<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Monday, June 20, 2005
  இரு கவிதைகள்.

போரின் புதல்வர்கள்.

அவனது திருமண இரவில்
அவர்கள் அவனைப் போருக்கு
அழைத்துச் சென்றனர்.

கடுமையான ஐந்து வருடங்கள்.

சிகப்புத் தள்ளுவண்டியொன்றிற் படுத்தவாறு
ஒருநாள் அவன் நாடு திரும்பினான்.
அவனது மூன்று புதல்வர்கள்
அவனைத் துறைமுகத்திற் சந்தித்தனர்.


சுவர்க்கடிகாரம்

எனது நகரம் எதிரியிடம் வீழ்ந்தது.
எனினும் கடிகாரம் இன்னும்
சுவரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

எனது சுற்றாடல் வீழ்ந்தது.
எனது பாதையும் வீழ்ந்தது.
எனினும் கடிகாரம் இன்னும்
சுவரில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

எனது வீடும் வீழ்ந்து நொருங்கிற்று.
எனினும் கடிகாரம் இன்னும்
சுவரில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

பின்னர் சுவரும் வீழ்ந்தது.
எனினும் கடிகாரம் இன்னும்
டிக் டிக் என்று ஓடிக்கொண்டேயிருக்கிறது.

***சமீஹ் அல் காசிம்
பலஸ்தீன அரபுக் கவிஞர்களில் ஒருவர்.
தமிழில் -எம்.ஏ.நுஹ்மான்.***
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது