<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Tuesday, June 21, 2005
  ஊரத் தெரிஞ்சுக்கிட்டன் உலகம் புரிஞ்சுக்கிட்டன்



- புதியோன்
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
For a time passing blog, time passing feedback 1
 
எழுதிக்கொள்வது: ஆடுபுலி

மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுக்கும் கருத்துச் சுதந்திரம் (21.3.2005)
இந்த இணையத்தளம் மக்களின் வாழ்வியல் உரிமை சார்ந்த, சமூக உண்மைகளுக்காக போராடுகின்றது. இந்தப் போராட்டத்தில் நாம் எமது கருத்துச் சுதந்திரத்தை தக்கவைக்கும் ஒரு போராட்டமும், இதில் ஒரு அங்கமாகிவிடுகின்றது. இந்த இணையத்தளத்தை குழப்பவும், செயலிழக்கப்பண்ணவும், 10க்கு மேற்பட்ட தரம் இணையத்தின் இயங்கும் தளத்துக்குள் இனம் தெரியாத நபர்கள் புகுந்து முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சமூக உண்மைகளையும், சமூக உணர்வுகளையும் எதிர்கொள்ள வக்கற்ற சமூகவிரோதக் கோழைகளின், இழிந்த ஒரு வக்கிரமே இந்த முயற்சி. இதன் செயல்பாட்டை நிறுத்துவது அல்லது சமூக உண்மைகளை எழுதுபவர்களையே கொன்றுவிடுவது என்பது இன்றைய தேசியமாக வக்கரித்துக் கிடக்கின்றது. இந்த அடிப்படையில் புலி ஆதரவு, புலியெதிர்ப்புக்கு இடையில் எந்த வேறுபாடும் கொள்கையளவில் கூட கிடையாது. மக்களின் சமூக வாழ்வியலுக்கு எதிராக இயங்குவதில் இவர்கள் ஒன்றுபட்டு கைகோர்த்து நிற்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, புலி ஆதரவு இணையதளங்களும் சரி புலியெதிர்ப்பு இணையத்தளங்களும் சரி எமது இணையத் தளத்துக்கு இணைப்பு கொடுக்காமல் விடுவதில் கூட ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்களுக்காக பேசுவது, இவ்விரண்டு அரசியல் பிரிவினருக்கும் சகிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில் கொள்கை முரண்பாடு அற்றவர்கள் என்பதை நடைமுறையில் அவர்களின் எழுத்துகள், கூட்டுகள் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. இந்த வகையில் மக்களின் தனித்துவமான உண்மைகளை எமது இணையத்தளம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மக்களுக்கு எதிராக உலகெங்கும் இயங்கும் ஏகாதிபத்திய தலைவர்களின் பேட்டிகளையும், உலகத்தை அடக்கியாள நினைக்கும் மனித விரோத கயவர்களின் வக்கிரங்களையும் தேடியெடுத்து மொழிபெயர்த்து தமது இணைய பக்களை நிரப்பும் புலியெதிhப்பு இணையங்கள், எமது இணையத் தள கட்டுரைகள் எதையும் போடத் தயாரற்ற நிலையில் உள்ள அரசியல் வக்கிரத்தை நாம் காண்கின்றோம்;. சமரில் வெளிவந்த முஸ்லீம் மக்கள் பற்றிய கட்டுரை ஒன்றைப் போட்ட தேனீ இணைத்தளம், அதன் கீழ் நன்றியை ஷசமரசம்| (சமரில் பார்க்க முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும், அதற்கு எதிரான போராட்டமும்;) என்று போட்டனர். இதை நாம் ஆட்சேபித்து திருத்தக் கோரியபோதும், அதை அவர்கள் அலட்சியம் செய்தனர். இதே தேனீ இணையம் எமது இணைத்தளத்தை தமது இணைப்பில் போட்ட ஓரிரு நாளிலேயே, அவசரமாக நீக்கினர்.
மக்களுக்காக பேசுவது, அதை அறிமுகப்படுத்துவதும் ஆபத்தான ஒன்று என்பது அவர்களின் அரசியல் அகராதி மட்டுமின்றி, அவர்களின் ஆலோசர்களும் எடுத்துரைத்தன் விளைவே இது. இதில் அவர்களுக்கு இடையில் ஒரு கூட்டுமுள்ளது. மக்களுக்காக பேசாது, புலிக்கு எதிராக மட்டும் இயங்குவதே புலியெதிர்ப்பு அணியின் மக்கள்விரோத அரசியல். மறுபக்கத்தில் புலிகள் மக்களுக்காக பேசாது, புலி அல்லாத அணியை பற்றி மட்டும் பேசுவது அவர்களின் மக்கள் விரோத அரசியல். புலியெதிர்ப்பு அணியினர் புலிகளைப் பற்றி பேசுவதும், புலிகள் புலியெதிர்ப்பு அணியைப் பற்றி பேசுதுமே இன்றைய செய்திகளாகின்றது. இதுவே அவர்களின் உயாந்தபட்ச அரசியலாகி விடுகின்றது. இங்கு தூற்றுதல் முதல் உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் கலந்த செய்திகளை புனைகின்றனர். ஒருவர் மறைக்கும் விடையத்தை மற்றவர் கொண்டு வருவது இவர்களின் உயர்ந்தபட்ச நடவடிக்கையாக உள்ளது.
ஆனால் இவர்கள் விமர்சனத்தில் இருந்து தப்பிக் கொள்ள, தம்மை அரசியல் செயல்பாட்டில் இருந்த விலத்திக் காட்டும் இவர்கள், தாம் வெறுமனே செய்திகளை கொண்டு வருபவர்கள் என்ற காட்டமுனைகின்றனர். உண்மையில் செய்தியை ஒரு செய்தியாக கொண்டுவரும், அரசியல் உள்நோக்கமற்ற வகையில் இவர்கள் இயங்குகின்றனரா! அதாவது செய்தியை தமது சொந்தக் கருத்தின்றி செய்தியாக மட்டும் கொண்டு வருகின்றனவா என்றால் இல்லை. செய்திகளை தேர்ந்தெடுத்தல் என்பதைக் கூட, ஒருவிதமான காழ்ப்புடன், வெறுப்பை உருவாக்கும் வகையில் தம்மை வெளிப்படுத்துகின்றன. இன்று செய்தியை செய்தியாக மட்டும், உண்மையை அடிப்படையாக கொண்ட வருவது கூட பாசிச கட்டமைப்பில் முக்கியமானதது தான். ஆனால் புலி அல்லாத செய்திகள் எதுவும், இதனடிப்படையில் செயல்படவில்லை. மாறாக அவை தமக்கு தாமே ஒரு களங்கம் எற்படும் வகையில், தம்மைத்தாம் கறைப்படுத்திக் கொண்டு புலிகளைப் போல் போட்டிச் செய்தியை வெளியிடுகின்றன. புலிகள் ஒரு பக்கத்தை எப்படி மறைக்கின்றனரோ, அதையே புலி அல்லாத செய்திகளும் செய்கின்றன. செய்தியை செய்தியாக கொண்டு வரும் பத்திரிகை உள்ளடகத்தைக் கூட, நாம் தமிழ் பரப்பில் காணமுடியாது. கறைகளால் தம்மை பூசிக் கொண்டபடி, தாம் வெறும் செய்திகள் கொண்டு வருவதாக கூறுவதில் என்னதான் அர்த்தமுண்டு.
உண்மையில் மக்களைப்பற்றி, மக்களின் வாழ்வியல் பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை. மக்களின் தேசியம் பற்றி பேசுவதில்லை. ஏகாதிபத்தியம் உலகமயமாதல் போன்றன, உலகளவில் மக்களுக்கு எதிராக இயங்குவதை (இதில் தமிழ் மக்களும் உள்ளடங்கும்), இரண்டு பகுதியும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் கால் தூசுக்கு ஏங்கி தவிக்கும் இவர்கள், மக்களை எதிரியாக கருதியே அவர்களின் வாழ்வியல் அவலத்தை மூடிமறைத்து நிற்கின்றனர்.
இது இணையம் முதல் ஊடகவியல் எங்கும் ஒரேவிதமாகவே உள்ளது. ஒரு மனிதன் தனது கருத்தை, எழுத்தை, பேச்சுச் சுதந்திரத்தை மக்கள் நலனில் இருந்து பயன்படுத்தும் உரிiமையை மறுப்பதே, புலியெதிர்ப்பு, புலியாதரவு அணிகளின் அன்றாட அரசியலாகும். இதையே அவர்களின் எழுத்துகள், நடைமுறைகள் முதல் அவர்களின் திட்டமிட்ட புறக்கணிப்புகள் வரை, தெளிவாக உழைத்து வாழும் மனித இனத்துக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஏகாதிபத்திய கைக்ககூலிகளாக செயல்படத் தயாராக இருக்கும் எல்லைக்குள் இருந்தபடிதான், இரண்டு பிரிவினரும் மக்கள் விரோத அரசியலை முன்வைக்கின்றனர். இந்த உண்மையை புரிந்து கொள்வது, புரிந்துகொள்ள முனைவது சமூக அக்கறை உள்ளவர்கள் ஒவ்வொருவரினதும் சமூகக் கடமையாகும். இவற்றை புரிந்து கொள்ளாமல் மக்களுக்காக ஒரு நாளுமே போராடமுடியாது.


0.36 22.6.2005
 
சக மனிதனின் கழுத்தை அறுப்பதே, தமிழ் தேசிய உணர்வாக மாற்றப்பட்டுள்ளது.



பி.இராயகரன்
21.06.2005



இதுவே புலிகளின் மைய அரசியல் நடைமுறை. புலிகளின் தமிழ் தேசியம் என்பது மற்றவனின் கழுத்தை வெட்டும் போராட்டமாகியுள்ளது. மற்றவனை கொன்று போடும் எல்லைக்குள் தான், அதன் அரசியல் உணர்வு காணப்படுகின்றது. இதனால் ஏற்படும் சமூக சிதைவை பூசிமெழுகவே பட்டங்களை வாரி வழங்குகின்றனர். துரோகி என்றும் தியாகி என்றும் இரு அடைமொழிக்குள் அனைத்து சமூக நடைமுறைகளையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி சதிராட்டம் போடுகின்றனர். தமது சொந்த வர்க்க நலனுக்கு இசைவாக மனிதவினத்தை பிளந்து அடையாளம் காண்பதன் மூலம், சமூகத்தையே துப்பாக்கி முனையில் அன்றாடம் பலியிடுகின்றனர். மாமனிதர், தேசப்பற்றாளர் என்று போற்றும் விருதுகள் மூலம் ஒரு பகுதி குறுந்தேசியத்தின் பெயரில் பலியிடப்படுகின்றது. அதேபோல் துரோகி, சமூக விரோதி, பொம்புளைப் பொறுக்கி என்று தூற்றுவதன் மூலம் பலரின் கழுத்தறுக்கப்படுகின்றது. இவை அனைத்தும் மக்களின் உழைப்பு உருவாக்கும் செல்வத்தை சூறையாடுவதை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மக்களிடம் இருந்து அவர்களின் உழைப்பை பிடுங்கியெடுப்பதே, தமிழ் தேசியமாக வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதுவே தணியாத தாகம் என்ற அரசியல் உள்ளடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் எங்கும் காட்டுமிராண்டிதனமான கொலைக்கலாச்சாரத்தின் மூலம் மனித உழைப்பை சூறையாடும் வக்கிரம். இதற்கு வெளியில் எந்த நடைமுறையும் புலிகளிடம் கிடையாது. இதற்கு வெளியில் தமிழ் தேசியம் தனது தணியாத தாகமாக எதையும் மக்களுக்கு கூற முற்படவில்லை. இதுவே தமிழ் தேசியமாக காட்டப்படுகின்றது. இதுவே தமிழ் தேசியத்தின் தலைவிதியாகியுள்ளது.
இன்று தொடரும் கொலைகளும், வாரிவழங்கும் பட்டங்களும் கூட புலிகளின் குறிப்பான அன்றாட நடத்தையாகியுள்ளது. இந்த நிலையில், இது பற்றி பல கட்டுரைகளில் எனது கருத்துகளை குறிப்பாக முன்வைத்துள்ளேன். இருந்த போதும் இதற்கான தனியான சமூக அடிப்படைகளை ஆராய்ந்து எழுதப்படவில்லை.
இன்று எமது சமூக அடிப்படையின் அனைத்து விதமான சமூக பண்புகளும், நடைமுறைகளும் பயங்கரவாதமாக மாறியுள்ளது. இவற்றை வெறும் புலிகள் தொடர்பான விடையமாக மட்டும் நாம் காணவில்லை. சாதாரண மக்களின் நடைமுறைகளில் கூட, இதுவே பொதுப்பண்பாகி, அதுவே நடைமுறை இயக்கமாகி வருகின்றது. சமூகமே ஒரு பாசிச (இங்கு பாசிசம் தொடர்பான எமது கருத்து, புலிகளின் ஜனநாயக மறுப்பை அடிப்படையாக கொண்டு கூறவில்லை. இது தொடர்பாக விரிவாக மற்றொரு கட்டுரையை இணையத்தில் விரைவில் காணமுடியும்.) உள்ளடக்கத்தில் வக்கரிக்கத் தொடங்கியுள்ளது. மற்றவனின் கழுத்தை வெட்டினால் குதூகலிக்கும் சமூக மனப்பாங்கு, சமூகத்தின் ஆதிக்க மொழியாகவும், பண்பாட்டுக் கூறாகவும் மாறிவிட்டது. இதுவே வக்கிரமாகி, தமிழரின் புனிதமான வணக்கத்துக்குரிய பண்பாடாக காட்டப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு உயிர் கொல்லப்படாவிட்டால், அரசியல் புத்துணர்ச்சியை இழந்துவிட்ட தேசிய மனப்பாங்கே, சமூகத்தின் இரத்த ஓட்டமாகி உளவியல் பாதிப்புக்குள்ளாகி; வெறிகொண்டு அலையும், தேசிய மனிதர்களைக் கொண்ட ஒரு சமூகத்தை நாம் காண்கின்றோம்.
பெண்களை பற்றி ஆணாதிக்க உள்ளடகத்தில் எப்படி தனிப்பட்ட கொசிப்புடன், வக்கிரமான உணர்வு சார்ந்த பாலியல் நுகர்வின் உள்ளடகத்தில் அன்றாடம் எப்படி தமிழ் மொழி புணரப்படுகின்றரோ, அதேயொத்த உணர்வுடன் தான் கொலைகளை இரசிக்கும் மனப்பாங்கும் இயல்பு வாழ்க்கையில் புகுந்துள்ளது. கொலைகளை மட்டுமல்ல, கொலைகாரனின் வக்கிரமான கொலைச் செயல்களைக் கூட ரசிக்கும் ரசிகர் கூட்டமாக தமிழ் இனம் மாறிவிட்டது. இது ஒரு நேர உணவு போல, கொலைகளை இரசிக்கும் மனப்பாங்கு ஒரு பொழுதுபோக்கு செய்தியாக மாறியுள்ளதுடன், இதை நியாயப்படுத்தும் தன்னிலை சுயவிளக்கத்தையும் கூட தமது சொந்த கற்பனை வளத்துக்கு ஏற்ப வழங்குகின்றனர். இது சிறந்த தமிழ்தேசிய செய்தியாகி, அவர்களே தமிழ் ஊடகவியலாளராகிவிடுகின்றனர். தமிழ் ஊடகவியலின் பிழைப்புத்தனத்தில் இருந்து இதை மறுபடியும் பெற்றுக் கொள்ளுமளவுக்கு சமூகம் பாசீச வழிகளில் வழிகாட்டப்படுகின்றது. இந்த வரையறை என்பது புலிகளால் நடத்தப்படும் அனாமதேய சில இணையங்களை அடிப்படையாக கொண்டே, தமிழ் ஊடகவியல் தமது கருத்துகளை வளைத்து நெளித்து அதையே வக்கிரமாக மெருகூட்டுகின்றனர்.
தொடரும் சமூகப் படுகொலைகள் முதல் அனைத்து விதமான மனிதவிரோத செயல்களையும் ஊடகவியல் ஆதரித்து, கட்டுரைகளையும், பொழிப்புரைகளையும் வழங்குகின்றனர். இதை ஒரு சமூகத்தின் உளவியல் வக்கிரமாக மாற்றி, அதில் தமது பாசிசக் கோட்பாட்டை கொண்டு தமிழ் மக்களின் அடிமைத்தனத்தையே நிலைநிறுத்துகின்றனர்.
இந்த நிலையில், நாம் தொடரும் தொடர் படுகொலைகளை எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்க முடியாத நிலையில், அதை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகின்றோம்;. இன்று இந்தக் கொலைக் கலாச்சாரத்தில் கருணா தரப்பு மற்றொரு கொலைகார கும்பலுக்கு எதிராக ஈடுபட்டாலும் கூட, நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த கொலைகள் தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லும் செய்திகள் தான் என்ன? இதுவே மிக அடிப்படையான கேள்வி. இது அனைத்துவிதமான படுபிற்போக்கு பாசிசத்தை தெளிவாக அம்பலப்படுத்தி விடுகின்றது. தமிழனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும், புலிகள் பற்றி அவர்கள் கொண்டுள்ள சொந்த அச்சமே, இதை விளக்கப் போதுமானது.
புலிகள் போன்ற பரிPச இயக்கங்கள் படுகொலைகளின் மூலம் உயிர்வாழ நினைக்கையில், இதற்கு மாற்றாக அதே பாதைகளை மீள கையாள்வது யாராக இருந்தாலும் மற்றொரு பாசிசத்தின் உள்ளடக்கத்தையே கொண்டதாக பரிணமிக்கும். உண்மையில் இந்தப் படுகொலைகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் பெயரில், சொந்த தமிழ் மக்கள் மீதுதான் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றது என்ற உண்மையை எப்படித் தான் நாம் புரிந்துகொள்வது. தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்க வெளிப்பட்டதன் விளைவாக, அதை மூடிமறைக்கவே இந்த தொடர் கொலைகள் அவசியமாகின்றது.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெயரில் உதிரியாக, லும்பன்களாக ஆயுதம் ஏந்தத் தொடங்கிய காலம் முதலே, மாற்றுக் கருத்துகளை எதிர்கொண்டு அணுகியவிதமே அனைத்துக்குமான அடிப்படைச் சித்தாந்தமாக இன்றுவரை இருந்துள்ளது. ஆயுதம் ஏந்தாத ஒரு எதிரியைக் கூட, படுகொலைகள் மூலம் கொன்று முடக்கும் கோட்பாடே தமிழ் தேசிய சித்தாந்தமாகியது. தன்னைத் தவிர அனைத்தையும் இந்த எல்லைக்குள் வைத்தே மதிப்பிடுகின்றது. தன்னைச் சுற்றி எந்தவிதமான மாற்று அபிப்பிராயமும் உதிக்காத ஒரு பரிPச சூழலில் தான், எமது தேசியம் என்று ஒன்று புணரப்பட்டு பெத்துப் போடப்பட்டது.
சமூகத்தில் காணப்பட்ட மாற்றுக் கருத்துக்களை எதிர்கொண்ட விதமே ஆரம்பம் முதலே வன்முறை சார்ந்ததாகவும், படுகொலை அரசியலாகவும் இருந்தது. தமிழரசு கட்சியும் அடுத்து தமிழர் ஐக்கிய முன்னணியும் பின்னால் தமிழர் விடுதலைக் கூட்டணியும் யாரையெல்லாம் எதிரியாக மேடைகளில் காட்டி முழங்கினரோ, அவர்கள் தாக்கப்பட்டனர், கொல்லபப்பட்டனர். இதற்கு சிறப்பான ஒரு உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்;. 1974.10.06 அன்று கைலாசபதியின் வீட்டுக்கு குண்டு வீசிய சம்பவம் சரி, அன்று வி.பி.பொன்னம்பலம் வீட்டுக்கு குண்டு வீசிய சம்பவம் அனைத்திலும் தமிழரசுக் கட்சியே இதற்கு ஆட்காட்டியாக செயல்பட்டது. தமிழரசுக் கட்சியின் கைக்கூலிகளாக செயல்பட்ட வெடிகுண்டு கதாநாயகர்கள், தமிழரசு கட்சி யாரை எதிர்த்தனரோ அவர்களை குண்டுகள் மூலம் கொன்றுவிடவே குண்டுகளை வீசினர். கைலாசபதி செய்தது என்ன? தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைவதை ஆதரித்தது உட்பட, அதன் முதலாவது பீடாதிபதியாக பதவியேற்றதால் தான் இந்த குண்டு வீச்சு. இதற்காகத் தான் வி.பி;.பொன்னம்பலம் வீட்டுக்கும் குண்டு வீசப்பட்டது. இவர்களும் இவர்களின் வாரிசுகளுமே இன்றைய தமிழ் தேசியவாதிகளாகவும் புனிதர்களாகவும் உள்ளனர். இன்றைய புலிப் பாசிசத்தின் உள்ளடக்கமே இங்கிருந்துதான் உற்பத்தியானது.
அரசு உதவி பெற்று இயங்கிய பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டு (இந்த தேசிய மயமாதலில் கூட தனியார் பாடசாலைகளை அவர்கள் விரும்பினால் சுயமாக நடத்தலாம் என்ற தனிச்சொத்துரிமை உறுதி மொழியை மீறாமல் தேசியமயமாக்கப்பட்டது) உருவான மொழிக்கல்வியை ஆரம்ப முதலே எதிர்த்து வந்த தமிழரசுக்கட்சி, தமிழ் பல்கலைக்கழகம் என்பதை அடியோடு வெறுத்தது. தமிழரசுக்கட்சி ஆரம்ப முதலே ஆங்கிலக் கல்வியையே கோரிவந்தது. இந்த நிலையில், தமிழ் மொழி பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த போராடியவர்களை துரோகியாக காட்டியே, குண்டு வீச்சை நடத்தியது. இவற்றை எதிர்கொள்ளவே தமிழரசுக் கட்சி பினாமி அமைப்புகளை உருவாக்கியது. இதைத்தான் புலிகள் இன்று அப்படியே செய்கின்றனர். அன்று அரசியல் ரீதியாக சமூக முரண்பாடுகளை எதிர்கொள்ள வக்கற்ற கூட்டணி, படுகொலைகளை ஊக்குவித்த அரசியல் தான் பின்னால் அவர்களுக்கே எமனாக்கியது. ஏன் பலரும் முரண்பாடு இன்றி காலம்காலமாக போற்றும் சிவகுமாரன் பலர் மீது குண்டுவீசி கதாநாயகனாகிய நிலையில், அவன் தங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடக் கூடாது என்பதற்காகவே, செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் ஒன்று சேர்ந்து சிவகுமாரன் வீடு சென்று அவனை உற்சாகப்படுத்தினர். இதன் மூலம் சிவகுமாரன் செய்து வந்த தனிநபர் படுகொலை முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆசியை வழங்கியவர்கள் இந்த தமிரசுக்கட்சியினர் தான். இப்படி தான் தனிமனித படுகொலை அரசியல் தமிழ் தேசியமாக ஊக்குவிக்கப்பட்டது.
மாற்றுக் கருத்தை அளந்த அளவுகோல் எப்போதும், தமது சொந்த வக்கற்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிகளில் இருந்து வெம்பிப்பிதுங்கியே வெளிவந்தது. தமது சொந்த வர்க்க நலன்களை தக்கவைக்க, எதிரணியின் கருத்துகளை எதிர்கொள்ள வக்கற்று, வன்முறைக்கு வழிகாட்டினர். தம்மைத்தாம் அகிம்சைவாதிகளாக காட்டி நின்ற கூட்டணியினர் தான், இந்த தனிமனித படுகொலை அரசியலுக்கு வழிகாட்டிய சூத்திரவாதிகள். கூட்டணியின் அரசியல் அதிகாரம் தமிழ் மக்களின் மேல் நிலவிய காலகட்டத்தில், கொலைக் கலாச்சாரத்தை ஆதரிக்கும் போக்கு உச்சத்தை எட்டியது. படுகொலைகளை வரவேற்கும் முறைமை, தமிழ் மக்களின் தேசிய பண்பாடாக உயர்த்தப்பட்டு வரவேற்கப்பட்டது. இதை கூட்டணி தனது சொந்த அரசியல் கடமையாக செய்து முடித்தது.
இதை விளக்கும் சிறப்பான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்;. சிவகுமார் இறந்த நினைவு தினத்தை இன்றுவரை பெருமையாக பீற்றும் அனைத்துதரப்பு அரசியல் தான் என்ன? இந்த படுகொலை அரசியலை ஆதரிப்பதில், புலி ஆதரவு புலியெதிர்ப்பு பிரிவுகள் என அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இங்கும்; வன்முறைகளை எதிர்ப்பதாகவும், அனைத்து படுகொலைகளை எதிர்ப்பதாகவும் கூறும் அனைவரும் விதிவிலக்கின்றி இதற்குள் அடங்குவர். சிவகுமாரனை தமிழ் மக்களின் கதாநாயகனாக்கியது எது? நிச்சயமாக வன்முறைகளும், அரசியல் படுகொலை முயற்சிகளுமே. இதுவே அவனின் அரசியல்;. தனிமனிதனாக, லும்பனாக குண்டுகளுடன் அலைந்துதிரி;ந்து வேட்டையாடிய அரசியலைத்தான், இன்றுவரை புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்கின்றார். பிரபாகரனின் படுகொலை அரசியலை எதிர்ப்பதாக கூறும் ஆனந்தசங்கரி முதல் ரி.பி.சி வானொலி வரை, பலரும் சிவகுமாரன் விடயத்தில் அவனை புனிதராக காட்டி ஆதரித்து இன்று போற்றுகின்றனர். சிவகுமாரன் அரசியலானது புலி அரசியல் தான் என்பதை யாரும் விமர்சிப்பதில்லை. இதைத்தான் உமாமகேஸ்வரன் முதல் டக்கிளஸ் தேவானந்தா வரை கையாளுகின்றனர். இவற்றில் சில முரண்பாடுகள் இருந்த போதும், கோட்பாட்டு ரீதியில் புலிப்பாசிசத்தின் அனைத்துக் கூறுகளையும் தம்மகத்தே கொண்டுள்ளனர். இங்கு தான் தமிழ் பாசிசத்தின் அனைத்து விதமான ஆதரவு அடிப்படைகளையும் நாம் இனம் காண்கின்றோம். புலிகள் இன்றுவரை பாசிச கட்டமைப்பை தொடர்ந்தும் வெற்றிகரமாக பேண முடிகின்றது என்றால், அதை எதிர்ப்பதாக கூறும் பலரும் கொண்டுள்ள பாசிச அரசியல் கட்டமைப்பு தான் முக்கிய காரணமாகும்;. பாசிசத்தின் சமூகக் கூறுகளை களைவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. மாறாக அவற்றை ஆதரிக்கின்றனர். ஏன் வன்முறையை எதிர்ப்பதாக கூறும் ரி.பி.சி, அண்மையில் சிறிசபாரத்தினத்தின் நினைவு தினத்தை புலிக்கு எதிரான கோட்பாட்டு; அடிப்படையில் முன்னிலைப்படுத்திய போது, சிறிசபாரத்தினம் தலைமை தாங்கி நடத்திய படுகொலை அரசியலையே ஆதரித்து நிற்கின்றனர். இங்கு இவர்களின் அரசியல் குட்டை ஒன்றாகவே உள்ளது. யார் அதில் படுத்து புரள்வது என்பதில் தான் பாசிசப் பன்றிகளுக்கு இடையில் மோதல் நடக்கின்றது. தனிநபர் படுகொலைகளை, தமிழ் தேசிய அரசியலில் மாற்றுக் கருத்தை மறுத்தே எழுந்தது. இந்த உள்ளடக்கமே அனைத்து தமிழ் கதாநாயகர்களின் முகத்தில் செதுக்கப்பட்டு இருந்தது.
தமிழர்விடுதலைக் கூட்டணிக்கும் புலிக்கும் இடையில் இருந்த நெருக்கமாக இருந்த அரசியல் வழி உறவும், வழிகாட்டலும், அனைத்து விதமான ஜனநாயக போக்குகளையும் தகர்ப்பதை அடிப்படையாக கொண்டிருந்தது. 1977 நவம்பர் மாதம் ஏழு விடுதலைப்புலி உறுப்பினருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மூளாயில் வைத்து இதனடிப்படையில் தான் பேச்சுவார்த்தையை நடத்தினர். இது யாரைக் கொல்ல வேண்டும் என்பதையும், தமக்கு கீழ் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டே நடத்தப்பட்டது. இதனடிப்படையில் தான் கூட்டணி, சில அடியாட் குழுக்களை வளர்த்தெடுத்த அதேநேரம், சிலவற்றை எட்டி மிதித்தனர்.
மாற்றுக் கருத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொள்ள முடியாத எல்லா நிலையிலும், மற்றைய தரப்பு மீது வன்முறைகளை கூட்டணி அடியாட்குழுக்கள் மூலம் ஏவிவிட்டது. அரசியல் ரீதியாக தமது சொந்த தேசிய கருத்துகளை நேர்மையாக வைப்பதற்கு முடியாத போது, தமிழ் மக்களை ஏமாற்றி மோசடி செய்த போது, இதற்கு எதிரான அனைத்து ஜனநாயக குரலகளும் கழுத்தோடு வெட்டப்பட்டது. உண்மையில் மாற்றுக் கருத்தை ஒடுக்குவதற்கே அடியாற் குழுக்கள் திட்டமிட்டு கூட்டணியால் தீனியிட்டு வளர்க்கப்பட்டது. முதலில் உதிரி நபர்களையும், உதிரிக் குழுக்களையும், புலிகளையும், பின்னர் அமிர்தலிங்கம் தனது மகனின் தலைமையில் தமிழ் தேசிய இராணுவம் (ரெனாவையும்) உருவாக்கினர். இக் குழுக்கள் சில சிதைய, சிலர் இறக்க, சிலர் நீடித்தனர். இதனடிப்படையில் புலிகள் கூட்டணியின் நம்பிக்கையான அடியாற் படையாகவே வளர்ந்தது. பிரபாகரன் அமிர்தலிங்கம் உறவு மிக நெருக்கமானதாகவும் நீண்டதாகவும் இருந்தது. ஆனாலும் கூட கூட்டணி வளர்த்தெடுத்த தனது சொந்த பாசிச கட்டமைப்புக்கு, தன்னையே பலியிட வேண்டிய நிலையில் கூட்டணி அரசியல் ஸ்தம்பிதமாகியது. பிரபாகரனின் புலிகள் இயக்கமே அமர்தலிங்கத்தை கொல்லும் அளவுக்கு நிலைமை மாறிச்சென்றது. கூட்டணி எந்த அரசியல் பதங்கள் மூலம் முத்திரை குத்தி மாற்றுக் கருத்தகளை கொல்ல துணை நின்றதோ, அதையே புலிகள் பாவித்து கூட்டணியை கொன்றனர். கூட்டணியின் பாசிச சித்தாந்தத்தையே பயன்படுத்தி, இன்று வரை புலிகள் தமது சொந்த பாசிச அதிகாரத்தை தக்கவைக்கின்றனர். மாற்றுக் கருத்தையே துரோகம் என்பதும், அதை முன்வைப்பவன் கொல்லப்பட வேண்டியவனாக காட்டி நடத்தும் பாசிசம், ஆயிரக்கணக்கான உயிர்களை பலி எடுத்தது. பலி எடுத்து வருகின்றது.
இப்படியான படுகொலை அரசியல், துரோகி என்ற அடை மொழிகளால் தூற்றி தொடங்கியது. எமது தேசிய விடுதலைப் போராட்டம் இதைத் தாண்டி இன்றுவரை முன்னேறிவிடவில்லை. மாற்றுக் கருத்தை, மாற்று அரசியலை வன்மையாகவே தூசித்து மிரட்டு வன்முறை மூலம் உருவான தேசியம், வரலாற்று தலைமைகளைக் கடந்தும் நீடிக்கின்றது.
வன்முறை சார்ந்த அரசியல் வக்கிரம் மேன்மை பெற்றபோது, பாராளுமன்ற அரசியல் முடிவுக்கு வந்தது. பாராளுமன்றவாதிகளின் ஆசியுடன் இயங்கிய வன்முறை சார்ந்த உதிரி நபர்களே, படிப்படியாக வன்முறை சார்ந்த கதாநாயகர்களாக மாறினர். இவர்களை முதன்மைப்படுத்தி சமூக கண்ணோட்டம், மற்றவற்றை துரோகமாக காணும் போக்கு வளர்ச்சியுற்றது. பாசிசமே சமூகத்தின் உயிரோட்டமான தேசிய இயக்கமாகியது. மற்றவரை தூஷிக்கும் அரசியலே தேசிய அரசியலாக மாற்றப்பட்டது. எளிமைப்படுத்தப்பட்ட வகையில் மாற்றுக் கருத்தை துரோகமாக காட்டு படிமங்கள், சமூக முரண்பாட்டை மறுதலித்தது. சமூகத்தை ஒற்றைப் பரிணாமத்தில் காணும் போக்கு, படுகொலைகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றது.
வன்முறை சார்ந்த தனிமனித அரசியல் கொலைகளை ஆதரிக்கும் மனப்பாங்கு, படிப்படியாக பாராளுமன்ற அரசியலின் முடிவை பறைசாற்றியது. இது துரிதமாகவே அரசின் படைக்கு எதிரான உதிரித் தாக்குதலை நடத்துவதை நிபந்தனையாக்கியது. தமிழ் தேசிய பாராளுமன்ற அரசியல் மற்றவனை கொல்வதை அடிப்படையாக கொண்டு தூற்றி, தனது அடியாள் படை மூலம் கொன்றனர். ஒரு சமூகத்தின் மீதே புரையோடிப் போன மிரட்டலை கட்டமைத்தனர். இந்த பாராளுமன்ற அரசியலிலும், அதற்கு துணை நின்ற அடியாட்;படைக்கும் இடையில் நிலவிய சமநிலைத் தன்மை இடம்மாறிய போது, அடியாற் படைகள் அரசியல் அதிகாரத்துக்கு வந்தனர். இங்கு இயல்பாகவே அடியாற் கும்பலிடையேயான முரண்பாடு ஒருங்கே உருவானது. இந்தப் போட்டி இயல்பாகவே யார் மாற்றுக் கருத்தை அதிகம் சொல்ல முடிகின்றதோ, அவனே தமிழ் மக்களின் பாசிச சிந்தனை ஓட்டத்துக்கு தலைமை தாங்கும் சக்தியாக மாறினான். இங்கு இதனுடன் அரசு படைகளுக்கு எதிரான சமூகத்துக்கு வெளியில் உதிரியான தாக்குதலும் இணைந்து கொண்டது. ஈவிரக்கமற்ற வகையில் அதிகம் கொலை செய்ய தயாரானவன் வீரனாக, தேசிய கதாநாயகனாக சமூகத்தின் முன் கொண்டு வரப்பட்டனர்.
இந்த மாற்றம் படிப்படியான மாற்றமாக இருந்தது. அதிகம் கொலை செய்தவர்கள், அதிகம் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள், அதிகம் சிறை சென்றவர்கள் சமூகத்தின் கதாநாயகனாக சமூக பாசிசம் தலையில் தூக்கிவைத்தது. இந்த கதாநாயக அரசியல் சமூகத்துக்கு எதை பெற்றுத் தரப்போகின்றது என்பதை கேட்பது சமூக துரோகமாக காட்டப்பட்டது. மறுபக்கத்தில் சமூகத்துடன் தொடர்பற்ற நூற்றுக்கணக்கான நபர்கள், சமூகத்தின் முன் கொண்டு வரப்பட்டனர். தனிமனிதர்களால் சமூகத்தை மாற்றிவிட முடியும் என்ற வீரப்பிரதாபங்களை முன்வைத்து, ஒரு சமூகமே பாசிச வெறிபிடித்து கூச்சலிட்டது.
தனிமனித புகழ், தனிமனித வக்கிரம், சமூக முரண்பாடுகள் இந்தக் கதாநாயகர்களுக்கு இடையில் தனிமனித முரண்பாடுகளை அக்கம் பக்கமாகவே உருவாக்கி கொண்டது. ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் மனப்பாங்கு முதன்மை பெற்றது. தேசியம் என்ற பெயரில் குழுவாத சதி வேலைகள் தவிர்க்க முடியாத போது ஒன்றுபட்ட செயல்களை செய்தபடி, மறுபக்கத்தில் ஒருவர் காலை மற்றவர் இழுத்துவிடும் சதி கதாநாயக பாசிச அரசியலில் இணைபிரியாத அங்கமாகியது. துரோகியை வெளியில் மட்டுமல்ல, உள்ளேயும் என்ற கோட்பாட்டுக்கு இணங்க, ஒரு இரகசிய சதி வலையே அனைத்துக்குமான அமைப்பு வடிவமாகியதுடன், அதுவே தேசியமாகியது.
இதனால் தனிமனித ஒழுக்கங்களை முதன்மைப்படுத்தி, அதனடிப்படையில் கூட தம்மைத்தாம் புனிதர்களாக காட்டமுனைந்தனர். மற்றவனை தனிமனித ஒழுக்கமற்றவனாக காட்ட எப்போதும் முனைந்தனர். தனிமனித ஒழுக்கத்தின் பெயரில் கண்காணிப்பு உசுப்பிவிடப்பட்டது. பாசிசத்தின் இந்த ஒழுக்க அரசியலால் தன்னை மூடிமறைத்தபடி, ஒழுக்கத்தின் பெயரில் தன்னைத்தான் தகவமைதத்து. இதை மீறுபவர்களையும், மாற்றுக் கருத்தையும் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பதுடன், அவர்களை அழித்தொழிக்கின்றது. கதாநாயகர்களாகிய உதிரி நபர்கள், தனிமனிதன் சார்ந்து கட்டமைத்த தனிப்பட்ட சித்தாந்தங்கள், நம்பிக்கைகளையே சமூகம் கைக்கொள்ள வேண்டும் என்பதையே, தமிழ் தேசிய உள்ளடக்கமாக கருதும் மனப்பாங்கு திணிக்கப்பட்டது. இதை மீறுவது தேசிய குற்றமாக புனையப்பட்டது. ஆயுதம் மூலம் அதிகாரத்தை பெற்ற இந்த தனிநபர்கள், இதை சமூக ஒழுக்கமாக காட்டி புணரப்பட்டு ஆயுத முனையில் திணிக்கப்படுகின்றது.
அதேநேரம் உதிரியான நபர்களின் தனிப்பட்ட முரண்பாடுகளும், சமூக பிளவுகளின் வெளிப்பாட்டாலும் ஆயுதம் ஏந்திய பல லும்பன் குழுக்கள் உருவானது. இப்படி 1983, 1984 களில் பல பத்து குழுக்கள் உருவானது. வன்முறை சார்ந்த கதாநாயக மனப்பாங்குடைய ஒவ்வொருவரும், ஒரு குழுவை தோற்றுவிக்கும் தகுதியை சமூக பாசிசம் உந்தித்தள்ளியது. இதில் ஒருசில விதிவிலக்குகள் இருந்தபோதும், மாற்றுக் கருத்தை துரோகமாக கருதும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டே பல குழுக்கள் உருவாகியது. இது விதிவிலக்கின்றி மற்றைய குழுக்களை எல்லாம் எதிரியாகவும், துரோகியாகவும் கருதியது. இப்படித் தான் எமது தேசியம் கற்பிக்கப்பட்டு புணரப்பட்டது. சமூக பாசிசம் படிமுறையாக மேலெழுந்து, இயக்க பாசிசமாக தகவமைந்தது. அதுவே தற்போது தேசியமாக ஆட்டம் போடுவதுடன், மேல் இருந்து கீழாக சமூகத்தினுள் இறங்குகின்றது. இதுவே இன்றைய சமூக கோட்பாடாகியது.
அதேநேரம் சமூகத்தின் போக்கில் இயல்பாக இருந்த பாசீசக் கூறுகளின் மொத்த உள்ளடகத்தையும், அப்படியே இயக்கங்கள் தனது மையக் கோசமாக்கிக் கொண்டது. புலிகளோ சமூக பாசீசத்தின் சில கூறுகளை முதன்மைப்படுத்தி, அதை கொண்டே அதிகாரத்துக்கு வந்தனர். சமூகத்தின் இயக்கமே இந்த பாசீசக் கோட்பாட்டின் உள்ளடகத்தில் செழிப்புற்றது. துரோகம் பற்றிய வரையறையும், அது சார்ந்த கொலைக் கலாச்சாரமும், அரசு படைகள் மேலான தாக்குதலும் கதாநாயகர்களின் தோற்றத்தையும் அரசியல் தலைமைத்துவத்தையும் மாற்றியமைத்தது. அதிக கொலைகளே சமூகத்தில் மதிப்புக்குரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது.
இந்த விதிக்கு யாரும் விதிவிலக்கல்ல. பல கொலைகார கதாநாயகர்களின் கதியே, அவர்கள் கட்டமைத்த சொந்த பாசீச விதிக்குள்ளேயே அவர்களையே கொன்று நியாயப்படுத்துவதை தடுத்துவிடவில்லை. நாளை பிரபாகரனுக்கு கூட இந்த விதிகள் பொருத்தமான ஒரு தெரிவை வழங்கிவிடலாம்;. பாசிசத்தின் உள்ளடக்கம் இயக்கங்களின் கண்டுபிடிப்பல்ல. அது யாழ் சமூக உள்ளடகத்தில் புரையோடிக் காணப்படுகின்றது. அதன் செறிவான ஒரு வடிவத்தை உள்ளடக்கிய ஒரு அதிகார வடிவமே இயக்கங்களாகவும், அதை நியாயப்படுத்தும் கோட்பாடாக தமிழ் தேசியமும் வெளிப்பட்டது. உண்மையில் பாசிசத்துக்கு எதிராக சமூகத்தில் இயங்கிய மற்றைய முற்போக்கு கூறுகள் இனம் காணப்பட்டு அழிக்கப்பட்டது.
வரலாற்றை நாம் திரும்பி பார்த்தால், எமக்கு பல ஆச்சரியங்களே எம் முன் விரிந்து கிடக்கின்றது. ஒரு காலத்தில் போற்றப்பட்ட பலவும், இன்று மிக இழிந்த சமூகப் பாத்திரத்தை வழங்குவதை இனம் காணமுடியும்;. hவவி:ஃஃறறற.niவாயசளயயெஅ.உழஅஃ?pயபநஸ்ரீpயிநசள என்ற புலிகளின் இணையத்தில், புலிகளின் பழைய பத்திரிகைகளின் தொகுப்பு உள்ளது. இதில் உள்ள பல விடையங்களை யாரும் ஒரு கருத்தாக எடுத்துக் காட்டினால், அல்லது தனது கருத்தாக சொன்னாலே அவை துரோகத்துக்குரியதாகும்;. 1985ம் ஆண்டு விடுதலைப்புலிகள் பத்திரிகையில் (சித்திரை இதழ் - இலக்கம் 6 இல்) பிரபாகரன் கூறியது போல் ஷஷநாம் விரும்புவது உண்மையான நிரந்தரமான ஒருமைப்பாட்டையே, இந்த ஒற்றுமையானது புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத் தலைமையை கட்டி எழுப்பும் இலக்கைக் கொண்டதாக இருக்க வேண்டும்|| என்றார் பிரபாகரன். இதை யார் இன்று முன்வைத்தாலும் அதே இணையத்தளம் அவரை தமிழ் தேசத் துரோகியாகவும் பொம்பிளைப் பொறுக்கியாகவும் காட்டும். ஏன் இதை இன்று பிரபாகரனே சொல்ல முடியாது. இப்படி பல.
தமிழர் விடுதலைக் கூட்டணியும், அதற்கு முந்திய தமிழரசுக் கட்சியும் எமது சமூகத்தை பாசிச கட்டமைப்பு சார்ந்து தகவமைத்ததை நாம் நிராகரித்துவிட முடியாது. இன்றைய புலிகளின் படுகொலை கலாச்சாரம் சார்ந்த அரசியலின், பாராளுமன்ற அகிம்சைவாதிகளின் அரசியல் வழிகாட்டலில் இருந்தே பெற்றெடுக்கப்பட்டது. தந்தை செல்வா என்றும், ஈழத்துக் காந்தி என்றும் அழைக்கப்பட்ட கோட்டுசூட்டும் போட்ட செல்வநாயகம், மலையக தோட்டத் தொழிலாளர்களை சுரண்டிய கடைந்தெடுத்த ஒரு யாழ்ப்பாணத்து தோட்ட முதலாளி. இவர்களுக்கும் தமிழ் தேசியத்துக்கும் உள்ள உறவு, அடிநிலையில் வாழ்ந்த மக்களைப் பற்றிய எதிர்ப்புணர்வில் இருந்தே, தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி அதை பிற்போக்காக கட்டியமைத்தவர்கள். இவரின் தலைமையில் தமிழ் தளபதியாக காட்டப்பட்ட அமிர்தலிங்கம் முதல் ஆனந்தசங்கரி வரை முன்வைத்த அரசியல் அகிம்சையை அல்ல. அகிம்சையின் பெயரில் மாற்றுக் கருத்தை ஒழித்துக் கட்டும் அரசியல் வன்மத்தையே கையாண்டவர். இதை செய்ய சுதந்திரன் என்ற குறுந்தேசிய இனவாத ஒரு ஆள்காட்டி ஏட்டை நடத்தினார். அந்த சுதந்திரன் என்ற பத்திரிகையில் 50 சதவிகித முதலீடு செல்வநாயகத்துக்கு சொந்தமாகும். அமைதியான தீர்க்கதரிசியாக வருணிக்கப்பட்ட அகிம்சாமூர்த்தி செல்வநாயகம் முதலிட்டு நடத்திய சுதந்திரன் ஏடு, வன்மம்மிக்க பாசிச உள்ளடகத்தில் தான் வன்முறைகள் தூவிவிடப்பட்டன. எதிர்தரப்பு மீது வன்முறை உசுப்பும் அரசியல் உணர்ச்சிக் கோசங்களை கட்டமைத்தனர்.
தனது சொந்த வர்க்க நலன் சார்ந்து எப்போதும் ஆங்கிலம் படித்த பிரிவினரை திருப்தி செய்து வந்த தமிழரசுக் கட்சி, யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களையே எப்போதும் உயர்த்தியது. மக்கள் நலன் சார்ந்த தேசிய கோட்பாடுகளையும், தேசிய நலன்களையும் எதிர்த்து தான் தமிழ் தேசியத்தை பிற்போக்கு தேசியமாக தண்ணீர் ஊற்றி வளர்த்தனர். அதன் வாரிசுகள் தான் இன்றைய புலிகள்.
பிரிட்டன் தனது காலனித்துவ நலனை பாதுகாக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தியிருந்த பிரிட்டிஸ் விமானப்படை தளத்தையும், திருகோணமலை துறைமுகத்தையும் அரசு 1957 இல் தேசியமயமாக்கிய போது தமிழசுக் கட்சி அதை கடுமையாக யூ.என்.பியுடன் சேர்ந்து தமிழ் தேசியத்தின் பெயரில் எதிர்த்தது. அரசு உதவி பெற்ற பாடசாலைகளை தேசியமயமாக்கி, சொந்த மொழிக் கல்வியை உருவாக்கிய போது, அதையும் தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்தின் பெயரில் எதிர்த்தது. இன்று எமது மக்கள் படித்தவர்கள் என்று ஏதாவது பெருமைப்படுவது என்றால், அந்த பெருமை தமிழரசுக் கட்சி யாரையெல்லாம் துரோகிகள் என்று காட்டினரோ, அவர்களால் கிடைத்ததே இன்றைய தமிழ் கல்வி. தமிழரசுக் கட்சி தமிழ் கல்வியை எதிர்த்தது, ஆங்கிலக் கல்வி என்ற காலனித்து கனவுகளுடன் தேசியத்தின் பெயரில் நக்கித்திரிந்தவர்கள். இதை வெற்றிகரமாக செய்ய, தமிழ் மக்களை ஏமாற்றி திரட்ட சிங்கள பேரினவாதிகளின் நடத்தைகளே உதவியது. மாறாக தமிழரசுக் கட்சியின் சொந்த அரசியல் அல்ல. அவர்களின் அரசியல் மக்களின் முதுகுத் தோலை உரிப்பதாகவே எப்போதும் இருந்தது.
1966 இல் யாழ் பிரதேசங்களில் எழுத்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும்படி தமிழ் தளபதி அமர்தலிங்கம் பகிரங்கமாகவே அரசிடம் அறைகூவல் விட்டதுடன், உயர் சாதியருடன் சேர்ந்து சாதி ஒடுக்குமுறையை கையாண்டவர்கள் தான் இந்த தமிழ் தளபதிகள். இவர்களின் வாரிசுகள் தான் இன்றைய புலிகள். வளர்த்த கடா மார்பில் இடிக்கலாமா! என்று, சிலர் புலம்பும் போதும், தமது சொந்த பாசிச முகத்தை மூடிக் கொண்டு ஜனநாயக வேஷம்;; போட்டு ஆடுகின்றனர்.
யாழ் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட போது அதை எதிர்த்த தமிழரசுக்கட்சி, இதை ஆதரித்த பலருக்கு கொலை பயமுறுத்தலை விடுத்தனர். தமது பினாமி இளைஞர்களைக் கொண்டு குண்டுகளையே வீசினர். இப்படித்தான் எமது மண்ணில் பாசீசத்தின் வேர்கள் ஆழமாகவே வேர் ஊன்றத் தொடங்கியது.
இப்படி கடந்த காலத்தில் அடிநிலையில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு நன்மையாக எது கிடைத்தாலும், அதை எதிர்த்து தமிழரசுக் கட்சி செயல்பட்டது. இவற்றை எல்லாம் சிங்கள பேரினவாத சக்திகளின் அரசியல் வன்மத்தின் பின்னால் ஒளித்து நின்றபடி, துரோகமாக காட்டினர். இதற்கு எதிராக வன்முறையை ஏவிவிட்டனர். இப்படி சமூக பாசீசக் கூறுகளின் உள்ளடகத்தில் தான், யாழ் மேலாதிக்க பாசீசக் கூறுகள் அரசியல் மேலாண்மையை தக்கவைத்தன. இதன் ஏக பிரதிநிதிகளாக புலிகள் உள்ளனர். கொள்கை ரீதியாக தமிழரசுக் கட்சிக்கும், இவர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையவே கிடையாது.
எமது தமிழ் தேசியம் என்பது தன்னகத்தே பாசீச உள்ளடகத்துடன் தான் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. இதற்கு தலைமை தாங்கிய அரசியல் கட்சிகள், இந்த பாசீசக் கூறை அடிப்படையாக கொண்டே செயல்பட்டன. தமிழ் காங்கிரசில் இருந்து தமிழரசுக் கட்சி உருவான போது, 1952 தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சி மீது தமிழ் காங்கிரஸ் வன்முறையைக் கையாண்டது. அன்று கம்யூனிஸ்ட் கட்சி தான் தமிழரசுக் கட்சிக்கு, வடக்கு, கிழக்கில் தமிழரிடையே பாதுகாப்பைக் கொடுத்தது. பின்னால் செல்வநாயகத்தை கிறிஸ்தவர் என்று தமிழ் காங்கிரஸ் தூற்றியது. இப்படி எமது தமிழ் அரசியல் வரலாறு மோசடித்தனத்தால், அவதூறுகளால், வன்முறைகளாலும் அலங்கரிக்கப்பட்டே உருவானது. காலத்துக்கு காலம் யார் பிற்போக்கு தமிழ் தேசியத்தில் செல்வாக்கு பெற்றனரோ, அவர்களின் பொது அணுகு முறை இதுவாகவே எப்போதும் இருந்தது. இதற்கு அவர்கள் இட்ட பெயர் அகிம்சை.
தமிழரசுக் கட்சியும், பின்னால் கூட்டணியும் தமிழ் மக்களை ஏமாற்றி ஒரு குறுந் தேசிய அரசியலை செய்தனர் என்றால், அதையே புலிகளும் செய்கின்றனர். கூட்டணி அகிம்சை என்ற பெயரில் வன்முறையை பயன்படுத்தினர். ஆனால் புலிகள் ஆயுதங்களை அதற்காக இடமாற்றி பயன் படுத்துகின்றனர். தொடர்ச்சியான இந்த அரசியல் போக்கில் தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்னவென்று பார்த்தால் எதுவுமில்லை. தமது சொந்த வாழ்க்கையை இழந்ததைத் தவிர வேறு எதையும் தமிழ் மக்கள், அன்றும் சரி இன்றும் சரி பெற்றது கிடையாது. இனி ஒருகாலும் இந்த அரசியல் உள்ளடகத்தில் எதுவும் கிடைக்கப் போவதில்லை.
இந்த உள்ளடகத்தில் தான் புலிகளின் அரசியல், பாசீசத்தின் உச்ச வக்கிரத்தை தொட்டு நிற்கின்றது. உண்மையில் புலிகள் இல்லாத இடத்தில் உருவாகும் எந்தக் குழுவும், இதைத் தான் செய்திருப்பர். இது இன்று புலிகளின் சிறப்பான அம்சமல்ல. புலிகளைப் போன்ற அனைத்து ஆயுதம் ஏந்திய குழுக்களின் செயல்பாடுகளும் விதிவிலக்கற்றவாறு ஒன்றாகவே இருந்தது. சிற்சில பண்பியல் மாறுபாடுகள்; இருந்தபோதும், பாசிச இயல்பை உள்ளடக்கியே எமது தமிழ் தேசிய வக்கிரம் நிச்சயமாக பிரதிபலித்து இருக்கும். அவர்கள் உயிர் வாழ்ந்தவரை அப்படித் தான் இருந்தது.
இன்று பலர் இதை புலிகளினதும், பிரபாகரனினதும் சிறப்பு அம்சமாக காட்டி முன்வைக்கும் விமர்சனம் கடைந்தெடுத்த அரசியல் மோசடியாகும். பிரபாகரனும், புலிகளும் இந்த பாசிச கட்டமைப்பில் தற்செயலானவர்கள் மட்டும் தான்;. தமிழ் தேசியத்தின் பெயரில் பலரும் பாசீச நடத்தையுடன் தான் ஆயுதங்களை ஏந்தினர். இங்கு பாசீசக் கூறுகளை புலிகள் தன்னகத்தே வரிந்து கொண்டனர் என்பது, சமூக இயக்க போக்கில் இருந்துதான். இதைத்தான் அனைத்து குழுக்களும் தமது கொள்கையாக கொண்டிருந்தன. இதைத்தான் கூட்டணியும் தனது சொந்த அரசியலாக கொண்டிருந்தது. படுபிற்போக்கான வலதுசாரிய அரசியலில்; பாசீசத்தின் கூறுகள் எப்போதும் மலிந்து கிடக்கின்றது. அதில் தான் அவர்கள் எப்போதும் உயிர்தெழுகின்றனர்.
இந்தப் பாசீச சமூக கூறுகள் மொழியில் வன்மத்தில் இருந்தே வன்முறையாகி, இதுவே படுகொலை அரசியலாகிய வரலாற்று பரிணாமத்தில் புலிகள் உச்சத்தை எட்டினர். ஆரம்பத்தில் துரோகி, சமூக விரோதி என்ற படுகொலை அரசியல்; தொடங்கியது. இது படிப்படியாக மாற்றுக் கருத்தை கொண்டோரையும் தம்முடன் முரண்பட்டவர்களையும் கூட கொல்லப்பட வேண்டியவர் என்ற எல்லைவரை சென்று, படுகொலைகளே அன்றாட அரசியல் நிகழ்ச்;சியாகிவிட்டது. இங்கு புலிகள் பற்றி முரணான கருத்துகளை சாதாரண மக்கள் கதைத்தாலும் கூட, கொலைகளே தீர்வு என்ற நிலையை எட்டிவிட்டது.
மொத்த சமூகமும் பீதியில் உறையும் வண்ணம் விழி பிதிங்கி நிற்கும் காட்சி, புலிகளின் மேலான வெறுப்பையூட்டும் வகையில் காணப்படுகின்றது. புலிகள் பற்றி ஒரு சாதாரண மனிதன், அச்சம் கலந்த உணர்வுடன் தான் எப்போதும் எங்கும் இயங்குகின்றான்; இதை யாரும் இல்லை என்ற சொல்ல முடியாது. தமது சொந்த சமூக பொருளாதார வாழ்வை இழந்து போகும் மனிதனின் கதியும், இதுவாகவே உள்ளது.
புலிகள் தமிழ் தேசியத்தின் பெயரில் எதை சமூகத்துக்கு பெற்றுத் தரப் போகின்றார்கள் என்ற கேட்டால், அவர்கள் கூட அதற்கு பதில் தரமுடியாத நிலையில் அலட்டுகின்றனர். அவர்கள் தமிழ் மக்களை சுரண்டி சூறையாடும் போக்கைத் தாண்டி, அவர்கள் மக்களுக்கு என்று வழிகாட்டக் கூடிய நோக்கங்கள் என எதுவும் இருப்பதில்லை. தமிழ் மக்களை சூறையாடி விடுவதே, அவர்களின் ஒரே இலட்சியமாகிவிட்டது. இந்த நிலையில் தமிழ் இனம் தனது கையாலாத்தனத்தை அடைந்துள்ளது. தமிழ் மக்களை சூறையாடும் அதிகாரத்தை தக்கவைக்கும் சொந்த அதிகாரத்தை புலிகள் கோருவதே, அதன் உயர்ந்தபட்ச லட்சியமாகிவிட்டது. இதை பாதுகாக்க படுகொலைகள் தொடர்ச்சியாக அரசியல் ஆணையில் வைக்கப்படுகின்றது.
கைது, கடத்தல், கொலை என்ற வடிவில் புலிகள் தொடராக ஒரு சமூகப் படுகொலைகளை நடத்துகின்றனர். 1986ம் ஆண்டு ரெலோ அழிப்புடன் தான், பெரும் படுகொலை அரசியல் ஒரு பாய்ச்சலாக தொடங்கியது. அன்று தொடங்கிய படுகொலைகள் ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான ஒன்றாக இருந்தது. உதாரணமாக தெல்லிப்பழை சந்தியில் உயிருடனேயே ரெலொவைச் சேர்ந்தவர்கள் மேல் விறகை போட்டு எரித்தனர். அப்போது அமர்தலிங்கத்தின் எடுபிடியும், பின்னால் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவமகாராஜா கொலைகாரப் புலிகள் உயிருடன் எரித்த களைப்பு தீர கொக்கோகோலாவை போத்தல் போத்தலாகவே உடைத்து பரிமாறினார். இந்த சிவமகாராஜா கூட்டணியின் அரசியல் வாரிசாக, அமர்தலிங்கதின் கையாளாக வளர்ந்தவன்;. அவர்pன் தயவில் அதிகாரங்களை பெற்றவன். அன்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சொத்தில் தான், இந்த கொக்கோகோலாவை புலிகளுக்கு விநியோகம் செய்தவன். பாசீசக் கூறுகளும், கொலைக்கு ஆதரவான சமூக சித்தாந்தமும் வெறுமனே புலிகளின் கண்டுபிடிப்பல்ல.
அன்று புலிகள் வீதியில் உயிருள்ள மனிதர்களை எரிக்க தொடங்கிய போது தொடங்கிய சமூக பாசீசம், வரலாறு முழுவதும் தொடரும் காட்சி தான் இன்றைய நிலைமை. தமிழ் மண்ணில் எல்லாவிதமான மாற்றுக் கருத்துத்தளங்களையும், சுயமான சமூக நிறுவனங்களையும் கூட ஈவிரக்கமின்றி புலிகள் அழித்தனர். பலவற்றை தமது பினாமி பெயரில் அபகரித்தனர். இன்று புலிகளின் உத்தியோக பூர்வமான நிறுவனங்கள் பல, முன்பு புலிகள் அல்லாத தரப்பினரிடம் இருந்து அபகரிக்கப்பட்டதே.
உதாரணமாக தமிழர் புனர் வாழ்வுக் கழகம், எரிமலை பத்திரிகை, ஊற்று ஆய்வு நிலையம், ஈழமுரசு, நமது ஈழநாடு, ரி.ரி.என், ஐ.பி.சி என்ற அவர்களின் உத்தியோக பூர்வமான அனைத்துக்கும் மற்றொரு வரலாறு உண்டு. ஏன் கிட்டு 1986களில் வைத்திருந்த நாய்குட்டி முதல் அவன் வைத்திருந்த குரங்குக்கும் கூட மற்றொரு வரலாறு உண்டு. அவை கூட துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டவை தான். அதேநேரம் தமிழ் பகுதிகளில் இயங்கும் புலி ஆதரவு நிறுவனங்கள் அனைத்தும், பெருமளவில் பினாமி நிறுவனங்கள் தான்.
அன்று தொடங்கிய பாசீசம், இன்று தனது அமைதிகாலத்தில் கூட தன்னை தனது முகத்தை மூடிமறைக்க முடியவில்லை. அமைதிக் காலப் பூங்காவில் புலிகளின் கோர முகம் நிர்வாணமாவது எப்போதும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. வழமையாக யுத்த சூழல் இரைச்சலுக்கு இடையில், பாசீச கொடூரங்களை மூடிமறைக்க முடிந்தது. அமைதி என்றும் சமாதான காலத்தில் பேரினவாத இராணுவத்தின் மயமான அமைதி, புலிகளின் சொந்த கொடூரத்தை தெளிவாக சமூகத்தின் முன் வெளிச்சம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான, புலிகளின் கொடூரமான போக்கை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. பலர் சொந்த அனுபவத்தை தாமாகவே பெற்று விடுவதை இது துரிதமாக்கியது. ஏகாதிபத்தியம் சமாதானம் அமைதி என்று நடத்தும் நாடகத்தின், பின்னுள்ள உண்மையான நோக்கமும் இதுதான்;. அதாவது புலிகளை அம்பலப்படுத்துவது தான். புலிகளை தனிமைப்படுத்தி அழிப்பது தான். இன்று ஏகாதிபத்தியம் விரும்பியதை நோக்கி நகர்வதை, புலிகளின் பாசீசம் தலைகீழ் புரியாத வேகத்தில் அமுல்படுத்துகின்றது..
புலிகளும், அரசும் தாங்களாகவே ஒத்துக் கொண்ட எல்லைக்குள் ஒரு உடன்பாட்டை கண்டனர். இதை மீறுவது யுத்த நிறுத்த மீறலாக கருதியே கையெழுத்திட்டனர். இதற்கு சாட்சியங்கள், ஆதாரங்கள் அவசியம் என்ற கூறிச்சென்றனர். இப்படி ஆதாரங்களுடன் சாட்சியங்களுடன் நிறுவப்பட்ட குற்றங்களின் அளவே, புலிகளின் பாசீசத்தின் பன்மைத் தன்மையை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மிக ஒழுக்கமான கட்டுப்பாட்டை வலியுறுத்துவதாக பீற்றும் புலி அரசியல், தனது சொந்த தலைவர் பிரபாகரன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் கூட இயக்க அணிகள் கடைப்பிடிக்கவில்லை.
01.02.2002 முதல் 30.04.2005 வரையான காலத்தில் இனம் காணப்பட்ட மொத்த யுத்த மீறல் சம்பவத்தில் புலிகள் தரப்பு 6007 மீறலை செய்தாக பதிவாகியுள்ளது. இராணுவம் மீது 1000 அளவில் புகார்கள் பதிவாகியுள்ளது. இதில் கண்காணிப்பு குழு யுத்த நிறுத்த மீறாலாக ஆதாரபூர்வமாக இனம் கண்டவைகளில் புலிகள் 2668 யும், இராணுவம் 115 மாகும். இந்த புள்ளிவிபரம் கூட முழுமையில், சிறு பகுதி தான். மொத்தமாக 900 மேற்பட்ட நபர்கள் கடத்தப்பட்டனர். அண்ணளவாக 400 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவை யுத்த நிறுத்த மீறல் என்ற தரவுக்குள், புலிகளுக்கு எதிரான யுத்த நிறுத்த மீறலாக பதிவு செய்யப்படவில்லை. ஒரே காரணம் இவை இனம் தெரியாதவர்களின் நடவடிக்கையாக ஆதாரமற்ற ஒன்றாக கண்காணிப்பு குழு உலகத்தின் காதுக்கே பூ வைக்கின்றது..
உண்மையில் கொலைகள், கடத்தல்கள் பல முறைபாட்டிற்கே வருவதில்லை. இப்படி பல பத்தாயிரம் சம்பவங்கள் தொடர்பாக சாதாரண மக்கள் முறைபாட்டை செய்ய முடிவதில்லை. அதுவும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இதைப் பற்றி பேசுவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது.
இந்த யுத்தநிறுத்த மீறல்களில் 90 சதவீகிதமானவை சொந்த தமிழ் மக்களுக்கு எதிராகவே உள்ளது. இது புலிகள் எப்படி தமிழ் மக்களுக்கு எதிராக தமது சொந்த பாசீச வன்முறைகள் கையாளப்படுகின்றது என்பதையே பறைசாற்றுகின்றது. புலிகளும், புலிப் பினாமிகளும் அரசு யுத்த நிறுத்தத்தை மீறுவதாக கூறும் போது, உண்மையில் அதற்கு பெரும்பாலும் அடிப்படைகளற்ற வெற்று கோசங்களாகி வெறும் ஊடாகச் செய்தியாகவே இதை விடுக்கின்றனர். ஏன் தமிழ் மக்கள் 400 பேரளவில் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு சிலவற்றை மட்டுமே யுத்தநிறுத்த மீறலாக காட்டி, புலிகளும் புலிப்பினாமிகளும் குற்றச்சாட்டை எடுத்துச் செல்லுகின்றனர். உண்மையில் ஒவ்வொரு கொலையும் யுத்த நிறுத்த மீறலாக கொண்டு செல்ல தமிழர்களின் ஏகபிரதிநிதிகளும் பினாமிகளும் மறுப்பதில் இருந்து, இக் கொலைகள் அனைத்தும் புலிகளால் செய்யப்பட்டவை என்பதையே உறுதி செய்கின்றது.
இப்படி இந்த கொலைக் கலாச்சார பாசீச அரசியல் மனிதத்துவத்தை எட்டி மிதிப்பதில் தன்னை தக்கவைக்கின்றது. நாளொன்றுக்கு ஒரு கொலையைத்தன்னும் தேசியம் பலியெடுக்காத நாட்கள் எம் மண்ணில் கிடையாது. 1986க்கு பிந்திய எமது வரலாற்றில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒருவரைத் தன்னும் தேசியம் தேசியத்தின் பெயரில் கொன்று உள்ளது, கொன்று வருகின்றது. இது சில காலத்தில் 3, 4 என்ற தாண்டிச் சென்றது. கடந்த 20 வருடங்கள் கொலைகளின்றி நாட்கள் உருண்டு ஒடிவிடவில்லை. இதில் இருந்தே கொலை செய்யப்பட்டவர் பட்டியலை இனம் காணமுடியும்;.
கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தமிழ் தேசியத்துக்கு எப்படி துரோகம் இழைத்தனர் என்று யாரும் எதிர் கேள்வி கேட்டாலே மரணம் காத்திருக்கும். இதுவே தேசியத்தின் மொழியாக உள்ளது. நாம் அரசு சார்பு குழுக்கள் என்பதை வெறுமனே ஒற்றைப் பரிணாமத்தில் நாம் பார்க்க முடியாத நிலைக்கு சமூக பாசீசமே அதை உருவாக்கின்றது. அரசு சார்பு குழுக்களை, சமூக பாசீச சித்தாந்தமும் புலிகளின் பாசீச நடவடிக்கையுமே உருவாக்கிவிடுகின்றது. மாற்றுக் கருத்தை வைத்திருந்தமைக்காக சித்திரவதையும், படுகொலையும் பரிசளிக்கும் புலிகளின் கட்டமைப்பில் தப்பியோடும் மனிதர்கள், வாழவழியற்ற நிலையில் அரசு சார்பு குழுக்களாக மாறுகின்றனர். ஏன் புலனாய்வு பிரிவினராக மாற்றப்படுகின்றனர். பெலும்பாலானவர்கள் தாம் விரும்பி தோந்தெடுத்த ஒன்று அல்ல இது.
குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கு தேர்ந்தெடுத்த ஒரு பாதையாக இது மாறிச் செல்லுகின்றது. புலம்பெயர் நாட்டை நோக்கி நகர்வு இந்த அளவை குறைத்த போதும், வசதியற்றவர்களுக்கு இதைவிட்டால் வேறு மார்க்கத்தை சமூக பாசீசம் எம்மண்ணில் வழிகாட்டவில்லை, விட்டுவைக்கவில்லை. அன்றாடம் புலிகளுக்கு எதிரான அணியில், பலரை புதிதாக புலிகள் இணைக்கின்றனர். இப்படி சிலர் கொல்லப்படுகின்றனர். சிங்கள பேரினவாதத்துக்கு இலகுவாகவே ஆட்களை திரட்டிக் கொடுக்கும் வகையில், புலிகளின் பாசீச வீர நடத்தைகள் ஊக்கியாகவும், உந்து சக்தியாக உள்ளது.
நாம் அரசு சார்பு குழுக்கள் என்பதால், அதில் உள்ள ஒவ்வொரு மனிதனின் தேர்வையும் கொச்சைப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்;. மாற்றுவழி நடைமுறையில் இல்லாத ஒரு நிலையில், உயிர் வாழ்வதற்கான போராட்டம் ஒரு மனிதனின் தவிர்க்க முடியாத தவறான தேர்வை புலிகளே ஊக்குவிக்கின்றனர். இந்த வகையில் அரச சார்பு குழுக்களின் சாதாரண அடிமட்ட உறுப்பினர்களின் மீதான பாசீசக் குற்றச்சாட்டை, கடுமையாகவே எதிர்த்து நிற்க வேண்டியுள்ளது.
அரசு சார்பு குழுக்களை உருவாக்கும் சூழலை மாற்றாதவரை, அதன் மீதான தாக்குதலையும், படுகொலையையும் நாம் கடுமையாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. அதேநேரம் அரசு சார்பு குழுக்களின் தலைவர்களை கடுமையாக அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. தவறான அரசியல் வழிகள் மூலம், வாழவழியற்ற அப்பாவி ஏதிலிகளை கொண்டு நடத்தும் மற்றொரு பாசீச அரசியலின் ஏகபிரதிநிதிகளாக செயல்படுவதை எக் காரணம் கொண்டும் நாம் ஏற்க முடியாது. பரஸ்பரம் புலிகளும், அரசு சார்பு குழுக்களும் பாசீசத்தின் கூறுகளை கொண்டு, அப்பாவிகளை ஏமாற்றி அல்லது அவர்களின் அறியாமை அல்லது அவர்களின் தியாக மனப்பாங்கை கொண்டு நடத்தும் அரசியல் தமிழ் மக்களின் அடிமைத்தனத்தின் மேலானதாக உள்ளது.
நாம் இவற்றை முதலில் தெளிவாக இனம் காணவேண்டியுள்ளது. இதனடிப்படையில் சுயவிமர்சனத்தையும், விமர்சனத்தையும் எப்போதும் செய்ய வேண்டியவராக உள்ளோம்;. மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு, அனைத்தையும் துருவி ஆராயும் விமர்சன வழிமுறையை எல்லாவற்றில் மீதும் கையாள்வதன் மூலம், சரியான ஒன்றை நாம் நிச்சயமாக தேர்ந்து கொள்ள முடியும்;. இது முரணற்ற வகையில் மக்களின் நலனை முதன்மைப்படுத்தும்;. இது மட்டும் தான் தமிழ் மக்களின் நலன்களை மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து மக்களின் நலன்களையும் பாதுகாக்கும் ஒரேயொரு மாற்று அரசியல் வழியாகும்.
 
எழுதிக்கொள்வது: kumar

இந்தப் புலி மட்டுமல்ல இன்னும்
பல புலிகள் புல்லுத்திண்ண ரெடியா
இருக்கு. விடுதலை நாய்கள் என பேரு
வைச்சிருக்கலாம்..
சிவராமை போட்டது பத்தாதா அடங்குங்கடா.

துணிவிருந்தா நேருக்கு நேர் மோதனும்.
பொட்டையங்கள் மாதிரி இணயத்தை
ஹக் பண்ண வாறாங்களா???
இந்த பின்னூட்ட பெட்டியை செய்ததும்
சுரதா என்ற ஒரு புலி வாலாச்சே..
இத நீக்கிபுட்டு வேற பெட்டி போடுங்க
பெடியன்களே..

அப்பத்தான் நம்மளுக்கு மரியாதை


2.3 22.6.2005
 
மிக நீண்ட பின்னூட்டமென்று தமிழ் மணத்தில் பரிசு தந்தால் எனக்குக் கிடைக்கக்கூடும். அதைச் சாத்தியமாக்கிய இராயகரனுக்கு நன்றி. டோண்டுவும் சொற்களின் எண்ணிக்கையில்தான் பின்னூட்டத்தின் வலிமை இருக்கிறதென்று ஒருமுறை சொன்னார். அவரோடும் சவால் விட வேண்டும்.

அடடே!
சிவராமைக் கொன்றவர்கள்கூட பின்னூட்டமிட வந்துவிட்டீர்களா?
வருக வருக. நீங்களெல்லாம் எங்கள் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட நாங்கள் என்ன தவம் செய்தோமோ தெரியவில்லை. கண்ணில் நீர் முட்டுகிறது.

-புதியோன்-
 
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

?????????
?????
???????????????

 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது