சந்திரிக்கா பற்றிய பிரமையை தாம் கொண்டு இருந்தது மட்டுமின்றி அதை மக்களுக்கும் எடுத்துச் சென்றனர். இந்த பாராளு மன்ற அரசியல் தளத்தில் எந்த முன்னணிப் பிரிவு அரசு நடாத்தினாலும் அது இந்த இனவாதத்தை விட்டு நகர்ந்து விடமாட்டாது. இது இலங்கை மட்டுமல்ல எல்லா உலக நாடுகளிலும் உள்ள ஒரு பொது உண்மை. ஆனால் சில முற்போக்குகள் தம்மையும் தமது வேடத்தையும் கலைத்து சந்திரிக்கா அரசு பற்றி பிரம்மையை மக்கள் மத்தியில் விதைத்து, மக்களை ஏமாற்றி தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைத்தனர். புலிகள் வழைமைபோல் சொந்த தவறுடன் கூடிய எதிர்ப்புடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை மறந்து சந்திரிக்காவை விடிவின் நாயகியாக இனங்காட்டினர்.
எல்லா வற்றையும் மிக அழகாகப் பயன்படுத்திய இனவாதி சந்திரிக்கா புலிகளை அரசியல் ரீதியில் அம்பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டனர். ஏனெனில் எமது போராட்டம் சுயநிர்ணயம் என்ற அரசியல் கோரிக்கையை உள்ளடக்கி இருந்தது. இதன் மேலே இராணுவ நடவடிக்கைகளும் அதில் மக்கள் விரோதமும் புரையோடி இருந்தது. இராணுவ ரீதியான மக்கள் விரோதத்தை மிளமிளக் கூறுவதால் புலிகளை அம்பலப் படுத்த முடியாது என உணர்ந்த சந்திரிக்கா அரசு அது தமது இராணுவ மக்கள் விரோதத்தால் தோல்வி பெறும் என சரியாக கணித்தார்.
எனவே இராணுவ மக்கள் விரோத புலி நடவடிக்கைகளை அம்பலப் படுத்தப் படுவதை விட அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தும் முயற்சியில் ஏகாதிபத்தயங்கள் சரியான வகையில் உதவியும் ஆலோசனையும் வழங்கின.
அரசு - புலி பேச்சு வார்த்தையில் புலிகள் அரசியல் கோரிக்கையை முன்தள்ளுவதை கைவிட வைத்து, இராணுவக் கோரிக்கைகளை முன்தள்ள வைத்தது சந்திரிக்கா அரசுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். ஏன் எனில் இப்போராட்டம் தமிழ் பேசும் மக்களில் இருந்து அன்னியப் படுத்தப்படுவதும், சர்வதேச ரீதியாக புலிகளை அரசியல் ரீதியில் அன்னியப் படுத்தவும் கூடிய கோரிக்கைகள் வெறும் இரானுவ ரீதியான புலி என்ற இரானுவக் குழுவுக்கும், அரசின் பின் உள்ள இரானுவத்திற்கும் இடையிலான பிரச்சனையாக நகர்த்தியது என்பது புலிகளின் மோசமான அரசியலில் உள்ள வங்குரோத்தாகும்.
இரானுவக் கோரிக்கையில் ஏற்பட்ட இழுபறிகளும், இது மக்களின் அடிப்படைப் பிரச்சனை என புலிகள் மீள மீள என்தான் கூறிய போதும் பரந்த தளத்தில் இது தோல்வி பெற்றது. இது இராணுவத்துக்கு இடையில் ஏற்பட்ட சிலபிரச்சனையாக அதில் விட்டுக் கொடுப்பு அற்ற நெருக்கடியாக உலகம் முழக்க எமது தேசிய விடுதலை போராட்டம் மலினப் பட்டு சிதைந்தது.
இந்நிலையில் புலிகள் இராணுவ நடவடிக்கை மூலம் அரசில் நடத்தும் போக்கில் முந்திக் கோண்டே தாக்குதலை நடத்தி பேச்சு வார்த்தையை முறித்து புலிகளை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்த சந்திரிக்கா அரசுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். புலிகள் மக்களின் சுதந்திர சமாதனத்தை ஏற்படுத்த அக்கறை அற்ற மக்கள் விரோத அமைப்பாக உலகம் முமக்க இனங்காட்ட சந்திரிக்கா அரசு முடிந்தது என்றால் அது புலிகளின் அரசியலில் உள்ள தவறேயாகும். அத்தவறுகளை முன்பு எந்த இனவெறி அரசும் செய்ய முடியாது இருந்தாலும் அதை சந்திரிக்காலால் செய்ய முடிந்தது என்பது புலிகளின் அரசியலில் முன்னேறிய பார்வை இன்றி ஒரு சுத்த முறை அரசியலாகும்.
சந்திரிக்கா இனவாத பாசிச அரசு, ஒரு இனவெறிபிடித்த சிங்கள மேலாதிக்கம் வாய்ந்த அரசு என்பதை இனம் காண மறுத்து இனவெறி அரசின் முன் தமிழ் மக்களின் சாதாரண ஜனநாயகக் கோரிக்கைகளை முன்னிறுத்தத் தவறியது என்பது புலிகள் மறைமுகமான சந்திரிக்க இனவெறி அரசை பலப்படுத்துவதேயாகும்.
மாறாக தமிழ் மக்களின் சாதாரண இனவெறிக் கெதிரான ஜனநாயகக் கொரிக்கைகளை முன் வைத்து அரசை நிறைவேற்றக் கொரியிருப்பின், அரசு அதை வழங்க முடியாது அம்பலப் படுவது மட்டுமின்றி செந்தத் தளத்தில் இனவாத உடைவுகளை சந்தித்து எம்மண்னை ஆக்கிரமித்திருக்க முடியாது.
ஜே.ஆர், பிரேமதாசா, சந்திரிக்கா அரசு என எல்லாமே ஒரே முறையிலான சாக்கடையாகும். இதில் உள்ள நண்பர்களை கொல்வதன் மூலம் எந்த மாற்றத்தையும் தமிழ் மக்கள் பெற முடியாது. பிரமதாசா, காமினி, ரஞ்சன்விஜயவர்தனா, ராஜீவ் ......... போன்ற அரசின் முன்னணிப் பிரதிநிதிகளைக் கொன்று விடுவதால் தமிழ் பேசும் மக்கள் எதைச் சந்தித்தனர். அரசுக்கு பதில் முரண்பாடு குறைந்து மிக மேசமான ஒரு புதிய தலைமையே உருவாகின்றது அதேவழிகளில். இவர்களைக் கொல்வதால் எதுவும் மாறிவிடமாட்டாது. முன்பைவிட தீவிர அடக்கு முறையாளர்கள் உருவாகின்றனர். எவ்வளவுதான் தமிழ் மக்களின் மிக மோசமான இவ்வெதிரிகளை னொன்று ஒழிப்பதை விட அரசில ரீதியில் அம்பலப்படுத்துவதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு கொன்று ஒழிக்கும் அரசியல் சர்வதேச ரீதியாக எமது போராட்டம் ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக இனங்காட்டும் அனவுக்கு சீரழிந்துள்ளது. பிரிவினைவாதப் போராட்டம் என்றபதம் இன்று மங்கி மறைந்து விட்டது. அது பெயரளவில் கூட உச்சரிக்க தயார் அற்ற நிலைக்கு உலகம் இசைந்து போகின்றது.
இந்நிலை புலிகளின் மோசமான இராணுவவாத மக்கள் விரோத அரசியலுக்கு அடிக்கல் நாட்டி உள்ளது. தேவையற்ற படுகொலைகள், இராணுவம் சாராத கொழும்புக் குண்டு வெடிப்பு, சிங்கள முஸ்லீம் கிராமப் படுகொலைகள், ........ .............. என்பன புலிகளைத் தனிமைப் படுத்தவும், எமது விடுதலைப் போர் மீது எதிர் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இது பயங்கரவாத நடவடிக்கையாக சீரழிந்து போனது.
இன்று யாழ் குடாநாட்டைஇனவெறி சிங்கள இராணுவம் கைப்பற்றி இனவெறிக் கொடிபறக்க விட்ட நிலையில் எம் பொராட்டம் மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆக்கிரமித்த மண்னில் இருந்து முற்றாக இராணுவத்தை துரத்தி அடிக்க நாம் எம்மை அரசியல் ரீதியில் மறு வார்ப்பு செய்ய வேண்டும். இந்த வகையில் நாம் மீளவும் ஆரம்ப நிலைக்கு எம்மை நகர்த்தி தமிழ் முக்கள் மீதான இனவாதத்திற்கு எதிரான அடிப்படை ஜனநாயகக் கொரிக்கைகளை முன்நிறுத்தவும் அதன் பொக்கில் நாம் ஆன்று முன்வைத்த திம்புக் கோரிக்கைகளை பிரதானப்படுத்துவது அவசியமாகும்.
இன்று எமது கோரிக்கைகள் செயல்கள் இனவாத சந்திரிக்கா அரசை அதன் இனவாதத் தளத்தில் அம்பலப்படுத்தும் வகையில் அதன் மீதான கோரிக்கைகளை முன்நிறுத்துவது அவசியமாகும். புலிகள் அதை மீளவும் செய்து பார்க்க பற்று உள்ள நிலையில் இரானுவ வாதக் கோரிக்கையே மீள மீள முன்தள்ளுவது புலிகளின் அரசியல் சீரழிவையே மேலும் இட்டுச் செல்லும்.
இனவெறி அரசு எதிர்காலத்தில் புலிகளின் மக்கள் விரோத நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி புலிகளின் ஒற்றைப் பரிமான தலைமை அழித்து ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடும் என நாம் எதிர்பார்க்கலாம். ஏனெனில் புலிகளின் தலைமை ஜனநாயகம் அற்றதும், உறுப்பினர்கள் தலைவரின் பெயரால் கட்டப்பட்டவதும், புலிகளின் தலைமையை படுகொலை செய்வதன் மூலம் புலி இயக்கத்தை சிதறவைத்து குறைந்த பட்சம் இன்று உள்ள தேசிய விடுதலைப் போராட்டத்தின் குரல் வளையை நசிக்கிவிட முடியும் என அரசு கணக்குப் போடுகிறது.
இன்று எம்முன் உள்ள பிரச்சனை புலிகள் தமது தலைமையை அரசியல் ரீதியில் மறுவார்ப்பு செய்வதும் மத்தியப் படுத்தப்படாத தலைமையை உருவாக்குவதும், மாற்றுக் கருத்துக்கு தளத்தில் கருத்துச் சுதந்திரத்தை வளங்குவதும் ஆகம். யாழ் குடாநாட்டை விம்மு வெளியேறிய முஸ்லீம் மக்களை மிளக் குடியேறக் கூறுவதும் முன்னைய அனைத்து தவறுகளையும் தவறு என ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
அரசை நோக்கி இராணுவக் கோரிக்கை முன்னிறுத்துவதை விட சாதாரன இனவாதத்திற்கு எதிராக ஜனநாயகக் கோரிக்கைகளை உலகெங்கும் முன்னிறுத்தி அரசை அம்பலப்படுத்த வேண்டும். இது மட்டும் எமது மண்ணை பாதுகாக்கவும் எமது சுயநிர்ணய உரிமையை வென்றேடுக்க எம்முன் உள்ள ஒரே ஒரு அரசியல் பாதையாகும்.
 
யுத்தம் சமாதானம் எதை நோக்கி செல்கிறது
தேசியத்தை ஒடுக்கி அழிக்க முனையும் உலகமயமாதல் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட, எமது போராட்டத்தை சனநாயகப்படுத்துவது நிபந்தனையாகும்;.
புலிகளின் ஒருதலைபட்ச யுத்த நிறுத்தமும், நோர்வேயின் சமாதனப் பேச்சு வார்த்தையும் எதிர்பாராத விதமாக உலகமயமாதல் உள் முரண்பாட்டால் நெருக்கடிக்குள்ளானது. இக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த நிலையில் யுத்தம் மீள ஊக்கிரமாகிய நிலையில், சிறீலங்கா அரசு பாரிய இழப்பை சந்தித்துள்ளது. அதே நேரம் நோர்வே மற்றும் கனடா பிரதிநிதிகள் மீளவும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளனர். இந்த யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட தடைகள் மற்றும் நெருக்கடிக்கு, வெறுமனே சிறீலங்கா அரசை நேரடியாக குற்றஞ் சாட்டப்பட்ட போதும், உண்மை அப்படி அல்ல என்பதே இங்கு கசப்பான உண்மையாகும்.
யுத்தநிறுத்தை சிறீலங்கா அரசு செய்ய மறுத்ததும், பேச்சு வார்த்தையை முன்னெடுக்க தயாரற்ற தன்மையை, வெறும் புலிகள் - அரசு என்ற மட்டத்தில் ஆராயமுடியாது. இப்படியான ஆய்வுகள், கருத்துகள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையே மறைமுகமாக விலை கூவி விற்பதாகும். தமிழ் மக்கள், தாம் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையைப் போராடிப் பெற வேண்டிய வரலாற்றில், இந்த உரிமைப் போராட்டம் ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் சிக்கித் தவிக்கின்றது. உலகமயமாதல் உலகளாவில் தன்னை விரிவாக்கி வருகின்ற இன்றைய நிலையில்; தேசங்கள், தேசியப் போராட்டங்கள் என்பது திட்டவட்டமாக உலகமயமாதலுக்கு எதிராக இருப்பதை, விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நாம் இன்று புரிந்து கொண்டுதான் ஆகவேண்டும்;. ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்ட உலகமயமாதல், உள்ளடக்கத்தில் தேசிய செல்வத்தை சூறையாடி மூலதனத்தை குவிப்பதில் மையங் கொள்கின்றது. இது உலக செல்வங்களை தனது காலடியில் மிதித்தபடிதான், தன் அதிகாரத்தை மக்கள் மேல் நிறுவுகின்றது. இது தேசங்களின் அனைத்து பண்பாட்டு கலாச்சார கூறுகளையும் நாசமாக்கி, அதில் தன்னை நிலை நிறுத்துகின்றது.
இந்த நிலையில் எமது தேசியவிடுதலைப் போராட்டம், ஏகாதிபத்தியத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு போராட்டமாகவே உள்ளது. சிறீலங்காவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தம், உலகமயமாதலின் மூலதனம் உடுருவிப் பாய்வதற்கு தடையாக உள்ள அதேநேரம், உலகமயமாதலை வரவேற்பதில் சாதகமான நிலைமையை உருவாக்கி உள்ளது. இது சிறீலங்கா அரசு மற்றும் புலிகள் உள்ளிட்ட பொது நிலையில், உலகமயமாதலை வரவேற்கும் கொள்கையில் அகலக் கதவை திறந்தே வைத்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் உலகமயமாதல் முதலீட்டை நடத்துவதன் மூலம் தேசிய செல்வத்தை சூறையாடுவதில், யுத்தம் தடையாக இருப்பது ஏகாதிபத்தியத்தின் குறிப்பான கண்ணோட்டமாகவுள்ளது. இதைக் கடந்து இலங்கையின் பொருளாதாரத்தையும், மக்களின் உழைப்பையும் சூறையாடும் வகையில், உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது அவசியமாகியது. இலங்கையின் அமைதியே உலகமயமாதலின் மூலதனத்தின் சூறையாடும் நிபந்தனையாக இருப்பதால், அதுவே யுத்த நிறுத்தமாகவும் பேச்சு வார்த்தையுமாக மாறியது.
நோர்வேயின் வேண்டுகோளை ஏற்று புலிகள் செய்த ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் மற்றும் மூன்றாம் தரப்பு பேச்சு வார்த்தை ஏன் தொடர முடியாமல் போனது. அதேநேரம் இருதரப்பு யுத்த நிறுத்தம், மற்றும் இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெற முடியாத நிலைக்கு, ஏன் முன்னேற முடியாத காரணம் என்னவாக இருந்தது. இதை ஆராய்கின்ற போது இந்த நிலை ஏற்பட காரணத்தை உலகமயமாதலின் உள் முரண்பாட்டில் கண்டுகொள்ளமுடிகின்றது. உலகமயமாதல் விரிவாக்கத்தில் அமெரிக்காவுக்கும் மற்றைய ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் கூர்மையாகி வரும் உள் முரண்பாட்டினால், இலங்கை நிலைமையை கையாள்வதில் ஏற்பட்ட இழுபறியே, நீண்ட இடைவிடாத தீவிர முயற்சியை சிதைப்பதில் பிரதிபலித்தது. சர்வதேச மூலதன ஆதிக்கத்தை நிறுவும் ஏகாதிபத்திய நலன்கள் கூர்மையாகி வரும் இன்றைய நிலையில், ஏகாதிபத்திய முரண்பாடுகள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் தனது கரங்களை பதித்து வருவதையே, அண்மைய நிகழ்வுகள் பறைசாற்றியுள்ளது.
நோர்வே தலையீட்டுடன் கூடிய யுத்த நிறுத்தம் மற்றும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், உலகமயமாதலின் ஒரு சார்பாக இருந்த நிலைமைதான், நீண்ட இந்த முயற்சி தோல்வி கண்டது. நோர்வேயின் மத்தியஸ்தம் அய்ரோப்பிய உலகமயமாதல் நலன்களுடன் நேரடியாக தொடர்புடையதாக இருந்தது. இந்த ஒரே ஒரு நிலையில் மட்டும் தான் இந்த தொடர் முயற்சி திடீரென எதிர்பாராதவிதமாக தடைபடக் காரணமாகியது. அமெரிக்கா இதற்குகெதிரான வகையில் செயற்பட்டு, ஒரு தலைபட்சமான புலிகளின் யுத்த நிறுத்தத்தை முறியடித்து, பேச்சு வார்த்தையை நடத்த தடையாக மாறியது. இவற்றை அக்காலகட்டத்தில் நடந்த பல தொடர்ச்சியான சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையதாக உள்ளதை, நாம் இனம் கண்டு கொள்ளமுடியும். இந்த உலகமயமாதல் முரண்பாட்டை கவனத்தில் கொள்ளாத போராட்டம் என்பது, எமது போராட்டத்தை ஆழமாக பின்னடைய வைக்கும்.
18-19.12.2000 அய்ரோப்பிய உதவி வழங்கும் நாடுகளின் இலங்கைக்கான கூட்டத்தில் சந்திரிகா நேரடியாக பங்கு பற்றிய போதும், உதவி வழங்கப்படவில்லை. அய்ரோப்பிய யூனியன் நிதி வழங்குவதற்கு ஒரு நிபந்தனையை முன்வைத்தது. பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் யுத்தத்தை நிறுத்தி நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதை நிபந்தனையாக கொண்டே, நிதி வழங்கப்படும் என்று தெளிவாக அறிவித்தது. பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் மற்றும் யுத்தநிறுத்த நிலமையை பொறுத்தே, நிதி கொடுப்பது பற்றி ஆராயப்படும் என்று அறிவித்தனர். முன் கூட்டியே அய்ரோப்பா நோர்வே பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், நிதி மூலம் அரசை நிர்ப்பந்தித்தது. அதே நேரம், புலிகளின் யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வைத்தனர். இந்த நிலையில் உலகமயமாதல் முரண்பாட்டின் சிலவற்றை தொகுப்பாக ஆராய்வதன் மூலம் இதை ஆழமாக புரிந்து கொள்ளமுடியும்.
18-19.12.2001 அய்ரோப்பிய உதவி வழங்கும் நாடுகளின் இலங்கைக்கான கூட்டத்தில் யுத்தத்தை நிறுத்தவும், பேச்சு வார்த்தையை நடத்தவும் அமைதியை ஏற்படுத்தவும் கோரியது. இலங்கையின் அமைதியே விரிவான சூறையாடலை இலங்கையில் செய்ய, அவசியமான உலகமயமாதல் நிபந்தனையாக இருந்தது. அத்துடன் உலகமயமாதலின் அய்ரோப்பிய நலன்களை உறுதி செய்வதில், இந்த நிபந்தனை சார்ந்திருந்தது. அதேநேரம் பேச்சுவார்த்தை மற்றும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், 18.2.2001 இல் அய்ரோப்பிய பாராளுமன்றக் குழு இலங்கை சென்றது. அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் சந்திரிகா அய்ரோப்பிய முன்னணி நாடுகளான Nஐர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியத்துக்குமான பயணம் நடைபெற்றது. அத்துடன் அய்ரோப்பிய நிதியுதவியை மீண்டும் வேண்டிநின்றார். இது மட்டும் தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு, மீளவும் யுத்தத்தை தொடர்வதற்கான பாதையாக இருந்தது. இந்த காரணத்தை அடிப்படையாக கொண்டே, அய்ரோப்பிய ஏகாதிபத்தியங்கள் தமது நலன்களை அடைய இலங்கை மீதான தனது செல்வாக்கை நேரடியாக பிரயோகித்தன. அதைத் தொடர்ந்து சித்திரை மாதம் 12ம் திகதி சந்திரிகா பிரிட்டன் சென்றார். அதேநேரம் 7.3.2001 இல் பிரஞ்சு துதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி யாழ் சென்று நிலமைகளை அவதானித்தார். மீண்டும் மார்ச் மாதம் சந்திரிகா உதவி வழங்கும் அய்ரோப்பிய நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட போதும், அய்ரோப்பிய நலன்களை உறுதி செய்யும் வகையில் பேச்சு வார்த்தை மற்றும் யுத்த நிறுத்தத்;தில் முன்னேற்றமின்மையால் உதவி வழங்கவில்லை. தொடர்ச்சியாக யுத்த நிறுத்தம் பேச்சு வார்த்தை, அமைதியை நோக்கிய தீர்வு என்ற பாதையில் அய்ரோப்பிய யூனியன் கொள்கை ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் உறுதியாக இருந்தது. இந்த வகையில் பல பத்து முறை நோர்வேயின் பிரிதிநிதி உலகம் முழுக்க பறந்து திரிந்ததுடன், சிறீலங்கா வெளிநாட்டு அமைச்சு மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட, புலிகள் உள்ளிட்ட பலருடன் பேச்சு வார்த்தைகளை நாட்டுக்குள்ளும் வெளியிலும் தொடர்ச்சியாக நடத்தினார். இந்த நிலையில் புலிகளை தமது முடிவுக்குள் கொண்டுவர முடிந்த அளவுக்கு, சிறீலங்கா அரசைக் கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. போராட்டக் குழுவை இலகுவாக கையாண்ட அய்ரோப்பா, சிறீலங்கா அரசைக் கொண்டு வர முடியமால் போனமையை, உலகமயமாதலின் உள் முரண்பாட்டில் மட்டுமே நாம் கண்டு கொள்ளமுடியும். சிறீலங்கா அரசின் அனைத்து விதமான மக்கள் விரோதத்துக்கும் தோளோடு தோள் நிற்கும் அமெரிக்காவே, உலகமயமாதலில் தனது நலன்களை சாதிக்க, அய்ரோப்பிய முயற்சிக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் தடை விதித்தது.
இதை எப்படி அமெரிக்கா சாதிக்க முடிந்தது? சிறீலங்கா வரவு செலவில், செலவாக 36497 கோடி ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், பற்றக்குறை 11700 கோடியாக உள்ளது. சென்ற வருடம் 8000 கோடியை போருக்காக செலவு செய்த அரசு, இம்முறை 6340 கோடியை ஒதுக்கிய போதும், சென்ற முறை போல் 10000 கோடியை யுத்தத்துக்கு செலவு செய்யத் தயராகவுள்ளது. இவ்வருடம் கடன்படும்தொகை 24700 கோடியாக உள்ளது. சென்ற வருடத்தில் 16900 கோடியாக இருந்த கடன்படும்தொகை 46 சதவீதத்ததால் அதிகரித்துள்ளது. இந்தளவுக்கு அன்னியக் கடனைச் சார்ந்து நாட்டை அடகுவைத்து வாழும் ஒரு நாட்டின் உள்நாட்டு முடிவுகளை, நாட்டை அடகு வைப்பவன் முடிவு எடுப்பதில்லை. அதேபோல் யுத்தத்தைக் கூட அன்னியக் கடனில் நடத்துகின்ற நிலையில், கடன் வழங்குபவர்கள் யுத்தத்தை நிறுத்தக் கோரும் போது, அதை நிறுத்த மறுப்பதை உலகமயமாதலின் ஏகாதிபத்திய முரண்பாட்டில் இனம் கண்டு கொள்ளவேண்டும்;. இந்த இடத்தில் சிறீலங்கா அரசு அய்ரோப்பிய நலன்களைச் சார்ந்த அல்லது அமெரிக்க நலன்களைச் சார்ந்த முடிவுகளை எடுக்கின்றனர் என்பதை பொறுத்தே, யுத்த நிறுத்தம் பேச்சு வார்த்தை, அமைதி என்பன நடை முறை நிகழ்வாகின்றது. சிறீலங்கா அரசு சுயமாக முடிவு எடுக்கும் தன்மை என்பது, முற்றாக கற்பனையானது. அப்படிக் கருதி விமர்சிப்பதும் அரசியல் ரீதியாக தவறானவை.
இந்த நிலையில் நோர்வேயின் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் அய்ரோப்பிய நலன்களை கொண்டு இருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு எதிரான மறைமுக செயற்பாட்டிலும,; நேரடி செயற்பாட்டிலும் ஈடுபட்டது. அமெரிக்க நலன்களை பாதுகாக்கவும், தனக்கு சார்பான நாடுகளை நேரடியாக பயன்படுத்தியது. நோர்வேயின் வேண்டுகேளுக்கு இணங்க இரண்டாவது தடவையாகவும் புலிகள் ஒரு தலைபட்சமான யுத்த நிறுத்தத்தை அறிவித்தை அடுத்து, அமெரிக்காவுகான இலங்கைத் தூதுவர் அஸ்லிவில்ஸ் தொலைக் காட்சி ஒன்றிற்க்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் யுத்த நிறுத்தம் போலியானது என்றும், புலிகள் யுத்த நிறுத்தத்தை தமது சொந்த ஆயுத விரிவாக்க நலன்களை அடைய செய்யப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக அறிவித்தார். உண்மையில் யுத்த நிறுத்தத்தை நோர்வே வற்புறுத்தியதால் செய்தாகவே, புலிகள் ஒத்துக் கொண்டனர். புலிகள் யுத்த நிறுத்தத்தை விரும்பியிருக்கவில்லை. நோர்வேயின் முயற்சியை கொச்சைப்படுத்தும் வகையில், அமெரிக்கா தூதுவர் தனது கருத்தை வெளியிட்டார். நோர்வேயின் வற்புறுத்தலினால் புலிகள் செய்த யுத்த நிறுத்தத்;தை கேலி செய்யம் வகையில், அதை புலிகளின் சுய யுத்த நிறுத்தமாக சித்தரித்து அதை போலியானதாக கூறியதன் மூலம், அமெரிக்கா தனது நலன் சார்ந்து அய்ரோப்பிய உலகமயமாதல் விரிவாக்கத்துக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் பின்னால் புலிகளை நேரடியாக சீண்டும் வகையில், 7.3.2001 இல் அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்தில் நேரடியாகவே உரையாற்றினர். இலங்கைத் தூதுவர் அஸ்லிவில்ஸ் புலிகளிடம் கூறுங்கள் என்று மிரட்டும் தொனியில், புலிகள் தொடர்ந்து போராடுவர்களாயின் அவர்கள் எதையும் அடைய முடியாது என்பதை சொல்லுங்கள் என்றார். அத்துடன் வன்முறையை உடன் கைவிட வேண்டும் என்று எச்சரித்தார். இதன் மூலம் தனது உலக பொலிஸ் பாத்திரத்தை மீண்டும் மிரட்டும் தொனியில் கூறியதன் மூலம், எச்சரித்தார். இதன் மூலம் நோர்வேயின் முயற்சிகளை புலிகளை சீண்டுவதன் மூலம், நெருக்கடிக்கு உள்ளாக்கினர். புலிகளின் போராட்டத்தை நேரடியாக அவர்களின் சொந்த போராடும் மண்ணிலேயே மிரட்டிய நிகழ்வு, உலகமயமாதலில் நேரடி ஆக்கிரமிப்பை நடத்தத் தயாராக இருப்பதை கோடிட்டுக் காட்டினர். இது அய்ரோப்பிய நலன்களுக்கு எதிராக இருக்கும் என்பதையே, ஒரு யுத்த நிறுத்தம் மற்றும் மூன்றாம் தரப்பு பேச்சு வார்த்தைக்கும் எதிராக இருக்கும் என்பதை மறைமுகமாக எச்சரித்தார். இதன் தொடர்ச்சியில் 14.3.2001 இல் 21 அமைப்புகளை பிரிட்டன் தடை செய்த நிகழ்வுக்குள், புலிகளையும் உள்ளடக்கியதன் மூலம் அய்ரோப்பிய முயற்சிக்கு நேரடியாகவே முட்டுக்கட்டையிட்டனர். அமெரிக்கா, இந்தியா, மலேசியா என்று மூன்று நாடுகள் புலிகளை தடை செய்த நிலையில், பிரிட்டனின் தடை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு பேச்சு வார்த்தை மற்றும் ஒரு தலைப்பட்சமான புலிகளின் யுத்த நிறுத்தம் உள்ள நிலையில், பிரிட்டனின் தடை என்பது உலகமயமாதலின் உள் நெருக்கடியை மீண்டும் ஒருமுறை கோரமாக வெளிப்படுத்தியது. அய்ரோப்பிய யூனியனுடன் முரண்பட்ட, அமெரிக்கா நலன்களுடன் பங்கு போட்டுக் கொள்ளும் பிரிட்டன், அய்ரோப்பிய விரிவாக்க முயற்சிகளை தடை போடுவதன் மூலம், தனது பங்களிப்பை புலிகளின் தடை மூலம் தெரிவித்தது. அய்ரோப்பிய யூனியன் உலகை தனது உலகமயமாதல் விரிவாக்கத்துக்குள் இலங்கையைச் சூறையாட எடுத்த முயற்சிகளை தடுத்ததன் மூலம், பிரிட்டன் தனது சொந்த மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நலன்களை முதன்மைப்படுத்தி, புலிக்கு நெருக்கடி கொடுத்தது. இதன் மூலம் சிறீலங்கா இனவாத சிங்கள அரசை திருப்தி செய்து ஆதரவை தெரிவித்ததன் மூலம், அய்ரோப்பா பற்றிய ஊசலாட்டத்தை தகர்த்து தனக்கு சார்பாக திருப்பியதன் மூலம், நோர்வேயை மத்தியஸ்தை ஆட்டம் காணவைத்தனர். இந்தத் தடையை இந்தியா ஊடாகவும் அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. சித்திரை மாதம் கதிர்காமர் ஷபுரொன்ட்லைனுகு| வழங்கிய பேட்டியில்; புலிகளை பிரிட்டன் தடைசெய்வதில் இந்தியாவின் பங்களிப்பை ஒத்துக் கொண்டதன் மூலம், அய்ரோப்பிய முயற்சிக்கு இயன்ற அணைத்து தடைகளையும், அமெரிக்கா சார்பு நாடுகள் செய்துள்ளது தெளிவாகின்றது. நோர்வே பிரதிநிதி இந்தியாவுக்கு அதிக பறப்புகளை நடத்திய போதும், இந்தியாவின் எதிர்ப்புகள் வெளிப்படத் தவறவில்லை. அய்ரோப்பிய முயற்சிக்கு பல தடைகளை தொடர்ச்சியாக இந்தியா ஏற்படுத்தியது. முன் கூட்டியே இந்த தடைபற்றிய செய்திகள் வெளியான போதும், இந்தியாவும் நோர்வேயும் இதை மறுத்தது தெரிந்ததே. ஒரு தலைப்பட்சமான புலிகளின் யுத்த நிறுத்தம் முறிந்த பின்பு, மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கிய நோர்வே பிரதிநிதி, 30.4.2001 இல் வெளியட்ட கருத்து இதை உறுதி செய்வதுடன், மிகமுக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்;. நோர்வை பிரதிநிதி இந்தியாவுக்கு, இலங்கை விடையத்தில் எந்த 'வீட்டோ அதிகாரமும்|| இல்லை என்று வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு, உலகமயமாதல் முரண்பாடு ஆழமாகி வெளிப்பட்டது. புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பாக இதை குழப்பி யுத்தத்தை தொடர ஊக்குவிக்கும் வகையில், இந்தியா 10 கோடி பெறுமதியான ஆயுத மற்றும் உதவிகளை தனாகவே முன்வந்து சிறீலங்காவுக்கு வழங்கியது. இதுபோன்று பாகிஸ்தான் இரண்டு கோடி டொலர் ஆயுத மற்றும் உதவிகளை வழங்கியது. இதன் மூலம் அய்ரோப்பாவுக்கு எதிராக அமெரிக்கா தனது உலகமயமாதல் நலன்களை, தனது கைக்கூலி அரசுகள் மூலம் சாதித்தது. அய்ரோப்பிய நலன்களை அடைப்படையாக கொண்ட பேச்சு வார்த்தை முயற்சிகளை தடுப்பதில் வெற்றி கண்டது. சிறீலங்கா அரசுக்கு யுத்த வெறியை ஊட்டியதுடன், அதற்குத் தேவையான ஆயுதங்களை தாரைவார்த்ததன் மூலம், யுத்த நிறுத்தத்தை செய்ய மறுத்ததுடன், பேச்சு வார்த்தையை இழுத்தடித்து. அதே நேரம் அய்ரோப்பிய முயற்சியை தடுக்கும் வகையில், உலகவங்கியின் இலங்கைகான பிரதிநிதி திருமதி மரியணா ரொடோவா தலைமையிலான குழு புலிகளைச் சந்தித்தனர். 18.4.2001 இல் அமெரிக்கா கொங்கிரஸின் சர்வதேச உறவுகள் சங்கத்தின் ஆலோசகர் அடொல்ப் பிராங்கோ கொழும்புக்கு சென்றதுடன், பல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்களத் தலைவர்களைச் சந்தித்தார். அதே நேரம் கனடா அரசு தான் பேச்சு வார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக நோர்வேயின் முயற்சிக்கு புறம்பாக தீடிரென அறிவித்தது. ஒருபுறம் நோர்வேயின் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், கனடா அரசு புதிதாக மத்தியஸ்தத்தில் ஈடுபட முன்வந்தது. அதாவது அய்ரோப்பிய யூனியன் போன்று அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் கனடா உலகமயமாதல் மகாநாட்டின் அமெரிக்க முயற்சியை தொடர்ந்தே, இந்த அறிவித்தல் வெளிவருவதும் அவதானத்துக்குரியது. இது அமெரிக்க நலனை அடைப்படையாக கொண்ட உலகமயமாதல் விரிவாக்க நோக்கத்தை வெளிப்படுத்தியது. புலிகளுக்கும், சிறீலங்கா அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை திகதி ஒன்று எந்த நேரமும் அறிவிக்கப்படும் என்ற ஒரு நிலையில், அமெரிக்கா தலைமையிலான உலகவங்கி இதை முறியடிக்கும் வகையில் திடிரென அரசுக்கு பெரும் தொகை பணத்தை உதவியாக கொடுத்தது. அய்ரோப்பா வழங்க மறுத்த பணத்தை உலக வங்கியூடாக அமெரிக்கா வழங்கியதன் மூலம், சிறீலங்கா அரசின் ஊசலாட்டம் முடிவுக்கு வந்தது. சிறீலங்கா அரசு அறிவித்த இடைக்கால யுத்த நிறுத்தத்தை தொடர்வதில்லை என்று சிறீலங்கா அரசு அறிவித்தது. யுத்த நிறுத்தம் என்பதை சாதித்தியமற்றதாக்கிய சிறீலங்கா அரசு, நோர்வேயின் வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் செய்த ஒருதலைபட்சமான யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, உலகவங்கியின் தீடீர் நிதியுதவி வழிகாட்டியது. நோர்வேயின் மத்தியஸ்துடன் கூடிய அய்ரோப்பிய தலையீட்டை, அமெரிக்கா தற்காலிகமாக தடுத்து நிறுத்தியது. இதன் மூலம் யுத்தம் மீண்டும் கொடூரமாக அரசு தரப்பினால் தொடங்கப்பட்டது. அதே நேரம் பேச்சு வார்த்தையையும், யுத்த நிறுத்தத்தையும், அமைதியையும், அமெரிக்கா நலன் சார்ந்து தொடங்குவதை புதிய நடைமுறையாக்கியுள்ளது. இந்த நிலையில் 30.4.2001 புலிகளை கனடிய தூதுவர் வன்னியில் தீடிரென சந்தித்துள்ளார். அதே நாள் நோர்வே பிரதிநிதி சந்திரிக்காவை சந்தித்தார். அதே நாள் இந்தியா புலிகள் உள்ளிட்ட சிறீலங்கா அரசை யுத்த நிறுத்தம் செய்யும் படி கோரியது. இந்த நிலமை தெளிவுபடவே அய்ரோப்பா அமெரிக்கா தனி நலன்களை சார்ந்து தனித்தனியாக இயங்குவதைக் காட்டுகின்றது. இந்தப் பேச்சு வார்த்தை மற்றும் இலங்கையில் ஏகாதிபத்தியங்கள் முகாமிட்டுள்ள தன்மை, மிகவிரைவில் ஒரு யுத்த நிறுத்தத்தையும் பேச்சு வார்த்தைகான நிலமையையும் கொண்டு வரவுள்ளது. இது முற்று முழுதாக சிறீலங்கா அரசோ, புலிகளோ தீர்மானிக்கும் விடையமாக இனியும் இல்லை. மாறாக ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களுடன் நேரடியாக தொடர்புடையதாக உள்ளது. இது சிலவேளை உலகமயமாதல் நலன்களின் அடிப்படையில் ஆழமாகப் பிளவுபட்டு அல்லது கூட்டாகவும் நடக்கும் வாய்ப்பை தனக்குள் கொண்டே உள்ளது. இனியும் இலங்கையில் ஒரு உள்நாட்டு யுத்தம் என்பது, ஏகாதிபத்திய நலன்களுக்கும் உலகமயமாதலின் மூலதன விரிவாக்கத்துக்கும் தடையாக மாறியுள்ளது. இந்த நிலையில் யுத்த நிறுத்தம் மற்றும் ஏகாதிபத்தியம் சுரண்டுவதற்கான அமைதி, கூட்டான ஏகாதிபத்திய தலையிட்டுடன் நடக்கும் வாய்ப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நிகழ்சி நிரலில் காணப்படுகின்றது. இக்கட்டுரை எழுதிய பின்பாக கதிர்காமர் அமெரிக்கா சென்றதும், அதேநேரம் உடனடியாக இருபகுதியையும் யுத்தத்தை நிறுத்த அமெரிக்கா கோரியுள்ளது. அத்துடன் இந்த அமைதிக்கான முயற்சியில், அமெரிக்கா தலையீடு இருக்கும் என்று தெளிவுபடவே அறிவித்துள்ளது. நோர்வே பிரதிநிதி புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்தை சந்தித்துள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. தொடர் முயற்சிகள் தொடராக வெளிவருகின்றன.
நோர்வேயின் நிர்ப்பந்தத்தால் ஒரு தலைபட்டசமான யுத்த நிறுத்தத்தை புலிகள் நான்கு மாதமாக தொடர்ந்த போதும், அது அரசியல் ரீதியாக என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. புலிகளின் வரலாற்றில் ராஜதந்திர ரீதியாக முன்னேறிய ஒரு நிலையை, எப்படி புலிகளால் பேணமுடிந்தது. இங்கு இதன் பரிணாமத்தை புரிந்து கொள்கின்ற போது, புலிகளின் பலவீனம் அரசியல் ரீதியாக மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது தெளிவாகின்றது.
நான்கு மாத யுத்த நிறுத்தம் புலிகளுக்கு ஒரு சாதகமான தன்மையை ஏற்படுத்தியது. இது புலிகளின் குறிப்பான அரசியல் ராஜதந்திரத்தில் ஏற்படவில்லை. மாறாக ஏகாதிபத்திய தரகு கைக்கூலி சிறீலங்கா அரசு உலக மயமாதலின் முரண்பாட்டில் சிக்கி, அதில் ஏற்பட்ட ஊசாலாட்ட அணுகுமுறையினால் மட்டுமே, புலிகளின் போர் நிறுத்தம் புலிகளுக்கு சாதகமான ஒரு தன்மையைக் கொடுத்தது. அத்துடன் நான்கு மாத யுத்த நிறுத்தத்தை நோர்வேயின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் தொடர்ந்ததே, அரசியல் ரீதியாக தவறானதாகவே உள்ளது. ஒருமாத கால யுத்த நிறுத்தத்தின் பின்பு அதை முடிவுக்கு கொண்டுவராத நிலமை, இராஜதந்திர ரீதியாக புலிகளின் அரசியல் பலவீனமாகவே இருந்துள்ளது. ஏன் இந்த யுத்த நிறுத்தம் தொடர்ந்தது என்ற அரசியல் விளக்கத்துக்கு பதிலளிக்க முடியாது. நான்கு மாத யுத்த நிறுத்தம் புலிகளுக்கு ஒரு சாதகமான அரசியல் அம்சமாக மாறியது என்பது, புலிகளின் சொந்த அரசியலால் அல்ல. மாறாக உலகமயமாதலுக்குள் இருந்த முரண்பட்டால் இது ஏற்பட்டது. ஆனால் எதிர் காலத்தில் அப்படி இருக்காது என்பதை, இதன் ஊடாக அவதானத்துக்கு உள்ளாக்க முடிகின்றது. இதை இன்றுகூட புலிகள் புரிந்து கொள்ளமுடியவில்லை. சிறீலங்கா அரசு ஒரு யுத்த நிறுத்தத்தை செய்திருப்பின், நிலமை தலைகீழாகியிருக்கும்;. சிறீலங்கா அரசு, அமெரிக்க அய்ரோப்பிய முரண்பாட்டில் இன்று அமெரிக்கா சார்பு நிலையை பூர்த்திசெய்ததுள்ளது. சிறீலங்கா அரசு உலகமயமாதலில் தனது கைக்கூலித் தனத்தை பூர்த்தி செய்து தனது விசுவாசத்தை தெரிவித்த நிலையில்தான், அரசு புலிகளிடம் இராஜதந்திர ரீதியாக தோல்வியைச் சந்தித்தது.
ஆனால் சர்வதேச ரீதியாக உள்ள முரண்பாட்டில் தெளிவான ஒரு நிலையை எடுத்தபடி, மறுபடியும் புதிதாக சிறீலங்கா அரசு இராஜதந்திர ரீதியான பலப்பரீட்சையில் ஈடுபடத் தயாரகின்றது. அதே நேரம் புலிகள் இந்த யுத்த நிறுத்தத்தை அரசியல் மற்றும் இரஜதந்திர ரீதியாக, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை உயர்த்துவதில் பயன்படுத்துவதில் சரியாக கையாண்டர்களா எனின், இல்லை என்பதே தெளிவான பதிலாகும்;.
தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை வென்றெடுக்கும் பாதை என்பது, எந்தளவுக்கு இராணுவ ரீதியாக யுத்தத்தை சரியாக தொடர்வது முக்கியத்துவமுடையதோ அந்தளவுக்கு அரசியலிலும் முக்கியத்துவமுடையது. இராணுவரீதியாக பயிற்சி, உளவு, ஆயுத சேகரிப்பு, யுத்ததந்திர வடிவங்கள் என்று விரிவான கல்வியும் பயிற்சியும் எந்தளவுக்கு முக்கியமானதோ அதே போன்று, அரசியலிலும் சுயநிர்ணயத்தை விரிவாக்கி விளக்கி அணிதிரட்டுவதும் அவசியமானதாகும். அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அவசியம், சுயநிர்ணயம் என்றால் என்ன, தேசியத்தின் உள்ளடக்கம் என்ன, இன்று உலகமயமாதலின் விரிவாக்கம் எப்படி தேசியத்துக்கு எதிராக வளர்ச்சி பெறுகின்றது, ஏகாதிபத்தியம் எப்படி போராட்டத்தை அழிக்க முனைகின்றது என்ற விரிவான தளத்தில் அரசியல் கல்வி போதிக்கப்பட்டிருக்க வேண்டும். இது சொந்த அணிகளுக்கும், மக்களுக்கும் இதன் மீதான தெளிவை புகட்டுவதன் ஊடாக நடைமுறையில் மக்களை செயலில் இறங்க முன்தள்ளியிருக்க வேண்டும்;. இதில் இருந்து சர்வதேச ரீதியாக பிரச்சாரத்தை உந்தித் தள்ளியிருக்க வேண்டும்;. இந்த சர்வதேச பிரச்சாரம் என்பது அரசுகளிடம் மட்டும் வேண்டுகோள் விடுவதில்ல, மனுக்கள் கொடுப்பதில்லை. மாறாக சர்வதேச மக்களிடம் சுயநிர்ணய உள்ளடகத்தை விரிவாக்கி, இதற்கு எதிராக அவர்களின் சொந்த அரசுகள் எப்படி அடக்கு முறையை கட்டவிழ்த்து விட தயாராவதை அம்பலம் செய்து, ஆதாரவு தேடியிருக்க வேண்டும்;
இன்று உலகம் ஒரே குடையின் கீழ் உலகமயமாதல் எல்லைக்குள் விரிவாகி வருவதை இனம் கண்டு கொள்ள முடியாத தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, தேசிய இன உள்ளடக்கத்தையே புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டும்;. உலகமயமாதல் தேசிய எல்லை கடந்து தேசிய பொருளாதாரத்தை சிதைத்து, மொழியை அழித்து, பண்பாட்டுக் கலாச்சார கூறுகளை சிதைத்து எல்லை கடந்த ஆட்சிகளை உருவாக்கி வருகின்றது. இந்த நிலையில் எமது தேசியம் எதை பாதுகாக்க விரும்புகின்றது. எதை விடுவிக்க எதைப் பாதுகாக்க விரும்புகின்றது. நாம் சுயநிர்ணயம் என்று எதைக் கருதுகின்றோம்;. இந்தக் கேள்விக்கு எல்லாம் பதிலாளிக்காத போராட்டம் எதை பெற்றுத்தரும்;. சந்திரிக்கா என்ற நபரையோ, சந்திரிகாவைச் சுற்றியுள்ள அரசையோ, சிங்கள இனவெறி இயந்திரத்தை மட்டும் எதிரியாக காண்பதன் மூலம், இவர்களிடம் இருந்து எதை மீட்க விரும்புகின்றோம்;. சந்திரிகாவும், அவரின் அரசும், அரசை சுற்றியுள்ள இனவெறி இயந்திரமும் தமிழ் மக்களுக்கு எதிராக தம்மை நிலைநிறுத்தி சிங்கள தேசியத்தை பாதுகாக்கவில்லை. மாறாக அவர்கள் தமிழீழம் உள்ளிட்ட இலங்கையை, ஏகாதிபத்திய உலகமயமாதலிடம் விற்றுவிட்ட நிலையில், எமது போராட்டம் சிங்கள இனவாத அரசிடமிருந்து எதை மீட்டு எடுக்கவுள்ளது.
புலிகள் இராணுவ ரீதியாக வரையறை செய்யும் எல்லைக்குள் ஒரு தனி அரசை தமிழனின் தலைமையில் நிறுவுவதன் மூலம், எந்த தேசிய அபிலசைகளை நாம் பெற்றுக் கொள்ள விரும்புகின்றோம்;. சிறீலங்கா அரசு போன்றோ அல்லது உலகில் உள்ள மூன்றாம் உலக ஏகாதிபத்திய கைகூலி அரசுகள் போன்று, தேசியத்தை உலகமயமாதலிடம் விற்றுவிடும் அரசுகளையா? நாம் கோரிப் போராடப் போகின்றோம்;! அதுவா எமது தமிழீழத் தாகம். இதையா தமிழ் மக்கள் கோருகின்றனர். இதுவா தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கை. சுயநிர்ணயக் கோரிக்கை பற்றிய புலிகளின் விரிந்த பார்வை இன்மையே, தமிழ் மக்களின் அரசியல் ரீதியான போராட்டத்தை வளர்தெடுப்பதிலும், சர்வதேச ரீதியாக மக்களின் ஆதரவை திரட்டுவதிலும் பிரதான தடையாக உள்ளது. இதனால் இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாத தடையாக மாறியுள்ளது.
உலகமயமாதல் உலகளவில் அனைத்துத் தேசியக் கூறுகளையும் ஈவிரக்கமின்றி அழிக்கின்றது. இது பண்பாடு கலாச்சாரத்தையும் பொருளாதார ரீதியாக அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழித்தொழிக்கின்றது. இதற்கு எதிரான போராட்டம் உலகளவில் வளர்ச்சி பெறுகின்றது. உலகமயமாதலுக்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்திய நாடுகளிலேயே எழுச்சி பெற்று வருகின்ற நிலையில், அப் போராட்டத்துடன் ஏன் எமது போராட்டத்தை அடையாளம் காணக்கூடாது, காட்டக்கூடாது. ஏன் அவர்களின் போராட்டத்துடன் எம்மை இணைத்துக் கொள்ளக்கூடாது. சிறீலங்கா அரசு கூட உலகமயமாதலின் விரிவாக்கத்தில் கைக் கூலியாக செயற்படுகின்றது. இந்த நிலையில் உலகமயமாதலுக்கு எதிரான சர்வதேசியப் போராட்டம்; சிறீலங்கா அரசுக்கு எதிரானது அல்லவா. பொதுவான சர்வதேசியப் போராட்டத்தில் எம்மை இனைத்துக் கொண்டு, குறிப்பான தமிழீழப் போராட்டத்தை இனைப்;பதன் ஊடாக, அவர்களையும் ஏன் இனைத்துக் கொள்ளக்கூடாது.
உலகமயமாதலை விரிவாக்கும் எகாதிபத்திய அரசுகள் சரி, சிறீலங்கா போன்ற கைக் கூலி அரசுகள் சரி, எமது போராட்டத்துக்கு மக்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு உதவுமா? உதவும் எந்த அரசையாவது அப்படிக் குறிப்பிட்டுக் காட்டமுடியுமா? உலக அரசுகள் அனைத்தும் சிறீலங்கா அரசு சார்பாக, புலிகளுக்கு எதிராகவும், மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கும் எதிராக உள்ள நிலையில், அவர்களை எதிர்த்துப் போராடவேண்டாமா? இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் அந்த அரசுகளை எதிர்க்கும் அந்த மக்களுடன் எம்மை இனம் காட்டி, அவர்களுடன் தோளோடு தோள் நிற்க வேண்டாமா? எமது போராட்டத்தை எதிர்க்கும், அழிக்க முனையும், ஆக்கிரமிக்க முனையும் அரசுகளை எதிர்க்காது நீடிப்பது இராஜதந்திரம் எனின், அந்த அரசுகளை எதிர்த்துப் போராடும் மக்களுடன் என்ன நிலையை எமது போராட்டம் கையாளுகின்றது. துரோகத்தை அல்லவா கையாளுகின்றது. இந்த துரோக நிலையை எல்லா உலக நாடுகளிலும் உள்ள போராடும் மக்கள் இராஜதந்திரம் என்று கூறி கையாளின், எமது போராட்டத்துக்கு யாருடைய ஆதாரவையும் பெறமுடியாது. இது போல் உலகில் போராடும் மக்கள் தனித்து தாம் மட்டும் போராட வேண்டுமா? இதுதான் போராடும் அரசியலில் இராஜதந்திரமா? (உலக) மக்களின் எதிரிகளை, எமது மக்களுக்கும் இனம் காட்ட மறுப்பது துரோகமல்லவா!
உலகளவில் அனைத்து அரசுகளும் தமக்கிடையிலான முரண்பாடுகளைக் கடந்து புலிகளையும், தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும் அழித் தொழிப்பதில், ஒரே கரமாகி வருகின்றது. அவர்கள் தனித்து நின்று இராணுவ ரீதியாக வெற்றி பெற்றுவிட முடியும் என்பது கற்பனையானது. உலகம் அனைத்தும் ஒன்றாக மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் போது, நியாமான போராட்டங்கள்; கூட உலகமக்களுக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டு அழித்தொழிப்பது உலக சனநாயகமாகவுள்ளது.. அமெரிக்கா வியட்நாம் ஆக்கிரமிப்பின் போது, 20 லட்சம் வியட்நாமியரை ஈவிரக்கமின்றி கொன்று ஒழித்தது. ஆனால் எந்த சர்வதேச நீதி மன்றமோ, சனநாயக வேடம் போடும் எந்த முதுகு எலும்பற்ற மனிதர்களோ இதை எதிர்த்து கேட்டதுமில்லை, எதிர்த்ததுமில்லை. ஆனால் வியட்நாம் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்த அதேநேரம் உலக எதிரியை தெளிவாக அடையாளம் காட்டிய நிலையில், உலகமக்கள் எல்லா நாடுகளிலும் அவர்களுக்காக போராடினார்கள். சிறைகள் சென்றது மட்டுமின்றி தமது சொந்த அரசை எதிர்த்த போராட்டத்தில் தம் உயிரையும் கூட வியட்நாம் மக்களுக்காக இழந்தனர். வியட்நாமை விட்டு அமெரிக்காவை ஒட வைத்ததும், அமெரிக்காவின் கொலை வெறியாட்டத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியது வியாட்நாம் மக்கள் அல்ல. மாறாக ஒவ்வொரு நாட்டிலும் அந்த அரசுகளை எதிர்த்து போரிட்ட மக்கள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறின், எமது போராட்ட தியாகங்கள் அர்த்தமற்று போவதுடன், எதிர்கால உலகமயமாதல் ஆக்கிரமிப்பு அழித்தொழிப்புகளைக் கூட எம்மால் உலகுக்கு சொல்ல முடியாத பரிதாபம் நிகழும்;. எமது போராட்டம் உலகமயமாதலுக்கு எதிரான அரசியல் வழிகளில் ஒன்று இணைவதும், இணைப்பதும் அவசியமான உலக வரலாற்று நிபந்தனையாகும்;. இதை மறுத்தால், போராட்டம் ஏகாதிபத்தியத்தால் இலகுவாக அழித் தொழிக்கப்படவும் அல்லது விலைபேசி கைக் கூலியாக்கிவிடுவதும் சமூக யதார்த்தமாகும்;. இதை தனிமனித விருப்பங்கள் திர்மானிப்பதில்;லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்;.
நோர்வே வேண்டுகோளுக்கிணங்கிய புலிகளின் நான்கு மாத யுத்த நிறுத்தம், இதையே மீளவும் எமக்கு காட்டுகின்றது. யுத்த நிறுத்தத்தை அரசியல் ரீதியாக தாமாகவே புலிகள் செய்திருப்பின் அது இதில் இருந்து வேறுபட்டவை. நோர்வேயின் வேண்டு கோள்கள் மற்றும் நிர்ப்பந்தங்கள் கூட அரசியல் ரீதியாக கையாள வேண்டி வருவது இயற்கைதான்;. ஆனால் எந்தவிதமான அரசியல் இராஜதந்திரமற்ற வகையில் யுத்த நிறுத்தத்தை நீடிப்பதும், நீடித்ததும் என்பது, புலிகள் மீது படர்ந்துள்ள உலகமயமாதலின் கொடூரமான கரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதை புலிகள் புரிந்து கொள்ளத் தவறுவதே இங்கு விமர்சனத்துக்குரியதாக உள்ளது. புலிகளின் சொந்த அணிகளே என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியாத சூனியத்தில் நின்றார்கள்;. தளத்தில் இருந்து புலிகள் ஒரு தலைபட்ச யுத்த நிறுத்தத்தை தொடர்வதில்லை என வெளியிட்ட குறிப்பிலும், சொந்த அணிகளிடையே யுத்த நிறுத்தத்தினால் ஏற்படும் ஊசலாட்டத்தை குறிப்பிடத் தவறவி;லை. ஆனால் இதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளப்படவில்லை. மாறாக யுத்த நிறுத்தத்தை நீடிக்க முடியாத ஒரு காரணமாகவே இது வைக்கப்பட்டது. யுத்த சூழலுக்கு புறம்பாக, யுத்தமற்ற சூழலில் அமைப்பில் ஊசலாட்டம,; தளம்பல் ஏன் நிகழ்கின்றது. இங்குதான் அரசியலின் முக்கியத்துவம் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதை மீண்டும் ஒரு முறை வரலாறு கோடிட்டு காட்டுகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஏகாதிபத்தியங்கள் அழித்தொழிக்க முனைகின்ற நிலையில், இதை எதிர்கொண்டு போராடவேண்டிய வரலாற்றுக் கடமையை, வெறும் இராணுவ வாதத்துக்குள் மாத்திரம் சாதிக்க முடியாது. இராணுவ வாதம் என்பது அரசியலில் இருந்து மனிதனின் சமூக உணர்வுகளை பிரிக்கின்றது. இது இராணுவத் தாக்குதல், ஆயுதங்கள் என்ற எல்லைக்கு அப்பால் அரசியலில் சூனியமாகின்றது. இதனால் நடைமுறையில் இராணுவ நடவடிக்கையற்ற நிலையில், அவ்வியக்கத்தையே கைவிடுவதும், போராட்ட சிந்தனையை இழப்பதும் ஒரு வடிவமாகின்றது. இராணுவ நடவடிக்கை அற்ற எல்லா நிலையிலும், புலிகளை இது மட்டுமே அரசியல் அநாதையாக்கிவிடும்;. ஒரு சிறந்த மக்கள் இராணுவத்தை உலகமயமாதலுக்கு எதிராக நிறுத்த வேண்டுமாயின், உலகமயமாதலுக்கு எதிரான அரசியல் புரிதல் மற்றும் நடைமுறையும் அடிப்படையானதும் நிபந்தனையானதுமாகும்;. இதன் மீதான தெளிவான உறுதியான சமூகப் பார்வையே, எந்த இராணுவ ஆக்கிரமிப்பையும், எந்த யுத்த நிறுத்தங்களையும், எந்த நெருக்கடிகளையும் தகர்த்துவிடும்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு விடயமாக பிரிட்டன் எகாதிபத்தியம் 14.3.2001இல், புலிகளை தடை செய்யும் பட்டியலில் இணைத்தது. இதைத் தொடர்ந்து புலிகள் இதை எப்படி எதிர் கொண்டனர் என்பதே. புலிகளின் அறிக்கையில் 'ஆங்கில - தமிழ் உறவுகளில் ஒரு கறுப்பு நாளாகவும் இது அமைந்துவிட்டது|| எனப் பிரகடணம் செய்தனர். பிரிட்டன் ; ஏகாதிபத்திய தடை குறித்த பாலசிங்கம் வழங்கிய பேட்டியில் ஷஷ... பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் பிரித்தானிய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தை இணைத்துக் கொண்டது குறித்து உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஆத்திரமும் கவலையும் கொண்டுள்ளனர்.|| என்று குறிப்பிடுகின்றார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையான எரிமலை மார்ச் 2001 இதழில், பிரிட்டன் ; தடை ஷஷதமிழ் மக்களுக்கு ஒரளவு ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாகவே இருந்தது. ஆனால், அது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயமாக இருந்தது என்று சொல்வதற்கில்லை|| என்று புலிகள் குறிப்பிடுகின்றனர். எமது முன்னைய கொலனிய வாதிகளாகவும், உலகை அடக்கியாளும் ஏகாதிபத்தியவாதிகளாகவும் திகளும் பிரிட்டன் இன்று உலகமயமாதலை விரிவாக்கும் நாடுகளில் முன்னணி ஆக்கிரமிப்பு நாடாக அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. அண்மைய உலகளாவிய பல ஆக்கிரமிப்புகளில், பல மனித உரிமை மீறல்களையே சனநாயகமாக காட்டினர். இதன் மூலம் உலகை உலகமயமாதலுக்கு அடிமைப்படுத்தும் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் தடையை, போராடும் மக்களாகிய நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்;. இது ஒரு கறுப்பு நாளா! இல்லை ஒருக்காலும் இல்லை. இது ஒரு கவலைக்குரிய நாளா! ஒருக்காலும் இல்லை. இது ஏமாற்றம் அளிக்கும் நாளா! ஒருக்காலும் இல்லை. மாறாக ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புத் தன்மையை, மீண்டும் ஒருமுறை உலகுக்கு பறைசாற்றிய நாள் அல்லவா! இந்த உலக ஆக்கிரமிப்பின் பிரகடனத்தை பிரிட்டன் ஏகாதிபத்தியம் தமிழ் மக்களுக்கும,; உலக மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை பறைசாற்றிய போது, அதை எதிர்த்துப் போராட அழைப்பு விட்டிருக்க வேண்டும்;. இதை விட்டவிட்டு கவலைப்படுவது என்பது, ஏமாற்றம் அளிப்பது என்பதும், கறுப்பு நாளாகி விட்டது என்பதும் தேசிய அரசியல் உள்ளடகத்தை கைவிடுவதாகும்;. இது மக்களின் போராட்ட உணர்வுகளையும், சுயநிர்ணயக் கோரிக்கை உள்ளடக்கிய தேசிய விடுதலைக்கான தியாகங்கள், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பண்பாட்டு கலாச்சார எல்லைக்குள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பி விடுகின்றது. எதிரியை நாம் மீண்டும் தெளிவாக புரிந்து கொண்டதற்கும், புரிய வைத்தற்காக, அதை அவர்கள் நிர்வாணப்படுத்தியதன் ஊடாக, மீண்டும் தமிழ் மக்களுக்கு ஏகாதிபத்திய தன்மையை உணர்த்தியதற்காகவும் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்;. இந்த ஏகாதிபத்திய தடையை எதிர்த்து ஆயுதம் எந்திப் போராட அழைப்பு விட்டிருக்கவேண்டும்; பிரிட்டன் சனநாயகம் பற்றி தமிழ் மக்களின் மயக்கத்தை, தடை மூலம் தெளிவாக்கியதற்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். இதை அரசியல் ரீதியாக மக்கள் முன் எடுத்துச் சென்று, ஆயிரமாயிரமாக அணிதிரள அறை கூவியிருக்க வேண்டும்; ஆனால் மாறாக கறுப்பு நாளகவும், கவலைப்படுவதாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் அறிக்கை விட்டு இது அதிர்ச்சி அளிக்கவில்லை என்று கூறுவதை விடுத்து, இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையில் மூழ்கிவிடுவது என்பது, எமது தேசியத்தின் உள்ளடகத்தை சரியாக முன்னெடுக்க தவறியதாகும்;. இந்தத் தடை மீண்டும் ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையின், புதிய ஆக்கிரமிப்பு வடிவம் தான் என்பதை விளக்கியிருக்கவேண்டும். இதற்கு எதிராக உலகு எங்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் புலிகள் இதை செய்ய மறுப்பது என்பது, இலங்கையில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு மறைமுகமாக துனைபோவதாகும்;. ஆக்கிரமிப்பு ஏற்படும் போது, அதை மக்கள் அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் வலிமை அற்றவர்களாக்கி விடுவது என்பது, அரசியலற்ற எல்லா நிலையிலும் ஒரு பொதுப்பண்பாகும்.
உலகமயமாதலுக்கு எதிரான போராட்டம் உலகளாவிய நிகழ்ச்சி நிரலாக இருக்கின்ற நிலையில், அதற்கு எதிரான போராட்டங்கள் உலகு எங்கும் நடக்கின்றன. இந்த நிலையில் வருடாவருடம் புலிகள் ஜெனிவாவை நோக்கி நடத்தும் ஊர்வலத்தை, எந்த வகையில் அழைப்புவிடுகின்றனர் என ஆராயின், அது விசனத்துக்குரியதாகவே உள்ளது. 2.4.2001 இல் புலிகள் நடத்திய ஊர்வலத்தை ||அமைதிப் பேரணி|| என்ற அறிவித்தல் ஊடாகவே அழைப்பு விடுத்து நடத்தினர். ஏன் ஒரு ஊர்வலத்தை அமைதிப் பேரணி என்ற மீண்டும் மீண்டும் அறிவிக்க வேண்டியுள்ளது. ஏன் ஒரு ஆர்பாட்ட ஊர்வலத்தை நடத்தக் கூடாது. ஒரு ஊர்வலம் அமைதியானதா அல்லது ஆர்ப்பாட்டமானதா என்பது, எதிரி ஊர்வலம் மீது கையாளப்படும் அணுகு முறையிலேயே தங்கியள்ளதே ஒழிய, அதை வலிந்து முன் கூட்டியே கட்டுப்படுத்தி திணிப்பது அல்ல. தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டம் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகி வரும் இன்றைய நிலையில், போராட்டம் என்பது அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆர்ப்பட்டமாக இருக்க வேண்டும்;. இது அரசியலில் இருந்து அன்னியமான வன்முறையில் அல்ல, தமிழ் மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமையவேண்டும். அத்துடன் நடக்கும் ஊர்வலங்களில் வைக்கும் கோசங்கள், தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புடையதாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்;. அண்மையில் பிரான்சில் நடந்த மேதின ஊர்வலத்தில் கூட, தமிழ் மக்களின் உணர்ச்சிகளை அவர்களின் அரசியல் கோரிக்கைகளை உள்ளடக்கிய கோசங்களை வெளிப்படுத்தவில்;லை.
ஊர்வலங்கள் என்பது தமிழ் மக்களின் நியாயமான போராட்டமான சுயநிர்ணய கோரிக்கைகளை முன்னிறுத்தி அதை கோசமாக்க வேண்டும்;. எமது தேசிய பொருளாதாரத்தை ஏகாதிபத்தியம் சிறிலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஆக்கிரமிப்பதை எதிர்த்தும், எமது கலாச்சார பண்பாடுகள் அன்னிய ஊடுருவல் மூலம் சிதைக்கப்படுவதை எதிர்த்தும், சிங்கள இனவெறி அரசு ஏகாதிபத்தியத்தின் துணையுடன் தமிழ் மக்களின் மீது நடத்தும் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், இதற்கு சர்வதேச நாடுகள் எந்த வகையில் துனை போகின்றன என்பதை அம்பலம் செய்து, ஆர்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும். இதை போராடும் மக்கள் மற்றும் இயக்கம் செய்யத் தவறுகின்ற போது, ஆக்கிரமிப்புகள் மற்றும் சமூகச் சிதைவுகள் தேசிய சனநாயகக் கோரிக்கைளைக் கூட இல்லாதாக்கிவிடும்;. தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை பாதுகாக்கின்ற சர்வதேசியப் போராட்டமே, புலிகளையும், புலித் தலைவர்களையும் கூட பாதுகாக்கும். இதை விடுத்த வெற்றுக் கோசங்கள் அல்ல. சரியான அரசியல் கோசங்கள் ஒட்டு மொத்தமாகவே போராட்டத்தையும் அதன் தலைமையையும் பாதுகாக்கும். இல்லாத வரை அப் போராட்டம் தோற்கடிக்கப்படுவதன் மூலம், மக்களின் உரிமைப் போராட்டமும், அதைச் சரியாக தலைமை தாங்கத் தவறிய இயக்கமும், அதன் தலைமையும் அழிக்கப்படும். எந்த நேரத்திலும் உலக ஆக்கிரமிப்பு இலங்கையில் நிகழ்கின்ற ஒரு சூழல் நிலவுகின்ற இன்றைய நிலையில், இது மேலும் ஆழமாக முக்கியத்துவமுடையானவாகும்.
எமது போராட்டம் இழைத்த தவறுகள் தான், இன்று உலகம் தழுவிய ஆக்கிரமிப்பின் எல்லை வரை கொண்டு வந்துள்ளது. உதாரணமாக சிறீலங்கா இராணுவத்தில் இருந்து 25000 பேர் ஒடியுள்ளதாக சிறீலங்கா அரசே ஒத்துக் கொள்கின்ற போது, எமக்கு சில உண்மைகள் பளிச்சென்று வெளிப்படுத்துகின்றது. சிறீலங்கா இராணுவத்தின் நாலில் ஒன்று அல்லது ஐந்தில் ஒரு பகுதி இராணுவம் ஒடியுள்ளது. இருந்தும் சிறீலங்கா இராணுவம் தொடர்ந்தும் யுத்தம் செய்ய முடிகின்றது. இங்கு தான், புலிகளின் அரசியல் தவறுகள் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரத் தடையாக இருந்தைக் காட்டுகின்றது. 25000 இராணுவம் ஒடிய போதும், ஒடிச் சென்றவர்கள் தமது பின்னணிப் பிரதேசத்துக்குள் தப்பிச் சென்றதே ஒழிய, புலிகளின் முன்னணி பிரதேசத்தில் சரணடையவில்லை. புலிகள் எதிரி பற்றி சரியான அனுகுமுறையைக் கையாண்டு, எதிரியை யுத்தத்தில் வெல்வதும், மறுபுறம் சரணடைய வைப்பதை ஒரு அனுகுமுறையாக கைக்கொண்டிருப்பின், இராணுவம் முற்றாக சரணடைந்தோ அல்லது பெரும் பகுதி சரணடைந்தோ இருக்கும். சிறீலங்கா அரசு இன்று போல் ஒரு உறுதியான யுத்தத்தை ஒருக்காலும் செய்திருக்கவே முடியாது. எதிரிகளை பற்றிய புலிகளின் மதிப்பீடு, அதிகமான எதிரிகளை தொடர்ச்சியாக உருவாக்கியது மட்டுமின்றி உற்பத்தி செய்தது. தம்முடன் உடன்பாடு அற்றவர்களை அல்லது அடிபணிய மறுத்தவர்களை எல்லாம் எதிரியாக காட்டி நடத்தும் மிகமோசமான அழித் தொழிப்பு, எதிரிகளைச் சார்ந்தும், தனியாகவும் அதிக எதிரிகளையே எமது விடுதலைப் போராட்டம் உருவாக்கியுள்ளது. இந்தத் தவறு தமிழ் மக்களின் போராட்டத்தை ஆழமாக சிதைத்து பின்தள்ளியுள்ளது. அரசியல் ரீதியாக ஒரே கோட்பாடு கொண்ட குழுக்களை தனது ஒரு பகுதியாக இணைக்கும் கனநாயக பண்புக்கு பதில், அழித் தொழிப்பு அவர்களை எதிர் நிலைக்கு தள்ளியது. இது போன்ற நடவடிக்கைகள் எமது போராட்டத்தை அதாள பாதாளத்தில் சிதைத்துள்ளது. தமிழ் மக்களின் போராடும் சுதந்திரத்தை அங்கீகரித்து அவர்களையும் இனைத்துக் கொள்ளும் போராட்டம் கையாளப்படாத வரை, உலக ஆக்கிரமிப்புகள் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை அழித்துவிடுவது தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாகிவிடும்;. உலகளவில் இந்த ஆக்கிரமிப்பு ஏகாதிபத்தியங்களால் திட்டமிடப்படும் போது, குறைந்த பட்சம் அந்த ஆக்கிரமிப்பை வெளிக் கொண்டு வருவதற்கு புலிகளை விட்டால் எந்த அமைப்புகளும், புலிகளுக்கு சார்பாக இல்லை. தமிழ் மக்களிடையே கூட, தமிழ் மக்களின் போராட்டத்தை வெளிக் கொண்டுவருவதற்கு எந்த சுதந்திரமான அமைப்புகளும், புலிகளுக்கு வெளியில் இல்லை. இதுபோல் உலகளாவிய மக்கள் சார்ந்த எந்த அமைப்புகளும், புலிகளின் நிலையை வெளிக் கொண்டு வரும் நிலையில் இன்று இல்லை. புலிகள் தாங்களும்;, தாம் மட்டும் என்ற குறுகிய எல்லைக்குள் இருக்கின்றனர். இதற்கு வெளியில் சனநாயக மறுப்பை அடிப்டையாக கொண்டுள்ளனர். இது உலக ஆக்கிரமிப்புகளை குறைந்த பட்சம் வெளிக் கொண்டு வர முடியாத அவலம் ஏற்படும். இதனால் எமது நியாயமான உரிமைப் போராட்டத்தை அழிப்பதை சனநாயகப்படுத்திவிடும்;. இதை நாம் கவனத்தில் கொண்டு போராட்டத்தை சனநாயகப்படுத்தி, உலகமயமாதல் ஆக்கிரமிப்புக்கு எதிராக எம்மை ஆயுதபாணியாக்கி, உலகமக்களின் பொதுப் போராட்டத்துடன் கை கொடுக்க வேண்டிய வரலாற்றுப் பணி, போராடும் அனைத்து சக்திகள் முன் உள்ள வரலாற்றுக் கடமையாகும்.;
 
எழுதிக்கொள்வது: சங்கராச்சாரியார்

யார் ஐயா ஆங்கிலப் புலவர்? எல்லோருக்கும் உங்களை மாதிரி வார்த்தை பாவிக்க முடியும். வருகின்றவற்ழற வாசிக் விருப்பம் என்றால் வாசியும் இல்லாது விடின் உம்முடைய வார்த்தை பிரயோகத்தை கவனமாக பயன்படுத்தும்.
ஒரு விடயத்தை சிறு பந்தியில் விளக்கம் கொடுக்க முடியாது திறமை உள்ளவர்கள் எழுதுகின்றார்கள் அவர்கள் சமூகவியலாளர்கள் அவர்கள் கடமையைச் செய்கின்றார்கள் நீங்கள் யார் அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தை தடுப்பதற்கு? உமக்குத் தேவையானது முட்டாள் சமூகமா????

சங்கராச்சாரியார்

23.7 24.6.2005
 
இனவாதகோரமும், சிறுபாண்மைமக்களின் பாதையும்
தேசவிடுதலைப் போராட்டம் அதன் போக்குகளில் மக்களின் துன்பங்கள் முடிவற்றுத் தொடர்கின்றது. பாசிச சிங்கள இனவெறி அரசு தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சையே நசுக்கி அழித்துவிட கங்கனம் கட்டி பாரிய யுத்த முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கையின் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் அரசுக்கு எதிராக போராடிய பலரைக் கொண்றும், சிறையில் அடைத்தும் தேசிய இன அடையாளத்தை இன்னுமொரு புறத்தில் அழிக்கின்றனர். ஒரு போராட்டம் என்பது அதன் அனைத்து சக்திகளையும் அரவனைத்து செல்வதில் தான் வெற்றி அழிக்கின்றது. முஸ்லீம் சிங்கள அப்பாவி மக்களஇ மீதான தாக்குதல்கள் எல்லாம் இன்னும் தேசவிடுதலைப் போராட்டத்திற்கு பாதகமான அம்சங்களாகும்.
இந்தவகையில் இன்று யுத்தம் வெல்ல முடியாத ஒரு தற்காப்பு யுத்த எல்லைக்குள் மிளமிளத் தொடர்வதும், அதன் விளைவுகள் தமிழ் மக்களையும், இலங்கையின் மொத்த அப்பாவி மக்களையும் எப்படி பாதிக்கின்றது என இக்கட்டுரை மூலம் ஆராய முயல்கின்றேன்.
1993 களில் ஆசியாவில் பாகிஸ்தானுக்கு அடுத்ததாக இலங்கையே தனது வருமானத்தில் இராணுவத்திற்காக அதிகம் செலவழித்த நாடாக மாறியிருந்தது. இதன் மூலம் 1993 முந்தைய 10 வருடத்தில் 22000 கோடி பணத்தை யுத்த முனையில் எரித்து நாசமாக்கியுள்ளது. எந்த மீள் உற்பத்தியும் அற்ற 22000 கோடிபணம் என்பது இலங்கையின் படுமோசமான அழிவுக்கு இட்டுச் செல்கின்றது. 1993 இல் நாள் ஒன்றுக்கு 40 பேர் கொல்லப்பட்ட நிலையில், வடக்குக் கிழக்கில் மொத்தமாக 60,000 பேர் கொல்லப்பட்டனர். இதைவிட 5000 பேரை காணவில்லை. இதே நேரம் 1993 இல் இராணுவச் செலவு 3,600 கோடியாக உயர்ந்தது.
இந்த யுத்தக் கெடுபிடிகள் என்பது தனது அரசியல் லாப நோக்கில், மேல்மட்ட செல்வந்தர்களின் கணவுகளை ஈடுசெய்ய தொடரப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்கள் தங்கள் வறுமையின் கோரத்தை மூடி மறைக்கவும், அவர்கள் கிளர்ந்தெமுந்துவிடாது தடுக்கவும் இன்று இவ்யுத்தம் தொடரப்படுகின்றது. இதன் விளைவுகள் மூலம் 1993 இல் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அகதிகள் முகாம் பெருக்கெடுத்தது. நாடு முழுவதும் 531 அகதிகள் முகாம்களில், மற்றும் தனிப்பட்ட அகதிகளாகவும் மொத்தமாக 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக புலம் பெயர்ந்தனர்.
இது மட்டக்களப்பில் 16,907 குடும்பத்தைச் சேர்ந்த 76,530 பேராக இருந்தது. யாழ்பாணத்தில் 80,271 குடும்பத்தைச் சேர்ந்த 2,65,091 பேர் குடிபெயர்ந்தனர். இது கிளிநேச்சியில் 40,889 பேராகவும், மன்னாரில் 54,760 பேராகவும், வவுனியாவில் 11,407 பேராகவும் திருகோணாமலையில் 33,727 பேராகவும், முல்லைத்தீவில் 30,139 பேராகவும் அம்பாறையில் 23,139 பேராகவும் காணப்பட்டது.
இதனைவிட நாட்டில் பலபாகத்திலும் அகதிகள் புலம் பெயர்ந்து உள்ளனர். இதைவிட நாட்டுக்கு வெளியில் சிலலட்சம் பேர் பெயர்ந்துள்ளனர். இது மேற்கு நாடுகளில் 2 லட்சத்துக்கு மேலாகவும், இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு மேலாகவும் உள்ளனர். இதைவிட 1994 இல் அமினஸ்ரியின் அறிக்கைப் படி வடக்குக் கிழக்கில் மட்டும் 10 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்தநிலையில் யுத்தத்தைத் தொடர எல்லாவித முனைவுகளையும் பயன்படுத்தி நாட்டை அழித்து வருகின்றனர். இராணுவபலம் மிகவேகமாக அதிகரித்துச் சென்றவண்ணம் உள்ளது. 1980 களில் இராணுவம் 15,000 பேராக மட்டுமே இருந்தது. இது 1985 இல் 21,500 பேராக அதிகரித்த அடீத நேரம் தற்காலிகமான 18,200 பேரையும், 14,500 பொலீசையும் கொண்டிருந்தது. இதைவிட பாராளுமண்ற உறுப்பினர் பாதுகாப்புப் படை 5,000 ஆக இருந்தது. இது 1993 இன் நடுப்பகுதியில் இராணுவம் 70,000 ஆகவும், கடற்படை 10,000 மாகவும், விமானப்படை 8,000 மாகவும், பொலீஸ் 30,000 மாகவும் கெரில்லா எதிர்ப்புப் படையணி 12,000 மாகவும், தேசிய பாதுகாப்பப் படையில் 15,000 மாகவும், இதைவிட மற்றைய பிரிவுகள் 13,000 பேராகவும் காணப்பட்டது. இது மொத்தமாக 1லட்சத்து 58 ஆயிரம் படையாட்களாக 1993 இல் அதிகரித்தது. இது இன்று மேலும் பலமடங்கு பெருகிஇருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இராணுவச்செலவைப் பொறுத்த வரையில் 1978 இல் 56 கோடியாக இருந்தது. 1986 இல் இது 886 கோடியாக அதிகரித்தது. இது 1992 இல் 1600 கோடியாகவும், 1993 இல் 3600 கோடியாகவும் அதிகரித்தது. 1993 இல் மொத்த தேசிய வருமானத்தில் 40 வீதம் யுத்தத்திற்காக செலவுசெய்யப்பட்டது. 1992 இல் 1 வீதமாக இருந்த பாதுகாப்பு வரி 1993 இல் 3 வீதமாக அதிகரித்தது. பின் பாதுகாப்பு வரி 1993 இறுதியில் 3.5 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
யுத்தம் என்ற போர்வையின் கீழ் கொழுத்த பணக்காரன் மேலும் பணக்காரனாக மாற கீழ்பட்ட மக்கள் மேலும் ஏழைகளாக முறிவருகின்றனர். அக்களின் அடிப்படைத் தேவைக்கு ஒதுக்கிய பிச்சைக் காசுகள் கூட வேட்டுக்கு உள்ளாகி வருகின்றது.
1990 இல் மொத்த மக்கள் சேவைக்கு ஒதுக்கிய பணம் மொத்தமாக 13.5 வீதமாக இருந்தது. 1991 இல் 7.4 விதமாக குறைக்கப்பட்டது. அதன் உட்பிரிவுகளைப் பார்போமாயின்

பொதுச் சேவை மொத்தமாக 1990 1991
தேசிய உற்பத்தியில் 11.3 வீதம் 9.1 வீதம்
இதில் கல்வி 3.9 வீதம் 3.6 வீதம்
மருத்துவம் 4.8 வீதம் 3.4 வீதம்
வீடு 1.9 வீதம் 1.6 வீதம்
மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு ஒருபுறம் வெட்டவும், மறுபுறம் யுத்தம் அதைச்சுடுகாடாக்கின்றது. அற்பவருமானத்தையும் காலம் காலமாக சிறு சேமிப்புக்களையும் கூட சாம்லாக மாற்றிவருகின்றது இந்த யுத்தம். இதைஒட்டிக் கிடைத்த தகவல்களை தொகுத்துப் பார்கும் போது அவை அதிர்ச்சியூட்டக் கூடியனவாக உள்ளது.
1993,94 களில் 10-14 வயதுடைய ஒவ்வேரு ஐந்து பேருக்க ஒருவர்வீதம் பாடசாலை செல்லவில்லை. அதாவது 20 வீதம் பேர் பாடசாலை செல்லவில்லை. 19 லட்சம் குழந்தைகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இதைவிட 1 லட்சம் குழந்தைகள் அகதி முகாம்களிலும், 20,000 குழந்தைகள் வேலையிலும் 10 ஆயிரம் குழந்தைகள் வீதிகளிலும் வசிக்கத் தொடங்கியுள்ளனர். இதைவிட 10,000 சிறுவர்கள் பாலியல் தொழிலில் வெள்ளைக்காறனுக்கு கூட்டிக் கொடுத்து எயிட்காவிகளை உருவாக்கி வருகின்றனர்.
1993 இல் அரசு புள்ளி விபரப்படியே 90,000 குடும்பங்கள் மீன்பிடி தொழிலை இழந்து அன்றாட வருமானத்தையே இழந்துள்ளனர். 1993 மேயில் வாழ்க்கைச் செலவு 10 வீதமாக இருந்தது. யூனில் அது 12.3 வீதமாக அதிகரித்தது. இந்தவகையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்கிறது. மரணவீதம் வடக்குக் கிழக்கில் என்றும் இல்லாதவாறு அதிகரிக்கிறது ( இது யுத்தத்தில் இறப்பவர்களை விட்டேயாகும்) இந்தவகையில் யுத்த கோரமும் அதன் இனவாத முகமும் மக்களை படுமோசமான வாழ்நிலைக்கு இட்டுச் செல்கிறது.
பாடசாலைக் கல்வியில் திட்டமிட்டே இனவாதம் புகுத்தப்பட்டிருப்பதை கீழ்உள்ள புள்ளி விபரம் விளக்குகிறது.

பாடசாலை ஆசிரியர் மாணவர்கள்
சிங்களவர்கள் 1 18 பேர்
தழிழர்கள் 1 43 பேர்
முஸ்லீம்கள் 1 21 பேர்
அதாவது ஒரு ஆசிரியர் தமிழ் மொழிமாணவர்கள் 43 பேரை கற்பிக்கும் அதே நேரம் ஒரு சிங்கள ஆசிரியர் தமிழ் மொழி மாணவர்களின் மொத்தத் தொகையில் அரைவாசி சிங்கள மாணவர்களை கற்பிக்கக்கூடிய வகையில் இலகுபடுத்தப்பட்டு தமிழ் மொழி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
நாட்டில் உள்ள மொத்தப் பாடசாலை 10,000 மாகும் இதில் 2000 மிகப்பின்தங்கிய பாடசாலைகள். இதில் மலையகத்தில் 800 பாடசாலைகள் உள்ளன. இதன் மூலம் மலையகமக்களின் கல்லியை இனவாதநோக்கில் திட்டமிட்டே முடக்கி வருகின்றனர்.
இன்று நாம் நாட்டைப் பார்க்கும் போது உயர்கல்வியில் பல்கழைக்கழகம் செல்லும் தகுதியை 45 ஆயிரம் பேர் அடைகின்றனர். ஆனால் அதில் 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே பல்கழைக்கழக அனுமி வழங்கப்படுகின்றது. அதில் பலர்கூட வேலையின்றி உள்ளனர் என்பது கவனிக்கப்படவேண்டியது. இங்கு இந்த 9 ஆயிரம் பெரை தெரிவு செய்ய தரப்படுத்தல் முறை புகுத்தப்படுவது இனவாதத்தின் ஒரு ஊற்று மூலமாகவே தொடர்கின்றது. இலங்கைக்கு ஏற்ற ஒரு கல்வி முறை உருவாக்கத் தவறி பல்கழைக்கழக த்திற்கு 9 ஆயிரம் மாணவர்களை தெரிவு செய்ய 2லட்சம் மாணவர்கள் தயார் செய்யப்பட்டபின் அவர்கள் துக்கி எறியப்படுகின்றனர். எந்த நோக்கமும் இன்றி படித்த கல்வி எந்ப்பிரயோசனமும் இன்றி, இலங்பை; பொருளாதாரக் கட்டமைப்பை வளர்க்கும் வகையில் இம்மாணவர்கள் கற்பிக்கப்படாமல் சீரழிக்கப்படுகின்றனர்.
99.9 வீதமான சிங்கள மக்களுக்கு தமிழ் தெரியாத இன்றைய நிலையில் 12.6 வீத இலங்கைத்தமிழ் மக்கள் 5வீத சிங்கள இனவெறியர்களின் இனவெறித் துண்டுதலால் ஒடுக்கப்படுகின்றனர். இது யுத்தத்தின் ஓரு கோர வடிவமாகும்.
1990 இல் இலங்கை அரசுத்துறை வேலையான 7 லட்சத்தில், இலங்கை தமிழ் பேசும் மக்கள் பெற்றது என்னவோ 50,400 வேலை மட்டுமே. அதாவது 12.6 வீதமான இலங்கைத் தமிழர், அரசு வேலைகளில் 7.2 வீதம் மட்டுமே பெற்றனர். இது 1980 களில் 11.25 வீதமாக இருந்து 1985 இல் 9.67 வீதமாகக் குறைந்து 1995 இல் 7.2 வீதமாக குறைந்து செல்கின்றது. இது தனிநபர் துறையில் மேலும் அதிகமாகும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்நிலை எனின் முஸ்லீம், மலையகமக்களின் நிலையை கற்பனை செய்யத் தேவையில்லை. இந்தவகையில் இனவாதம் மேலும் தீவிரப்படுத்தப்பட்ட யுத்தத்தை நோக்கி வேகமாக நகர்ந்து செல்வதை பின்வரும் அட்டவணையில் கானமுடியும். வேலைவாய்புகள் 1980 - 1985 - 1990

மொத்த வேலை வாய்பு சிங்களவர் தமிழர் (இலங் - இந்திய) முஸ்லீம் ஏனையோர்

அரச துறை
1980 3,68,849 84,34 11,61 3,33 0,72
1985 4,06,359 85,64 9,90 0,25 3,44 0,90
1990 4,21,009 89,4 6,35 0,75 3,3 0,35

கூட்டறவுத் துறை 1980 2,28,531 85,75 10,67 2,56 1,03
1985 3,22,617 85,54 9,38 1,25 2,35 1,14
1990 2,79,584 88,1 8,2 0,5 2,2 1,0

மொத்தம்
1980 59730 84,88 11,25 3,03 0,84
1985 7,28,976 85,80 9,67 0,64 2,95 1,14
1990 7,00,593 88,8 7,2 0,3 2,9 0,8
இப்புள்ளிவிபரத்தை இலங்கையின் இனரீதியான விதத்துடன் ஒப்பிட்டு பார்ப்பதே இனவாதத்தின் போக்கை இனங்காண முடியும். சிங்களவர் 73,9 வீதம், இலங்கைத் தமிழர்கள் 12,7 வீதம், இந்தியத் தமிழர்கள் 5,5 வீதம், முஸ்லீம்கள் 7,0 வீதம், ஏனையோர் 0,9 வீதமாகும். வேலைவாய்புக்கள் யுத்தத்தின் மூலம் குறைந்து செல்ல இனவாதத்தின் மூலம் சிங்களவர் வேலைவாய்பு அதிகரித்துச் செல்கிறது. இதை அட்டவணையில் காணமுடியும். எல்லா சிறுபாண்மை தேசிய இனத்தின் மீதான ஒடுக்கு முறையை வேலைவாய்பிலும் இனங்காண முடியும்.
வரண்ட பிரதேசமான யாழ்குடாநாடு இனவெறியர்காளால் புறக்கனிக்கப்பட்டு, யுத்தக் கொடூரங்களால் மேலும் வரட்சியை நோக்கி நகர்கின்றது. 411 சதுரமைல் பரப்பைக் கொண்ட யாழ்குடாநாடு 34,0 சதுரமைல் ஆனையிறவு கடலேரியையும், 125 சதுரமைல் யாழ் கடலேரியையும் கொண்டுள்ளது.
யாழ் நன்நீர் ஊற்று என்பது மழையையும், அதன் தேக்கத்தில் உள்ள குளங்களையும் சார்ந்ததேயாகும். 25 வருடங்களுக்கு முன் 1060 சிறு குளங்களை யாழ் குடாநாடு கொண்டிருந்தது. இங்கு 6,600 கிணறுகளையும், 1800 தோட்டக் கிணறுகளையும் கொண்டிருந்ததுடன் தோட்டச் செய்கைக்கு 6000கனலீற்றர் நீரே ஆண்டுக்கு கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டது.
இன்று யுத்தம், மற்றும் குளங்களை புணரமைப்பதில் புறக்கணிப்பம் என்ற இனவாதம் யாழ் குடாநாட்டை பாலைவனமாக மாற்றிவருகின்றது. இது எதிர்காலத்தில் நன்நீர் பெறுவதே கேள்விக்கு உள்ளாகிவிடும்.
இப்படிப் பல புள்ளிவிபரங்களை நாம் தொடுக்க முடியும் இனவாதம் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை குழிதோண்டிப் புதைக்க எல்லாவகையிலும் எல்லாத் துறையிலும் காணப்:படுவதை இக்கட்டுரை மூலம் காணமுடியும். தமிழ் பேசும் மக்கள் இதை எதிர்த்து முறியடிக்க சொந்த மக்களுக்கு போராட ஜனநாயகமும், சிங்கள முஸ்லீம் சாதாரண மக்களை அரவணைத்தும் செல்லும் வழியில் மட்டுமே இனவாதத்தை தோற்கடித்து தமிழ் தேசிய சுயநிர்ணயத்தை பெற முடிவதுடன் சொந்த சகோதர சிங்கள முஸ்லீம் மலையக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்ட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இக்கட்டுரையில் தற்போது சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் ஒருசில புள்ளிவிபரங்கள் காட்டப்பட்டுள்ளன. இப்புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தற்போது ஆட்சி செய்யும் அரசு இனவாதத்தை மக்கள் மத்தியஙில் வீசுகின்றது என கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மையானது. இருந்தபோதும் தற்போது இலங்கையில் நடப்பது ஒரு இனவாதம்கலந்த போர் என்பது தான் உண்மை. அதாவது சிங்கள அரசு எந்தனவு இனவாதத்தை மக்கள் மத்தியில் விதைக்கின்றதோ அதே அளவு தமிழ், முங்லீம் மக்கள் மத்தியிலும் இனவாதம் இவ் மக்கட்பிரிவினரை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களால் விதைக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமை பெருந்தேசியஇன அரசால் மறுக்கப்பட்டு வருகின்றது. இருந்த போதும் சுயநிர்னய உரிமைக்கான போராக இதை நாம் முற்று முழுதாக அங்கீகரிக்கவில்லை. காரணம் இது நாடுபிரிக்கும் யுத்தமே. இங்கு நாடு பிரிக்கப்பட்டால் உழைக்கும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை முற்று முழுதாகக் கிடைத்துவிடுமா? என்பது கேள்விக்குறியே. அடக்கியாளும் வர்கம் இருக்கும் வரை அடக்கப்பட்டு இருப்பவர்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாத ஒருவிடையம். தரைப்படுத்தல், வேலைவாய்பு வசதி என்பன சிங்களவர்களுக்கே அதிகமாக லாபம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அதேவேளை இப்பிரச்சனையில் பாதிக்கப்படுவது. தமிழ்மேல்தட்டுவர்கமும் தமிழ் குட்டி முதலாளித்துவ வாதிகளுமே. மேலும் நடைபெறும் யுத்த ஆரம்பத்தில் தமிழர் தலைவர்களான தரகுமுதலாளிகள் கும்பல் இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒடுக்கு முறைக் காரணிகளைக் கூறியே யுத்தத்திற்கு விதையிட்டனர். இன்று சிங்கள தரகு முதலாளித்துவ அரசும், தமிழ் தரகுகளான புலிகளும் தமது நலன்களைப் பாதுகாக்க மேற்படி காரணிகளையே பயன்படுத்துகின்றனர். எம்மைப் பொறுத்தவரையில் அங்கு ஆட்சிசெய்யும் முறை மாற்றப்படவேண்டும் அதற்காகவே மக்கள் அணிதிரள வேண்டும். அப்போதுதான் இனவாதம் என்ற செல்லை இலங்கை மண்ணில் இருந்து துக்கி எறியமுடியும். இல்லாவிடத்து எந்த ஆட்சிமுறை வந்தாலென்ன, புதிய தேசம் உருவாகினால் என்ன இனவாதம் என்றும் அழியாது, யுத்தத்தையே தோற்றிவித்தபடி காணப்படும்.
சுமைகள்
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது